அம்மாஞ்சி

எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே - தாயுமானவர்

Tuesday, February 09, 2010

கலைமகள்

பொதுவா சில பத்திரிகைகள் பெயரை கேட்டாலே நமக்குள் ஒரு மரியாதை உருவாகுவதை தவிர்க்க இயலாது. கல்கி, கலைமகள் போன்ற சஞ்சிகைகள் தனகென்று ஒரு தரம், வாசகர் வட்டம் வைத்துள்ளது. பத்திரிகை தர்மத்தை ஒரு போதும் விட்டு குடுக்காமல், சீப்பான மார்கெட்டிங்க் டெக்னிக் எதுவும் பண்ண தெரியாமல் காமராஜர் காலத்து காங்கிரஸ் போல இன்னமும் கம்பீரமாக வெளிவந்து கொண்டிருக்கிறது என சொன்னால் அது மிகையல்ல.


ஒரிரு முறை பள்ளி பருவத்தில் கலைமகள் வாசித்து அதன் தரத்துக்கு தாக்கு பிடிக்க முடியாமல் விழி பிதுங்கியதுண்டு. நிறைய தமிழ்சொற்கள், மொழி ஆளுமை எல்லாம் வசப்பட(இன்னும் இல்லை) நல்ல பயிற்சி களமாக திகழ்கிறது.



கலைமகளில் இணைய ஜர்னலிஸ்ட்டுகளான( நாமே சொல்லிக்க வேண்டியது தான்) நம்மை பத்தி, நமது பதிவுலகத்தை பத்தி ஒரு கட்டுரை எழுத போறோம். சுருக்கமாக ஒரு குறிப்பு எழுதி, சின்னதா ஒரு போட்டோவும் அனுப்பவும்னு மெயில் வந்ததும் நான் செய்தது:

1) நம்மை வெச்சு யாரும் காமெடி கீமடி பண்றாங்களோ?னு முதலில் இமெயில் முகவரியை செக் செய்து கொண்டேன்.

2) போட்டோ எடுக்க பி.சி ஸ்ரீராம் ப்ரீயா இருக்காரா?னு கேட்டு பாத்தேன். பிசியாம். சரி விடுங்க, அவருக்கு யோகம் அவ்ளோ தான்.

பத்திரிகையில் போட்டோ எல்லாம் வரப்போகுது, எப்படி போஸ் குடுக்கலாம்? ஒரு பேனாவை மூக்கினுள் விட்ட படியே (ஆழ்ந்து யோசிக்கறாங்களாம்) ஒரு ஷாட் எடுக்கலாமா? இல்லாட்டி செல்போன் பேசியபடி ஒரு ஷாட் எடுக்கலாமா? அல்லது தலைக்கு பின்னாடி ஒரு ஜீரோ வாட் பல்ப் மட்டும் எரிய விட்டு, விட்டத்தை பாத்தபடி ஒரு போஸ் குடுக்கலாமா?னு ஒரே யோசனை.
முகத்துக்கு ஒரு ப்ளீச் செய்து போட்டோ எடுத்தால் நன்றாக இருக்கும்னு ஆபிசில் உள்ள பெங்காலி யோசனை சொன்னது. "பேஷியல் செய்து கொண்டால் ஒரு மஜாஜ் ப்ரீ" - புதுசா ஒரு மலபார் பியூட்டி பார்லர் நம்ம ஏரியாவுல கடை தொறந்ருக்கான். கடையும் கண்ணுக்கு குளிர்ச்சியா, நல்லா காத்தோட்டமா இருக்கு. நான் ஒரு நடை போயிட்டு வரேன்னு நைச்சியமாய் நான் சொன்னதையெல்லாம் மேலிடம் காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை. கேரளா என்றவுடன் பார்ட்டி உஷார் ஆகி விட்டது.

பின் ஒரு முடிவுக்கு வந்து எந்த போட்டோவை தங்கமணிக்கு முதன்முதலில் அனுப்பினேனோ அதே போட்டோவையே கொஞ்சம் டச்சப் பண்ணி அனுப்பி வைத்தேன். (இங்குள்ள படம் பிடிஎப் கோப்பிலிருந்து எடுத்தது, எனவே படத்தின் குவாலிட்டி கம்மியா தான் இருக்கும், ஆகவே யாரும் நமுட்டு சிரிப்பு சிரிக்க வேண்டாம்.)

வகுப்பறை ஆசான் சுப்பையா வாத்தியார், துளசி டீச்சர், ரிஷான் ஷெரீப் போன்ற பெரிய பெரிய்ய ப்ரைம் டைம் ஜாம்பவான் வித்வான்களுக்கு இடையில் கமர்ஷியல் ப்ரேக் போல என் பதிவு பற்றியும், என் உள்ளங்கவர் கேசரி பற்றியும் கட்டுரை வந்துள்ளது. முழு கட்டுரையையும் வாசிக்க சொந்த காசிலோ, ஓசியிலோ இந்த மாத கலைமகள் வாங்கி படியுங்கள்.
அடுத்த மாத இதழில் இன்னும் பெரிய பெரிய்ய ஆட்கள் பத்தி எல்லாம் வரப் போகுது. அந்த சஞ்சிகை ஆசிரியருக்கு என் மனமார்ந்த நன்றிகள். இந்த கட்டுரை தொடர்பாக பாராட்டு கடிதம் ஏதும் தப்பித் தவ்றி வந்தால் உங்களுக்கும் தெரிவிக்கிறேன்.

