Thursday, December 03, 2009

சைனாவின் மற்றுமொரு சதி

இந்த சைனாகாரன் இருக்கானே, சும்மாவே இருக்க மாட்டான். இல்ல, அவங்க மக்கள் தொகையை பத்தி நான் சொல்ல வரல. எல்லையில என்னடானா சின்ன பிள்ளதனமா பாறையில சைனானு எழுதி வைக்கறான். அருணாசல பிரதேசத்துல எல்லாருக்கும் மூக்கு சப்பையா இருக்கு, அதனால் அதுவும் எங்க இடம் தான்னு சொல்லிட்டு இருக்கான். பிராணப் முகர்ஜியும் சும்மா தாமாசு!னு சிரிச்சுகிட்டே அறிக்கை விடறாரு. எப்படியோ ஒழியட்டும்.


ஆட்ட கடிச்சு மாட்ட கடிச்சு கடைசில தமிழ் பதிவர்கள் தலையிலுமா கைய வெப்பான்? உங்க பதிவுகளில் அனானி கமண்ட் போடற ஆப்ஷன் இருந்ததுனா போச்சு! உடனே உங்க பதிவுக்கு வந்து முத்து முத்தா பின்னூட்டம் போட்டுட்டு போயிடுவான். நான் கூட ரொம்ப நாளா நம்ம பதிவு சைனா கொரியா வரைக்கும் ரீச் ஆயிருக்கு போல!னு ஆனந்த கண்ணீர் விட்டுட்டு இருந்தேன்.


அவன் போட்ட கமண்ட் எல்லாம் வைரஸ்ஸாம். நிலா ரசிகனையே புலம்ப வெச்சுருக்கான் பாருங்க.


இதெல்லாத்துக்கும் ஹைலேட்டா அருமை அண்ணன், பக்கபக்கமா எழுதும் உனாதானா அண்ணாச்சியின் பதிவையே கடத்திவிட்டான். அவர் எழுதி இருக்கறத எல்லாம் கடத்தறதுக்கே சைனா காரனுக்கு மூனு நாள் ஆயிருக்குமே! அவ்ளோ எழுதி இருக்காரு அவரு.

சைபர் கிரைமில் புகார் குடுத்தாரா? அப்படியே குடுத்தாலும் ஏதோ கிணத்தை காணல!னு வடிவேலு குடுத்த மாதிரி என் பிளாக்கை காணலை!னு சொன்னா புகாரை எடுத்துப்பாங்களா? ஒன்னும் புரியலை.

சமீபத்தில் பாண்டிசேரி அமைச்சர்களின் தீனிப் பழக்கத்தை எதிர்த்து ஒரு பதிவு போட்டு இருந்தாரு(பாருங்க, அவரு பதிவுக்கு லிங்க் கூட குடுக்க முடியலை இப்போ). ஒரு வேளை இது அரசியல் காழ்ப்பின் காரணமாக இருக்குமோ? என்ற கோணத்திலும் சைபர் போலிஸ் விசாரிக்க வேண்டும்.

இதற்கு பதிலடியாக சைனாகாரனை எதிர்த்து உடனே பதிவர்கள் எல்லாரும் எதிர்வினை ஆத்தி பதிவு போடனும். முடிஞ்சா அவன் பிளாக்குல போய் நாம தமிழ்ல கமண்ட் போட்டுட்டு வரலாம்.

கொஞ்சம் சீரியசா சொல்லனுமா:

1) எல்லாரும் உடனே தங்கள் பதிவை பேக்கப் எடுத்துக் கொள்ளவும். ( நிலா ரசிகன் விரிவா விளக்கி இருக்காரு.)

2) பின்னூட்டத்தை மட்டுறுத்தவும்.

3) மட்டுறுத்த சோம்பலா நினைக்கும் என்னைப் போன்றவர்கள் வேர்டு வெரிபிகேஷன் வைக்கவும். சைனா காரனுக்கு இங்க்லீஸ்னா அலர்ஜி என்பதை நினைவில் கொள்க. :)

4) எல்லாத்துக்கும் மேலே காக்க காக்க என் பிளாக்கை காக்க!னு பிளாகுலக குலசாமி மகர நெடுங்குழை காதனிடம் வேண்டி கொள்ளவும். :))

அவ்ளோ தான் எனக்கு தெரிஞ்சது.

Wednesday, November 25, 2009

ட்விட்டர்

நீங்க ட்விட்டர்ல இருக்கீங்களா?னு ரொம்ப நாளாகவே நெறைய பேர் என்கிட்ட கேக்கற போதெல்லாம், இல்லீங்க, கெக்ரான் மொக்ரான் கம்பெனில தான் ஆணி பிடுங்கறேனு ரொம்ப அப்பாவியா நானும் பதில் சொல்லி வந்ருக்கேன். என்னை மாதிரி ஏகபிளாக்விரதர்களுக்கு ஒன்னை கட்டியே சமாளிக்க முடியறதில்லை, இதுல உனக்கு ட்விட்டர் ஒரு கேடா?னு என் அபிமானிகள்(இருக்கீங்களா யாரும்?) துப்பிவிடும் சாத்திய கூறுகள் பிரகாசமா இருப்பதால் பேசாம தான் இருந்தேன்.

மேலும் ஆசை ஆசையாய் ஆர்குட்ல வீடு கட்டி சிலபல பழைய காலேஜ் மக்களின்(பிகர்களின்) ஏகோபித அபிமானத்தை பெற்று, வளர்ந்து வந்த நிலையில், ஒரு சபிக்கப்பட்ட ஞாயிறு நன்பகல் ரெண்டு மணியளவில் "கீழுதட்டில் வாய்ப்புண் வந்துருக்கு, என்ன செய்யனும் அம்பி? என்ற ஒரு பிகரின் ஸ்கிராப்புக்கு கர்ம சிரத்தையாய் பதில் ஸ்க்ராபிக் கொண்டிருக்கும் போது தங்கமணி நெற்றிக் கண்ணை திறக்க, அத்தோடு என் ஆர்குட் அக்கவுண்ட் பஸ்பமாகி போனது. உடனே, "தாட்சாயிணி, நன்றாக என்னை பார்!"னு எல்லாம் ஒன்னும் எகிறிக் குதிக்கலை. (ஆமா! அப்படியே குதிச்சுட்டாலும்).

நாட்டுல பல கிரிமனல் வேலைகள் எல்லாம் இப்ப ஆர்குட் வழியாத் தான் நடக்கறதாம்! அதான் நான் ஒதுங்கிட்டேன்! என தனி மெயிலில் துக்கம் விசாரித்தவர்களிடம் டெம்ளேட் மெயில் அனுப்பி ஆறுதலடைந்தேன்.

தங்கமணி கட்டிக் குடுத்த வெங்காய சாம்பாரும், உருளைகிழங்கு கார கறியையும் ஒரு கட்டு கட்டிவிட்டு, ஆபிசில் மதியம் கண் சொருகும் நேரத்தில் எல்லாரும் பீட்டர் விடும் இந்த ட்விட்டர்னா என்னனு கொஞ்சம் நோண்டிப் பாப்போம் என ஒரு நப்பாசையுடன் லேசா துருவினால் முக்காலேஅரைக்கால் பிளாகுலக மக்களும் ட்விட்டர்ல வூடு கட்டிக் கொண்டு இருக்கிறர்கள் என புரிந்தது.

  1. பல்லில் தேங்காய் துகள் புகுந்து விட்டது.
  2. குண்டூசி தேடுகிறேன்.
  3. கண்டேன் குண்டூசியை!
  4. மிஷன் இன் பிராக்ரஸ்.
  5. முடிஞ்சது சோலி!

இப்படியெல்லாம் ட்விட்டி இருக்கிறார்கள்.( நல்லா இருங்கடே!)

சிலபேர் வெண்பா பாடி இருக்கிறாகள். நமீதா பத்தி கிசுகிசு எல்லாம் ட்விட்டி இருக்கிறார்கள். சிலபேர் வெள்ளகார தொரை அவங்களுக்கு அனுப்பிய தபால் பத்தி எல்லாம் சொல்லி இருக்கிறார்கள்.

வீட்ல கரண்ட் இல்லை. டாய்லெட்ல தண்ணி வரலை. பேப்பர்காரனுக்கு பாக்கி இருக்கு.

நான் நல்லவளா கெட்டவளா?

உங்க வீட்ல நவராத்ரிக்கு என்ன சுண்டல்?

மூனார் போயி நாலு மாசமாச்சே! வீட்ல ஏதேனும் விஷேசம் உண்டா?

மாமியாருக்கு பிபி ஷுகர் எல்லாம் எகிறி விட்டதா?

இந்த ஆதி ஏன் தான் அபிய இப்படி படுத்தறானோ?

எங்காத்து அர்ஜுன் ஜுனியர் சிங்கர்ல பாடறான்.

போளி செய்வது எப்படி?(போலி இல்ல போளி, திரும்ப படிங்கடே!)

புது பதிவு போட்டால் போஸ்டர் ஒட்ட(என்னையும் சேர்த்து தான்) இதுவும் ஒரு சுவராக பயன்படுகிறது. இதுலயும் ஜிகினா வேலை காட்டுகிறர்கள் சில டெம்ளேட் ராஜாக்கள். பதிவுகளை விட, இணையத்தில் சிதறி கிடக்கும் பல சுவாரசிய தகவல்களின் லிங்குகள் டிவிட்டுகளாக வருவது நன்றாக உள்ளது. ஆனால் இங்கயும் தங்கள் அதிமேதாவித்தனத்தை பறை சாற்றும் சில ட்விட்டுகள் அயர்ச்சியைத் தான் தருகிறது.

ட்விட்டர்ல வெறும் நூத்தி நாப்பது எழுத்துக்கள் தான் எழுத முடியுமாம். உனாதானா அண்ணாச்சி எல்லாம் தன் பதிவின் தலைப்பே இவ்ளோ நீளத்துக்கு வெப்பாரு. ட்விட்டர்ல உங்களுக்கு அக்கவுண்டு தர மாட்டோம்னு அவருக்கு மெயில் அனுப்பிட்டாங்களாமே, நெஜமா? :)

தமிழ் வெர்ஷன்ல ட்விட்டர் வந்தா சிட்டுக்குருவின்னு பெயர் வெப்பாங்களா?சரி தான், இது பிளாக், ஆர்குட்டை விட வெட்டி போலிருக்கு. சீசீ, இந்த பழம் புளிக்கும். :)

Friday, November 06, 2009

பெண்களூரு

part - 1

தமிழ் நாட்டிலிருந்து இந்த பெண்களுருக்கு வந்தவர்கள் அனைவரும் ஒரு குறையாக சொல்லும் விஷயம் இங்கு சாம்பார் என்று சொல்லி அதில் சர்க்கரையை போட்டு ஒரு திரவத்தை தராங்க பா! என்பது தான். வெங்காய சாம்பார், வெண்டைக்காய் சாம்பார், முள்ளங்கி சாம்பார், முருங்கைகாய் சாம்பார்னு நம்மாட்கள் வெரைட்டியா அங்கு வெட்டி விட்டு இங்கு ரொம்பவே சிரமப்படுவார்கள்.

விடுமுறை நாளில் (பிள்ளையார் சதுர்த்தி அல்ல) மதிய சாப்பாடு ஒரு வெட்டு வெட்ட வேண்டும் என சபதம் எடுத்துக் கொண்டவர்கள் இந்த ஊரில் செல்ல வேண்டிய ஒரு இடம்: எம்டிஆர்(MTR) டிபன் ஹவுஸ். ஊர்வசி தியேட்டருக்கு நேர் எதிர்புறம் இருக்கிறது. (என்னது, ஊர்வசி தியேட்டர் எங்க இருக்கா?)

சனி, ஞாயிறுகளில் காலை லைட்டா ஒரு ஜுஸ் மட்டும் குடித்து விட்டு, மதியம் பனிரெண்டரை மணியளவில் இங்கு வந்தால் மீல்ஸ் கூப்பன் வாங்க பத்தாவது ஆளாக வரிசையில் நிற்ப்பீர்கள். முடிந்த வரை ரெண்டு அல்லது மூனு பேருக்கு மேல் உங்களுடன் சேர்த்து கொள்ள வேணாம். டேபிள் கிடைக்காது. அளவற்ற ஒரே சாப்பாடு தான். டிக்கட் விலை 120 ரூபாய்(ஒரு ஆளுக்கு). கொஞ்சம் காஸ்ட்லி தான் ஆனால் தாஜ், ஓபராய் என நமக்கு பஃபே காட்டும் மெனுவோடு ஒப்பிட்டால் இது ஒன்னுமில்லை.

முதலில் ஏதாவது ஒரு பழரசம் வெள்ளி டம்பளரில்(250 மில்லி பிடிக்கும்) தருவார்கள். (எங்களுக்கு திராட்சை ஜூஸ் வந்தது). பழக்க தோஷத்தில், ஒரே மடக்காக குடித்து விட்டால் சரியாக சாப்பிட முடியாது. எனவே லைட்ட்டா நாலு சிப் செய்யவும். நாம் சாப்பிட்டு முடிந்ததும், மறக்காமல் வெள்ளி டம்பளரை எடுத்து செல்ல தனியாக ஒரு ஆள் வருகிறார்.

அதன்பின், ஒரு பெரிய தட்டில்(இது வெள்ளி இல்லை) வரிசையாக பதார்த்தங்கள் வர ஆரம்பிக்கும். முதலில் சுடச்சுட பூரிகள் வரும். ரெண்டுக்கு மேல் வேணாம் என சொல்லி விடுங்கள். நல்ல பிசிபேளா பாத்தின் முக்ய லட்சணமே மிதமான காரத்தில், தகதகவென ஒரு ஜொலிப்போடு, முந்திரி பருப்பு மணக்க, இளம்சூடாக ஆனால் கையையோ நாக்கையோ பொத்து போகிற அளவுக்கு இல்லாமல் இருக்க வேண்டும். இவங்க இதுல எக்ஸ்பர்ட் போலிருக்கு. நீங்கள் நாலு வாய் சாப்பிடுமுன் பொன்னி அரிசியில் சாதம் வந்து விடும். சொல்ப வெய்ட் மாடி! என கூச்சமில்லாமல் சொல்லி விடுங்கள். நிஜமான சாம்பார் எல்லாம் விடுகிறார்கள். ரசமும் உண்டு.

அன்றைய ஸ்பெஷல் ஸ்வீட் என்னவோ அது வரும். எங்களுக்கு பாதாம் அல்வா கிடைத்தது. பால் பாயசமும் வரும்.

1) கட்டிடம் கட்டி சுமார் அறுபது ஆண்டுகளாவது இருக்கும்.
கை அலம்ப வைத்திருக்கும் குழாயை திறக்க காரில் பிரேக் போடுவது போல கீழே இருக்கும் பெடலை மிதிக்க வேண்டும்.

2) ஊழியர்கள் எல்லோரும் லைட் ரோஸ் நிறத்தில் சட்டையும், வெள்ளை வேட்டியும் அணிந்து இருக்கிறார்கள். சமைப்பவர் முதல் பறிமாறுபவர் வரை எல்லாம் நள பாகம் தான். நோ தமயந்திஸ்.

3) எல்லோருமே சுத்தமான கன்னடம் தான் பேசுகிறார்கள். மைசூர்காரகள் என பாத்தவுடன் சொல்லி விடலாம்.

4) யாரும் தானாக டிப்ஸ் கேட்பதில்லை. பெரும்பாலனவர்கள் குடுப்பதும் இல்லை. எனக்கு அன்னிக்குனு பாத்து மறந்து போச்சு. ஹிஹி.

5) மாடிக்கு போகும் வழியில் சுதந்திரத்துக்கு முன்னாடி எடுத்த நிழற்படங்களை மாட்டி வைத்திருக்கிறார்கள். சர்.சி.வி. ராமன், கோக்லே, நேரு என பலப்பல முக்ய தலைவர்கள் தம் தங்கமணி சகிதம் போண்டா சாப்பிட வந்திருக்கிறார்கள். அவங்க தங்கமணிகளும் சனிக்கிழமை சமைக்காதோர் சங்கத்தில் மெம்பர் போலிருக்கு.

உங்களுக்கு வாக்கப்பட்டு என்னத்த கண்டேன்? ஒரு ஹோட்டல் உண்டா? சினிமா உண்டா?னு நேரு தங்கமணியும் இடித்து இருப்பார்கள் போலும். நேரு ரொம்பவே பவ்யமாய் அமர்ந்து சாப்பிடுகிறார். வெளில தான் முன்கோபம் எல்லாம் காட்டுவார் போல. ஹும்! வீட்டுக்கு வீடு வாசப்படி! இல்ல, சும்மா ஒரு பழமொழி சொன்னேன் அவ்ளோ தான். :)

6) தங்கள் முறை வரும் வரை காத்திருக்க மர பெஞ்சு போட்டிருக்கிறார்கள். நாங்கள் உண்ட களைப்பால் கொஞ்ச நேரம் பெஞ்சில் அமர்ந்திருந்து விட்டு கிளம்பினோம். ஹோட்டல்கார்களுக்கு செம சிரிப்பு.

7) சரியான பார்கிங் வசதி இல்லை. செம பிசியான ரோடு, இடத்துக்கு எங்க போறது? ஹோட்டல் காரகளை குத்தம் சொல்ல்ல முடியாது.

பெண்களூர் வாசிகள் கண்டிப்பாக ஒரு முறையேனும் இங்கு வந்திருப்பார்கள். மற்றவர்கள் காலமும், சந்தர்ப்பமும் கிடைத்தால் வாருங்கள்.

Monday, November 02, 2009

ஏர்டெல் சூப்பர் சிங்கர் - ஜூனியர்

புது பதிவு போட இப்பல்லாம் ரொம்பவே மெனக்கட வேண்டியுள்ளது. எழுத நிறைய விஷயங்கள் இருந்தாலும் நேரம் வாய்க்கறதே இல்லை.

