Tuesday, December 19, 2006

ஹேப்பி பர்த்டே டியர் ஆஞ்சேனேயா!




டிசம்பர் 20 - மார்கழி மாதம் - மூல நக்ஷத்திரம் வாயு குமாரன், அஞ்சனா மைந்தன், ஷ்ரிராம தூதன், அடக்கமே வடிவானவன், சொல்லின் செல்வன், கூப்பிட்ட குரலுக்கு மனோ வேகத்தில் ஓடி வருபவன், என் நெஞ்சில் என்றும் குடி கொண்டு இருக்கும் ஆஞ்சேனேய ஸ்வாமி அவதரித்த திரு நாள்.

இவரை பற்றி எழுத இந்த ஒரு பதிவு போதாது! தன்னடக்கம் என்றால் அது ஆஞ்சேனேயர் தான்!

அயோத்தி மா நகரம் திருவிழா கோலம் பூண்டு இருந்தது. ஆம்! 14 வருடங்கள் கழித்து அவர்கள் உள்ளம் கவர் ரகு வம்சத்தில் உதித்த ஷ்ரிராமன் மரவுரி களைந்து ராஜாராமனாக வெண் பட்டுடை அணிந்து, நெற்றியில் சூரிய திலகம் இட்டு, மார்பில் முத்து மாலைகள் அசைய, பரந்து விரிந்த தோளில் சிவப்பு நிற அங்கவஸ்தரம் புரள, ஒரு கையில் கோதண்ட வில்லும், மறு கையில் ஒர் அம்புமாக சீதா தேவி இடப்புறம் அமர சிம்மாசனத்தில் அமர்ந்து வசிஷ்டர் தலமையில் வேத மந்த்ரங்கள் முழங்க பஞ்ச வாத்தியங்கள் முழங்க, ரகுகுலத்தின் நவரத்ன கீரீடத்தை தன் திருமுடியில் சூட்டிக் கொள்ளும் திருநாள்.


ஒரு புறம் உருவிய வாளுடன் லக்ஷ்மணனும் சத்ருகனனும் மெய்காப்பாளர்களாக நிற்க, மறு புறம் கூப்பிய கைகளுடன் பரதன், விபீஷணன், சுக்ரீவன், அங்கதன், ஜாம்பவான் ஆகியோர் நிற்க, எல்லார் கண்ணும் தேடுகிறதே யாரை..? எங்கே ஷ்ரிராமனின் தாசன் அனுமான்..?

இதோ,ஷ்ரிராமனின் திருவடிகளில் கண்ணீர் மள்க கூப்பிய கரங்களுடன், மண்டியிட்டு "இந்த காண கிடைக்காத காட்சியை காண தானே பிரபு, இந்த அடியவன் காத்திருந்தேன்! என்று என் தலைவன் பவ்யமாக அமர்ந்து இருக்கிறான்.

சூரிய பகவானிடம் 4 வேதங்களையும் கற்க அவருடன் சரிசமமாக பயணம் செய்து குருகுலம் பயின்ற அந்த தீக்கொழுந்தா இவன்..?

விஸ்வரூபம் எடுத்து கடலை சர்வ சாதாரணமாக தாண்டிய அந்த உருவமா இது..?

ராவணன் முன்னால் கம்பீரமாக வாலினால் சிம்மாசனம் போட்டு அமர்ந்த அந்த அனுமனா?

இலங்கைக்கு தீ வைத்து விட்டு சற்றும் தளர்வடையாமல் பறந்து வந்து, "கண்டேன் கற்பின் கொழுந்தை!" என சொன்ன அந்த சொல்லின் செல்வனா இவன்..?

பட்டாபிஷேகம் முடிந்ததும், அவரவர்க்கு பரிசுகளை வாரி வழங்கிய ஷ்ரிராமனை பார்த்து சீதா தேவி, ஸ்வாமி! அனுமனை மறந்து விட்டீர்களே?என்று கேட்க, ராமனும் இல்லை ப்ரியே! அவனுக்கு குடுக்க என்னிடம் ஒன்றுமே இல்லையே! என்று தான் யோஜனை, இருந்தாலும் நமது கல்யாணத்தில் அணிந்த முத்து மாலையை அளிப்போம்! என்று அனுமனுக்கு அளிக்கிறார்.

அதோடு, சிரஞ்சீவி(எலேய் ஷ்யாம்! தெலுங்கு நடிகர் இல்லை) பட்டத்தையும் அளித்து, எங்கேல்லாம் ராம நாமம் சொல்லபடுகிறதோ அங்கெல்லாம் அனுமன் இருந்து அதை காது குளிர கேட்க்கும் வரத்தையும் அளிக்கிறார்.

