Monday, December 31, 2007

இனிய (ஆங்கில) புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்


தனித்தனியா மெயில் அனுப்ப சோம்பலா இருப்பதால் இப்படி போஸ்டர் அடித்து வாழ்த்து சொல்லியுள்ளேன்.
பதிவு போட்டுவிட்டு கருத்து சொல்லலைனா எப்படி..?
ஆங்கில புத்தாண்டை கொண்டாடுகிறேன் பேர்வழி!னு இன்று பல ஸ்டார் ஹோட்டல்களில் ஆட்டம் பாட்டம் கேளிக்கை என தூள் பரக்க போகிறது என்பது ஊரறிந்த ரகசியம். மார்கட் போன பல நடிகைகள் எல்லாம் வந்து நடனமாடி புத்தாண்டை வரவேற்க போகிறார்களாம். (தமிழ் குடிதாங்கிகள் இன்னும் கோதாவில் குதிக்க வில்லையா? )
இந்த விஷயங்களுக்கு காசை சும்மா தண்ணீயா(தண்ணிக்கும்) செலவழிக்கும் மக்கள் மூன்றில் ஒரு பங்காவது தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை வழங்கி போற வழிக்கு புண்ணியமும், இருக்கும் வரைக்கும் வருமான வரி விலக்கும் பெற்று கொள்ளலாமே!

Saturday, December 29, 2007

போடுங்கம்மா ஓட்டு!

அன்பார்ந்த பிளாக்காளர் பெருமக்களே! சர்வேசன் நடத்தும் கதைப்போட்டி பற்றி கேள்விபட்டிருப்பீர்கள். நமக்கு விழபோவது என்னவோ ஒரு ஓட்டு தான், அதுவும் என்னுடைய ஓட்டு தான்! என நன்றாக தெரிந்து இருந்தும், மனம் தளராமல் பிரசாரத்தை வீட்டிலிருந்தே ஆரம்பிக்கலாம் என முடிவு செய்து, தங்கமணியிடம் கேட்டால், வழக்கம் போல இதெல்லாம் ஒரு பொழப்பா? என்பதையே ரொம்ப டீசன்டா சொன்னதில் இனி வழியில்லை என்பதால் இந்த பதிவு.
பிளாக்கில் பதிவு போட்டு கமண்ட் பொட்டியை தொறந்து வைத்து நாம் தேவுடு காத்து கிடந்தால், அனானியாக வந்து ஆப்படித்த கூட்டம் ஒரு பக்கம் என்றால் சத்தமே போடாமல் வந்து பதிவை படித்து விட்டு இடத்தை காலி செய்த கூட்டம் மறுபுறம். இதையெல்லாம் மீறி போனா போகுது!னு சில நல்லவர்கள், வல்லவர்கள் வந்து போவது மனதுக்கு ஆறுதலாய் இருக்கிறது.

சரி மேட்டருக்கு வருவோம். இந்த லிங்கில் போய் உங்களுக்கு பிடித்த கதையை தேர்வு செய்து உங்கள் ஓட்டை போட்டு விடுங்கள். எனக்கு ஓட்டு போடுங்கள்! என நான் கேட்க போவது இல்லை.

"எம்பெருமான் இலவச கொத்தனாரும், இளையனார் கண்ணபிரானும் கட்டி காத்து வரும் தமிழ் மணத்தில் தகுதியான ஒரு கதை முதலிடம் பெற்றால் அதை கண்டு சந்தோஷபடும் முதல் மனிதன் நான் தான்!, என சீன் போட விரும்பவில்லை. ஹிஹி, என் கதை யாழினியும் உங்களுக்கு பிடிக்கும். எனவே மறக்காமல் ஓட்டு போடுங்கள். கடைசி தேதி டிசம்பர் 31 - 2007.

பி.கு: எதிர் கட்சிகள் இந்த சந்தர்ப்பத்தை நன்றாக பயன்படுத்தி கொள்ளவும்.

Sunday, December 23, 2007

யாழினி

நாள்: 20- பிப்ரவரி-2030

நேரம்: மாலை 4 மணி அடிக்க ஐந்து நிமிஷம்

மிதமாக குளிரூட்டப்பட்ட அந்த கான்பிரன்ஸ் ஹால் அனைத்து உலக டெலிவிஷன், பத்திரிகை, மீடியா மக்களால் நிரம்பி வழிந்தது. மரபியல் விஞ்ஞானி புரபசர் பத்ரிநாத் தீடிரென்று அழைத்தால் விஷயம் இல்லாமல் இருக்குமா? ஏதாவது புதுவகை லேகியம் கண்டுபிடித்து விட்டாரா?

சரியாக மணி நாலு அடிக்க, அந்த ஹாலில், கையில் லாப்டாபுடன் புரபசரின் உதவியாளினி மிஸ்.யாழினி உள்ளே நுழைய ஹால் களை கட்டியது. சுடசுட நெய் விட்டு சட்டியிலிருந்து இறக்கிய கேசரி போல இருக்கும் யாழினியை பற்றி நாம் வர்ணிக்க ஆரம்பித்தால் இது தொடர்கதையாகி விடும் என்பதால் வழுக்கை தலை, கோல்ட் பிரேம் கண்ணாடியுடன் உற்சாகமாக வரும் நமது புரபசர் பக்கம் திரும்புவோம்.

புரபசர் மரபியல் துறையில் ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் பழம் தின்னு கொட்டை போட்டவர். இரண்டு முறை நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கபட்டு, ரஷ்ய, அமெரிக்கர்களின் உருப்படாத கண்டுபிடிப்புகளால் கோட்டை விட்டவர். சரி, புரபசருக்கு இவ்ளோ அறிமுகம் போதும். புரபசரும், யாழினியும் தமது இருக்கைகளில் அமர்ந்து கொள்ள கூட்டம் நிமிர்ந்து உட்கார்ந்தது. யாழினி, தனது லாப்டாப்பை உயிர்ப்பித்து, விரல்கள் நோகாமல் அதில் பியோனோ வாசிக்க ஆரம்பித்தாள். குடுத்து வைத்த லாப்டாப்.

புரபசர் தொண்டையை கனைத்து கொண்டு பேச்சை ஆரம்பித்தார். டியர் பிரண்ட்ஸ்! என் அழைப்பை ஏற்று வந்தமைக்கு முதலில் நன்றி. நான் மரபியல் துறையில் ஒரு மாபெரும் புரட்சிக்கு வித்திட்டு இருக்கிறேன். அதை பற்றி விளக்க தான் இந்த கூட்டம். விளக்கமா சொல்றேன்.

நம்ம எல்லோருக்குமே தத்தம் குழந்தைகள் பெரிய டாக்டரா, இஞ்சினியரா, ஒரு கிரிகட் ஸ்டாரா வரனும்! என்ற கனவு இருக்கு இல்லையா? ஆனா, படிக்க வசதி வாய்ப்பு இருந்தும், ஒரு சில பேர் தான் அவங்க துறையில மிளிர முடியுது. இதுக்கு வெளி காரணிகள் பலது இருந்தாலும், ஒரு மரபியல் விஞ்ஞானியா நான் கண்டுபிடிச்சது அவங்க ஜீன்களின் அமைப்பு தான் மெயின் காரணம்.

இன்னும் விளக்கமா சொல்லனும்னா, ஒரு சிலர் கணக்குல புலியா இருப்பாங்க. அதுக்கு அவங்க மரபியல் அமைப்பே காரணம். இந்த ஜீன்களின் அமைப்பை நமது விருப்பத்துக்கேப்ப மாத்த முடிஞ்சா, அதாவது கணினி புரோகிராமிங்க் மாதிரி எல்லாம் ஒரு கட்டுகோப்பா நடக்கும்.

என்னோட ஆராய்ச்சிபடி, கருவில ஒரு உயிர் உருவானவுடன் சரியாக அறுபதாவது நாளில், 0.12 மில்லிமீட்டர் மட்டுமே இருக்கும் அந்த உயிரின் க்ரோமோசோம் கட்டமைப்பை மாத்தி அமைச்சா உங்க விருப்பத்துக்கு ஏத்த மாதிரி உங்க குழந்தை பெரிய டாக்டராவோ, விண்வெளி வீரனாகவோ, வர முடியும்! என சொல்லி நிறுத்தி ஒரு மடக்கு தண்ணீரை புரபசர் பருக,

இது சாத்யமா புரபசர்? இதை நீங்கள் எப்படி நிரூபிக்க முடியும்? ஒரு ரிப்போட்டர் இடைமறித்தார்.

முப்பது வருஷத்து ஆராய்ச்சி இது. இன்னிக்கி புகழ் பெற்று விளங்கும் சில பேர் என்னோட ஆராய்ச்சிக்கு உட்படுத்தபட்டவர்கள் தான், என சில பெயர்களை உரக்க சொல்ல, வரிசையாக புகழ் பெற்ற சில டாக்டர்கள், கம்யூட்டர் புலிகள், விளையாட்டு வீரர்கள் அணிவகுத்து வந்து புரபசரின் கூற்று உண்மை தான்! என கூறினர்.

இந்த ஆராய்ச்சியில் உள்ள தீமைகள் ஏதாவது சொல்ல முடியுமா புரபசர்?

இந்த ஆராய்ச்சியில் நன்மைகள் தான் அதிகம். ஒரு ஆரோக்கியமான, வலிமையான பாரதத்தை நாம் உருவாக்க முடியும். நம் குழந்தை என்னவாக வேண்டும்? என்பதை கருவிலேயே நாம் முடிவு செய்து விடலாம். தீமைகள்னு பாத்தா, இவங்க தம் துறை தவிர மத்த விஷயங்களில் கிட்டத்தட்ட பூஜ்யமா இருப்பாங்க. உதாரணமா சொல்லனும்னா, கம்யூட்டர் துறையை சேர்ந்த ஒருவர், ஆபிஸ்ல உக்காந்து பிளாக் எல்லாம் எழுத மாட்டார், ஏன்னா அவருக்கு மொக்கை போடவே தோணாது.

அதாவது, கிட்டதட்ட ஒரு ரோபோ மதிரி இருப்பாங்க!னு சொல்றீங்க இல்லையா புரபசர்?

இல்ல, ஏவி விட்ட ஏவுகணை மாதிரி இருப்பாங்க.என பெருமையுடன் சொன்ன அந்த மைக்ரோ வினாடி, யாழினியின் செல்பேசி, "பூம்பாவாய் ஆம்பல்! ஆம்பல்! புன்னகையோ மெளவல்! மெளவல்!" என்ற பழைய திரைபட பாடலை ரிங்க்டோனாக ஒலித்தது.

ஈஸிட்? ரியலி? ஐ கான்ட் பீலீவ் திஸ் நியூஸ்! என ஏற்கனவே பெரிதான தனது அழகிய கண்களை இன்னும் அதிகமாக விரித்து பல ரிப்போட்டர்களின் இதய துடிப்பை அதிகரிக்க செய்தாள் யாழினி.

என்ன விஷயம்? எனபது போல புரபசர் புருவத்தை தூக்க, உங்களுக்கு மரபியல் துறையில், இந்த மிகப் பெரிய ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு அறிவிச்சு இருக்காங்க! என யாழினி திருவாய் மலர, அந்த அரங்கமே கரகோஷத்தில் அதிர்ந்தது. சந்தோஷத்தாலும், ரிப்போட்டர்களின் வாழ்த்துக்களாலும் திக்குமுக்காடி போனார் புரபசர்.

சார், ஒன் மோர் குட் நியூஸ் பார் யூ! உங்க பொண்ணு ஒரு அழகான ஆண் குழந்தைக்கு அம்மாவாகி இருக்காங்க, இப்ப தான் ஹஸ்பிடலில் இருந்து கால் வந்தது என மறுபடி யாழினி இன்ப அதிர்ச்சி குடுக்க,

யாழ்! நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்! போதும், இன்னிக்கு இவ்ளோ சந்தோஷம் போதும். நான் உடனே என் மகளை பாக்க ஹாஸ்பிடல் கிளம்பறேன். நீ இந்த ரிப்போட்டர்ஸ்க்கு நம் ஆராய்ச்சி பற்றி தேவையான மேட்டரை குடுத்து பிரஸ் மீட்டை முடிச்சுடு. எனக்கு வரும் வாழ்த்துக்களை பதிவு செய்து, நன்றி தெரிவித்து விடு. பை டேக் கேர்! என சொல்லி விர்ரென புரபசர் பறந்தார்.

போடா போ! அங்க உன் பேர குழந்தை என்ற பெயரில் பிறந்து இருக்கும் ரோபோவை பாக்க போ! உன் ஆராய்ச்சிக்கு என் அக்கா குழந்தையை பலி வாங்கின இல்ல, உன் பேரனின் ஜீன் அமைப்பை உனக்கு தெரியாமல் மாத்தியாச்சு. 3 வருஷம் கழிச்சு அது உன்னை பாத்து தாத்தா!னு ஆசையா கூப்டாது. மாமா! பிஸ்கோத்துனு கேக்கும் பாரு.

இது தான் நான் உனக்கு குடுக்கும் தண்டனை! என மனதுக்குள் சிரித்துக் கொண்டே அழுதாள் யாழினி.

பி.கு: சர்வேசன் நடத்தும் நச்சுனு ஒரு கதை போட்டிக்கு கடைசி நாளான இன்று அவசரமாய் எழுதியது. வழக்கம் போல நீங்க ஷ்டாட் மிஜீக் போடுங்க.

Sunday, December 16, 2007

2007 பிளாகர் அவார்டுகள்

இந்த 2007 வருடத்தில் நம்மை கவர்ந்த சில பிளாகர்கள் வாங்கிய அவார்டுகளை இப்போ பார்ப்போம்:
முதல் போட்டியாளர்:
இவர் வலைபூவை திறந்தாலே திருப்பதிக்குள்ள நுழைஞ்ச மாதிரி ஒரு எபக்ட் கிடைக்கும். திருப்பதி லட்டு பத்தி நம்மாழ்வார் என்ன சொல்றாரு? புளியோதரை பத்தி பெரியாழ்வார் என்ன சொல்றாரு?னு அ முதல் ஃ வரை சும்மா பிரிச்சு மேஞ்சுபுடுவாரு. :)

அட சே! நாமளும் தான் பதிவு எழுதறோமே?னு சில(பல)சமயம் வெக்கபட வெச்சுபுடுவாரு.



போட்டோவுல சும்மா ஹாலிவுட் ஹீரோ கணக்கா இருந்தாலும், அண்ணாச்சி தமிழ்ல சும்மா லெப்ட், ரைட்டுனு யூ டர்ன் போட்டு வருவாரு. அண்ணாச்சியை வெச்சு ஏதேனும் காமடி பண்ணலாம்னு நினைச்ச சங்கத்து சிங்கங்களுக்கு, வெங்கல கடையில் யானை புகுந்த கதையா நமது அண்ணன் அதிர்ச்சி வைத்தியம் குடுத்துட்டார் என்பது டாக் ஆஃப் தி தமிழ்மணம்.
எனவே இந்த வருடத்தின் பழம் நீயப்பா! அவார்டை போட்டியின்றி தட்டி செல்கிறார்.

இரண்டாவது போட்டியாளர்:
தில்லுமுள்ளு படத்தில் ஒரு ரோஜா மாலைக்காக சுவர் ஏறி குதிச்சு அம்மாவா நடிச்ச செளகார் ஜானகியை உங்களுக்கு நியாபகம் இருக்கா? நல்லது!
நல்லா எழுதி இருக்கீங்க! அல்லது சிறந்த பதிவு!னு நீங்க ஒரு கமண்ட் போட்டா உங்கள் மீது பாச மழை பொழிவார் இவர். போன் போட்டு சொன்னா நீங்க அனானியா இருந்தா கூடா உங்க பேர்ல தனி பதிவு போட்டு விடுவார்.
கைலாச யாத்ரை போற வழில பில்டர் காப்பி கேட்டு அந்த டிராவல் ஏஜண்டை ஓட ஓட விரட்டிய கதைய சொல்லவா? இல்லாட்டி, அமர்நாத் யாத்ரையில் குதிரை ஏறி இவங்க பாரம் தாங்காமல் அது குப்புற விழுந்த கதைய சொல்லவா?

சமயம் கிடைக்கும் போதெல்லாம் நான் தான் ரவுடி! நான் தான் ரவுடி!னு வடிவேல் சொல்ற மாதிரி நான் தான் தலைவி! நான் தான் தலைவி!னு சொல்லிப்பாங்க. ஆன்மிகம், தமிழ், பாரதி, சுதந்திர போராட்ட வரலாறுனு அவியல் மாதிரி கலந்து கட்டி அடித்தாலும் மவுஸ் வேலை செய்யலை! என் வீட்டு (ரங்கு வைக்கற) ரசத்துல புளி இல்லை!னு இவங்க போடற மொக்கை தான் மக்கள் மனசுல நிலைச்சு இருப்பதால் (மொக்கை) பதிவுச் சூறாவளி - 2007 என்ற அவார்டை இவர் போட்டியின்றி தட்டி செல்கிறார்.

அடுத்த போட்டியாளர்:
உங்கள் கையில் நயன் தாரா அல்லது கோபிகா படம் கிடைத்தால் என்ன செய்வீர்கள்? சபையில் சொல்ல கூச்சமாக இருக்கலாம். இவர் கையில் கிடைத்தால் "கை வண்ணம் இங்கு கண்டேன்! கால் வண்ணம் அங்கு கண்டேன்!" என நடுவில் மானே! தேனே போட்டு தேவதைகளை ஊர்வலம் வர செய்து விடுவார்.
இவரது மன நிலைக்கு ஏற்ப திரிஷா சிரிப்பார் அல்லது முறைப்பார். இவர் ஒரு போட்டியாளர். சரி அடுத்த ஆளை பார்ப்போம்.

சுட்ட பழம் வேணுமா? சுடாத பழம் வேணுமா?னு அவ்வைக்கு முருகன் கேட்ட மாதிரி இவர் சுட்ட பதிவு வேணுமா? சுடாத பதிவு வேணுமா?னு லெவல் காட்டுவார்.
இவர் போகாத ஹோட்டல் கிடையாது. இவருக்கு ட்ரீட் தந்து ஓட்டலில் மாவு ஆட்டாத பதிவரும் கிடையாது. இவரும் ஒரு போட்டியாளர்.

மூன்றாம் போட்டியாளரை பார்ப்போம்.
எல்லோரும் கவிதையோ கவிஜயோ தங்களது பதிவிலேயே போட்டு பதிவு எண்ணிக்கையை கூட்டுவர். ஆனா கவிதைக்கு தனி கடை வைத்து, தோணும் போதேல்லாம் கவிதைய போட்டு அது குப்பை தொட்டியோ, ரோஜா செடியோ எத பத்தி வேணாலும் பதிஞ்சு விடிவார். அவ்ளோ லேசுல புரியற மாதிரி இல்லாட்டியும், அங்க தான் நீங்க நிக்கறீங்க! அப்படினு எல்லோரும் பாராட்டுவாங்க, அது வேற விஷயம்.
எனவே இந்த மூனு போட்டியாளர்களில் கவிதைக்கு தனிகடை வைத்த தங்கம்! என்ற பட்டத்தை இவர் தட்டி செல்கிறார்.

இதைப் போல உங்களை கவர்ந்த பிளாக்கர்களுக்கு நீங்களும் அவார்டுகளை வாரி வழங்கலாமே! :)

Wednesday, December 05, 2007

உள்ளேன் மக்களே!

அடுத்த பதிவு போட ரொம்பவே நாளாகி விட்டது, என்ன செய்ய, ஆபிஸ்ல மலை போல வேலை பளு.சரி, இப்படியே விட்டா நம்ம பிளாக் பாஸ்வேர்டே நமக்கு மறந்து விடும் போலிருக்கு. என்னத்தை எழுத?னு ஒரே யோசனை வேற.