தினமும் தவறாம வந்து பார்ப்பவர்களுக்கும், இவனுக்கெல்லாம் ஏன்டா பாலோயர்களா ஆனோம்? என நொந்து கொள்பவர்களுக்கும்:

உங்களின் ஒத்துழைப்புக்கும், புரிந்துணர்வுக்கும் ரொம்ப நன்றி.(மைக் கெடச்சா போதுமே?)
***********************************************************************************
என் அருமை மகனுக்கு மியுசிக் ரொம்ப பிடிக்கறதே என்பதாலும், தங்கமணி குடுத்த குடைச்சலாலும் பேட்டரி போட்டு இசைக்கும் ஒரு பியூனோவை எங்கள் ஏரியாவில் உள்ள என் ஆஸ்தான கடையில் முடிந்த வரை பேரம் பேசி வாங்கி வந்தேன்.

ஜுனியருக்கு என்ன தோணியதோ தெரியலை, பியூனோவை கடம் மாதிரி தட்ட ஆரம்பித்து விட்டான். பின் அதை கவுத்தி போட்டு மிருதங்கமாகவும் வாசிக்க ஆரம்பித்து விட்டான். தெரிஞ்சு இருந்தா கடமே வாங்கி குடுத்து இருக்கலாம். ஒரு பியானோ தப்பித்து இருக்கும்.
***********************************************************************************
ப்ரைம் டைமில் பாடாவதி சீரியல்களுக்கு நடுவில், ஏர்டெல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி வருவதால் எங்கள் வீட்டில் ஒட்டுமொத்த ஆதரவும் பெற்று விட்டது. ஒரு மணி நேரம் ரிமோட் கன்ட்ரோலை மறந்து நாங்கள் பார்க்கும் நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்று. சீனியர்களை விட ஜுனியர் குழந்தைகள் மிக கடினமான பாடல்களை மிக எளிதாக பாடி வருகிறார்கள்.

விஜய் டிவியின் மிகப் பெரிய பலமே ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் அவர்கள் வடிவமைக்கும் கண்கவர் செட்டுகளும் ஒரு காரணம். குடுத்த காசுக்கு மேலேயே ஆர்ட் டைரக்டர் கூவி இருப்பார். (கலைஞர் டிவியில் மானாட மயிலாட நீங்கலாக( அதுவும் நமீதா வருவதால்) மற்ற நிகழ்ச்சிகளுக்கு ஏதோ கோவில் மண்டபத்தில் செட் போட்டது போல இருக்கும்.)

இந்த நிகழ்ச்சிக்கு மற்றுமொரு பலம் இப்பொழுது வாய்த்துள்ள நடுவர்கள். அதுவும் பாடகர் மனோ நிகழ்ச்சியை கொண்டு செல்லும் விதம் ரொம்பவே அருமையா இருக்கு.

சில துளிகள்:

1) பாடுகிற குழந்தைகளை விட அவர்களின் பெற்றோர் தான் ரொம்ப டென்ஷனாகிறார்கள். இந்த கொம்பு சீவி விட்டு பந்தயத்துக்கு அனுப்பும் மனப்பான்மை என்று தான் மாறுமோ?

2) ஆறிலிருந்து பதினான்கு வயது வரை என அறிவித்து இருப்பதால் மழலை மாறாத குழந்தைகளும் உள்ளன. எலிமினேஷன் என அவர்களை நோகடிப்பது மிகவும் வருத்தமிகு செயல். இதை தவிர்த்து இருக்கலாம்.

3) ஸ்பாட் செலக்ட் ஆகும் குழந்தைகள் மேல் சாக்லேட் மழை பொழிவது போல செட் செய்து இருக்கிறார்கள். எல்லாமே காட்பரீஸ், கிட்காட் என பெரிய்ய பெரிய்ய சாக்லேட் பட்டைகள். தொம் தொமென குழைந்தைகள் தலையில் விழுகிறது.

"குழந்தைகள் மீது கட்டவிழ்த்து விடப்படும் வன்முறை" என பதிவர்கள் யாரேனும் பின் நவீனத்துவமாக பதிவிடுமுன்னர், எக்லஸ், லாக்டோ கிங்க் போன்ற சின்ன சின்ன சாக்லேட் மழை பொழியுமாறு செய்தால் விஜய் டிவிக்காரர்கள் தப்பித்தார்கள். (வன்முறையில் கூட பெரிசு, சின்னதுன்னு இருக்கா? என்றெல்லாம் பதிவு வராது என நம்புகிறேன். :)

இப்பலாம் நடுவர் பேச ஆரம்பிக்கும் முன்னரே இந்த குழந்தைக்கு நல்ல குரல் வளம், செம எனர்ஜி, ரெண்டு ஸ்கேல் சுருதி கம்மியா எடுத்து இருக்கலாம், ரெண்டாவது சரணத்துல தாளம் கொஞ்சம் மாறி விட்டது! என தங்கமணி டெக்னிக்கலா பேச ஆரம்பித்து விடுகிறார்.

அதோடு விட்டா பரவாயில்லை, நீங்க என்ன நோட் பண்ணீங்க?னு என்னை கேக்கனுமா?

1) தொகுப்பாளினி வில்லு புகழ் திவ்யா ஆரம்பத்தில் கொஞ்சம் நெர்வஸ்ஸா இருந்தார். இப்ப தேறி விட்டார்.

2) பெரும்பாலும் பழுப்பு, மருதாணி கலர் என லைட் ஷேடுகளிலேயே தம் உடையை தேர்ந்தெடுக்கிறார்.

3) உடை கலருக்கு மேட்சாக லைட் ஷேட் லிப்ஸ்டிக் தான் போடுகிறார்.

4) பேசி முடித்த பின், இடது புறமாக தலையை சாய்த்து கொள்கிறார்.

5) தலைமுடியை கட் செய்து ஸ்ட்ரெய்ட்டனிங்க் செய்து இருக்கிறார்.

- என நானும் என் பங்குக்கு சில டெக்னிக்கல் பாயிண்டுகளை அடுக்கி விட்டேன். :)

Tuesday, October 13, 2009

கிரெடிட் கார்டு/லோன் வேணுமா?

மும்பையை தலைமையிடமாக கொண்ட அந்த பேங்கிலிருந்து கரக்ட்டா என் சம்பள நாளுக்கு அடுத்த நாள் மேற்படி கேள்விகளுடன் ஒருத்தர் எனக்கு போன் பண்ணுவார். எனக்கு அந்த ஆள் பேசும் தொனி பிடிக்காது. நான் என்னவோ திக்கு தெரியாத காட்டில் தவிப்பது போலவும், அவங்க பேங்க் தான் ஏதோ கோவிலில் குடுக்கும் சுண்டல் போல எனக்கு கிரெடிட் கார்டும் பெர்சனல் லோனும் வழங்குவது போல பில்டப் குடுப்பார்.

மும்பை எஸ்டிடி கோட் பாத்தவுடனேயே மொபைலை கட் பண்ணி விடுவேன். அந்த நம்பர் கூட எனக்கு அத்துபடி. போன தடவை அதே மும்பையில் இருந்து கால், வேற நம்பரில் இருந்து. புத்திசாலித்தனமா கால் பண்றாராம். பெரிய ஆபிஸ்களுக்கு நாலைந்து போன் லைன்கள் வரிசையாக இருக்கும் என்பது பொதிகை தொலைகாட்சியில் "காணாமல் போனவர் பற்றிய அறிவிப்பு" பார்த்தவர்களுக்கு கூட தெரியும். சரி விடுங்க, என்ன தான் சொல்றார் இந்த ஆள்?னு இந்த தடவை பேசினேன். ஆச்சர்யம் பாருங்கள் இந்த தடவை போன் பண்ணியது ஒரு பெண். ஜொள்ளாண்டவரின் கருணையே கருணை.

ஹலோ, நான் ராக்கி பேசறேன், நீங்க தானே அம்பி..? உங்களுக்கு கோல்டன் கிரெடிட் கார்டு தரப்....

கார்டு கிடக்குது கழுத. என்னமா ராக்கி, உன் கல்யாணம் தான் என்.டி.டிவில அமர்களப்படுது. நீயே கதின்னு கனடால இருந்து வந்திருக்கற அந்த மொட்டையவே கல்யாணம் பண்ணிக்க தாயி. நீ விரும்பறவனை விட உன்னை விரும்பறவனை கல்யாணம் பண்ணிக்கனு ரஜினி சொல்லி இருக்காரு.

அடக் கடவுளே! நன் ராக்கி சாவந்த் இல்ல, ராக்கி ஜெயின். என் ஆபிஸ்ல தான் என்ன கலாய்க்கறாங்கன்னா கிளையன்ட் நீங்களுமா?

அப்படியா? வெரி சாரி. எனக்கு கார்டெல்லாம் வேணாம். எதிர்காலத்துல தேவை இருந்தா ராக்கிக்கு தான் போன் போடுவேன். ஓக்கேவா? -ஹெவ் ஏ நைஸ் டே!

கலகலவென சிரிப்பு சத்ததுடன் (ரெண்டு பக்கத்திலும் தான்) போன் கட் செய்யப்பட்டது.

இதே மாதிரி பல ராக்கிகள், திவ்யாக்கள், லாவண்யாக்கள் தங்கள் வங்கிக்காக தினமும் போன் செய்கிறார்கள். நமக்கு வேணாம் என்பதை எதுக்கு வள்ளுனு விழுந்து பிடுங்கி சொல்லனும்? யோசித்து பாருங்கள், அவங்க வேலைய அவங்க செய்றாங்க. நமது கிளையன்ட் இதே மாதிரி விழுந்து பிடுங்கினா நமக்கு எப்படி இருக்கும்?

நம்மால் இத்தகைய ராக்கிகளுக்கு, திவ்யாக்களுக்கு போன் மூலம் பரிமாறப்படும் கோபம், இன்னொரு ரூபத்தில் வேறு யாருக்கோ போய் சேரும். அது ஒரு சாலை விபத்தாக கூட முடியலாம். இதுவும் பட்டர்பிஃளை எபக்ஃட் தான். சட்டியிலிருந்து கிண்ணத்தில் மாற்றுவதற்க்கு கோபம் ஒன்னும் சூடான கேசரி இல்லை. :)

இது என் கருத்து மட்டுமே. எல்லாருக்கும் பொருந்துமா? என தெரியாது. :)

Tuesday, October 06, 2009

புடவை

சார் தசரா வருது, ஒரு புடவை எடுத்து தாங்க! இப்படி உரிமையுடன் என் வீட்டில் வேலை செய்யும் லலிதா கேட்டவுடன் எனக்கு கொஞ்சம் ஆச்சர்யமாக இருந்தது.


தசரா எல்லாம் வழக்கம் கிடையாது மா! தீபாவளிக்கு தான் சீலை எடுத்து கொடுப்போம். சரியா? என பதில் குடுத்ததும் சரியென்று தலையாட்டினாலும் ஏமாற்றத்தை முகம் காட்டி கொடுத்து விட்டது. நானும் மறந்து விட்டேன்.


அதே கேள்வி. இந்த முறை என்னிடம் அல்ல, தங்கமணியிடம். கேட்டது லலிதா இல்லை, அவளின் அக்கா சரளா. லலிதா லீவு எடுத்தால் சரளா தான் சப்ஸ்ட்யூட். என்னடா இது வம்பா போச்சு? சரி, தசராவுக்கே எடுத்து குடுத்தறலாம்னு முடிவு பண்ணி தங்கமணி சகிதமா எங்க ஏரியாவுல இருக்கற ஒரு புடவை கடைக்கு போயாச்சு.


வருஷத்துல ஒரு தரம் எடுக்கறோம், நல்லதா குடுக்கனும்னு முடிவு பண்ணி, இந்த கலர் அந்த கலர்னு பாத்து, பார்டர்ல அன்னம் இருக்கா? மயில் இருக்கா? பூ போட்டு இருக்கா?, ஐந்தரை மீட்டர் இருக்கா? டேமேஜ் இல்லாம இருக்கானு எல்லாம் செக் பண்ணி மயில் கழுத்து கலர்ல ஒரு புடவை எடுத்து அதுக்கு மேட்சிங்க் பிளவுஸ் எல்லாம் செலக்ட் பண்ணி ஒரு வழியா வீட்டுக்கு வந்தாச்சு.


வீக் எண்டுல சென்னை செல்வதால், மறக்காம புது புடவையை லலிதாவிடம் குடுக்க சொல்லி தம்பியிடம் சொல்லிட்டு ஊருக்கு போய் விட்டோம். தசரா முடிந்த பிறகு மறுபடி பெங்களூருக்கு வந்தபின் ஆபிஸ், வேலைன்னு ஓட்டம் துவங்கியது.


நான் ஆபிஸ் கிளம்புமுன் லலிதா வேலைக்கு வர, என்னமா? தசரா எல்லாம் சிறப்பு தானே? என மையமாய் கேட்டு வைத்தேன்.


புடவை நல்லா இல்லை சார்! பளிச்சென்று வந்த பதில் என்னை அதிர வைத்தது. உடுத்தின அன்றே துவைத்து இருப்பாளா? சுருங்கி விட்டதா? சாயம் போய் விட்டதா? படபடவென கேள்விகள் என்னிடம் இருந்து பறக்க, கலர் நல்லா இல்லை சார்! - ரொம்பவே நிதானமாக பதில் வந்தது.

நான் எதுவும் பதில் பேசவில்லை. ம்ம், நமக்கு பிடித்த கலர் அடுத்தவங்களுக்கும் பிடிக்கும் என எப்படி எதிர்பாக்க முடியும்? வாங்கறத்துக்கு முன்னாடி அட்லீஸ்ட் உன் விருப்ப கலர் என்ன?னு ஒரு வார்த்தை கேட்டு இருக்கலாம். யதேச்சதிகார அமெரிக்க மனப்பான்மையுடன் நாமே ஒரு முடிவு எடுத்து அதை அடுத்தவர் மேல் திணிக்கும் மனோபாவம் தானே இது? (கொஞ்சம் ஓவராத் தான் போறேனோ?)

மனதில் பட்டதை பளிச்சுனு, தைரியமா சொன்ன லலிதாவின் துணிச்சல்(அல்லது அட்டிடியூட்) என்னை மிகவும் கவர்ந்தது. போன தடவை நீங்க எனக்கு குடுத்த ரேட்டிங்க், சம்பள உயர்வு விகிதம் எனக்கு சுத்தமா பிடிக்கலை! என துணிச்சலாய் என் டாமேஜரிடம் சொல்ல எனக்கு துணிவு இல்லையே? ஒரு வேளை அப்படி துணிந்து சொல்லி இருந்தால் ஏதேனும் நிகழ்ந்து இருக்குமா? தெரியலை. காலம் பல நேரங்களில் சிலர் மூலமாக பரீட்சை வைத்து விட்டு பின் பாடத்தை நடத்துகிறது.

Wednesday, September 02, 2009

ஓணம் வந்தல்லோ!

பத்து நாளா கேரளா முழுக்க ஒரே கொண்டாட்டங்கள். அதன் சிகரமாக இன்னிக்கு தான் திருவோணம். அது என்ன மாயமோ மந்திரமோ தெரியல, ஓணம் வந்துட்டா எங்க வீட்டு டிவி தானாகவே ஏஷியா நெட்டோ, சூர்யா டிவிக்கோ சேனல் மாறி விடுகிறது. டிவி ரிமோட்ல ஏதோ பிராப்ளம் போல. :)

ஏஷியா நெட்ல ஸ்வைன் ப்ளூ தடுப்பு முறைகளை பத்தி நவ்யா நாயர் ஒரு பேட்டி குடுத்து இருக்காங்க பாருங்க, ஆஹா, டாப் டக்கர். இங்க இப்படின்னா சூர்யா டிவில எக்னாமிக் மெல்டவுன் பத்தி கோபிகா எவ்ளோ பாயிண்ட் பாயிண்டா பேசறாங்க தெரியுமா? அடடா! ஆபிசுக்கு லீவு போட்டு கேக்கலாம், அவ்ளோ விஷயம் இருக்கு அதுல.



குலோபல் வாமிங் பத்தி ஏன் நயன்தாராவிடம் பேட்டி எடுக்க வில்லை? இதை வன்மையாக கண்ணடிக்கிறேன், சே! கண்டிக்கிறேன்.

எப்படித் தான் இவ்ளோ பொறுமையா, அழகா பூக்கோலம் போடறாங்களோ?









ஏதோ ஒரு வருஷம் திருவனந்தபுரத்துல இன்போசிஸ்ல ஓணம் கொண்டாடினாங்களாம், அதை எனக்கு மெயிலா அனுப்பனுமா? நான் கேட்டேனா? :)

என்ட கேரளம், என்ட மலயாளம்னு இருக்காம என்ட இந்தியானு ஒரு பரந்த மனசுடன் இருங்க டே! பாருங்க நானும் வருஷம் தவறாம(2007, 2008) ஓணத்துக்கு பதிவு போடறேன். :)

சரி, இப்படியே இந்த பதிவை நான் நீட்டி முழக்கினா விளைவுகள் கடுமையாக இருக்கலாம்! என கடந்த கால வரலாறு தெரிவிக்கிறது. தங்கமணி வேறு ஊரில் இல்லை, எனவே நான் முடிச்சிக்கறேன்.

Friday, August 28, 2009

இலவசமா குடுக்கறாங்க பா!

இதுக்கு இவ்ளோ துட்டுனு விலை சொன்னா நாம உடனே பேரத்துல எறங்குவோம். அதனால தானோ என்னவோ இலவசமாவே குடுக்கறாங்க.

அப்படி என்னத்த தான் குடுக்கறாங்க?

கீழே உள்ள படத்தை பாருங்க.



மரக் கன்றை வாங்கி நான் போன்சாய் முறையில தான் வளக்க போறேன்னு அடம் பிடிக்க கூடாது. மரக் கன்றுகள் லிஸ்டுல சந்தன மரம் இல்லையே?ன்னு எல்லாம் என்னை நோண்டக் கூடாது. :)

முப்பது, நாப்பது வருஷம் கழிச்சு மரம்ன்னு ஒன்னு இருந்ததுனு நம் வருங்கால சந்ததியினர் படிக்கற அளவுக்கு இப்போ நம் கைவரிசைய காட்டிட்டு இருக்கோம்!னு சொல்ல எனக்கு ரொம்ப வெக்கமா இருக்கு.


