Friday, July 28, 2006

மெக்காலே கல்வி முறை



எப்படி கட்டம் போட்டு திட்டம் தீட்டி நம்மை அடிமைப்படுத்தி விட்டனர்!
மெக்காலே கல்வி முறை என்று ஒன்றை அறிமுகப்படுத்தி நம்மை மழுங்க அடித்து விட்டர்கள்.
உலகமயமாகல் படி குன்டு சட்டிக்குள் குதிரை ஓட்ட முடியாது தான். ஆனால் சைனா, ஜப்பான் தங்கள் தாய்மொழியில் படிக்க வில்லையா? முன்னேற வில்லையா?

சரி, ஆங்கிலத்தை ஒதுக்க வேண்டாம். ஆனால் நமது தனி தன்மை வாய்ந்த கலாசாரத்தை நாம் ஏன் விட்டு குடுக்க வேண்டும்?

இதே விஷயத்தை பற்றி வெறு ஒரு கோணத்தில் ஒரு நல்லவள்! வல்லவள்!
சகோதரி சுபா ஏற்கனவே அலசி, காய போட்டு விட்டார்கள்.
ஆபிஸ் முழுக்க ஆங்கிலம், கன்னடம், இந்தி, பெங்காலி!னு கேட்பதால்/பேசுவதால் தான் மணக்க மணக்க தமிழில் (நிறைய ஆங்கிலம் கலந்து தான்) எழுதுகிறேன்.
சங்கம் வெச்சு தமிழ் வளர்க்க ஆசை தான்.(நான் வ.வா சங்கத்தையும் தான் சொல்றேன்) ஆனா நம்ம லெவலுக்கு இது தான் முடியும்.

ஆபிச்ல நிறைய வேலை பளு. அதான் இப்படி ஒரு Forwarded mail பதிவு. மன்னிக்கவும்.

Friday, July 21, 2006

கும்பாபிஷேகா! ஆராதனா!


பொதுவா நாம ரொம்ப பிசியா இருக்கோம்னு சொல்லனும்னா "எனக்கு தலைக்கு மேல வேலை இருக்கு"னு சீன் போடுவோம்.

ஆனா, சில பேருக்கு தலையில தான் வேலையே! சரி பாயிண்டுக்கு வரேன்! ஒரு மூணு மாதமா வேலையில ரொம்ப பிசியா இருந்ததுல *ahem* நம்ம பெர்ஸ்னாலிடிய கொஞ்சம் கவனிக்காம விட்டுடோம். அது என்ன ஆச்சு, த்லையில இருக்கற முடி, நெற்றி, மூக்கு வரை விழுந்து ஒரு அன்னியன் லுக் குடுக்க ஆரம்பித்து விட்டது.

"ஓ! ஷக்க மஷிஷா! அன்னியா!",அபராஜிதடு ஒச்சாயினு!"னு டீம்ல சில குல்டிகள் நக்கல் விட ஆரம்பிச்சுடானுங்க. சரி, இனி பொறுக்க முடியாது!னு முடிவு பண்ணி, இந்த ஜிலேபி தேசத்துல என் ஏரியாவுல சலூன் எங்க இருக்குனு பார்த்தா, ஒன்னு கூட இல்லை.

எங்க பார்த்தாலும் இந்த அரிவை, தெரிவை, பேதை, பெதுமை,மங்கை,மடந்தை,பேரிளம் பெண்களுக்கு தான் அழகு நிலையங்கள் இருக்கு.(எதாவது பருவத்தை மிஸ் பண்ணி இருந்தா or order மாத்தி இருந்தா சுட்டி காட்டவும்).

நகம் வெட்ட, அது மேல சாயம் பூச, புருவத்தை கட்டிங்க்-ஒட்டிங்க் பண்ண, அட! இந்த கண் இமைகளுக்கு கூட ஏதோ பண்றாங்க பா! முகத்துக்கு சுண்ணாம்பு அடிக்க, சாரி, சாரி ப்ளிச் பண்ண, உதடுக்கு ரத்த காட்டேரி மாதிரி சாயம் பூச!னு எல்லாத்துக்கும் நிலையங்கள் இருக்கு.

நானும் சுத்தி சுத்தி பாக்கறேன், ஒரு பாய்ஸ் சலூன் கூட இல்லை. என்னடா இந்த ஊருல ஒரு பயலும் முடி வெட்டிக்க மாட்டானோ?னு எனக்கு சந்தேகம் வந்துடுத்து!

