Showing posts with label peelings of india. Show all posts
Showing posts with label peelings of india. Show all posts

Friday, October 22, 2010

ப்ளே ஸ்கூல்

குழந்தைகளை எல்.கே.ஜியில் சேர்ப்பதற்கு முன்னால் சும்மா ஒரு நட்பு சூழலில், பெற்றோரை பிரிந்து தனியா மத்த குழந்தைகளுடன் சேர்ந்து இருக்க முடிகிறதா?னு டெஸ்ட் செய்யற இடம் தான் ப்ளே ஸ்கூல் என அறிந்து கொண்டேன். எங்க ஏரியாவில் அடுத்த தெருவில் இப்படி ஒன்னு இருக்கு. ஜூனியரை அங்க சேர்த்து பாக்கலாமா?னு தங்க்ஸ் கேட்க, சரி பாக்கலாம்னு சொல்லியாச்சு.

அந்த சுப தினமும் நெருங்க எனக்கு டென்ஷன் அதிகமாச்சு. கண்டிப்பா ஸ்கூல் அனுப்பனுமா? நாமே ஏன் நேரு மாதிரி வீட்டுக்கே சில டீச்சர்களை வரவழைச்சு பாடம் சொல்லி குடுக்க கூடாது?னு நான் வெகுளியா மேலிடத்தை கேட்க, அது என்ன டீச்சர்கள்..? என பப்ளிக் பிராஸிகியூட்டர் மாதிரி பாயிண்ட புடிக்க எதுக்கு வம்பு?னு பேசாம இருந்துட்டேன்.

முந்தின நாளே வாட்டர் பாட்டில், அத வைக்க ஒரு ஸ்கூல் பேக், மத்த குழந்தைகளுக்கு குடுக்க சாக்லேட்ஸ்னு ஒரே அமர்க்களம். முத முதலா ஸ்கூல் போறான், ஒரு ஸ்வீட் பண்ணிக்கோ!னு என் பங்குக்கு ஒரு பிளேட் கேசரிக்கு ஒரு பிட்டை போட்டு வைத்தேன்.

ஜூனியர் வயத்தில் இருந்த போது, தங்க்ஸ் ரெண்டு தடவை வசூல் ராஜா டிவிடி பாத்ததின் விளைவோ என்னவோ புதுசா எந்த குழந்தைகளை பாத்தாலும் ஜூனியர் முதலில் ஒரு கட்டிபுடி வைத்தியம் செய்து விடுவான். அதன்பின் "மை நேம் இஸ் சூர்யா!"னு தன்னை அறிமுகப்படுத்தி கொள்வான். அவனிடம் நாங்கள் தமிழில் மட்டுமே உரையாடுவதால், யாரேனும் திடீர்னு ஆங்கிலத்தில் என்ன கேட்டாலும் ஒரே பதில் தான். அதுக்கும் எதிராளி மசியவில்லையெனில் ஷேக்கன்! என கூறி கைகுலுக்கி விடுவான்.

ப்ளேஸ்கூலில் என்ன நடக்க போகுதோ? புது டிரஸ் எல்லாம் போட்டு சாமி கும்பிட்டு போதாகுறைக்கு எங்கள் காலிலும் விழ " நல்லா படிச்சு விக்ரமன் படத்துல வர மாதிரி நாளைக்கே நீ கலெக்டராகி அம்பாசிடர் கார்ல வந்து இறங்கனும்!"னு உணர்ச்சிவசப்பட்டு ஆசிர்வாதம் செஞ்சேன்.

சுவரெங்கும் வண்ண வண்ண கார்டூன்கள், பஞ்ச தந்திர கதை சித்திரங்கள்(சிம்ரன், ரம்யா கிருஷ்ணன் படங்கள் மிஸ்ஸிங்), சறுக்கு மரம், சீஸா, நிறைய்ய கலர்-கலர் பிளாஸ்டிக் பந்துகள், புடவை கட்டி பன் கொண்டை போட்ட ஒரு மிஸ், சுடிதார் அணிந்து, லிப்ஸ்டிக் அடித்து, குதிரை வால் கொண்டை போட்ட இன்னொரு மிஸ் என கலக்கலாய் இருந்தது ப்ளே ஸ்கூல்.

ஜூனியர் மிஸ்ஸிடம் வழக்கம் போல தன்னை அறிமுகப் படுத்தி கொண்டு சாப்டாச்சா? என அக்கறையுடன் விசாரிக்கவும் செய்தான். முதல் வாரத்தில் ஒரு மணி நேரம் தான் வைத்துக் கொள்வார்களாம். சில ஸ்கூலில் சிடி போட்டு டீச்சரும் பாட்டு பாடிக் கொண்டே டான்ஸ் எல்லாம் ஆடுவாங்களாமே..? இந்த மிஸ்ஸும் ஆடுவாங்களா? என தங்க்ஸிடம் டவுட் கேட்டு வாங்கி கட்டி கொண்டேன். ஜூனியர் புதிய சூழலில் எப்படி நடந்து கொள்கிறான் என பாக்க எனக்கு அளவிடமுடியாத ஆவல். குழந்தைகளுக்கும், அம்மாக்களுக்கு மட்டும் தான் கிளாஸ் ரூமில் அனுமதியாம். என்னை மாதிரி குழந்தை உள்ளம் கொண்ட அப்பாக்களுக்கு அனுமதி இல்லையாம்.

ஒரு மணி நேரம் கழிச்சு வீட்டுக்கு வந்த ஜூனியரிடம், உனக்கு எத்தனை பிரண்ட்ஸ் கெடச்சாங்க சொல்லு பாப்போம் என விசாரிக்க,

அபிராமி, மம்தா, ப்ரஜக்தா, எல்லாரும் பிரண்ட்ஸாயிட்டாங்க பா.

ஏன்டா உனக்கு ஒரு பையன் கூடவா பிரண்டா கெடைக்கல..? அவ்வ்வ்வ்வ்.

Tuesday, September 28, 2010

NRI மாமி

Part-1

பொதுவாக கல்யாணம் ஆன ஆண்களுக்கு தமது மாமியார் வீடுகளில் தங்கமணியின் தூரத்து சொந்த பந்தங்களிடமிருந்து சிலபல சோதனைகள் வந்து வாய்க்கும். அதையெல்லாம் எடுத்தோம் கவிழ்த்தோம்னு டீல் பண்ண முடியாது, பண்ணவும் கூடாது. அப்படி செய்தால் செய்கூலியும் சேதாரமும் ஜாஸ்தியா இருக்கும். வள்ளுவர் சொன்ன மாதிரி அகலாது அணுகாது, நாலு பேரையும் கணக்கில் எடுத்துக் கொண்டு தான் ஒரு முடிவுக்கு வரனும். சரி, நேரே விஷயத்துக்கு வரேன்.

ஒரு தரம் குடும்ப சகிதமாய் நங்கநல்லூர் அனுமார் கோவிலுக்கு போய்விட்டு அக்கடானு வந்த நேரம் தங்க்ஸின் தூரத்து சொந்த பந்தம் வந்து சேர்ந்தனர்.
ஒரு எழுபது வயது மதிக்க தக்க ஒரு என்.ஆர்.ஐ மாமா, மாமி. அவங்களும் பெண்களூர்ல தான் இருக்காங்களாம். கர்ணனுக்கு கவச குண்டலம் போல என்ஆர்ஐ மாமிகளுக்குன்னு சில பொதுவான விஷயங்கள் உண்டு.

காதில் எட்டு கல் வைத்து வைர தோடு(கலிபோர்னியாவில் வாங்கியது) தான் போட்டு இருப்பார்கள்.

தர்மாவரமோ ஆரணியோ அல்லது காட்டன் சில்கோ(ஆழ்வார்பேட்டை பிரசாந்தினியில் நல்ல வெரைட்டி இருக்கு தெரியுமா?) தான் உடுத்தி இருப்பார்கள்.

"திஸ் ஓல்ட் மேன் இஸ் ஆல்வேஸ் லைக் தேட்!" என அவர்களது ரங்க்ஸை அன்பாக கடிந்து கொள்வார்கள்.

போன டிசம்பர் சீசன்ல சீனி(மான்டலீன் ஸ்ரீனிவாஸ்) சிகாகோ வந்ருந்தான், பின்னிட்டான் தெரியுமா! என ஒரு பிட்டை போடுவார்கள்.

மேற்படி விஷயங்களில் வைரத் தோடு, ஆரணி நீங்கலாக எந்த பந்தாவும் இல்லை இந்த மாமியிடம். பரஸ்பர ஷேமம் உபயஷேமம் முடிந்த பின் இவர் தான் எங்க வீட்டு மாப்ளை என நான் அறிமுகம் செய்து வைக்கப்பட்டேன்.

பெண்களுர்ல நீங்க எங்க இருக்கீங்க..?

சொன்னேன்.

அவர்கள் யெலஹங்காவில் இருக்காங்களாம். ஒரு தரம் ஆத்துக்கு கண்டிப்பா வரனும் என அன்பு கட்டளை. பெண்களூரில் இருந்து யெலஹங்கா போற நேரத்துல ஸ்ரீலங்காவுக்கே போயிட்டு வந்துடலாம். :)

அவர்களுக்கு ஐந்து பிள்ளைகள் அமெரிக்காவில் ஐந்து வேவ்வேறு மாநிலங்களில் இருக்காங்க. சான் ஜோஸ் கிளைமேட் தான் எனக்கு ஒத்துக்கும்! அதுனால் அந்த பிள்ளை வீட்ல தான் தங்குவோம்! என்றார்.

நயாகராவை ரெண்டு பக்கத்துல இருந்தும் பாத்தாச்சாம். நயந்தாராவை எதுக்கு இவங்க ரெண்டு பக்கத்துல இருந்தும் பாக்கனும்? எந்த பக்கம் பாத்தாலும் அழகா தானே தெரியும்?னு தங்கஸிடம் கிசுகிசுத்தேன். நறுக்குனு ஒரு கிள்ளு மட்டும் பதிலாக வந்தது. எப்போதும் அப்பாவிகளை தான் இந்த உலகம் தண்டிக்கிறது.

எந்த கம்பெனியில் வேலை..?

சொன்னேன்.

இங்க தான் ஒரு சூட்சமம் இருக்கு. மூன்றேழுத்து, நாலேழுத்துன்னு அவங்க ஒரு கம்பெனி பட்டியல் வைத்திருப்பார்கள். அந்த லிஸ்டுகுள்ள நம்மது இருந்தா தப்பிச்சது. நம்மது ஒரு மன்னார் அன்ட் மன்னாராகவோ இல்ல ஒரு கெக்ரான் மோக்ரானாகவோ இருந்து தொலச்சா மேலும் சில குறுக்கு விசாரணைகள் தொடரும். இது கூட பரவாயில்லை, நம்ம நேரம், போன வருடமோ, போன மாசமோ நம்ம கம்பெனிய வேற ஒருத்தன் சல்லிசா இருக்கேன்னு வாங்கி இருப்பான். இல்ல, நம்ம கம்பெனி, நமக்கு குடுக்க வேண்டிய சம்பளத்துல ஒரு பக்கோடா கம்பெனிய வாங்கி இருப்பான். உடனே மாத்துடா கம்பெனி போர்டை!னு ரீபிராண்ட் செய்து இருப்பார்கள். இதை புரிய வைப்பதற்குள் நமக்கு நாக்கு தள்ளி விடும்.

உங்கள நம்பி தான் எங்க பொண்ணை தந்ருக்கோம், கண்ண கசக்காம இருந்தா சரி! என முடிவுரை எழுதி விடுவார்கள்.

அந்த கம்பெனில நீங்க என்ன பண்றீங்க..?

கால் கிலோ ரவைய வறுத்து முக்கா கிலோ சீனி, 200 கிராம் நெய்யும் விட்டு கேசரி கிண்டிட்டு இருக்கேன்னா சொல்ல முடியும்..? ரொம்ப எளிமையா நான் செய்யறதை சொல்லி புரிய வைத்தேன். ஒரு வழியாக சமாதானம் ஆகி மறுபடியும் ஸ்ரீலங்காவுக்கு, சே யெலஹங்காவுக்கு எங்களை அழைத்து விட்டு பின்கோடு உட்பட அவர்கள் முகவரியை எழுதி குடுத்து விட்டு சென்றனர். :)

Friday, August 13, 2010

மனீஷாவும் சோன் பப்படியும்

சில பதார்த்தங்களுக்கு ஏன் இந்த பெயர் வைத்தார்கள்? என ரூம் போட்டு ஆராய்ச்சி செய்வதை விட கையில் கிடைத்தால் லபக்குனு முழுங்கி விட தோணும். சோன் பப்டியும் அப்படி தான். மாலை நேரங்களில் தெருவில் டிங்க் டிங்க்னு மணி அடித்து கொண்டு தள்ளு வண்டியில் ஒரு கண்ணாடி ஜாடியில் வெள்ளை வெளேர்னு இருக்கும். அந்த ஜாடிக்குள் லாவகமா கையை விட்டு ஒரு கைப்பிடி சோ-பாவை ஒரு பேப்பரில் போட்டு தருவார்.

எனக்கு தெரிந்து சோ-பாவை யாரும் தீபாவளிக்கோ, பொங்கலுக்கோ வீட்டில் செய்தது இல்லை என நினைக்கிறேன். சோன்பப்படி செய்வது எப்படி?னு எந்த பதிவும் எனக்கு தெரிந்தவரை தமிழில் வந்ததில்லை. கூகிளில் தேடினால் ஆங்கில பதிவுகள் காண கிடைக்கின்றன. ராஜஸ்தானிகள் - லாலா மிட்டாய் கடை வைத்திருப்பவர்கள் தான் செய்கிறார்கள். ஹால்டிராம்ஸ் காரர்கள் கட்டி கட்டியாக அழகா பீஸாக பாக் செய்து பேக்கரிகளில் வைத்திருக்கிறார்கள்.