என் பதிவுக்கு ஓட்டு போடுங்க, பின்னூட்டம் போடுங்கன்னு எல்லாம் நான் கேக்க மாட்டேன். தயவு செஞ்சு சென்னைவாசிகள் குறிப்பிட்ட நம்பருக்கு குறுஞ்செய்தி அனுப்பி ஒரு மரக் கன்றை இலவசமா பெறுங்க. தினமும் மறக்காம ஒரு கப் தண்ணியும் விடுங்க. ஏன்னா மரத்தை வெச்சவன் தண்ணி ஊத்துவான்னு இளைய ராஜா பாடி இருக்காரு. :)

மத்தவங்க சென்னைல இருக்கற உங்க உறவினர், நண்பர்களுக்கு வழக்கம் போல கம்பெனி குடுக்கற இலவச நெட் சேவையை பயன்படுத்தி என்னை மாதிரி பார்வேர்ட் பண்ணுங்க. :)

நல்ல பதிவு, பகிர்வுக்கு நன்றி, கலக்கிட்டீங்க அம்பி!, கழுவிட்டீங்க அம்பி! ன்னு எனக்கு பின்னூட்டம் போடற நேரத்துல ஒரு குறுஞ்செய்தி அனுப்பிறலாம் தானே! :)

Monday, August 24, 2009

யேர் இந்தியா

க்ரிப்டாலஜி படித்து சைடு போசில்(அப்போதைய) அரவிந்தசாமி சாயலில் இருக்கும் என்னை, இன்டர்போலுக்கு ஆலோசனை வழக்குவதற்காக என் துறைத் தலைவர் டெல்லிக்கு அனுப்பினார் என நான் இந்த பதிவை ஆரம்பித்தால் உங்களில் பலருக்கு தொண்டையில் கிச்கிச் வந்து, ஹக்க்க் என துப்பி விடுவீர்கள் என எனக்கு தெரியும்.

காலாவதியாகி விட்ட எங்கள் கம்பெனியின் பிராடக்ட் லைசன்ஸை இந்த ரிசிஷன் நேரத்தில் புதுப்பிக்கலாமா? வேணாமா? என மண்டையை தடவியபடி கிளைன்ட் யோசிப்பதற்குள், அவர்களை நேரில் சந்தித்து, எங்கள் பிராடக்டை வாங்கினால் ஈரேழு பதினாலு லோகங்களில் உள்ள செய்திகள் எல்லாம் உங்கள் லேப்டாபிலேயே அருவியா கொட்டும். உங்கள் பிசினஸில் தேனாறும் பாலாறும் ஓடும்! என அள்ளிவிடும் வழக்கமான சீப் டிரேய்னர் தன் மனைவியின் ரெண்டாவது பிரசவத்துக்கு போய் விட்டதால், பிராடக்ட் பில்டப் குடுக்க நீ தான் டெல்லிக்கு போகனும்! என என் துறை தலைவர் எனக்கு கொம்பு சீவி விட்டபடியால், நானும் வழக்கமாக எங்கள் ஆபிசில் டிக்கட் புக் பண்ணி தரும் ஹெச்ஆர் அட்மின் உதவியை நாடினேன்.

எப்பவோ எனக்கும் அவனுக்கும் நடந்த ஒரு வாய்க்கால் தகராறை மனதில் வைத்து, யேர் இந்தியாவுல மட்டும் தான் டிக்கட் இருக்கு, இந்த பிடி! என டிக்கட்டை கையில் குடுத்தான். ஏன் இப்படி?னு நான் கேட்டதுக்கு, நாம் எல்லோரும் இந்தியர்கள், எனவே இந்திய பொருளையே வாங்குவோம்! என எழுந்து நின்னு உறுதிமொழி எடுக்கறான். விஜய் மல்லய்யா கூட இந்தியர் தான்டே! என நான் சொன்னதை எல்லாம் பொருட்படுத்தவேயில்லை.

எனக்கு யேர் இந்தியாவில் டிக்கட் கிடைத்ததில் தங்கமணிக்கு அளவில்லா சந்தோஷம். உங்களுக்கு பிரேக் பாஸ்ட் ஊட்டிவிட்டு, பாட்டு பாடி, கதை சொல்லி தூங்க வைத்து பத்ரமா டெல்லியில் கொண்டு போய் விடுவாங்க! கவலையே படாதீங்க! என தங்கமணி தன் பங்குக்கு வெந்த புண்ணில் வெங்காயத்தை தடவினார். நல்லா இருடே!

உங்களுக்கு லால் பகதூர் சாஸ்த்ரியை தெரியுமா? இந்திய பிரதமராக இருந்தாரே! அவர் பிரதமராக பதவியேற்ற அதே வருஷம் யேர் இந்தியாவிலும் நிறைய்ய பேர் யேர்ஹோஸ்டஸ்ஸாக டூட்டியில் சேர்ந்தார்களாம். அதுக்கப்புறமா புது அப்பாயின்மெண்டே போடலை போலிருக்கு.

ரயிலா இருந்தா பயணிகள் சார்ட் எல்லாம் ஒட்டுவாங்க. லிஸ்ட் பாத்து அண்டை அயலார் நட்புறவை வளக்கலாம், வேற ஒன்னுமில்லை. இங்க அத மாதிரி லிஸ்ட் எல்லாம் ஒட்ட மாட்டாங்க போல. பிளைட்டில் அவ்வளவாக கூட்டமில்லை. பக்கத்து சீட்டில் ஆள் அமைவதெல்லாம் இறைவன் குடுக்கும் வரம்! என உறுதியாக சொல்வேன். என்ன தான் யேர் இந்தியாவில் டிக்கட்டை கிழித்து குடுத்தாலும், அன்னிக்கு கடவுள் ரொம்பவே கருணை காட்டி இருந்தான். குதிரை வால் கொண்டை, காதில் பிளாட்டினம் ரிங்க், டெனிம் டி-ஷர்ட், த்ரீ-போஃர் என அழைக்கப்படும் முக்காலே அரைக்கால் ஜீன்ஸ், கையில் ஷெர்லாக் ஹோம்ஸ் புத்தகம்.

இந்த பெண்கள் ஏன் தான் ஷெர்லாக் ஹோம்ஸையும், ஹாரி பாட்டரையும் கட்டி கொண்டு அழுகிறார்களோ? எனக்கு தெரிந்ததெல்லாம் என் அருமை மகன் உண்ணும் செர்லாக் தான். (அதையும் இப்பலாம் துப்பி விடுகிறான், ஃபேளவர் மாத்தனும் போல.)

இந்த கதையின் முடிவில் ஒரு எதிர்பாராத திருப்பம் வரும் பாருங்கள்! அங்க தான் ஷெர்லாக் ஹோம்ஸ் சேர் போட்டு நிக்கறார்! என பொத்தாம் பொதுவாக நூல் விட்டதில் க்ளிக் ஆகி விட்டது.

இந்த கதையை நீங்கள் ஏற்கனவே படித்து இருக்கிறீர்களா?

ரெண்டு தடவை. உங்களுடன் சேர்ந்து மூனாம் தடவையும் படிக்க எனக்கு ஆட்சேபனை இல்லை.

இந்த சம்பாஷனைக்கு பிறகு, லேமேன் பிரதர்ஸ் செய்த தவறுகள், ஐரோப்பாவின் வேலையில்லா திண்டாட்டம், நார்த் கொரியா பரிசோதனை செய்த ஏவுகணை டெக்னாலஜி, என லோக விஷயங்களை பத்தி கன்னாபின்னாவென குதிரை வால் கொண்டையுடன் விவாதிக்க நான் ஒன்னும் லூசு இல்லை.

1) பாந்தினி சில்க் மெட்டீரியலில் கரீனா கபூர் அணிந்து வரும் பட்டீயாலா மாடல் எடுப்பாக இருக்குமா? இல்லை கட் சுடிதார் தான் சிறந்ததா?

2) கார்னியரில் என்ன பொருட்கள் புதிதாக மார்கெட்டுக்கு வந்திருக்கிறது?

3) ராக்கி சாவந்துக்கு வாழ்வு குடுக்கப் போகும் வள்ளல் யார்?

4) பெண்களுரில் மிகச் சிறந்த மால் எது? என உபயோகமான கருத்துக்கள் பரிமாறப் பட்டன. அடுத்த சீட்காரர்களும் தங்கள் கருத்துக்களை தாராளமாக அள்ளி வழங்க, நீயா? நானா? கோபி மாதிரி நிகழ்ச்சியை(கடலையை) சுமூகமாக கொண்டு செல்ல வேண்டியதா போச்சு.

ஆனாலும் இந்த பைலட் ரொம்ப மோசம். வண்டி உளுந்தூர்பேட்டையில அஞ்சு நிமிஷம் நிக்கும். டிபன், காப்பி சாப்டறவங்க சாப்டுக்கலாம்னு ஒரு அறிவிப்பு குடுத்து, ஹைதராபாத், நாக்பூர்னு வண்டியை ஸ்டாப்பிங் போட்டு ஓட்ட வேணாமோ? எங்கயும் நிப்பாட்டாமல் வண்டியை நேரே டெல்லிக்கு கொண்டு போய் விட்டார்.

டக்குனு எழுத பேப்பர் எதுவும் கிடைக்காததால், குதிரை வால், தனது ஈமெயில் ஐடியை என் உள்ளங்கையில் எழுத வேண்டியதா போச்சு. முகம் அலம்பும் போது தண்ணீர் பட்டதால் அந்த ஐடி அழிந்து விட்டது என நான் சத்தியம் செய்தாலும் மேலிடம் நம்ப மறுக்கிறது. :)

Monday, August 10, 2009

ஸ்வைன் ப்ளூவை மும்பை ஏர்போட்டுல எப்படி தடுக்கறாங்க தெரியுமா?

போன வாரம் என் நண்பன் மும்பை சர்வதேச விமான நிலையத்துக்கு (சத்ரபதி சிவாஜி நிலையமாமே!) வந்திறங்கினான். வழக்கம் போல வரிசை என்ற பெயரில் நாலு நாலு பேரா ஒரு லைன்ல போனாங்களாம். பிளைடுலயே ஒரு கார்டு குடுத்து இருக்காங்க. அதுல ஒரு பத்து கேள்விகள் (டிக் செய்யனுமாம்).

அதாகபட்டது, கடந்த பத்து நாளுல நீ இந்த ஸ்வைன் ப்ளூ வந்த நாடுகளுக்கு பயணம் செஞ்சியா? (அறுபத்தி நாலு நாடுகள் லிஸ்டுல இருந்ததாம்)

2) அங்க போயி உனக்கு காய்ச்சல், உடம்பு வலி, தொண்டை வலி, வாந்தி ஏதும் வந்ததா? (யெஸ் அல்லது நோ டிக்குங்க)

3) அப்படி வந்திருந்தால் சிகிச்சை எடுத்தியா? (இதுவல்லவோ கேள்வி!)

4) இந்தியாவுல எங்க தங்க போற?

5) எந்த பிளைட்டுல வந்த?, நம்பர் எழுது.

அப்புறம் வழக்கம் போல பாஸ்போட் நம்பர் எழுது, எங்க பாஸ்போட் எடுத்த?னு சிலபல கேள்விகள்.

இதை எடுத்துகிட்டு நீண்ட கியூவுல போய், அங்கன வரிசையா சிலபல ஹெல்த் ஆபிசர்கள் சேர் போட்டு உக்காந்து இருந்தாங்களாம். (சில பிகர்களும் ஆபிசர்களா இருந்தாங்க என்பது உபரி தகவல்) அவங்க கிட்ட இந்த கார்டை குடுத்தா, உங்களுக்கு காய்ச்சல் வந்துச்சா?னு ராயப்பேட்டை பொது மருத்துவமனை கம்பவுண்டர் மாதிரி கேக்கறாங்களாம். இல்லைனு சொன்னா, ஒரு சீல் குத்தி அனுப்பிடறாங்களாம்.

எனக்கு ஒரே ஒரு டவுட்டு தான்.

நோய் வந்தவரிடமே இப்படி காந்தீய வழியில் விசாரிச்சா அவரு ஆமா! ஆமா! பெரியய்யா!னு ஒத்துப்பார்னு என்ன நிச்சயம்?

எல்லா பயணிகளையும் ஒரு குறைந்த பட்ச உடல் வெப்ப அளவை காட்டும் ஸ்கேன் வழியா வரச் செஞ்சா தானே உறுதியா எதையும் நிர்ணயிக்க முடியும்?

பாதுகாப்பு முதல் ஹெல்த் வரை எல்லா விஷயங்களிலும் இப்படி மெத்தன போக்கான நடைமுறைகளை பின்பற்றினால் அப்புறம் ஏன் அப்பாவி பொது ஜனம் மண்டைய போட மாட்டாங்க?

இந்த நிகழ்வு ஜூலை மாதம் கடைசியில் நிகழ்ந்தது. இதுவரை கிடைத்த தகவல்படி ஸ்வைன் ப்ளூவுக்கு ஆறு பேர் இந்தியாவில் பலி. ஒரு வேளை இப்ப முழிச்சு இருக்கலாம். எனக்கு தெரியலை.

மத்த சர்வதேச விமான நிலையங்களிம் இப்படி தான் செக்கிங்க் நடக்குதா?னு வந்தவங்க யாராவது பின்னூட்டத்தில் சொல்லுங்க.

Thursday, August 06, 2009

சல்சா

தங்கமணியும், ஜுனியரும் நன்றாக அயர்ந்து உறங்கும் ஒரு ஞாயிறு மதிய வேளையில், நான் மட்டும் டிவியை நோண்டிக் கொண்டிருக்கும் போது ஒரு சுவாரசியமான நடன நிகழ்ச்சியை காண நேர்ந்தது. அப்புறம் என்ன ஏதுன்னு கூகிளிட்டு பாத்ததில் அதுக்கு பேரு சல்சா என தெரிய வந்தது. ஸ்பானிஷ் மற்றும் கரீபியனின் கலவையாக உருவாகி இருக்கும் இந்த சல்சா நடனம், பார்ப்பவரை சுண்டி இழுக்கும் திறன் பெற்றது.

பொதுவாக மற்ற நடனங்கள் ஒரு நிமிடத்துக்கு 80 முதல் 120 பீட்டுகள் வரை ஆடப் பெறும். சல்சா 140 பீட்டுகள் வரை போகுமாம். இந்த நடனத்துக்கு சரியான பாடல் அமைவது மிக முக்யம். டூயட் சாங்கிலும் சட்டை பொத்தானை திருகியபடியே, நாலு அடி தள்ளி மரத்துக்கு பின்னாடி நின்னு, நாயகியை பார்த்து பாடும் முரளி சாங்கோ, இல்லாட்டி லல்லல் லா லாலே லல்லலா! என நாயகன், நாயகி, பேக்ரவுண்ட் சிங்கர்ஸ், எஸ்.ஜே.ராஜ்குமார், பின் சந்தேகத்துக்கு டைரக்டர்(விக்ரமன்) குரலில் வரும் பாடல்கள் எல்லாம் சல்சாவுக்கு ஒத்து வரவே வராது. க்யுபா மற்றும் கரீபியன் பாடல்கள் செம காம்பினேஷன். பாடலை கேட்டாலே உற்சாகம் பிறந்து, பக்கத்து சீட்டில் இருப்பவர் கையை பிடித்து கொண்டு ஆடனும் போல இருக்கும். (ஆனா நான் அப்படியெல்லாம் ஒன்னும் இதுவரை ஆடலை).

சரியான பார்ட்னர் அமைவது சல்சாவுக்கு மிக முக்யம்.(இப்ப தான் பாயிண்டுக்கு வர்ரான்யா). தனித் தவில் வைத்து தனியாவர்த்தனம் எல்லாம் இங்க வாசிக்க முடியாது. கண்டிப்பாக ஒரு ஆண், ஒரு பெண் என ஜோடியாகத் தான் ஆட முடியும் (ஆஹா! இதுவல்லவோ நடனம்). ஒருவர் மீது ஒருவர் பரஸ்பர நம்பிக்கை கொள்வது மிக முக்யம். காத்தில் ஆடும் மயிலிறகு போல சுத்தி மிதந்து, சுயன்று, வட்டமடித்து, தரையில் கிங்க் பிஷர் விமானம் போல தரையிறங்கும் போது ஆண் பார்ட்னர் அலேக்காக பிடிக்க தெரியனும். சாம்பார் வெச்சு பத்து, சட்னி வெச்சு அஞ்சு, மிளகாய் பொடி வெச்சு நாலு என ப்ரேக்பாஸ்ட் என்ற பெயரில் இட்லிகளை அமுக்கி விட்டு வரும் ஆள் சல்சாவுக்கு வந்தால் ஆண் பார்ட்னர் சட்னியாகி விடுவார்.

அடுத்து சல்சாவுக்கு முக்யமானது உடை. உடனே ஜெயமாலினி, ஜோதி லட்சுமி, யானா குப்தா ரேஞ்சுக்கு காஸ்ட்யூம் இருக்கும் என நீங்கள் கற்பனை செய்து கொண்டால் நான் பொறுப்பில்லை. கால்களை தடுக்காமல், உடலை இறுக்கிப் பிடிக்காதவாறு பைஜாமா வகைகள், முட்டி வரை இருக்கும் நீண்ட பேண்ட் எல்லாம் உசிதமாக இருக்கும். அதுக்காக அலிபாபா பேண்ட் எல்லாம் செல்லாது செல்லாது. நன்றாக பயிற்சி பெற்றவர்கள் நீண்ட கவுன் வகைகளை தேர்வு செய்வார்கள். காற்றில் மிதந்து வருவது போல நடனம் சிறப்பாக அமையும்.

உடை, பாட்டு, பார்ட்னர் இவை எல்லாவற்றையும் விட மிக மிக முக்யமானது ஆடுபவரின் மன நிலை. மனதில் உள்ள மகிழ்ச்சி அப்படியே முகம் வழியா வழிந்து, ஆடுபவரின் நடன அசைவிலும் வெளிப்பட்டால் தான் சல்சா சிறப்பாக அமையும். இது பரதம், குச்சுபுடி, கதகளி(ஹிஹி) என எல்லா வகை நடனங்களுக்கும் பொருந்தும் என்பது அடியேன் கருத்து.