அப்புறம் ஒரே ஒரு கடையை பார்த்ததும், "கண்டேன் சலூனை!"னு துள்ளி குதிக்காத குறையா கடைக்கு உள்ள போயி வரிசையில உக்காச்சுண்டேன்.

சரி, இப்ப ஆபிஸ்ல இருந்து (வெட்டியா) இந்த பதிவை படிக்கும் எல்லாரும் ஒரு தடவை உங்க சேர்ல சுத்திக்கவும், வீட்டுல இருக்கறவங்க மார்டீன் கொசுவர்த்தி சுருளை சுத்தி பார்த்து கொள்ளவும், பிளாஷ்பேக் பா!

Before 20 years, கல்லிடைகுறிச்சியில் நான் இருந்த காலங்களில் முடி வெட்ட இந்த சலூன் எல்லாம் போனதே கிடையாது.(பார்த்ததே கிடையாது!)
நடமாடும் சலூனாக பதினட்டு பட்டிக்கும் ஒரு நல்லவர், வல்லவர் வருவார். எனக்கு எல்லாம் கரெக்ட்டா ஒரு மாதம் தான், மூளை வளருதோ இல்லையோ, முடி வளந்துடும்.
வீட்டு அழி(ரிஷப்ஷன்)ல தான் கும்பாபிஷேகா! ஆராதனா!னு(ஜீன்ஸ் படம் நினைவில் உள்ளதா?) தலையில் தண்ணி தெளிச்சு,நல்லா தடவி பட்டாபிஷேகம் நடக்கும்.

சும்மா சொல்ல கூடாது, அந்த வல்லவர்,கத்ரியையே மிஷின் ரேஞ்சுக்கு யூஸ் பண்ற வித்தை தெரிஞ்சவர். அப்ப மிஷனை எப்படி யூஸ் பண்ணுவார்னு பாத்துக்கோங்க!

எனக்கு முடி வெட்டும் போது என் அப்பாவும் புட்பால் கோச் மாதிரி களத்துக்கு அருகில் வந்து உட்கார்ந்து விடுவார்.
"இந்தாங்க Mr.வல்லவர்! நல்லா மிஷின் போட்டு க்ளோஸா வெட்டுங்க!"னு சொன்னதோட இல்லாம, அடிக்கடி "லெப்டுல குறைச்சுடு, ரைட்டுல குறைச்சுடு! அப்படியே ஒரு U turn போட்டு முன்னாடி போயி நல்லா வெட்டு!"னு தந்தை மகனுக்கு ஆற்றும் உதவியை செவ்வனே செய்து விடுவார்.

இது போதாதா? அந்த வல்லவருக்கு! பய புள்ள சும்ம சுத்தி சுத்தி வெட்டுவார், நின்று கொண்டு வெட்டுவார், முட்டி போட்டு வெட்டுவார், சாய்ந்து கொண்டு வெட்டுவார்.

கத்ரி சேவை முடிஞ்சதும் மிஷின் சேவை ஆரம்பிக்கும். இந்த பிளக்குல சொருகி சர்ர்ர்ருனு எடுக்கற மிஷின் இல்லை அது! கையால தான் இயக்குவார். ரொம்ப வலிக்கும். அது முடிஞ்சு பினிஷிங்க் டச் குடுக்கறேன்!னு கத்தி மாதிரி ஒரு வஸ்துவை எடுத்து என் கண் முன்னாலயே அதை சவர கல்லுல சானை பிடிப்பார்.

எங்கே கொஞ்சம் முன்ன பின்ன அசங்கினா சூர்பனகை மாதிரி காதை இழந்துடுவோமோ?னு பயத்துல நான் மூச்சு கூட விட மாட்டேன் ஒரு 2 நிமிஷத்துக்கு.
அந்த கண் கொள்ளா காட்சியை என்னால் பார்க்க முடியாது. ஏனெனில் கண்ணாடி எல்லாம் காட்ட மாட்டார்.
அவருக்கு கை வலிச்சு, கத்தரிகோலுக்கும் வலிச்சு,போதும்னு எங்க அப்பா தீர்ப்பு சொன்ன பிறகு தான் கும்பாபிஷேகம் இனிதே நிறைவடையும். முடி வெட்டின பிறகு வீட்டுகுள் நுழைய முடியாது. கட்டின துண்டோட பட்டினத்தார் மாதிரி நேர தாமிரபரணி தான்!

