Monday, October 29, 2007

சும்மா தட்டி பாருங்க!

கூகிள் ஆண்டவர் இந்தியாவுல நிறைய பேரு பிளாக் கலை சேவை செய்யறாங்கனு தெரிஞ்சுகிட்டு, புதுசா ஒரு கருவிய கொண்டு வந்திருக்காங்க. கீழே உள்ள லிங்குக்கு(தமிழ்ல என்னபா?) போயி தமிங்கலத்துல உங்க டேமேஜர் இல்லாத நேரமா பாத்து தட்டுங்க.

http://www.google.com/transliterate/indic/tamil

அப்புறம் என்ன காப்பி-பேஸ்ட் டெக்னாலஜி பயன்படுத்தி பதிவுகளை(மொக்கைகளைனு கீதா பாட்டி படிக்கறாங்க பாருங்க) போட்டு தள்ளுங்க.

இதுல என்ன விஷேசம்னா உங்க ஆபிஸ்ல இருக்கும் சப்பாத்தி, ஆந்திர கொங்க்ரா, கன்னட மற்றும் கேரள குத்து விளக்குகளுக்கு அவங்க அவங்க மொழில மெசேஜ் (எவன்டா அது மசாஜ்னு படிக்கறது?) பண்ணலாம். :)

அந்த லிங்குல தமிழுக்கு பதிலா அந்தந்த மொழி பெயரை தட்டச்சினா அதற்க்குரிய லிங்க் வந்து சேரும். உதாரணத்துக்கு, இப்ப நீங்க திருச்சூர் விளக்குக்கு குட் மார்னிங்க் ஜொள்ள நினைச்சா இது தான் லிங்கு:
http://www.google.com/transliterate/indic/malayalam

மேலே சொன்ன பாராவுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது, சும்மா ஒரு உதாரணத்துக்கு, ஹிஹி... (இந்த டிஸ்கி யாருக்கு?னு நான் சொல்லவும் வேணுமா?) :)

எப்படி? கலக்கிட்டார் இல்ல கூகிள் ஆண்டவர். :)

இனிமே தமிழ்தொண்டு செய்ய கலப்பை, கோடாலினு தேடிட்டு இருக்க வேணாம். ஆனா உங்க வீட்டுல நெட் கனக்ஷன் வேணுமே, சரி, விடுங்க சில பேர் மொக்கை போட அவுட் சோர்ஸிங்க் பண்றாங்க, பக்கத்து வீடு எல்லாம் போறாங்க.

.... Type any Hindi/Malayalam/Kannada/Tamil language word in English (same way as we pronounce it) and press "SPACE bar"...it gets translated to that regional language. That too, it is very accurate !!!!!

Friday, October 19, 2007

நவராத்திரி ஸ்பெஷல்!

மு.கு: இது ஒரு மறு ஒளிபரப்பு, எல்லாம் பக்த கோடிகளுக்காக தான்!
சுண்டல் எங்கே? சக்கர பொங்கல் எங்கே?னு எல்லாம் கேக்கபடாது. பக்கத்து வீட்டுல வாங்கி சாப்பிட தான் எனக்கு தெரியும். :)

இந்த ஒன்பது என்ற எண்ணுக்கு தான் எத்தனை சிறப்பு!

1) நவ கிரகங்கள் ஒன்பது.
2) நவ ரத்னங்கள் ஒன்பது
3) ஜோதிஷத்தில் நவாம்சம் என்று சொல்வர்கள்.
4) சக்தி உபாசனையில் ஷ்ரி சக்ரத்துக்கு நவாபர்ண பூஜை என்று ஒன்று உண்டு.
5) நவமி திதியில் தானே ராமர் மானிடராக ஜனித்தார்.
6) ஒன்பது ஒளஷதங்களை கொண்டு தான் நவபாஷணம் என்ற அரிய மருந்து தயாரிக்கப் படுகிறது.
7) நவ ரசங்கள் - கோபம், சிருங்காரம், ஹாஸ்யம் என உணர்வுகள் ஒன்பது விதமானதே!
8) பூவுலகில் எம் பெருமாளுக்கு திருப்பதிகள் ஒன்பது.( நவ திருப்பதி)
9) நவராத்திரி - தேவி கொலுவிருந்து ஆட்சி செய்யும் திரு நாட்கள்.