யாராவது தங்கள் வீட்டுக்கு என்னை சாப்பிட கூப்பிட்டால் நான் வாங்குவது கால் கிலோ சோ-பா தான். ஒரு கட்டத்தில் நான் அந்த பேக்கரிக்கு போனாலே கடைகாரன் சோ-பாவை எடுத்து பேக் பண்ண ஆரம்பித்து விட்டான். தெரிந்த சிலர் வீட்டுக்கு ரெண்டாம் தரம் போன போது, "என்ன அம்பி, சோன் பப்டியா?" என அவர்களே கேட்க ஆரம்பித்து விட்டார்கள். :)

கேசரியெல்லாம் கிண்டி டிபன் பாக்ஸில் போட்டு கொண்டு போக முடியாது. சூடு ஆறி விடும் என்பது மட்டுமல்ல மத்த ஸ்வீட்ஸ் எல்லாம் ரொம்பவே காஸ்ட்லி, மேலும் சோ-பா பாக்கெட்டை நம் கண் முன்னாடியே பிரித்து நமக்கும் ஒரு பீஸ் தருவார்கள். ஹிஹி.

ஆத்தா நான் பாசாயிட்டேன்!னு ஹிந்தியில் கத்தி கொண்டே வரும் அமிதாப், ஜிதேந்திரா, சாருகான், சல்மான்கான்களுக்கு அவர்கள் அம்மா மஞ்ச கலர் லட்டுவோ அல்லது சோன் பப்டியையோ தான் ஊட்டுவார்கள். கவிஞர் வாலிக்கும் என்னை மாதிரி சோன் பப்டி பிடிக்கும் போல. இந்தியன் படத்தில் 'மாயா மச்சீந்திரா' என ஆரம்பிக்கும் பாடலில் சோன் பப்படி! என அழுத்தம் திருத்தமாக எஸ்.பி.பி குரலில் மனீஷா கொய்ராலாவை வர்ணித்து இருப்பார். அந்த வரிக்கு தியேட்டரில் நான் மட்டும் கை தட்டினேன், மனீஷாவுக்காக இல்லை சோ-பாவுக்காக! என நான் சத்தியம் செய்தாலும் நீங்கள் நம்ப போவதில்லை.

சோன் பப்டிக்கு விக்கி பக்கங்கள் எல்லாம் இருக்கு. என்ன தான் சோ-பா செய்வது எப்படின்னு பல ரெஸிப்பிகள் வந்தாலும் லாலா மிட்டாய்காரகளின் ரெஸிபி இன்னமும் ரகசியமா இருக்குனு கேள்விப்பட்டேன்.

இங்கு பெண்களுர் தெருக்களில் சோ-பா வண்டி எல்லாம் வருவதில்லை. சென்னையிலும் அதிகம் பாத்ததில்லை. ஒரு வேளை சில ஏரியாக்களில் வரலாம். இன்றைய விலைவாசியில், பாவம் இந்த சோன் பப்டிகாரர்கள் எப்படி தாக்கு பிடிப்பார்களோ..? ரேஷன் கார்டு இருந்தா தானே ஒரு ரூவாய்க்கு அரிசி கிடைக்கும்..? இவர்களுக்கும் ரேஷன் கார்டு இருக்குமா? ம்ம், கடவுள் ஒவ்வொரு சோன் பப்டி பாக்கெட்டிலும் ஒருத்தர் பெயரை எழுதி வைத்திருப்பான் என்ற நம்பிக்கை தான் இவர்களை வழி நடத்திக் கொண்டிருக்கிறது என நினைக்கிறேன்.

Friday, August 06, 2010

கதை கட்றாங்க பா

சாட்டிலைட் டிவிகளும் எப்.எம்களும் தமிழகத்தில் வராத காலத்தில் ரேடியோ தான் நம் மக்களுக்கு பொழுதுபோக்கு. அதில் நாடகம் எல்லாம் கூட ஒலிபரப்புவார்கள். ஒரு நாலு பேர் சுத்தி உக்காந்து கதாபாத்ரமாகவே மாறி டயலாக் பேசுவார்கள். ரொம்ப சுவாரசியமா இருக்கும். அதில் வரும் குரல்கள் நமக்கு ரொம்பவே பரிச்சயமா இருக்கும். ஏன்னா ராஜ ராஜ சோழனுக்கு குரல் குடுத்த அதே ஆள் தான் ஒட்டக்கூத்தருக்கும் குரல் குடுப்பார். எபப்டி ஜோதிகாவுக்கு குரல் குடுத்த அதே அம்மணி (சவிதா) சிம்ரனுக்கும் டப்பிங்க் குடுக்கறாரே அதே மாதிரி.

இப்படி உன்னிப்பாக கேட்டு வளந்ததாலோ என்னவோ பள்ளியில் படிக்கும்போதும் என்னையறியாமலே ஒரு கதை சொல்லியாக திகழ்ந்து இருக்கிறேன். பேச்சு போட்டிக்கு போய், கதை சொல்லும் போட்டியில் சும்மா கதை சொல்லி, நவராத்திரிக்கு வெத்தலை பாக்குடன் அரைத்த சட்னியை வழிச்சு போட உதவும் பேசின் கிண்ணங்களை பரிசாக வாங்கியதும் உண்டு. பேச்சு போட்டியில் மண்ணை கவ்விய விவரம் இங்கு தேவையில்லை.

அந்த அனுபவம் எல்லாம் இப்போ என் ஜூனியர் சாப்பிட அடம் பிடிக்கும் போது கைகுடுக்கிறது. நித்தமும் எங்க வீட்டில், அனுமார் கடல் தாண்டி இலங்கை சென்று சீதைக்கு கனையாழி குடுத்து விட்டு திரும்புகிறார். அனுமாருக்கே இப்படி தினமும் இலங்கை செல்வது போர் அடித்தாலும் என் மகனுக்கு மட்டும் போரடிப்பதில்லை. சமயத்தில் அனுமார் பொம்மையை தூக்கி கொண்டு சொய்ய்யிங்க்க்னு நான் ஸ்பெஷல் எபஃக்ட் எல்லாம் குடுத்து கொண்டு பறக்க வேண்டி இருக்கு. குழந்தைகள் கதை கேட்கும் போது அந்த உலகத்துக்கே சென்று விடுகிறார்கள். அதனால் தான அவர்களுக்கு அலுக்க வில்லை போலும்.

இன்னும் மொழி, அதன் எழுத்துக்கள், இலக்கணமெல்லாம் அறியப் பெறாத வயதில் (3 முதல் 6 வயது வரை) கதைகளின் மூலம் பயிற்றுவித்தல் ஒரு சிறந்த முறை என அறிகிறேன். இப்படி கதை கேட்டு வளந்த குழந்தைகளின் கற்பனை திறனும், படைப்பு திறனும் அபாரமாக இருக்குமாம். (அப்படியா..?#தன்னடக்கமாம்)..

மான்டிசரி முறையிலும் இத்தகைய கதை சொல்லல் முறை உள்ளதாமே. யாராவது வந்து சாட்சி சொல்லுங்க பாப்போம்.

பதிவர் விதூஷ் Scheme என்ற அமைப்பின் மூலம் ஒரு கதை சொல்லியாக திகழ்ந்து வருகிறார் என ஸ்ரீதர் நாராயண் பதிவின் மூலம் அறிந்தேன். அவருக்கு என் மனமர்ந்த வாழ்த்துக்கள்.

இதைப் போன்ற முயற்சிகள் ரொம்பவே அரிதாக நடைபெற்று வருகிறது. யாருக்கும் நேரம் இல்லை, அதை விட பொறுமை இல்லை. பெண்கள் இதழில் "என் குழந்தைகளுக்கு முள்ளங்கினாலே அலர்ஜி. ஆனா அவங்களுக்கு தெரியாம முள்ளங்கி போண்டா செஞ்சு குடுத்தேன், மிகவும் ப்ரியமாக சாப்பிட்டார்கள். என்னவர் கூட (எப்போதும் போல) என்ன? ஏது?ன்னு கேக்காமயே சாப்பிட்டார்" என வாசகர் கடிதம் எழுதும் மாதர் சங்க பெண்மணிகள் இதை மாதிரி அக்கம்பக்கம் இருக்கும் குழந்தைகளுக்கு ஒரு கதை சொல்லியாக இருந்து அந்த அனுபவத்தையும் கடிதமாக எழுதலாம்.

பெண்களூரில் இதை மாதிரி கதை சொல்லியாக இருப்பதில் சில நடைமுறை சிக்கல்கள் உண்டு. ஒரே அப்பார்ட்மெண்டில் ஆறு வங்காளிகள், நாலு மல்லு, மூனு தமிழர்கள், கொசுறாக சில கன்னடர்கள், மராத்திகள் என இருப்பார்கள். என்ன தான் 'ஏக் காவ் மேன்' ஹிந்தியை மைய மொழியாக கொண்டாலும் தாய் மொழியில் வரும் திருப்தி வேறு எதிலும் வருவதில்லை. மேலும் இங்குள்ள குழந்தைகள் இங்க்லிஸில் பொளந்து கட்டுவார்கள். நாம் தட்டு தடுமாறி ஆங்கிலத்தில் கதை சொன்னாலும் குழந்தைகள் கொட்டாவி விடும் வாய்ப்புகள் அதிகம். "டோன்ட் போர் அஸ் அங்கிள்!னு நமக்கு ஆப்படித்து விட சாத்தியங்கள் இருப்பதால் நான் இந்த முயற்சியில் ஈடுபட வில்லை.

Tuesday, July 06, 2010

நமீதாவுக்கு மிகவும் பிடித்த பாடல்

என்னிடம் ஒரு நல்ல (கெட்ட?) பழக்கம். காலையில் எந்த பாடலை முணுமுணுக்க ஆரம்பிக்கறேனோ அதே பாடல் இரவு தூங்க போகும் வரைக்கும் என்னுடன் பயணிக்கும். இதில் இன்னும் ஒரு படி மேலே போயி, பாடலுடன் அதன் பின்ணனி இசை எல்லாம் வேறு வந்து தொலைக்கும். உதாரணமாக

மேகம் கருக்குது! (டக்கு சிக்கு டக்கு சிக்கு)

மின்னல் சிரிக்குது (டக்கு சிக்கு டக்கு சிக்கு).


இப்படிதான் ஒரு நாள் "எம் பேரு மீனாக்குமாரி" வந்து விட மேலிடம் நெற்றிக் கண்ணை திறந்ததில் நாலு நாளைக்கு வலுக்கட்டயமாக "வினாயகனே வினை தீர்ப்பவனே" என சீர்காழி மாதிரி முணுமுணுக்க வேண்டியதா போச்சு.

நிற்க, நேற்று ஆபிஸ் கிளம்பும் வரை ஒரு பாடலும் வரவில்லை. இதற்காக நானும் ஒன்னும் பிரயத்தனப்படுவதில்லை. ஆபிஸ் போகிற வழியில் யாரோ ஒரு புண்யவான் தன் செல்பேசியில் ரிங்க் டோனாக கர்ணன் படத்தில் வரும் "கண்கள் எங்கே? நெஞ்சமும் எங்கே? என்ற பி.சுசீலா அம்மா பாடிய பாடலை வைத்திருக்க இதோ இன்னிக்கு வரைக்கும் இந்த பாடல் தான் ஓடிக் கொண்டு இருக்கிறது. கவியரசு கண்ணதாசன் அவர்கள் கை வண்ணத்தில் இதை விட எளிமையாக ஒரு பெண்ணின் மனோபாவத்தை சொல்ல கூடிய பாடல் உண்டா? என சந்தேகமே.

இந்த பாடல் முழுக்க பிஜிஎம்மில் "ஆ ஆ" என ஒரு கோரஸ் ஒரே ராகத்தில் ஓடிக் கொண்டே இருக்கும். நாமே ஏதோ அரண்மனை அந்தபுரத்தில்(ஆசை தான்) உலவுவது போல தோன்ற வைக்கும்.

முதல் சரணத்தில் வரும்

"மணி கொண்ட கரம் ஒன்று அனல் கொண்டு வெடிக்கும்" - இதுக்கு என்ன அர்த்தம்? என் சந்தேகத்தை தீர்த்து வைப்பவர்களுக்கு என்றும் தன்யனாக இருப்பேன்னு சொல்ல வந்தேன். தங்கம் விக்கற விலையில ஆயிரம் பொற்காசு எல்லாம் பாண்டிய மன்னனுக்கே டூ மச்சோ மச்சு.

ரெண்டாம் சரணத்தில் வரும்
"கொடை கொண்ட மத யானை உயிர்க் கொண்டு நடந்தான்" - என்ன ஒரு உவமை.

யானை நின்றாலே அழகு, அதுவும் நடந்து வந்தால் இன்னும் அழகு. இதே வரிகளை கொஞ்சம் தூசி தட்டி
"தேக்கு மரம் உடலை தந்தது,
சின்ன யானை நடையை தந்தது"னு எம்ஜியாருக்கு பாடி விட்டார் ஒரு கவிஞர்(யார்னு தெரியுமா?).

சமீபத்தில் கவிஞர் தாமரை கூட காக்க காக்க படத்தில்

"சந்தியா கால மேகங்கள் வானில் ஊர்வலம் போகுதே,
பார்க்கையில் ஏனோ உந்தன் நடையின் சாயலே தோணுதே" என எழுதி இருந்தார்.

மறுபடியும் கர்ணன் பாடலுக்கு வருவோம். இந்த இடத்தில் கொடையா? குடையா..? குடையுடன் கூடிய யானை நடந்து வருவதை பார்த்ததுண்டா? ஒரு வேளை கர்ணன் என்பதால் இங்கே கொடை என்ற சொல் வந்ததா..? யாராவது கொஞ்சம் விம் பார் போட்டு விளக்குங்களேன்.

ஆபிஸ் மீட்டிங்குல கூட இதே சந்தேகம் தான். எவ்ரி திங்க் க்ளியர்?னு கேட்ட டாமேஜரிடம் இந்த டவுட்டை எல்லாமா கேக்க முடியும்? :)

கொடை கொண்ட மத யானை எப்படி நடந்து இருக்கும்?னு வீட்டில் நடந்து பாக்கும் போது தானா என் ஜூனியர் வரனும்? பார்த்து விட்டு கெக்கபிக்கெவென சிரித்து அவன் அம்மாவ வேற அங்கு கூட்டி வந்து விட்டான். இது போதாதா?