போற வழியில மக்கள் விடற நக்கல் இருக்கே!
"என்ன இந்த மாதம் ராமருக்கு பட்டாபிஷேகம் நல்ல படியா முடிஞ்சதா?"னு ஒரு மாமாவின் நக்கல்.
"நல்ல அறுவடை போலிருக்கு! மகசூல் மூணு போகமோ?"னு ஒரு மாமியின் நக்கல்.

சே! ஏண்டா முடி வெட்டின்டோம்னு ஆயிடும்.
இந்த குருதி புனல், காக்க காக்க கட் எல்லாம் அப்பவே கண்டு பிடிச்ச புண்ணியவான்.
இவ்வளவுக்கும் சர்வீஸ் சார்ஜ் ஒரு ரூபாய்! ஒரே ரூபாய்! தான் வாங்கி கொள்வார்.

ஸ்கூலுக்கு போனா என் பக்கத்து சீட்டு உமா மகேஷ்வரி(லங்கினி!னு வாசிக்கவும்) அவ பேனா எழுதறதா?னு என் பின் மண்டையில அவ ஆட்டோகிராப் போட்டு செக் பண்ணிப்பா. எனக்கு கோவம் கோவமா வரும். இருந்தாலும் சண்டைக்கு போனா காம்பஸ்ஸால குத்திடுவாளோனு பயமா இருக்கும். அதோட மட்டும் இல்லை, அடிக்கடி அவள் எனக்கு ஆரஞ்சு மிட்டாய் எல்லாம் தருவா. போனா போகுதுனு விட்ருவேன்.(மீசையில மண் ஒட்டலை டா அம்பி!)

சில மாதங்களுக்கு முன் ஊருக்கு போயிருந்தேன். அதே வல்லவரை பார்த்தேன். "நல்லா இருக்கீங்களா?"னு இருவரும் பாசமுடன் விசாரித்து கொண்டோம். அவரின் மகன் நல்லா படித்து இப்போ சென்னையில் நல்ல வேலையில் இருப்பதாக சொன்னார். மிகவும் மகிழ்ச்சியா இருந்தது.

பாரதியின் கனவு நிறைவேறி கொண்டிருப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.

சரி, மறுபடி பெங்க்ளூருக்கு வருவோம்.
அந்த கடைகாரர் கேட்டார்,"சார், எப்படி வெட்டனும்?".
நான், "மிஷின் போட்டு நல்லா க்ளோஸா கட் பண்ணுங்க!"

பின்குறிப்பு: கமெண்ட் என்ற பெயரில் முதலில் நக்கல் விடுபவர்களுக்கு புளியோதரை மற்றும் சுண்டல் வழங்கப்படும்.

Thursday, July 13, 2006

அல்வா நகரத்தில் பிளாக்கர்கள் மாநாடு!



அரணி பரணி பாடி வரும் தாமிரபரணியாம் எங்கள் நெல்லை சீமையிலே ஆகஸ்ட் மாதம் இரண்டாம் வாரத்தில் பிளாக் பதிவாளர்கள் சந்திப்பு நடக்க இருக்கிறது.

"தென்னாட்டு வேங்கை, தெவிட்டாத தெள்ளமுது,சீறும் சிறுத்தை, பிகருக்கு வடை அளித்து கை சிவந்த வள்ளல், 3 வருடமாக பிளாக் உலகின் மன்னன், அம்பையின் அழகன், தொடர்ந்து தேன்கூட்டில் கப்பு(he, hee) வாங்கி வரும் வெற்றி வீரன், நல்லவர், வல்லவர், நாலும் தெரிந்தவர், என் அசின் பிரதர், ச்சீசீ, கசின் பிரதர், "லன்டன் புகழ்" நமது
டுபுக்கு அழைக்கிறார்! கூடவே அவரது பிளாக் உலக கலை வாரிசு(கண்டுக்காதீங்க அண்ணாச்சி!) உங்கள் அம்பியும் சேர்ந்து அழைக்கிறார்.