Labels:

Thursday, January 21, 2010

விளம்பரங்கள்

Part-1 ; Part-2 ; Part -3

அதிகாலை ஆறு மணிக்கு(பெங்களூர் வாசிகளுக்கு மட்டும்) ஜெயா டிவியில் மார்கழி மஹா உத்சவம் ஒளிபரப்பினார்கள். கட்டளைதாரர்கள்(அதாம்பா ஸ்பான்சர்) ஆரெம்கேவி. போட்டிக்கு போத்தீஸ்காரகள் ஏழு மணிக்கு(இதுவும் அதிகாலை தான்) விஜய் டிவியில் சங்கீத சங்கமம்னு ஒரு இசை நிகழ்ச்சிக்கு மண்டகபடி நடத்தினார்கள். இந்த பதிவு இசை நிகழ்ச்சிகளை பற்றி அல்ல.

போத்தீஸ் விளம்பரங்கள் நம்மை ஒரு நிமிடம் நின்னு கவனிக்க வைக்கும். ஏதோ சாமுத்ரிகா பட்டுக்கு மீரா ஜாஸ்மின் வந்ததால் மட்டும் நான் சிபாரிசு செய்கிறேன் என நினைத்து விட வேண்டாம்.

இப்போ ஒரு விளம்பரம் காட்டுகிறார்கள்.

ஒரு கல்யாண வீடு, மணப்பெண்ணின் தங்கை(அதாவது மச்சினி) எல்லோர் கவனத்தையும் தன் பக்கம் திருப்பி, ஆளுக்கு எவ்ளோ புடவை? என்ன புடவை?னு புரோட்டா கடை மாஸ்டர் மாதிரி கணக்கெடுக்கிறார். மனப்பெண்ணுக்கு தான் முதல் சாய்ஸ். அந்த பெண் ரொம்பவே வெக்கப்பட்டுக் கொண்டு சாமுத்ரிகா என அகவுகிறது. (குயில் கூவும், மயில் அகவும் - ஒன்னாங்கிளாஸ்ல சொல்லி தந்தாங்க).

வாஸ்தவம் தானே? என அந்த பெண்ணின் சித்தி வழிமொழிகிறார். சித்தியே கல்யாணப் பெண் போல லட்சணமா இருக்கா! மூக்குல சானியா மிர்சா மாதிரி அந்த வளையம் டாப் டக்கர்னு நான் நேரம் காலம் தெரியாமல் உளறி வைக்க... சரி விடுங்க. நான் ஒரு உண்மையான கலாரசிகன் என என்னிக்கு மேலிடம் நம்பி இருக்கு? (யாரந்த கலா? போன்ற பின்னூட்டங்கள் நிராகரிக்கப்படும்.)

அத்தைகள் எல்லோருக்கும் பரம்பரா பட்டு என ஒரு அத்தை தன் பங்குக்கு பிட்டு போடுகிறார். ஸ்க்ரீன்ல ஒரு அத்தைய மட்டும் தான் காட்டினாங்க. இல்ல, லாஜிக் இடிக்குதுன்னு சொல்ல வந்தேன். அவ்ளோ தான்.
இப்பதான் மணப்பெண்ணின் அப்பாவை காட்டுகிறார்கள். அவர் வழக்கம் போல ரொம்பவே சாதுவா அவர் தங்கமணியை பாக்கறார். ஒன்னும் கவலப்பாடாதீங்க! என்பது போல அந்த அம்மா ஒரு காருண்ய புன்னகை சிந்துகிறார்.

இப்ப மறுபடி அதே வளையம் மாட்டிய சித்தி. எல்லா சித்திகளுக்கும் வஸ்த்ரகலா என ரொம்பவே பாந்தமாக சொல்கிறார். பாருங்க இப்பவும் ஒரு சித்தியை தான் காட்டுகிறார்கள்.
இதை கேட்டு ரொம்பவே ஆடிப் போகிறார் நம்ம ரங்கமணி. வெறும் நாலாயிரத்திலிருந்தே இருக்கு, ஒன்னும் கவலப்படாதீங்க!னு மறுபடி ஆறுதல் மொழி வருகிறது. இங்க இருக்கும் நுண்ணரசியலை புரிந்து கொள்ளனும். விலை எல்லாம் நாலாயிரத்தில் ஆரம்பம் தான், அதுவே முடிவு இல்லை.