இன்று துர்க்காஷ்டமி. சக்தி சீற்றம் கொண்டு மகிஷனை சம்காரம் செய்த நாள். கருணையே வடிவம் கொண்ட அவளா இவள்? என்று உலகே அதிசயித்த நாள்.

எனக்கு சின்ன குழந்தையிலிருந்தே பாட்டியிடம் கதை கேட்கும் போது அஷ்டபுஜங்களில், சகல விதமான ஆயுதஙளுடனும் சிங்க வாகனத்தில் புயலென நேரில் வருவதை போல உணர்வேன்.

மேலும் சாந்தமான அம்மனை விட, இந்த துர்க்கா, காளி, சண்டி, அபராஜிதா தேவி போன்ற உக்ர தேவிகள் தான் என்னை மிகவும் கவர்ந்தனர்.

சக்தி, இந்த உலகத்துக்கே அவள் தான் ஆதாரம். அந்த சிவனும் இயங்குவதே இந்த சக்தியால் தானே!
துர்க்கை, லக்ஷ்மி, சரஸ்வதி என நாம் அந்த ஆதார சக்தியை பிரித்து அவர்களுக்கு ஒரு உருவமும் குடுத்து வழிபடுகிறோம். ஆனால் இம் மூன்று சக்திகளும் நம்முடனே உள்ளது.

துர்கை (இச்சா சக்தி) - மன உறுதி.
லக்ஷ்மி (க்ரியா சக்தி) - மனம் லயித்த செயல்பாடு.
சரஸ்வதி (க்னான சக்தி) - தெளிந்த ஆறிவு.

நம் உடம்பை கிரியா சக்தியும், புத்தியை இச்சா சக்தியும், ஆத்மாவை க்னான சக்தியும் ஆள்கிறது.

தெளிந்த அறிவுடன் புத்தி சரியாக கட்டளை இட்டால் மனம் லயிகிறது. உடம்பு சொன்னபடி கேட்கிறது. ஒரு வேலையில் உடல், மனம், புத்தி எல்லாம் மன உறுதியுடன் ஈடுபடுகிறது.

நல்ல பழக்கமும், புலன்களை நம் கட்டுக்குள் வைப்பதன் மூலம் லக்ஷ்மி வந்தடைகிறாள். மனதை கட்டுபடுத்துவதன் மூலம் துர்க்கை நம்மை வந்தடைகிறாள்.
உண்மையான, குளிர்ந்த சொற்களை பேசுவதன் மூலம் சரஸ்வதி வருகிறாள்.

இந்த துர்க்காஷ்டமி அன்று தேவியை பார்த்தால் அடுத்த நாள் கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்ற நம்பிக்கை உண்டு. ஏனெனில் துர்க்கை உக்ரமாக தீப்பறக்கும் கண்களுடன், "இனி உனக்கு மன்னிப்பில்லை! தைரியம் இருந்தால் வாடா!"னு அசுரனை அறைகூவல் விடுத்து சம்காரம் முடித்து, குருதி அபிஷேகத்துடன் கோபம் தணியாமல் நின்ற கோலம் அது.



ஆனால் மறுநாள், கருணையே வடிவாக, கையில் மாணிக்க வீணையேந்தி, மதுர மொழிகள் பேசி, அபய முத்திரை காட்டி, தம்மை நாடி வருபவர்களுக்கு அவரவர் தகுதிக்கு ஏற்ப கலைகளை வாரி வழங்கும் சரஸ்வதியாக அருள் பாலிக்கிறாள்.

Pic courtasy: www.starsai.com

போஜ ராஜன் தீவிர லக்ஷ்மி உபாசகன். எனவே, அவனது மெய்யான பக்திக்கு கட்டுபட்டு, அஷ்ட லக்ஷிமிகளும் அவனது தேசத்தில் வாசம் செய்தனர்.


ஒரு நாள், மாஹாலக்ஷ்மி அவன் முன் தோன்றி, "போஜ ராஜனே! உன் நாட்டிலேயே பல காலமாக நாங்கள் தங்கி இருந்தால், மற்ற இடங்களுக்கு நாங்கள் எப்போழுது செல்வது? என முறையிட்டாள்.

போஜனும், சரி அம்மா! ஒரெ ஒரு லக்ஷ்மியை தவிர மீதி எல்லோரும் விடை பெறுங்கள்" என கூற, மஹாலக்ஷ்மியும் சம்மதிதாள்.