பேசாம, ஒரு மொக்கைய போட்டு அதை நாலு நாலு வரியா பிரிச்சு எழுதி கவிதை!னு லேபிள் குடுத்ரலாமா? இல்லாட்டி, சன்/விஜய்/ஜெயா டிவிகளில் வரும் மெகா சீரியல் பாடல்களை "எனக்கு பிடித்த பாடல்"னு ஒரு பதிவு போட்ரலாமா? இல்லாட்டி
"அ முதல் ஃ தானடா!
என் அக்கா பொண்ணு கிக்கு தானடா!" என்ற செந்தமிழ் பாடல் வரிகளை பதிவா போடலாமா?னு ஒரே குழப்பம்.

எனக்கு தான் மேட்டர் பஞ்சம்னு பாத்தா இந்த சாட்டிலைட் சானல்களுக்கும் இதே கதி தான் போலிருக்கு. எந்த டிவிய திருப்பினாலும் ஏதோ ஒரு க்ரூப் மேடையில் ஆடுகிறார்கள், அல்லது மைக்கை பிடித்து கொண்டு பாடுகிறார்கள். அதுக்கு நடுவரா ஒரு நாலு பேர் - மார்கட் போயே போன நடிகை, போனா போறதுனு ஒரு இளிச்சவாய டான்ஸ் மாஸ்டர்/பாடகர்/இசையமைப்பாளர் என அல்லோலபடுகிறது.

இதில் கலைஞர் டிவியில் வரும் நடன நிகழ்ச்சிக்கு நமீதா நடுவராய் வருவதால் எங்கள் வீட்டில் அந்த நிகழ்ச்சி நிரந்தரமாய் தடை செய்யப்பட்டு அதற்க்கு மாற்றாக பொதிகையில் வரும் வயலும் வாழ்வும் ஒளிபரப்ப படுகிறது. இதுக்கு நான் கார்ட்டூன் சானலே மேல்!னு சமரச உடன்பாடு செய்து கொண்டு விட்டேன்.

இடைப்பட்ட கேப்பில், பிறந்த நாள் எல்லாம் வந்து போனது. நேத்து நடந்த மாதிரி இருக்கு. போன வருடம் இதே நாளில் தான் சுடச்சுட கேசரி சாப்பிட போனேன். ஹிஹி, தங்கமணியையும் பார்த்தேன்.

இந்த குழந்தையையும் மறக்காமல், கைபுள்ளை, வல்லி சிம்ஹன், பிலாக்கேஸ்வரி, கீதா பாட்டி போன்றவர்கள் போனிலும், மெயிலிலும் வாழ்த்தினார்கள். மிகவும் சந்தோஷம். தலப்பிறந்த நாளுக்கு எங்க அண்ணன் பெயரை சொல்லி வெயிட்டா அவருக்கு வேட்டு வைங்க மன்னி!னு பொற்கொடி வேலை மெனக்கெட்டு என் தங்கமணிக்கு மெயிலில் அட்வைஸ் வேற. என்னத்த சொல்ல?

இப்போதைக்கு இவ்ளோ மொக்கை போதும்.

விரைவில் எதிர்பாருங்கள் 2007 பிளாகர் அவார்டுகள்!

Friday, November 16, 2007

ஓம் ஷாந்தி ஓம்!

இப்ப எங்க டீம்ல இருக்கற எல்லாரும் மாஞ்சு மாஞ்சு ஈ ஓட்டிட்டு இருக்கறதுனால, என்ன பண்ணலாம்?னு கான்பிரன்ஸ் ரூம் புக் பண்ணி யோசிச்சோம். அப்ப தான் ஒரு சப்பாத்திக்கு இப்ப ரிலீஸ் ஆகியிருக்கற இந்த படம் போகலாம்னு பல்பு எறிய, மடமடனு மானேஜரையும் ஆட்டத்துக்கு சேர்த்து, ஒரு முக்யமான மீட்டிங்க் இருக்கு, லேட்டா வருவேன்!னு தங்கமணிக்கும் தகவல்(அல்வா) குடுத்து டிக்கட் புக் பண்ணியாச்சு.

சரி, படத்தின் பெயரை பாத்தால் எதோ தியானம், மன அமைதி, உம்மாச்சி வர பக்தி படம்னு பாத்தா கதை என்னவோ நம் தமிழில் ஒரு டஜன் படங்களுக்கு மேலாக அரைத்த மறுஜென்மம் மாவு தான் என்றாலும், இவங்க கொஞ்சம் பிரஷ்ஷா தண்ணி விட்டு அரச்சு இருக்காங்க.
பொதுவா ஹாரூக் படம் எல்லாம் எனக்கு போகோ சானல் பாக்கற மாதிரி காமடியா இருக்கும். இந்த படமும் அதே மாதிரி தான். எழுபதுகளில் வாழ்ந்த ஒரு ஜூனியர் ஆர்டிஸ்டாக ஷாரூக் வருகிறார். பெரிய காலருடன் கலர் கலர் சட்டை, பெல்பாட்டம் பெண்ட் அணிந்து தன் நண்பனுடன் அவர் அடிக்கும் லூட்டி சிரிப்பை வரவழைக்கிறது.


பிலிம் பேர் அவார்டுக்கு டகால்டி பண்ணி ஹாலுக்கு உள்ளே நுழையும் காட்சி டாப் என்றால் தன் உள்ளங்கவர் நடிகையை கவர தமிழ் ஹீரோ மாதிரி சண்டையிடும் ஹூட்டிங்க் காட்சி விவிசி.


ஹீரோயின் புதுமுகம் தீபிகா படுகோனே - பிரபல பாட்மிட்டன் சாம்பியன் ப்ரகாஷ் படுகோனேவின் மகள். அம்மணிக்கு ஒளிமயமான எதிர்காலம் காத்து இருக்கு. ஷாரூக் படத்தில் ஹீரோயின்(கள்) எல்லாம் எம்டிஆர் ஆவக்காய் ஊறுகாய் கணக்கா சும்மா தொட்டு கொள்ள வந்து போவார்கள். இதில் தலை கீழ். அம்மணிக்கு நடிப்பதற்க்கு செம வாய்ப்பு. அழகாய் ஸ்கோர் பண்ணி இருக்கிறார்.
வர வர கலி முத்தி விட்டது. பின்ன என்ன, சல்மான் தான் சட்டை இல்லாமல் பாடல் காட்சியில் வலம் வருவார் என்றால் இந்த ஷாரூக் கூட சட்டை இல்லாமல் ஐட்டம் சாங்க் ஆடுகிறார்.
காமிரா நம்ம ஊர் மணிகண்டன். படம் முழுக்க கண்ணை உறுத்தாத வகையில் காமிரா கோணங்கள். கலை சாபு சிரில்.படத்தில் வரும் பிரமாண்ட ஸ்டுடியோ செட்கள் சும்மா அதிருது.


ரெண்டு பாட்டு முணுமுணுக்க வைக்குது.
ஒரு பாட்டுக்கு ஹிந்தி படவுலகே திரண்டு வந்து ஷாரூக்கோடு ஆட்டம் போடுகிறது. பின்னணி இசையில் கவனம் செலுத்திய மீஜிக் டைரக்டர் பாட்டுகளை சும்மா காத்தாட விட்டு விட்டார்.
ரெண்டாம் பாதி கொஞ்சம் ஜவ்வா இழுக்குது. முடிவு எல்லாம் நாம் அதுவும் தமிழர்கள் ஈசியா யூகிக்க கூடியது தான். நெஞ்சம் மறப்பதில்லை!னு ஆரம்பிச்சு, நானே வருவேன்! வரைக்கும் எத்தனை தமிழ் படம் பாத்து இருப்போம்.
சும்மா உங்க பிரண்ட்ஸோடு ஜாலியா போயிட்டு வாங்க. படத்துல காத்து இல்லை,கருத்து இல்லைனு எல்லாம் குத்தம் சொல்ல கூடாது. மேசேஜ் சொல்றத்துக்கு இந்த படம் என்ன செல்போனா?
ஷாரூக் சொந்த காசை போட்டு படம் எடுத்ருக்கார்.
ஏற்கனவே படம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டாம். கல்லா களை கட்டியாச்சாம்.

Thursday, November 15, 2007

வேல்


முருக வழிபாட்டில் வேலுக்கு முக்யமான ஒரு இடம் உண்டு. ஏனேனில் வேலானது சக்தியின் மறுப்ரதியாகவே கருதபடுகிறது. முருகனடியார்கள் வேலை தம் இல்லத்தில் வைத்து வணங்குவது வழக்கம். திருபரங்குன்றத்தில் கூட வேலுக்கு தான் சகல விதமான அபிஷேகங்கள் செய்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.(தகவல் தவறாயிருப்பின், வலிக்காமல் குட்டி திருத்தவும்).

கந்த சஷ்டி கவசத்தில் முருகனை பாதாதிகேசம் அழகாக வர்ணித்த பால தேவராயர், முருகன் கை வேலை அடியவர் தம் அனைத்து அவயங்களையும் காக்க வருமாறு அழைக்கிறார். பக்தர்தம் துன்பத்தை போக்க, எப்படி விஷ்ணுவின் சுதர்சன சக்ரம் விரைந்து வருமோ அதை போல முருகன் வருமுன் அவனது கைவேல் விரைந்து வந்து விடுமாம்.

பொதுவாக தமிழ் பேசும் இடங்களில் எல்லாம் முருகன் வியாபித்து இருக்கிறான். அது மலேசியாவாகட்டும், சிங்கப்பூர், லன்டன், அமெரிக்கா என முருகனடியார்கள் அவனது திருபுகழை பாடி பரவசமடைகிறார்கள். இதனால் தானோ என்னவோ அம்பிகையை பாடி வந்த ஆதிசங்கரர் திருசெந்தூரில் குடி கொண்டிருக்கும் முருகனை சுப்ரமண்ய புஜங்கம் பாடி வழிபட்டார்.
சஷ்டியில் (விரதம்) இருந்தால் அகப்பையில் வரும் என்பதை தான் நம் மக்கள் சட்டியில் இருந்தால் ஆப்பையில்(கேசரி?) வரும் என மாற்றி விட்டனர்.

இன்று கந்த சஷ்டி. திருசெந்தூரில் மக்கள் கூட்டம் கடல் அலையென கூடி நிற்கும். அகங்காரம் அழித்து, பகைவருக்கும் அருள் புரிந்து நிற்பான் கந்தன்.
சரவண பவ! என வள்ளி கணவனை காவடி சிந்து பாடி, கூவி அழைத்தால் கண்டிப்பாக குரல் குடுப்பான்.


பி.கு: தலைப்பை பார்த்து தலைதெறிக்க வந்த பக்த கோடிகளுக்காக பழனி பஞ்சாமிர்தம். :)
சென்ற வருட பதிவு இங்கே

Tuesday, November 06, 2007

தல தீபாவளி



லூசா இருக்கும் டிராயரை அடிக்கடி தூக்கி விட்டு கொண்டு, காமராஜர் மாதிரி முழங்கை வரைக்கும் சட்டை போட்டு கொண்டு, ஓடி ஓடி பிஜிலி வெடி போட்டு, பொதிகை டிவில ரஜினி, கமல் புது பட டிரெயிலர் பார்த்து பெருமூச்சு விட்டு, அம்மா செஞ்சு வெச்ச கேசரில ஆரம்பிச்சு, பக்கத்து வீட்டு ஆன்டி குடுத்த கல்கோனா (மைசூர் பாகுனு அவங்க சொல்லிக்குவாங்க) வரை உள்ளே தள்ளி, அடுத்த நாளே கார்க் புடுங்கி தீபாவளி கொண்டாடிய நாட்கள் போய், பத்து நாட்களுக்கு முன்னாடி வரைக்கும் லீவுக்காக மேனேஜர் கேபினுக்கு காவடி எடுத்து, டிரேயின் எல்லாம் கோட்டை விட்டு, பாடவதி பஸ்ஸில் பயணம் செய்து ஒரு வழியாக ஊருக்கு போய், பாத்து பாத்து வாங்கிய புடவையை அம்மாக்கு குடுத்து அவர்கள் முகத்தில் மின்னல் கீற்றாய் ஒளிர்ந்து மறையும் புன்னகையை பாத்து சந்தோஷப்பட்டு, தீபாவளி கொண்டாடிய காலமும் கடந்து போய்,புடவை எல்லாம் இந்த பெங்களூரில் ஒன்னும் சரியா அமையாது! எல்லாம் சென்னைல பாத்து, கேட்டு உனக்கு எடுத்து தரேன், இல்லாட்டி ராசுகுட்டி மாதிரி ஒரு புடவை நாமளே ஆர்டர் குடுத்ருவோம் என்ன?னு தங்கமணிக்கு மெய்யாலுமே அல்வா குடுத்து தல தீபாவளி கொண்டாட கிளம்பியாச்சு.

தல தீபாவளினாலே, எல்லோரும் அடுத்து கேட்கும் கேள்வி, அப்பறம், மாமனாருக்கு எவ்ளோ வேட்டு வைக்க போற? செயினா? மோதிரமா?

ஆஹா, இதேல்லாம் நம்ம கீதா பாட்டி காலத்துல வேணா நடந்ததா இருக்கலாம். இப்ப எந்த ரங்குவாவது வாய் திறந்து கேட்க முடியுமா? இல்ல, நினைக்க தான் முடியுமா? பின்னி பிரிய கழட்டிடுவாங்க இல்ல? :)

சென்னைல மழை கொட்டு கொட்டுனு கொட்டுது. இதுல எங்க போய் வெடி வெடிக்க? அப்படியே வெடிச்சாலும், எல்லாம் புஸ்ஸுனு தான் போக போகுது. அதனால பேசாம, மாமியார் செஞ்ச மிகசரோட சோபாவுல செட்டில் ஆயிட்டோம்னா நமீதாவோட சேர்ந்து நாமளும் தீபாவளி கொண்டாடிடலாம்.

என்னை போலவே தல தீபாவளி கொண்டாடும் நமது நண்பர்களான கைப்புள்ள, 'பிரியமான நேரம்' ப்ரியா, பொற்கொடி, பத்ம ப்ரியா, மணிப்ரகாஷ் ஆகிய எல்லோருக்கும் என் தீபாவளி வாழ்த்துக்கள். அடுத்த வருஷம் தல தீபாவளி கொண்டாட ரெடியாக இருக்கும் நண்பர்களுக்கும் அட்வான்ஸ் வாழ்த்துக்கள். :)

பி.கு: என்னடா இந்த பதிவுக்கு அஜித் படம் போட்டு இருக்கே?னு நீங்க கேக்கலாம். மறுபடி ஒரு தடவை தலைப்பை வாசித்து பார்க்கவும்.

Friday, November 02, 2007

விளம்பரங்கள் - II

part- I

ஒரு விளம்பரம் வெற்றியடைய அடிப்படையாக சில விஷயங்கள் தேவை.

1) மக்கள் வாழ்வோடு தொடர்புடைய நிகழ்வுகளை சிம்பிளாக சொல்லும் விதம். எ.கா: குழந்தைகள் உண்டியலில் சேமிக்கும் பழக்கத்தை அழகாக தங்கள் வங்கிக்கு பயன்படுத்தி இருப்பார்கள் பாங்க் ஆப் இந்தியா.

2) எளிமையான, நாம் அன்றாடம் புழங்கும் வார்த்தைகள், வரிகள், பாடல்கள். புது வீடு! புது மனைவி! கலக்கற சந்துரு! - ஏஷியன் பெயின்ட்ஸ்.

3) விளம்பர படத்தில் நடிக்க தேர்ந்தெடுக்கப்படும் மாடல்கள் நமது பக்கத்து, எதிர் வீட்டு தெரிந்த முகங்கள் போல இருப்பது பிளஸ் பாயிண்ட். பத்தே மூவுல செக் மேட் என பிஸ்து காட்டுவாரே அந்த ஏர்டெல் தாத்தா மாதிரி.

இது மூணும் சரியாக இருந்து விட்டால் அந்த விளம்பரம் ஹிட் என நான் அடித்து கூறுவேன்.

வளவள டயலாக்ஸ், சொல்ல வந்த விஷயத்தை தலையை சுத்தி மூக்கை தொடும் பாணி, முகம் சுளிக்க வைக்கும் விதமாய் படமாக்கிய விதம் என பல விஷயங்கள் ஒரு நல்ல பிராண்டை கூட மக்கள் ஏறெடுத்து பார்க்காத நிலைக்கு தள்ளி விடும்.

நான் சொன்ன அடிப்படை விஷயங்கள் தவிர ஒவ்வோரு பொருளை மார்கட் பண்ண ஒரு தனி டெக்னிக் கையாள வேண்டி இருக்கும்.
உதாரணமாக, "வாஷிங்க் பவுடர் நிர்மா! பாலை போல வெண்மை - நிர்மாவாலே வருமே!" என பாட்டு பாடி, நிர்மாவின் சிறப்பை சொல்லுவது ஒரு விதம் என்றால் மஞ்ச கட்டியை வாங்கினா மஞ்ச சட்டை, நீல கட்டியை வாங்கினால் வெள்ளை சட்டை என கம்பேரிசன் பண்ணி தனது மார்கட் எதிரிக்கு ஆப்பு வைப்பது ஒரு வகை.

ஆடை வகைகளுக்கு என்றுமே ஒரு தனி மார்கட் உண்டு. பொங்கலுக்கு ஆரம்பித்தால் கிறிஸ்மஸ் வரை புத்தாடை வாங்காத ஆள் தான் யாரு? அதுவும் புடவை என்றால் கேட்கவே வேணாம்.
எனவே ஜவுளி கடைகள் போட்டி போட்டு கொண்டு விளம்பர ஏஜன்சிகளை அணுகி ஒரு படம் எடுத்து குடுங்க எஜமான்! என கெஞ்சுகின்றன. இதில் டாப் டக்கர் என சொன்னால் சென்னை சில்க்ஸ் தான்!
"மத்தாப்பு சுட்டு சுட்டு போட தான் வேணும்" என ரீமேக் சாங்க் பாடி, சென்னை சில்க்ஸில் தீபாவளி! என ஒரு தீபாவளியை நம் கண் முன் கொண்டு வந்து விடுகிறார்கள். முக்யமாக, இவர்கள் தேர்ந்தெடுக்கும் மாடல்கள் இருக்கே! ஆஹா! சுப்பரோ சூப்பர்!

இப்போழுது ஸ்ரீதேவி சில்க்ஸ் - கோவை ஒரு விளம்பரம் காட்டுகிறார்கள்.
ஏதோ ஒரு பழைய பாடலை நினைவுபடுத்தும் வகையில் "ஆசை அதற்க்கும் மேலே!" என ஒரு மாடல் தன் தோழியரோடு ஆடுவது அடடா! கண் கொள்ளா காட்சி. அந்த மாடல் நடிகை பத்மப்ரியா தான்! என என் தங்கமணி அடித்து(தரையில தான்) கூற, நான் இல்லை என மறுக்க, இப்படியாக இன்னும் அந்த விளம்பரம் சென்சார் இல்லாமல் எங்கள் வீட்டில் ஓடி கொண்டிருக்கிறது. (இனி என்ன ஆகுமோ?)

சரவணா ஸ்டோர்ஸ்காரர்கள் சினேகாவை தங்கள் விளம்பரங்களுக்கு வருட கான்டிராக்ட் போட்டுவிடுவார்கள் போலும். ஆனால் தீடிர்னு "எல்லோர் கண்களும் எந்தன் மேலே"னு அழகான ஒரு அமீர் கல்யாணி ராகத்தில் அமைந்த ஜிங்கிளுக்கு ஷ்ரேயா ஆடி வருகிறார்.