முதலில் மெரினாவில் தான் கூட்டம் கூட்டலாம் என்று இருந்தோம், ஆனால் அலை கடலென உங்கள் எண்ணிக்கை கண்டு மீன்டும் சுனாமியோ? என்ற அச்சம் வரலாம் என்று எண்ணி கூட்டத்தை நெல்லைக்கு மாற்றினோம்.

"பிளைட் டிக்கட் அதும் பிசினஸ் கிளாஸ் போதும்!"னு காமடி கீமடி எல்லாம் பண்ண படாது! வேணும்னா நம்ம கஜா கிட்ட சொல்லி தலைக்கு 50 ரூபாய் குடுத்து, கள்ள தோணி ஏறி வரவும். உள்ளூர் மக்கள் நடராஜா சர்வீசை பயன் படுத்தி கொள்ளவும்.

நெல்லைக்கு வாருங்கள்! திருநெல்வேலி சம்ரதாய விருந்தோம்பலை உங்களுக்கு அளிக்கிறோம். (ஏல மக்கா! அருவாள நல்லா தீட்டி வைல! ரொம்ப நாளு ஆச்சு!)

பாரதி ராஜா படத்தில் மட்டும் பார்த்திருக்கும் கிராமத்தை காட்டுகிறோம். ஒடினா தான் அதுக்கு பேர் நதி! தேங்கினா அது குட்டை!

ஒடுகிற நதியை காட்டுகிறோம் வாருங்கள். சென்னை வாசிகள் ஒரு செங்கல், கொஞ்சம் வைக்கல் கொண்டு வரவும். கொஞ்ச அழுக்கா ஒட்டி இருக்கு..? நல்லா தேய்ச்சு குளிக்கனும் இல்ல, அதுக்கு தான்!

மதுபாலா, திவ்யபாரதி, மனிஷா, த்ரிஷா, ஜோதிகா என பல பேர் காலடி பட்ட புண்ணிய மண் அது!
(வீர பாண்டிய கட்ட பொம்மன், பூலிதேவன், வீரன் வாஞ்சி ஆகியோரது ஆன்மா இந்த அடியவனை மன்னிக்கட்டும்!)

இந்த அரிய விழாவில், என் அண்ணனின் பிளாக் உலக கலை சேவையை பாராட்டி அவருக்கு இந்திய பணம் ஆயிரம் பொற்கிழி அளிக்க உள்ளேன். அவரும் எனக்கு ஆயிரம் பவுண்டுகள் மட்டும், பொற்கிழி அளிக்க போகிறார் எனபதை தெரிவித்து கொள்கிறேன்.

உங்கள் சுற்றமும் நட்பையும் கூட்டி வர இது ஒன்னும் அம்பியின் திருமணம் அல்ல, பிளாகர் மாநாடு, ஆகவே அடையாள அட்டை கொண்டு வரவும்.

அட! யாரும் வரலை! என்றாலும், எனது அண்ணன் சொன்னது போல் இந்த பிளாகர் மாநாடு,எங்கள் வீட்டு அடுக்களையிலோ அல்லது என் அண்ணன் வீட்டு அடுக்களையிலோ நடந்தே தீரும்! என்பதை 136 வது வட்டதின் சார்பாக எதிர் கட்சிகளுக்கு இங்கு கூறி கொள்ள ஆசை படுகிறேன்.

மா நாட்டுக்கு வரும் எல்லோருக்கும் திருநெல்வேலி அல்வா அம்பி கையால் கிண்டி குடுக்கப்படும். பார்சலும் வாங்கிக்கலாம்.

இந்த நெல்லை மாநாட்டை தொடர்ந்து பெங்களுர்,சென்னை ஆகிய இடங்களிலும் உங்கள் அம்பி மாநாடு நடத்த உள்ளார். சென்னை மாநாட்டின் முழு பொறுப்பையும் என் அருமை சகோதரி "One Post per Day" சுபா கவனித்து கொள்வார் என்பதில் எனக்கு துளியும் ஐயமில்லை.

"அலை கடலென திரண்டு வாரீர்! அமோக ஆதரவு தாரீர்!"

"இந்த படை போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?" என்ற கோஷம் விண்ணை சாடட்டும்.

