Wednesday, May 09, 2007

வாளை மீனுக்கும், விலாங்கு மீனுக்கும் கல்யாணம்!

தனது எட்டாம் ஆண்டு திருமண நாளை மே 13 அன்று கொண்டாட இருக்கும் 'வடையேழு வள்ளல்' டுபுக்கு அண்ணன் அவர்களை வாழ்த்த வயதில்லை, வணங்குகிறேன்!

இதோ அதோ!னு தீர்ப்பு சொல்ற நாளும் வந்தாச்சு.

சற்று பின்னோக்கி பார்க்கிறேன்!

ஆஹா! கேரள திருச்சூர் விளக்கு டாப் டக்கர்! :)

சே! சற்று காலத்தால் பின்னோக்கி பார்க்கிறேன்.

விளையாட்டு போக்குல பிளாக் ஆரம்பிச்சு, அடிச்சு பிடிச்சு தமிழில் மட்டுமே எழுதி, உங்க கிட்ட எல்லாம் நல்ல பெயர்(?) வாங்கி, 68 பதிவு போட்டு, டகால்டி பண்ணி, தங்கமணிய பிக்கப் பண்ணி, 95 வது போஸ்டுல கல்யாணத்துல வந்து நிக்குது.

ஆமா! இது என்னோட 95வது பதிவு.

100 அடிச்சுட்டு கிளம்பலாம்!னு தான் பார்த்தேன். முடியலை. சரி விடுங்க, ஞாயிறுக்கும் திங்களுக்கும்(சாரி 'பில்லு' பரணி) தூரம் இல்லை.

தெரிஞ்சவங்க, பழகியவங்க, கூட வேலை பார்த்தவங்கனு எல்லாருக்கும் பத்திரிகை அனுப்பியாச்சு. நம்ம யூனியன் மக்களை டிடி அக்கா வாயிலாக வரவேற்றாச்சு.

சென்னையில வெய்யில் பட்டய கிளப்பும்!னு குகிலிள் தெரிந்து கொண்ட எங்கள் ஆபிஸ் ரசகுல்லா கூட்டம், "பாப் ரே! அம்பி நீ இங்க வந்தபிறகு உன்னை உங்க வீட்டுக்கே வந்து வாழ்த்தறோம்!னு சொல்லிட்டாங்க.

வேணாம் சாமி! நீங்க வந்துட்டு கும்மி அடிச்சுட்டு போனா தங்கமணி, "ஓதலாவா! நாக்கு எந்தா தைரியமு? சம்பிஸ்தானு! நேனு சந்ரமுகி!" னு அதட்டல் விடுவாங்க! ஆரம்பமே அல்லோலப்படும்னு சொல்லிட்டேன்.

இதுவரைக்கும் நல்லா சாப்பிடவும், சைட் அடிக்க மட்டுமே கல்யாணங்களுக்கு போனதால், இப்ப தீடிர்னு என் கல்யாணத்துக்கு நான் போய் என்ன பண்ண போறேனோ?னு கொஞ்சம் உதறலா தான் இருக்கு. கொடி, உனக்கும் அப்படி தான் இருந்ததா? :p

பொதுவா சொந்த பந்தங்களில் கல்யாணம்னு வந்துட்டா, அதுவும் நல்லா சம்மர் லீவுல வந்தா எல்லோருக்கும் கொண்டாட்டம் தான்.

