Thursday, January 21, 2010

விளம்பரங்கள்

Part-1 ; Part-2 ; Part -3

அதிகாலை ஆறு மணிக்கு(பெங்களூர் வாசிகளுக்கு மட்டும்) ஜெயா டிவியில் மார்கழி மஹா உத்சவம் ஒளிபரப்பினார்கள். கட்டளைதாரர்கள்(அதாம்பா ஸ்பான்சர்) ஆரெம்கேவி. போட்டிக்கு போத்தீஸ்காரகள் ஏழு மணிக்கு(இதுவும் அதிகாலை தான்) விஜய் டிவியில் சங்கீத சங்கமம்னு ஒரு இசை நிகழ்ச்சிக்கு மண்டகபடி நடத்தினார்கள். இந்த பதிவு இசை நிகழ்ச்சிகளை பற்றி அல்ல.

போத்தீஸ் விளம்பரங்கள் நம்மை ஒரு நிமிடம் நின்னு கவனிக்க வைக்கும். ஏதோ சாமுத்ரிகா பட்டுக்கு மீரா ஜாஸ்மின் வந்ததால் மட்டும் நான் சிபாரிசு செய்கிறேன் என நினைத்து விட வேண்டாம்.

இப்போ ஒரு விளம்பரம் காட்டுகிறார்கள்.

ஒரு கல்யாண வீடு, மணப்பெண்ணின் தங்கை(அதாவது மச்சினி) எல்லோர் கவனத்தையும் தன் பக்கம் திருப்பி, ஆளுக்கு எவ்ளோ புடவை? என்ன புடவை?னு புரோட்டா கடை மாஸ்டர் மாதிரி கணக்கெடுக்கிறார். மனப்பெண்ணுக்கு தான் முதல் சாய்ஸ். அந்த பெண் ரொம்பவே வெக்கப்பட்டுக் கொண்டு சாமுத்ரிகா என அகவுகிறது. (குயில் கூவும், மயில் அகவும் - ஒன்னாங்கிளாஸ்ல சொல்லி தந்தாங்க).

வாஸ்தவம் தானே? என அந்த பெண்ணின் சித்தி வழிமொழிகிறார். சித்தியே கல்யாணப் பெண் போல லட்சணமா இருக்கா! மூக்குல சானியா மிர்சா மாதிரி அந்த வளையம் டாப் டக்கர்னு நான் நேரம் காலம் தெரியாமல் உளறி வைக்க... சரி விடுங்க. நான் ஒரு உண்மையான கலாரசிகன் என என்னிக்கு மேலிடம் நம்பி இருக்கு? (யாரந்த கலா? போன்ற பின்னூட்டங்கள் நிராகரிக்கப்படும்.)

அத்தைகள் எல்லோருக்கும் பரம்பரா பட்டு என ஒரு அத்தை தன் பங்குக்கு பிட்டு போடுகிறார். ஸ்க்ரீன்ல ஒரு அத்தைய மட்டும் தான் காட்டினாங்க. இல்ல, லாஜிக் இடிக்குதுன்னு சொல்ல வந்தேன். அவ்ளோ தான்.
இப்பதான் மணப்பெண்ணின் அப்பாவை காட்டுகிறார்கள். அவர் வழக்கம் போல ரொம்பவே சாதுவா அவர் தங்கமணியை பாக்கறார். ஒன்னும் கவலப்பாடாதீங்க! என்பது போல அந்த அம்மா ஒரு காருண்ய புன்னகை சிந்துகிறார்.

இப்ப மறுபடி அதே வளையம் மாட்டிய சித்தி. எல்லா சித்திகளுக்கும் வஸ்த்ரகலா என ரொம்பவே பாந்தமாக சொல்கிறார். பாருங்க இப்பவும் ஒரு சித்தியை தான் காட்டுகிறார்கள்.
இதை கேட்டு ரொம்பவே ஆடிப் போகிறார் நம்ம ரங்கமணி. வெறும் நாலாயிரத்திலிருந்தே இருக்கு, ஒன்னும் கவலப்படாதீங்க!னு மறுபடி ஆறுதல் மொழி வருகிறது. இங்க இருக்கும் நுண்ணரசியலை புரிந்து கொள்ளனும். விலை எல்லாம் நாலாயிரத்தில் ஆரம்பம் தான், அதுவே முடிவு இல்லை.