"என்னங்க, குழந்தை சாப்ட படுத்தறான், கொஞ்சம் சீக்ரம் வந்து அந்த நடை நடந்து காட்டுங்க" என தனக்கு கிடைத்த பெனால்டி கார்னரில் கோல் போட்டுக் கொண்டிருக்கிறார் தங்க்ஸ். ஆக கொடை கொண்ட மத யானை இப்பொழுது கோவில் யானையாக மாறி வீட்டில் சலாம் போட்டுக் கொண்டிருக்கிறது.

பி.கு: தலைப்பு சும்மா லுலுவாயிக்கு. :)

Monday, May 24, 2010

குரு பெயற்ச்சி

இந்தியாவே தன் சொந்த தொழிற் நுட்பத்தில் உருவாக்கிய கிரயோஜெனிக் எஞ்சின் ராக்கெட்டை பழுது பார்க்க உங்களால் மட்டும் தான் முடியும்! என என் வீட்டு ஓனரை பெண்களூருக்கு மாற்றல் செய்து விட்டபடியால் நான் அவரது வீட்டை காலி செய்ய வேண்டியதா போச்சு. அதுக்கென்ன? ஒரு மாதத்தில் காலி செய்து விடுகிறேன் என கெத்தாக நான் சொல்லிவிட்டாலும் ரெண்டு நாள் கழித்து தான் இங்குள்ள நிலமைகள் தெரிய வந்தது.

பெண்களூரில் வாடகைக்கு வீடு தேடும் போது சில அடிப்படை விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும்:

எக்காரணம் கொண்டும் நாம் வேலை பாக்கும் உண்மையான கமெனி பெயரை சொல்லவே கூடாது. இந்த லிஸ்ட்டில் முக்யமான சில முன்றேழுத்து கம்பெனிகள், சிஎம்எம்(CMM) லெவல் கம்பெனிகள் என்றால் கிழிஞ்சது கிருஷ்ணகிரி. நாம என்னவோ அந்த கம்பெனியின் சி.இ.ஓ மச்சினி பெண்ணை கல்யாணம் கட்டின மாதிரி வீட்டின் வாடகையை சொல்வார்கள்.
மேலும் உங்கள் கம்பெனியின் கடைசி குவாட்டர்(அந்த குவாட்டர் இல்லடே) நிதி நிலை அறிக்கையை கூட வீட்டின் ஓனர்கள் விரல் நுனியில் வைத்திருப்பார்கள்.

அட்வான்சாக குறந்தது எட்டு மாத வாடகையை எண்ணி வைக்க வேண்டும். நீங்கள் மீண்டும் வீடு காலி செய்யும் போது அதே தொகை உங்களுக்கு வரும், ஆனா வராது. ஒரு மாத வாடகையை பெயிண்டிங் என ஸ்வாஹா பண்ணி விடுவார்கள். பல பேர் நாம் குடுக்கும் அட்வான்சில் தான் வருடா வருடம் வீட்டுக்கு பெயிண்ட் அடிக்கிறார்கள்.

இது ஒரு பக்கம் என்றால் அப்பார்ட்மெண்ட்களில் மெயிண்டெனன்ஸ் என குறைந்தது ஆயிரத்தில் இருந்து மூவாயிரம் வரை மாதா மாதம் அழ வேண்டும். கேரளாவை சேர்ந்த ஒரு குறிப்பிட்ட பில்டர் உங்கள் வீட்டின் சதுர அடிக்கு மூனு ரூபாய் விதம் பராமரிப்பு தொகை வசூலிக்கிறாராம். அதாவது உங்கள் வீடு ஆயிரம் சதுர அடி என்றால் மூவாயிரம் ரூபாய் நீங்கள் மாதா மாதம் மொய் எழுதனும்.

சரி அப்படி என்னதான் மெயின்டேன் செய்கிறாகள் என பார்த்தால் நம் வீட்டை தவிர எல்லா இடங்களையும் பெருக்கி துடைப்பார்கள். பகலில் ஒருவர், இரவில் ஒருவர் மூக்கை நோண்டியபடியே சேரில் உட்கார்ந்து இருப்பார். செக்யூரிட்டியாம். எவன்யா கண்டுபுடிச்சான் இதெல்லாம்..?

இது எல்லாத்தையும் விட வீட்டை காலி செய்ய பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ் என ஒரு ஒரு க்ரூப் இருக்கிறது. சுண்டைக்காய் காலணா, சுமை கூலி எட்டணா என்பார்களே! அது இவங்களுக்கு தான். வீட்டை காலி செய்யும் போது நாம இத்தனை நாள் லோலோன்னு தேடின பொருட்கள் எல்லாம் ஒவ்வொன்னா நம் கண்ணில் அகப்படுகிறது. காசி யாத்ரைக்கு குடுத்த குடை, வாக்கிங்க ஸ்டிக் கூட கிடைத்தது.

"பாருங்க எப்படி தூசியா இருக்கு..? கொஞ்சம் கூட அக்கறையே இல்லை உங்களுக்கு" - பெண்களுக்கு அவுக பிறந்த வீட்டில் இருந்து சீதனமாக வந்த ஒரு பிஸ்கோத்து டப்பா கூட பொக்கிஷம் தான். அதுக்காக பழைய நடிகர் ரங்காராவ் மாதிரி கையில் வாக்கிங் ஸ்டிக்கெல்லாம் வைத்து கொண்டு கெத்தாக நான் ஆபிஸுக்கு போக முடியுமா..?

வாஜ்பாய், அப்துல் கலாம் எல்லாம் இதனால் தானோ என்னவோ கல்யாணம் பண்ணி கொள்ளாமல் தேமேன்னு இருந்திருக்கிறார்கள். இல்லாட்டி அவுங்களும் காசி யாத்ரைக்கு குடுத்த குடையை தூசி தட்ட வேண்டி இருக்கும். போன், இன்டர் நெட், காஸ் சிலிண்டர், என ஒரு மனுஷனை எத்தனை விஷயங்கள் சம்சார சாகரத்தில் பிடித்து அழுத்துகிறது..?

ஆபிசில் கேட்டால் அவனவன் ரெண்டு வருடத்துக்கு நாலு வீடு மாறி இருக்கேன்னு பீத்தி கொள்கிறார்கள். அந்த மாஹானுபாவர்களுக்கு பூ போட்டு கால்ல விழுந்து தான் கும்படனும்.

இந்த கோலாகலத்தில் என் பிளாக்கின் பாஸ்வேர்டே மறந்து விட்டது என நான் சொன்னால் நீங்கள் நம்ப போவதில்லை. அக்கறையோடு தனி மெயில் விசாரித்த ஆயிரம் பேருக்கும் (சொல்லிக்க வேண்டியது தான்) மிக்க நன்றி.

Wednesday, April 21, 2010

நாங்கள் இந்தியர்கள்

பொட்டி தட்டி களைத்து போன மக்கள் பஃப் பக்கம் ஒதுங்க நினைக்கும் அது ஒரு அந்தி சாயும் பெண்களூர் மாலை நேரம். ஷாரூக்கானே தன் பணத்தை முதலீடு செய்திருப்பதாக சொல்லபடும் அந்த வங்கியின் பிரதான கிளை அமைந்து இருக்கும் எம்.ஜி ரோடில் வலதுபுற ஓரமாக நடந்து வந்தேன். ரெண்டு துரைசாரினிகள் ஒருவருக்கு முப்பது இருக்கலாம், அருகில் இருப்பது அவரது மகள் பன்னிரெண்டு வயதிருக்கலாம். அந்த டிராபிக் நிறைந்த சாலையை வலபுறமிருந்து இடபுறம் கடக்க நாலு முறை முயற்சி செய்து தோற்று விட்டனர்.

என்னைப் பார்த்ததும் அந்த அம்மணிக்கு என்ன தோன்றியதோ தெரியலை, "யோவ், நீங்கள்ளாம் எப்படி தான் சாலையை கடக்கறீங்களோ?"னு கொஞ்சம் ஆச்சர்யம், கொஞ்சம் மன வெறுப்புடன் அலுத்துக் கொண்டார். முன்பின் தெரியாத ஒரு இளைஞனிடம்(நான் தான்டே!) இவ்ளோ ஜகஜமாக பேச ஒரு கட்ஸ் வேணும். நம்மூர்ல இதே வேலைய நாம செஞ்சு இருந்தா ஊர்ல இருக்கற அப்பாவ இங்க இருந்தே கூவி அழைத்து, கும்மி இருப்பார்கள். அப்படி அலுத்துக் கொண்ட அடுத்த ரெண்டு நொடிகளில் தனது மன உளைச்சலை என்னிடம் கொட்டினதுக்கு மன்னிப்பும் கேட்டுக் கொண்டார்.

டக்குனு அந்த பெண்மணி அப்படி சொன்னதும் எனக்கும் ரோசம் பொத்துக் கொண்டு வரவில்லை. உண்மை தானே! நம்மூர்ல சிக்னல்களை, பாதசாரிகளை, ஸீப்ரா கிராசிங்குங்களை என்னிக்கு மதிச்சு இருக்கோம்..? நித்ய கண்டம் பூர்ண ஆயுசு உள்ளவர்கள் மட்டுமே இங்கு சாலைகளை கடக்க முடிகிறது. யார் எவர் மீது மோதினாலும், முதலில் யார் சவுண்டு விடுகிறார்களோ அவர்கள் நியாயம் தான் ஜெயிக்கிறது.

உங்களுக்கு ஏற்பட்ட அசெளகரியத்துக்கு மிகவும் வருந்துகிறேன், நானும் இந்த சாலையை கடக்க வேண்டும், என்னுடன் வாருங்கள், உங்களுக்கு என்னால் உதவ முடியும் என நினைக்கிறேன். நீங்கள் எந்த நாட்டை சார்ந்தவர் என நான் தெரிந்து கொள்ளலாமா..?

நாங்கள் ஜெர்மனியை சேர்ந்தவர்கள்.

(ஜெர்மானியர்கள் கொஞ்சம் முன்கோபிகள் என்பது உண்மை தான் போலும்)

டிராபிக் கான்ஸ்டபிள் வண்டியை நிப்பாட்ட கை காட்டுவது போலவே நாங்கள் மூனு பேரும் கை காட்டியபடியே அந்த சாலையை ஒரு வழியாக கடந்தே விட்டோம். அந்த பெண்மணிக்கு மகிழ்ச்சி தாங்க வில்லை. கிரேட்! கிரேட்! என நாலைந்து முறை சொல்லி விட்டார். பாவம், ரெம்ப அடி வாங்கி இருப்பாங்க போல.

என் பெயரை கேட்டு தெரிந்து கொண்டு மிக சரியாக தப்ப்பாக உச்சரித்து விட்டு நன்றி சொல்லி கிளம்பினார்கள்.

ஹர்ஷர் காலத்தில் வந்த சீன யாத்ரீகர் யுவாங்-சுவாங்கும், மெகஸ்தினசும் தமது இந்திய பயண கட்டுரைகளில் இந்தியர்களை, இங்குள்ள வளங்களை வியந்து பாராட்டி எழுதியுள்ளனர். இந்த ஜெர்மானிய பெண்ணும் தனது இந்திய பயணத்தை பற்றி ஜெர்மனிலோ, ஆங்கிலத்திலோ பதிவு எழுதலாம். ஒரு வேளை நீங்கள் அதை படிக்க நேர்ந்தால், "உனக்கு உதவியதும் ஒரு இந்தியன் தான்!" என தைரியமாக பின்னூட்டமிடுங்கள்.

பி.கு: ஐஸ்லாந்தில் எரிமலை குமறியதால் தான் நான் பதிவெழுத தாமதமாகி விட்டது என சொன்னால் நீங்கள் நம்ப போவதில்லை. அடுத்த பதிவு கொஞ்சம் சீக்ரமாகவே வரும்.

Monday, March 15, 2010

கொசுத் தொல்லைகள்

சென்ட்ரலிலிருந்து வேளச்சேரி வரை செல்லும் மின் தொடர் வண்டி யாருக்கு உபயோகமா இருக்கோ எனக்கு தெரியாது, என் தங்கமணி பிறந்த வீட்டுக்கு (அதான் என் மாமியார் வூட்டுக்கு) செல்ல ரொம்பவே சவுகரியம். ஆனால் இந்த மார்க்கத்தில் பயணம் செய்ய தங்கமணிக்கு உடன்பாடில்லை. (உடன்பாடில்லாததால் தான் அவுக தங்கமணி).

காரணம் ரொம்ப சிம்பிள். அதிகாலை ஐந்தரை மணிக்கு நாங்கள் சென்னைக்கு வந்திறங்கி பார்க் ஸ்டேஷனில்(வேளசேரி மார்க்கம்) ஏதோ கள்ள கடத்தல் பண்ண வந்த கஜா மாதிரி ஆளுக்கு ஒரு பையுடன் ஆறு மணி வரை காத்திருக்க வேண்டும். நாம் கொஞ்சம் கண்யர்ந்தால் அங்கிருக்கும் கொசுக்கள் அலேக்காய் தூக்கிக் கொண்டு போய்விடும். கொசு கடிச்சா மலேரியா வரும் சாத்தியங்களும் உண்டு என்பது அம்மணியின் வாதம்.

பார்க் ஸ்டேஷனில் இருந்து மவுண்ட் ஸ்டேஷன் மார்க்கமாய் போற ரயில் மட்டும் நேரே என் மாமியார் வீட்டு மாடியில் போய் நிற்கப் போவதில்லை. அங்கிருந்தும் பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்பக் காவடி எல்லாம் எடுத்து தான் மாமியார் வீட்டை அடையனும். (ஒரு புஃளோவுல ரொம்பவே உளறிட்டேனோ..?)

ஐந்தரை மணி நிசப்தமான சூழலில் நாம் இருவர் மட்டும் ஒரு பிளாட்பார பெஞ்சில் அமர்ந்தபடி, மெல்ல புலரும் இந்த சென்னையின் காலைவேளையை அனுபவிக்க, வேளச்சேரி மார்க்கமல்லவோ சிறந்த இடம்! என நான் போட்ட பிட்டுகள் எதுவும் பலிப்பதில்லை.