இதையே சாக்கா வெச்சு ரங்கு தலைல மிளகாய் அரைச்சு, பட்டு புடவை வாங்கும் நம்ம டிடி அக்கா மாதிரி தங்கமணிகளாகட்டும்,
"ஆஹா! கல்யாணத்துல ஏதேனும் பிக்கப் ஆகுமா?"னு யோசிக்கும் நம்ம கோப்ஸ் மாதிரி பாசக்கார தம்பிகளாகட்டும்,
"காலை டிபன்லேந்து ஆரம்பிச்சா சரியா இருக்கும்!"னு சப்பு கொட்டும் ஜி3 அக்காகளாகட்டும்,
எனக்கு ரிவர்ஸிபிள் பட்டு புடவை வாங்கி தந்தா தான் கல்யாணத்துக்கு வருவேன்!னு அடம் பிடிக்கும் கீதா பாட்டிகளாகட்டும்,
இனிமேலாவது அம்பிக்கு நல்ல புத்தி வரனும்!னு நல்லதையே நினைக்கும் TRC சார் மாதிரி இனிமையான அங்கிள்களாகட்டும்,
குழந்தைய (நான் தான்) ஒன்னும் சொல்லாதீங்கோ!னு எனக்கு சப்போர்ட் பண்ணும் TRC சாரின் தங்கமணி உமா மேடங்களாகட்டும்,எல்லோருக்கும் மகிழ்ச்சியை தருவது திருமணங்கள்.

தங்கள் முக்கியத்துவத்தை நிலை நிறுத்தி கொள்ள, "நான் யார் தெரியுமா?" மாப்பிள்ளைக்கு ஒன்னு விட்ட ஒர்படி பொண்ணு!
கல்யாண பெண்ணை ஸ்கூலில் கொண்டு போய் விட்ட பெரியம்மா நான் தான்!னு மார் தட்டி கொள்ள திருமணங்கள் அல்வா மாதிரி.

"எங்க ராஜு கல்யாணத்துல, எங்க குக் வெச்சுருந்த பாசந்தி இருக்கே!"னு நீட்டி முழக்க கல்யாணங்கள் நல்ல சான்ஸ். கொஞ்சம் தள்ளி பார்த்தா, ராஜுவுக்கே தோனி மாதிரி உசரமா ஒரு புள்ளையாண்டன் சைட் அடிச்சுண்டு இருப்பான்.

"இந்த நெக்லஸ் புதுசா இருக்கே! லலிதாவா?"
இல்லை, பிரின்ஸ்!னு பீத்தி கொள்ள இது ஒரு சாக்கு.

இது போதாதுனு யார் முக்கியத்துவம் பெற்றவர்கள்? யாருக்கு மரியாதை?னு ரெஸ்லிங்க் கிரவுண்ட் போல பல பரீட்ச்சை நடக்கும் களமாகவும் திருமணங்கள் அமைவதுண்டு.

மாப்பிள்ளை வீட்டார் ஆளுங்கட்சி போலவும், பொண்ணு வீட்டார் மைனாரிட்டி எதிர்கட்சி போலவும் ஒரு வித பய உணர்வுடன், எச்சரிக்கையுடனே ஒருவரை ஒருவர் அணுகுவர்.

"காப்பி சாப்டேளா அண்ணா? டிபன் சாப்டேளா அண்ணா?"னு விசாரிக்க மட்டும் பெண்ணின் ரெண்டு அத்திம்பேர்கள் ஆன் டூட்டியில் இருப்பார்கள்.

எல்லாம் திருப்தி தானே? ஒன்னும் குறை இல்லையே?னு காவிரி மன்ற நடுவர்கள் மாதிரி பழம் தின்னு கொட்டை போட்டு அந்த கொட்டை மரமாகி வளர்ந்த க்ரூப் ஒன்னு வலம் வரும்.
சாம்பார்ல உப்பு கம்மியா இருக்கே!னு ஒரு க்ரூப் வலையை விரிக்கும். எங்களுக்கு சாம்பாரே வரலைடா!னு இன்னோரு க்ரூப் கோதாவுல குதிக்கும்.

இதையெல்லாம் மீறிக்கூட திருமணங்கள் மகிழ்ச்சியை தருவது தான் ஆச்சர்யம் கலந்த உண்மை! (அட! சாலமன் பாப்பையா தீர்ப்பு மாதிரி இருக்கே!)

இப்ப கொஞ்சம் நிலைமை மாறி இருக்குனு தான் சொல்லனும்.

எது மாறுதோ இல்லையோ எனக்கு ரெண்டே ரெண்டு விஷயத்துல டவுட்டாவே இருக்கு.