இந்த நேரத்தில் கடமையே கண்ணான ஒரு அத்திம்பேர் பரம்பராலாம் கையை தூக்குங்கோ!னு பைனல் டச் தர, தலையை எண்ணிப் பாத்தா ஒரு வஸ்த்ரகலா அதிகமா இருக்கு. அது வேற யாருமில்ல மணப் பெண்ணின் பாட்டி. நல்லா விசாரிச்சு பாத்தா அந்த பாட்டியின் பெயர் திருமதி.கீதா சாம்பசிவம் என்று இருக்கும். :)

இதான் எங்க பட்டு பட்டியல்! என லிஸ்ட்டை அந்த பெண் தந்தவுடன் நமது ரங்கமணி வேறு வழியில்லாமல் "போத்தீசுக்கு போகலாமா?"னு அப்பாவியாய் கேட்கிறார். இதோடு விளம்பரம் முடிகிறது. சுமார் இருபது நொடி வருதுன்னு நினைக்கிறேன்.

சரி கொஞ்சம் டெக்னிக்கலா பேசலாம்.

மேலே சொன்ன விளம்பர படம் முழுக்க முழுக்க ஸ்க்ரிப்டை நம்பியே எடுக்கப்பட்டுள்ளது. பிண்னனி இசை இல்லை, ஜிங்கிள்ஸ் இல்லை, எந்த ஒரு கிராபிக்ஸும் இல்லை, பெரிய்ய ஸ்டார் வேல்யூ இல்லை(என எண்ணுகிறேன்). கடையின் பெயர் கூட கடைசியில் தான் வருது. மிக கவனமாக, நேர்த்தியான, ஷார்ப்பான வசனங்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட பொருத்தமான மாடல்கள். ஒரு கல்யாணத்துக்கு ஒரு வாரம் முந்தைய சூழலை அதிக பொருட்செலவில்லாமல் ஏதோ நம்ம வீட்டில் நடக்கற மாதிரி பார்வையாளரை முதலில் தயார் படுத்தி திரையில் காட்டின நேர்த்தி.

ப்ரேம்-பை-ப்ரேமாக கவனமாக எடுத்துள்ளனர். ஏற்கனவே சாமுத்ரிகா, வஸ்ரகலா, பரம்பரா பட்டுக்கள் மக்களிடம் ரீச் ஆகியுள்ளதால் அந்த வகை பட்டுக்களை திரையில் கூட காட்ட தேவையில்லை என்ற இயக்குனரின் தைரியத்தை பாராட்டுகிறேன். ஸ்க்ரிப்ட் எழுதிய காப்பி எடிட்டருக்கும் முழு விளம்பர குழுவினருக்கும், நடித்தவர்களுக்கும்(அதானே!) என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

கோ-ஆப்டெக்ஸுக்கு என்னை ஒரு விளம்பர படம் எடுக்க சொன்னால், இந்த விளம்பரத்தின் முடிவில் இருந்து ஆரம்பித்து, போத்தீசுக்கு போனது போக மிச்சத்துல கோ-ஆப்டெக்ஸுக்கு போய் நமக்கெல்லாம் நாலு முழ துண்டு எடுக்கலாம்!னு அந்த ரங்க்மணியை பேச வைத்து ஷாட்டை ஓகே பண்ணி இருப்பேன்.

Labels:

Thursday, January 07, 2010

என்னது? இயக்குனர் ஷங்கரும் வலைபதிவரா?

முதல்ல எனக்கும் ஆச்சர்யமா தான் இருந்தது. எந்திரன் படத்தை பத்தி விரிவாக ரசிகர்களுடன் விவரிக்க வலைதள்ம் ஒரு நல்ல மீடியம் என அவரும் ஜோதியில் ஐக்கியமாகி விட்டாராம். ஏற்கனவே அமிதாப், அமீர்கான் எல்லாரும் சொந்த வலைதளம் இருக்கு. இப்பதான் ஷாரூக் டிவிட்டர்ல அக்கவுண்ட் (உபயம் கரண் ஜோ(க்)கர்)தொடங்கி இருக்கார். மத்திய அமைச்சர் சஸி தரூர் டிவிட்டர்ல அடிக்கற கூத்தை பத்தி நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை. டிவிட்டரின் கைபுள்ள இவரு தான்.

இவ்ளோ ஏன், நம்மூர் எஸ்.வி.சேகர், துணை முதலமைச்சர் ஸ்டாலின், 'ஸ்பெக்ட்ரம் புகழ்' ராசா இவங்களுக்கும் வலைதளம் இருக்கு. (ஏடாகூடமா கமண்ட் போட்டா ஆட்டோ அனுப்புவீங்களா சார்?).

ஷங்கரின் வலைதளம் சில துளிகள்:


தளத்தை அவர் மனதுக்கு பிடித்த கருப்பு கலரில் வடிவமைத்து இருக்கிறார்கள். (கருப்பு தான் ஷங்கருக்கு புடிச்ச கலரு).

எந்திரன் படபிடிப்பு தொன்னுறு சதவீதம் முடிந்து விட்டதாம். (தயவு செய்து சன் டிவியில் ட்ரைலராவது ஓட்டுங்க, வேட்டைகாரன் ட்ரைலர்(ரே) தாங்க முடியல)

இப்போதைக்கு ஆங்கிலத்தில் தான் வலை பதிகிறார். (என்னா சார்?)