சம்பவம் நடந்த அன்று ஏதோ ஒரு தேவதை ஆசிர்வதிக்க என் பிட்டு பலித்தே விட்டது. சம்பவம் என்ன?னு பதிவின் முடிவில் சொல்வேன். (உடனே ஸ்க்ரோல் பண்ண வேண்டாம்).

வழக்கம் போல கொசுக்கள் தங்கள் வேலையை காட்டத் தொடங்கிய நேரத்தில் தான், அந்த நால்வர் அணி தொலைவில் இருந்து எங்களை பாத்து விட்டு மெதுவாக நெருங்கியது. மெகா சீரியலா இருந்தா இந்த இடத்துல தொடரும்னு போட்டு இருக்கலாம், இங்க போட்டா நீங்க என் முதுகுல நாலு போட்ருவீங்கன்னு எனக்கு தெரியும்.

மைலாப்பூர் ட்ரேயினுக்கு இந்த பக்கம் தானே நிக்கனும்?னு அவர்களில் ஒருவன் மங்கிலத்தில் கேட்டான். மலையாளமும் ஆங்கிலமும் கலந்தா மங்கிலம் தானே?
ஆமாம்னு நான் சொல்லி சரியாக அஞ்சாவது நிமிடத்தில் ரயில் வந்து சேர்ந்தது. அவர்களுக்கு என்ன தோணியதோ, நாங்கள் ஏறிய அதே பெட்டியில் ஏறி எங்களுக்கு பக்கவாட்டு சீட்டில் அமர்ந்து கொண்டனர். ஒருத்தன் மட்டும் என் எதிர்புற சீட்டில் அமர்ந்து என்னிடம் பேச்சு குடுக்கத் தொடங்கினான்.

மைலாப்பூர் ஸ்டேஷன் எப்போ வரும்..?

இன்னும் சரியாக இருபது நிமிஷத்தில்...

ஸ்டேஷன் வந்தால் கொஞ்சம் சொல்ல முடியுமா?

கண்டிப்பாக.

நீங்கள் எல்லாரும் கேரளாவா?

ஆமா.

கேரளாவுல எங்க?

எனக்கு கோட்டயம், அவங்களுக்கு ஆலப்புழா.

ஒஹோ! மைலாப்பூர் சுத்தி பாக்க வந்தீங்களா?

இல்ல, ஒரு வங்கி தேர்வுக்காக வந்தோம். (Not only for Big boys - விளம்பரம் வருமே! அந்த வங்கி தான்). நாங்க எல்லாருமே ஒரே காலேஜ்.

வெரிகுட். இத மாதிரி போட்டி தேர்வுகள் எழுதினா தான் ஸ்டூடன்ஸுக்கு ஒரு நல்ல எக்ஸ்போஷர் கிடைக்கும்! - மையமாய் உளறி வைத்தேன்.

உங்க காலேஜ் பேரு என்ன?

சொன்னான்.

கோ-எஜுகேஷனா?

ஆமா.

இந்த கேள்வியோடு நான் சும்மா இருந்து இருக்கலாம். விதி வலியது.

உங்க கிளாஸ்ல இருந்து வெறும் நாலு பேர் தான் தேர்வு எழுத வந்தீங்களா?

(கேள்வியின் உள்ளர்த்தம் புரிந்து, சத்தமில்லாமல் தங்க்ஸ் என் காலை நறுக்குனு மிதிக்க நானும் சத்தமில்லாமல் கத்தினேன்).

இல்ல, மத்தவங்களுக்கு தி.நகர் சென்டர். என் மாமியார் வீடு தி.நகர்லயே இருந்து இருக்கலாம்.

கிளம்பும்போது தான் அந்த பையன் ஒரு வெடிகுண்டு வீசினான்.

உங்க ஹெல்ப்புக்கு ரொம்ப தாங்க்ஸ் அங்கிள்!

சட்னி, சாம்பாரோட பிரேக்பாஸ்டுக்கு பதினஞ்சு இட்லி திங்கற மாதிரி இருக்கும் உனக்கு நான் அங்கிளா? கர்ர்ர்ர்ர்.

தங்கமணிக்கு பரம சந்தோஷம். சாலமன் பாப்பையா சன் டிவியில் வராமலயே அந்த நாள் இனிய நாளானது.

எதை பாத்து அங்கிள் என விளித்தான்?

1) பத்து வார்த்தைகள் பேசும் இடத்தில் இப்போதெல்லாம் ரெண்டு அல்லது மூனு வார்த்தைகள் நிதானமாக பேசும் என் அணுகுமுறையா?

2) ஷேர், மியூச்சுவல் பண்டுகள் என தேடிய என் கண்கள் லைஃப் இன்ஷூரன்ஸ், ரிடையர்மென்ட் பிளான்களையும் இப்போது பார்கின்றதே.

3) இரண்டு முறை சாலையை இடம் வலமாக பார்த்துவிட்டு சட்டுனு கடந்து விடுகிற நான் இப்போதெல்லாம் அதிக நேரம் எடுத்துக் கொள்கிறேனே?

4) திண்டுக்கல்லு! திண்டுக்கல்லு! பாடலில் அருமையாக நடனமாடும் அந்த காமெடி நடிகரின் பெயர் கருணாஸ்! என நினைவுக்கு கொண்டு வர அரைமணி நேரம் பிடித்ததே! (அதே பாடலில் கருணாஸுடன் ஆடும் அந்த நடன நாரியின் பெயரும் இன்றுவரை எனக்கு தெரியாது. எனவே முடிந்தால்...)
எனக்குள் ஒரே சிந்தனையோட்டம்.

"Am I getting old..?" - சில கேள்விகள் கேள்விகளாகவே இருப்பது தான் நல்லது. :)

பி.கு: இப்போதெல்லாம் நான் வேளச்சேரி மார்க்கமாக பயணிப்பதை அவ்வளவாக விரும்புவதில்லை. கொசு கடிச்சா மலேரியா வருமாமே..?

Wednesday, March 10, 2010

உலக இணைய தமிழ் மாநாடு

நான் வழக்கம் போல ஆபிசில் பிசியா(?!) வேலை பாத்துக் கொண்டிருக்கையில் தோழர் ஒளி என்பவரிடமிருந்து ஒரு மின்மடல்.

உலக தமிழ் மாநாடு நடக்க இருக்கிறது. அதில் உலக இணைய தமிழ் மாநாடும் ஒரு சப்ஜக்ட். அவரது நட்பு வட்டத்தில் அண்ணா பல்கலை கழகத்தை சேர்ந்த ஒரு பேராசிரியையும் கலந்து கொள்கிறார்கள், இணையத்தில் எப்படி தமிழை வளக்கலாம்னு உங்களுக்கு ஏதேனும் ஐடியா தோணினா சொல்லுங்க, அதை எல்லாம் அந்த மாநாட்டில் தொகுத்து உங்கள் குரலும் ஒலிக்கலாம் என்பது தான் அந்த மின்மடலின் சாரம்சம்.

அதை பாத்ததும் முதலில் எனக்கு மகிழ்ச்சி, ஆனா லேசா சந்தேகம். நம்மை வெச்சு யாரேனும் காமெடி கீமெடி எதுவும் பண்றாங்களோன்னு லேசா ஒரு டவுட்டு.

பின்ன, என்ன மாதிரி பிஸ்கோத்து பதிவரை எல்லாம் மதிச்சு இப்படி யாரு மெயில் அனுப்புவாங்க? நெஜமாவே எனக்கு தான் மெயில் அனுப்பினீங்களா?ன்னு வாய் விட்டு தோழர் ஒளியிடம் கேட்டு விட்டேன். ஆமா!ன்னு அவர் உறுதியா சொன்னதுக்கு அப்புறமா கொஞ்சம் அவகாசம் குடுங்க, மெயிலிடுகிறேன், அல்லது பதிவா போட்டறேன். அப்படியே நம்ம மக்களும் தங்கள் கருத்துக்களை பின்னூட்டமா போடுவாங்க (அப்படியே போட்டுட்டாலும்). நீயா? நானா? கோபி மாதிரி எல்லாத்தையும் நான் தொகுத்து தரேன்னு சொல்லிட்டேன்.

எனக்கு தோணின சில பாயிண்டுகள்:

1) என்ன தான் நாம இங்க்லீஸ்ல பீட்டர் விட்டு பதிவெழுதினாலும் தம் தாய் மொழியில் சொல்வதையே நம் மனம் விரும்பும். தமிழை தாய் மொழியா கொண்டவர்கள் கூட, இப்பல்லாம் வரும்! ஆனா வராதுங்கற மாதிரி, பேச தெரியுது, ஆனா படிக்க எழுத தெரியாதுன்னு ஒரு நிலை மெல்ல உருவாகி இருக்கு.

இந்த நிலை மாறனுமா இணையத்தில் தமிழிலும் எழுத நிறைய்ய பேர் முன் வரனும். முதலில் தப்பு தப்பா தான் வரும். காலப் போக்கில் திருத்திக்கலாம். எனது முதல் ஐந்து பதிவுகள் ஏகப்பட்ட எ-பிழையோட தான் இருக்கு. பழசை மறந்திட கூடாதுன்னு இன்னமும் அப்பதிவுகளை அப்படியே தான் விட்டு வெச்ருக்கேன்.

2) பிற மொழி கலப்பில்லாம எழுத பழகனும். அதுக்காக காப்பியை கொட்டை வடி நீர்ன்னும், ஐஸ்க்ரீமை பனிக்கூழ்ன்னும் ரொம்ப செந்தமிழில் செப்பவும் வேண்டாம். இப்ப இந்த பதிவுலேயே எத்தனை ஆங்கில வார்த்தைகள் இருக்குன்னு ஒரு நிமிஷம் எண்ணி பாருங்க (ஆபிஸ், பிசி, ஐடியா, சப்ஜெக்ட்). இதையெல்லாம் தவிர்க்கலாம் தானே..? :)


3) இணைய தமிழில் தொழில் சார் பதிவுகள் இன்னும் நிறைய்ய வரனும். சொல்ல போனா ஒரு சதவீதம் கூட அப்படிபட்ட பதிவுகள் வரலை என்பது தான் நிதர்சனம். அப்ப தான் தொழில் சார் கலைச் சொற்கள் நிறைய்ய வரும், அட மக்கள் யோசனையாவது செய்வாங்க. ஊடகங்கள் முக்யத்துவம் தருகிற அதே மாதிரி நிகழ்வுகளுக்கு இங்கயும் பதிவுகளா முக்யத்துவம் தந்து எழுதறது எந்த வகையில் நியாயம்? என்பது அவரவர் மன சாட்சியை(அப்படினா?) கேட்டுக் கொள்ளட்டும்.

4) இன்று எங்க பாத்தாலும் பெயர்ப் பலகைகளில் ஒரே தமிங்கலம் தான்.

XYZ ட்ரேடிங்க் ஏஜென்சிஸ்
XYZ டிம்பர் டிப்போ
XYZ மெக்கானிக் ஷாப்
XYZ என்டர்ப்ரைசஸ்
XYZ மெர்சண்ட் ஷாப்
XYZ ஸ்டேஷனரி ஷாப்

.......இப்படி சொல்லிண்டே போகலாம். இணையத்தில் எழுதுபவர்கள் இந்த மாதிரி சொற்களுக்கு தகுந்த தமிழ் சொற்களை பயன்படுத்தலாம். தெரிஞ்ச கடை முதலாளியா இருந்தா நயன்தாரா படத்துக்கு கீழே உங்க கடை பெயரை தமிழிலேயே எழுதுங்க அண்ணாச்சி!னு சொல்லிப் பாக்கலாம். அவரும் நயன் ரசிகரா இருந்தா கண்டிப்பா நீங்க சொல்றதை கேப்பாரு.

5) இணையத்தில் கதை எழுதுபவர்கள் "ஆஃவ்சம்"(awesome) என்பதை அற்புதம்! என்றே எழுதலாம். கதை அமெரிக்காவுலயே நடக்கறதா இருந்தாலும் மொழி நடை மாறாமால் தமிழிலேயே எழுத முடியும். ரா.கி ரங்க ராஜனின் மொழிபெயர்ப்புக் கதைகள் இதற்கு சரியான உதாரணம்.

இவ்ளோ தான் என் மண்டைக்கு தோணியவை. உங்களுக்கு இதை விட நல்ல ஆக்கங்கள் தோணலாம், கண்டிப்பா அதை (இந்த முறையாவது) இங்க சொல்லுங்க.

Monday, March 01, 2010

தலாய் லாமா வாழ்க!

சமீபத்தில் ஒபாமாவுக்கு புத்த மதத்தில் சில சந்தேகங்கள் வந்து உடனே தலாய் லாமாவை மீட் பண்ணி தன் டவுட்டை க்ளியர் செய்து கொண்டார் எனபது நமக்கு தெரிந்ததே.
தலாய் லாமா வீட்டுக்கு பால்காரன், பேப்பர் காரன், மளிகைகாரன்னு யார் பாக்கி கேட்க போனா கூட சீனாவுக்கு அடி வயிற்றில் புளியை கரைக்கும். இப்போ அமைதிக்காக நோபல் பரிசை வாங்கிய மன்னிக்கவும், பெற்றுக் கொண்ட ஒபாமாவே த-லாமாவை மீட்டினார் என தெரிந்ததும் சீனா அவசர அவசரமாக அமெரிக்க தூதுவருக்கு சம்மன் அனுப்பி காச்சு காச்சென காச்சியது.

"Tibet is an inalienable part of the inviolable territory of China, and the issues concerning Tibet are purely internal affairs of China."

அமெரிக்க தூதுவருக்கு இந்த சம்மன் எல்லாம் சாம்பார் வடை மாதிரி என்பதால் அவர் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளவில்லை. நீங்க குடுத்த டீயில் அடுத்த தடவை கொஞ்சம் ஏலக்காயை தட்டி போட்டு தாங்க, எனக்கு ரொம்ப பிடிக்கும்! என கூலாக சொல்லி விட்டு வந்து விட்டார்.