சல்சாவில் உள்ள அசெளகரியம் என்னன்னு பாத்தா "நான் சல்சாவுக்கு போறேன்"ன்னு யாரிடமும் நாம் தைரியமாக சத்தம் போட்டு சொல்ல முடியாது. என்னப்பா! நான் சல்சா பிராக்டிஸுக்கு போறேன்னு அந்த பொண்ணு தைரியமா என்கிட்ட சொல்லிட்டு போகுது. இதுகெல்லாம் கூடவா பிராக்டீஸ்?னு மேனேஜர் என்னிடம் ஆதங்கப்பட, அவருக்கு கூகிளிட்டு காட்டி சல்சானா நடனம்னு புரிய வைத்தேன்.

ஒரு மண்டலம் சல்சா ஆடி வந்தால் சகல நாடிகளும் சுத்தமாகி, கபாலம் திறந்து குண்டலினி எழுந்து, பூரண மோட்சம் கிட்டும்! என சல்சானந்தா புஜண்ட புராணத்தில் சொல்லி இருக்கார். எனவே நான் சல்சா கத்துக்க போறேன்! என தங்கமணியிடம் சொன்னவுடன், நாட்டிய பேரொளி பத்மினி அம்மா மாதிரி முகத்தில் நவரசத்தையும் காட்டி, ஒரு நொடி அதிர்ந்து விட்டார் தங்கமணி. பின் விலாவரியாக விளக்கியபின் சல்சாவில் உள்ள வில்லங்கத்தை மட்டும் சரியாக மோப்பம் பிடித்து, யூ டியூப்ல வீடியோ பாத்து வீட்லயே சல்சா கத்துகுங்க! என பெரிய மனசு பண்ணி அனுமதி வழங்கி, காலை அஞ்சரை மணிக்கு எழுப்பி விட்டு, "அப்பா ஒழுங்கா பிராக்டீஸ் பண்றாரா?"ன்னு நீ பாத்துக்கோ!னு ஜுனியரையும் ஏவி விட்டாச்சு. நல்லா இருங்கடே! :)

டிஸ்கி: சல்சா என்ற தலைப்பை ஜல்சா என்றோ ஜலஜா என்றோ மிகச் சரியாக தவறாகப் படித்து தலைதெறிக்க வந்த மக்களுக்கு நான் ஒன்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன். இது முழுக்க முழுக்க சல்சா என்ற நடனத்தை பற்றிய பதிவு மட்டுமே! :)

Friday, June 26, 2009

கேள்வி கேக்கறது ரொம்ப ஈசி

நீங்கள் எப்போதாவது ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து இருக்கிறீர்களா? இந்த சங்கிலி தொடரை ஆரம்பித்தவர் அனேகமாக இதை மனதில் கொண்டு தான் இப்படி கேள்விகளை கொக்கி போட்டுள்ளார் என எனக்கு தோன்றுகிறது.

1) உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?

சொந்த பெயரை(ரெங்க ராமன்) தானே கேக்கறீங்க? பெயர் எல்லாம் அப்பா அம்மா வெச்சது தான். ரொம்ப பிடிக்கும். ஏறக்குறைய ஐம்பதாயிரம் பேர் ஆணி புடுங்கும் என் கம்பெனியில் என் பெயர் கொண்ட இன்னொரு நபர் இல்லவே இல்லை.

2) கடைசியா அழுதது எப்போது?

போன ஞாயிறன்று. ஆனாலும் வெங்காயம் ரொம்பவே படுத்தி விட்டது. சுயிங்கம் சாப்பிட்டு கொண்டே வெங்காயம் உரித்தால் கண்ணீர் வராதாமே! உண்மையா?

3) உங்களுக்கு உங்க கையெழுத்து பிடிக்குமா?

பத்தாவது வரை அழகாக இருந்தது. காலேஜ் வந்தபுறம் அவசர அவசரமா புரபசர் சொல்வதை நோட்ஸ் எடுத்ததால் கையெழுத்து கெட்டு விட்டது. வேற யாராவது கையெழுத்து போட்டு எனக்கு குடுக்கும் காசோலை ரொம்ப பிடிக்கும்.

4) பிடித்த மதிய உணவு?

சின்ன வெங்காயம் போட்டு மணக்க மணக்க சாம்பார் + உருளைகிழங்கு(காரம் சேர்த்த) ரோஸ்ட்.

செம பசியோடு இருக்கும் போது சாப்பிடும் படி இருக்கும் எந்த சைவ உணவும் எனக்கு இஷ்டமே!

5) நீங்கள் வேறு யாராவதாக இருந்தால் உங்களோட நட்பு வச்சுக்குவீங்களா ?

கண்டிப்பாக. முதலில் உங்களை நீங்களே நேசியுங்கள். தன்னாலே உலகம் உங்களை நேசிக்கும்! என்ற வரிகளை நம்புகிறேன்.

6) கடல்ல குளிக்கப் பிடிக்குமா? அருவியில குளிக்கப் பிடிக்குமா?

அகத்தியர் அருவி, பாண தீர்த்தம்னு மணிக்கணக்கா மூழ்கி முத்தெடுத்த கூட்டம்லே நாங்க. தடுக்கி விழுந்தாக் கூட தாமிர பரணியில் தான் விழுவோம்லே நாங்க.

7) ஒருவரைப் பார்க்கும்போது முதலில் எதைக் கவனிப்பீர்கள்?

முகம். ஒருவரின் மன நிலையை முகமே காட்டி விடும்.

8) உங்கள் துணைவர்/துணைவி கிட்டே உங்களுக்குப் பிடிச்ச/பிடிக்காத விஷயம்?

பிடித்தது: எதையும் உடனே செய்து விட வேண்டும் என்ற துடிப்பு. பல சமயங்களில் அது எனக்கே ஆப்பாகி விடுகிறது. :)

பிடிக்காதது: "கலகம் விளைவிக்கும் கேள்விகளை தவிர்த்தால் மங்களம் உண்டாகும்" என சீவல்புரி சிங்காரம் என் ராசிக்கு பலன் சொல்லி இருக்கார், எனவே, நாம அடுத்த கேள்விக்கு போவோமே, ப்ளீஸ்.

(ஆமா, யாரது மங்களம்? என்றெல்லாம் கலாய்த்து பின்னூட்டம் போடக் கூடாது. )

9) இப்போ யார் பக்கத்துல இல்லாம போனதுக்கு வருந்துகிறீர்கள்?

கோபிகா, நயன் தாரா என நான் சொல்வேன் என நீங்கள் எதிர்பார்த்தால் நான் பொறுப்பல்ல. என்னோடு எம்சிஏ படித்த சில நண்பர்கள் இப்போ அருகில் இல்லை.

10) இதை எழுதும்போது என்ன நிறத்தில் ஆடை அணிந்துள்ளீர்கள்?

கறுப்பு கலர் டி-ஷர்ட், சாம்பல் கலர் காட்டன் பேண்ட்.

11) என்ன பார்த்து/கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்?

வேற என்ன, நான் பிடுங்கி கொண்டிருக்கும் ஆணியை தான் பாத்திட்டு இருக்கேன். என் பக்கத்து சீட்டிலிருந்து ஏதோ ஒரு மலையாள பாடல் முணுமுணுக்கப்படுகிறது. வல்லிய கேரளம். :)

12) வர்ணப் பேனாவாக உங்களை மாற்றினால், என்ன நிறப் பேனாவாக மாற ஆசை?

ஸ்கை ப்ளூ. ஆமா பேனாவா மாத்தி யாரு கைல குடுப்பீங்க?


13)பிடித்த மணம்?

ரவையை நெய்யோடு சேர்த்து ஐஸ்வர்யா ராய் நிறத்துக்கு வறுத்துகொண்டு, ஒன்றுக்கு ரெண்டு பங்கு சீனி போட்டு, நெய் விட்டு, பதமாக கிண்டிய கேசரியை சுட சுட வாழை இலையில் போடும்போது ஒரு நறுமணம் வரும். அது நமக்கு ரொம்ப இஷ்டம்.

14) நீங்கள் அழைக்கப்போகும் பதிவரிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம்? அவரை நீங்கள் அழைக்கக் காரணம் என்ன?

எல்லாரையுமே பிடிக்கும். விருப்பமும், நேரமும் உள்ள யாரும் அம்பி அழைத்ததாய் நினைத்து எழுதலாம், படிக்க ஆவலாய் உள்ளேன்.

15) உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவுகளில் உங்களுக்குப் பிடித்த பதிவு?

ராப்: வலையுலகில் வேஷம் போடாமல் மனதில் பட்டதை கலக்கலாய் சொல்ல தைரியம் கொண்ட இவரின் எல்லா பதிவுகளும் தான்.

பிளாகேஸ்வரி: இவரின் எல்லா விளம்பரங்கள் தொடர்பான பதிவுகள் மற்றும் இவரின் நையாண்டி தொணி கலந்த மற்ற பதிவுகளும் தான்.

ஸ்ரீதர்: மிக நேர்த்தியாய், கொஞ்சமும் லாஜிக் இடிக்காமல் இவர் எழுதும் கதைகள்.

16) பிடித்த விளையாட்டு?

லக்கோரி. ஏழு கற்களை வரிசையாக அடுக்கி ஒரு டீமிலிருந்து பந்தை எறிந்து அந்த கற்களை சிதறடிக்க வேண்டும். எதிரணி பந்தை எடுத்து நம்ம டீம் ஆட்கள் மீது எறிவார்கள். நம்மாட்கள் எல்லாரும் அவுட் ஆகறதுகுள்ள சிதறிய கற்களை அடுக்கிடனும். செம த்ரில்லா இருக்கும்.

ரெண்டு விஷயம் இதுல ரொம்ப முக்யம்:

1) கற்களை சிதறடிக்கும் போது கவனமா இருக்கனும். பிள்ளையாருக்கு தேங்காய் வடல் போடற மாதிரி எறிந்தால் அம்பேல்.

2) பந்தை கரக்ட்டா எறிந்து எதிரணியை அவுட் ஆக்கனும். ஒரு தடவை, என் டீம் எறிந்த பந்து குறி தவறி தெருவில் ஒரு மாமியின் பின்புறத்தை பதம் பார்த்து விட மொத்த ஆட்டமும் க்ளோஸ். ஆனா அந்த மாமியின் ரங்கமணி எங்க டீமுக்கு ரகசியமாய் ஆளுக்கு நூறு கிராம் அல்வா வாங்கி தந்தார். :)

17) கண்ணாடி அணிபவரா?

இப்பொழுது கணினிக்கு முன்னால் மட்டும்.

18) எந்த மாதிரியான திரைப்படம் பிடிக்கும்?

போரடிக்காமால் விறுவிறுப்பான திரைகதை உள்ள எந்த படமும்.
பிரெஞ்சு, ஜப்பான், இரானிய மொழி படங்கள் எல்லாம் பாக்க ஆசை, ஆனா இன்னும் நேரம் வாய்க்கவில்லை (அப்படின்னு சொல்லிக்க வேண்டியது தான்)

19) கடைசியாகப் பார்த்த படம்?

வெண்ணிலா க-குழு மற்றும் யாவரும் நலம் (டிவிடி).

20) பிடித்த பருவ காலம் எது?

வெண்பொங்கல் மணம் வீசும் மார்கழி மாதம்.

21) என்ன புத்தகம் படித்துக்கொண்டு இருக்கிறீர்கள்?
Magic of Thinking Big

22) உங்கள் டெஸ்க்டாப்பில் இருக்கும் படத்தை எத்தனை நாளைக்கு ஒருமுறை மாற்றுவீர்கள்?

ஆபிஸ்ல படமே வைக்கறதில்லை.
லேப்டாப்பில் நயந்தாரா, அனுஷ்கா,மேக்னா நாயுடுனு வைக்கனும்னு ஆசை தான், மேலிடம் அனுமதி கொடுக்கவில்லை.

23)பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?

மென்டலின், புல்லாங்குழல் இசை பிடிக்கும்.

பூமியில் டர்ர்ர்னு போரிங்க் போடற சத்தம், குழாயை டொர் டொர்ர்னு ரம்பம் வைத்து அறுக்கும் சத்தம் பிடிக்காது.

24) வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக தொலைவு?

இந்த பக்கம் ஆப்ரிக்கா, அந்த பக்கம் அன்டார்டிகானு சொல்ல ஆசை தான். ஆனா அங்க எல்லாம் போனதில்லை. இப்போதைக்கு இந்த பெண்களூரு தான்.

25) உங்களிடம் ஏதாவது தனித்திறமை இருக்கிறதா?

இதை என் நண்பர்களாகிய நீங்கள் தான் சொல்லனும். அடக்கம் அமரருள் உய்க்கும் யு நோ!

26) உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயம்?

தன் பொறுப்பை தட்டிக் கழிக்கும் பொது வாழ்வில் ஈடுபட்டுள்ளவர்களின் செயல்கள்.

27) உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

முன் கோபம்

28) உங்களுக்குப் பிடித்த சுற்றுலாத் தலம்?

முன்னார் (கேரளா)

29) எப்படி இருக்கணும்னு ஆசை?

போதுமென்ற நிறைவான மனதுடன்.

30) கணவர்/மனைவி இல்லாமல் செய்ய விரும்பும் காரியம்?

மறுபடியுமா? விட மாட்டீங்க போல. பெங்களூர் தக்காளியில் தொக்கு போட்டால் ருசியா இருக்காது, ஆனா ஜாம் செய்யலாம், குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். நாம அடுத்த கேள்விக்கு போவாமா? ( நன்றி பொதிகையில் எதிரொலி நல்ல தம்பி)

31) வாழ்வு பற்றி ஒரு வரியில் சொல்லுங்க.

உருகும் ஐஸ்க்ரீம்.
முழுதும் உருகுமுன் நீங்களும் உண்டு பிறருக்கும் பகிர்ந்து வாழுங்கள். (எனக்கே இது டூ மச்சா தெரியுது)

32) உங்க கிட்ட உங்களுக்கு பிடித்த விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?

பிடித்தது: அதீத தைரியம் (சில நேரங்களில் மட்டும்).

பிடிக்காதது: முன் கோபம், சில சமயம் சோம்பல்.

Thursday, June 18, 2009

பேரம்

காலை பத்து மணி:

மிஸ்டர் ரவி, நாங்க 'கெக்ரான் மொக்ரான்' கம்பெனியின் இருந்து பேசறோம். போன வாரம் உங்க கூட நடந்த டிஸ்கஷன்ல நாங்க ரொம்ப இம்ரஸ் ஆயிட்டோம். உங்கள செலக்ட் பண்றதுன்னு முடிவும் பண்ணிட்டோம். ஆனா நீங்க கேக்கற சம்பளம் தான் ரொம்ப ஜாஸ்தின்னு எங்க ஹெட் பீல் பண்றார். கொஞ்சம் மறுபரிசீலனை பண்ண முடியுமா?

ரொம்ப தாங்க்ஸ் சார், ஆனா சம்பளம் நான் சொன்னது தான், ஏன்னா இப்ப என் டெக்னாலஜிக்கும், என் அனுபவத்துக்கும் நல்ல டிமாண்ட் இருக்கு. உங்க ஹெட்கிட்ட பேசிட்டு மதியத்துகுள்ள சொல்லுங்க, எனக்கு இன்னொரு ஆஃபரும் கைல இருக்கு!

ரவி போனை தூண்டித்து விட்டு மனைவியை பார்த்து, பத்து நிமிஷத்துல மறுபடி கால் பண்ணுவாங்க பாரு! என கண் சிமிட்டினான்.

சொல்லி வெச்ச மாதிரி மறுபடி கால், பேரம் ரவிக்கு சாதகமாய் படிந்தது.

நைட் டின்னருக்கு லீ மெரிடியன் போகலாமா திவ்யா?

வேணாங்க, டெலிவரி டைம், எப்போ வேணாலும் வலி வரலாம்.

ஆமா, நீ சொல்றதும் கரக்ட்டு தான்.

*************************************************************************

நன்பகல் ஒரு மணி

டாக்டர்! நார்மல் டெலிவரி ஆயிடும் இல்ல?

மிஸ்டர் ரவி, நானும் அப்படி தான் நெனச்சேன், செக் பண்ணதுல பேபி பொசிஷன் மாறி இருக்கு. சிசேரியன் பண்ணித்தான் எடுக்க முடியும். கொஞ்சம் கிரிட்டிகல் கேஸ், அதனால் சிட்டில 'கைனோ எக்ஸ்பர்ட்' சாந்தா தாயுமானவனை வரவழைக்கலாம்னு பீல் பண்றோம். அவங்க பீஸ் கொஞ்சம் ஹெவி தான். நீங்க என்ன சொல்றீங்க?

நோ பிராப்ளம் டாக்டர், ப்ளீஸ் டூ இட்.

ஓகே! இந்க பார்ம்ஸை பில் பண்ணிட்டு அம்பதாயிரம் முதல்ல டெபாசிட்டா கட்டிடுங்க, மீதி டெலிவரிக்கு அப்புறமா சொல்றோம்.

ரிசப்ஷன் நோக்கி ஓடிய ரவியை பார்த்தபடியே டாக்டர், "நர்ஸ், ஆப்ரேஷன் தியேட்டர் ரெடி பண்ணுங்க!"

சாந்தா மேடத்துக்கும் போன் பண்ணிடவா டாக்டர்?

வேணாம், இது நார்மல் கேஸ் தான், இருந்தாலும் சிசேரியன் பண்ணிடுவோம், நானே மேனேஜ் பண்ணிடுவேன்! என்ன புரிஞ்சதா?
புரிஞ்சது டாக்டர்.
***************************************************************************
மாலை ஐந்து மணி

மணி, என் கார்ல என்ன ப்ராப்ளம்னு கொஞ்சம் பாருப்பா! அடிக்கடி மக்கர் பண்ணுது.

அடடே வாங்க டாக்டர், போன வாரம் தானே ஹாரன் பிராப்ளம்னு வந்தீங்க? இந்த கார் வாங்கி எவ்ளோ வருஷம் இருக்கும் டாக்டர்?

அது ஆச்சு, மூனு வருஷம்.