இன்னும் தமிழ்மணம், தமிழிஷ் பட்டையெல்லாம் நிறுவவில்லை. ( நிறுவி பாருங்க, அப்புறம் தெரியும் சங்கதி)

துரத்தி துரத்தி பாலோயர்கள் எல்லாம் பிடிக்கவில்லை. அட! ஹிட் கவுண்டர் கூட போடலை.

முதல் பதிவுக்கு 439 கமண்ட் விழுந்து உள்ளது. அதில் பத்து தான் அவரது.

எல்லா கமண்டுக்கும் தனிதனியா பதில் போட்டு கமண்ட் எண்ணிக்கையை கூட்ட தெரியவில்லை.

அஜீத்தை வைத்து ஏன் நீங்கள் படம் பண்ண வில்லை? என உரிமையோடு ஒருவர் கேட்டு உள்ளார். (ஏய்! அது.)

நம்ம பதிவர்கள் சிலரும் அங்க போய் தங்கள் கைவரிசையை காட்டி இருக்கிறார்கள். (அதானே! எவ்வளவோ பண்ணிட்டோம், இத பண்ண மாட்டோமா?).

எல்லா கேள்விகளுக்கும் பதிலளிக்கவில்லை. சூசகமான, நேர்த்தியான கேள்விகளுக்கு மட்டும் நம் பெயரை சொல்லியே பதிலளிக்கிறார். (யதேச்சதிகாரத்தின் உச்சதில் இருந்து பூர்ஷ்வாத்தனமாக பதிலளிக்கும் டைரக்டர் ஷங்கருக்கு பத்து கேள்விகள்.... எதிர்வினை ஆத்த ஒரு தலைப்பு ரெடி).


ஐஸ் குட்டிக்கு கேசரி பிடிக்குமா?னு நான் கூட ஒரு கேள்வி தயார் பண்ணிட்டு தங்கமணி அப்ரூவலுக்காக அனுப்பி உள்ளேன். அனுமதி கிடைத்தால் ஷங்கருக்கு அனுப்புவதாக உத்தேசம். எனக்கு நம்பிக்கை உள்ளது.

அடுத்த பதிவர் மீட்டுக்கு காந்தி சிலைக்கு கீழே சாருவை அழைத்தது போலவே ஷங்கரையும் அழைக்கலாம். யாரு கண்டா? ரஜினியும் அவர் கூட வரலாம். :)

இவ்ளோ சொல்லிட்டு அவர் வலை தள் முகவரி சொல்லலைனா எப்படி? இந்தாங்க

அங்க போய் அம்பி தான் உங்க வீட்டு அட்ரஸ் குடுத்தான்னு கமண்டு போடுபவர்களுக்கு எந்திரன் படத்தில் ஐஸ் குட்டிக்கு முறை மாமன் ரோல் கிடைக்குமாம். :)

Labels: ,

Monday, January 04, 2010

சந்தோஷம் பொங்குதே!

கல்யாணம் ஆகி கடந்த ரெண்டு வருஷத்தில் இப்படி ஒரு புத்தாண்டை நான் எதிர்கொள்ளவேயில்லை. இந்த முறை புத்தாண்டு ரொம்பவே வித்யாசமாய், விசேஷமாய், குதூகலமாய் அமைந்தது என மெய்மறந்து நான் சொல்ல நினைத்தாலும் கடந்த கால வரலாறு கற்றுக் கொடுத்ததை எண்ணி அடக்கி வாசிக்கிறேன். சரி, பீடிகை போதும்.

தங்கமணி டிசம்பர் கடைசி வாரம் என்னை தனியே விட்டு விட்டு பிறந்த வீட்டுக்கு சென்று விட (இல்லை, டீவி சீரியலில் வருகிற மாதிரி புருஷன் கொடுமையெல்லாம் ஒன்னுமில்லை) எனக்குள் ஷெம்பெய்ன் பாட்டிலை ஒப்பன் பண்ணியது போல, கழுத்துப் பட்டை செயினை அவுத்து விட்டதும் ஒரு வித மகிழ்ச்சியுடன் துள்ளி குதித்து ஓடும் நாய் போல, ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி. அதெல்லாம் வார்த்தைகளில் வர்ணிக்க முடியாது. கண்டவர் வின்டிலர் மாதிரி தான் இதுவும்.

சட்டுனு வெளிகாட்டினா தங்க்ஸ் பிரோக்ராமை கான்சல் செய்துவிடக் கூடிய அபாயங்கள் இருந்ததால் நிர்மலமான முகத்துடன் வளைய வந்தேன்.
நீங்க குக்கர் வெச்சா சாதம் குழஞ்சு கஞ்சி மாதிரியில்ல வரும்?
ஒரு வாரம் சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவீங்க? போன்ற கிடுக்குபிடி கேள்விகளுக்கு எல்லாம் லாவகமாய் தப்பினேன்.

சாப்பாடா முக்யம்? இப்ப என்ன, சாம்பார் வெச்சா ரசம் மாதிரி வரபோகுது. சாதம் கெட்டியா தான் இருக்கனும், இப்படிதான் சாம்பார் இருக்கனும் என்ன கோபன் ஹேகன்ல தீர்மானமா இயற்றி இருக்கு..?