நிற்க, இதே சீனா தான் இந்தியாவின் ஒருங்கிணந்த பகுதியான அருணாச்சல பிரதேசத்து பாறை, குட்டி சுவர்களில் "சீனா வாழ்க!", "இதுவும் சீனா தான்!" என கிறுக்கி வைத்தது. நாம சீனா தூதுவரை கூப்பிட்டு காய்ச்சினோமா? என்றால் இல்லை என்பது வருத்தமான செய்தி. நமது பிரதமர் தந்து கூட்டணி கட்சிகளிடம் ஒரு யோசனையாவது கேட்டு இருக்கலாம்.

அப்படி கேட்டு இருந்தால் உடனே மாநில கட்சிகளின் கிளைகள்- அருணாச்சல பிரதேசத்தில் துவங்கி இருக்கலாம். அங்கு நடக்கும் தேர்தலில் மாநில கட்சிகளும் போட்டியிட்டு இருக்கும்.


"வருங்கால முதல்வரே வருக!" "எதிர்கால அருணாசல பிரதேசமே வருக!"னு எல்லா சுவர்களிலும் நாம பெயிண்ட் அடிச்சு இருக்கலாம்.

தினமும் ஒரு வட்ட செயலாளர், மாவட்ட செயலாளர்னு எப்பவுமே அந்த மாநிலம் பிசியாக இருக்கும்.

பிரசார கூட்டங்கள் என் வந்து விட்டால் நம்மூர் பேச்சாளர்களின் திறமைக்கு ஒரு அளவே கிடையாது. நாலு முக்கு சேருகிற இடத்தில் ஒரு மேடையை போட்டு "பீஜிங்கும் இந்தியாவின் ஒரு பகுதி தான்!" 2016ல நாங்க தான்டா பீஜிங்கில் ஆட்சி அமைப்போம்! என போகிற போக்கில் சொல்ல வைத்து விடலாம். என்னடா இது? முதலுக்கே மோசமாயிடும் போல!ன்னு சீனா கப்சிப்னு அடங்கிடும்.

தமிழகத்தின் ஒரு கட்சி அங்க போனா மத்த கட்சிகள் சும்மா இருக்குமா? அருணாசல பிரதேசத்து குழாய்களில் தண்ணி வரலை, கக்கூஸ் இல்லைனு தினமும் ஏதாவது ஒரு போராட்டம் நடத்தலாம். இத்தனை நாளா எல்லாப் பயலும் சும்மா தானே இருந்தாங்க, தீடீர்னு எப்படிடா இவ்ளோ கூட்டம்னு சீனா மண்டைய பிச்சுக்கும்.


இதெல்லாம் சரி படலைன்னா கடைசி ஆயுதமாக, சன் பிக்சர்ஸ் தலாய் லாமாவை வைத்து சைன மொழியில் ஒரு படம் எடுக்கலாம். அஞ்சு நிமிஷத்துக்கு ஒரு தரம் அந்த படத்தின் ட்ரேய்லரை போட்டே சைனாவை கடுப்பேத்தலாம்.


இருக்கவோ இருக்கு, தமிழக திரைப்பட விருதுகள். தலாய் லாமாவுக்கும் ஒரு விருது வழங்கலாம், ஒரே டேக்கில் எப்படி குறிப்பிட்ட காட்சியை தலாய் லாமா நடித்து காட்டினார்?னு மேடையில் அவரையே சொல்ல வைக்கலாம்.

இல்லாட்டி குறைந்த பட்சம் ஒரு கலைமாமணியாவது வழங்கலாம். அந்த விழாவையும் அருணாச்சல பிரதேசத்திலேயே வைத்து கொள்ளலாம். விழான்னு வந்துட்டா எப்படியும் கலை நிகழ்ச்சிகள் இருக்கனும். மானாட மயிலாட கோஷ்ட்டியை அங்க எறக்கினா சீனா அலறி அடித்து கொண்டு ஓடி விடாதோ?

இதைப் போல உங்களுக்கும் ஏதாவது யோசனை இருந்தால் பின்னூட்டத்தில் கும்முங்க பாப்போம்.

பி.கு: என் பதிவுகளுக்கு அடிக்கடி வந்து தொல்லை குடுக்கும் சைனா காரர்களை கடுப்பேத்தவே தலாய் லாமாவுக்கு ஆதரவாய் இந்த பதிவு.

Thursday, February 18, 2010

My Name is Ambi

சரியாக நான்கு வருடங்களுக்கு முன்பு இதே நாளில் ஒரு அதிசயம் நிகழ்ந்தது. அன்று உலகில் வழக்கத்துக்கு மாறாக பல செயல்கள் நடந்தது. தொடு வானில் விடிவெள்ளிக்கு நிகராக இன்னொரு நட்சத்திரம் ஒளிர்வதை கண்டு ஜெருசலேம் நகரத்து மக்கள் ஒன்று கூடி அதிசயித்தனர். அட்லாண்டிக் பெருக்கடலில் வழக்கத்துக்கு மாறாக பெரும் அலைகள் எழுந்ததை அமெரிக்க மீனவர்கள் இன்றளவும் நினைவு கூர்கின்றனர். நியூயார்க் டைம்ஸ் ஸ்கொயர் சதுக்கத்தில் பெரும் திரளான மக்கள் கூடி விவாதித்தன்ர். லன்டன் நகரத்து வீதிகளிலும் இதே நிலை தான்.

ரஷ்யா, அமெரிக்கா, சைனா, சப்பான், பிரான்ஸ் போன்ற வல்லரசு நாடுகள் தம்முள் இருக்கும் ஈகோவை மறந்து உடனே இந்த நிகழ்வை ஐ நா சபையில் கூடி விவாதித்தன. பிபிசி நிருபர்களுக்கு அன்று இருபத்தி நாலு மணி நேரங்கள் போதவில்லை. உலகெங்கிலும் இந்த நிகழ்வை பற்றிய செய்திகள் வந்து குவிந்த வண்ணம் இருந்தன.

மாசி மாதமென்றாலும் திடீரென கரும்மேகங்கள் சூழ்ந்து மழை வருஷித்தது. ஏதேனும் அதிசயம் நிகழ இருக்கிறதா? என கேரளாவில் பல பணிக்கர்கள் ப்ரச்னம் வைத்து பார்த்தனர். பெரும் தந்தங்களை உடைய ஆண் யானைகள் பெருங் குரலில் பிளிறின.

சரி, அப்படி என்ன நிகழ்ந்தது..?

அதற்கு முன்னால் இந்த சுட்டியை பார்த்து விடுங்கள். பக்கத்தில் மறக்காமல் வேர்க்கடலை பாக்கெட் வைத்துக் கொள்ளவும், (இந்த பக்கத்தில் உள்ள வீடியோ லோட் ஆக நேரமாகும், அதுவரைக்கும் கடலையை...)

சுட்டி அனுப்பிய தானைத் தலைவி ராப்புக்கு மிகவும் நன்றி.




ஹிஹி, நான் பிளாக் ஆரம்பித்து இன்றோடு நான்கு வருடங்கள் ஆகி விட்டது. அது தான் அந்த நிகழ்வு. :)

உங்கள் தற்போதைய மன நிலையை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. நாலு வரியில் இதை சொல்லி, கமண்டு போட்டவர்களுக்கும், கமண்டு போடாமல் முக்காடு போட்டு படிப்பவர்களுக்கும் நன்றினு சொன்னா சப்புனு இருக்காது? அதான் இவ்ளோ பில்டப்.

இதே சோலியை தான் கரண் ஜோக்கரும்(எ-பிழை இல்லை), ஷாருக் கானும் செய்திருக்கிறார்கள். போதா குறைக்கு சிவசேனையின் பால் தாக்ரே கையில் பசை வாளியுடன் மும்பை நகர வீதி சுவர்களில் போஸ்டர் ஒட்டாத குறையா இந்த படத்துக்கு அரும்பணியாற்றி இருக்கிறார். அன்னாருக்கு எங்கள் மனமார்ந்த நன்றினு படம் ஆரம்பிக்கும் போது ஒரு ஸ்லைடு காண்பித்து இருக்கலாம். மற்றபடி இந்த படத்தை விமர்சனம் செய்து உங்கள் நேரத்தை வீணடிக்க விரும்ப வில்லை.

இந்த நாலு வருடங்களில் நீங்கள் காட்டிய ஆதரவுக்கு மிகவும் நன்றி.

Tuesday, February 09, 2010

கலைமகள்

பொதுவா சில பத்திரிகைகள் பெயரை கேட்டாலே நமக்குள் ஒரு மரியாதை உருவாகுவதை தவிர்க்க இயலாது. கல்கி, கலைமகள் போன்ற சஞ்சிகைகள் தனகென்று ஒரு தரம், வாசகர் வட்டம் வைத்துள்ளது. பத்திரிகை தர்மத்தை ஒரு போதும் விட்டு குடுக்காமல், சீப்பான மார்கெட்டிங்க் டெக்னிக் எதுவும் பண்ண தெரியாமல் காமராஜர் காலத்து காங்கிரஸ் போல இன்னமும் கம்பீரமாக வெளிவந்து கொண்டிருக்கிறது என சொன்னால் அது மிகையல்ல.

ஒரிரு முறை பள்ளி பருவத்தில் கலைமகள் வாசித்து அதன் தரத்துக்கு தாக்கு பிடிக்க முடியாமல் விழி பிதுங்கியதுண்டு. நிறைய தமிழ்சொற்கள், மொழி ஆளுமை எல்லாம் வசப்பட(இன்னும் இல்லை) நல்ல பயிற்சி களமாக திகழ்கிறது.

கலைமகளில் இணைய ஜர்னலிஸ்ட்டுகளான( நாமே சொல்லிக்க வேண்டியது தான்) நம்மை பத்தி, நமது பதிவுலகத்தை பத்தி ஒரு கட்டுரை எழுத போறோம். சுருக்கமாக ஒரு குறிப்பு எழுதி, சின்னதா ஒரு போட்டோவும் அனுப்பவும்னு மெயில் வந்ததும் நான் செய்தது:


1) நம்மை வெச்சு யாரும் காமெடி கீமடி பண்றாங்களோ?னு முதலில் இமெயில் முகவரியை செக் செய்து கொண்டேன்.


2) போட்டோ எடுக்க பி.சி ஸ்ரீராம் ப்ரீயா இருக்காரா?னு கேட்டு பாத்தேன். பிசியாம். சரி விடுங்க, அவருக்கு யோகம் அவ்ளோ தான்.


பத்திரிகையில் போட்டோ எல்லாம் வரப்போகுது, எப்படி போஸ் குடுக்கலாம்? ஒரு பேனாவை மூக்கினுள் விட்ட படியே (ஆழ்ந்து யோசிக்கறாங்களாம்) ஒரு ஷாட் எடுக்கலாமா? இல்லாட்டி செல்போன் பேசியபடி ஒரு ஷாட் எடுக்கலாமா? அல்லது தலைக்கு பின்னாடி ஒரு ஜீரோ வாட் பல்ப் மட்டும் எரிய விட்டு, விட்டத்தை பாத்தபடி ஒரு போஸ் குடுக்கலாமா?னு ஒரே யோசனை.

முகத்துக்கு ஒரு ப்ளீச் செய்து போட்டோ எடுத்தால் நன்றாக இருக்கும்னு ஆபிசில் உள்ள பெங்காலி யோசனை சொன்னது. "பேஷியல் செய்து கொண்டால் ஒரு மஜாஜ் ப்ரீ" - புதுசா ஒரு மலபார் பியூட்டி பார்லர் நம்ம ஏரியாவுல கடை தொறந்ருக்கான். கடையும் கண்ணுக்கு குளிர்ச்சியா, நல்லா காத்தோட்டமா இருக்கு. நான் ஒரு நடை போயிட்டு வரேன்னு நைச்சியமாய் நான் சொன்னதையெல்லாம் மேலிடம் காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை. கேரளா என்றவுடன் பார்ட்டி உஷார் ஆகி விட்டது.


பின் ஒரு முடிவுக்கு வந்து எந்த போட்டோவை தங்கமணிக்கு முதன்முதலில் அனுப்பினேனோ அதே போட்டோவையே கொஞ்சம் டச்சப் பண்ணி அனுப்பி வைத்தேன். (இங்குள்ள படம் பிடிஎப் கோப்பிலிருந்து எடுத்தது, எனவே படத்தின் குவாலிட்டி கம்மியா தான் இருக்கும், ஆகவே யாரும் நமுட்டு சிரிப்பு சிரிக்க வேண்டாம்.)



வகுப்பறை ஆசான் சுப்பையா வாத்தியார், துளசி டீச்சர், ரிஷான் ஷெரீப் போன்ற பெரிய பெரிய்ய ப்ரைம் டைம் ஜாம்பவான் வித்வான்களுக்கு இடையில் கமர்ஷியல் ப்ரேக் போல என் பதிவு பற்றியும், என் உள்ளங்கவர் கேசரி பற்றியும் கட்டுரை வந்துள்ளது. முழு கட்டுரையையும் வாசிக்க சொந்த காசிலோ, ஓசியிலோ இந்த மாத கலைமகள் வாங்கி படியுங்கள்.


அடுத்த மாத இதழில் இன்னும் பெரிய பெரிய்ய ஆட்கள் பத்தி எல்லாம் வரப் போகுது. அந்த சஞ்சிகை ஆசிரியருக்கு என் மனமார்ந்த நன்றிகள். இந்த கட்டுரை தொடர்பாக பாராட்டு கடிதம் ஏதும் தப்பித் தவ்றி வந்தால் உங்களுக்கும் தெரிவிக்கிறேன்.

Thursday, January 07, 2010

என்னது? இயக்குனர் ஷங்கரும் வலைபதிவரா?