இந்த நேரத்தில் கடமையே கண்ணான ஒரு அத்திம்பேர் பரம்பராலாம் கையை தூக்குங்கோ!னு பைனல் டச் தர, தலையை எண்ணிப் பாத்தா ஒரு வஸ்த்ரகலா அதிகமா இருக்கு. அது வேற யாருமில்ல மணப் பெண்ணின் பாட்டி. நல்லா விசாரிச்சு பாத்தா அந்த பாட்டியின் பெயர் திருமதி.கீதா சாம்பசிவம் என்று இருக்கும். :)

இதான் எங்க பட்டு பட்டியல்! என லிஸ்ட்டை அந்த பெண் தந்தவுடன் நமது ரங்கமணி வேறு வழியில்லாமல் "போத்தீசுக்கு போகலாமா?"னு அப்பாவியாய் கேட்கிறார். இதோடு விளம்பரம் முடிகிறது. சுமார் இருபது நொடி வருதுன்னு நினைக்கிறேன்.

சரி கொஞ்சம் டெக்னிக்கலா பேசலாம்.

மேலே சொன்ன விளம்பர படம் முழுக்க முழுக்க ஸ்க்ரிப்டை நம்பியே எடுக்கப்பட்டுள்ளது. பிண்னனி இசை இல்லை, ஜிங்கிள்ஸ் இல்லை, எந்த ஒரு கிராபிக்ஸும் இல்லை, பெரிய்ய ஸ்டார் வேல்யூ இல்லை(என எண்ணுகிறேன்). கடையின் பெயர் கூட கடைசியில் தான் வருது. மிக கவனமாக, நேர்த்தியான, ஷார்ப்பான வசனங்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட பொருத்தமான மாடல்கள். ஒரு கல்யாணத்துக்கு ஒரு வாரம் முந்தைய சூழலை அதிக பொருட்செலவில்லாமல் ஏதோ நம்ம வீட்டில் நடக்கற மாதிரி பார்வையாளரை முதலில் தயார் படுத்தி திரையில் காட்டின நேர்த்தி.

ப்ரேம்-பை-ப்ரேமாக கவனமாக எடுத்துள்ளனர். ஏற்கனவே சாமுத்ரிகா, வஸ்ரகலா, பரம்பரா பட்டுக்கள் மக்களிடம் ரீச் ஆகியுள்ளதால் அந்த வகை பட்டுக்களை திரையில் கூட காட்ட தேவையில்லை என்ற இயக்குனரின் தைரியத்தை பாராட்டுகிறேன். ஸ்க்ரிப்ட் எழுதிய காப்பி எடிட்டருக்கும் முழு விளம்பர குழுவினருக்கும், நடித்தவர்களுக்கும்(அதானே!) என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

கோ-ஆப்டெக்ஸுக்கு என்னை ஒரு விளம்பர படம் எடுக்க சொன்னால், இந்த விளம்பரத்தின் முடிவில் இருந்து ஆரம்பித்து, போத்தீசுக்கு போனது போக மிச்சத்துல கோ-ஆப்டெக்ஸுக்கு போய் நமக்கெல்லாம் நாலு முழ துண்டு எடுக்கலாம்!னு அந்த ரங்க்மணியை பேச வைத்து ஷாட்டை ஓகே பண்ணி இருப்பேன்.

Thursday, January 07, 2010

என்னது? இயக்குனர் ஷங்கரும் வலைபதிவரா?

முதல்ல எனக்கும் ஆச்சர்யமா தான் இருந்தது. எந்திரன் படத்தை பத்தி விரிவாக ரசிகர்களுடன் விவரிக்க வலைதள்ம் ஒரு நல்ல மீடியம் என அவரும் ஜோதியில் ஐக்கியமாகி விட்டாராம். ஏற்கனவே அமிதாப், அமீர்கான் எல்லாரும் சொந்த வலைதளம் இருக்கு. இப்பதான் ஷாரூக் டிவிட்டர்ல அக்கவுண்ட் (உபயம் கரண் ஜோ(க்)கர்)தொடங்கி இருக்கார். மத்திய அமைச்சர் சஸி தரூர் டிவிட்டர்ல அடிக்கற கூத்தை பத்தி நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை. டிவிட்டரின் கைபுள்ள இவரு தான்.