ஒரு நல்ல பார்ட்டி கைவசம் இருக்கு, ஒன்னேமுக்காலுக்கு ஆரம்பிச்சு ஒன்னரைக்காவது முடிச்சிடலாம். உங்களுக்கு ஒகேன்னா சொல்லுங்க, நாளைக்கே முடிச்சிடலாம்.

ம்ம்ம், சரி முடிச்சுடு, எத்தனை நாளைக்கு இப்படி ரிப்பேர் பண்ணிட்டு இருக்கறது?

ஒகே டாக்டர், நீங்க கிளம்புங்க, நாளை காலை பணத்தோட நான் உங்க வீட்டுக்கு வரேன்.

"டேய் சங்கர், டாக்டரை நம்ம வண்டில கொண்டு போய் அவங்க வீட்ல விட்டுட்டு வா".

டாக்டரை வழியனுப்பிவிட்டு, தன் கைபேசியை உயிர்பித்தான் மணி.

ஹலோ! ராஜு சார், செம கன்டீஷன்ல ஒரு வண்டி வந்ருக்கு. ரெண்டேமுக்கால் சொல்றாங்க. எப்டியும் பேசி ரெண்டேகாலுக்கு முடிச்சிடலாம். இன்னொரு பார்ட்டி வேற ரெண்டரை தர ரெடியா இருக்காங்க. நீங்க நமக்கு நல்லா பழக்கம். என்ன சொல்றீங்க?

பேரம் மணிக்கு சாதகமாய் படிந்தது.

****************************************************************************
இரவு எட்டு மணி

ஐயா, உங்களை நம்பி தான் வந்ருக்கேன், நீங்க தான் அம்மாகிட்ட சொல்லி என் புள்ளைக்கு அவங்க ஸ்கூலுல எடம் வாங்கி தரனும்.

இதோ பாரு மணி! என் கம்பனி வேற, அம்மா ஸ்கூல் நிர்வாகம் வேற. இருந்தாலும் நீ தான் எங்க வண்டி எல்லாத்துக்கும் மெக்கானிக். அதனால் தான் உனக்கு மட்டும் ஐம்பதாயிரம்னு சொல்றாங்க. மத்தவங்களுக்கு ஒரு லட்சம். தெரியுமா? சரி விடு, இப்பெல்லாம் கார்பரேஷன் ஸ்கூல்ல கூட நல்லா சொல்லி தராங்களாமே! பேசாம அங்க சேர்த்து விட்டுடு. என்ன பத்மா, நான் சொல்றது சரி தானே?

இல்லீங்கய்யா. நம்ம அம்மா ஸ்கூல் தான் டாப்!னு எல்லாரும் சொல்றாங்க. நான் நாளை மதியம் பணத்தோட வந்திடறேன்.

போயிட்டு வரேம்மா! மணி விடை பெற்றான்.

என்ன சரி தானே பத்மா, ஏதோ நம்மால முடிஞ்ச கல்வி சேவை! என கண் சிமிட்டினார் அந்த 'கெக்ரான் மொக்ரான்' கம்பெனியின் ஹெட்.

************************************************************************
இது 'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது.

Monday, May 25, 2009

இந்த பிளாக்கர்கள் தொல்லை தாங்க முடியலப்பா!

நானே ஒரு பிளாக்கரா இருந்தும் இப்படி ஒரு தலைப்பு வைக்க எனக்கு எப்படி துணிச்சல் வந்தது? அதான் இங்க பாயிண்டே!

டெல்லியிலிருந்து விடுமுறைக்கு பெங்களூர் வந்திறங்கிய முத்துலெட்சுமி அக்காவை பாக்க அலைகடலென கூட்டமான கூட்டம். அக்காவும் சளைக்காம பத்து மணிக்கு இங்க போண்டா, பதினோரு மணிக்கு அங்க கேசரின்னு வளச்சு வளச்சு ஒரே மீட்டிங்க். நேத்து கப்பன் பார்க்குல கூட ஒரு மாபெரும் பொதுக் கூட்டம். எனக்கு நெறைய வேலை இருந்ததால அக்கா ஆற்றும் உரையை கேட்க முடியாத அபாக்கியசாலி ஆயிட்டேன்.

எதுக்கும் முன்னாடியே ஒரு வார்த்தை சொல்லிடுவோம், இல்லாட்டி அடிப்படை உறுபினர் பதவியை பறிச்சுடுவாங்கன்னு போன் போட்டாச்சு. எதிர்முனையில் ஒரு பெண்மணி குரல் கேட்டது.

முத்துலெட்சுமி அக்கா இருக்காங்களா?

நீங்க யாருன்னு தெரிஞ்சுக்கலாமா?

இங்க தான் குழப்பமே! நெஜப் பெயரை சொல்லவா? பிளாக்கர் பெயரை சொல்லவா? சரி ரெண்டையும் சொல்லுவோம்னு சொல்லியாச்சு.

என் நிக்-நேமை கேட்டு எதிமுனையில் கொல்லுனு ஒரு சிரிப்பு சத்தம், கஷ்டப்பட்டு அவங்க சிரிப்பை அடக்கி கொண்டு,

"முத்து காலையிலேயே கிளம்பி போயிட்டாங்க, இப்ப சாப்டற நேரத்துக்கு வந்துடுவாங்க (அதானே!, அதெல்லாம் அக்கா கில்லாடி ஆச்சே!). ஏதேனும் மெசேஜ் சொல்லனுமா?"

இன்னிக்கு கப்பன் பார்ர்குல ஒரு மீட்டிங்க், அது விஷயமா தான், சரி நான் மறுபடி போன் பண்றேன்னு சொல்லி போனை வெச்சாச்சு.

சமீபத்தில் இலவச கொத்தனார் சென்னைக்கு வந்திருந்தார். நல்லா தூங்கி எழுந்திருக்கும் சாயங்கால வேளையில் அவரு எனக்கு போன் பண்ணி இருந்தார். என் தம்பி தான் போனை எடுத்தது.

யப்பா அம்பி! நான் ___ பேசறேன்பா!ன்னு அவரு நிஜப் பெயரை சொல்லி இருக்காரு.

என் தம்பி தூக்க கலக்கத்துல நீங்க யாருன்னு எனக்கு தெரியலையே!ன்னு சொல்லிட்டான்.

நான் தான்பா 'கொத்தனார்' பேசறேன்! - இலவசமும் விடறதா இல்லை.

கொத்தனாரா? நாம வீடு எதுவும் கட்டலையே?ன்னு சொல்லிட்டே போனை என்கிட்ட தந்ததால மேட்டர் அதோடு போச்சு.

என் பெயருக்கே இவ்ளோ சிரிப்பு. இதையே இப்படி நெனச்சு பாக்றேன்:

நான் தான் பரிசல்காரன் பேசறேன்,
ஜாலி ஜம்பர் பேசறேன், குசும்பன் பேசறேன்,
வெட்டிபயல் பேசறேன், கைபுள்ள பேசறேன்,
கெக்கேபிக்குணி பேசறேன், வால் பையன் பேசறேன்,
பலூன் மாமா பேசறேன், ஈர வெங்காயம் பேசறேன்,
உடன்பிறப்பு பேசறேன்.....

இன்னும் வேடிக்கையா நிறைய பிளாக்கர் பெயர்கள் டக்குனு எனக்கு நினைவுக்கு வர மாட்டேங்குது. முடிஞ்சா நீங்க யோசிச்சு பாருங்க.

ஒரு பிளாக்கர் வீட்டை சேர்ந்தவங்க இப்படி போன் கால் அட்டெண்ட் பண்ணினா எப்படி மண்டை காஞ்சு போவாங்கன்னு நெனச்சு பாத்தாலே சிரிப்பா வருதில்ல? :))

Friday, April 17, 2009

மனம் கவரும் விளம்பரங்கள்

part-1 part-2

சராசரியாக ஒரு நாளைக்கு முப்பது முதல் நாப்பது நிமிடங்கள் டிவி பார்ப்பவராக நீங்கள் இருந்தால் இந்த பதிவுக்கும் உங்களுக்கும் நிறைய தொடர்பு உண்டு. சமீப காலமாக உலா வரும் சில விளம்பரங்களை (சரி, அதில் வரும் மாடல்களை) உன்னிப்பாக கவனித்தது உண்டா?

ஒரு அம்மணி வழியில் கார் ரிப்பேர் ஆனதால் நடந்தே வந்ததாக தன் ரங்குவுடம் கூற, அந்த ரங்கு நிலைமை புரியாமல், காரை பூட்டிட்டு வந்தியா? எங்க பார்க் பண்ணிட்டு வந்தாய்? போன்ற சில்லி கேள்விகள் கேக்கிறார். காராய்யா இப்ப முக்யம்? என்பது போல அந்த அம்மணி ஒரு முறை முறைத்து விட்டு, கடனே என்று ஒரு ப்ரூ காப்பியை கலக்கி அந்தாள் கைல குடுக்க, நம்மாளு ஒரு வாய் குடித்து விட்டு ஞானம் வந்து அம்மணி காலை அமுக்குகிறார். அரை கண்ணால் இதை ரசித்த அந்த அம்மணி தன் இன்னொரு காலையும் நீட்டுகிறார்.

நல்லா இருங்கடே!
காபி அருந்துவது உடல் நலத்துக்கு கேடுன்னு டாக்டர்கள் சொன்னா கேக்றாங்களா? :)

காபில தான் இப்படி ஆப்புன்னா தேனீர்லயும் அதே கதை தான்.

அவசரக் குடுக்கையா ஒரு மலர் கொத்தும் ஒரு ஜோடி ஜிமிக்கியையும்(டிசைன் சூப்பர்)கைல வைத்துக் கொண்டு ஹேப்பி பர்த்டே சுஜி!னு ஒரு ரங்கு வழிய, யோவ்! பொறந்த நாளு அடுத்த மாசம்யா!ன்னு அந்தம்மா கடுப்பாறாங்க.

லூசுப் பய! யாராவது பொண்டாட்டி பிறந்த நாளை மறப்பாங்களா? அப்படியே மறந்தா என்ன நடக்கும்னு ஒரு நிமிஷம் நெனச்சுப் பாக்க வேணாம்.

அந்தம்மா கொஞ்சம் சாது போல. நல்லா யோசிச்சு அந்தாளுக்கு ஒரு மாசம் வல்லாரை கலந்த தேனீர் குடுக்கறாங்க. அப்புறம் என்ன, ரிசல்ட் பிரமாதமா வருது. அம்மணி கிட்ட எத்தனை டிசைன்ல எத்தனை கலர்ல புடவை இருக்குன்னு எல்லாம் நம்மாளு மைன்டுல வெச்சுக்கறாரு.

இன்னொரு விளம்பரம்:

சீக்கிரமே வீட்டுக்கு வந்த ஒரு ரங்கு பொறுப்பு சிகாமணியா மனைவிக்கு டின்னர் தயார் பண்ணி விட்டு "டின்னர் இஸ் வெய்டிங்க்"னு அம்மணிக்கு போன் போடுகிறார். வேலை அதிகம், வர லேட்டாகும்!னு பதில் வர, அப்படியே எல்லாத்தையும் பிரிஜ்ஜுல வெச்சு மூடி விட்டு "டின்னர் இஸ் ஸ்டில் வெய்டிங்க்"னு சந்தோஷப்படுகிறார். அந்த பிரிஜ் அவ்ளோ ப்ரெஷ்ஷா வெச்சு இருக்குமாம்.

இதே நீங்களா இருந்தா ஐபிஎல் மேட்சை பாத்துட்டு இருப்பீங்க, நான் வந்து தான் சமைச்சாகனும்!னு எங்க வீட்ல கமண்டு விழுந்தது. அந்த விளம்பர டைரக்டர் அட்ரஸ் தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்க. ஆட்டோ அனுப்பனும்.

காலத்துக்கு ஏற்ற மாதிரி விளம்பரங்களும் தம்மை புதுப்பித்துக் கொண்டால் தான் போட்டியை சமாளிக்க முடியும் என்பதை தெளிவாக உணர்ந்திருக்கிறார்கள் இன்றைய விளம்பர இயக்குனர்கள். ஏனெனில் மாற்றம் ஒன்று தானே மாற்றமில்லாதது! அவர்களுக்கு என் மனப்பூர்வமான பாராட்டுக்கள்.

Monday, April 06, 2009

விமான நிலைய கஸ்டம்ஸில் மாட்டி இருக்கீங்களா?

அலுவலகத்தில் நம்ம தோஸ்து ஒருத்தர் பிசினஸ் ட்ரிப்பா சிங்கப்பூர் போயிட்டு வந்தார். அங்க சிலப்பல ஐட்டங்கள் எல்லாம் இந்தியாவை விட சல்லிசா இருக்குன்னு ஏற்கனவே தெரிஞ்சுகிட்ட அவரின் தோஸ்த்துக்கள் நைலான் ஜட்டி முதல் அகாய் டிவி வரைக்கும் ஒரு மளிகை கடை லிஸ்ட் போட்டு குடுத்து விட்ருந்தாங்களாம். நம்மாளும் உங்களுக்கு செய்யாம யாருக்கு செய்ய போறேன்?ன்னு எல்லாத்துக்கும் மண்டைய ஆட்டிட்டு ஷாப்பிங்க பண்ணிட்டு கர்ம வீரரா பெங்களூர் விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்தார்.

சிங்கப்பூர் விதிகள்படி இருபத்து அஞ்சாயிரம் ரூபாய்க்கு அதிகமான பொருளை அங்கிருந்து கொண்டு வந்தா சுங்க வரி கட்டனுமாமே! கஸ்டம்ஸ்காரங்க இவரு பொட்டிய ஒப்பன் பண்ணி

ஜட்டி - பத்து
பாடி ஸ்ப்ரே - எட்டு
செண்ட் பாட்டில் - பத்து
ஜானி வாக்கர் - நாலு பாட்டில்,
அகாய் டிவி - ஒன்னுன்னு லிஸ்ட்டை படிச்சிட்டு எல்லாத்தையும் ஒக்கே பண்ணிட்டு, டிவிய மட்டும் கப்புனு புடிச்சிட்டாங்களாம். இந்திய ரேட்படி அந்த எல்சிடி டிவியின் விலை முப்பத்தி ரெண்டாயிரம். அதனால் சைடுல ஒரு அஞ்சாயிரத்தை தள்ளிட்டு போயிட்டே இருன்னு அந்த ஆபிசர் பல்ல காட்டி இருக்காரு.

நம்மாளு சரியான ரூல்ஸ் ராமானுஜம்.

சிங்கப்பூர் ரேட்படி பாத்தா இருப்பத்தி ரெண்டாயிரம் தான் வருது. நான் எதுக்குயா உனக்கு மொய் எழுதனும்?னு சவுண்டு விட்ருக்காரு. சரி, இந்தாளு கிட்ட நம்ம ஜம்பம் பலிக்காதுன்னு உணர்ந்த ஆபிசர் ரேட்டை குறைச்சு ரெண்டாயிரத்துக்கு இறங்கி வந்து, சம்மர் ஆஃபர் குடுத்து பாத்ருக்காரு. அப்படியும் நம்மாளு மசியல. கடைசில ஆயிரம் ரூபாய்க்கு மேட்டர் சுமூகமா முடிஞ்சதாம்.

இல்ல, தெரியாம தான் கேக்கறேன், தாசில்தார், போக்குவரத்து துறை ஆபிசர்களை எல்லாம் நாலாயிரம் வாங்கினாங்க, மூவாயிரம் வாங்கினாங்கன்னு கைது செஞ்சு அவரு கர்ச்சீப்பால் முகத்தை மூடிக்கினு போறதை சன் டிவில காட்றாங்களே, இந்த சுங்கத் துறை ஆட்கள் இப்படி புகுந்து விளையாடறாங்களே, இவங்க மட்டும் என்ன உசத்தி? ஒரு ஆளை கூட டச் பண்ணினதா ஒரு நியுஸும் வர மாட்டேங்குது? எப்படி?

இந்த அளவு தான் கொண்டு வரலாம், இவ்ளோ தான் இதுக்கு சுங்க வரின்னு ஒரு வெளிப்படையான அறிவிப்புகள் எதுவுமே கண்ணுல காட்ட மாட்டேங்கறாங்களே? ஏன்?

ம்ம், இந்தியா ஒரு ஜனநாயக நாடுன்னு நினைக்கறச்ச எனக்கு சில சமயம் சிரிப்பு வருவதுண்டு. உங்களுக்கு எப்படி? இதே மாதிரி கஸ்டம்ஸ்ல எக்குதப்பா மாட்டின அனுபவம் உண்டா? கூச்சப்படாம கொஞ்சம் சொல்லுங்களேன் பாப்போம்.

பி.கு: நைலான் ஐட்டங்கள் எனக்கு அல்ர்ஜி, எனவே நான் அவனில்லை. :)

Friday, March 20, 2009

குழலும் யாழும் இனிதா?

திருவள்ளுவருக்கும் வாசுகி அம்மாவுக்கும் குழந்தை இருந்ததா? அவரும் என்னை மாதிரி இரவு எட்டு மணிக்கு செர்லாக் ஊட்டி, பாட்டு பாடி தூங்க வைத்து, பின் இரவு பதினோரு மணிக்கு ஹக்கீஸ் டயப்பர் மாத்தி இருப்பாரான்னு எல்லாம் எனக்கு தெரியாது. ஆனா மனுஷன் ஒன்னேமுக்கால் அடிகளில் மழலைசொற்கள் பத்தி சோக்கா சொல்லி இருக்காருய்யா!

அதுவும் குழந்தைகள் ஒரு அர்த்தமும் இல்லாமல் தன் போக்குக்கு ஒலிகளை எழுப்பும்போது அதை நம் போக்குக்கு அடடா, என் குழந்தை என்னமா பேசறான்! என பூரிக்கும் தருணங்கள் இருக்கே! அங்க தான்யா நிக்கறாரு வள்ளுவர்.

பொதுவாக ஏழு மாதத்திலிருந்து குழந்தைகளுக்கு பேச்சு வருமாமே! நாம என்னத்த கண்டோம்?