இந்த பதிவையும் எனது தலைவன் அனுமன் கண்டிப்பாக படித்து பூரிப்பான்! ஹிஹி, கமெண்ட்டும் போடுவான். :)
அதனால் தான் ராமர் பட்டாபிஷேகத்தை பற்றி விரிவாக எழுதி உள்ளேன். ஹேப்பி பர்த்டே தல!

1) முதன் முதலாக Open heart surgery பண்ணி தனது நெஞ்சில் ராமரை காட்டியது எனது தங்க தலைவன் தான்!

2) முதன் முதலாக கூரியர் சர்வீஸை அறிமுகபடுத்தி ராமரின் கணையாழி, சீதையின் சூடாமணியை பத்ரமாக அவரவரிடம் சேர்த்தவன் என் தல தான்!



3) முதன் முதலாக பறக்கும் ஆம்புலன்ஸை(சஞ்சீவி மலை) அறிமுகப்படுத்தியது நீங்க தானே தல!

4) முதன் முதலாக பாஸ்போர்ட், விசா இல்லாமல் இமிக்ரேஷனில் மாட்டிக்காமல் பயணம் செய்தது என்னுடைய தல தான்!

5) அவர் பிரம்மசரிய விரததில் இருந்தாலும், தனது வாலில் பொட்டு வைக்கும் பெண்களுக்கு(பிகர்களுக்கு!னு வாசிக்கப்படாது ஷ்யாம்!) திருமணம் நடத்தி வைக்கிற அவரது பெருந்தண்மை தான் என்னே!

இந்த நாள் வரை அனுமனை வழிபடாமல் எந்த காரியமும் செய்த்ததில்லை, அவரும் என்னை கைவிட்டதில்லை. இதோ இந்த வருடம், அவரது அருள் எனக்கு பரிபூரணமாக கிடைத்து உள்ளது! சென்னையில் மழை பெஞ்சு இருக்கா?னு பார்க்க போன நான் சனிகிழமை நங்க நல்லூர் ஆஞ்சேனேயர் கோவிலுக்கும் சென்று பிரார்த்தனை நிறைவேற்றி வந்தேன்!

45 நாட்கள் சுந்தர காண்டம் படித்தால் நமது நியாயமான விருப்பங்கள் கண்டிப்பாக நிறைவேறும்! என்று என் அம்மா சொல்லி இருக்கிறார்கள். இந்த சுந்தர காண்டத்தின் சிறப்பை பற்றி தனியாக ஒரு பதிவு போடலாம்! என்று ஆசை. அனுமார் கருணையினால் நடக்கும் என்று நம்புகிறேன்.

எத்தகைய உயர்ந்த பதவியில் இருந்தாலும், லட்சம் கோடி சம்பாதித்தாலும், தன்னடக்கத்தையும் பவ்யத்தையும் அந்த அனுமன் நமக்கும் தரட்டும்! என்று வேண்டிக் கொள்கிறேன். ஜெய் ஷ்ரிராம்! ஜெய் ஆஞ்சேனேயா!


பி.கு:    விரைவில் வெளிவருகிறது "ஆதலால் பிளாக் எழுதுவீர்" உலகமெங்கும்!

Wednesday, December 13, 2006

நன்றி ஹை!



இந்த குழந்தையின் பிறந்த நாளை கரக்ட்டா நினைவில வெச்சுண்டு வாழ்த்தின அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் நன்றி ஹை!

வெறும்ன நன்றி சொன்னா நன்னாவா இருக்கும்? அதுனால எல்லாருக்கும் கேக்.


வழக்கமா அல்வா தான் குடுக்கனும்!னு கூகிளில் தேடினேன். இன்னும் கிண்டலையாம். அதுனால இத வெச்சு அட்ஜ்ஸ்ட் பண்ணிக்கோங்க.

எனக்கு நைட் 12 மணிக்கு கமேண்ட் போட்ட G3 அக்காவுக்கு ஸ்பெஷலா ஒரு கேக்.



கைப்புள்ள அங்கிள்! உங்களை மறப்பேனா? அதுனால உங்களுக்கு ஒன்னு!


இன்னும் ஆபிஸ்ல, வேலை எல்லாம் செய்ய சொல்றா! பிளாக் எழுதலைனா நமக்கு கையும் காலும் எதோ Beer கண்ட பெங்களுர் குடிமகன் போல என்னவோ பண்றது. சீக்ரமே திரும்பி வரேன்.

உங்கள் அபிமான பிரவுஸர்களில் விரைவில் எதிர்பாருங்கள்! "ஆதலால் பிளாக் எழுதுவீர்!"