போஜன் கேட்டது தைரிய லக்ஷ்மியை தான்!

தைரிய லக்ஷ்மி அவனுடன் இருக்க, மற்ற லக்ஷ்மிகளும் வேறு வழியில்லாமல் மறுபடி அவனிடமே வந்தடைந்தனர்.
இந்த நவராத்திரி - விஜயதசமி நன் நாளில் நம் எல்லோர் மனதிலும் அந்த தைரிய லக்ஷ்மி குடி கொள்ளட்டும். மற்ற எல்லா லக்ஷிமிகளும் தன்னாலே நம்மை வந்தடைவார்களாக!

Monday, October 15, 2007

விளம்பரங்கள்

அது என்னவோ தெரியல, சின்ன குழந்தையில இருந்தே எனக்கு டிவில வரும் விளம்பரங்கள் மீது ஒரு வித ஈர்ப்பு. முதலில் பாடல்கள், மியூசிக், என வளர்ந்த அந்த ஆர்வம், பின் அந்த விளம்பரத்தை படமாக்கிய விதம், ஒளி அமைப்பு, சொல்லிய விதம், தேர்ந்தெடுத்த நடிகர்கள் என நோண்டி பார்க்க வைத்தது.

ஆரம்ப காலங்களில் "இந்தியா, மலேசியா, சிங்கபூர் போன்ற நாடுகளில் மக்கள் தேய்க்கும் ஒரே பற்பொடி கோபால் பற்பொடி" போன்ற விளம்பரங்களை ஆல் இந்தியா ரேடியோ திருனெல்வேலி வானோலியில் கேட்டு அடடா! அந்த ஊர்ல மக்கள் பல்லு தேய்கறதுக்கு காரணம் நம்ம கோபால் பல்பொடி தான்!னு புல்லரித்து போயிருக்கிறேன்.

டிவி பொட்டி வந்தபிறகு விளம்பரங்கள் இன்னும் மெருகேறின.
"தீபாவளிக்கு ஜவுளி வாங்க கைராசியான ஸ்தாபனம் போத்தீஸ்!" என்று பஸ்டாண்ட் முனையில் கூவி விறபது போல ரேடியோவில் சொன்ன நிலை மாறி, "சாமுத்ரிகா பட்டு! சர்வ லட்சணமான பட்டு!"னு மீரா ஜாஸ்மினுக்கு பட்டு புடவை கட்டி தாலி கட்டி கல்யாணம் எல்லாம் பண்ணி வைத்து என் வயிதெறிச்சலை கொட்டி கொண்டனர். புடவையை சொல்றாங்களா? மீரா ஜாஸ்மினை சொல்றாங்களா?னு எனக்கு அடிக்கடி சந்தேகம் வேற வந்து விடும்.

காலத்துக்கேற்ப விளம்பரங்களும் வளர்ச்சியடைந்து நவீன டெக்னாலஜி எல்லாம் பயன்படுத்தி 10- 20 செகண்டுகளில் ஒரு குட்டி கதையே சொல்லி விடுகிறார்கள்.
சிட்டுகுருவி லேகியம் விற்க தெருவோரத்தில் கூவுவது போல, கூவிய நிலை மாறி, ஸ்கிரிப்ட் ரெடி பண்ணி, ஷூட்டிங்க ஸ்பாட் எல்லாம் பாத்து வைத்து, டெக்னிகல் க்ரூ முடிவு செய்து, மாடல்களை தேர்வு செய்து, காப்பி எடிட்டர்களை புழிய புழிய வேலை வாங்கி, எத்திராஜ் போகும் மயில்களை ஜிங்கிள் எல்லாம் பாட வைத்து, மாடல்களை அழகா மிங்கிள் பண்ண வைத்து அர்ஜுன் அம்மா யாரு?னு நம்மை கதற வைத்து விடுகிறார்கள்.

பன்னாட்டு கமபெனிகள் இந்திய சந்தைக்குள் வந்த பிறகு விளம்பர துறைக்கு மவுசு கூடிவிட்டது. லக்ஸ் தேய்ச்சு குளிங்க!னு பாத் டப்புக்குள் ஷாரூகான் இறங்குறார், காட்பரீஸ் சாக்லேட்டுக்கு அமிதாப் ஆலாய் பறக்கிறார், சூர்யா சன் ஃபீஸ்ட் பிஸ்கோத்து விக்கறார், ஜெயசந்திரனில் ஆடை திருவிழா!னு கோபிகா குட்டி குதிக்கறா!