முக்கிய குறிப்பு: ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு நல்ல சிறுகதையை படிச்சேன். கைல காசு கொஞ்சம் இருந்திருந்தா இந்த கதையை ஒரு குறும்படமா எடுத்து திரைகதைக்கு National award/Oscar அவார்டு வாங்கி இருப்பேன். இது எங்க அண்ணன் எழுதின கதை தான்! நீங்களும் படிச்சு பாருங்க!


நெல்லையில் பிளாகர்கள் மா நாடு!  டுபுக்கு & அம்பி அழைகிறார்!   அலை கடலென திரண்டு வாரீர்!  ஆதரவு தாரீர்!

Saturday, July 08, 2006

Pubs In Banglore



பெங்க்ளுரில் நீங்கள் ரோட்டில் தடுக்கி விழுந்தால் மூன்று இடங்களில் விழ வாய்ப்புள்ளது.

1) அனுமார் கோவில்கள் - தினமும் நான் சாஷ்டாங்கமாக விழும் இடம்.
2) பூங்காக்கள் - 1 அல்லது 2 வாரங்களுக்கு ஒரு முறை சன்டேக்களில் லால் பாகில் அதி காலை தடுக்கி விழுவேன்.
3) பப்புகள்.

நான் நெல்லை மாவட்டத்தில் பள்ளி செல்லும் காலங்களில்(ஒரு 8th படிக்கும் போது), நம்ம தோஸ்து ஒருத்தன் லீவுக்கு பெங்க்ளுர் போய்ட்டு வந்து, எங்களிடம் 70 எம்.எம் சினிமாஸ்கோப்பில் பி.வாசு மாதிரி சூப்பரா கதை விட்டான். அதில் சில துளிகள்:

1) பெங்க்ளுரில் எப்போ பார்த்தாலும் பனி மழை தான். நன்னாரி சர்பத் பாட்டில் கையில இருந்தா, நாம ஜூஸ் போட்டு, போட்டு குடிச்சுண்டே இருக்கலாம்.

(இங்கு இருக்கும் மிதமான கிளைமேட்டுக்கு தான் அந்த p.வாசு இவ்வளவு பில்டப் குடுத்தான்னு எனக்கு அப்போ தெரியாது. ஆஆ!னு வாய் பிளந்தேன்.)

2) சகஜமா நாம, தெருவுல கூட எல்லா இந்தி நடிகைகளையும் பார்க்கலாம். மாதுரி தீட்சித்தை கூட நான் பார்த்தேன்.(அப்போ, ஏக்! தோ! தீன் பாட்டு சக்கை போடு போட்டது!)

(இங்கு உலா வரும் சில சப்பாத்திகளை தான் அந்த நாதாரி பாத்துட்டு, "மாதுரி தீட்சித்"னு எங்களிடம் கதை விட்டான்னு எனக்கு இப்போ தான் உரைக்கிறது.)

3) அங்கே நிறைய பப்புகள் இருக்கு!

மூணாவது பாயிண்ட் தான் எங்களுக்கு புரியலை.

"போடா! நீ ஆக்ஸ்போர்ட் டிக்க்ஷனரியில் ஏதோ ஒரு வார்த்தையை பாத்துட்டு எஙகளிடம் ரீல் விடறியா?"னு எங்கள் செட்டில் ஒருத்தன் சுதாரித்து விட்டான்.

நானும் என் பங்குக்கு, " நான் குழந்தையா இருக்கும் போது(இப்பவும் நான் குழந்தை தான்) என் அம்மா நெய் விட்டு பிசைஞ்சு பிசைஞ்சு எனக்கு ஊட்டி விட்ட பப்பு சாதம் விக்கற ஓட்டலை தானேடா நீ சொல்ற?" இது ஒரு பெரிய விஷயமா?னு புத்திசாலிதனமா அவனை மடக்கி விட்டேன்.

அந்த கூட்டத்துக்கு நான் தான் மொட்டை பாஸ்.
என் கூட்டத்துக்கு நான் சொல்றது தான் தீர்ப்பு! செல்லாது! செல்லாது!னு அவனது மூணாவது பாயிண்டை தள்ளுபடி செய்து விட்டோம்.