முதலில் தா தா தா என ஒலிக்க தொடங்கி நாம அதை தாத்தா என பொருட்கொண்டு பெருமிதப்படுகிறோம். தாத்தாவை தொடர்ந்து அத்தை வலம் வர தொடங்குவார். அம்மா அப்பா எல்லாம் வர சிறிது காலம் பிடிக்கும் போல.

உனக்கு ஒரு தங்கை இருந்திருந்தா குழந்தை அழகா சித்த்தீனு கூப்பிடும், நானும்

"மச்சினிச்சி வர்ற நேரம் மண் மணக்குது!
மனசுகுள்ள பஞ்ச வர்ண கிளி பறக்குது!ன்னு பாட்டு பாடி இருப்பேன்னு தங்கமணியிடம் வாயை குடுத்து நன்றாக வாங்கி கட்டிகொண்டேன்.

எனக்கு நாலு பெரியப்பா கிடைத்த மாதிரி என் ஜுனியருக்கு ஒரு பெரியப்பாவும் இல்லை, அத்தையும் இல்லை, ஒரே ஒரு சித்தப்பா தான். அதே போல ஜுனியருக்கு மாமாவும் இல்லை, பெரியம்மாவும் கிடையாது, சித்தியும் இல்லை. இது தான் இன்றைய நிலை.

இல்லாத உறவு முறைகளை எப்படி அறிமுகப்படுத்துவது? என்ற குழப்பத்துக்கு இடம் கொடுக்காமல் பதிவுலகில் தான் எத்தனை அத்தைகள், சித்தப்புக்கள், தாய்மாமன்கள்.

ஹிஹி, பாட்டிகளுக்கும் பஞ்சமில்லை. :))

ஆக இனிமே ஷைலஜா அத்தை உனக்கு செயின் தருவாங்க, ராமலெட்சுமி அத்தையும், முத்துலெட்சுமி அத்தை வளையல் தருவாங்கன்னு ஜுனியருக்கு சொல்லிட வேண்டியது தான். சாப்பிட படுத்தினால் இருக்கவே இருக்காரு நம்ம தாய்மாமன் கைப்புள்ள. அவரு பதிவை தொறந்து அவர் படத்தை காட்டியே சாதம் ஊட்டிறலாம். ஜுனியர் இன்னும் பயந்து போய் அழுதா என்ன பண்றதுன்னு தெரியல. :)

இந்த நேரத்தில் டக்குனு தோணிய ஹைக்கூ(அத நாங்க சொல்லனும்)

வெப்காம் பார்த்து
அழுகை நிறுத்தும் குழந்தை.
சிரித்தபடியே அழும்
ஆன்சைட் அப்பா.

இதை ஹைக்கூன்னு ஒழுங்கா ஒத்துகுங்க.இல்லாட்டி நீங்க ஒத்துக்கற வரைக்கும் ஹைக்கூ எழுதறதா உத்தேசம்.

Wednesday, March 18, 2009

யூத் விகடனில் அம்பி

"உங்களுக்கு பத்திரிகையில எழுதறத்துக்கு எல்லாம் ஆர்வம் இல்லையா?"னு ஷைலஜா அக்கா மையமாய் கேட்டவுடன் எனக்கே சிரிப்பை அடக்க முடியலை.

அதுகெல்லாம் நமக்கு அறிவு பத்தாதுனு எனக்கே தெரியும். இருந்தாலும் ஆசை யாரை விட்டது? நான் எழுதினதுல ஏதாவது தேறுமா?னு பாத்து சொல்றேன் அப்படினு பாலிஷ்ஷா சொல்லிட்டு வந்தாச்சு.

யூத் விகடனில் நிரந்தரமாய் திண்ணை கட்டி ஆட்சி செய்து வரும் ராமலட்சுமி அக்காவிடமிருந்து தீடிர்னு இன்று காலை ஒரு மெயில். 'விட்' அப்படினு புதுசா ஒரு பக்கம் யூத் விகடன்ல ஆரம்பிச்சு இருக்காங்க. உங்க பதிவை அனுப்புற வழிய பாருங்க அப்படினு அன்பு கட்டளை.

யாருக்கு அனுப்பனும்? எப்படி அனுப்பனும்? மெயில் ஐடி என்ன?னு நான் குடைஞ்ச குடைசலில் பாவம் வெறுத்து போயி அவங்களே பழத்தை உறிச்சு குடுத்துட்டாங்க. (ஏன்டா இந்த பயலுக்கு சொன்னோம்?னு அவங்களுக்கு ஆயிருக்கும்). அப்புறம் அவங்க சொன்ன ஒரு பதிவை கொஞ்சம் டிங்கரிங்க் பண்ணி ஒரு வழிய அனுப்பியாச்சு. இவன் பதிவு வரலைன்னா என் தலைய போட்டு உருட்டுவானேன்னு ராம லட்சுமி அக்கா தன் குல தெய்வத்துக்கு நேர்ந்துகிட்டதா உறுதி செய்யப்படாத தகவல் வந்தது.

சக்தி விகடனை உருவாக்கறதுல மொட்டை பாஸா செயல்பட்ட ஷைலஜா அக்காவிடமும் மேற்படி விஷயத்தை சொல்லிட்டு நான் பாட்டுக்கு அலுவலக பிசில(சரி, இதுக்கே துப்பினா எப்படி?) இதை மறந்தே போயிட்டேன்.

சாயந்தரமா ராமலட்சுமி அக்காவிடமிருந்து "யப்பா! யூத் விகடன்ல வந்துடிச்சுபா!"னு மறுபடி மெயில். அவங்க வேண்டிகிட்ட குல தெய்வம் அவங்களை கைவிடலை.ஏற்கனவே இங்க எழுதின பதிவு தான். இதோ இந்த சுட்டில போயி பாத்து உங்க மேலான கருத்துக்களை மறக்காம அள்ளி தெளியுங்க. :)

எனக்கும் ரொம்ப சந்தோஷம் தான், ஆனா ஒரு சின்ன குறை. என் படைப்பை சுட்டி விகடன்ல பதிப்பாங்கன்னு நெனச்சேன், இப்படி யூத் விகடன்ல போட்டுடாங்களே பா! :)

Friday, March 13, 2009

பெண்களுரு (Bengaluru)

இப்ப தான் சமீபத்துல 2005ல நான் முதல்முதலா பெங்களூருக்கு நல்லா குளிர் அடிக்கும் டிசம்பர் மாதத்தில் வந்து சேர்ந்தேன். கம்பெனி குடுத்த கெஸ்ட் ஹவுஸ்ல பையை வெச்ச கையோட நண்பன் ஒருத்தனுடன் ரூம் பாக்க கிளம்பியாச்சு. ஏன்னா பதினெஞ்சு நாளைக்கு தான் இந்த கெஸ்ட் ஹவுஸ்ன்னு சொல்லிட்டாங்க.

இந்த ஊர்ல வீட்டு முதலாளிகள் ஒரு நல்ல பழக்கம் வெச்சு இருக்காங்க. அதாவது, ரூம் வேணும்னு போய் நின்னா முதல் கேள்வி எந்த கம்பெனில வேலை பாக்கறீங்க? என்பது தான். நீங்க சொல்லும் கம்பெனியின் மார்கெட் நிலவரத்தை பொறுத்து அந்த முக்கு சந்து வீட்டின்/ரூமின் வாடகை முடிவு செய்யப்படும்.

இதுவே சென்னையா இருந்தா கேட்கப்படும் முதல் கேள்வி நீங்க பேச்சுலர்ஸா? என நினைக்கிறேன். ஒரு வேளை இப்ப நிலமை மாறி இருக்கலாம்.

ஒரு வழியா ரூம் பாத்து செட்டில் ஆனதும், வார இறுதியில் வெளியே சுத்தி பாக்க கிளம்பியாச்சு. இங்க தான் பிரச்சனையே! முதல்ல கன்னடம் பிடிபடவில்லை. பஸ்ல ஏறினா ஒரக்கட பன்னி! பன்னி!னு கண்டக்டர் சொல்றார். என்னடா பன்னின்னு திட்றார்?னு மெல்ல விசாரிச்சா வாங்க!னு சொல்ல பன்னியாம். போங்கனு சொல்லனும்னா ஜன்னியா? யானைக்கு அர்ரம்னா குதிரைக்கு குர்ரம் தானே?

சரி விடுங்க, நம்ம ஸ்டாப் எதுன்னு கண்டுபிடிக்கறத்துக்கு சஞ்சய் ராமசாமி மாதிரி பஸ் போகும் போதே சின்னதா மேப் போட்டு வெச்சுகிட்டேன். உதாரணமா, சிவப்பு சட்டை போட்டு ரிஷப்ஷன்ல நச்சுனு உக்காந்து இருக்கும் பியூட்டி பார்லருக்கு ரெண்டாவது ஸ்டாப்புல தான் இறங்கனும். ஒரு தடவை அதே பொண்ணு மஞ்ச சட்டை போட்டு வந்ததால் என் ஸ்டாப் மிஸ்ஸாகி போச்சு. அதே ரோட்ல ரெண்டு பியுட்டி பார்லர்கள் இருந்தது அப்புறம் தான் தெரிஞ்சது.

இங்க இன்னொரு வினோத விஷயம், என்னனு பாத்தா எந்த பக்கம் திரும்பினாலும் மஞ்சளும் சிவப்பும் கொண்ட ஒரு கொடி முக்குக்கு முக்கு பறந்துகிட்டு இருக்கும். அப்புறம் தான் தெரிஞ்சது அது கர்நாடக மாநிலத்துக்குன்னு தனிகொடி. இந்த கொடி பறக்கற எந்த கட்டிடத்தின் மீதும் கல் எறிய மாட்டாங்க. அதனால் கூகிள், யாஹூன்னு எல்லா கம்பெனி வாசலிலும் இந்த கொடி பட்டொளி வீசி பறக்கும். :)

இன்னமும் சில பேர் கர்நாடகா என்பது மைசூர் ராஜா தலைமையில் உள்ள தனி நாடுன்னு தான் நெனச்சுட்டு இருக்காங்க. நல்லா இருங்கடே!

வெள்ளிகிழமை ஆனவுடன் ஒருவரை ஒருவர் கண்டிப்பா விசாரித்துக் கொள்ளும் கேள்வி, அப்புறம், வீக் எண்ட் பிளான் என்ன? என்பது தான். வெள்ளி மாலை பொழுதுகளில் எல்லா ஏடிஎம்களிலும் மக்கள் வரிசையில் நின்னு ரெண்டாயிரம் எடுத்து கொண்டு ரெண்டு நாளில் மெகா மால்களிலோ தியெட்டர்களிலோ மொய் எழுதி விட்டு வருவார்கள்.

சில குறிப்பிட்ட கம்பெனிகள் தவிர பெரும்பாலான கம்பெனிகளில் டிரஸ்கோட் எனப்படும் உடை விதிமுறைகள் சென்னை அளவுக்கு கிடையாது. எங்க மானேஜர் வருஷத்துக்கு ஒரு தரம் திருப்பூர் போயி ரெண்டு டஜன் டி-ஷர்ட் வாங்கிட்டு வந்துடுவாரு. உடைல என்ன இருக்கு? ஆணிய ஒழுங்கா புடுங்கினா போதும் எனபது தான் இங்குள்ள நிலை. ஆனா சென்னைல இப்படி கிடையாதுன்னு உறுதியா சொல்வேன். மே மாத வெயிலும் டை கட்டி போகும் ஆட்களும் உண்டு.

சென்னை மக்களிடம் இருக்கும் சுறுசுறுப்பு இங்க கிடையாது. அதுக்கு இங்கு நிலவும் வானிலையும் ஒரு காரணம் என்று சொல்லலாம். கல்யாணத்துக்கு பத்திரிகை குடுத்தா வளைகாப்புக்கு வந்து நிப்பாங்க. :)

- இன்னும் சொல்வேன்.

Friday, March 06, 2009

அடிக்கடி எஸ்.எம்.எஸ் அனுப்புற ஆளா நீங்கள்?

ஹிந்துஸ்தான் பெட்ரோலியத்தில் இந்துக்களுக்கு மட்டும் தான் பெட்ரோல் போடறாங்களா? என காமடி வசனங்கள் நிறைந்த தீ படமும், படிக்காதவன் பட விளம்பரங்களுக்கு நடுவில் செய்திகளை போடும் சன் டிவியில் நேற்று ஒரு சுவாரசியமான விஷயத்தை காட்டினார்கள்.

என்னோட பேச விருப்பமா? உடனே இந்த நம்பருக்கு டயல் பண்ணுங்கனு யாரோ ஒரு அபிராமியிடம் இருந்த ஒரு குறுஞ்செய்தி வர, நம்மாளு ஒருத்தர் உடனே அந்த நம்பருக்கு டயல் பண்ணி குணா கமல் மாதிரி அபிராம்மி அபிராம்மின்னு புலம்பி இருக்காரு. அவரு டயல் பண்ணது ஒரு ஐஎஸ்டி நமபர்னு அஞ்சு நிமிஷத்துல அவர் பேலன்ஸ் எல்லாம் கரைஞ்சு போனபிறகு தான் தெரிஞ்சு இருக்கு.

இதே மாதிரி உங்களுக்கு அந்த பாட்டு டவுன்லோடு பண்ணனுமா? தண்டயார்பேட்டை கிரிகெட் மேட்ச் ஸ்கோர் வேணுமா? இவரோட பொன்மொழிகள் வேணுமா?ன்னு ஒரு நாளைக்கு எத்தனை விதமான அழையா விருந்தாளிகளாய் இந்த குறுஞ்செய்திகள்.

எண்ணிக்கைக்கு ஒரு நாளைக்கு அஞ்சுன்னு வெச்சா கூட ஒரு மாசத்துக்கு நூத்தியம்பது (அப்ப பிபரவரி மாசத்துக்கு?னு பாயிண்ட் எல்லாம் பிடிக்க கூடாது).

வாடிக்கையாளர் சிம் வாங்கிய ஒரே பாவத்துக்கு தான் இந்த கருமத்தை எல்லாம் சகிச்சுக்க வேண்டி இருக்கு. இப்படி கு.செ வராம இருக்கனும்னா DNBன்னு டைப் பண்ணி அவுகளுக்கு அனுப்பி வைக்கனுமாம். உடனே 48 மணி நேரத்திலோ அல்லது ஒரு வாரத்திலோ மேல் நடவடிக்கை எடுப்பாங்களாம்.

எனக்கு ஒரே ஒரு சந்தேகம் தான்:

வாடிக்கையாளரா மனம் உவந்து ஒரு மண்ணாங்கட்டி சேவையோ, மோர்குழம்போ உங்க கிட்ட கேக்கலை. நீங்களா ஏதோ தானமா குடுக்கற மாதிரி கு.செ அனுப்பி வைக்கறீங்க. அதுக்கு நாங்க தயவு செய்து டிஸ்டர்ப் செய்யாதீங்க!னு எதுக்கு கெஞ்சனும்? இதே நிலை தான் தான் வெளி நாட்டிலும் இருக்கிறதா? அங்க எல்லாம் கன்ஸ்யுமர் ரைட்ஸ் ரொம்பவே மதிக்கபடும் என்பதால் கேக்கறேன்.


இது பத்தி ஒரு நண்பனிடம் பேசியபோது மேலும் சில சுவாரசியமான தக்வல்கள் தெரிய வந்தது. அதாகப்பட்டது நாம ஐ.டி ப்ரூப், அட்ரஸ் ப்ரூப், ரேஷன் கார்டு எல்லாம் குடுத்து ஒரு சிம் கார்டு வாங்கினால் நம்மை மாதிரியே நம்பர் வாங்கிய லட்சோப லட்சம் இ.வாக்களின் நம்பர்கள் அடங்கிய டேட்டாபேஸை கணிசமான தொகைக்கு இப்படி மார்கெட்டிங்க் செய்யும் கேக்க்ரான் மோக்ரான் ஆளுகளுக்கு நம்ம சர்வீஸ் புரவைடர் ஒரு பொது சேவை மாதிரி வழங்கி விடுவாராம்.

அப்புறம் என்ன? நான் ஷில்பா பேசறேன், நான் ஸ்வேதா பேசறேன்! உங்களுக்கு லோன் குடுக்க ஆசையா இருக்குன்னு ஒரே கால்ஸ் தான், கு.செ தான்.

சைடு கேப்புல இத்தகைய ஷில்பாக்களை பிக்கப் செய்யும் ஆட்களும் உண்டு என்பதெல்லாம் இந்த பதிவுக்கு சம்பந்தமில்லாத விஷயம்.

இதே மாதிரி நொந்த அனுபவம் உங்களுக்கும் இருக்கா? வரிசையா சொல்லுங்க பாப்போம்.

Tuesday, March 03, 2009

நாகேஷும் சில நகைச்சுவை பதிவர்களும்

பல சரித்திர நாயகர்களுக்கு உலக/தமிழ் சினிமா வடிவம் கொடுக்க தொடங்கியதில் நம்மில் பலருக்கு அந்த கேரக்டரில் நடித்த நடிகர்கள் தான் மனசில் நிற்கிறார்கள். கர்ணன், ராஜ ராஜ சோழன் என நினைத்தால் சிவாஜி, கிருஷ்ண பரமாத்மாவென்றால் என்.டி.ஆர், போலிஸ் கமிஷ்னர் என்றால் விஜயகாந்த், அபிராமி தியேட்டர் வாசலில் பிளாக்கில் டிக்கெட் விற்பவர் என்றால் டாக்டர் விஜய் என இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

பொதுவாக கதாநாயகனாக நடிக்க தோற்றப் பொலிவு, உடற்கட்டு என தகுதிகள் இருந்த காலத்தில் அனைத்து விதிகளையும் கட்டுடைத்து அடுத்த வீட்டு பையன் போன்ற தோற்றத்தில் இருந்த நாகேஷ் அவர்கள் இன்றைய தனுஷ் வகையறாக்களுக்கு ஒரு முன்மாதிரியாக திகழ்ந்தார். ஆனா அவரு பஞ்ச் டயலாக் பேசி பசுபதியை எல்லாம் தூக்கி வீசலை என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.

பொதுவாக நகைச்சுவையை சில கூறுகளாக பிரிக்கலாம்:

1)பிறரை தாழ்த்திப் பேசி, பகடி பண்ணுதல் - டேய் கருவா சட்டி தலையா! அடப் பாவிகளா! உங்கள எல்லாம்....வகைகள்.