1) கன்னா பின்னானு டெக்னாலஜி முன்னேறி இருந்தாலும், எலாஸ்டிக் வெச்சு ஏன் வேஷ்டிகள் கண்டுபிடிக்கபடவில்லை?

ஸ்ஸ்ப்பா! அத கட்டிட்டு, "அவுராம இருக்கனுமே முருகா!"னு ஒவ்வொரு நிமிஷமும் திக் திக்குனு தவிக்கறது இருக்கே!

2) கல்யாணத்தன்னிக்கு காலையில் எனக்கு எக்ஸ்ட்ரா கேசரி கிடைக்குமா? கிடைக்காதா? :)

உங்கள் நல்லாசியுடன், பேராதரவுடன் இன்னொரு புதிய துவக்கம். குடுத்த வாக்குறுதிகளை(யாருப்பா அது அல்வா!னு படிக்கறது?) காப்பாத்தனும்.

இதோ, இன்னொரு புதிய துவக்கத்தை நோக்கி உங்கள் அம்பி பயணப்படுகிறான், உங்கள் நல்லாசியுடன்! :)

Friday, May 04, 2007

மொக்கை டேக்

மலேசிய புயல், காமடி க்வீன் (யாருப்பா அது கோவை சரளா!னு வாசிக்கறது?) ஃமை பிரண்ட் ஒரு மொக்கை டேக் எழுத சொல்லி இந்தா அந்தா!னு போக்கு காட்டி ஒரு மாசம் ஆச்சு.

அதாவது, உங்க எல்.கே.ஜி ஸ்கூல் டீச்சரிலிருந்து +2 வரை படித்த பள்ளீயின் டீச்சர் பெயர் எல்லாம் சொல்லனுமாம். நல்லா துபாய்ல ரூம் போட்டு யோசிப்பாங்க போலிருக்கு. (ஆமா! இந்த டேக்கை ஆரம்பிச்சு வெச்சவருக்கு தான் இந்த அர்ச்சனை)

நான் ரெண்டே ஸ்கூலுல தான் படிச்சேன்.
எல்கேஜி முதல் ஐந்தாம் கிளாஸ் வரை ஒரு ஸ்கூல்.
6 முதல் 12 ம் வகுப்பு வரை இன்னொரு ஸ்கூல். அதுலயும் எனக்கு ரொம்ப பிடிச்ச டீச்சர்ஸ் பத்தி தான் எழுதுவேன். இலவச இணைப்பா கூட படிச்ச, சில கேள்ஸ் பெயரும், ஹிஹி. என்ன சரியா?

மேரி மிஸ்: அழகா பேபி பிங்க் கலர்ல மெட்டல் ஷிபான் சாரி கட்டி, போஃனி டெயில் போட்டு, கைல ஒரு குடையோட வருவாங்க கடலோர கவிதைகள் ரேகா மாதிரி. எப்பவும் சிரிச்ச முகமா இருப்பாங்க. நான் கிளாஸ்ல என்ன அட்டகாசம் பண்ணாலும் எங்க அம்மாட்ட போட்டே குடுக்க மாட்டாங்க.

ரஞ்சனி: என் கூட படிச்ச சக வானரம். ரஞ்சனி!னு பெயருக்கு பதிலா லங்கினினு வெச்சு இருக்கலாம். எப்ப பாரு! என்னய தான் டார்ச்சர் பண்ணுவா. அவ பேனா எழுதறதா?னு என் பின்மண்டையில எழுதி செக் பண்ணிப்பா. நான் மிஸ்ஸ்!னு கத்தினா தொடையில நிமிட்டாம்பழம் வேற. அடியே ரஞ்சனி! உனக்கு லட்டுவா ஒரு பொண்ணு பொறந்து என் பையன விட்டு என் கணக்க டேலி பண்ணிகறேன் பாரு!