திடுதிடுப்புனு கிச்சனுக்குள் நுழைந்தால் அலிபாபா குகை மாதிரி தான் இருக்கும். எப்படியும் தேடி கண்டுபிடிச்சுக்கலாம். என்ன ஆனாலும் புளி எங்க இருக்கு? பருப்பு எங்க இருக்கு?னு போன் பண்ணி கேட்க கூடாது. இந்த முறை தீர்மானமாய் இருந்தேன்.

"கொடுத்ததெல்லாம் கொடுத்தான்,
அவன் யாருக்காக கொடுத்தான்?"

"யார் தருவார் இந்த அரியாசனம்?"

மனதினில் கன்னாபின்னாவென சிச்சுவேஷன் சாங்க் வந்து விழுகிறது.

எப்படியும் ப்ரீயா தானே இருப்பீங்க, இதையெல்லாம் முடிச்சு வைங்க. ஒன்னரை முழத்துக்கு ஒரு லிஸ்ட் நீளுகிறது.

ப்பூ இவ்ளோ தானா? தொலைஞ்சு போறது. எவ்வள்வோ பண்ணிட்டோம், இத பண்ண மாட்டோமா?

ஒரு வாரம் தங்கு தடையில்லாமல் கிரிகெட் மாட்ச் (ஹைலேட்ஸ் உட்பட) பாக்கலாம். ஜிடாகில் பழைய நண்பர்களுடன் வம்பளக்கலாம்.

"சொல்லில் வருவது பாதி!
நெஞ்சில் தூங்கி கிடப்பது மீதி!!"

இந்த பதிவை படித்துவிட்டு, கமண்டாமல் நீங்கள் நழுவுகிற நேரத்தில் இதோ ஒரு வாரம் முடிய போகிறது.

அந்த நாளும் வந்திடாதோ? (இல்ல சும்மா பக்த மீரா பாடலை பாடினேன் அவ்ளோ தான்).

எல்லோருக்கும் இனிய (தாமதமான) புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

பி.கு: அடுத்த பதிவு வர தாமதமானால் நீங்கள் அதிசயிக்க வேணாம். முடிந்தால் ஒரு பாட்டில் ஹார்லிக்ஸுடன் பதிவின் ஆசிரியரை நேரில் சந்திக்கவும். :)

Labels: ,

Thursday, December 03, 2009

சைனாவின் மற்றுமொரு சதி

இந்த சைனாகாரன் இருக்கானே, சும்மாவே இருக்க மாட்டான். இல்ல, அவங்க மக்கள் தொகையை பத்தி நான் சொல்ல வரல. எல்லையில என்னடானா சின்ன பிள்ளதனமா பாறையில சைனானு எழுதி வைக்கறான். அருணாசல பிரதேசத்துல எல்லாருக்கும் மூக்கு சப்பையா இருக்கு, அதனால் அதுவும் எங்க இடம் தான்னு சொல்லிட்டு இருக்கான். பிராணப் முகர்ஜியும் சும்மா தாமாசு!னு சிரிச்சுகிட்டே அறிக்கை விடறாரு. எப்படியோ ஒழியட்டும்.


ஆட்ட கடிச்சு மாட்ட கடிச்சு கடைசில தமிழ் பதிவர்கள் தலையிலுமா கைய வெப்பான்? உங்க பதிவுகளில் அனானி கமண்ட் போடற ஆப்ஷன் இருந்ததுனா போச்சு! உடனே உங்க பதிவுக்கு வந்து முத்து முத்தா பின்னூட்டம் போட்டுட்டு போயிடுவான். நான் கூட ரொம்ப நாளா நம்ம பதிவு சைனா கொரியா வரைக்கும் ரீச் ஆயிருக்கு போல!னு ஆனந்த கண்ணீர் விட்டுட்டு இருந்தேன்.


அவன் போட்ட கமண்ட் எல்லாம் வைரஸ்ஸாம். நிலா ரசிகனையே புலம்ப வெச்சுருக்கான் பாருங்க.


இதெல்லாத்துக்கும் ஹைலேட்டா அருமை அண்ணன், பக்கபக்கமா எழுதும் உனாதானா அண்ணாச்சியின் பதிவையே கடத்திவிட்டான். அவர் எழுதி இருக்கறத எல்லாம் கடத்தறதுக்கே சைனா காரனுக்கு மூனு நாள் ஆயிருக்குமே! அவ்ளோ எழுதி இருக்காரு அவரு.

சைபர் கிரைமில் புகார் குடுத்தாரா? அப்படியே குடுத்தாலும் ஏதோ கிணத்தை காணல!னு வடிவேலு குடுத்த மாதிரி என் பிளாக்கை காணலை!னு சொன்னா புகாரை எடுத்துப்பாங்களா? ஒன்னும் புரியலை.

சமீபத்தில் பாண்டிசேரி அமைச்சர்களின் தீனிப் பழக்கத்தை எதிர்த்து ஒரு பதிவு போட்டு இருந்தாரு(பாருங்க, அவரு பதிவுக்கு லிங்க் கூட குடுக்க முடியலை இப்போ). ஒரு வேளை இது அரசியல் காழ்ப்பின் காரணமாக இருக்குமோ? என்ற கோணத்திலும் சைபர் போலிஸ் விசாரிக்க வேண்டும்.