இவ்ளோ ஏன், நம்மூர் எஸ்.வி.சேகர், துணை முதலமைச்சர் ஸ்டாலின், 'ஸ்பெக்ட்ரம் புகழ்' ராசா இவங்களுக்கும் வலைதளம் இருக்கு. (ஏடாகூடமா கமண்ட் போட்டா ஆட்டோ அனுப்புவீங்களா சார்?).

ஷங்கரின் வலைதளம் சில துளிகள்:


தளத்தை அவர் மனதுக்கு பிடித்த கருப்பு கலரில் வடிவமைத்து இருக்கிறார்கள். (கருப்பு தான் ஷங்கருக்கு புடிச்ச கலரு).

எந்திரன் படபிடிப்பு தொன்னுறு சதவீதம் முடிந்து விட்டதாம். (தயவு செய்து சன் டிவியில் ட்ரைலராவது ஓட்டுங்க, வேட்டைகாரன் ட்ரைலர்(ரே) தாங்க முடியல)

இப்போதைக்கு ஆங்கிலத்தில் தான் வலை பதிகிறார். (என்னா சார்?)

இன்னும் தமிழ்மணம், தமிழிஷ் பட்டையெல்லாம் நிறுவவில்லை. ( நிறுவி பாருங்க, அப்புறம் தெரியும் சங்கதி)

துரத்தி துரத்தி பாலோயர்கள் எல்லாம் பிடிக்கவில்லை. அட! ஹிட் கவுண்டர் கூட போடலை.

முதல் பதிவுக்கு 439 கமண்ட் விழுந்து உள்ளது. அதில் பத்து தான் அவரது.

எல்லா கமண்டுக்கும் தனிதனியா பதில் போட்டு கமண்ட் எண்ணிக்கையை கூட்ட தெரியவில்லை.

அஜீத்தை வைத்து ஏன் நீங்கள் படம் பண்ண வில்லை? என உரிமையோடு ஒருவர் கேட்டு உள்ளார். (ஏய்! அது.)

நம்ம பதிவர்கள் சிலரும் அங்க போய் தங்கள் கைவரிசையை காட்டி இருக்கிறார்கள். (அதானே! எவ்வளவோ பண்ணிட்டோம், இத பண்ண மாட்டோமா?).

எல்லா கேள்விகளுக்கும் பதிலளிக்கவில்லை. சூசகமான, நேர்த்தியான கேள்விகளுக்கு மட்டும் நம் பெயரை சொல்லியே பதிலளிக்கிறார். (யதேச்சதிகாரத்தின் உச்சதில் இருந்து பூர்ஷ்வாத்தனமாக பதிலளிக்கும் டைரக்டர் ஷங்கருக்கு பத்து கேள்விகள்.... எதிர்வினை ஆத்த ஒரு தலைப்பு ரெடி).


ஐஸ் குட்டிக்கு கேசரி பிடிக்குமா?னு நான் கூட ஒரு கேள்வி தயார் பண்ணிட்டு தங்கமணி அப்ரூவலுக்காக அனுப்பி உள்ளேன். அனுமதி கிடைத்தால் ஷங்கருக்கு அனுப்புவதாக உத்தேசம். எனக்கு நம்பிக்கை உள்ளது.

அடுத்த பதிவர் மீட்டுக்கு காந்தி சிலைக்கு கீழே சாருவை அழைத்தது போலவே ஷங்கரையும் அழைக்கலாம். யாரு கண்டா? ரஜினியும் அவர் கூட வரலாம். :)

இவ்ளோ சொல்லிட்டு அவர் வலை தள் முகவரி சொல்லலைனா எப்படி? இந்தாங்க

அங்க போய் அம்பி தான் உங்க வீட்டு அட்ரஸ் குடுத்தான்னு கமண்டு போடுபவர்களுக்கு எந்திரன் படத்தில் ஐஸ் குட்டிக்கு முறை மாமன் ரோல் கிடைக்குமாம். :)

Monday, January 04, 2010

சந்தோஷம் பொங்குதே!

கல்யாணம் ஆகி கடந்த ரெண்டு வருஷத்தில் இப்படி ஒரு புத்தாண்டை நான் எதிர்கொள்ளவேயில்லை. இந்த முறை புத்தாண்டு ரொம்பவே வித்யாசமாய், விசேஷமாய், குதூகலமாய் அமைந்தது என மெய்மறந்து நான் சொல்ல நினைத்தாலும் கடந்த கால வரலாறு கற்றுக் கொடுத்ததை எண்ணி அடக்கி வாசிக்கிறேன். சரி, பீடிகை போதும்.