முதல்ல எனக்கும் ஆச்சர்யமா தான் இருந்தது. எந்திரன் படத்தை பத்தி விரிவாக ரசிகர்களுடன் விவரிக்க வலைதள்ம் ஒரு நல்ல மீடியம் என அவரும் ஜோதியில் ஐக்கியமாகி விட்டாராம். ஏற்கனவே அமிதாப், அமீர்கான் எல்லாரும் சொந்த வலைதளம் இருக்கு. இப்பதான் ஷாரூக் டிவிட்டர்ல அக்கவுண்ட் (உபயம் கரண் ஜோ(க்)கர்)தொடங்கி இருக்கார். மத்திய அமைச்சர் சஸி தரூர் டிவிட்டர்ல அடிக்கற கூத்தை பத்தி நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை. டிவிட்டரின் கைபுள்ள இவரு தான்.

இவ்ளோ ஏன், நம்மூர் எஸ்.வி.சேகர், துணை முதலமைச்சர் ஸ்டாலின், 'ஸ்பெக்ட்ரம் புகழ்' ராசா இவங்களுக்கும் வலைதளம் இருக்கு. (ஏடாகூடமா கமண்ட் போட்டா ஆட்டோ அனுப்புவீங்களா சார்?).

ஷங்கரின் வலைதளம் சில துளிகள்:


தளத்தை அவர் மனதுக்கு பிடித்த கருப்பு கலரில் வடிவமைத்து இருக்கிறார்கள். (கருப்பு தான் ஷங்கருக்கு புடிச்ச கலரு).

எந்திரன் படபிடிப்பு தொன்னுறு சதவீதம் முடிந்து விட்டதாம். (தயவு செய்து சன் டிவியில் ட்ரைலராவது ஓட்டுங்க, வேட்டைகாரன் ட்ரைலர்(ரே) தாங்க முடியல)

இப்போதைக்கு ஆங்கிலத்தில் தான் வலை பதிகிறார். (என்னா சார்?)

இன்னும் தமிழ்மணம், தமிழிஷ் பட்டையெல்லாம் நிறுவவில்லை. ( நிறுவி பாருங்க, அப்புறம் தெரியும் சங்கதி)

துரத்தி துரத்தி பாலோயர்கள் எல்லாம் பிடிக்கவில்லை. அட! ஹிட் கவுண்டர் கூட போடலை.

முதல் பதிவுக்கு 439 கமண்ட் விழுந்து உள்ளது. அதில் பத்து தான் அவரது.

எல்லா கமண்டுக்கும் தனிதனியா பதில் போட்டு கமண்ட் எண்ணிக்கையை கூட்ட தெரியவில்லை.

அஜீத்தை வைத்து ஏன் நீங்கள் படம் பண்ண வில்லை? என உரிமையோடு ஒருவர் கேட்டு உள்ளார். (ஏய்! அது.)

நம்ம பதிவர்கள் சிலரும் அங்க போய் தங்கள் கைவரிசையை காட்டி இருக்கிறார்கள். (அதானே! எவ்வளவோ பண்ணிட்டோம், இத பண்ண மாட்டோமா?).

எல்லா கேள்விகளுக்கும் பதிலளிக்கவில்லை. சூசகமான, நேர்த்தியான கேள்விகளுக்கு மட்டும் நம் பெயரை சொல்லியே பதிலளிக்கிறார். (யதேச்சதிகாரத்தின் உச்சதில் இருந்து பூர்ஷ்வாத்தனமாக பதிலளிக்கும் டைரக்டர் ஷங்கருக்கு பத்து கேள்விகள்.... எதிர்வினை ஆத்த ஒரு தலைப்பு ரெடி).


ஐஸ் குட்டிக்கு கேசரி பிடிக்குமா?னு நான் கூட ஒரு கேள்வி தயார் பண்ணிட்டு தங்கமணி அப்ரூவலுக்காக அனுப்பி உள்ளேன். அனுமதி கிடைத்தால் ஷங்கருக்கு அனுப்புவதாக உத்தேசம். எனக்கு நம்பிக்கை உள்ளது.

அடுத்த பதிவர் மீட்டுக்கு காந்தி சிலைக்கு கீழே சாருவை அழைத்தது போலவே ஷங்கரையும் அழைக்கலாம். யாரு கண்டா? ரஜினியும் அவர் கூட வரலாம். :)

இவ்ளோ சொல்லிட்டு அவர் வலை தள் முகவரி சொல்லலைனா எப்படி? இந்தாங்க

அங்க போய் அம்பி தான் உங்க வீட்டு அட்ரஸ் குடுத்தான்னு கமண்டு போடுபவர்களுக்கு எந்திரன் படத்தில் ஐஸ் குட்டிக்கு முறை மாமன் ரோல் கிடைக்குமாம். :)

Monday, January 04, 2010

சந்தோஷம் பொங்குதே!

கல்யாணம் ஆகி கடந்த ரெண்டு வருஷத்தில் இப்படி ஒரு புத்தாண்டை நான் எதிர்கொள்ளவேயில்லை. இந்த முறை புத்தாண்டு ரொம்பவே வித்யாசமாய், விசேஷமாய், குதூகலமாய் அமைந்தது என மெய்மறந்து நான் சொல்ல நினைத்தாலும் கடந்த கால வரலாறு கற்றுக் கொடுத்ததை எண்ணி அடக்கி வாசிக்கிறேன். சரி, பீடிகை போதும்.

தங்கமணி டிசம்பர் கடைசி வாரம் என்னை தனியே விட்டு விட்டு பிறந்த வீட்டுக்கு சென்று விட (இல்லை, டீவி சீரியலில் வருகிற மாதிரி புருஷன் கொடுமையெல்லாம் ஒன்னுமில்லை) எனக்குள் ஷெம்பெய்ன் பாட்டிலை ஒப்பன் பண்ணியது போல, கழுத்துப் பட்டை செயினை அவுத்து விட்டதும் ஒரு வித மகிழ்ச்சியுடன் துள்ளி குதித்து ஓடும் நாய் போல, ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி. அதெல்லாம் வார்த்தைகளில் வர்ணிக்க முடியாது. கண்டவர் வின்டிலர் மாதிரி தான் இதுவும்.

சட்டுனு வெளிகாட்டினா தங்க்ஸ் பிரோக்ராமை கான்சல் செய்துவிடக் கூடிய அபாயங்கள் இருந்ததால் நிர்மலமான முகத்துடன் வளைய வந்தேன்.
நீங்க குக்கர் வெச்சா சாதம் குழஞ்சு கஞ்சி மாதிரியில்ல வரும்?
ஒரு வாரம் சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவீங்க? போன்ற கிடுக்குபிடி கேள்விகளுக்கு எல்லாம் லாவகமாய் தப்பினேன்.

சாப்பாடா முக்யம்? இப்ப என்ன, சாம்பார் வெச்சா ரசம் மாதிரி வரபோகுது. சாதம் கெட்டியா தான் இருக்கனும், இப்படிதான் சாம்பார் இருக்கனும் என்ன கோபன் ஹேகன்ல தீர்மானமா இயற்றி இருக்கு..?

திடுதிடுப்புனு கிச்சனுக்குள் நுழைந்தால் அலிபாபா குகை மாதிரி தான் இருக்கும். எப்படியும் தேடி கண்டுபிடிச்சுக்கலாம். என்ன ஆனாலும் புளி எங்க இருக்கு? பருப்பு எங்க இருக்கு?னு போன் பண்ணி கேட்க கூடாது. இந்த முறை தீர்மானமாய் இருந்தேன்.

"கொடுத்ததெல்லாம் கொடுத்தான்,
அவன் யாருக்காக கொடுத்தான்?"

"யார் தருவார் இந்த அரியாசனம்?"

மனதினில் கன்னாபின்னாவென சிச்சுவேஷன் சாங்க் வந்து விழுகிறது.

எப்படியும் ப்ரீயா தானே இருப்பீங்க, இதையெல்லாம் முடிச்சு வைங்க. ஒன்னரை முழத்துக்கு ஒரு லிஸ்ட் நீளுகிறது.

ப்பூ இவ்ளோ தானா? தொலைஞ்சு போறது. எவ்வள்வோ பண்ணிட்டோம், இத பண்ண மாட்டோமா?

ஒரு வாரம் தங்கு தடையில்லாமல் கிரிகெட் மாட்ச் (ஹைலேட்ஸ் உட்பட) பாக்கலாம். ஜிடாகில் பழைய நண்பர்களுடன் வம்பளக்கலாம்.

"சொல்லில் வருவது பாதி!
நெஞ்சில் தூங்கி கிடப்பது மீதி!!"

இந்த பதிவை படித்துவிட்டு, கமண்டாமல் நீங்கள் நழுவுகிற நேரத்தில் இதோ ஒரு வாரம் முடிய போகிறது.

அந்த நாளும் வந்திடாதோ? (இல்ல சும்மா பக்த மீரா பாடலை பாடினேன் அவ்ளோ தான்).

எல்லோருக்கும் இனிய (தாமதமான) புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

பி.கு: அடுத்த பதிவு வர தாமதமானால் நீங்கள் அதிசயிக்க வேணாம். முடிந்தால் ஒரு பாட்டில் ஹார்லிக்ஸுடன் பதிவின் ஆசிரியரை நேரில் சந்திக்கவும். :)

Thursday, December 03, 2009

சைனாவின் மற்றுமொரு சதி

இந்த சைனாகாரன் இருக்கானே, சும்மாவே இருக்க மாட்டான். இல்ல, அவங்க மக்கள் தொகையை பத்தி நான் சொல்ல வரல. எல்லையில என்னடானா சின்ன பிள்ளதனமா பாறையில சைனானு எழுதி வைக்கறான். அருணாசல பிரதேசத்துல எல்லாருக்கும் மூக்கு சப்பையா இருக்கு, அதனால் அதுவும் எங்க இடம் தான்னு சொல்லிட்டு இருக்கான். பிராணப் முகர்ஜியும் சும்மா தாமாசு!னு சிரிச்சுகிட்டே அறிக்கை விடறாரு. எப்படியோ ஒழியட்டும்.


ஆட்ட கடிச்சு மாட்ட கடிச்சு கடைசில தமிழ் பதிவர்கள் தலையிலுமா கைய வெப்பான்? உங்க பதிவுகளில் அனானி கமண்ட் போடற ஆப்ஷன் இருந்ததுனா போச்சு! உடனே உங்க பதிவுக்கு வந்து முத்து முத்தா பின்னூட்டம் போட்டுட்டு போயிடுவான். நான் கூட ரொம்ப நாளா நம்ம பதிவு சைனா கொரியா வரைக்கும் ரீச் ஆயிருக்கு போல!னு ஆனந்த கண்ணீர் விட்டுட்டு இருந்தேன்.


அவன் போட்ட கமண்ட் எல்லாம் வைரஸ்ஸாம். நிலா ரசிகனையே புலம்ப வெச்சுருக்கான் பாருங்க.


இதெல்லாத்துக்கும் ஹைலேட்டா அருமை அண்ணன், பக்கபக்கமா எழுதும் உனாதானா அண்ணாச்சியின் பதிவையே கடத்திவிட்டான். அவர் எழுதி இருக்கறத எல்லாம் கடத்தறதுக்கே சைனா காரனுக்கு மூனு நாள் ஆயிருக்குமே! அவ்ளோ எழுதி இருக்காரு அவரு.

சைபர் கிரைமில் புகார் குடுத்தாரா? அப்படியே குடுத்தாலும் ஏதோ கிணத்தை காணல!னு வடிவேலு குடுத்த மாதிரி என் பிளாக்கை காணலை!னு சொன்னா புகாரை எடுத்துப்பாங்களா? ஒன்னும் புரியலை.

சமீபத்தில் பாண்டிசேரி அமைச்சர்களின் தீனிப் பழக்கத்தை எதிர்த்து ஒரு பதிவு போட்டு இருந்தாரு(பாருங்க, அவரு பதிவுக்கு லிங்க் கூட குடுக்க முடியலை இப்போ). ஒரு வேளை இது அரசியல் காழ்ப்பின் காரணமாக இருக்குமோ? என்ற கோணத்திலும் சைபர் போலிஸ் விசாரிக்க வேண்டும்.

இதற்கு பதிலடியாக சைனாகாரனை எதிர்த்து உடனே பதிவர்கள் எல்லாரும் எதிர்வினை ஆத்தி பதிவு போடனும். முடிஞ்சா அவன் பிளாக்குல போய் நாம தமிழ்ல கமண்ட் போட்டுட்டு வரலாம்.

கொஞ்சம் சீரியசா சொல்லனுமா:

1) எல்லாரும் உடனே தங்கள் பதிவை பேக்கப் எடுத்துக் கொள்ளவும். ( நிலா ரசிகன் விரிவா விளக்கி இருக்காரு.)

2) பின்னூட்டத்தை மட்டுறுத்தவும்.

3) மட்டுறுத்த சோம்பலா நினைக்கும் என்னைப் போன்றவர்கள் வேர்டு வெரிபிகேஷன் வைக்கவும். சைனா காரனுக்கு இங்க்லீஸ்னா அலர்ஜி என்பதை நினைவில் கொள்க. :)

4) எல்லாத்துக்கும் மேலே காக்க காக்க என் பிளாக்கை காக்க!னு பிளாகுலக குலசாமி மகர நெடுங்குழை காதனிடம் வேண்டி கொள்ளவும். :))

அவ்ளோ தான் எனக்கு தெரிஞ்சது.

Wednesday, November 25, 2009

ட்விட்டர்

நீங்க ட்விட்டர்ல இருக்கீங்களா?னு ரொம்ப நாளாகவே நெறைய பேர் என்கிட்ட கேக்கற போதெல்லாம், இல்லீங்க, கெக்ரான் மொக்ரான் கம்பெனில தான் ஆணி பிடுங்கறேனு ரொம்ப அப்பாவியா நானும் பதில் சொல்லி வந்ருக்கேன். என்னை மாதிரி ஏகபிளாக்விரதர்களுக்கு ஒன்னை கட்டியே சமாளிக்க முடியறதில்லை, இதுல உனக்கு ட்விட்டர் ஒரு கேடா?னு என் அபிமானிகள்(இருக்கீங்களா யாரும்?) துப்பிவிடும் சாத்திய கூறுகள் பிரகாசமா இருப்பதால் பேசாம தான் இருந்தேன்.