சரி, டிராக் மாறி விட்டேன்.
இப்போ விளம்பர ஏஜன்சிகளின் லேட்டஸ்ட் டிரண்ட் குழந்தைகளை முன்னிலைபடுத்தி விளம்பரங்களை அமைப்பது.
a) மூணு மாசம் முழுகாம இருக்கேன்!னு தன் கணவனுக்கு ப்ரூ காப்பி குடுத்து புரிய வைக்கிறாள் அவரது தங்கமணி.
b) ஆரோக்யம்னா அது கோல்ட் வின்னர் தான்!னு சமையலே தெரியாத ஒரு குழந்தை அம்மாக்களுக்கு அறிவுறுத்துகிறது.
c) கறை நல்லதாக்கும்!னு ஒரு பாசமலர் அண்ணன் -தங்கை குழந்தைகள் சொல்கின்றன.
d) தாத்தா குடுத்த உண்டியலை, பத்ரமா பாங்க் ஆப் இந்தியாவின் லாக்கரில் வைக்கிறான் அந்த பொடியன்.
e) நூடுல்ஸ் எங்கே?னு வீட்டையே அட்டகாசம் செய்கிறான் ஹார்லிக்ஸ் பொடியன்.

அடிப்படையில் லாஜிக் இல்லை என்றாலும், நம் மனதில் இத்தகைய விளம்பரங்கள் ஒரு மாஜிக் செய்து விடுகின்றன, இல்லையா?
விளம்பரங்கள் காலத்துக்கேற்ப மாறிக்கொண்டே வரனும். இல்லாவிட்டால் மக்களுக்கு போரடித்து விடும்.
அமுல் - டேஸ்ட் ஆஃப் இந்தியா சிறந்த உதாரணம். சென்னையில் பனகல் பார்க், மவுண்ட் ரோடு என நெரிசல் மிகுந்த சிக்னல்களில் பில் போர்டுகள் வைத்து இருப்பார்கள். வாரம் ஒரு முறை, அந்த வாரத்தில் நடந்த ஏதேனும் முக்ய நிகழ்வுகளை ஹைலைட் பண்ணியிருப்பார்கள். கவனித்ததுண்டா?

கற்பனை வளமும், கிரியேட்டிவா திங்க் பண்ண தெரிந்து இருந்தாலும், மக்களின் மனசை பல்ஸ் பிடித்து பார்க்க தெரிந்து இருந்தால், எல்லாவற்றுக்கும் மேலாக நீங்கள் செய்யும் விஷயத்தை ரசித்து, அனுபவித்து செய்ய கூடிய மனபான்மை இருந்தால், விளம்பர துறை உங்களுக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்க தயாராக இருக்கிறது.

வாய்ப்பு கிடைத்தால், கோபிகாவுடனோ, யானா குப்தாவுடனோ மாடலாக நடிக்க நான் கூட தயாராக தான் உள்ளேன். ஒரு பயலும் கூப்ட மாட்டேங்கறான். மீசையை எடுத்து, கோட் சூட் போட்டா நானும் சஞ்சய் ராமசாமி தான்!னு சொன்னா தங்கமணி வாயை மூடிக் கொண்டு சிரிக்கற நிலைமை தான் உள்ளது. ஹும்! ஆசை இருக்கு தாசில் பண்ண! அதிர்ஷடம் இருக்கு பிளாக் எழுத! :)

நாகை சிவா வீட்டுக்கு போய் பல விளம்பரங்களை கண்டு ரசியுங்களேன்.

Monday, October 29, 2007

சும்மா தட்டி பாருங்க!

கூகிள் ஆண்டவர் இந்தியாவுல நிறைய பேரு பிளாக் கலை சேவை செய்யறாங்கனு தெரிஞ்சுகிட்டு, புதுசா ஒரு கருவிய கொண்டு வந்திருக்காங்க. கீழே உள்ள லிங்குக்கு(தமிழ்ல என்னபா?) போயி தமிங்கலத்துல உங்க டேமேஜர் இல்லாத நேரமா பாத்து தட்டுங்க.

http://www.google.com/transliterate/indic/tamil

அப்புறம் என்ன காப்பி-பேஸ்ட் டெக்னாலஜி பயன்படுத்தி பதிவுகளை(மொக்கைகளைனு கீதா பாட்டி படிக்கறாங்க பாருங்க) போட்டு தள்ளுங்க.

இதுல என்ன விஷேசம்னா உங்க ஆபிஸ்ல இருக்கும் சப்பாத்தி, ஆந்திர கொங்க்ரா, கன்னட மற்றும் கேரள குத்து விளக்குகளுக்கு அவங்க அவங்க மொழில மெசேஜ் (எவன்டா அது மசாஜ்னு படிக்கறது?) பண்ணலாம். :)

அந்த லிங்குல தமிழுக்கு பதிலா அந்தந்த மொழி பெயரை தட்டச்சினா அதற்க்குரிய லிங்க் வந்து சேரும். உதாரணத்துக்கு, இப்ப நீங்க திருச்சூர் விளக்குக்கு குட் மார்னிங்க் ஜொள்ள நினைச்சா இது தான் லிங்கு:
http://www.google.com/transliterate/indic/malayalam

மேலே சொன்ன பாராவுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது, சும்மா ஒரு உதாரணத்துக்கு, ஹிஹி... (இந்த டிஸ்கி யாருக்கு?னு நான் சொல்லவும் வேணுமா?) :)

எப்படி? கலக்கிட்டார் இல்ல கூகிள் ஆண்டவர். :)

இனிமே தமிழ்தொண்டு செய்ய கலப்பை, கோடாலினு தேடிட்டு இருக்க வேணாம். ஆனா உங்க வீட்டுல நெட் கனக்ஷன் வேணுமே, சரி, விடுங்க சில பேர் மொக்கை போட அவுட் சோர்ஸிங்க் பண்றாங்க, பக்கத்து வீடு எல்லாம் போறாங்க.

.... Type any Hindi/Malayalam/Kannada/Tamil language word in English (same way as we pronounce it) and press "SPACE bar"...it gets translated to that regional language. That too, it is very accurate !!!!!

Friday, October 19, 2007

நவராத்திரி ஸ்பெஷல்!

மு.கு: இது ஒரு மறு ஒளிபரப்பு, எல்லாம் பக்த கோடிகளுக்காக தான்!
சுண்டல் எங்கே? சக்கர பொங்கல் எங்கே?னு எல்லாம் கேக்கபடாது. பக்கத்து வீட்டுல வாங்கி சாப்பிட தான் எனக்கு தெரியும். :)

இந்த ஒன்பது என்ற எண்ணுக்கு தான் எத்தனை சிறப்பு!

1) நவ கிரகங்கள் ஒன்பது.
2) நவ ரத்னங்கள் ஒன்பது
3) ஜோதிஷத்தில் நவாம்சம் என்று சொல்வர்கள்.
4) சக்தி உபாசனையில் ஷ்ரி சக்ரத்துக்கு நவாபர்ண பூஜை என்று ஒன்று உண்டு.
5) நவமி திதியில் தானே ராமர் மானிடராக ஜனித்தார்.
6) ஒன்பது ஒளஷதங்களை கொண்டு தான் நவபாஷணம் என்ற அரிய மருந்து தயாரிக்கப் படுகிறது.
7) நவ ரசங்கள் - கோபம், சிருங்காரம், ஹாஸ்யம் என உணர்வுகள் ஒன்பது விதமானதே!
8) பூவுலகில் எம் பெருமாளுக்கு திருப்பதிகள் ஒன்பது.( நவ திருப்பதி)
9) நவராத்திரி - தேவி கொலுவிருந்து ஆட்சி செய்யும் திரு நாட்கள்.

இன்று துர்க்காஷ்டமி. சக்தி சீற்றம் கொண்டு மகிஷனை சம்காரம் செய்த நாள். கருணையே வடிவம் கொண்ட அவளா இவள்? என்று உலகே அதிசயித்த நாள்.

எனக்கு சின்ன குழந்தையிலிருந்தே பாட்டியிடம் கதை கேட்கும் போது அஷ்டபுஜங்களில், சகல விதமான ஆயுதஙளுடனும் சிங்க வாகனத்தில் புயலென நேரில் வருவதை போல உணர்வேன்.

மேலும் சாந்தமான அம்மனை விட, இந்த துர்க்கா, காளி, சண்டி, அபராஜிதா தேவி போன்ற உக்ர தேவிகள் தான் என்னை மிகவும் கவர்ந்தனர்.

சக்தி, இந்த உலகத்துக்கே அவள் தான் ஆதாரம். அந்த சிவனும் இயங்குவதே இந்த சக்தியால் தானே!
துர்க்கை, லக்ஷ்மி, சரஸ்வதி என நாம் அந்த ஆதார சக்தியை பிரித்து அவர்களுக்கு ஒரு உருவமும் குடுத்து வழிபடுகிறோம். ஆனால் இம் மூன்று சக்திகளும் நம்முடனே உள்ளது.

துர்கை (இச்சா சக்தி) - மன உறுதி.
லக்ஷ்மி (க்ரியா சக்தி) - மனம் லயித்த செயல்பாடு.
சரஸ்வதி (க்னான சக்தி) - தெளிந்த ஆறிவு.

நம் உடம்பை கிரியா சக்தியும், புத்தியை இச்சா சக்தியும், ஆத்மாவை க்னான சக்தியும் ஆள்கிறது.

தெளிந்த அறிவுடன் புத்தி சரியாக கட்டளை இட்டால் மனம் லயிகிறது. உடம்பு சொன்னபடி கேட்கிறது. ஒரு வேலையில் உடல், மனம், புத்தி எல்லாம் மன உறுதியுடன் ஈடுபடுகிறது.

நல்ல பழக்கமும், புலன்களை நம் கட்டுக்குள் வைப்பதன் மூலம் லக்ஷ்மி வந்தடைகிறாள். மனதை கட்டுபடுத்துவதன் மூலம் துர்க்கை நம்மை வந்தடைகிறாள்.
உண்மையான, குளிர்ந்த சொற்களை பேசுவதன் மூலம் சரஸ்வதி வருகிறாள்.

இந்த துர்க்காஷ்டமி அன்று தேவியை பார்த்தால் அடுத்த நாள் கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்ற நம்பிக்கை உண்டு. ஏனெனில் துர்க்கை உக்ரமாக தீப்பறக்கும் கண்களுடன், "இனி உனக்கு மன்னிப்பில்லை! தைரியம் இருந்தால் வாடா!"னு அசுரனை அறைகூவல் விடுத்து சம்காரம் முடித்து, குருதி அபிஷேகத்துடன் கோபம் தணியாமல் நின்ற கோலம் அது.



ஆனால் மறுநாள், கருணையே வடிவாக, கையில் மாணிக்க வீணையேந்தி, மதுர மொழிகள் பேசி, அபய முத்திரை காட்டி, தம்மை நாடி வருபவர்களுக்கு அவரவர் தகுதிக்கு ஏற்ப கலைகளை வாரி வழங்கும் சரஸ்வதியாக அருள் பாலிக்கிறாள்.

Pic courtasy: www.starsai.com

போஜ ராஜன் தீவிர லக்ஷ்மி உபாசகன். எனவே, அவனது மெய்யான பக்திக்கு கட்டுபட்டு, அஷ்ட லக்ஷிமிகளும் அவனது தேசத்தில் வாசம் செய்தனர்.


ஒரு நாள், மாஹாலக்ஷ்மி அவன் முன் தோன்றி, "போஜ ராஜனே! உன் நாட்டிலேயே பல காலமாக நாங்கள் தங்கி இருந்தால், மற்ற இடங்களுக்கு நாங்கள் எப்போழுது செல்வது? என முறையிட்டாள்.

போஜனும், சரி அம்மா! ஒரெ ஒரு லக்ஷ்மியை தவிர மீதி எல்லோரும் விடை பெறுங்கள்" என கூற, மஹாலக்ஷ்மியும் சம்மதிதாள்.

போஜன் கேட்டது தைரிய லக்ஷ்மியை தான்!

தைரிய லக்ஷ்மி அவனுடன் இருக்க, மற்ற லக்ஷ்மிகளும் வேறு வழியில்லாமல் மறுபடி அவனிடமே வந்தடைந்தனர்.
இந்த நவராத்திரி - விஜயதசமி நன் நாளில் நம் எல்லோர் மனதிலும் அந்த தைரிய லக்ஷ்மி குடி கொள்ளட்டும். மற்ற எல்லா லக்ஷிமிகளும் தன்னாலே நம்மை வந்தடைவார்களாக!

Monday, October 15, 2007

விளம்பரங்கள்

அது என்னவோ தெரியல, சின்ன குழந்தையில இருந்தே எனக்கு டிவில வரும் விளம்பரங்கள் மீது ஒரு வித ஈர்ப்பு. முதலில் பாடல்கள், மியூசிக், என வளர்ந்த அந்த ஆர்வம், பின் அந்த விளம்பரத்தை படமாக்கிய விதம், ஒளி அமைப்பு, சொல்லிய விதம், தேர்ந்தெடுத்த நடிகர்கள் என நோண்டி பார்க்க வைத்தது.

ஆரம்ப காலங்களில் "இந்தியா, மலேசியா, சிங்கபூர் போன்ற நாடுகளில் மக்கள் தேய்க்கும் ஒரே பற்பொடி கோபால் பற்பொடி" போன்ற விளம்பரங்களை ஆல் இந்தியா ரேடியோ திருனெல்வேலி வானோலியில் கேட்டு அடடா! அந்த ஊர்ல மக்கள் பல்லு தேய்கறதுக்கு காரணம் நம்ம கோபால் பல்பொடி தான்!னு புல்லரித்து போயிருக்கிறேன்.

டிவி பொட்டி வந்தபிறகு விளம்பரங்கள் இன்னும் மெருகேறின.
"தீபாவளிக்கு ஜவுளி வாங்க கைராசியான ஸ்தாபனம் போத்தீஸ்!" என்று பஸ்டாண்ட் முனையில் கூவி விறபது போல ரேடியோவில் சொன்ன நிலை மாறி, "சாமுத்ரிகா பட்டு! சர்வ லட்சணமான பட்டு!"னு மீரா ஜாஸ்மினுக்கு பட்டு புடவை கட்டி தாலி கட்டி கல்யாணம் எல்லாம் பண்ணி வைத்து என் வயிதெறிச்சலை கொட்டி கொண்டனர். புடவையை சொல்றாங்களா? மீரா ஜாஸ்மினை சொல்றாங்களா?னு எனக்கு அடிக்கடி சந்தேகம் வேற வந்து விடும்.

காலத்துக்கேற்ப விளம்பரங்களும் வளர்ச்சியடைந்து நவீன டெக்னாலஜி எல்லாம் பயன்படுத்தி 10- 20 செகண்டுகளில் ஒரு குட்டி கதையே சொல்லி விடுகிறார்கள்.
சிட்டுகுருவி லேகியம் விற்க தெருவோரத்தில் கூவுவது போல, கூவிய நிலை மாறி, ஸ்கிரிப்ட் ரெடி பண்ணி, ஷூட்டிங்க ஸ்பாட் எல்லாம் பாத்து வைத்து, டெக்னிகல் க்ரூ முடிவு செய்து, மாடல்களை தேர்வு செய்து, காப்பி எடிட்டர்களை புழிய புழிய வேலை வாங்கி, எத்திராஜ் போகும் மயில்களை ஜிங்கிள் எல்லாம் பாட வைத்து, மாடல்களை அழகா மிங்கிள் பண்ண வைத்து அர்ஜுன் அம்மா யாரு?னு நம்மை கதற வைத்து விடுகிறார்கள்.

பன்னாட்டு கமபெனிகள் இந்திய சந்தைக்குள் வந்த பிறகு விளம்பர துறைக்கு மவுசு கூடிவிட்டது. லக்ஸ் தேய்ச்சு குளிங்க!னு பாத் டப்புக்குள் ஷாரூகான் இறங்குறார், காட்பரீஸ் சாக்லேட்டுக்கு அமிதாப் ஆலாய் பறக்கிறார், சூர்யா சன் ஃபீஸ்ட் பிஸ்கோத்து விக்கறார், ஜெயசந்திரனில் ஆடை திருவிழா!னு கோபிகா குட்டி குதிக்கறா!

எல்லாம் டப்பு படுத்தற பாடுங்க.

"திரைப்படத்தின் இப்பகுதியை உங்களுக்கு வழங்குபவர்கள்...." என ஆரம்பித்தாலே நம் கைகள் தானாக ரிமோட் பட்டனை அழுத்தும். இல்லையா?
ஆனால் ஒரு சில விளம்பரங்கள் மட்டும் நம் கவனத்தை ஈர்த்து விடும். பத்து அல்லது இருபது செகண்டுகள் நம்மை தன்பால் ஈர்க்க என்னவெல்லாம் செய்ய வேண்டி இருக்கு? என்று நினைத்து பாருங்கள். இன்று பல சாடிலைட் சானல்கள் ஓடிகொண்டிருப்பது இந்த மண்டகபடிதாரர்கள் தயவில் தான்.

போதிய விளம்பரதாரர் இல்லையேனில் அவசர அவசரமாக கோலங்கள்-அபிக்கு குண்டடி படும். நடன போட்டியில் சொம்பு அழுது கொண்டு பஞ்ச்(சர்) டயலாக் விடுவார். எல்லாம் செந்தில் சொன்ன மாதிரி "ஒரு விளம்பரதேங்க்"

சரி, ஒரு விளம்பரம் வெற்றியடைய ஏதேனும் வெற்றி பார்முலா உண்டா? என கேட்டால் நிச்சயம் உண்டு என்பேன்.

எப்படி தாலி, குங்குமம், வேப்பிலை, குரங்கு, நாய், பாம்பு, யானை, கிராபிக்ஸ்,தீமிதி, நாட்டாமை, (நிஜமான) சொம்பு எல்லாம் ராம நாராயணன் படத்தின் வெற்றி பார்முலாவோ அதே போல விளம்பரங்களுக்கும் சில நுணுக்கங்கள் உண்டு. அவை என்ன? என அடுத்த பதிவில் பார்ப்போமா?
(அப்ப தானே என் அடுத்த பதிவின் ஹிட் ஏறும்? - இது என்னோட பார்முலா, ஹிஹி)

பி.கு: நேரமும், ஆர்வமும் இருந்தால், நீங்களும் இந்த விளம்பர விளையாட்டில் கலந்து கொள்ளுங்களேன்.

Monday, October 08, 2007

2007 - அல்வா அவார்டுகள்

இந்த வருடத்தில் மிகச் சிறப்பாக அல்வா கிண்டி கொடுத்தவர்கள் யார் யார்? என முதலில் பார்ப்போம். அவர்களில் மிகச்சிறந்த போட்டியாளரை 2007 - சிறப்பாக அல்வா கொடுத்தவராக தேர்ந்தெடுக்கபடுவார்.

போட்டியாளர்#1: மாறன் சகோதரர்கள்

கை வீசமா கை வீசு!
டெல்லிக்கு போகலாம் கை வீசு!
மந்திரியாகலாம் கை வீசு!னு ஆசை ஆசையாய் பாலூட்டி, சீராட்டி வளர்த்த தாத்தாவுக்கே சும்மா அரை கிலோ அல்வா கிண்டி குடுத்த பெருமை இந்த சகோதரர்களையே சாரும். கிளிக்கு றெக்கை முளைச்சு பறந்து போயிடுத்து!