எல்லாம் டப்பு படுத்தற பாடுங்க.

"திரைப்படத்தின் இப்பகுதியை உங்களுக்கு வழங்குபவர்கள்...." என ஆரம்பித்தாலே நம் கைகள் தானாக ரிமோட் பட்டனை அழுத்தும். இல்லையா?
ஆனால் ஒரு சில விளம்பரங்கள் மட்டும் நம் கவனத்தை ஈர்த்து விடும். பத்து அல்லது இருபது செகண்டுகள் நம்மை தன்பால் ஈர்க்க என்னவெல்லாம் செய்ய வேண்டி இருக்கு? என்று நினைத்து பாருங்கள். இன்று பல சாடிலைட் சானல்கள் ஓடிகொண்டிருப்பது இந்த மண்டகபடிதாரர்கள் தயவில் தான்.

போதிய விளம்பரதாரர் இல்லையேனில் அவசர அவசரமாக கோலங்கள்-அபிக்கு குண்டடி படும். நடன போட்டியில் சொம்பு அழுது கொண்டு பஞ்ச்(சர்) டயலாக் விடுவார். எல்லாம் செந்தில் சொன்ன மாதிரி "ஒரு விளம்பரதேங்க்"

சரி, ஒரு விளம்பரம் வெற்றியடைய ஏதேனும் வெற்றி பார்முலா உண்டா? என கேட்டால் நிச்சயம் உண்டு என்பேன்.

எப்படி தாலி, குங்குமம், வேப்பிலை, குரங்கு, நாய், பாம்பு, யானை, கிராபிக்ஸ்,தீமிதி, நாட்டாமை, (நிஜமான) சொம்பு எல்லாம் ராம நாராயணன் படத்தின் வெற்றி பார்முலாவோ அதே போல விளம்பரங்களுக்கும் சில நுணுக்கங்கள் உண்டு. அவை என்ன? என அடுத்த பதிவில் பார்ப்போமா?
(அப்ப தானே என் அடுத்த பதிவின் ஹிட் ஏறும்? - இது என்னோட பார்முலா, ஹிஹி)

பி.கு: நேரமும், ஆர்வமும் இருந்தால், நீங்களும் இந்த விளம்பர விளையாட்டில் கலந்து கொள்ளுங்களேன்.

Monday, October 08, 2007

2007 - அல்வா அவார்டுகள்

இந்த வருடத்தில் மிகச் சிறப்பாக அல்வா கிண்டி கொடுத்தவர்கள் யார் யார்? என முதலில் பார்ப்போம். அவர்களில் மிகச்சிறந்த போட்டியாளரை 2007 - சிறப்பாக அல்வா கொடுத்தவராக தேர்ந்தெடுக்கபடுவார்.

போட்டியாளர்#1: மாறன் சகோதரர்கள்

கை வீசமா கை வீசு!
டெல்லிக்கு போகலாம் கை வீசு!
மந்திரியாகலாம் கை வீசு!னு ஆசை ஆசையாய் பாலூட்டி, சீராட்டி வளர்த்த தாத்தாவுக்கே சும்மா அரை கிலோ அல்வா கிண்டி குடுத்த பெருமை இந்த சகோதரர்களையே சாரும். கிளிக்கு றெக்கை முளைச்சு பறந்து போயிடுத்து!

போட்டியாளர்#2: முஷரப் - தி பாஸ்

நானே ராஜா!
நானே மந்திரி!
எனக்கொரு கவலையில்ல! என உற்சாகமாக பாடிகொண்டு ஒட்டுமொத்த பாகிஸ்தானுக்கும் அல்வா கொடுத்து கொண்டிருக்கும் முஷரப் இந்த போட்டியில் கலந்து கொள்ளா தகுதியானவரே!
நவாஸ் ஷெரீப் வந்திறங்கிய பிளைட்டுலேயே அவரை திரும்ப ஏத்தி, கராச்சிக்கு போகுது வண்டி!னு சொல்லிட்டு அரேபியாவுக்கு ஒட்டகம் மேய்க்க அனுப்பி, "இந்தா வெச்சுக்க அல்வா!"னு கிண்டி கொடுத்த முஷரப்பின் திறமையை பார்த்து பெரிய அண்ணாச்சி அமெரிக்கவே இன்னும் திறந்த வாயை மூடலையாம்!