அதன் பின் நான் காலேஜ் படிக்க மதுரை வந்தாச்சு. இரண்டாம் ஆண்டு படிக்கும் போது, இங்கேயும் ஒரு நண்பன் லீவுக்கு பெங்க்ளூர் போயிட்டு வந்து, "பெங்க்ளூர் கலக்கலா இருக்குடா மச்சான்! கிளைமேட்டும் சரி, அத விடு, பப்ஸ் எல்லாம் அட்டகாசமா இருக்கு டா மாப்ளே!"னு சொல்ல, நான் "சரி, இவன் ஏதோ ஐயங்கார் பேக்கரி கடையில் கிடைக்கும் பப்ஸை தான் சொல்றான்!"னு நினைத்துக்கொண்டேன்.

வேலைக்கு சென்னை வந்து ஒரு வருடம் ஓடிய பின் தான் கொஞ்சம் விவரம் புரிந்தது. அதுவும், கம்பெனியில் எதாவது பார்ட்டி வந்தா, உடனே, நண்பர்கள் "எலா! சன்முகம்! எடுறா வண்டிய!"னு நாட்டாமை விஜயகுமார் ரேஞ்சுக்கு சவுண்டு விட்டு, பப்ஸை நோக்கி படை எடுப்பார்கள்.(அங்கு சென்று வாந்தி எடுப்பார்கள், அது வேற விஷயம்!)

நீயும் வா! சும்மா வேடிக்கை பாரு!னு கெஞ்சினாலும் நான் சிக்கியதில்லை.

அதன் பின் பெங்க்ளுரில் வேலை கிடைத்தவுடன், ஊருக்கு போய் அம்மா, அப்பாவிடம் சொல்லிவிட்டு ஜாயின் பண்ணலாம்னு போனேன்.

என் பக்கத்து வீட்டுல ஒரு புண்ணியவான் இருக்கார். அவர் நின்ன இடம் தீப்பற்றி எரியும். கொளுத்தி போடுவதில் டாக்டர் பட்டம் பெற்றவர்.

சும்மா நான் லீவுக்கு போனாலே, "ஏய்! என்ன அம்பி வந்துட்ட? வேலை அவ்ளோ தானா?"னு கேட்டவர். யோவ்! லீவுக்கு வந்திருக்கேன்யா! 4 நாளுல திரும்பி போயிடுவேன்!னு நான் மட்டும் விளக்கம் சொல்லலை அவ்ளோ தான்!

"நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி!அம்பியை வேலயை விட்டு தூக்கிட்டா! அதான் திரும்பி வந்துட்டான்!'னு டமுக்கு அடித்து விடுவார் அந்த மனுஷன்.

நான் தாமிர பரணியில் குளிக்க போயிருக்கும் போது(சுமாரா ஒரு 4 மணி நேரம் ஊறுவேன்) என் அம்மா அப்பாவிடம் என்ன சொன்னாரோ தெரியாது.

நான் (ஊறி) வந்தவுடன் என் அம்மா, "இதோ பாரு! பெங்களுரில் கண்ட கண்ட இடத்துக்கேல்லாம் போக கூடாது! நல்லவாளோட சேரணும்! உனக்கு நல்ல புத்தியை குடுக்கனும்னு அந்த பகவானிடம் நாங்க வேண்டிப்போம்! நீயும் வேண்டிக்கோ! என்ன புரிஞ்சதா?"னு என்னை போட்டு தாக்க, "ஆகா! பத்த வெச்சியே பரட்டை!"னு நான் அந்த ஆள் வீட்டை பார்த்து முறைத்தேன்.

என் தம்பி, இது தான் நல்ல சமயம்னு, அம்மா! அண்ணா அத மாதிரி எல்லாம் பண்ண மாட்டான் மா! தண்ணி அடிச்சாலும், வாந்தி எடுக்க மாட்டான் மா!னு ஸேம் சைடு கோல் அடித்தான்.

அடப்பாவி! உனக்கு பேண்ட், டி.ஷர்ட், sweets எல்லாம் நான் வாங்கி தறலையா? ஏன்டா இந்த நேரத்துல பழி வாங்கற?னு நான் கெஞ்சினேன்.

அதன் பின், தென் ஆப்ரிக்காவுக்கு போகும் காந்தி ரேஞ்சுக்கு, "பெருமாள்/அனுமார் கோவில் தீர்த்தம் தவிர எதையும் நான் இதுவரை தொட்டதில்லை! இனி தொட போவதும் இல்லை!"னு டிஸ்கிளைமர் குடுத்த பின் தான் வீடு சகஜ நிலைக்கு திரும்பியது.