போட்டியாளர்#2: முஷரப் - தி பாஸ்

நானே ராஜா!
நானே மந்திரி!
எனக்கொரு கவலையில்ல! என உற்சாகமாக பாடிகொண்டு ஒட்டுமொத்த பாகிஸ்தானுக்கும் அல்வா கொடுத்து கொண்டிருக்கும் முஷரப் இந்த போட்டியில் கலந்து கொள்ளா தகுதியானவரே!
நவாஸ் ஷெரீப் வந்திறங்கிய பிளைட்டுலேயே அவரை திரும்ப ஏத்தி, கராச்சிக்கு போகுது வண்டி!னு சொல்லிட்டு அரேபியாவுக்கு ஒட்டகம் மேய்க்க அனுப்பி, "இந்தா வெச்சுக்க அல்வா!"னு கிண்டி கொடுத்த முஷரப்பின் திறமையை பார்த்து பெரிய அண்ணாச்சி அமெரிக்கவே இன்னும் திறந்த வாயை மூடலையாம்!

போட்டியாளர்#3: தேவ கவுடா & குமாரசாமி

அப்பாவும் பிள்ளையும் கூட்டணி அமைத்து இருபது மாதங்களுக்கு முன்னால் காங்கிரசுக்கு சூப்பரா அல்வா குடுத்து விட்டு, பி.ஜேபியிடம் "உனக்கொரு வாய்! எனக்கொரு வாய்!னு ஆட்சியை பங்கு போட்டுகலாம், என்ன?னு சொல்லிட்டு, இப்ப என்னடானா பங்கா? எந்த பங்கு? எந்த ஆட்சி? "காக்கா தூக்கிண்டு போச்சு!"னு இந்த வருடத்தின் மெகா அல்வா குடுத்த தேவ கவுடா மற்றும் அவரது தவமாய் தவமிருந்து பெத்த பிள்ளை குமாரசாமி ரெண்டு பெரும் இந்த போட்டிக்கு லாயக்கானவர்களே!

போட்டியாளர்#4: சொம்பு மற்றும் பப்லு

விஜய் டிவில ஜோடி நம்பர் ஒன்னு!னு ஒரு புரோகிராம். மெகா சீரியலுல அழுத மூஞ்சிகள் எல்லாம் சோக்கா பவுடர் அடிச்சுண்டு, புது சொக்கா எல்லாம் போட்டுண்டு
"தாம் தக்கா!
தைய தக்க!"னு ஆட்டம் போடறாங்க.
அதுக்கு சொம்புவும் ஒரு நாட்டாமையாம்! (என்ன கொடுமை இது காணாம போன ஏஸ்?)
யப்பா! 9 மாசத்துலேயே நான் டான்ஸ் ஆடி, பிரசவம் பாத்த நர்ஸை கரக்ட் பண்ணினவனாக்கும்!னு சொம்பு விடற பில்டபுக்கு எல்லாம் உச்சகட்டமாக கடந்த வாரம் பப்லுவ பார்த்து என்ன ஆடற நீயி?னு வாய குடுக்க, "நான் ஆடவேயில்லை!னு சொம்பு சொல்லிடுச்சு!னு பப்லு குதிக்க, பாக்கற நாம மண்டைய பிச்சுக்க வெச்சுட்டானுங்க.
இதை பற்றி விரிவாக அறிய மலேசிய மாரியாத்தா சொல்றதை கேளுங்க.

எல்லாம் புரோகிராமை பேமஸ் ஆக்க அவங்க கிண்டி குடுக்கற அல்வா! நீங்க ஒழுங்கா சப்பாத்திக்கு மாவு பிசைங்க!னு தங்கமணி என் தலைல தட்டினதுக்கு அப்புறம் தான் நமக்கு பல்பு எறிய ஆரம்பிச்சது.

அட பாவிகளா! இதை பாக்கற நேரத்துல 10 சப்பாத்தி தோசை கல்லுல போட்டு எடுத்ருப்பேனே!

சரி, இவங்க தான் நம்ம போட்டியாளர்கள். இப்ப நீங்களே இதுல 2007 - மிக சிறந்த அல்வா கொடுத்தவர் யாரு?னு தேர்ந்தெடுங்க பார்க்கலாம்! :)

Monday, October 01, 2007

சட்டம் தெரியுமா உங்களுக்கு?

Right to Emergency Care:
Date Of Judgment: 23/02/2007 .
Case No.: Appeal (civil) 919 of 2007.

The Supreme Court has ruled that all injured persons especially in the case of road traffic accidents, assaults, etc., when brought to a hospital / medical centre, have to be offered first aid, stabilized and shifted to a higher centre / government centre if required. It is only after this that the hospital can demand payment or complete police formalities. In case you are a bystander and wish to help someone in an accident, please go ahead and do so. Your responsibility ends as soon as you leave the person at the hospital.
The hospital bears the responsibility of informing the police, first aid, etc.
Please do inform your family and friends about these basic rights so that we all know what to expect and what to do in the hour of need. Please not only go ahead and forward, use it too!!!!
பி.கு: பிளாக் யூனியனில் இதை மாதிரி உருப்படியா பதிவு போட்டா ஈ அடிக்குது. அதான் இந்த கடையில் பதிந்தேன். நாலு பேருக்கு நல்ல விஷயங்கள் போய் சேர்ந்தா அதுவே போதும்.

Monday, September 03, 2007

கிருஷ்ண ஜெயந்தி

பொதுவா நமக்கு பண்டிகைகள் நினைவுக்கு இருக்கோ இல்லியோ, அந்தந்த பண்டிகைக்கு செய்யும் பக்க்ஷனங்கள் எல்லாம் அத்துபடி.

கிருஷ்ணர் என்னிக்குமே ஸ்பெஷல்.


உப்பு சீடை, வெல்ல சீடை, புழுங்கல் அரிசி முறுக்கு, முள்ளு முறுக்கு,தட்டை, தேங்குழல், அப்பம், அதிரசம்.
ஸ்ஸ்ஸ்ப்பா! இதேல்லாம் கிருஷ்ணர் அமுக்கினாரோ இல்லையோ அவர் பெயரை சொல்லி நாம அமுக்கறோம்.
வீட்டுல இருக்கற நம்ம கீதா பாட்டி மாதிரி பெரியவங்க இதையேல்லாம் செய்யறத்துக்கு ஒரு ரகசிய பார்முலா எல்லாம் வெச்சு இருப்பாங்க.

முறுக்கு கடமுடனு வரணும்னா இவ்ளோ அரிசிக்கு இவ்ளோ தண்ணி, இந்த பததுல அரைக்கனும்னு ஒரு ஜிஸெல்வி ராக்கட் விடற ரேஞ்சுக்கு முந்தைய நாளே கவுன் டவுன் எல்லாம் ஆரம்பிச்சுடும்.
சேட்டை பண்ணூம் குழந்தைகளை அந்த ஏரியாவிலிருந்து அப்புறபடுத்துதல், நடுவில் கவுரவ ஆலோசனை சொல்ல துடிக்கும் ரங்குவை "உப்பு வாங்கிண்டு வாங்க! பெருங்காயம் வாங்கிண்டு வாங்க! வெல்லம் பத்தலை!"னு சாக்கு சொல்லி டிரில்(பழி) வாங்கும் படலம் எல்லாம் இனிதே நிறைவேறும்.

உம்மாச்சி கும்பிட்டு முடிஞ்சதும், பக்கத்து வீடு, எதிர் வீடு, அடுத்த வீடு என டிஸ்ட்ரிபியூஷன் அழகா நடக்கும். எல்லோருக்கும் குடுக்கனும்! என்ற நல்ல எண்ணத்தை விட, "முறுக்குனா இப்படி தான் இருக்கனும்!"னு அந்த பரிமளா தெரிஞ்சுக்கட்டும், பெருசா போன கிருஷ்ண ஜெயந்தில உப்பில்லாத முறுக்கை பண்ணிட்டு என்ன பீத்து பீத்தினா அவ! என பீர்(peer not beer) பிரஷர் எல்லாம் தலைகேறும்.

இதுல தெரியாதனமா, "பரிமளா மாமி வீட்டு அதிரசத்துக்கும் மணமுண்டு!"னு ரங்கு திருவாய் மலர்ந்தருளினால் போச்சு!

அன்னிக்கு கிருஷ்ண ஜெயந்தி ரங்குவுக்கு மட்டும் சிவ ராத்திரியாக மாறி விடிய விடிய லக்க்ஷார்சனை, சகஸ்ர நாமாவளி எல்லாம் ஜோரா நடைபெறும்.

அப்புறம் அந்த ஜென்மத்துக்கு ரங்குவிற்கு அதிரசத்தை பார்த்தாலே அலர்ஜியாகி விடும்.

இப்படி ஏகப்பட்ட கலாட்டாக்கள் நடந்தாலும் பண்டிகைகள் என்றுமே இனிமையானது தானே! (மாரல் ஆஃப் தி பதிவு சொல்லிட்டோம்ல).
happy Birthday krishna! :)))

Wednesday, August 29, 2007

ஒரு அறிவிப்பு

என்னவோ நான் தான், கல்யாணத்துக்கு அப்புறம் என் தங்கமணியை எழுத விடலை!னு எதிர் கட்சிகள் சுமத்திய பழி இதோ தூள் தூளாகிறது.

என்னை "நல்லவன்! வல்லவன்! நாலும் தெரிந்தவன்!" என போற்றி புகழ்ந்து அம்மணி எழுதிய பதிவை பாரீர். (போய் பாருங்க, அப்புறம் தெரியும்).
அங்க போனோமா, பதிவை படிச்சோமானு இருக்கனும். ஐடியா குடுக்கற வேலை எல்லாம் வேணாம்! இப்பவே சொல்லிக்கறேன்.

இதேல்லாம் ஒரு பொழப்பா?னு மண்டகபடியை இங்கயும் ஆரம்பிக்கலாம்.

Tuesday, August 28, 2007

ரக்க்ஷா பந்தன் ஒச்சாயினு!

என் இனிய பதிவுலக பாச மலர்களாம் அக்கா, தங்கைகளுக்கு இனிய ரக்க்ஷா பந்தன் வாழ்த்துக்கள்.

கீழே படத்தில் அல்லாடி கொண்டிருப்பது எனது அருமை தம்பி, குவைத் புகழ், பக்கா திருடன் என செல்லமாக அழைக்கபடும் நமது சச்சின் கோப்ஸ் இல்லை! என நான் உறுதியாக கூறுகிறேன்.

*ahem, இரண்டாம் படத்தில் இருப்பது அம்பி தான்! என சில எதிர் கட்சிகள் புரளியை கிளப்பி விட்டு கொண்டிருக்கிறார்கள்.

அவர்களுக்கு எல்லாம் நான் ஒன்று சொல்லி கொள்கிறேன்.

ஆயிரம் பூரி கட்டைகளை பார்த்தும் தனது கொள்கையில்(என்னது?) உறுதியாக அஞ்சாமல் இருப்பான் இந்த அம்பி! :)


பிளாஷ் நியூஸ்: நமது மலேசியா மாரியாத்தா! காமடி குயின் "மை ஃபிரண்ட்" 'பாய்ஸ் புகழ்' சித்தார்த்தை தனது உடன் பிறவா சகோதரனாக ஏற்று கொண்டு ஒரு ராக்கி அனுப்பி உள்ளார்.

அதை தம்பி சித்தார்த்தும் தொல்லை விட்டது! என மிகவும் மகிழ்ச்சியாக ஏற்று கொண்டு விட்டார்! என்பதை நமது பிமுகவின் தகவல் தொடர்பு துறை உறுதி செய்கிறது. :)))


Monday, August 27, 2007

தங்கத் தேரில் ஓணம் வந்தல்லோ!







நம் அண்டை மாநில கேரள சேட்டன்களுக்கும், சேச்சிகளுக்கும், மற்றும் காவ்யா மாதவன், நவ்யா நாயர், மீரா ஜாஸ்மீன், நயன் தாரா, அசின் அக்கா, ரேணுகா மேனன் எல்லோருக்கு ஒணம் நல்வாழ்த்துக்கள்.


சரி போனா போகுது,

மமுட்டி மாமா, மோஹன் லால் பெரியப்பா, ப்ரித்விராஜ் சித்தப்பா எல்லோருக்கும் இனிய ஓணம் வாழ்த்துக்கள். பாருங்க, சென்னைக்கே லீவு விட்ருக்கோம். இப்பவாவது ஒழுங்க தண்ணிய தொறந்து விடுங்க. என்ன சேட்டங்களா மனசிலாயிட்டோ?

மோகினியாட்டம். (இன்னிக்கு எனக்கு இருக்கு வசமா :)

Wednesday, August 22, 2007

சக் தே இந்தியா

இந்த ஜிலேபி தேசத்தில் 'சிவாஜி' என்ற தமிழ் படத்தின் பெயரையே கன்னடத்தில் எழுதி போஸ்டர் ஒட்டுகிற நிலமையில், இங்குள்ள என் இனிய தமிழ் மக்களுக்கு இஷ்க், பிஷ்க் போன்ற இந்தி படங்களும் 300 பருத்தி வீரர்கள், உறுமாறும் வேட்டையர்கள் போன்ற ஆங்கில படங்களே ஆறுதல்.
நீண்ட்ட்ட நாட்களுக்கு பிறகு நல்ல ஹிந்தி படம் வந்ருக்கு! மிஸ் பண்ணிடாத!னு எங்க ஆபிஸ் ரசகுல்லா சொன்னதை தட்ட முடியாமல், தங்கமணி சகிதமாய் இந்த படத்துக்கு போயாச்சு.

எனக்கெல்லாம் கோபுரம் பூசு மஞ்சள் தூள், ஜெயசந்திரன் டெக்ஸ்டைல்ஸ், மற்றும் அண்ணாச்சி கடையில் எடுத்துக்கோ!னு விளம்பரம் பாத்துட்டு தான் படம் பார்க்க பிடிக்கும். இங்கே ஒன்னுமே காட்டாமல், படக்குனு படத்தை போட்டு விட்டார்கள். என்னை மாதிரியே தான் மற்றவர்களுமா?னு நான் சுற்றும் முற்றும் பார்த்ததை தப்பா புரிந்து கொண்ட தங்கமணி, பக்கத்து சீட்டுல என்ன லுக்? ஒழுங்கா படத்தை பாருங்கோ!னு இடிக்க சுய நினைவுக்கு வந்தேன்.

இதான்பா கதை:

பாகிஸ்தானுக்கு எதிரான ஹாக்கி பைனல் மேட்சில் கைக்கு கிடைத்த கேசரி போன்ற கோல் போடும் வாய்ப்பை கோட்டை விட மீடியாக்களால் ஷாருக் தேச துரோகி! என முத்திரை குத்தப்படுகிறார்.ஏழு வருடங்களுக்கு பிறகு இந்திய மகளீர் ஹாக்கி டீமுக்கு கோச்சாகி எப்படி பட்டய கிளப்புகிறார்? என்பது தான் கதை.

இது கதையல்ல நிஜம்:

மிர் ரஞ்சன் நேகி என்ற இந்திய ஹாக்கி வீரர் 1983 ல் பாக்குக்கு எதிரான மேட்ச்சில் 1 - 7 என கோட்டை விட, மேட்ச் பிக்ஸிங்க் செய்ததாக குற்றம் சுமத்தபடுகிறார். சில வருடங்களுக்கு பிறகு இந்திய மகளிர் அணிக்கு கோச்சாகி காமவெல்த் போட்டிகளில் தங்கம் வாங்கி தந்தார்.


திரைக்கதை நகர்த்திய விதம் அருமையோ அருமை. 16 பேர் கொண்ட டீமில் ஆந்திரா, ஹரியானா, மிசோரம், பஞ்சாப்(ஆமா! ஆமா) என பலதரப்பு முகங்கள். முதன் முறையாக யஷ் சோப்ரா படத்தில் கும்பலாக கும்மியடிக்காத, லிப்ஷ்டிக்கே போடாத பெண்கள்!

ஆச்சரியம் ஆனால் உண்மை!

உச்சா போறத்துக்கு கூட கோட் சூட் போட்டு ஹெலிகாப்டரில் ஒத்தை பெட்டியுடன் வந்திறங்கும் ஷாரூக் இதில் இல்லை.வசனங்கள் மிக ஷார்ப். "ஏக் காவ் மேம் ஏக் கிசான்" ஹிந்தி தெரிஞ்ச எனக்கே வசனம் புரிஞ்சதுனா பார்த்து கொள்ளுங்கள். அதிலும் அந்த ஜார்கண்ட் மா நில பெண்கள் வசனம் உச்சரிக்கும் விதம், ஹரியான்வி மொழியில் பேசும் பெண் கைத்தட்டலை பெறுகிறார்கள்.


பஞ்சாபி பெண் அந்த மாநிலத்துக்கே உரிய வேகம், கோபம் எல்லாம் கலந்து கட்டி அடிக்கிறார்! என நான் இங்கு மெய் மறந்து எழுதினால் ஒரு வாரம் நீங்க தான் பாத்ரம் தேய்க்க வேண்டி இருக்கும் என அம்மணி அன்பாக எச்சரித்து இருப்பதால் நீங்களும் இந்த வரிகளை விட்டு விட்டு படியுங்கள். கமண்ட் செக்ஷனில் காப்பி பேஷ்ட் பண்ற வேலை எல்லாம் வேணாம்! இப்பவே சொல்லிக்கறேன் .


ஷாரூக் - இதுவரை நான் நினைத்து கூட பார்த்திராத ஷாரூக். டான்(DON) என்ற படத்தில் ஹீரோவாக வந்து காமடியில் கலக்கிய ஷாரூக்கா இது? வயதுக்கேற்ற குறுந்தாடி, உடல் அசைவுகள், முழுக்கை சட்டையை அழகாக முட்டி வரை மடித்து விட்ட நேர்த்தி, மனித சைக்காலஜியை அழகாய் புரிந்து கொண்டு மகளீர் அணியினை வழி நடத்தும் விதம், தான் துரோகி இல்லை! என்பதை 4 பக்க வசனங்களாய்(கேப்டன விட்டா பட்டய கிளப்பி இருப்பார்) பொழியாமல் கண்களிலேயே காட்டிய விதம் என நடிப்பில் பிஸ்த்து காட்டுகிறார். அவார்டு உறுதிங்கோ!
கண்களை உறுத்தாத லைட்டிங்க், ஆஸ்த்ரேலியாவை படமாக்கிய விதம், மற்றும் குறிப்பிட்ட ஆங்கிள்களில் காமிரா கோணங்கள் குறிப்பாக சொன்னால் அந்த இந்தியாவுக்கும் அர்ஜெண்டினாவுக்கும் நடக்கும் ஹாக்கி மேட்ச்சை காமிரா வீராங்கனைகளோடு வந்து, பின் ட்ராலி ரோலிங்க் செய்து, சட்டுனு கிரேன் ஷாட்டில் மைதானத்தை காட்டிய விதம் இருக்கே! அடடா! (இப்படிலாம் டெக்னிகலா எழுதினா தான் இந்த பதிவு தேசி பன்டிடிலோ, கில்லியிலோ வருமாம் அதான்! கண்டுகாதீங்க)

இந்தியாவில் கிரிகெட்டை தவிர வேறு விளையாட்டை (டென்னிஸ் விதிவிலக்கு அதுவும் சானியா இருப்பதால் தான்) கண்டுகொள்ள ஆட்கள் இல்லை! என்ற உண்மையை அழகாக வாழைபழத்தில் ஊசி ஏற்றுவது போல சொல்லி இருக்கிறார்கள். இந்திய விளையாட்டு வீரர்களுக்கு கோச்சாக இருப்பது எவ்ளோ கடினம்? என்பதை இதை விட சிறப்பாக யாராலும் காட்ட முடியாது. சாப்பல் மாமா ஏன் துண்டை கானோம் துணிய காணோம்னு ஓடினார்?னு இப்போ தெரியுது எனக்கு.