2)தன்னைத் தாழ்த்தி கொள்ளுதல் - என்னை ரெம்ப நல்லவன்ன்ன்னு சொல்லிட்டான்டா!

3)உடல் அசைவுகளால் நகைச்சுவை காட்டுதல் - சார்லி சாப்ளின் மேனரிசம்.

இன்றைய நகைச்சுவை நடிகர்கள் இதில் ஏதேனும் ஒரு பிரிவில் தான் இருப்பார்கள். ஆனால் நாகேஷ் காமெடியில் இதையெல்லாம் மீறி ஒருவிதமான வார்த்தைகளில் விவரிக்க முடியாத நளினம், மனித நேயம் இருக்கும். அதனால் தானோ என்னவோ இதுவரை அவரின் கலையுல வாரிசாக யாரும் கண்டறியப்பட வில்லை. சின்ன நாகேஷ்!னு யாரேனும் டைட்டில் கார்டில் போட்டுக்கறாங்களா? தெரிந்தால் எனக்கும் சொல்லுங்கள்.


படம் - நன்றி பிளாகேஸ்வரி

பொதுவாக நடிகன் என்ற வட்டத்தை தாண்டி திரைப்படத்தின் பாத்திரமாக வடிவம் பெற்று, அது மக்கள் மனதிலும் நீங்கா இடம் பேற்றவர்கள் மிகச் சிலரே. திருவிளையாடல் தருமி, எதிர் நீச்சல் மாது, சர்வர் சுந்தரம் என கதாபாத்திரங்களின் பேரை கேட்டாலே டக்குனு அந்த படங்களின் காட்சிகள், சில வசனங்கள், பாடல்கள், நாகேஷின் வசன உச்சரிப்புக்கள் எல்லாம் உங்கள் நினைவில் வந்து போகிறதா? இது தான் அந்த கலைஞனின் மாபெரும் வெற்றி என்பேன்.

இன்றைய தினத்தில் வின்னர் படத்தின் கைப்புள்ள, 23ம் புலிகேசி, கிரி படத்தில் வீரபாகு என வடிவேலுவுக்கும் விரல் விட்டு எண்ணக் கூடிய, மக்கள் எளிதில் நினைவில் வைத்துக் கொள்ள கூடிய பாத்திரங்கள் அமைந்தன.

இவ்வளவு தனித் திறமை பெற்று இருந்தும் ஒரு கலைஞனுக்கு கிடைக்க வேண்டிய கவுரவம், விருதுகள் எதுவும் நாகேஷுக்கு கிடைக்காமல் போனது மிகவும் துரதிஷ்ட வசமானது. அரசாங்கம் முடிந்தால் நாகேஷ் பெயரில் ஒரு விருது ஆரம்பித்து அடுத்த தலைமுறைக்கு இந்த மேதையை பற்றி தெரியபடுத்தி தம் தவறை துடைத்துக் கொள்ளட்டும்.

கடவுளை சிரிக்க வைக்க நாகேஷ் சில காலம் விண்ணுலகம் சென்றுள்ளார். கடவுளை வயிறு குலுங்க சிரிக்க வைத்த பிறகு மீண்டும் இந்த மண்ணுலகிற்க்கு விரும்பி வருவார் என விஜய் டிவியில் மனம் நெகிழ்ந்து பிண்னனி பாடகர் P.B.ஸ்ரீனிவாஸ் சொன்னது சத்தியமான உண்மை என்பேன்.

இப்ப அபி அப்பாவ பாருங்க, ஆசையா, முத்து முத்தான கையெழுத்துல அபி ஒரு கவிதை எழுதி தந்தா, அதை தொறந்து பாக்க கூட நேரமில்லாம, துபாய்க்கு வந்து பாத்திட்டு, உடன்பிறப்புக்கு ஒரு கடிதம் ரேஞ்சுக்கு, இவரும் அருமை மகள் எழுதிய கவிதைனு ஒரு தொலை நோக்கு பார்வையுடன், ஒரக்கண்ணில் கண்ணீர் துளியுடன் பதிவா போடறாரு. நேர்லயே அபியை பாராட்ட முடியலையேன்னு அவருக்கு எவ்ளோ பீலிங்க்ஸா இருந்திருக்கும்?

இன்று பதிவுலகையும் பாருங்கள், எத்தனை பேர் எவ்ளோ கஷ்டங்களுக்கு இடையில்,அலுவலக பணிக்கிடையில், வீட்டு வேலைகளுக்குகிடையில், காய்கறி நறுக்கி கொண்டும், பாத்திரம் தேய்த்துக் கொண்டும், டயப்பர் மாத்திக் கொண்டும்,பூரிக்கட்டை அச்சத்துடனும், நகைச்சுவையாக பதிவிடுகிறார்கள் என எண்ணிப் பாருங்கள். இத்தகைய நகைச்சுவை பதிவர்களை ஆதரித்து அங்கீகாரம் தாருங்கள்.

பி.கு: இந்த மேதைக்கு நினைவஞ்சலி கூட என்னால் இவ்ளோ தாமதமாகத் தான் போட முடியுது என நினைத்து மிகவும் வெட்கப்படுகிறேன்.

Thursday, February 26, 2009

தங்க நகை வாங்க போறீங்களா?

ஜூஸ் போட்டபின், மிச்சம் இருக்கும் எலுமிச்சம்பழ மூடிகளை தூர எறியாமல், நட்டு கழன்ற உங்க வீட்டு ரங்கமணி தலையில் தடவி வர, ரெண்டு வாரத்தில் நல்ல முன்னேற்றம் தெரியும்! என சமையல் குறிப்புகள்(?) வரும் மாதம் ஒரு முறை வரும் ஒரு பெண்கள் பத்திரிகையில், கார்டன் சில்க்ஸ் கட்டி போஸ் குடுத்து கொண்டிருந்த மாடலை எங்கோ பாத்ருக்கோமே? என ஆழ்ந்த யோசனையில் இருந்த நான் "கிளம்புங்க, ஷாப்பிங்க் போகனும் என தங்க்ஸின் குரல் கேட்டு மறுபேச்சு இல்லாமல் கிளம்பியாச்சு.

அங்க சுத்தி, இங்க சுத்தி, கடைசில தங்க்ஸின் நண்பி ஒருத்தர் சொன்னாரேன்னு ஒரு குறிபிட்ட வகை நகையை தேடி சென்னையில் அந்த பிரபலமான நகைக் கடைக்கு போனோம். அவங்க சமீபத்துல தான் வேளச்சேரியிலும் ஒரு கடைய தொறந்து கல்லா கட்டிட்டு இருக்காங்க, யாருன்னு கண்டுபிடிங்க பாப்போம். :)

நாங்க போன அன்னிக்கு தங்கம் கிராம் ஆயிரத்து நானூற்றி ஐம்பத்தி ஏழு ரூபாய். என்ன இப்பவே கண்ண கட்டுதா? ஆமா, எனக்கும் கட்டிடுச்சு. இருந்தாலும் என்ன தான் நடக்குது பாத்துடுவோம்னு கம்முனு இருந்தேன்.

எங்களை பாத்ததும் நாங்க என்னவோ கிலோ கணக்குல வாங்க போறோம்னு நினைச்சோ என்னவோ பலத்த வரவேற்பு. ஜில்லுனு பேஃன்டா எல்லாம் குடிக்கக் குடுத்தாங்க.
கடைசில நாங்க எதிர்பார்த்து போன நகை ரெண்டு கிராம்லயும் இருக்கு, நாலு கிராம்லயும் இருக்குனு தெரிஞ்சது. அந்தாளுக்கு சப்புனு போச்சு. இருந்தாலும் வந்தவரை லாபம், கொண்ட வரை மோகம்னு சளைக்காம எங்களுக்கு நகைய எடுத்து காட்டி கால்குலேட்டரை தட்டினார்.

நாலு கிராமுக்கு எவ்ளோ வரும்னு நீங்களே கணக்கு போட்டுகுங்க. செய்கூலி கிராமுக்கு ஐம்பது ரூவாயாம். அதுக்கப்புறம் தான் மேட்டரே. சேதாரம் பதினெட்டு சதவீதம் போட்டு இருக்கோம்னு சொன்னாரு.

அதாவது நாலு கிராம் நகைய செய்யும் போது பதினெட்டு சதவீதம் வேஸ்ட்டா போச்சாம். அதுக்கும் நாம தான் மொய் எழுதனும்னு சொல்லி ஒரு ரேட்டை போட்டு மொத்தம் ஏழாயிரத்து சொச்சம் வந்திச்சு. சுருக்கமா சொல்லனும்னா நாலு கிராம் நகைக்கு ஐந்தேமுக்கால் கிராம் ரேட் வருது.

மிச்சம் இருந்த பேஃன்டாவை முழுக்க குடிச்சு முடிச்சேன்.
வீட்ல பெரியவங்களை கேட்டு ஒரு முடிவுக்கு வரோம்னு சொல்லிட்டு அந்தாளு விட்ட லூக்கை பாத்தும், பாக்காம நைசா அங்கிருந்து எஸ்கேப் ஆயிட்டோம்.

சரி, எனக்கு ஒரு சந்தேகம். நகை செய்யும் போது சேதாரம் ஆகற பதினெட்டு சதவித தங்கத்துக்கும் நாம தானே துட்டு குடுக்கறோம்? அவங்க ஏன் அந்த சேதார தங்கத்தை அல்லது தங்கப் பொடியை ஒரு பொட்டலத்துல மடிச்சு நம்மகிட்ட தர மாட்டேங்கறாங்க? தராத ஒரு பொருளுக்கு நாம ஏன் துட்டு குடுத்துட்டு இருக்கோம்? இதை பத்தி நீ என்ன நினைக்கறன்னு தங்கஸ் கிட்ட ரொம்ப சீரியஸா கேட்டேன். அம்மணி வழக்கம் போல நமுட்டு சிரிப்புடன் ஒரு லூக் விட்டுட்டு பேசாம இருந்துட்டாங்க.

இதைப் பற்றி நீங்க என்ன நினைக்கறீங்க?

பி.கு: எனக்கு பேஃன்டா பிடிக்காது, மேங்கோ ஸ்லைஸ் தான் பிடிக்கும்னு அடுத்த தடவை போகும் போது அந்த கடைக்காரர் கிட்ட சொல்லனும். :)

Friday, February 20, 2009

மானேஜர்கள் S/W இஞ்சினியர்களிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்




1) அது எப்படி கண்ணா, ஒரு மெயின்டன்ஸ் பிராஜக்டை கூட இப்படி ஜவ்வா இழுத்து, இழுத்து உன்னால வேலை செய்ய முடியுது?

2) காலையில வந்தவுடனே தமிழ்மணம், ஜிடாக்குல போஸ்ட் போட்ருக்கேன், பாருங்க!னு அறைகூவல், போதாகுறைக்கு யாஹு மெயில், ஹாட்மெயில். ஆனா நாங்க வரது தெரிஞ்ச உடனே பிராஜக்டுல மூழ்கி முத்தெடுக்கற மாதிரி ஒரு சீன் எப்படி ராசா உன்னால போட முடியுது?

3) அப்ரைஸல் டையத்துல மட்டும் ஒரு நாளைக்கு பத்து தடவ என்னை பாத்து சிரிக்கிறியே ஏம்பா?

4) அப்ரைஸலுல குறைவா ரேட்டிங்க் குடுத்தா உடனே நவுக்ரில ரெஸ்யூம் அப்டேட் பண்றியே அது ஏன் ராசா? டாப் மேனேஜ்மெண்ட் சொல்றதை தானே நாங்க செய்றோம், என்ன, வெச்சுகிட்டா வஞ்சனை பண்றோம்?

5) யாராவது உன் செல்லுக்கு கூப்டா உடனே கட் பண்ணிட்டு டக்குனு ஆபிஸ் போனை தேடறீயே, இதோட பில்லை உன் சம்பளத்துல கழிச்சுடலாமா?

6) மானேஜர்னாலே டெக்னிக்கலா ஒன்னும் தெரியாது!னு நீயே எப்படிபா முடிவு செஞ்சுக்கற? நாளைக்கு நீயும் மேனேஜர் ஆனபிறகு உனக்கும் இது பொருந்துமா?

7) வார நாட்கள்ல குடுத்த வேலைய ஜவ்வா இழுத்து வெள்ளிகிழமை வரை வெச்ருந்தா நாங்க எப்படிபா அதுக்கு பொறுப்பாளி ஆக முடியும்? உனக்கு சம்பளம் என்ன தமிழ்மணமா குடுக்குது?

8) ஆன் சைட் போயிட்டு வந்தபுறம் ஒரு வாரத்துக்கு கால் கீழ படாம நடக்கறீயே அது ஏன்பா?

9) டீம்ல ஒரு நல்ல பிகரோட ஜகஜமா நாங்க பேசினா அது கடலை! அதையே நீங்க பேசினா டெக்னிகல் டிஸ்கஷனா? எந்த ஊர் நியாயம்பா இது? :)

10) யாரோ கஷ்டப்பட்டு அடிச்சு வெச்ச கோடை சும்மா அல்வாவாட்டும் கூகிள் ஆண்டவரிடம் வாங்கி ஒரு கட்டிங்க் ஒரு ஒட்டிங்க் போட்டு நீயே டெவலப் பண்ணின மாதிரி அத ஒழுங்கா டெஸ்ட் கூட பண்ணாம,எப்படிபா உன்னால சீன் போட முடியுது? டெஸ்டிங்க் டீம்னு ஒன்னு இருக்கு, நியாபகம் இருக்கா?

வெட்டியின் பதிவை பாத்ததும் டக்குனு தோணிச்சு. இதுல ஏதும் மனம் புண்படும்படி எழுதி இருந்தா சொல்லுங்க, தூக்கிடறேன்.

டிஸ்கி: நான் மேனேஜர் இல்லை. :)

Tuesday, February 17, 2009

மதுரை

பெங்களூரில் இருந்து மதுரைக்கு செல்லும் ஒன்னே ஒன்னு! கண்ணே கண்ணு டிரெயினில் லல்லு பிரசாத் யாதவுக்கு மட்டுமே டிக்கட் கிடைக்கும் போலிருக்கு. ஒரு மாதம் முன் கூட்டியே ஆன்லைனில் டிக்கட் நிலவரம் பார்த்தால் வெய்டிங்க் லிஸ்ட் என பல்லிளிக்கிறது.

மதுரை - தென் தமிழகத்தின் தலை நகரம். இரவு பன்னிரெண்டு மணிக்கு கூட சுடசுட இட்லியும், தொட்டுக்க மூனு வகை சட்னிகளும், போதாகுறைக்கு தளதளவென கொதிக்கும் சாம்பாரும் தந்து, நல்லா பிணைஞ்சுச் சாப்டுங்கண்ணே! காசில்லாட்டி நாளைக்கு தாங்க!என பாசத்தை போதிக்கும் உறங்கா நகரம். தென் மாவட்ட மக்களுக்கு ஏதெனும் கேஸ், வாய்தான்னாலும் மதுரை தான். வெட்டு குத்து கேசில் ஆஸ்பத்திரி என்றாலும் மதுரை தான்.
இங்கு பல விஷயங்கள் பேசி தீர்க்கபடுகின்றன, சில விஷயங்கள் தீர்க்கப்பட்டு பேசப்படுகின்றன.

இங்குள்ள மக்களுக்கு வாக்கும்,கையும் ரொம்பவே சுத்தம். மதுரை மல்லி, ஜில் ஜில் ஜிகர் தண்டா, முருகன் இட்லி கடை, தமிழ் மாதங்களின் பெயர்களில் வீதிகள் என தனக்கே உரிய சிறப்புடன் திகழ்வது மதுரை தான்.

மதுரை மீனாட்சி அம்மனை தம் வீட்டுப் பெண்ணாகவே பாவிக்கின்றனர். நீ பண்றது கொஞ்சம் கூட நல்லாயில்ல, உன் மனசுல என்ன தான் நினச்சுட்டு இருக்க?ன்னு மீனாட்சி கோவிலில் என் அருகில் இருந்த ஒரு அம்மா மிக இயல்பாக அம்மன் சன்னதியை பாத்து கேக்க எனக்கு அது ஒன்றும் வியப்பாக இல்லை.

ஏப்ரல் எட்டாம் தேதி கும்பாபிஷேகத்துக்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது மீனாட்சி கோவில். இப்போதெல்லாம் டூரிஸ்ட் கூட்டம் ரொம்பவே அதிகம். கோவிலை சுற்றி இருக்கும் வீதிகளை சிமெண்ட் தளம் அமைத்து வாகனங்கள் நுழையாதவாறு செய்து விட்டனர். உருப்படியான விஷயம். அப்படியே பொற்றாமரைக் குளத்தையும் தூர் வாரினால் நல்லா இருக்கும்.

மதுரையிலும் மெல்ல மெல்ல அப்பார்ட்மெண்ட் கலாச்சாரம் அடி எடுத்து வைத்து இருக்கிறது. இன்னும் டைடல் பார்க் வேற வரப் போகுதாம். வரிசையாக மால்கள், நாப்பது ரூபாய்க்கு ஒரு பாக்கெட் பாப்கார்ன், ஐநாக்ஸ் எல்லாம் வந்து விடும். மீனாட்சி தான் காப்பாத்தனும்.


எதிரியை ஓட ஒட விரட்டியவரே! தென் மண்டல தளபதியே! நாளைய நாடாளுமன்றமே! ( நல்ல வேளை, ஜனாதிபதி மாளிகையை விட்டு வெச்சாங்க), எதிரிகளுக்கு பட்டை நாமம் சாத்தியவரே! எதிர்கால சிம்மாசனமே! - இதெல்லாம் அஞ்சா நெஞ்சரை போற்றி ஒட்டப்பட்ட போஸ்டர்கள் தான். சும்மாவா? சங்கம் வெச்சு தமிழ் வளர்த்த மதுரையாச்சே!