இதற்கு பதிலடியாக சைனாகாரனை எதிர்த்து உடனே பதிவர்கள் எல்லாரும் எதிர்வினை ஆத்தி பதிவு போடனும். முடிஞ்சா அவன் பிளாக்குல போய் நாம தமிழ்ல கமண்ட் போட்டுட்டு வரலாம்.

கொஞ்சம் சீரியசா சொல்லனுமா:

1) எல்லாரும் உடனே தங்கள் பதிவை பேக்கப் எடுத்துக் கொள்ளவும். ( நிலா ரசிகன் விரிவா விளக்கி இருக்காரு.)

2) பின்னூட்டத்தை மட்டுறுத்தவும்.

3) மட்டுறுத்த சோம்பலா நினைக்கும் என்னைப் போன்றவர்கள் வேர்டு வெரிபிகேஷன் வைக்கவும். சைனா காரனுக்கு இங்க்லீஸ்னா அலர்ஜி என்பதை நினைவில் கொள்க. :)

4) எல்லாத்துக்கும் மேலே காக்க காக்க என் பிளாக்கை காக்க!னு பிளாகுலக குலசாமி மகர நெடுங்குழை காதனிடம் வேண்டி கொள்ளவும். :))

அவ்ளோ தான் எனக்கு தெரிஞ்சது.

Labels: ,

Wednesday, November 25, 2009

ட்விட்டர்

நீங்க ட்விட்டர்ல இருக்கீங்களா?னு ரொம்ப நாளாகவே நெறைய பேர் என்கிட்ட கேக்கற போதெல்லாம், இல்லீங்க, கெக்ரான் மொக்ரான் கம்பெனில தான் ஆணி பிடுங்கறேனு ரொம்ப அப்பாவியா நானும் பதில் சொல்லி வந்ருக்கேன். என்னை மாதிரி ஏகபிளாக்விரதர்களுக்கு ஒன்னை கட்டியே சமாளிக்க முடியறதில்லை, இதுல உனக்கு ட்விட்டர் ஒரு கேடா?னு என் அபிமானிகள்(இருக்கீங்களா யாரும்?) துப்பிவிடும் சாத்திய கூறுகள் பிரகாசமா இருப்பதால் பேசாம தான் இருந்தேன்.

மேலும் ஆசை ஆசையாய் ஆர்குட்ல வீடு கட்டி சிலபல பழைய காலேஜ் மக்களின்(பிகர்களின்) ஏகோபித அபிமானத்தை பெற்று, வளர்ந்து வந்த நிலையில், ஒரு சபிக்கப்பட்ட ஞாயிறு நன்பகல் ரெண்டு மணியளவில் "கீழுதட்டில் வாய்ப்புண் வந்துருக்கு, என்ன செய்யனும் அம்பி? என்ற ஒரு பிகரின் ஸ்கிராப்புக்கு கர்ம சிரத்தையாய் பதில் ஸ்க்ராபிக் கொண்டிருக்கும் போது தங்கமணி நெற்றிக் கண்ணை திறக்க, அத்தோடு என் ஆர்குட் அக்கவுண்ட் பஸ்பமாகி போனது. உடனே, "தாட்சாயிணி, நன்றாக என்னை பார்!"னு எல்லாம் ஒன்னும் எகிறிக் குதிக்கலை. (ஆமா! அப்படியே குதிச்சுட்டாலும்).

நாட்டுல பல கிரிமனல் வேலைகள் எல்லாம் இப்ப ஆர்குட் வழியாத் தான் நடக்கறதாம்! அதான் நான் ஒதுங்கிட்டேன்! என தனி மெயிலில் துக்கம் விசாரித்தவர்களிடம் டெம்ளேட் மெயில் அனுப்பி ஆறுதலடைந்தேன்.

தங்கமணி கட்டிக் குடுத்த வெங்காய சாம்பாரும், உருளைகிழங்கு கார கறியையும் ஒரு கட்டு கட்டிவிட்டு, ஆபிசில் மதியம் கண் சொருகும் நேரத்தில் எல்லாரும் பீட்டர் விடும் இந்த ட்விட்டர்னா என்னனு கொஞ்சம் நோண்டிப் பாப்போம் என ஒரு நப்பாசையுடன் லேசா துருவினால் முக்காலேஅரைக்கால் பிளாகுலக மக்களும் ட்விட்டர்ல வூடு கட்டிக் கொண்டு இருக்கிறர்கள் என புரிந்தது.

  1. பல்லில் தேங்காய் துகள் புகுந்து விட்டது.
  2. குண்டூசி தேடுகிறேன்.
  3. கண்டேன் குண்டூசியை!
  4. மிஷன் இன் பிராக்ரஸ்.
  5. முடிஞ்சது சோலி!

இப்படியெல்லாம் ட்விட்டி இருக்கிறார்கள்.( நல்லா இருங்கடே!)