போன வாரம், நண்பர் ஒருவருடன் M.G.ரோடில் ரோடில் உள்ள ஒரு ரெஸ்டாரெண்டில் இரவு டிபன் சாப்பிட நேர்ந்தது. பில்லை அவர் கட்டுவார்னு நான் நினைக்க, என்னை விட பார்ட்டி படு உஷாரு. பின் இரண்டு பேரும் ஷேர் பண்ணினோம்.

மாடியில் இருந்த அந்த ஓட்டலுக்கு கீழே ஒரு பப் இருந்ததை நான் கவனிக்க வில்லை. அவர் பார்த்து விட்டு, "என்ன, அம்பி! இதேல்லாம் பாத்ருக்கீங்களா? தண்ணி அடிச்ச்ருக்கீங்களா?னு கேட்டார்.

இது என்ன, மைசூர் ராஜா அரண்மனையா? மற்றபடி, மதுரையில் இரண்டு நாளைக்கு ஒரு தரம் வைகை தண்ணீர் கார்பரேஷனில் விடுவார்கள். குடம் குடமா எங்க பாட்டிக்கு அடிச்சு குடுத்ருக்கேன்னு நான் நக்கல் விட்டதில் பார்ட்டி டென்ஷனாகி விட்டார்.

சம்போ மகாதேவா! நாம கிளம்பலாமே!னு அவஸ்தையாக நெளிந்தேன்.

அவர் விடாமல், எப்படி இருக்கு?னு சும்மா உள்ள போயி பாருங்க!னு கூட்டி போனார்.

நைட் லேம்ப் தான் எல்லா டேபிள்களிலும் போட்டிருந்தனர். ஒரே புகை மண்டலம். எல்லார் கையிலும் புகைந்து கொண்டு இருந்தது.

சிவ சிவா! ராம ராமா! சில பாரதி கண்ட புதுமை(?) பெண்களும் ஊதிக் கொண்டு இருந்தனர். சில பேர் கையில் சோம பானம் வேறு!

பாவம்! அவாளுக்கு வீட்டில் என்ன கஷ்டமோ, மாமியார் கொடுமையோ யாரு கண்டா!

"மூச்சு முட்றது! போகலாம்!"னு நான் வெளியே வந்து விட்டேன்.

ரூமுக்கு வந்ததும், ஜில்லுனு(night 10 pm) ஒரு குளியல் போட்டு அனுமார் ஸ்லோகங்கள் சொன்ன பிறகு தான் நிம்மதி பிறந்தது!
நான் UG - B.sc(chem)படித்ததால், சிகரெட், மற்றும் தண்ணியால் என்னவேல்லாம் வரும்னு நல்லா தெரியும்.

பின் குறிப்பு: அடுத்த போஸ்ட் "கும்பாபிஷேகா! ஆராதனா!"
எட்டாவது அதிசயமான ஐஸ் குட்டி நடித்த ஜீன்ஸ் படம் பார்த்து விட்டு இந்த போஸ்ட்டை படிக்கவும்.

Wednesday, July 05, 2006

அலோ! செக்! மைக் டெஸ்டிங்க் 1..2..3

மிகுந்த வேலை பளு காரணமாகவும், வேறு சில சொல்ல விரும்பாத காரணங்களால் ஏற்பட்ட மனசோர்வினாலும் நான் பிளாக்கை இழுத்து மூட நினைத்தது என்னவோ உண்மை தான்.
அர்ஜுனாவுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஒரு போஸ்ட் போட்டு, கடையை இழுத்து மூடிவிடலாம்னு நினைத்தேன். ஆனல் நடந்தது எல்லாமே உல்டா.

ஆனால் அர்ஜுனாவின் உரையாடல் அந்த முடிவை மாற்றி விட்டது.

சும்மா சொல்ல கூடாது! அட டா! இ-மெயிலில் அன்பு கட்டளைகள், மிரட்டல்கள் மற்றும் உங்களின் நக்கல் கமெண்ட்ஸ், என பய புள்ளைங்க பாச மழை பொழிஞ்சுட்டீங்க.

"விட்டெறிந்த கீரையை வழிச்சு போடுடி என் சுரனை கெட்ட வல்லாட்டி!"னு எல்லாம் நக்கல் விடறாங்க.
இந்த பழமொழிக்கு விளக்கத்தை இங்கு பார்க்கவும்.