இந்த படத்தின் மிக பெரிய பிளஸ் பாயிண்ட் ஷாருகிற்க்கு இல்ல, யாருக்குமே டூயட் கிடையாது. ஒவ்வோரு வசன முடிவிலும், எஸ்.ஏ. ராஜ்குமார் தயவில் "ல லா லா ல லா லா" கோரஸ் கிடையாது. மல்லிகா ஷெராவத்தின் ஐட்டம் சாங்க் இல்லை.

இன்டர்வல் ஒரு மணி நேரத்திலேயே வந்து விடுகிறது. பக்கத்து சீட் நாதாரி, பாப்கார்ன், பெப்ஸி, ஐஸ்க்ரீம் என வாங்கி வந்து என் வயதெறிச்சலை கொட்டி கொண்டான்.

தங்கமணி: எவ்ளோ பாசமா அவன் தங்கமணிக்கு பாப்கார்ன் ஊட்றான் பாருங்கோ!

அது அவன் தங்கமணி இல்லை, தள்ளிண்டு வந்தது.

உங்களுக்கு எப்டி தெரியும்?

எந்த லூசாவது நாப்பது ரூவாய்க்கு ஒரு பாக்கட் பாப்கார்ன் வாங்குவானா? எங்க ஊர்ல ரூவாய்க்கு நாலு அச்சு முறுக்கு. ரெண்டு ரூவாய்க்கு வாங்கினா ஒன்னு கொசுறு தருவான்.

தங்கமணி: ( நக்கலாக) உங்க ஊர்ல சக் தே இந்தியா படம் வருமா?

கிளைமாக்ஸ் எடுத்த விதம் மிக நேர்த்தி. டைரக்டருக்கு இது இரண்டாம் படமாம். நம்ப முடியலை. பின்ணணி இசை இன்னும் கொஞ்சம் மெருகேற்றி இருக்கலாமோ? நல்ல கதைகளம், சோப்ரா சார், எங்க ஏ.ஆர். ரஹ்மானிடம் குடுத்து இருக்கலாமே! லகான் பாத்தீங்க இல்ல? பிரியாணி நல்ல வேணும்னா பாஸ்மதி ரைஸ் வாங்க தயங்க கூடாது சார்.

மொத்ததில் சக் தே இந்தியா - சலாம் இந்தியா.

இதே படத்தை பற்றி ஒரு அசத்தலான விமர்சனத்தை பிலாகேஸ்வரி வாயால் கேளுங்கள். அக்கா குவிஸ் போட்டி எல்லாம் நடத்தறாங்க. செம சுவாரசியமா இருக்கு.
இந்த படத்தின் தமிழ் உரிமை நமது ரீமேக் ராஜாக்கள் கையில் கிடைக்காமல் இருக்கனும். இல்லாட்டி, மாடசாமி s/o மயில்சாமி!னு ரீமேக் பண்ணிவிடுவார்கள்!

Friday, August 17, 2007

வல்லிய கேரளம்!

மு.கு: "போதுமே! நீங்க டைட்டில் வைக்கிற லட்சணம்! என்று சென்ஸார் போர்டின் கடுமையான ஆட்சேபனை காரணமாக "கும்தலக்கடி கும்மாவா! கேரளானா சும்மாவா?" என்ற அருமையான தலைப்பு கைவிடப்பட்டது.

கேரளா என்றவுடன் உங்களுக்கு சட்டுனு என்ன நினைவுக்கு வருகிறது?
1) God's Own country! India's Venice - என பீட்டர் விட ஆரம்பித்தால் அப்படியே சுண்டல் வாங்கி கொண்டு நடையை கட்டவும்.

2) நேந்ரங்காய் சிப்ஸ் சாம்பார் சாததுக்கு நல்ல சைடு டிஷ் என்று நினைத்தால் நீங்கள் ஒரு பொறுப்பான குடும்ப தலைவி.

3) கதகளி, கப்ப கிழங்கு, குழல் புட்டு, முல்லை பெரியார் அணை, ஆன்டனி என்று நீங்கள் நினைத்து இருந்தால் சினிமா அதிகம் பார்பவராக இருப்பீர்கள்.

4) மீரா ஜாஸ்மின், மஞ்சு வாரியர், கோபிகா குட்டி, காவ்யா மாதவன், நவ்யா நாயர் போன்றவர்கள் அவதரித்த திவ்ய ஷேத்ரம் என நீங்கள் நினைத்து இருந்தால் கையை குடுங்கள் - யூ ஆர் ஸ்டில் யூத்.

5) சபரி மலை, மலையாள பகவதினு நீங்கள் அடுக்கினால் ஹிஹி, பழம் நீயப்பா! உலா வரும் ஒளிகதிர் நடத்த நீங்கள் தான் சரியான ஆள்.

6) களரிப் பயட்டு, வர்ம கலைனு உங்களுக்கு அதிரடியாக தோன்றினால் நீங்கள் தினமும் ஆப்பு வாங்கும் அப்பாவி ரங்கு அல்லது ஆப்படிக்கும் ஒரு தங்கமணி.
டேய்! உனக்கு என்ன தோணிச்சு? அத சொல்லு முதல்லனு நீங்கள் கேட்கலாம்.
என் போன்ற குழந்தைகளுக்கு கிருஷ்ணர் குழந்தை ரூபமாக தவழும் குருவாயூர் தான் நினைவுக்கு வரும்னு நான் சொன்னால் நீங்கள் நம்ப போவதில்லை. :)

சரி, பில்டப் போதும், மேட்டருக்கு வரேன்.
திருமணம் ஆனதும் ஹைனிமூனுக்கு மொரிஷியஸா? மாலத்தீவுகளா? எங்க போக போறோம்?னு தங்கமணி தாக்குதலில் குதிக்க, நாம எல்லாம் இந்தியர்கள், அதனால அன்னிய தேசத்துக்கு எல்லாம் ஹைனிமூன் போனா அப்துல்கலாம் கோச்சுப்பார்.

திருநெல்வேலியில் இல்லாத இடங்களா? அகஸ்த்தியர் அருவி இருக்கு, மணிமுத்தாறு, பாப நாசம் அணைகள் இருக்கு! எங்கூர் ஆத்தங்கரையில் உள்ள பாறையில் அமர்ந்து தாமிரபரணியில் கால் நனைத்து கொண்டே ஹனிமூனை கொண்டாடலாம்னு ஒரு பட்ஜட் பத்மநாபன் பிட்டை போட்டு பார்த்தும் ஒன்னும் நடக்கவில்லை.

நீங்க இப்படி ஏதாவது டகால்டி பண்ணுவீங்கனு எனக்கு தெரியும், அதனால நானே எல்லாம் விசாரிச்சு, கேரளா டிரிப்புக்கு ஆன்லைன்ல அட்வான்ஸ் கட்டியாச்சு. ஒழுங்கா பாக்கி பணத்தை கட்டிடுங்கனு தங்கமணி பதிலடி குடுக்க வாத நாடி அடங்கி போச்சு எனக்கு.

அப்ப மாலதீவு, மொரீஷியஸ்னு சொன்னது எல்லாம்?

ச்சும்மா! அப்படி ஷ்டார்ட் பண்ணா தான் எல்லா ரங்கமணிகளும் இதுக்காவது ஒழுங்கா வழிக்கு வருவாங்கனு என் பிரண்டு சொன்னா!

ஆஹா! தெளிவா தான் இருக்காங்க, அப்ப தான் லூசா?

(அந்த பிரண்டை நான் அவசியம் பாக்கனும். அவளுக்கு இருக்கு தீவாளி. கர்ர்ர்ர்ர்ர்)

மிக சரியா அம்மணி பிறந்த நாள் வேற வந்து சேர்ந்தது. அதனால ஒன்னும் பேச முடியலை. முதலில் குருவாயூர் போனோம்.

திருப்பதி ரேஞ்சுக்கு வரிசை நீன்டு இருந்தாலும் நிற்கும் களைப்பே தெரியலை. ஹிஹி, குருவாயூர் குத்து விளக்குகள் எல்லாம் கையில் விளக்குடன் வரிசையில் நின்னா எப்படிப்பா களைப்பு தெரியும்?

ஆபிஸில் இருக்கும் திருச்சூர் குத்து விளக்கிடம் சம்சரித்து(வறுத்து) டெவலப் பண்ணிய மலையாளம் எல்லாம் நன்னாவே கை குடுத்தது.

ஆனால் தமிழ் படங்களில் கிளைமாக்ஸ் காட்சியில் போலீஸ் வருவது போல "ஹி இஸ் மை ரங்கமணி!"னு அம்மணி சமயம் பார்த்து கோல் போட்டு நமட்டு சிரிப்பு(வில்ல சிரிப்பு) சிரிக்க, அதுவரை நன்னா சம்சரித்து வந்த குத்துவிளக்கு, "என்ட அம்மே அழைக்கினு"! சேனலை மாற்றி, கிளிக்கு இறக்கை முளைச்சு பறந்து போக, கோவில் கடைகளில் பூரிக்கட்டை என்ன விலை?னு அம்மணி விசாரிப்பதை பார்த்து விட்டு அவசரமாக ஒரு உடன்படிக்கை ஏற்படுத்திக் கொண்டோம்.

ஒரு வழியா தரிசனம் முடிந்து(உம்மாச்சி தரிசனம்ப்பா!) அங்கிருந்து எர்ணாகுளம் சென்றடைந்தோம். அங்கே தயராக எங்கள் டிராவல் ஏஜண்ட் காருடன் வந்து எங்களை பிக்கப் செய்து கொண்டார்.

அடுத்த நாள் முழுக்க மூனார் ரவுண்டப் தான்.
அழகிய கேரள படங்களுடன் அடுத்த பதிவில் பார்ப்போமா?

Monday, August 13, 2007

இன்றைய சுதந்திரம்

இடம்: திருநெல்வேலி
இந்த தடவையாவது அப்பா லீவுக்கு வருவாரா மா? எனக்கு புது சைக்கிள் கிடைக்குமா?

கண்டிப்பா வருவார் கண்ணா! நேத்து நைட் கூட போன்ல உங்கிட்ட பிராமிஸ் பண்ணாரே?

ஆமா! போன வருஷம் கூட இப்படி தான் சொன்னார், வந்த ரெண்டு நாளுல கிளம்பிட்டார். ராஜேஷ், பிரகாஷ் அப்பா எல்லாம் அவங்க கூடவே இருக்காங்க. ஹோம் வர்க் செய்ய கூட ஹெல்ப் பண்றாங்களாம்.

சரிடா ராஜா! எல்லார் மாதிரியா உங்க அப்பா! அவங்க எல்லாம் மவுண்ட் எவரெஸ்ட் எங்க இருக்கு? எவ்ளோ உயரம்?னு புக்குல தான் படிக்கறாங்க. பாரு உங்க அப்பா அங்க தான் வேலை பண்றாரு.
இதோ பாரு அப்பா எவ்ளோ பெரிய டிரஸ் போட்டுண்டு கைல மெஷின் கன் வெச்சுண்டு ஹெலிகாப்டர் பக்கத்துல நிக்கறார் பாரு!

இடம்: சியாசின், மைனஸ் 52 டிகிரி குளிர், 21537 அடி உயரம்.

ஹலோ மேஜர்! இந்த தடவை நீங்க லீவுக்கு போறீங்க போல, கங்கிராட்ஸ்.

தாங்க்ஸ் ராஜ்! ரொம்ப சந்தோஷமா இருக்கு. எனக்கு ஒரு வாரம் முன்னடியே நீங்க திருநெல்வேலி போறீங்க இல்லையா, ஒரு சின்ன ஹெல்ப் பண்ண முடியுமா?

நோ பிராப்ளம்! சொல்லுங்க வாட் கேன் ஐ டூ பார் யூ?

என் பையன் புது சைக்கிள் கேட்ருக்கான். நான் ஊருக்கு போற வழில வாங்க முடியுமா?னு தெரில. எனக்காக நீங்க வாங்கி வைக்க முடியுமா? நெல்லை ஸ்டேஷன்ல நான் வாங்கிக்கறேன்.

ஷ்யுர்! இது கூட செய்ய மாட்டேனா உங்களுக்கு?

தாங்க்ஸ் ராஜ்!

இடம்: அகஸ்தியர்பட்டி விமான தளம் - நெல்லை மாவட்டம்

மேஜரின் மனைவி, ராஜ் மற்றும் குழந்தை அர்ஜுன் கையில் புது சைக்கிளுடன் மேஜரின் வரவுக்காக காத்திருந்தனர்.

ராணுவ விமானம் ரன்வேயில் வந்திறங்கியது. மூவர்ண கொடி போர்த்திய பெட்டி வந்திறங்கியது!

"சியாசினில் நடந்த தீவிரவாத ஊடுருவலை நமது இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்தது. இதில் நடந்த பயங்கர சண்டையில் அன்னிய நாட்டு கூலிபடைகள் 150 பேர் கொல்லப்பட்டனர். ராணுவ தரப்பில் ஒரு மேஜர் உட்பட இருபது வீரர்கள் உயிர் நீத்தனர். இறந்தவர் குடும்பங்களுக்கு பிரதமர் தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொண்டார். இத்துடன் செய்திகள் முடிவடைகிறது.

நேயர்களே! சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சிகள்:
காலை 7.30க்கு:
தேச பக்தி பாடல்கள் - பாடுபவர் சீர்காழி சிவசிதம்பரம்

9.00 மணிக்கு:
மேடி மாதவனுடன் கல்லூரி மாணவிகள் ஒரு குறும்பு பேட்டி

9.30 க்கு:
சரோஜ்ஜா சாமான் நிக்காலோ - உருவான கதை

10.30க்கு:
உடையணிவதில் ஆண்களுக்கு அதிக சுதந்திரமா? பெண்களுக்கு அதிக சுதந்திரமா? கலகலப்பான பட்டிமன்றம் சாலமன் பாபையா தலைமையில் காண தவறாதீர்.

11.30 க்கு:
நமீதாவுடன் சும்மா நச்சுனு ஒரு பேட்டி.

மாலை 5 மணிக்கு:
உலக தொலைக்காட்சிகளில் முதன்முறையாக இன்னும் திரைக்கே வராத கமலின் தசாவதாரம் - திருட்டு சிடி காண தவறாதீர்.

நேயர்களே! சுந்திர தின நிகழ்ச்சிகளை கண்டு மகிழுங்கள், இந்திய சுதந்திரத்தை கொண்டாடுங்கள்" - எங்கோ டிவி பெட்டி அலறிக் கொண்டிருந்தது.

Thursday, August 02, 2007

மாமியார் வீடு

பொதுவாக, கல்யாணம் முடிந்து ஒன்று அல்லது ரெண்டு மாதம் கழித்து எல்லா ரங்குகளும் கண்டிப்பாக தங்கள் மாமியார் வீட்டுக்கு போயே தீர வேண்டும். தானாக கூட்டி போனால் தங்கமணியிடம் ராஜ மரியாதை தான். ஆபிஸ் ஆணிகளில் மூழ்கி முத்தெடுத்து கொண்டிருந்தால், முதலில் தங்குகளிடமிருந்து "என்னங்க! நாம வாங்கி வந்த சாம்பார் பொடி, ரச பொடி, பருப்பு பொடி, மூக்கு பொடி எல்லாம் காலியாக போகுது. அதனால நாம ஒரு எட்டு நம்ம அம்மா வீட்டுக்கு போயிட்டு வரலாம்!"னு ஒரு வேட்பு மனு தாக்கல் ஆகும்.
அடுத்த வாரம், சாம்பார், ரசத்தில் உப்பு புளி எல்லாம் குறைய தொடங்கும்(என்ன ஒரு வில்லதனம்?). அப்படியும் புரியாத மாங்கா மண்டைகளுக்கு கடைசியாக ரிவிட்டு தான்.
எப்படா மாப்ள வர போறார்? நம்ம பொண்ண எப்படி பாத்துக்கறார்?னு தங்கமணி சைடுலயும் அவங்க பெரியம்மா, சித்தி, மாமா, மாமினு ஒரு பெரும் படையே ரொம்ப ஆவலா இருக்கும்.

நல்ல வேளை, நானே முந்திக் கொண்டேன். ஒழுங்கா இருபது நாளுக்கு முன்னாடி டிக்கட் எல்லாம் புக் பண்ணி, டேமேஜரிடம் புளுகி லீவு எல்லாம் வாங்கிண்டு, டிரெயின் ஏறியாச்சு. நம்ம கோச்சுல லோயர் பர்த், மிடில் பர்த் யாரு? என்ன வயசு? போன்ற தங்கமணியின் பூரிக் கட்டைக்கு வேலை குடுக்கும் அதி முக்யமான தகவல்களை எல்லாம் கூட சர்வ ஜாக்ரதையாக தவிர்த்து விட்டு குட் நைட் சொல்லி(தங்கமணிக்கு மட்டும் தான் சாமி!) உறங்கி விட்டேன்.
என் தங்கமணி இருக்கும் ஏரியா இருக்கே, அடடா! ஒரு ஆட்டோ பிடிக்கறதுக்கே ஆட்டோல தான் போகனும். போயி இறங்கியதும், நல்ல குளியல் போட்டு டிபனுக்கு உக்காந்தாச்சு. என் புத்தி தெரிஞ்சோ என்னவோ, முதல் ஐட்டமே கேசரி சுட சுட வந்தது. அப்புறம் ஏன் நான் வாய தொறக்க போறேன்? நானுன்டு என் கேசரியுண்டு!னு கர்மமே கண்ணாக இருந்தேன்.

கல்யாணம் ஆகி முதல் முறையாக மாமியார் வீட்டுக்கு போனால் சில விசாரிப்புக்கள் கண்டிப்பாக இருக்கும்.
முதலில், பிளாடில் இருக்கும் ஒரு பாட்டி தான் தொண்டையை செருமி கொண்டு பஞ்சாயத்தை ஆரம்பிப்பார். என்ன? வீட்டுல ஏதும் விஷேசம் வருதா?னு ஒரு பிட்டு போட்டு விட்டு நம்மை உற்று நோக்குவார்.
இல்லாவிட்டால், தங்குவின் வாயை கிண்டுவார்கள். என்னமா? மாப்ள நன்னா கவனிசுக்கறாரா? அப்புறம், என்ன விஷயம்...? முகம் மலர்ச்சியா இருக்கே! குழந்தைகள் சந்தோஷமா இருந்தா சரி! மாப்ள! என்ன வாயவே தொறக்க மாட்டீங்கறீங்க?
- யப்பா! சிபிஐ, சிபிஸிஐடி எல்லாம் பிச்சை வாங்கனும் இவா கிட்ட.
ஒரு வழியாக இவர்களிடமிருந்து எஸ்கேப் ஆகி வந்தால் அடுத்த ஆப்பு தயாராக இருக்கும். மங்கையர் மலர், அவள் விகடன் போன்ற புத்தகங்களில் வந்திருக்கும் சமையல் ஐட்டங்களை மாப்ளை மீது டெஸ்ட் பண்ணியே தீருவது! என கங்கணம் கட்டிக் கொண்டு வந்திருக்கும் தங்குவின் சாதி சனங்கள் அவரவர் ரெஸிப்பிப்புக்கு தகுந்தவாறு நமது டைம் டேபிளை முடிவு செய்து விடுவார்காள்.
காலை சித்தி வீட்டில் புதினா பொங்கல், கத்ரிக்கா கொச்சு
மதியம் பெரியம்மா வீட்டில் அரைக்கீரை வடை கடலை மாவு பாயசத்துடன் சாப்பாடு
மாலை மாமா வீட்டில் முந்திரி கேக், முள்ளங்கி போண்டா
இரவு ஸ்ஸ்ஸ்ப்ப்பா முடியல! ஜி3 அக்ககிட்ட அடுத்த தடவ டியூசன் எடுத்துக்கனும்.