சிலபேர் வெண்பா பாடி இருக்கிறாகள். நமீதா பத்தி கிசுகிசு எல்லாம் ட்விட்டி இருக்கிறார்கள். சிலபேர் வெள்ளகார தொரை அவங்களுக்கு அனுப்பிய தபால் பத்தி எல்லாம் சொல்லி இருக்கிறார்கள்.

வீட்ல கரண்ட் இல்லை. டாய்லெட்ல தண்ணி வரலை. பேப்பர்காரனுக்கு பாக்கி இருக்கு.

நான் நல்லவளா கெட்டவளா?

உங்க வீட்ல நவராத்ரிக்கு என்ன சுண்டல்?

மூனார் போயி நாலு மாசமாச்சே! வீட்ல ஏதேனும் விஷேசம் உண்டா?

மாமியாருக்கு பிபி ஷுகர் எல்லாம் எகிறி விட்டதா?

இந்த ஆதி ஏன் தான் அபிய இப்படி படுத்தறானோ?

எங்காத்து அர்ஜுன் ஜுனியர் சிங்கர்ல பாடறான்.

போளி செய்வது எப்படி?(போலி இல்ல போளி, திரும்ப படிங்கடே!)

புது பதிவு போட்டால் போஸ்டர் ஒட்ட(என்னையும் சேர்த்து தான்) இதுவும் ஒரு சுவராக பயன்படுகிறது. இதுலயும் ஜிகினா வேலை காட்டுகிறர்கள் சில டெம்ளேட் ராஜாக்கள். பதிவுகளை விட, இணையத்தில் சிதறி கிடக்கும் பல சுவாரசிய தகவல்களின் லிங்குகள் டிவிட்டுகளாக வருவது நன்றாக உள்ளது. ஆனால் இங்கயும் தங்கள் அதிமேதாவித்தனத்தை பறை சாற்றும் சில ட்விட்டுகள் அயர்ச்சியைத் தான் தருகிறது.

ட்விட்டர்ல வெறும் நூத்தி நாப்பது எழுத்துக்கள் தான் எழுத முடியுமாம். உனாதானா அண்ணாச்சி எல்லாம் தன் பதிவின் தலைப்பே இவ்ளோ நீளத்துக்கு வெப்பாரு. ட்விட்டர்ல உங்களுக்கு அக்கவுண்டு தர மாட்டோம்னு அவருக்கு மெயில் அனுப்பிட்டாங்களாமே, நெஜமா? :)

தமிழ் வெர்ஷன்ல ட்விட்டர் வந்தா சிட்டுக்குருவின்னு பெயர் வெப்பாங்களா?சரி தான், இது பிளாக், ஆர்குட்டை விட வெட்டி போலிருக்கு. சீசீ, இந்த பழம் புளிக்கும். :)

Labels: , ,

Friday, November 06, 2009

பெண்களூரு

part - 1

தமிழ் நாட்டிலிருந்து இந்த பெண்களுருக்கு வந்தவர்கள் அனைவரும் ஒரு குறையாக சொல்லும் விஷயம் இங்கு சாம்பார் என்று சொல்லி அதில் சர்க்கரையை போட்டு ஒரு திரவத்தை தராங்க பா! என்பது தான். வெங்காய சாம்பார், வெண்டைக்காய் சாம்பார், முள்ளங்கி சாம்பார், முருங்கைகாய் சாம்பார்னு நம்மாட்கள் வெரைட்டியா அங்கு வெட்டி விட்டு இங்கு ரொம்பவே சிரமப்படுவார்கள்.

விடுமுறை நாளில் (பிள்ளையார் சதுர்த்தி அல்ல) மதிய சாப்பாடு ஒரு வெட்டு வெட்ட வேண்டும் என சபதம் எடுத்துக் கொண்டவர்கள் இந்த ஊரில் செல்ல வேண்டிய ஒரு இடம்: எம்டிஆர்(MTR) டிபன் ஹவுஸ். ஊர்வசி தியேட்டருக்கு நேர் எதிர்புறம் இருக்கிறது. (என்னது, ஊர்வசி தியேட்டர் எங்க இருக்கா?)

சனி, ஞாயிறுகளில் காலை லைட்டா ஒரு ஜுஸ் மட்டும் குடித்து விட்டு, மதியம் பனிரெண்டரை மணியளவில் இங்கு வந்தால் மீல்ஸ் கூப்பன் வாங்க பத்தாவது ஆளாக வரிசையில் நிற்ப்பீர்கள். முடிந்த வரை ரெண்டு அல்லது மூனு பேருக்கு மேல் உங்களுடன் சேர்த்து கொள்ள வேணாம். டேபிள் கிடைக்காது. அளவற்ற ஒரே சாப்பாடு தான். டிக்கட் விலை 120 ரூபாய்(ஒரு ஆளுக்கு). கொஞ்சம் காஸ்ட்லி தான் ஆனால் தாஜ், ஓபராய் என நமக்கு பஃபே காட்டும் மெனுவோடு ஒப்பிட்டால் இது ஒன்னுமில்லை.