பிளாக் உலகின் பெரிய தலை (சும்மா அஸால்ட்டா 50 கமெண்ட்ஸ் விழும்) எல்லாம் போன் போட்டு விசாரிப்பு. (இதை படித்து விட்டு தலை இப்போ மெலிதாக புன்முறுவல் செய்யும்).
அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து 12 நிமிடம் 30 செகண்ட் ஆலோசனை நடந்தது.

எல்லாம் அந்த ஷ்ரிதேவி, பூதேவி சமேத நாரயண மூர்த்தியின் தனிப்பெருங் கருணை!

யாரு அந்த தலை..? கண்டுபிடிச்சாசா? அதான்! அதே தான்!

மனித உரிமை கமிஷனில் ரிப்போர்ட் பண்ணுவேன்! என்று எல்லாம் அன்பு மிரட்டல்கள் வந்தன.

கைபுள்ள சொல்ற மாதிரி இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தி தான் உடம்பு ரணகளமா இருக்கு!

இதற்கு நடுவில், அம்பிக்கு ஒரு தங்கமணி(அக்னி நட்சத்திரம்) வர போறாங்க! அதான் காரணம்!னு ஒரு நல்லவன் கிளப்பி விட்டதில் "அப்படியா? எந்த ஊரு? என்ன பேரு?"னு விசாரிப்புகள்.

இதுவரை அப்படியேல்லாம் ஒன்னும் இல்லை. 18 பட்டிக்கும் வீட்டிலிருந்து சேதி பறந்திருக்கிறது. அட! ஒரு சக பிளாக்கர் கூட எனக்காக பொண்ணு தேடறாங்க பா!

அப்படியே வர வேண்டியவங்க வந்தாலும், அவங்களையும் சேர்த்து பிளாக் எழுத வச்சுட மாட்டோம்? he hee,I'll dictate, she will type.(ஆணாதிக்கம் ஒழிக!னு இப்பவே
சுபா கத்தறாங்க பாரு! ஒரு பன்னீர் சோடா ஒடச்சு ரெடியா வைங்க பா!

"என்னை மீறி யாரு வரானு அதையும் தான் பார்த்துடுவோம்!"னு அசின் ஒரு பக்கம், கோபிகா மறுபக்கம் மிரட்டல் விடுத்து உள்ளனர். நயன்,மற்றும் ஐஸ் குட்டிக்கு இன்னும் விஷயம் தெரியாது. (kutti, arjuna, syam, karthi, pls note the point your honour!)
சே! அசினுக்கு லிஸ்ட் கூடிட்டே போகுதுடா சாமி! இத சமாளிக்கறதே பெரும் பாடா இருக்கு!

பூரி கட்டை, தோசை திருப்பி போன்ற திவ்ய ஆயுதங்களால் நான் என்கவுண்டர் செய்யபடுவது உறுதியாகி விட்டது.(யாரு தான் இத எல்லாம் கண்டுபிடிச்சானோ?)

சரி, மீண்டும் ஜே.கே.பி! மாதிரி புத்தூணர்வுடன் இதோ எழுந்து விட்டேன்.

நாகை சிவாவின் கண்ணி வெடிகளை பற்றிய போஸ்ட் படித்ததும், நமக்கும் ஒரு சின்ன ஆசை. சீரியஸான மேட்டரை தொட்டு ரொம்ப நாள் ஆச்சே!
Men In Black - "The Elite NSG Commondos" பற்றி ஒரு 2 or 3 போஸ்ட் போடலாம்னு இருக்கேன். இப்போ தான் ஸ்கெட்ச் போட்ருக்கேன். பார்ப்போம்.

சரி, நம்ம பிளாக், எந்த அளவுக்கு மக்களிடம் அங்கீகாரம் பெற்றுள்ளதுனு தெரிந்து கொள்ள ஒரு சின்ன நப்பாசை. அதன் விளைவு தான் முந்தய பதிவு.

பிளாக் பிரமோஷன் டெக்னிகில் இது அடுத்த கட்டம். மார்கெட்டிங்க்ல இதை Brand Recoginisation என்று சொல்வார்கள். பரவாயில்லை, ரிஸல்ட் நல்லா தான் இருக்கு,

பின்குறிப்பு: அடுத்த போஸ்ட்
Pubs In banglore