மேலும் ஆசை ஆசையாய் ஆர்குட்ல வீடு கட்டி சிலபல பழைய காலேஜ் மக்களின்(பிகர்களின்) ஏகோபித அபிமானத்தை பெற்று, வளர்ந்து வந்த நிலையில், ஒரு சபிக்கப்பட்ட ஞாயிறு நன்பகல் ரெண்டு மணியளவில் "கீழுதட்டில் வாய்ப்புண் வந்துருக்கு, என்ன செய்யனும் அம்பி? என்ற ஒரு பிகரின் ஸ்கிராப்புக்கு கர்ம சிரத்தையாய் பதில் ஸ்க்ராபிக் கொண்டிருக்கும் போது தங்கமணி நெற்றிக் கண்ணை திறக்க, அத்தோடு என் ஆர்குட் அக்கவுண்ட் பஸ்பமாகி போனது. உடனே, "தாட்சாயிணி, நன்றாக என்னை பார்!"னு எல்லாம் ஒன்னும் எகிறிக் குதிக்கலை. (ஆமா! அப்படியே குதிச்சுட்டாலும்).

நாட்டுல பல கிரிமனல் வேலைகள் எல்லாம் இப்ப ஆர்குட் வழியாத் தான் நடக்கறதாம்! அதான் நான் ஒதுங்கிட்டேன்! என தனி மெயிலில் துக்கம் விசாரித்தவர்களிடம் டெம்ளேட் மெயில் அனுப்பி ஆறுதலடைந்தேன்.

தங்கமணி கட்டிக் குடுத்த வெங்காய சாம்பாரும், உருளைகிழங்கு கார கறியையும் ஒரு கட்டு கட்டிவிட்டு, ஆபிசில் மதியம் கண் சொருகும் நேரத்தில் எல்லாரும் பீட்டர் விடும் இந்த ட்விட்டர்னா என்னனு கொஞ்சம் நோண்டிப் பாப்போம் என ஒரு நப்பாசையுடன் லேசா துருவினால் முக்காலேஅரைக்கால் பிளாகுலக மக்களும் ட்விட்டர்ல வூடு கட்டிக் கொண்டு இருக்கிறர்கள் என புரிந்தது.

  1. பல்லில் தேங்காய் துகள் புகுந்து விட்டது.
  2. குண்டூசி தேடுகிறேன்.
  3. கண்டேன் குண்டூசியை!
  4. மிஷன் இன் பிராக்ரஸ்.
  5. முடிஞ்சது சோலி!

இப்படியெல்லாம் ட்விட்டி இருக்கிறார்கள்.( நல்லா இருங்கடே!)

சிலபேர் வெண்பா பாடி இருக்கிறாகள். நமீதா பத்தி கிசுகிசு எல்லாம் ட்விட்டி இருக்கிறார்கள். சிலபேர் வெள்ளகார தொரை அவங்களுக்கு அனுப்பிய தபால் பத்தி எல்லாம் சொல்லி இருக்கிறார்கள்.

வீட்ல கரண்ட் இல்லை. டாய்லெட்ல தண்ணி வரலை. பேப்பர்காரனுக்கு பாக்கி இருக்கு.

நான் நல்லவளா கெட்டவளா?

உங்க வீட்ல நவராத்ரிக்கு என்ன சுண்டல்?

மூனார் போயி நாலு மாசமாச்சே! வீட்ல ஏதேனும் விஷேசம் உண்டா?

மாமியாருக்கு பிபி ஷுகர் எல்லாம் எகிறி விட்டதா?

இந்த ஆதி ஏன் தான் அபிய இப்படி படுத்தறானோ?

எங்காத்து அர்ஜுன் ஜுனியர் சிங்கர்ல பாடறான்.

போளி செய்வது எப்படி?(போலி இல்ல போளி, திரும்ப படிங்கடே!)

புது பதிவு போட்டால் போஸ்டர் ஒட்ட(என்னையும் சேர்த்து தான்) இதுவும் ஒரு சுவராக பயன்படுகிறது. இதுலயும் ஜிகினா வேலை காட்டுகிறர்கள் சில டெம்ளேட் ராஜாக்கள். பதிவுகளை விட, இணையத்தில் சிதறி கிடக்கும் பல சுவாரசிய தகவல்களின் லிங்குகள் டிவிட்டுகளாக வருவது நன்றாக உள்ளது. ஆனால் இங்கயும் தங்கள் அதிமேதாவித்தனத்தை பறை சாற்றும் சில ட்விட்டுகள் அயர்ச்சியைத் தான் தருகிறது.

ட்விட்டர்ல வெறும் நூத்தி நாப்பது எழுத்துக்கள் தான் எழுத முடியுமாம். உனாதானா அண்ணாச்சி எல்லாம் தன் பதிவின் தலைப்பே இவ்ளோ நீளத்துக்கு வெப்பாரு. ட்விட்டர்ல உங்களுக்கு அக்கவுண்டு தர மாட்டோம்னு அவருக்கு மெயில் அனுப்பிட்டாங்களாமே, நெஜமா? :)

தமிழ் வெர்ஷன்ல ட்விட்டர் வந்தா சிட்டுக்குருவின்னு பெயர் வெப்பாங்களா?சரி தான், இது பிளாக், ஆர்குட்டை விட வெட்டி போலிருக்கு. சீசீ, இந்த பழம் புளிக்கும். :)

Monday, November 02, 2009

ஏர்டெல் சூப்பர் சிங்கர் - ஜூனியர்

புது பதிவு போட இப்பல்லாம் ரொம்பவே மெனக்கட வேண்டியுள்ளது. எழுத நிறைய விஷயங்கள் இருந்தாலும் நேரம் வாய்க்கறதே இல்லை.

தினமும் தவறாம வந்து பார்ப்பவர்களுக்கும், இவனுக்கெல்லாம் ஏன்டா பாலோயர்களா ஆனோம்? என நொந்து கொள்பவர்களுக்கும்:

உங்களின் ஒத்துழைப்புக்கும், புரிந்துணர்வுக்கும் ரொம்ப நன்றி.(மைக் கெடச்சா போதுமே?)
***********************************************************************************
என் அருமை மகனுக்கு மியுசிக் ரொம்ப பிடிக்கறதே என்பதாலும், தங்கமணி குடுத்த குடைச்சலாலும் பேட்டரி போட்டு இசைக்கும் ஒரு பியூனோவை எங்கள் ஏரியாவில் உள்ள என் ஆஸ்தான கடையில் முடிந்த வரை பேரம் பேசி வாங்கி வந்தேன்.

ஜுனியருக்கு என்ன தோணியதோ தெரியலை, பியூனோவை கடம் மாதிரி தட்ட ஆரம்பித்து விட்டான். பின் அதை கவுத்தி போட்டு மிருதங்கமாகவும் வாசிக்க ஆரம்பித்து விட்டான். தெரிஞ்சு இருந்தா கடமே வாங்கி குடுத்து இருக்கலாம். ஒரு பியானோ தப்பித்து இருக்கும்.
***********************************************************************************
ப்ரைம் டைமில் பாடாவதி சீரியல்களுக்கு நடுவில், ஏர்டெல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி வருவதால் எங்கள் வீட்டில் ஒட்டுமொத்த ஆதரவும் பெற்று விட்டது. ஒரு மணி நேரம் ரிமோட் கன்ட்ரோலை மறந்து நாங்கள் பார்க்கும் நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்று. சீனியர்களை விட ஜுனியர் குழந்தைகள் மிக கடினமான பாடல்களை மிக எளிதாக பாடி வருகிறார்கள்.

விஜய் டிவியின் மிகப் பெரிய பலமே ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் அவர்கள் வடிவமைக்கும் கண்கவர் செட்டுகளும் ஒரு காரணம். குடுத்த காசுக்கு மேலேயே ஆர்ட் டைரக்டர் கூவி இருப்பார். (கலைஞர் டிவியில் மானாட மயிலாட நீங்கலாக( அதுவும் நமீதா வருவதால்) மற்ற நிகழ்ச்சிகளுக்கு ஏதோ கோவில் மண்டபத்தில் செட் போட்டது போல இருக்கும்.)

இந்த நிகழ்ச்சிக்கு மற்றுமொரு பலம் இப்பொழுது வாய்த்துள்ள நடுவர்கள். அதுவும் பாடகர் மனோ நிகழ்ச்சியை கொண்டு செல்லும் விதம் ரொம்பவே அருமையா இருக்கு.

சில துளிகள்:

1) பாடுகிற குழந்தைகளை விட அவர்களின் பெற்றோர் தான் ரொம்ப டென்ஷனாகிறார்கள். இந்த கொம்பு சீவி விட்டு பந்தயத்துக்கு அனுப்பும் மனப்பான்மை என்று தான் மாறுமோ?

2) ஆறிலிருந்து பதினான்கு வயது வரை என அறிவித்து இருப்பதால் மழலை மாறாத குழந்தைகளும் உள்ளன. எலிமினேஷன் என அவர்களை நோகடிப்பது மிகவும் வருத்தமிகு செயல். இதை தவிர்த்து இருக்கலாம்.

3) ஸ்பாட் செலக்ட் ஆகும் குழந்தைகள் மேல் சாக்லேட் மழை பொழிவது போல செட் செய்து இருக்கிறார்கள். எல்லாமே காட்பரீஸ், கிட்காட் என பெரிய்ய பெரிய்ய சாக்லேட் பட்டைகள். தொம் தொமென குழைந்தைகள் தலையில் விழுகிறது.

"குழந்தைகள் மீது கட்டவிழ்த்து விடப்படும் வன்முறை" என பதிவர்கள் யாரேனும் பின் நவீனத்துவமாக பதிவிடுமுன்னர், எக்லஸ், லாக்டோ கிங்க் போன்ற சின்ன சின்ன சாக்லேட் மழை பொழியுமாறு செய்தால் விஜய் டிவிக்காரர்கள் தப்பித்தார்கள். (வன்முறையில் கூட பெரிசு, சின்னதுன்னு இருக்கா? என்றெல்லாம் பதிவு வராது என நம்புகிறேன். :)

இப்பலாம் நடுவர் பேச ஆரம்பிக்கும் முன்னரே இந்த குழந்தைக்கு நல்ல குரல் வளம், செம எனர்ஜி, ரெண்டு ஸ்கேல் சுருதி கம்மியா எடுத்து இருக்கலாம், ரெண்டாவது சரணத்துல தாளம் கொஞ்சம் மாறி விட்டது! என தங்கமணி டெக்னிக்கலா பேச ஆரம்பித்து விடுகிறார்.

அதோடு விட்டா பரவாயில்லை, நீங்க என்ன நோட் பண்ணீங்க?னு என்னை கேக்கனுமா?

1) தொகுப்பாளினி வில்லு புகழ் திவ்யா ஆரம்பத்தில் கொஞ்சம் நெர்வஸ்ஸா இருந்தார். இப்ப தேறி விட்டார்.

2) பெரும்பாலும் பழுப்பு, மருதாணி கலர் என லைட் ஷேடுகளிலேயே தம் உடையை தேர்ந்தெடுக்கிறார்.

3) உடை கலருக்கு மேட்சாக லைட் ஷேட் லிப்ஸ்டிக் தான் போடுகிறார்.

4) பேசி முடித்த பின், இடது புறமாக தலையை சாய்த்து கொள்கிறார்.

5) தலைமுடியை கட் செய்து ஸ்ட்ரெய்ட்டனிங்க் செய்து இருக்கிறார்.

- என நானும் என் பங்குக்கு சில டெக்னிக்கல் பாயிண்டுகளை அடுக்கி விட்டேன். :)

Tuesday, October 06, 2009

புடவை

சார் தசரா வருது, ஒரு புடவை எடுத்து தாங்க! இப்படி உரிமையுடன் என் வீட்டில் வேலை செய்யும் லலிதா கேட்டவுடன் எனக்கு கொஞ்சம் ஆச்சர்யமாக இருந்தது.


தசரா எல்லாம் வழக்கம் கிடையாது மா! தீபாவளிக்கு தான் சீலை எடுத்து கொடுப்போம். சரியா? என பதில் குடுத்ததும் சரியென்று தலையாட்டினாலும் ஏமாற்றத்தை முகம் காட்டி கொடுத்து விட்டது. நானும் மறந்து விட்டேன்.


அதே கேள்வி. இந்த முறை என்னிடம் அல்ல, தங்கமணியிடம். கேட்டது லலிதா இல்லை, அவளின் அக்கா சரளா. லலிதா லீவு எடுத்தால் சரளா தான் சப்ஸ்ட்யூட். என்னடா இது வம்பா போச்சு? சரி, தசராவுக்கே எடுத்து குடுத்தறலாம்னு முடிவு பண்ணி தங்கமணி சகிதமா எங்க ஏரியாவுல இருக்கற ஒரு புடவை கடைக்கு போயாச்சு.


வருஷத்துல ஒரு தரம் எடுக்கறோம், நல்லதா குடுக்கனும்னு முடிவு பண்ணி, இந்த கலர் அந்த கலர்னு பாத்து, பார்டர்ல அன்னம் இருக்கா? மயில் இருக்கா? பூ போட்டு இருக்கா?, ஐந்தரை மீட்டர் இருக்கா? டேமேஜ் இல்லாம இருக்கானு எல்லாம் செக் பண்ணி மயில் கழுத்து கலர்ல ஒரு புடவை எடுத்து அதுக்கு மேட்சிங்க் பிளவுஸ் எல்லாம் செலக்ட் பண்ணி ஒரு வழியா வீட்டுக்கு வந்தாச்சு.


வீக் எண்டுல சென்னை செல்வதால், மறக்காம புது புடவையை லலிதாவிடம் குடுக்க சொல்லி தம்பியிடம் சொல்லிட்டு ஊருக்கு போய் விட்டோம். தசரா முடிந்த பிறகு மறுபடி பெங்களூருக்கு வந்தபின் ஆபிஸ், வேலைன்னு ஓட்டம் துவங்கியது.


நான் ஆபிஸ் கிளம்புமுன் லலிதா வேலைக்கு வர, என்னமா? தசரா எல்லாம் சிறப்பு தானே? என மையமாய் கேட்டு வைத்தேன்.