சாந்தா - ஹிந்தி மிஸ்: நான் இப்ப ரசகுல்லா கூட சக்ஸஸ்புல்லா கடலை போடறேன்னா அந்த பெருமை எல்லாம் இந்த மிஸ்ஸையே சாரும். நல்ல வேளை, மிஸ் பிளாக் எல்லாம் படிக்க மாட்டாங்க.
தப்பா எழுதினா தொடைல நறுக்குனு கிள்ளு விழும். 7ம் கிளாஸ்லேயே கபீரின் கவிதைகளை ரசிக்க முடிந்தது இந்த குருவின் தயவால்.

காயத்ரி: ஸ்கூல் ஆண்டு விழாவுல எப்பவுமே நமக்கு இவங்க தான் ஜோடி. அப்பவே மூக்கும் முழியுமா இருப்பாங்க. ராமர் வேஷம் போட்டா இவங்க சீதை, கிருஷ்ணர் வேஷம் போட்டா, இவங்க தான் ருக்கு!

ருக்கு மட்டும் தானா? சத்யபாமா கிடையாதா?னு மிஸ் கிட்ட ஒரு தடவை கேட்டதுக்கு அடுத்த தடவை உனக்கு அனுமார் வேஷம் தான்!னு தீர்ப்பு சொல்லிட்டாங்க.

கிருஷ்ண மூர்த்தி சார்: ஸ்கூலில் அஸிஸ்டண்ட் ஹெட்மாஸ்டர். அதனால பாதி நாள் கிளாஸுக்கு வர மாட்டார். வந்தார்னா ஒரே நாளில் பாதி புக் முடிச்சுட்டு போயிடுவார். என்ன நடத்தினார்?னு அவருக்கும் தெரியாது, எங்களுக்கும் தெரியாது.
ஆமா, எட்டாம் கிளாஸ் புக்கை வெச்சு ஆறாம் கிளாஸுக்கு கணக்கு நடத்திடார் ஒரு தடவை. சிலபஸ்ல கிடையாது!னு சொல்லி எக்ஸாம்ல மார்க் வாங்கிட்டோம். இப்பவும் எனக்கு மேத்ஸ்னா கொஞ்சம் அலர்ஜி.

வினோதா: இலங்கையிலிருந்து தமிழகத்துக்கு புலம் பெயர்ந்த குடும்பம். சிங்களத்து சின்ன குயிலே!னு பாடினா மின்னல் கீற்றா ஒரு புன்னகை எட்டிப் பார்க்கும். பேஸ்கட் பால் பிளேயர். வினோதாவுக்காக பாதி ஸ்கூல் கிரிக்கட்டை மறந்து பேஸ்கட் பால் ஆடியது.

(ச)ரோஜா டீச்சர்: இந்த தமிழ் மேடம் தினமும் தனது கொண்டையில் ரோஜா வெச்சுண்டு வருவாங்க. அதனால் சரோஜா டீச்சர் ரோஜா டீச்சர் ஆயிட்டாங்க.
எத்தனை ஸ்பெல்லிங்க் மிஸ்டேக் விடற?னு என்கிட்ட கத்துவாங்க. கட்டுரை போட்டி, நாடக போட்டினு எந்த போட்டி வந்தாலும் என்னய கேக்கமலேயே "அந்த கோட்டி பெயர எழுதிக்கோ!"னு என் பெயரை எழுதி அனுப்பிடுவாங்க.

சுப்பையா சார்: ரொம்ப துடிப்பானவர். என்ஸிஸி ஆபிசர் வேற. எனக்கு அரைகுறை ஹிந்தி தெரியும்! என்ற ஒரே காரணத்துக்காக பூரி கிழங்குக்கு ஆசைபட்டு என்ஸிஸில சேர்ந்த என்னை, பஞ்சாப்புக்கு எல்லாம் கேம்ப் கூட்டிண்டு போறேன்!னு சொன்ன நல்லவர். எங்க அப்பா கேம்புக்கு விட மாட்டேன்!னு சொல்லிட்டார்.

அவ்ளோ தான்பா! யாராவது சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்ள விரும்புவர்கள் இந்த மொக்கை டேக்கை தொடரலாம். ;)