இதுல எல்லாம் எஸ்கேப் ஆகி வந்தா அடுத்தது, நகர்வலம் செய்யும் கோரிக்கை வந்து சேரும். ரங்குக்களின் பர்ஸ்களுக்கு எதிரிகளான உஸ்மான் ரோடு, டி. நகர், பனகல் பார்க், பாண்டி பஜார், லஸ் கார்னர் போன்ற ஏரியாக்களை கவனமாக தவிர்த்து பார்த்தும் ஸ்பென்ஸரை தவிர்க்க முடியலை.
அதுக்கும் காரணம் இருக்கு. ஏற்கனவே பேசியபடி எஸ்கேஎம் அக்காவை அங்க தான் சந்திக்க முடிவானது.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இருக்கும் எல்லை தகராறு, ரூபாய்க்கு எதிராக டாலரின் மதிப்பு சரிவு, நடந்து முடிந்த குடியரசு தேர்தல் போன்ற விஷயங்களை பற்றியெல்லாம் ஒன்னும் நானும் அக்காவும் விவாதிக்கலைனு தான் சொல்ல வந்தேன். அதுக்குள்ள எதுக்கு டென்ஷன் ஆறீங்க? எதுனாலும் பேசி தீத்துக்கலாம்.
இட்டிலிக்கு சரியான மேட்ச் தேங்காய் சட்னியா தக்காளி சட்னியா? மாவாட்டினதுக்கு அப்புறமா எவ்ளோ உப்பு போடனும்? தயிரை புளிக்க வைப்பது எப்படி? போன்ற அதிமுக்யமான விஷயங்களில் அக்காவின் ஆலோசனை கோரப்பட்டது. போகிற போக்கில், எனக்கு எப்படியெல்லாம் ஆப்பு வைக்கலாம்? என்னென்ன ஷாபிங்க் செய்யலாம்? என கொசுறாக அக்கா தங்குவிடம் கொளுத்தி விட்டு வந்த வேலையை செவ்வனே செய்து விட்ட திருப்தியில் நடையை கட்டினார்.
இப்படியாகத் தானே மாமியார் வீட்டின் விஜயத்தை வெற்றிகரமாக முடித்து, மறக்காமல் சாம்பார் பொடி, ரச பொடி, பருப்பு பொடி, புண்ணாக்கு பொடி, மூக்கு பொடி எல்லாம் பொட்டலம் கட்டிக் கொண்டு உங்கள் அம்பி பெங்களுர் வந்து சேர்ந்தான்.

Tuesday, July 31, 2007

அடிச்சுட்டோம் இல்ல செஞ்சுரி!

ஹச்! ஹச்! என்னடா ஒரே தும்மலா இருக்கேனு பாத்தா ஒரே தூசி நம்ம கடையில. ஆமா! ஒரு மாசமா நம்ம கடை பக்கம் வரவே முடியலை. எங்கெங்கு திரும்பினும் ஒரே ஆணிகள் மயம். அதுல கிடந்து உழன்றதுல உடலும் உள்ளமும் செம டேமேஜ் ஆயிடுச்சு.

கிட்டதட்ட சாப்பாடே தங்கமணி எனக்கு ஊட்டி விடற நிலமை ஆயிடுச்சு. கையை தூக்கவே முடியலை. ஒரே பொசிஷன்ல கையை வெச்சு பழகியதுல, விரல்கள் எல்லாம் வீங்கிடுச்சு(யாருப்ப அது? அடி வாங்கினா அப்படி தான் வீங்கும்னு சவுண்டு விடறது?).
சரி, விடுங்க, இப்ப பிசியோதெரப்பி பண்ணிட்டு இருக்கேன், நல்ல யோசனைகள் வரவேற்க்கப்படுகின்றன. காப்பாத்த உம்மாச்சி இருக்கார்.
"சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும்"னு பாடினா தங்கமணி நக்கல சிரிக்கறாங்க. நம்ம ராசி அப்படி!

டென்டுல்கர் மதிரி கரேக்ட்டா நூறு அடிக்க மட்டும் ரொம்ப டைம் எடுத்துக்க வேண்டியதா போச்சு. போன பதிவே(கதையே) நூறாவது பதிவு தான்!னு பிளாக்கர் சொன்னது. சரி, நூத்தியோன்னா ரவுண்டா மொய் மாதிரி இருகட்டும்!னு தான் இந்த மொக்கை.

மீண்டும் பழைய உற்சாகத்துடன்
மீண்டு வருவேன் பீனீக்ஸ் பறவையாய்!



Monday, July 02, 2007

மீண்டும் ஒரு காதல் கதை!

பரணி ஆரம்பிச்சு வைக்க, ப்ரியா அதை அழகா டெவலப் பண்ணியதை கொடி கொத்து பரோட்டா போட அம்சமா அருண் சமாளிச்சு இப்ப பூமாலையா எங்கிட்ட வந்ருக்கு! (சரி, அடுத்து என்ன கமண்ட் விழும்?னு எனக்கே தெரியும்)

********************************************************************************
இதுவரை:

"ஹலோ....ஆமாங்க, அவன் அம்மா தான் பேசுறேன்

......"அப்டியா..

"...."பையன் எங்ககிட்ட சொல்லல..

அவங்க அப்பா வந்ததுக்குஅப்பறம் பேசிட்டு சொல்றோங்க..

".."

நானும் நல்லதே நடக்கணும்னு விரும்பறேன். கடவுள் சித்தம்."

ஃபோன் கட் பண்ணிட்டு.. "டேய், எத்தன நாளாடா இது நடக்குது..

" "அம்மா.. அது.. வந்து..."
***********************************************************************************
இதோ நம்ம மியூஜிக்:

என்ன வந்து? போயி... சிகரட் பிடிக்கறத விட்டுடேன்!னு போன மாசமே சொன்ன, அதனால இப்போ சார் சொக்கலால் பீடிக்கு மாறிட்டீங்களோ? மனசுல என்ன மம்முட்டினு நினைப்பா? கீழே கிடந்த பீடி பாக்கட் நொடியில் அம்மாவை பத்ரகளியாய் மாற்றியது.

யம்மா! என்னமா நீயி! இது டெலிபோன் சர்வீஸ் பண்ண வந்த ஆளு பாக்கட்டுல இருந்து விழுந்தது! நீ கூட வீடு முழுக்க ஒரே பீடி வாடை அடிக்குதுனு கத்தினியே!

அடடா ஆமா, சாரிடா கார்த்தி!

சரி, சரி, போன்ல யாருமா? ஏதோ ஜாதகம் மோதகம்னு சொன்னியே, ஹிஹி, எனக்கேதுக்குமா இப்பவே கல்யாணம்?

நீ படிகற லட்சணத்துக்கு ஒரு கம்பனிகாரன் உன்னை நம்பி பிராஜக்ட் குடுக்கறதே பெரிசு. அதுக்கப்புறம் உனக்கு ஒரு வேலை கிடைக்கனும். அது மட்டுமா? இந்த காலத்து பொண்ணுங்க எல்லாம் ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம், எம்.எஸ்னு மாங்கு மாங்குனு படிச்சு அமெரிக்கவிலிருந்து வாழ்வு குடுக்கறதுக்குனே(பன்னு திங்கறதுக்குனும் வாசிக்கலாம்) க்ரீன் கார்டோட வர அப்பாவி ரங்குஸ் தான் வேணும்!னு தெளிவா இருக்காங்க. இன்னும் உன் பேரை ரேஷன் கார்டுலயே சேர்க்க முடியலை. சாமியே சைக்கிள்ள போகுதாம்! பூசாரி புல்லட் கேட்டானாம்! அம்மா காந்திமதியாய் மாறி விட்டார்.

ஏன்மா இப்டி டோட்டலா டேமேஜ் பண்ற? அப்ப போன்ல யாரு?னு சொல்லேன்.

உன் பெரிப்பா பையன் சூர்யா, அவன் அப்பா இறந்ததுக்கு அப்புறம் நம்ம வீட்ல தானே தங்கி படிச்சான், அவனுக்கு ஒரு வரன் வந்து இருக்கு, அது சம்பந்தமா தான் போன். போதுமா?

போதும் தாயே! போதும். ஆள விடுங்க.
டிவி ரிமோட்டை எடுத்து சன் மியூசிக் மாற்ற 'காதல்' சந்தியா நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்!னு ஜீவாவுடன் டூயட் பாடி கொண்டிருந்தாள். பதறியடித்து சன் டிவி மாற்ற, அங்கு "பஞ்சாப்பில் பாங்ரா திருவிழா!" - சந்தியா ராஜகோபால் செய்தி வாசிக்க, "என்னாங்கடா! சொல்லி வெச்சு கடுப்பேத்றீங்களா?
டிவியை ஆஃப் செய்து குளிக்க கிளம்பினான் கார்த்திக்
.~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ இடம்: சந்தியாவின் வீடு

சந்தியா, "யப்பா! நைசா அம்மகிட்ட பேச்ச ஆரம்பிங்கப்பா!"


இருமா! உங்க அம்மா நல்ல மூட்ல இருக்காளானு பார்ப்போம்.

கோதாவரி, இன்னிக்கு வானம் மூடாப்பா இருக்குல்ல?

அய்யோ! என் பேரு காவேரி, நீங்க என்னிக்கு தான் திருந்த போறீங்களோ? ஒரு படம் பார்த்தா உடனே அதுல வர பெயரை வெச்சு என்னை ஒரு வாரம் கூப்ட வேண்டியது. நேத்திக்கு என்ன சம்சாரம் அது மின்சாரமா?

நான் கூட தான் முந்தானேத்து பதினாறு வயதினிலே பார்த்தேன், உங்கள ஒரு வாரம் பரட்டை!னு கூப்டவா? இல்லாட்டி சப்பாணினு கூப்டவா? - சந்தியாவின் அம்மாவாச்சே!சும்மாவா சொல்லி இருக்கா, தஞ்சாவூர் காராளுக்கு வாய் நீளம்னு!

சே! ஆரம்பமே சொதப்பல் இந்த அப்பாவால! இன்னிக்கு இவர் மேட்டரை ஓப்பன் பண்ணின மாதிரி தான்! இதுக்கு நானே சொல்லி இருக்கலாம்.

அம்மா! ஒரு முக்கியமான விஷயம் உங்கிட்ட பேசனும்.

சொல்லுமா!

நான் பிராஜக்ட் பண்ண டெல்லி போயிருந்த போது என் சம்மதம் கேக்காம நீ நிச்சயம் பண்ணியது எனக்கு சுத்தமா பிடிக்கலை.

தீர்க்கமான முகத்துடன் அம்மா, இதோ பாரு சந்தியா! உனக்கு எது நல்லது?னு எங்களுக்கு தெரியும். உன் தலைல தடவர ஹேர் ஆயிலுல இருந்து காலுல போடற கொலுசு வரைக்கும் இந்த அம்மா தான்மா பாத்து பாத்து செலக்ட் செஞ்சேன். உனக்கேத்தவர் யாருனு? எங்களுக்கு தெரியாதா?

அம்மா! நீ சொல்றது எல்லாம் சரி. ஆனா, என் கருத்தையும் நீ கேட்டு இருக்கலாமே! ஒரு ஹேர் ஆயில் பிடிக்கலைனா இன்னொன்னு வாங்கிட்டு வந்துடலாம். ஆனா இது அப்படியில்லையே! காலம் முழுக்க நான் தானே வாழ போறேன்?

சந்தியா, உன்ன கேக்காம, நீ இல்லாத நேரத்துல நிச்சயம் வரைக்கும் போனது தப்பு தான். சரி, யாரந்த பையன்..?

அம்மா! அது வந்து காலேஜ்ல...

உன் தயக்கம் புரியுது, நாளைக்கு உனக்கு நிச்சயம் பண்ணிய பையன் யூஸ்லேருந்து உன்னை பாக்க வரான்.
பையனை பாரு! பேசு! அப்புறம் ஒரு முடிவுக்கு வா! இப்ப நான் உனக்கு ஹிட்லரா தெரியலாம். ஆனா நீ தான் எனக்கு எப்பவுமே ஜெர்மனி. நீ காலேஜுக்கு கிளம்பு. சாயந்தரம் வீட்டுக்கு வந்துடுவ இல்ல?

நான் உங்க பொண்ணு மா!

அம்மா எப்பவுமே வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு தான்!

மறு நாள் சந்தியாவின் வீடு பரபரப்பாக இயங்கியது. கிச்சனில் கேசரி ஆவின் நெய் புண்ணியத்தில் கமகமத்தது. போதா குறைக்கு முந்திரி பக்கோடா, வெங்காய பக்கோடா என ரெண்டு காரங்கள் வேறு.

பையன் வீட்டு காரங்க வந்தவுடன் ஏலக்காய் டீ கலந்துக்கலாம், சூடு ஆறிடும்! அம்மா ஏறக்குறைய விஜய சாந்தி ஐபிஸ்ஸாக மாறி கட்டளையிட்டு கொண்டிருக்க, அப்பா வழக்கமான ரங்கமணிகள் போல உத்தரவு எஜமான்! போட்டு கொண்டிருந்தார்.

பதவிசாக ஸ்கார்பியோ கார் அப்பார்ட்மெண்ட் கேட்டை வழுக்கி நின்றது.
இந்த அப்பார்ட்மென்டில் தானே சந்தியா குட்டி இருக்கா, எந்த ஃப்ளோர்னு தான் தெரியலை - வாட்ச்மேன் தடியன் ஒரு வில்ஸ் பாக்கேட்டையும் வாங்கிண்டு கவுத்திட்டான் - கார்த்தி யோசனையில் ஆழ்ந்தான்.
லிப்ட்டில் மூணாவது ஃப்ளோர் வந்து நின்றது.

வாங்கோ! வாங்கோ! வாயேல்லாம் பல் செட்டாக அப்பா வரவேற்றார்.
கார்த்தியின் பெரியப்பா பையன் சூர்யா ஜீன்ஸ் படத்து கதாநாயகி பிரசாந்த் போல அனியாயத்துக்கு வெக்கப்பட்டான்.
எல்லோரும் ஒரு வழியாக அவரவர் சீட்டில் செட்டில் ஆனதும், முதல்ல டிபன் சாப்டுடலாமா? இல்லாட்டி பொண்ண வர சொல்லட்டுமா? கேசரி ஆறிடும், அதான்! - அப்பா பஞ்சாயத்தை ஆரம்பித்தார். அவர் கவலை அவருக்கு.

முதல்ல பொண்ணை வர சொல்லுங்கோ! - எதிர் பாட்டு பாடியது பையன் வீடு.

சரி! அரை மனசாக தலையசைத்து விட்டு, அப்பா (இந்த தடவை சொதப்பாமல்) காவேரி!னு சவுண்டு விட,
மயில் கழுத்து கலர் மெட்டல் ஷிபான் சரசரக்க, அதற்கு மேட்சிங்கா சந்தன கலர் பிளவுஸ், சிறிது லூஸாக பின்னிய பின்னலில் ஒரு முழம் மட்டும் முல்லைப்பூ சூடி, குட்டியாக ஒரு ஜிமிக்கி அசைந்தாட, லேசாக ஐ லைனரும், லேக்மே நேச்சுரல் கலர் லிப்ஸ்டிக்கும் போட்டு, கழுத்தில் ஹைத்ராபாத் வெண்முத்தில் கட்டிய நீளமான மாலையில் வந்த சந்தியாவை பார்த்ததும் (ஸ்ஸ்ஸ்ப்பா, இருங்க நான் முதல்ல கொஞ்சம் தண்ணிய குடிச்சுகறேன்) சூர்யா, கார்த்தி இரண்டு இதயங்களும் டமால்னு வெடித்தன.

அட இது என்ன? சந்தியாவின் ஜெராக்ஸ் உருவமாய் இன்னோரு சந்தியா.
இல்லை! இல்லை! அது தான் சந்தியாவா?

கார்த்தியின் கண்கள் சொருகின....
*************************************************************************************
ஹையா! ஹோம்வர்க் முடிச்சாச்சு!


சாரி பரணி, மூணு நாளுல டேக் எழுத முடியலை.

உனக்கேன்னப்பா! பசிச்சா ஹோட்டலுல போயி ஆர்டர் பண்ணி சாப்டுட்டு அப்படியே பக்கத்து சீட்டுக்காரன் பில்லையும் செட்டில் பண்ணிட்டு வந்துடுவ. நாங்க அப்படியா?

இன்னிக்கு அரிசிய ஊற போட்டு மாவாட்டினா தான்(கிரைண்டர்ல தான்) நாளைக்கு இட்டிலி. தெரிஞ்சுக்கோ!

அதனால இப்படி இரண்டு நாளுல எழுது! மூணு நாளுல எழுது!னு எல்லாம் ரூல்ஸ் போடப்படாது!

இந்த கதையை அடுத்து கலக்க போவது யாரு?


வேற யாரு நம்ம மலேசிய புயல் ஃமை பிரண்ட் தான்!

Wednesday, June 27, 2007

எட்டுக்குள்ள (பிளாக்) உலகம் இருக்கு ராமையா!

எட்டி எட்டி பாக்கறியே என் கடைய,ஒரு எட்டு இங்க வந்து எட்டு விளையாடிட்டு போப்பா அம்பி!னு பாசமா வல்லியம்மா கூப்பிட்டு இருக்காங்க. பில்லு பரணி கூப்பிட்டு இருக்காரு! மாமியார் வீடு வேற சென்னைல இருக்கு, பரணி தயவிருந்தா அடிக்கடி சென்னைக்கு போய் வரலாம். என்ன பில்லு, சரி தானே? :)

கல்யாணம் நல்ல படியா நடந்ததா?னு அமெரிக்கவிலிருந்து போன் போட்டு வல்லியம்மா அன்பா விசாரிச்சாங்க. கீதா பாட்டிக்கு பேரன் வயசாகிற இந்த குழந்தை அப்படி என்ன சாதனை பண்ணி இருக்கு இங்க 8 தடவை சொல்றத்துக்கு?(பீத்தறத்துக்கு?னு யாரோ வாசிக்கறாங்களே!)

(கீதா பாட்டி! நோட் தி பாயிண்ட்). :p


ஹிஹி, நாம தீவிர அனுமார் பக்தனாச்சா, அவர மாதிரி தன்னடக்கம் கொஞ்சம் ஜாஸ்தி.(அனுமார் இந்த பதிவை படிச்சா தலைல அடிச்சுப்பார்).

1) எல்கேஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரை முதல் மூன்று ரேங்க் மட்டுமே எடுத்ததுக்கு ஒரு கேசரி சாப்டற பேசின் வாங்கினத இங்க நான் ஒரு சாதனைனு சொல்ல முடியுமா?
முடியாதே! சில பரீட்சைகளில் பக்கத்து சீட்டு ரஞ்சனி பேப்பரை பார்த்து காப்பி-பேஷ்ட் பண்ணி இருக்கோமே! எனவே செல்லாது! செல்லாது!

2) அட! எட்டாம் வகுப்பில் சுற்றுபுற சூழல் சம்பந்தமா கட்டுரை எழுதற போட்டிக்கு நாம வழக்கம் போல எகப்பட்ட டகால்டி பண்ணி ஒரு ஆராய்ச்சி கட்டுரை ரேஞ்சுக்கு ரெடி பண்ணி கன்னியாகுமரி - விவேகானந்தா கேந்திரத்துக்கு அனுப்பி, அவங்க நம்மள ஐந்து நாள் அங்க ஓசியா கூப்ட்டு சோறு போட்டாங்களே! அத சொல்லலாமா?

நாம எழுதினா கையெழுத்து கேசரி கிண்டின மாதிரி இருக்கும்னு அம்மாவை விட்டு இல்ல எழுத சொன்னேன்? அதனால இதுவும் செல்லாது! செல்லாது.