தங்கமணி டிசம்பர் கடைசி வாரம் என்னை தனியே விட்டு விட்டு பிறந்த வீட்டுக்கு சென்று விட (இல்லை, டீவி சீரியலில் வருகிற மாதிரி புருஷன் கொடுமையெல்லாம் ஒன்னுமில்லை) எனக்குள் ஷெம்பெய்ன் பாட்டிலை ஒப்பன் பண்ணியது போல, கழுத்துப் பட்டை செயினை அவுத்து விட்டதும் ஒரு வித மகிழ்ச்சியுடன் துள்ளி குதித்து ஓடும் நாய் போல, ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி. அதெல்லாம் வார்த்தைகளில் வர்ணிக்க முடியாது. கண்டவர் வின்டிலர் மாதிரி தான் இதுவும்.

சட்டுனு வெளிகாட்டினா தங்க்ஸ் பிரோக்ராமை கான்சல் செய்துவிடக் கூடிய அபாயங்கள் இருந்ததால் நிர்மலமான முகத்துடன் வளைய வந்தேன்.
நீங்க குக்கர் வெச்சா சாதம் குழஞ்சு கஞ்சி மாதிரியில்ல வரும்?
ஒரு வாரம் சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவீங்க? போன்ற கிடுக்குபிடி கேள்விகளுக்கு எல்லாம் லாவகமாய் தப்பினேன்.

சாப்பாடா முக்யம்? இப்ப என்ன, சாம்பார் வெச்சா ரசம் மாதிரி வரபோகுது. சாதம் கெட்டியா தான் இருக்கனும், இப்படிதான் சாம்பார் இருக்கனும் என்ன கோபன் ஹேகன்ல தீர்மானமா இயற்றி இருக்கு..?

திடுதிடுப்புனு கிச்சனுக்குள் நுழைந்தால் அலிபாபா குகை மாதிரி தான் இருக்கும். எப்படியும் தேடி கண்டுபிடிச்சுக்கலாம். என்ன ஆனாலும் புளி எங்க இருக்கு? பருப்பு எங்க இருக்கு?னு போன் பண்ணி கேட்க கூடாது. இந்த முறை தீர்மானமாய் இருந்தேன்.

"கொடுத்ததெல்லாம் கொடுத்தான்,
அவன் யாருக்காக கொடுத்தான்?"

"யார் தருவார் இந்த அரியாசனம்?"

மனதினில் கன்னாபின்னாவென சிச்சுவேஷன் சாங்க் வந்து விழுகிறது.

எப்படியும் ப்ரீயா தானே இருப்பீங்க, இதையெல்லாம் முடிச்சு வைங்க. ஒன்னரை முழத்துக்கு ஒரு லிஸ்ட் நீளுகிறது.

ப்பூ இவ்ளோ தானா? தொலைஞ்சு போறது. எவ்வள்வோ பண்ணிட்டோம், இத பண்ண மாட்டோமா?

ஒரு வாரம் தங்கு தடையில்லாமல் கிரிகெட் மாட்ச் (ஹைலேட்ஸ் உட்பட) பாக்கலாம். ஜிடாகில் பழைய நண்பர்களுடன் வம்பளக்கலாம்.

"சொல்லில் வருவது பாதி!
நெஞ்சில் தூங்கி கிடப்பது மீதி!!"

இந்த பதிவை படித்துவிட்டு, கமண்டாமல் நீங்கள் நழுவுகிற நேரத்தில் இதோ ஒரு வாரம் முடிய போகிறது.

அந்த நாளும் வந்திடாதோ? (இல்ல சும்மா பக்த மீரா பாடலை பாடினேன் அவ்ளோ தான்).

எல்லோருக்கும் இனிய (தாமதமான) புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

பி.கு: அடுத்த பதிவு வர தாமதமானால் நீங்கள் அதிசயிக்க வேணாம். முடிந்தால் ஒரு பாட்டில் ஹார்லிக்ஸுடன் பதிவின் ஆசிரியரை நேரில் சந்திக்கவும். :)