போட்டியாளர்#3: தேவ கவுடா & குமாரசாமி

அப்பாவும் பிள்ளையும் கூட்டணி அமைத்து இருபது மாதங்களுக்கு முன்னால் காங்கிரசுக்கு சூப்பரா அல்வா குடுத்து விட்டு, பி.ஜேபியிடம் "உனக்கொரு வாய்! எனக்கொரு வாய்!னு ஆட்சியை பங்கு போட்டுகலாம், என்ன?னு சொல்லிட்டு, இப்ப என்னடானா பங்கா? எந்த பங்கு? எந்த ஆட்சி? "காக்கா தூக்கிண்டு போச்சு!"னு இந்த வருடத்தின் மெகா அல்வா குடுத்த தேவ கவுடா மற்றும் அவரது தவமாய் தவமிருந்து பெத்த பிள்ளை குமாரசாமி ரெண்டு பெரும் இந்த போட்டிக்கு லாயக்கானவர்களே!

போட்டியாளர்#4: சொம்பு மற்றும் பப்லு

விஜய் டிவில ஜோடி நம்பர் ஒன்னு!னு ஒரு புரோகிராம். மெகா சீரியலுல அழுத மூஞ்சிகள் எல்லாம் சோக்கா பவுடர் அடிச்சுண்டு, புது சொக்கா எல்லாம் போட்டுண்டு
"தாம் தக்கா!
தைய தக்க!"னு ஆட்டம் போடறாங்க.
அதுக்கு சொம்புவும் ஒரு நாட்டாமையாம்! (என்ன கொடுமை இது காணாம போன ஏஸ்?)
யப்பா! 9 மாசத்துலேயே நான் டான்ஸ் ஆடி, பிரசவம் பாத்த நர்ஸை கரக்ட் பண்ணினவனாக்கும்!னு சொம்பு விடற பில்டபுக்கு எல்லாம் உச்சகட்டமாக கடந்த வாரம் பப்லுவ பார்த்து என்ன ஆடற நீயி?னு வாய குடுக்க, "நான் ஆடவேயில்லை!னு சொம்பு சொல்லிடுச்சு!னு பப்லு குதிக்க, பாக்கற நாம மண்டைய பிச்சுக்க வெச்சுட்டானுங்க.
இதை பற்றி விரிவாக அறிய மலேசிய மாரியாத்தா சொல்றதை கேளுங்க.

எல்லாம் புரோகிராமை பேமஸ் ஆக்க அவங்க கிண்டி குடுக்கற அல்வா! நீங்க ஒழுங்கா சப்பாத்திக்கு மாவு பிசைங்க!னு தங்கமணி என் தலைல தட்டினதுக்கு அப்புறம் தான் நமக்கு பல்பு எறிய ஆரம்பிச்சது.

அட பாவிகளா! இதை பாக்கற நேரத்துல 10 சப்பாத்தி தோசை கல்லுல போட்டு எடுத்ருப்பேனே!

சரி, இவங்க தான் நம்ம போட்டியாளர்கள். இப்ப நீங்களே இதுல 2007 - மிக சிறந்த அல்வா கொடுத்தவர் யாரு?னு தேர்ந்தெடுங்க பார்க்கலாம்! :)

Monday, October 01, 2007

சட்டம் தெரியுமா உங்களுக்கு?

Right to Emergency Care:
Date Of Judgment: 23/02/2007 .
Case No.: Appeal (civil) 919 of 2007.

The Supreme Court has ruled that all injured persons especially in the case of road traffic accidents, assaults, etc., when brought to a hospital / medical centre, have to be offered first aid, stabilized and shifted to a higher centre / government centre if required. It is only after this that the hospital can demand payment or complete police formalities. In case you are a bystander and wish to help someone in an accident, please go ahead and do so. Your responsibility ends as soon as you leave the person at the hospital.
The hospital bears the responsibility of informing the police, first aid, etc.
Please do inform your family and friends about these basic rights so that we all know what to expect and what to do in the hour of need. Please not only go ahead and forward, use it too!!!!
பி.கு: பிளாக் யூனியனில் இதை மாதிரி உருப்படியா பதிவு போட்டா ஈ அடிக்குது. அதான் இந்த கடையில் பதிந்தேன். நாலு பேருக்கு நல்ல விஷயங்கள் போய் சேர்ந்தா அதுவே போதும்.