3) தாமிர பரணியில் நீச்சல் கத்துக்கறேன் பேர்வழி!னு மூழ்க இருந்த என் உடன்பிறப்பை கபால்னு நீச்சல் அடிச்சு போயி தலைய பிடிச்சு தூக்கி கரை சேர்ந்தோமே, அது?
ஹிஹி காப்பாத்த போன நானும் கொஞ்ச நேரம் தண்ணி குடிச்சு தத்தளிச்சு, தட்டு தடுமாறி தானே கரை சேர்ந்தோம், இதுவும் செல்லாது.

4) ஸ்கூல் படிக்கும் போது, என்சிசியில் மாவட்டதிலேயே ஒரே ஆளா பஞ்சாப்(ஆமா! ஆமா!) போறதுக்கு செலக்ட் ஆனோமே, அது..?
ஹிஹி, பூரி கிழங்குக்கு ஆசைப்பட்டு என்சிசியில் சேர்ந்த பய தானே நாம! இதுவும் செல்லாது! செல்லாது!

5) ஒரு கல்லூரியில் மாதம் இரண்டு கிலோ லயன் டேட்ஸுக்கு (அதான் பேரீச்சம்பழங்க) வேலை பார்த்த காலத்தில், சுனாமிக்கு கூட ஸ்கூல் பக்கம் ஒதுங்காத சில மக்களுக்கு எழுத்தறிவித்தோமே அது?

ஒரு இந்தியனா, சரி விடுங்க, ஒரு மனிதனா என் கடமையை தானே செஞ்சேன்? அது எப்படி சாதனையாகும்?
ஆமா! என்.டி. ராமாராவே சொல்லி இருக்காரே,
கடமையை செய்!
பலனை எதிர்பார்க்காதே!

6) எவ்வளோ சோதனை வந்தாலும் சைவ உணவு தவிர வேற எதையும் சாப்பிடகூடாது! பெருமாள் கோவில் தீர்த்தம் தவிர வேறு எந்த தீர்த்தமும் குடிக்க கூடாதுனு உறுதியா இருக்கோமே அது..?

7) என்னை மாதிரி பசங்க எழுதற பதிவுகளுக்கு அனானி கமண்ட் விழறதே பெரிசா இருக்கற இந்த காலத்தில் நான் படைத்த இலக்கியங்களை, ஹிஹி பதிவுகளை தமிழை மூன்றாம் மொழியாக ஸ்கூலில் எடுத்த என் தங்கமணி பார்த்து பரவசமாகி, என்னயும் நல்லவன்னு நம்பி கழுத்தை நீட்டி இருக்காங்களே! இது கூட ஒரு சாதனையா? இல்ல இது அவங்களுக்கு வந்த சோதனையா?

8) முகம் தெரிந்த நண்பர்களே முகவரி தொலைந்து போன இந்த நாட்களில், முகம் தெரியா முத்துக்களாகிய என் இனிய பிளாக் உலக மக்களே! உங்களை நண்பர்களாய் அடைய நான் என்ன தவம் செய்தோனோ?

அது மட்டுமா?
அம்பி அண்ணா! அம்பி அண்ணா!னு பாசமாய் அழைத்திடும் பிளாக் உலக தங்கைகள்/தம்பிகள், தம்பி!னு பாசம் காட்டும் டிடி, எஸ்கேஎம் போன்ற அக்காமார்கள், தங்கள் வீட்டில் ஒரு பிள்ளையாய் என்னை வைத்து பார்க்கும் வல்லியம்மாக்கள், தனது பேரனாய் பாசம் காட்டி என் காதை திருகும் கீதா பாட்டிகள்,
அடடா! ஒரே பீலிங்க்ஸ் ஆஃப் பெங்களூரா இருக்கு.
( நல்ல வேளை, என் தங்கமணி மட்டும் அண்ணா!னு அல்வா குடுக்கலை)

ஏற்கனவே நிறைய பேர் எட்டடி பாஞ்சுட்டாங்க. அப்படி பாயாதவங்க, தாராளமா பாயலாம், கமண்ட் போட நான் இருக்கேன்.

ஒன்னு மட்டும் நல்லா தெரியுது, அடுத்த சங்கிலி பதிவு "ஒளிமயமான ஒன்பது" தான். யாரு ஷ்டார்ட் மியூசிக் போட போறாங்களோ? நல்லா இருங்கப்பா!

பி.கு: ஆமா! யாரு அந்த ராமையா?னு யாரும் கேட்கபடாது.
காலம் நம் தோழன் முஸ்தபா!ல முஸ்தபா யாரு?னு நாம கேட்டோமா? இல்லையே! அத மாதிரி தான்!

Wednesday, June 20, 2007

வாஷிங்க் மெஷின்

எப்பொழுதும் கரை புரண்டு ஓடும் தாமிரபரணி பாயும் நெல்லைச்சீமையில் வாஷிங்க் மெஷின் என்ற சாதனம் 5 வருடம் முன் வரை கூட வரவில்லை. எல்லோருக்கும், எல்லாத்துக்கும் பரணி தான்! (யப்பா பில்லு! இதுல எந்த உள்குத்தும் இல்லை).

எங்கூர் மாமாக்கள் காலங்க்காத்தால ஒரு 6 மணிக்கு எழுந்து, துண்டை தலைபாகையா கட்டி, வேட்டிய மடிச்சு கட்டி அப்படியே ஹாயாக வயற்வரப்பில் நடந்து, அக்கம்பக்கம் யாராவது வராங்களா?னு பார்த்து, "சொர்க்கமே என்றாலும் அது நம்மூர போல வருமா?"னு வரவேண்டியதை பாட்டு பாடி வரவழைத்து, நைசா பங்காளி வயலுக்கு உரமிட்டு, அந்த வேட்டியை நம்ம வடிவேலு ஸ்டைலில் லேசா தூக்கிண்டு ஒரு வழியா ஆத்தங்கரைக்கு போய் சேர்ந்து, 501 சூப்பர் பார் சோப் போட்டு பாறாங்கல்லில் அந்த வேட்டியை அடிஅடினு அடித்து(துவைக்கும் போது அவரது தங்கமணி நியாபகம் போலும்) அதிரடி சலவை செய்து வீட்டுக்கு வந்து சேர்வார்கள்.

ஒரு சில மாமாக்கள் பொறுப்பு சிகாமணியாய் தங்கள் தங்கமணியின் புடவை, ரவிக்கை, இன்ன பிற ஐட்டங்களையும் அரசன் சோப் போட்டு வெளுத்து கட்டி எடுத்து வருவார்கள். அப்படி வந்தால் தான் ஒழுங்கா புவா கிடைக்கும் அது வேற விஷயம்.

தீடிரென்று சீமாச்சு மாமா மட்டும், "டெக்னாலஜி எல்லாம் நாமும் யூஸ் பண்ண வேண்டாமா? எத்தனை நாளைக்கு தான் இப்படி உழச்சு உழச்சு(துவைச்சுனு வாசிக்கவும்) ஓடா தேயறது?"னு பேங்க்ல லோன் போட்டு ஒரு வாஷிங்க் மெஷின் வாங்கி வந்து விட்டார்.
எங்க தெருவே ஓடி போய் பார்த்து, வாய் பிளந்து நின்றது.

"என்னடா சீமாச்சு! துணி துவைக்கறத்துக்கு இவ்ளோ பெரிய பொட்டியா? ஆனாலும் இதுக்கு இம்புட்டு ரூவாயா?

கிரிஜா! உங்காத்துகாரரை அனியாயத்துக்கு வேலை வாங்கற, அதான் பாவம்! பொறுக்க முடியாம இந்த வண்ணான் பொட்டிய வாங்கிட்டான் பாரு!னு போற போக்கில், சீமாச்சு மாமாக்கும் ஆப்படித்து விட்டு போனார்கள்.

வெறும் சோப் பவுடரை போட்டு தண்ணிய வாரி விட்டாச்சுனா அரைமணி நேரத்துல அதுவே கும்மு கும்முனு கும்மி, துவைச்சு, பிழிஞ்சு மொட்டை மாடியில காய போட்டு மடிச்சு எல்லாம் வெச்சுடுறது!னு சீமாச்சு மாமா தனது சகாக்களிடம் அள்ளி விட்டதில் சங்கு மாமா, வெங்காச்சம் மாமா, கிச்சா மாமா என மேலும் சில மாமாக்கள் தங்கள் தங்கமணிகளிடம் கண்ணை கசக்கி, வண்ணான் பொட்டி வாங்கி அழகு பார்த்தனர்.

சரி நம்ம கதைக்கு வரேன். கல்யாண கிப்டாக வாஷிங்க் மெஷின், பிளாஸ்மா டிவி எல்லாம் வரும்னு சப்பு கொட்டிண்டு இருந்த எனக்கு ஜலதரங்க கிண்ணங்கள், டீ கப், ஜி3 அக்கா சரக்கடிக்கற (சாரி உளறிட்டேன்!) சூசு குடிக்கற கண்ணாடி கோப்பைகள்னு தந்து ஆப்படித்து விட்டனர்.

சரி, நம்ம ஜீன்ஸை எல்லாம் வருஷத்துக்கு ஒரு முறை தானே துவைக்கிறோம்? வாஷிங்க் மெஷின் எல்லாம் இப்போ தேவைப்படாது!னு நினைத்த எனக்கு " பீரானாலும் சைடு டிஷோடு அடி! ஜீன்ஸானாலும் கசக்கி கட்டு!னு தங்கமணி மண்டையில் குட்டு குட்டுனு குட்ட அகர முதல எழுத்தேல்லாம் அறிய வைத்தாய் தேவி!னு கதறாத குறையாய் எந்த கம்பெனிகாரன் மலிவு விலையில் மெஷினும் தந்து துவைத்து போட கேரளாவிலிருந்து ஓமனகுட்டியும் தருகிறான்?னு ஒரு வாரமாய் என்கொயரி செய்ததில் மூன்று தேறியது (சத்தியமா நான் வாஷிங்க் மெஷினை தான் சொன்னேன்).
ஒரு மாலை இளவெயில் நேரம், தங்கமணியையும் கூட்டிக்கொண்டு நாலு கடை ஏறி இறங்கி சேல்ஸ்மேன் கையில் துண்டு போட்டு பேரம் பேசி, இதுக்கு மேல விலையை குறைக்கனும்னா நான் தான் உங்க வீட்டுக்கு வந்து தினமும் துவைச்சு போடனும்!னு கடைக்காரான் கத்தியதில் கடைசியாக ஒன்னை வீட்டுக்கு தள்ளிண்டு வந்தாச்சு (இப்பவும் நான் வாஷிங்க் மெஷினை தான் சொல்றேனுங்கோ)

அடுத்த நாள் டெமோ காட்ட ஆள் வருவான்! சன் மியூஸிக்குல ஹேமா சின்ஹாவ பாத்து ஊத்திண்டு இருக்காம ஒழுங்கா கவனிச்சு வைங்கோ!னு அம்மணி டோஸ் விட்டவுடன் எனக்கு டக்குனு ஏனோ சீமாச்சு மாமா தான் நினைவுக்கு வந்தார்.

"இதோ பாருமா! எங்க பேமிலில டீவி ரிமோட்டுக்கு பேட்டரி மாத்தறத்துக்கே நாங்க வீட்டு மெயினை ஆஃப் பண்ணிட்டு தான் மாத்துவோம். கரண்ட் சமாச்சாரம்னா அவ்ளோ பயம்!"னு டகால்டி பண்ணி பாத்தும் ஒன்னும் நடக்கலை.
முதலில் நீ கத்துக்கோ! அடுத்த மாசம் நான் தேறிடுவேன்!னு இப்போதைக்கு வண்டி ஓடுகிறது. (இந்த போஸ்ட் பப்ளிஷ் ஆனதும் அதுக்கும் ஆப்பு - இதுக்கு பேர் தான் சொந்த செலவில் சூனியம் வெச்சுக்றது சொல்றாங்களா?)

நமது பிளாகர் யூனியனிலிருந்து திரட்டப்பட்ட நிதியிலிருந்து தான் இந்த வாஷிங்க் மெஷின் வாங்கப்பட்டுள்ளது! அதுக்காக நீங்க பெங்களூர் வரும் போது உங்க டிரஸ் எல்லாம் கழட்டி தந்து என்னை துவைத்து தர சொல்லப்படாது. இப்பவே சொல்லிட்டேன் ஆமா!)
இந்த அரிய பணியில் புயல் போல சுழன்று, இடி போல முழக்கமிட்டு, சூறாவளியாய், வசூல் செய்த நமது ஜி3 அக்காவுக்கு என் உளமார்ந்த நன்றிகள் கோடி.
ஜி3 யக்கா, நீங்க மட்டும் பெங்களூர் வாங்க, உங்களுக்கு நான் ட்ரீட் தரேன் சுக் சாகருல. மெனு - வேற என்ன, சூசு தான்! :)
(உங்க ரேஞ்சுக்கு பில்லு பரணி தாங்குவான், நம்மால முடியாதுக்கா!)

இதை திறம்பட ஒருங்கிணைத்த டாக்டர் டிடி அக்காவுக்கு மிக்க நன்றி ஹை!

பி.கு: விரைவில் எதிர்பாருங்கள் கும்தலக்கடி கும்மாவா! கேரளானா சும்மாவா! - உங்கள் அபிமான பிரவுஸர்களில் - உலகமெங்கும்...

Thursday, June 14, 2007

மொய்

பொதுவாக கல்யாணங்களில் மக்கள் எந்த அளவுக்கு சாப்பாடு பத்தி பேசுவார்களோ( நான் ஜி3 அக்காவ ஒன்னும் சொல்லலை) அதே அளவு முக்கியத்துவத்தை மொய் எழுதுவதிலும் (ஹிஹி வசூலிப்பதிலும் தான்) காட்டுவர்.

குழந்தைக்கு (அட நான் இல்ல பா) காது குத்துவதிலிருந்து, பூப்புனித நீராட்டு, பரிசமிடுவது, முறை மாமன் சீர், கல்யாணம் என தமிழர்களின் வாழ்வில் மொய் என்பது பின்னி பிணைந்து விட்ட ஒரு விஷயமாகி விட்டது.
அன்பை வெளிகாட்ட ஒரு வழியாக இருந்த இந்த மொய், இப்போழுது பலருக்கு கவுரவப் பிரச்சனையாகி அடிதடி வரை கூட சென்று விடுகிறது.

"சோறு சாப்ட கோவிந்தசாமி எழுதும் மொய் பணம் நூறு ரூபாய்ய்ய்ய்ய்"னு எங்க ஊர்களில் குழாய் மை செட்டில் ஒருவர் முழக்கமிட்டால் தான் அவரது சாதி சனங்கள் மத்தியில் அவருக்கு பெருமை.

பெரிய குடம், அரிசி அண்டா, குத்து விளக்கு, காமாட்சி விளக்கு, வெள்ளி விளக்கு, என பொருளாகவும் இந்த மொய் வசூலாகும்.
பின்னர் காலம் மாற, மாற அண்டா-குண்டா எல்லாம் சுவர் கடிகாரம், டின்னர் செட், கண்ணாடி-பீங்கான் செட், மிக்ஸி, கிரைண்டர் என புதிய அவதாரம் எடுத்தது.
இதில் மாப்பிளை பேரில் வரும் மொய் தனி, பெண் பேரில் வருவது தனிதனியாக பிரித்து குடுக்கப்படும். கல்யாணம் எல்லாம் முடிந்து, மணமக்கள் இருவரும் ஒரு வழியாக செட்டில் ஆன பிறகு இந்த கிப்ட் வகையறாக்களை பிரித்து பார்த்து தம் பெயரில் வந்த கிப்ட் பத்தி ஒருவருகொருவர் நக்கல் விட்டு கொள்வது பொதுவாக நடக்கும் விஷயம்.

ரங்கு: ( நக்கலாக) உன் அருமை பெரியம்மா என்ன இப்படி 10 கண்ணாடி கிண்ணமா பிரசண்ட் பண்ணி இருக்கா? நான் என்ன அதுல தண்ணி விட்டு டிங்-டிங்-டிங்க்னு ஜலதரங்கம் கச்சேரியா பண்ண போறேன்?

தங்கமணி: (பதிலுக்கு நக்கலாக) உங்காத்துல மட்டும் என்ன வாழுதாம்? உங்க அருமை அத்தை பெரிய தூக்கு சட்டி குடுத்ருக்கா. உங்களுக்கு அதுல நாளைக்கு லஞ்ச் கட்டி தரட்டுமா?

ரங்கு: (சமாளிப்புடன்) சரி, குழந்தைகள் எண்ணை பட்சணம் போட்டு வெச்சுகட்டுமேனு ஆசையா குடுத்ருக்கா. எவ்ளோ வெயிட்டா இருக்கு பாரு! இத மாதிரி தூக்கு உங்காத்துல பாத்ருக்கவே மாட்டா.

தங்கமணி: நன்னா சமாளிக்காதீங்கோ! ஈஈஈனு இளிச்சுண்டு வந்தாளே உங்க பாம்பே மாமி, வெறும் ஃபொக்கேவோட தானே கை வீசிண்டு வந்தா ரிஷப்ஷனுக்கு. அதுவும் ஊமத்தம் பூ வெச்சு ஒரு ஃபொக்கே, இந்த ஊருலயே உங்காத்து காராளுக்கு தான் கிடைக்கும்.

ரங்கு: (ரோஷத்துடன்), இதோ பாரு, நானும் பேசுவேன் அப்புறம்! சாயந்தரம் ஜானுவாசத்துக்கு கடலேண்ணைல ஒரு பஜ்ஜி போட்ருந்தேளே, யப்பா சாமி! சாப்ட அவனவனுக்கு கார்க் புடுங்கிருச்சு தெரியுமா? உங்க சித்திக்கு கூட நாலு வாட்டி போச்சாம்.

தங்கமணி: சரி, சன் பிளவர் ஆயில் காலியாயிடுச்சுனு ஒரு சேஞ்சுக்கு அதுல போட்டோம். அந்த பஜ்ஜிய கூட விட்டு வைக்காம ஒரே ஆளா 15 பஜ்ஜி சாப்டாரே உங்க கல்கத்தா சித்தப்பா அவருக்கு எத்தனை தடவ போச்சு?னு நான் சொல்லவா? மண்டபமே நாறி போச்சு.
இதுல கொத்தமல்லி சட்னி இல்லையா?னு மனுஷனுக்கு ரொம்ப குறை வேற.

ரங்கு: டிஸன்சியே இல்லை உங்காத்து காராளுக்கு.

தங்கமணி: டிஸன்சி பத்தி ரொம்ப பேச வேண்டாம். லைட் மியூசிக் காரா பாடின "அப்படி போடு! போடு! பாட்டுக்கு வேட்டி அவுந்தது கூட தெரியாம உங்க மாதுங்கா மாமா ஆடின ஆட்டம் தான் அன்னிக்கு டாக் ஃஆப் தி டவுனாம். சன் டிவியில பிளாஷ் நியூஸ்ல போடாத குறை தான்.

ரங்கு: (சமாதான தொனியுடன்) சரி, வீட்டுக்கு வீடு வாசப்படி!

தங்கமணி: ( நக்கலாக) எங்காத்துல எல்லாம் ஃலிப்ட் தான்.

ரங்கு: (பாவமான முகத்துடன்) ரொம்ப டயர்ட்டா இருக்கு. உங்க டெல்லி அத்தை ஆசையா பிரசண்ட் பண்ண சரக்கடிக்கற கண்ணாடி கோப்பைல அட்லீஸ்ட் ஒரு ஜூஸாவது தாயேன். உங்க அத்திம்பேருக்கு அதேல்லாம் உண்டா?

தங்கமணி: இந்த நக்கலுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை.