முதலில் ஏதாவது ஒரு பழரசம் வெள்ளி டம்பளரில்(250 மில்லி பிடிக்கும்) தருவார்கள். (எங்களுக்கு திராட்சை ஜூஸ் வந்தது). பழக்க தோஷத்தில், ஒரே மடக்காக குடித்து விட்டால் சரியாக சாப்பிட முடியாது. எனவே லைட்ட்டா நாலு சிப் செய்யவும். நாம் சாப்பிட்டு முடிந்ததும், மறக்காமல் வெள்ளி டம்பளரை எடுத்து செல்ல தனியாக ஒரு ஆள் வருகிறார்.

அதன்பின், ஒரு பெரிய தட்டில்(இது வெள்ளி இல்லை) வரிசையாக பதார்த்தங்கள் வர ஆரம்பிக்கும். முதலில் சுடச்சுட பூரிகள் வரும். ரெண்டுக்கு மேல் வேணாம் என சொல்லி விடுங்கள். நல்ல பிசிபேளா பாத்தின் முக்ய லட்சணமே மிதமான காரத்தில், தகதகவென ஒரு ஜொலிப்போடு, முந்திரி பருப்பு மணக்க, இளம்சூடாக ஆனால் கையையோ நாக்கையோ பொத்து போகிற அளவுக்கு இல்லாமல் இருக்க வேண்டும். இவங்க இதுல எக்ஸ்பர்ட் போலிருக்கு. நீங்கள் நாலு வாய் சாப்பிடுமுன் பொன்னி அரிசியில் சாதம் வந்து விடும். சொல்ப வெய்ட் மாடி! என கூச்சமில்லாமல் சொல்லி விடுங்கள். நிஜமான சாம்பார் எல்லாம் விடுகிறார்கள். ரசமும் உண்டு.

அன்றைய ஸ்பெஷல் ஸ்வீட் என்னவோ அது வரும். எங்களுக்கு பாதாம் அல்வா கிடைத்தது. பால் பாயசமும் வரும்.

1) கட்டிடம் கட்டி சுமார் அறுபது ஆண்டுகளாவது இருக்கும்.
கை அலம்ப வைத்திருக்கும் குழாயை திறக்க காரில் பிரேக் போடுவது போல கீழே இருக்கும் பெடலை மிதிக்க வேண்டும்.

2) ஊழியர்கள் எல்லோரும் லைட் ரோஸ் நிறத்தில் சட்டையும், வெள்ளை வேட்டியும் அணிந்து இருக்கிறார்கள். சமைப்பவர் முதல் பறிமாறுபவர் வரை எல்லாம் நள பாகம் தான். நோ தமயந்திஸ்.

3) எல்லோருமே சுத்தமான கன்னடம் தான் பேசுகிறார்கள். மைசூர்காரகள் என பாத்தவுடன் சொல்லி விடலாம்.

4) யாரும் தானாக டிப்ஸ் கேட்பதில்லை. பெரும்பாலனவர்கள் குடுப்பதும் இல்லை. எனக்கு அன்னிக்குனு பாத்து மறந்து போச்சு. ஹிஹி.

5) மாடிக்கு போகும் வழியில் சுதந்திரத்துக்கு முன்னாடி எடுத்த நிழற்படங்களை மாட்டி வைத்திருக்கிறார்கள். சர்.சி.வி. ராமன், கோக்லே, நேரு என பலப்பல முக்ய தலைவர்கள் தம் தங்கமணி சகிதம் போண்டா சாப்பிட வந்திருக்கிறார்கள். அவங்க தங்கமணிகளும் சனிக்கிழமை சமைக்காதோர் சங்கத்தில் மெம்பர் போலிருக்கு.

உங்களுக்கு வாக்கப்பட்டு என்னத்த கண்டேன்? ஒரு ஹோட்டல் உண்டா? சினிமா உண்டா?னு நேரு தங்கமணியும் இடித்து இருப்பார்கள் போலும். நேரு ரொம்பவே பவ்யமாய் அமர்ந்து சாப்பிடுகிறார். வெளில தான் முன்கோபம் எல்லாம் காட்டுவார் போல. ஹும்! வீட்டுக்கு வீடு வாசப்படி! இல்ல, சும்மா ஒரு பழமொழி சொன்னேன் அவ்ளோ தான். :)

6) தங்கள் முறை வரும் வரை காத்திருக்க மர பெஞ்சு போட்டிருக்கிறார்கள். நாங்கள் உண்ட களைப்பால் கொஞ்ச நேரம் பெஞ்சில் அமர்ந்திருந்து விட்டு கிளம்பினோம். ஹோட்டல்கார்களுக்கு செம சிரிப்பு.

7) சரியான பார்கிங் வசதி இல்லை. செம பிசியான ரோடு, இடத்துக்கு எங்க போறது? ஹோட்டல் காரகளை குத்தம் சொல்ல்ல முடியாது.

பெண்களூர் வாசிகள் கண்டிப்பாக ஒரு முறையேனும் இங்கு வந்திருப்பார்கள். மற்றவர்கள் காலமும், சந்தர்ப்பமும் கிடைத்தால் வாருங்கள்.

Labels: ,