புடவை நல்லா இல்லை சார்! பளிச்சென்று வந்த பதில் என்னை அதிர வைத்தது. உடுத்தின அன்றே துவைத்து இருப்பாளா? சுருங்கி விட்டதா? சாயம் போய் விட்டதா? படபடவென கேள்விகள் என்னிடம் இருந்து பறக்க, கலர் நல்லா இல்லை சார்! - ரொம்பவே நிதானமாக பதில் வந்தது.

நான் எதுவும் பதில் பேசவில்லை. ம்ம், நமக்கு பிடித்த கலர் அடுத்தவங்களுக்கும் பிடிக்கும் என எப்படி எதிர்பாக்க முடியும்? வாங்கறத்துக்கு முன்னாடி அட்லீஸ்ட் உன் விருப்ப கலர் என்ன?னு ஒரு வார்த்தை கேட்டு இருக்கலாம். யதேச்சதிகார அமெரிக்க மனப்பான்மையுடன் நாமே ஒரு முடிவு எடுத்து அதை அடுத்தவர் மேல் திணிக்கும் மனோபாவம் தானே இது? (கொஞ்சம் ஓவராத் தான் போறேனோ?)

மனதில் பட்டதை பளிச்சுனு, தைரியமா சொன்ன லலிதாவின் துணிச்சல்(அல்லது அட்டிடியூட்) என்னை மிகவும் கவர்ந்தது. போன தடவை நீங்க எனக்கு குடுத்த ரேட்டிங்க், சம்பள உயர்வு விகிதம் எனக்கு சுத்தமா பிடிக்கலை! என துணிச்சலாய் என் டாமேஜரிடம் சொல்ல எனக்கு துணிவு இல்லையே? ஒரு வேளை அப்படி துணிந்து சொல்லி இருந்தால் ஏதேனும் நிகழ்ந்து இருக்குமா? தெரியலை. காலம் பல நேரங்களில் சிலர் மூலமாக பரீட்சை வைத்து விட்டு பின் பாடத்தை நடத்துகிறது.

Monday, August 24, 2009

யேர் இந்தியா

க்ரிப்டாலஜி படித்து சைடு போசில்(அப்போதைய) அரவிந்தசாமி சாயலில் இருக்கும் என்னை, இன்டர்போலுக்கு ஆலோசனை வழக்குவதற்காக என் துறைத் தலைவர் டெல்லிக்கு அனுப்பினார் என நான் இந்த பதிவை ஆரம்பித்தால் உங்களில் பலருக்கு தொண்டையில் கிச்கிச் வந்து, ஹக்க்க் என துப்பி விடுவீர்கள் என எனக்கு தெரியும்.

காலாவதியாகி விட்ட எங்கள் கம்பெனியின் பிராடக்ட் லைசன்ஸை இந்த ரிசிஷன் நேரத்தில் புதுப்பிக்கலாமா? வேணாமா? என மண்டையை தடவியபடி கிளைன்ட் யோசிப்பதற்குள், அவர்களை நேரில் சந்தித்து, எங்கள் பிராடக்டை வாங்கினால் ஈரேழு பதினாலு லோகங்களில் உள்ள செய்திகள் எல்லாம் உங்கள் லேப்டாபிலேயே அருவியா கொட்டும். உங்கள் பிசினஸில் தேனாறும் பாலாறும் ஓடும்! என அள்ளிவிடும் வழக்கமான சீப் டிரேய்னர் தன் மனைவியின் ரெண்டாவது பிரசவத்துக்கு போய் விட்டதால், பிராடக்ட் பில்டப் குடுக்க நீ தான் டெல்லிக்கு போகனும்! என என் துறை தலைவர் எனக்கு கொம்பு சீவி விட்டபடியால், நானும் வழக்கமாக எங்கள் ஆபிசில் டிக்கட் புக் பண்ணி தரும் ஹெச்ஆர் அட்மின் உதவியை நாடினேன்.

எப்பவோ எனக்கும் அவனுக்கும் நடந்த ஒரு வாய்க்கால் தகராறை மனதில் வைத்து, யேர் இந்தியாவுல மட்டும் தான் டிக்கட் இருக்கு, இந்த பிடி! என டிக்கட்டை கையில் குடுத்தான். ஏன் இப்படி?னு நான் கேட்டதுக்கு, நாம் எல்லோரும் இந்தியர்கள், எனவே இந்திய பொருளையே வாங்குவோம்! என எழுந்து நின்னு உறுதிமொழி எடுக்கறான். விஜய் மல்லய்யா கூட இந்தியர் தான்டே! என நான் சொன்னதை எல்லாம் பொருட்படுத்தவேயில்லை.

எனக்கு யேர் இந்தியாவில் டிக்கட் கிடைத்ததில் தங்கமணிக்கு அளவில்லா சந்தோஷம். உங்களுக்கு பிரேக் பாஸ்ட் ஊட்டிவிட்டு, பாட்டு பாடி, கதை சொல்லி தூங்க வைத்து பத்ரமா டெல்லியில் கொண்டு போய் விடுவாங்க! கவலையே படாதீங்க! என தங்கமணி தன் பங்குக்கு வெந்த புண்ணில் வெங்காயத்தை தடவினார். நல்லா இருடே!

உங்களுக்கு லால் பகதூர் சாஸ்த்ரியை தெரியுமா? இந்திய பிரதமராக இருந்தாரே! அவர் பிரதமராக பதவியேற்ற அதே வருஷம் யேர் இந்தியாவிலும் நிறைய்ய பேர் யேர்ஹோஸ்டஸ்ஸாக டூட்டியில் சேர்ந்தார்களாம். அதுக்கப்புறமா புது அப்பாயின்மெண்டே போடலை போலிருக்கு.

ரயிலா இருந்தா பயணிகள் சார்ட் எல்லாம் ஒட்டுவாங்க. லிஸ்ட் பாத்து அண்டை அயலார் நட்புறவை வளக்கலாம், வேற ஒன்னுமில்லை. இங்க அத மாதிரி லிஸ்ட் எல்லாம் ஒட்ட மாட்டாங்க போல. பிளைட்டில் அவ்வளவாக கூட்டமில்லை. பக்கத்து சீட்டில் ஆள் அமைவதெல்லாம் இறைவன் குடுக்கும் வரம்! என உறுதியாக சொல்வேன். என்ன தான் யேர் இந்தியாவில் டிக்கட்டை கிழித்து குடுத்தாலும், அன்னிக்கு கடவுள் ரொம்பவே கருணை காட்டி இருந்தான். குதிரை வால் கொண்டை, காதில் பிளாட்டினம் ரிங்க், டெனிம் டி-ஷர்ட், த்ரீ-போஃர் என அழைக்கப்படும் முக்காலே அரைக்கால் ஜீன்ஸ், கையில் ஷெர்லாக் ஹோம்ஸ் புத்தகம்.

இந்த பெண்கள் ஏன் தான் ஷெர்லாக் ஹோம்ஸையும், ஹாரி பாட்டரையும் கட்டி கொண்டு அழுகிறார்களோ? எனக்கு தெரிந்ததெல்லாம் என் அருமை மகன் உண்ணும் செர்லாக் தான். (அதையும் இப்பலாம் துப்பி விடுகிறான், ஃபேளவர் மாத்தனும் போல.)

இந்த கதையின் முடிவில் ஒரு எதிர்பாராத திருப்பம் வரும் பாருங்கள்! அங்க தான் ஷெர்லாக் ஹோம்ஸ் சேர் போட்டு நிக்கறார்! என பொத்தாம் பொதுவாக நூல் விட்டதில் க்ளிக் ஆகி விட்டது.

இந்த கதையை நீங்கள் ஏற்கனவே படித்து இருக்கிறீர்களா?

ரெண்டு தடவை. உங்களுடன் சேர்ந்து மூனாம் தடவையும் படிக்க எனக்கு ஆட்சேபனை இல்லை.

இந்த சம்பாஷனைக்கு பிறகு, லேமேன் பிரதர்ஸ் செய்த தவறுகள், ஐரோப்பாவின் வேலையில்லா திண்டாட்டம், நார்த் கொரியா பரிசோதனை செய்த ஏவுகணை டெக்னாலஜி, என லோக விஷயங்களை பத்தி கன்னாபின்னாவென குதிரை வால் கொண்டையுடன் விவாதிக்க நான் ஒன்னும் லூசு இல்லை.

1) பாந்தினி சில்க் மெட்டீரியலில் கரீனா கபூர் அணிந்து வரும் பட்டீயாலா மாடல் எடுப்பாக இருக்குமா? இல்லை கட் சுடிதார் தான் சிறந்ததா?

2) கார்னியரில் என்ன பொருட்கள் புதிதாக மார்கெட்டுக்கு வந்திருக்கிறது?

3) ராக்கி சாவந்துக்கு வாழ்வு குடுக்கப் போகும் வள்ளல் யார்?

4) பெண்களுரில் மிகச் சிறந்த மால் எது? என உபயோகமான கருத்துக்கள் பரிமாறப் பட்டன. அடுத்த சீட்காரர்களும் தங்கள் கருத்துக்களை தாராளமாக அள்ளி வழங்க, நீயா? நானா? கோபி மாதிரி நிகழ்ச்சியை(கடலையை) சுமூகமாக கொண்டு செல்ல வேண்டியதா போச்சு.

ஆனாலும் இந்த பைலட் ரொம்ப மோசம். வண்டி உளுந்தூர்பேட்டையில அஞ்சு நிமிஷம் நிக்கும். டிபன், காப்பி சாப்டறவங்க சாப்டுக்கலாம்னு ஒரு அறிவிப்பு குடுத்து, ஹைதராபாத், நாக்பூர்னு வண்டியை ஸ்டாப்பிங் போட்டு ஓட்ட வேணாமோ? எங்கயும் நிப்பாட்டாமல் வண்டியை நேரே டெல்லிக்கு கொண்டு போய் விட்டார்.

டக்குனு எழுத பேப்பர் எதுவும் கிடைக்காததால், குதிரை வால், தனது ஈமெயில் ஐடியை என் உள்ளங்கையில் எழுத வேண்டியதா போச்சு. முகம் அலம்பும் போது தண்ணீர் பட்டதால் அந்த ஐடி அழிந்து விட்டது என நான் சத்தியம் செய்தாலும் மேலிடம் நம்ப மறுக்கிறது. :)

Monday, August 10, 2009

ஸ்வைன் ப்ளூவை மும்பை ஏர்போட்டுல எப்படி தடுக்கறாங்க தெரியுமா?

போன வாரம் என் நண்பன் மும்பை சர்வதேச விமான நிலையத்துக்கு (சத்ரபதி சிவாஜி நிலையமாமே!) வந்திறங்கினான். வழக்கம் போல வரிசை என்ற பெயரில் நாலு நாலு பேரா ஒரு லைன்ல போனாங்களாம். பிளைடுலயே ஒரு கார்டு குடுத்து இருக்காங்க. அதுல ஒரு பத்து கேள்விகள் (டிக் செய்யனுமாம்).

அதாகபட்டது, கடந்த பத்து நாளுல நீ இந்த ஸ்வைன் ப்ளூ வந்த நாடுகளுக்கு பயணம் செஞ்சியா? (அறுபத்தி நாலு நாடுகள் லிஸ்டுல இருந்ததாம்)

2) அங்க போயி உனக்கு காய்ச்சல், உடம்பு வலி, தொண்டை வலி, வாந்தி ஏதும் வந்ததா? (யெஸ் அல்லது நோ டிக்குங்க)

3) அப்படி வந்திருந்தால் சிகிச்சை எடுத்தியா? (இதுவல்லவோ கேள்வி!)

4) இந்தியாவுல எங்க தங்க போற?

5) எந்த பிளைட்டுல வந்த?, நம்பர் எழுது.

அப்புறம் வழக்கம் போல பாஸ்போட் நம்பர் எழுது, எங்க பாஸ்போட் எடுத்த?னு சிலபல கேள்விகள்.

இதை எடுத்துகிட்டு நீண்ட கியூவுல போய், அங்கன வரிசையா சிலபல ஹெல்த் ஆபிசர்கள் சேர் போட்டு உக்காந்து இருந்தாங்களாம். (சில பிகர்களும் ஆபிசர்களா இருந்தாங்க என்பது உபரி தகவல்) அவங்க கிட்ட இந்த கார்டை குடுத்தா, உங்களுக்கு காய்ச்சல் வந்துச்சா?னு ராயப்பேட்டை பொது மருத்துவமனை கம்பவுண்டர் மாதிரி கேக்கறாங்களாம். இல்லைனு சொன்னா, ஒரு சீல் குத்தி அனுப்பிடறாங்களாம்.

எனக்கு ஒரே ஒரு டவுட்டு தான்.

நோய் வந்தவரிடமே இப்படி காந்தீய வழியில் விசாரிச்சா அவரு ஆமா! ஆமா! பெரியய்யா!னு ஒத்துப்பார்னு என்ன நிச்சயம்?

எல்லா பயணிகளையும் ஒரு குறைந்த பட்ச உடல் வெப்ப அளவை காட்டும் ஸ்கேன் வழியா வரச் செஞ்சா தானே உறுதியா எதையும் நிர்ணயிக்க முடியும்?

பாதுகாப்பு முதல் ஹெல்த் வரை எல்லா விஷயங்களிலும் இப்படி மெத்தன போக்கான நடைமுறைகளை பின்பற்றினால் அப்புறம் ஏன் அப்பாவி பொது ஜனம் மண்டைய போட மாட்டாங்க?

இந்த நிகழ்வு ஜூலை மாதம் கடைசியில் நிகழ்ந்தது. இதுவரை கிடைத்த தகவல்படி ஸ்வைன் ப்ளூவுக்கு ஆறு பேர் இந்தியாவில் பலி. ஒரு வேளை இப்ப முழிச்சு இருக்கலாம். எனக்கு தெரியலை.

மத்த சர்வதேச விமான நிலையங்களிம் இப்படி தான் செக்கிங்க் நடக்குதா?னு வந்தவங்க யாராவது பின்னூட்டத்தில் சொல்லுங்க.