Monday, June 04, 2007

வந்தேன்! வந்தேன்!

வீட்டை கட்டி பார்! கல்யாணம் பண்ணி பார்!னு சொன்னவங்க வாயில நெய்யோட முந்திரிபருப்பு போட்டு இளம் சூடான கேசரிய தான் போடனும்.

பெங்களுர்-மதுரை-சென்னை-திருநெல்வேலி-கேரளா - மறுபடி தமிழ் நாடு - பெங்களுர்..... ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ப்பா!

16 நாளில் 3500 கி.மீட்டர்கள் 3 மாநிலங்கள். லட்சகணக்கான நமது கட்சி தொண்டர்களின் ஆரவார வரவேற்பு.(ஒரு விளம்பரம்தேங்க்!)

இதோ உங்கள் அம்பி வந்து விட்டான். ஒரு 16 நாள் பிளாக் படிக்காதது, சைடு டிஷ் இல்லாம பகார்டி அடித்த ஷ்யாம் ரேஞ்குக்கு நம்ம நிலமை ஆகி போச்சு.
ஒரு வழியா இன்னிக்கு நானும் தங்கமணியும் ஆபிஸுக்கு கிளம்பியாச்சு. அம்மணி ஆபிஸ் பஸ் தான் முதலில் வரும். காலைல அரக்க பரக்க 5.30 க்கு எழுந்து, தங்கமணிய ரெடி பண்ணி, எந்த எடத்துல பஸ் வரும்?னு விசாரிச்சு, ஸ்டாபுல கொண்டு போய் விட்டு, பஸ் வர வரைக்கும் ரோட்டுல பராக்கு பாத்து(ஜொள்ளூ விட்டு!னு உண்மைய எழுதுங்கோ!னு அம்மணி மிரட்டல் வேற), ஒரு வழியா அம்மணிய ஏத்தி விட்டு டாட்டா-பிர்லா எல்லாம் காட்டி (அவங்க பக்கத்து சீட்டு பிகருக்கும் சேர்த்து காட்றேனோ?னு மேடத்துக்கு சந்தேகம் வேற) வீடு வந்து சேர்ந்தா காலை மணி எட்டு.


சரி, நாமளும் ஒரு வழியா ஆபிஸுக்கு கிளம்பற நேரத்துல டிவில நச்சுனு ஒரு பாட்டு!


"போகின்றேன் என நீ பல நூறு முறைகள் விடை பெற்றும் போகமால் இருப்பாய்!

சரியென்று சரியென்று உனை போக சொல்லி கதவோரம் நானும் நிற்க சிரிப்பாய்!"

உடனே நாமளும் ஒரு ரொமாண்டிக் மூடுல, வீட்டுல சின்னதா ஒரு டான்ஸ் ஆடலாம்னு டிரை பண்ணினா,"டாய் அம்பி! ஒழுங்க மரியாதையா இன்னிக்கு ஆபிஸ் வந்து சேரு! ஆணி இல்ல, கடப்பாரையே சேர்ந்து போச்சு!" வேற என்ன, டேமேஜர் கிட்ட இருந்து போன்.

சே! டீம்ல ஒருத்தன் புள்ள குட்டியோட சந்தோஷமா இருக்கறது இந்த டேமேஜர்களுக்கு பிடிக்கவே பிடிக்காதே!

என்ன கொடுமை இது சிங்கம்லே ACE? (வேற பெயர் இன்னும் மாத்தலையா?)
எழுத நிறைய விஷயங்கள் இருக்கு, என் கல்யாண கலாட்டாக்கள், கேரள டிரிப்னு ஒவ்வோன்னா வரும். (பின்ன எப்படி பதிவு எண்ணிக்கைய கூட்டறதாம்?).

எனக்கு நேரிலும், கைபேசியிலும், இமெயிலிலும், பதிவுகள் வாயிலாகவும் வாழ்த்து தெரிவித்த, ஹிஹி, மொய் எழுதிய, இன்னும் Belated மொய் எழுத துடிக்கும்,(விட மாட்டோம் இல்ல) அனைத்து அன்பர்களுக்கும் கோடானு கோடி நன்றி ஹை!

இதுக்கு மேல டைப் பண்ண முடியல, ஆனந்த கண்ணீர்ல கீ-போர்ட் நனைஞ்சு போச்சு). :)

Wednesday, May 09, 2007

வாளை மீனுக்கும், விலாங்கு மீனுக்கும் கல்யாணம்!

தனது எட்டாம் ஆண்டு திருமண நாளை மே 13 அன்று கொண்டாட இருக்கும் 'வடையேழு வள்ளல்' டுபுக்கு அண்ணன் அவர்களை வாழ்த்த வயதில்லை, வணங்குகிறேன்!

இதோ அதோ!னு தீர்ப்பு சொல்ற நாளும் வந்தாச்சு.

சற்று பின்னோக்கி பார்க்கிறேன்!

ஆஹா! கேரள திருச்சூர் விளக்கு டாப் டக்கர்! :)

சே! சற்று காலத்தால் பின்னோக்கி பார்க்கிறேன்.

விளையாட்டு போக்குல பிளாக் ஆரம்பிச்சு, அடிச்சு பிடிச்சு தமிழில் மட்டுமே எழுதி, உங்க கிட்ட எல்லாம் நல்ல பெயர்(?) வாங்கி, 68 பதிவு போட்டு, டகால்டி பண்ணி, தங்கமணிய பிக்கப் பண்ணி, 95 வது போஸ்டுல கல்யாணத்துல வந்து நிக்குது.

ஆமா! இது என்னோட 95வது பதிவு.

100 அடிச்சுட்டு கிளம்பலாம்!னு தான் பார்த்தேன். முடியலை. சரி விடுங்க, ஞாயிறுக்கும் திங்களுக்கும்(சாரி 'பில்லு' பரணி) தூரம் இல்லை.

தெரிஞ்சவங்க, பழகியவங்க, கூட வேலை பார்த்தவங்கனு எல்லாருக்கும் பத்திரிகை அனுப்பியாச்சு. நம்ம யூனியன் மக்களை டிடி அக்கா வாயிலாக வரவேற்றாச்சு.

சென்னையில வெய்யில் பட்டய கிளப்பும்!னு குகிலிள் தெரிந்து கொண்ட எங்கள் ஆபிஸ் ரசகுல்லா கூட்டம், "பாப் ரே! அம்பி நீ இங்க வந்தபிறகு உன்னை உங்க வீட்டுக்கே வந்து வாழ்த்தறோம்!னு சொல்லிட்டாங்க.

வேணாம் சாமி! நீங்க வந்துட்டு கும்மி அடிச்சுட்டு போனா தங்கமணி, "ஓதலாவா! நாக்கு எந்தா தைரியமு? சம்பிஸ்தானு! நேனு சந்ரமுகி!" னு அதட்டல் விடுவாங்க! ஆரம்பமே அல்லோலப்படும்னு சொல்லிட்டேன்.

இதுவரைக்கும் நல்லா சாப்பிடவும், சைட் அடிக்க மட்டுமே கல்யாணங்களுக்கு போனதால், இப்ப தீடிர்னு என் கல்யாணத்துக்கு நான் போய் என்ன பண்ண போறேனோ?னு கொஞ்சம் உதறலா தான் இருக்கு. கொடி, உனக்கும் அப்படி தான் இருந்ததா? :p

பொதுவா சொந்த பந்தங்களில் கல்யாணம்னு வந்துட்டா, அதுவும் நல்லா சம்மர் லீவுல வந்தா எல்லோருக்கும் கொண்டாட்டம் தான்.

இதையே சாக்கா வெச்சு ரங்கு தலைல மிளகாய் அரைச்சு, பட்டு புடவை வாங்கும் நம்ம டிடி அக்கா மாதிரி தங்கமணிகளாகட்டும்,
"ஆஹா! கல்யாணத்துல ஏதேனும் பிக்கப் ஆகுமா?"னு யோசிக்கும் நம்ம கோப்ஸ் மாதிரி பாசக்கார தம்பிகளாகட்டும்,
"காலை டிபன்லேந்து ஆரம்பிச்சா சரியா இருக்கும்!"னு சப்பு கொட்டும் ஜி3 அக்காகளாகட்டும்,
எனக்கு ரிவர்ஸிபிள் பட்டு புடவை வாங்கி தந்தா தான் கல்யாணத்துக்கு வருவேன்!னு அடம் பிடிக்கும் கீதா பாட்டிகளாகட்டும்,
இனிமேலாவது அம்பிக்கு நல்ல புத்தி வரனும்!னு நல்லதையே நினைக்கும் TRC சார் மாதிரி இனிமையான அங்கிள்களாகட்டும்,
குழந்தைய (நான் தான்) ஒன்னும் சொல்லாதீங்கோ!னு எனக்கு சப்போர்ட் பண்ணும் TRC சாரின் தங்கமணி உமா மேடங்களாகட்டும்,எல்லோருக்கும் மகிழ்ச்சியை தருவது திருமணங்கள்.

தங்கள் முக்கியத்துவத்தை நிலை நிறுத்தி கொள்ள, "நான் யார் தெரியுமா?" மாப்பிள்ளைக்கு ஒன்னு விட்ட ஒர்படி பொண்ணு!
கல்யாண பெண்ணை ஸ்கூலில் கொண்டு போய் விட்ட பெரியம்மா நான் தான்!னு மார் தட்டி கொள்ள திருமணங்கள் அல்வா மாதிரி.

"எங்க ராஜு கல்யாணத்துல, எங்க குக் வெச்சுருந்த பாசந்தி இருக்கே!"னு நீட்டி முழக்க கல்யாணங்கள் நல்ல சான்ஸ். கொஞ்சம் தள்ளி பார்த்தா, ராஜுவுக்கே தோனி மாதிரி உசரமா ஒரு புள்ளையாண்டன் சைட் அடிச்சுண்டு இருப்பான்.

"இந்த நெக்லஸ் புதுசா இருக்கே! லலிதாவா?"
இல்லை, பிரின்ஸ்!னு பீத்தி கொள்ள இது ஒரு சாக்கு.

இது போதாதுனு யார் முக்கியத்துவம் பெற்றவர்கள்? யாருக்கு மரியாதை?னு ரெஸ்லிங்க் கிரவுண்ட் போல பல பரீட்ச்சை நடக்கும் களமாகவும் திருமணங்கள் அமைவதுண்டு.

மாப்பிள்ளை வீட்டார் ஆளுங்கட்சி போலவும், பொண்ணு வீட்டார் மைனாரிட்டி எதிர்கட்சி போலவும் ஒரு வித பய உணர்வுடன், எச்சரிக்கையுடனே ஒருவரை ஒருவர் அணுகுவர்.

"காப்பி சாப்டேளா அண்ணா? டிபன் சாப்டேளா அண்ணா?"னு விசாரிக்க மட்டும் பெண்ணின் ரெண்டு அத்திம்பேர்கள் ஆன் டூட்டியில் இருப்பார்கள்.

எல்லாம் திருப்தி தானே? ஒன்னும் குறை இல்லையே?னு காவிரி மன்ற நடுவர்கள் மாதிரி பழம் தின்னு கொட்டை போட்டு அந்த கொட்டை மரமாகி வளர்ந்த க்ரூப் ஒன்னு வலம் வரும்.
சாம்பார்ல உப்பு கம்மியா இருக்கே!னு ஒரு க்ரூப் வலையை விரிக்கும். எங்களுக்கு சாம்பாரே வரலைடா!னு இன்னோரு க்ரூப் கோதாவுல குதிக்கும்.

இதையெல்லாம் மீறிக்கூட திருமணங்கள் மகிழ்ச்சியை தருவது தான் ஆச்சர்யம் கலந்த உண்மை! (அட! சாலமன் பாப்பையா தீர்ப்பு மாதிரி இருக்கே!)

இப்ப கொஞ்சம் நிலைமை மாறி இருக்குனு தான் சொல்லனும்.

எது மாறுதோ இல்லையோ எனக்கு ரெண்டே ரெண்டு விஷயத்துல டவுட்டாவே இருக்கு.

1) கன்னா பின்னானு டெக்னாலஜி முன்னேறி இருந்தாலும், எலாஸ்டிக் வெச்சு ஏன் வேஷ்டிகள் கண்டுபிடிக்கபடவில்லை?

ஸ்ஸ்ப்பா! அத கட்டிட்டு, "அவுராம இருக்கனுமே முருகா!"னு ஒவ்வொரு நிமிஷமும் திக் திக்குனு தவிக்கறது இருக்கே!

2) கல்யாணத்தன்னிக்கு காலையில் எனக்கு எக்ஸ்ட்ரா கேசரி கிடைக்குமா? கிடைக்காதா? :)

உங்கள் நல்லாசியுடன், பேராதரவுடன் இன்னொரு புதிய துவக்கம். குடுத்த வாக்குறுதிகளை(யாருப்பா அது அல்வா!னு படிக்கறது?) காப்பாத்தனும்.

இதோ, இன்னொரு புதிய துவக்கத்தை நோக்கி உங்கள் அம்பி பயணப்படுகிறான், உங்கள் நல்லாசியுடன்! :)

Friday, May 04, 2007

மொக்கை டேக்

மலேசிய புயல், காமடி க்வீன் (யாருப்பா அது கோவை சரளா!னு வாசிக்கறது?) ஃமை பிரண்ட் ஒரு மொக்கை டேக் எழுத சொல்லி இந்தா அந்தா!னு போக்கு காட்டி ஒரு மாசம் ஆச்சு.

அதாவது, உங்க எல்.கே.ஜி ஸ்கூல் டீச்சரிலிருந்து +2 வரை படித்த பள்ளீயின் டீச்சர் பெயர் எல்லாம் சொல்லனுமாம். நல்லா துபாய்ல ரூம் போட்டு யோசிப்பாங்க போலிருக்கு. (ஆமா! இந்த டேக்கை ஆரம்பிச்சு வெச்சவருக்கு தான் இந்த அர்ச்சனை)

நான் ரெண்டே ஸ்கூலுல தான் படிச்சேன்.
எல்கேஜி முதல் ஐந்தாம் கிளாஸ் வரை ஒரு ஸ்கூல்.
6 முதல் 12 ம் வகுப்பு வரை இன்னொரு ஸ்கூல். அதுலயும் எனக்கு ரொம்ப பிடிச்ச டீச்சர்ஸ் பத்தி தான் எழுதுவேன். இலவச இணைப்பா கூட படிச்ச, சில கேள்ஸ் பெயரும், ஹிஹி. என்ன சரியா?

மேரி மிஸ்: அழகா பேபி பிங்க் கலர்ல மெட்டல் ஷிபான் சாரி கட்டி, போஃனி டெயில் போட்டு, கைல ஒரு குடையோட வருவாங்க கடலோர கவிதைகள் ரேகா மாதிரி. எப்பவும் சிரிச்ச முகமா இருப்பாங்க. நான் கிளாஸ்ல என்ன அட்டகாசம் பண்ணாலும் எங்க அம்மாட்ட போட்டே குடுக்க மாட்டாங்க.

ரஞ்சனி: என் கூட படிச்ச சக வானரம். ரஞ்சனி!னு பெயருக்கு பதிலா லங்கினினு வெச்சு இருக்கலாம். எப்ப பாரு! என்னய தான் டார்ச்சர் பண்ணுவா. அவ பேனா எழுதறதா?னு என் பின்மண்டையில எழுதி செக் பண்ணிப்பா. நான் மிஸ்ஸ்!னு கத்தினா தொடையில நிமிட்டாம்பழம் வேற. அடியே ரஞ்சனி! உனக்கு லட்டுவா ஒரு பொண்ணு பொறந்து என் பையன விட்டு என் கணக்க டேலி பண்ணிகறேன் பாரு!

சாந்தா - ஹிந்தி மிஸ்: நான் இப்ப ரசகுல்லா கூட சக்ஸஸ்புல்லா கடலை போடறேன்னா அந்த பெருமை எல்லாம் இந்த மிஸ்ஸையே சாரும். நல்ல வேளை, மிஸ் பிளாக் எல்லாம் படிக்க மாட்டாங்க.
தப்பா எழுதினா தொடைல நறுக்குனு கிள்ளு விழும். 7ம் கிளாஸ்லேயே கபீரின் கவிதைகளை ரசிக்க முடிந்தது இந்த குருவின் தயவால்.

காயத்ரி: ஸ்கூல் ஆண்டு விழாவுல எப்பவுமே நமக்கு இவங்க தான் ஜோடி. அப்பவே மூக்கும் முழியுமா இருப்பாங்க. ராமர் வேஷம் போட்டா இவங்க சீதை, கிருஷ்ணர் வேஷம் போட்டா, இவங்க தான் ருக்கு!

ருக்கு மட்டும் தானா? சத்யபாமா கிடையாதா?னு மிஸ் கிட்ட ஒரு தடவை கேட்டதுக்கு அடுத்த தடவை உனக்கு அனுமார் வேஷம் தான்!னு தீர்ப்பு சொல்லிட்டாங்க.

கிருஷ்ண மூர்த்தி சார்: ஸ்கூலில் அஸிஸ்டண்ட் ஹெட்மாஸ்டர். அதனால பாதி நாள் கிளாஸுக்கு வர மாட்டார். வந்தார்னா ஒரே நாளில் பாதி புக் முடிச்சுட்டு போயிடுவார். என்ன நடத்தினார்?னு அவருக்கும் தெரியாது, எங்களுக்கும் தெரியாது.
ஆமா, எட்டாம் கிளாஸ் புக்கை வெச்சு ஆறாம் கிளாஸுக்கு கணக்கு நடத்திடார் ஒரு தடவை. சிலபஸ்ல கிடையாது!னு சொல்லி எக்ஸாம்ல மார்க் வாங்கிட்டோம். இப்பவும் எனக்கு மேத்ஸ்னா கொஞ்சம் அலர்ஜி.

வினோதா: இலங்கையிலிருந்து தமிழகத்துக்கு புலம் பெயர்ந்த குடும்பம். சிங்களத்து சின்ன குயிலே!னு பாடினா மின்னல் கீற்றா ஒரு புன்னகை எட்டிப் பார்க்கும். பேஸ்கட் பால் பிளேயர். வினோதாவுக்காக பாதி ஸ்கூல் கிரிக்கட்டை மறந்து பேஸ்கட் பால் ஆடியது.

(ச)ரோஜா டீச்சர்: இந்த தமிழ் மேடம் தினமும் தனது கொண்டையில் ரோஜா வெச்சுண்டு வருவாங்க. அதனால் சரோஜா டீச்சர் ரோஜா டீச்சர் ஆயிட்டாங்க.
எத்தனை ஸ்பெல்லிங்க் மிஸ்டேக் விடற?னு என்கிட்ட கத்துவாங்க. கட்டுரை போட்டி, நாடக போட்டினு எந்த போட்டி வந்தாலும் என்னய கேக்கமலேயே "அந்த கோட்டி பெயர எழுதிக்கோ!"னு என் பெயரை எழுதி அனுப்பிடுவாங்க.

சுப்பையா சார்: ரொம்ப துடிப்பானவர். என்ஸிஸி ஆபிசர் வேற. எனக்கு அரைகுறை ஹிந்தி தெரியும்! என்ற ஒரே காரணத்துக்காக பூரி கிழங்குக்கு ஆசைபட்டு என்ஸிஸில சேர்ந்த என்னை, பஞ்சாப்புக்கு எல்லாம் கேம்ப் கூட்டிண்டு போறேன்!னு சொன்ன நல்லவர். எங்க அப்பா கேம்புக்கு விட மாட்டேன்!னு சொல்லிட்டார்.

அவ்ளோ தான்பா! யாராவது சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்ள விரும்புவர்கள் இந்த மொக்கை டேக்கை தொடரலாம். ;)