மதுரைக்கு போகும் போது பஸ்ஸில் போக்கிரி படம் போட்டார்கள். ஏதோ அசினுக்காக படத்தை பாத்தாச்சு. திரும்பி வரும் போது கன்டக்டருக்கு என்ன தோணியதோ டபக்குனு வில்லு பட டிவிடியை போட்டு விட்டார். என்ட்ரி சாங்குல ராமன் கிட்ட வில்லை கேட்டேன், பீமன் கிட்ட கதய கேட்டேன்னு வரிசையா இளைய தளபதி அடுக்கிக் கொண்டே போக, டக்குனு ஒரு பெரியவர், ஏம்பா! இனிமே டைரக்டர் கிட்ட கதைய கேளுப்பா முதல்ல!னு சத்தமா சொல்ல பஸ் முழுக்க சிரிப்பொலி. மதுரைகாரங்க நக்கல் நையாண்டி, குசும்புக்கு ரொம்பவே பெயர் பெற்றவர்கள் என சொல்வது உண்மை தானே?

Friday, February 13, 2009

Bangalore Pubs

பெங்க்ளுரில் நீங்கள் ரோட்டில் தடுக்கி விழுந்தால் மூன்று இடங்களில் விழ வாய்ப்புள்ளது.
1) அனுமார் கோவில்கள்
2) பூங்காக்கள்
3) பப்புகள்.

நான் நெல்லை மாவட்டத்தில் பள்ளி செல்லும் காலங்களில்(8th படிக்கும் போது), நம்ம தோஸ்து ஒருத்தன் லீவுக்கு பெங்க்ளுர் போய்ட்டு வந்து, எங்களிடம் 70 எம்.எம் சினிமாஸ்கோப்பில் பி.வாசு மாதிரி சூப்பரா கதை விட்டான்.

அதில் சில துளிகள்:

1) பெங்க்ளுரில் எப்போ பார்த்தாலும் பனி மழை தான். நன்னாரி சர்பத் பாட்டில் கையில இருந்தா, நாம ஜூஸ் போட்டு, போட்டு குடிச்சுண்டே இருக்கலாம்.

(இங்கு இருக்கும் மிதமான கிளைமேட்டுக்கு தான் அந்த p.வாசு இவ்வளவு பில்டப் குடுத்தான்னு எனக்கு அப்போ தெரியாது. ஆ!னு வாய் பிளந்தேன்.)

2) சகஜமா நாம, தெருவுல கூட எல்லா இந்தி நடிகைகளையும் பார்க்கலாம். மாதுரி தீட்சித்தை கூட நான் பார்த்தேன். அப்போ, ஏக்! தோ! தீன் பாட்டு சக்கை போடு போட்டது!

(இங்கு உலா வரும் சில சப்பாத்திகளை தான் அந்த நாதாரி பாத்துட்டு, "மாதுரி தீட்சித்"னு எங்களிடம் கதை விட்டான்னு எனக்கு இப்போ தான் உரைக்கிறது.)

3) அங்கே நிறைய பப்புகள் இருக்கு!
மூணாவது பாயிண்ட் தான் எங்களுக்கு புரியலை.
"போடா! நீ ஆக்ஸ்போர்ட் டிக்க்ஷனரியில் ஏதோ ஒரு வார்த்தையை பாத்துட்டு எஙகளிடம் ரீல் விடறியா?"னு எங்கள் செட்டில் ஒருத்தன் சுதாரித்து விட்டான்.

நானும் என் பங்குக்கு, " நான் குழந்தையா இருக்கும் போது(இப்பவும் நான் குழந்தை தான்) என் அம்மா நெய் விட்டு பிசைஞ்சு எனக்கு ஊட்டி விட்ட பப்பு சாதம் விக்கற ஓட்டலை தானேடா நீ சொல்ற?" இது ஒரு பெரிய விஷயமா?னு புத்திசாலிதனமா அவனை மடக்கி விட்டேன்.

அந்த கூட்டத்துக்கு நான் தான் மொட்டை பாஸ்.என் கூட்டத்துக்கு நான் சொல்றது தான் தீர்ப்பு! செல்லாது! செல்லாது!னு அவனது மூணாவது பாயிண்டை தள்ளுபடி செய்து விட்டோம்.

அதன் பின் நான் காலேஜ் படிக்க மதுரை வந்தாச்சு. இரண்டாம் ஆண்டு படிக்கும் போது, இங்கேயும் ஒரு நண்பன் லீவுக்கு பெங்க்ளூர் போயிட்டு வந்து, "பெங்க்ளூர் கலக்கலா இருக்குடா மச்சான்! கிளைமேட்டும் சரி, அத விடு, பப்ஸ் எல்லாம் அட்டகாசமா இருக்குடா மாப்ளே!"னு சொல்ல, நான் "சரி, இவன் ஏதோ பேக்கரி கடையில் கிடைக்கும் பப்ஸை தான் சொல்றான்!"னு நினைத்துக்கொண்டேன்.

வேலைக்கு சென்னை வந்து ஒரு வருடம் ஓடிய பின் தான் கொஞ்சம் விவரம் புரிந்தது. அதுவும், கம்பெனியில் எதாவது பார்ட்டி வந்தா, உடனே, நண்பர்கள் "எல சன்முகம்! எடுறா வண்டிய!"னு நாட்டாமை விஜயகுமார் ரேஞ்சுக்கு சவுண்டு விட்டு, பப்ஸை நோக்கி படை எடுப்பார்கள்.(அங்கு சென்று வாந்தி எடுப்பார்கள், அது வேற விஷயம்!)

நீயும் வா! சும்மா வேடிக்கை பாரு!னு கெஞ்சினாலும் நான் சிக்கியதில்லை.
அதன் பின் பெங்க்ளுரில் வேலை கிடைத்தவுடன், ஊருக்கு போய் அம்மா, அப்பாவிடம் சொல்லிவிட்டு ஜாயின் பண்ணலாம்னு போனேன்.
என் பக்கத்து வீட்டுல ஒரு புண்ணியவான் இருக்கார். அவர் நின்ன இடம் தீப்பற்றி எரியும். கொளுத்தி போடுவதில் டாக்டர் பட்டம் பெற்றவர்.

சும்மா நான் லீவுக்கு போனாலே, "ஏய்! என்ன அம்பி வந்துட்ட? வேலை அவ்ளோ தானா?"னு கேட்டவர். யோவ்! லீவுக்கு வந்திருக்கேன்யா! 4 நாளுல திரும்பி போயிடுவேன்!னு நான் மட்டும் விளக்கம் சொல்லலை அவ்ளோ தான்!

"நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி!அம்பியை வேலயை விட்டு தூக்கிட்டா! அதான் திரும்பி வந்துட்டான்!'னு டமுக்கு அடித்து விடுவார் அந்த மனுஷன்.
நான் தாமிர பரணியில் குளிக்க போயிருக்கும் போது, என் அம்மா அப்பாவிடம் என்ன சொன்னாரோ தெரியாது.
நான் (ஊறி) வந்தவுடன் என் அம்மா, "இதோ பாரு! பெங்களுரில் கண்ட கண்ட இடத்துக்கெல்லாம் போக கூடாது! நல்லவங்க கூட சேரனும். உனக்கு நல்ல புத்தியை குடுக்கனும்னு அந்த பகவானிடம் நாங்க வேண்டிப்போம்! நீயும் வேண்டிக்கோ! என்ன புரிஞ்சதா?"னு என்னை போட்டு தாக்க, "ஆகா! பத்த வெச்சியே பரட்டை!"னு நான் அந்த ஆள் வீட்டை பார்த்து முறைத்தேன்.

என் தம்பி, இது தான் நல்ல சமயம்னு, அம்மா! அண்ணா அத மாதிரி எல்லாம் பண்ண மாட்டான் மா! தண்ணி அடிச்சாலும், வாந்தி எடுக்க மாட்டான் மா!னு ஸேம் சைடு கோல் அடித்தான்.

அதன் பின், தென் ஆப்ரிக்காவுக்கு போகும் காந்தி ரேஞ்சுக்கு, "பெருமாள்/அனுமார் கோவில் தீர்த்தம் தவிர எதையும் நான் இதுவரை தொட்டதில்லை! இனி தொட போவதும் இல்லை!"னு டிஸ்கிளைமர் குடுத்த பின் தான் வீடு சகஜ நிலைக்கு திரும்பியது.

போன வாரம், நண்பர் ஒருவருடன் M.G.ரோடில் ரோடில் உள்ள ஒரு ரெஸ்டாரெண்டில் இரவு டிபன் சாப்பிட நேர்ந்தது. பில்லை அவர் கட்டுவார்னு நான் நினைக்க, என்னை விட பார்ட்டி படு உஷாரு. பின் இரண்டு பேரும் ஷேர் பண்ணினோம்.

மாடியில் இருந்த அந்த ஓட்டலுக்கு கீழே ஒரு பப் இருந்ததை நான் கவனிக்க வில்லை. அவர் பார்த்து விட்டு, "என்ன, அம்பி! இதேல்லாம் பாத்ருக்கீங்களா? தண்ணி அடிச்ச்ருக்கீங்களா?னு கேட்டார்.

இது என்ன, மைசூர் ராஜா அரண்மனையா? மற்றபடி, மதுரையில் இரண்டு நாளைக்கு ஒரு தரம் வைகை தண்ணீர் கார்பரேஷனில் விடுவார்கள். குடம் குடமா எங்க பாட்டிக்கு அடிச்சு குடுத்ருக்கேன்னு நான் நக்கல் விட்டதில் பார்ட்டி டென்ஷனாகி விட்டார்.
நாம கிளம்பலாமே!னு அவஸ்தையாக நெளிந்தேன்.

அவர் விடாமல், எப்படி இருக்கு?னு சும்மா உள்ள போயி பாருங்க!னு கூட்டி போனார்.
நைட் லேம்ப் தான் எல்லா டேபிள்களிலும் போட்டிருந்தனர். ஒரே புகை மண்டலம். எல்லார் கையிலும் புகைந்து கொண்டு இருந்தது.

சில பாரதி கண்ட புதுமை(?) பெண்களும் ஊதிக் கொண்டு இருந்தனர். ஜக் மாதிரி இருந்த சில பெண்கள் கையில் ஜக்குடன் பீர் வேறு. சாந்த ஜக்குபாய் இவங்க தான் போலிருக்கு! :)

பாவம்! அவங்களுக்கு வீட்டில் என்ன கஷ்டமோ, மாமியார் கொடுமையோ யாரு கண்டா!

சக பதிவர்கள் எல்லாருக்கும் அன்பார்ந்த நேச தின நல்வாழ்த்துக்கள், அதான் வாலன்டைன்ஸ் டேன்னு ஆங்கிலத்துல சொல்றாங்களே தொரைமாருங்க. என்னவோ போங்க.

நாம எல்லாரையும் எல்லா நாளும் நேசிக்க கத்துகிட்டோம்னா எதுக்கு ஒரு தனி டே! கொண்டாடனும்?

பி.கு: மங்களூர்ல/பெண்களூருல யாரேனும் காதலர்களை பாத்தா ராம் சேனா ஆளுக நாளைக்கு கல்யாணம் முடிச்சு வெச்சுபுடுவாங்களாம். மங்களுர் சிவா இதான் சாக்குன்னு சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்க வேணாம், அவ்ளோ தான் சொல்வேன். :)

Tuesday, January 20, 2009

ஒரு கிளிக்குக்கு நூறு டாலர் தராங்களாம்

நான் நிஜமாவே பிசியா வேலைல மூழ்கி இருக்கும்போது(நம்புங்க ப்ளீஸ்), என் டீமில் இருக்கும் ஒரு சப்பாத்தி தரதரன்னு என் சேரை இழுத்து, உன் கிட்ட ஒரு முக்யமான விஷயம் சொல்லனும் என கிசுகிசுப்பான குரலில் சொன்னதும் எனக்கு ஒரே யோசனையா போச்சு. என்ன தான் என் மேலே ஒரு நல்ல அபிப்ராயம் இருந்தாலும் இட்ஸ் டூ லேட். சாரி எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு அப்படின்னு நானும் சீரியசா பதில் சொல்ல நினைத்தாலும், பின் விளைவுகளை எண்ணி கப்சிப்னு விஷயத்துக்கு காது குடுத்தேன்.

விஷயம் ரொம்ப சிம்பிள். இந்த சைட்டுல போய் நம்ம ஈமெயில் ஐடிய குடுத்தா அவங்க ஒரு மெயில் அனுப்புவாங்களாம். நாம நல்ல பிள்ளையா அவங்க கிட்ட ரிஜிஸ்டர் பண்ணிகிட்டோம்னு வைங்க, அவங்க ஒரு நாளைக்கு ஒன்னு அல்லது ரெண்டு மெயில் அனுப்புவாங்களாம். அதுல இருக்கற விளம்பர லிங்கை கிளிக் பண்ணிட்டு ஒரு நாப்பது செகண்ட் பொறுமையா இருக்கனுமாம். (அந்த நேரத்துல இரண்டு பதிவு படிச்சிரலாம்).

எங்க லிங்கை கிளிக்கினதுக்கு ரொம்ப நன்றி, இந்தா பிடிங்க நூறு டாலர்ன்னு நம்ம அக்கவுண்டுல லபக்குனு போட்ருவாங்களாம். அட, இது என்ன நோகாம நொங்கு திங்கற வேலையா இருக்கே!ன்னு நானும் ஒரு அக்கவுண்ட் கிரியேட் பண்ணி சொன்ன மாதிரியே செஞ்சாச்சு. இதோ படம் போட்டு பாகம் குறிச்சு இருக்கேன் பாருங்க:

நாம இப்படி கஷ்டப்பட்டு(?) சம்பாதிச்ச பணத்தை(?) நமக்கு செக்காவோ, வெஸ்டன் யூனியனாவோ அனுப்புவாங்களாம். என்னவோ போங்க, ஆப்ரிக்காகாரன் அவங்க ஊர் பாங்குல லட்சகணக்கான டாலர்களை என் பெயரில் மாத்தி எழுதட்டுமான்னு தினமும் மெயில் விடு தூது விட்டுட்டு இருக்கான். அடுத்தவன் பணம் நமக்கெதுக்கு?ன்னு நானும், வேணாம் ராசா! நீயே வெச்சுக்கோன்னு சும்மா இருக்கேனாக்கும்.

இவங்க சொன்ன மாதிரி டாலர் செக் அனுப்புவாங்களா இல்லாட்டி வட பழனி முருகன் டாலர் அனுப்புவாங்களா?ன்னு இனிமே தான் தெரியும். :)

Thursday, January 15, 2009

சிட்டி சென்டர்


மால் என்றவுடன் உங்களுக்கு ஏதேனும் கஞ்சா, அபின் போன்ற லாகிரி வஸ்து நினைவுக்கு வந்தால் நீங்கள் ரொம்பவே ராம் கோபால் வர்மா படம் பார்ப்பவராக இருப்பீர்கள். கொஞ்சம் குறைத்து கொள்ளுங்கள்.

திருமால் நினைவுக்கு வந்தால் மார்கழி குளிரில் சுடசுட வெண்பொங்கலுக்கு பஜனை செய்தவராக இருப்பீர்கள். போகட்டும்,பெருமாள் உங்களையும் காப்பாத்தட்டும்.

இதையெல்லாம் மீறி தமிழர்களிடையே ஒரு மால் கலாச்சாரம் வளர்ந்து வருகிறது. திக்கற்றவருக்கு தெய்வமே துணை மாதிரி சென்னைவாசிகளுக்கு ஸ்பென்சர் தவிர இன்னொரு மால் தான் சிட்டி சென்டர்.(இன்னுமா தமிழ்ப்படுத்தலை?)

அன்றாட வாழ்வில் நாம் என்னவெல்லாம் பயன்படுத்த மாட்டோமோ அதையெல்லாம் கடை போட்டு, லைட்டு போட்டு கடை பரத்தி வைத்திருக்கிறார்கள். சிறிது பயம் கலந்த ஆர்வத்துடன் மக்கள் எஸ்கலேட்டரில் கால் பதிக்கிறார்கள். அலேன் சோலி, ரேமான்ட்ஸ், போன்ற பிராண்டட் கடைகளில் கடைப் பணியாளர்கள் தாயக்கட்டை உருட்டி கொண்டிருக்கிறார்கள். லேண்ட் மார்க்கில் நிலமை கொஞ்சம் பரவாயில்லை. சிடி வாங்கும் சாக்கில் பலர், ஏசியில் அமர்ந்து ஒசியில் பாட்டு கேட்கிறார்கள். இன்னும் சிலர் கையில் டிபன் பாக்ஸ் எல்லாம் கட்டி கொண்டு புக்ஸ் செக்க்ஷனில் சம்மனம் போட்டு அமர்ந்து யவன ராணி படித்து கொண்டிருக்கிறார்கள். புஃட் வேர்ல்டில் தம் குழந்தைகளுக்கு செர்லாக் தேடும் அம்மாக்கள், காஸ்மெடிக்ஸ் செக்க்ஷனில் கோத்ரேஜ் டை தேடும் அரக்கு கலரில் லிப்ஸ்டிக் அடித்த ஆன்டிக்கள், இடது கையில் பாப்பின்ஸ் வைத்து கொண்டு, வலது கைக்கு டெய்ரி மில்குக்கு அடம் பிடிக்கும் டெனிம் ஜீன்ஸில் டிராயர் அணிந்த மஷ்ரூம்கட் செட்டிநாட் வித்யாஷ்ரம் குழந்தைகள், பில்லுக்கு கார்டு தேய்க்கவும், ட்ராலி தள்ள மட்டுமே அழைத்துவரப்படும் அப்பாவி ரங்குக்கள், யார்ட்லி(ஒரிஜினல்) யார்ட்லி(டூப்ளிகேட்), டாமி பாய்/கேள், ஓல்ட் ஸ்பைஸ், என கலவையாய் மணக்கும் கசகச மக்கள், எதையோ தேடி, எதையோ வாங்கி, எங்கோ ஒடிக் கொண்டிருக்கிறார்கள்.

எத எடுத்தாலும் ஆயிரம் ரூபாய்க்கு மேல் என அறிவிக்கப்படா விதிப்படி பெண்களுக்கு கை, காது, மூக்குக்கு என தோரியம் நீங்கலாக பூமியில் கிடைக்கும் எல்லா மெட்டல்களிலும் நகைகள் கொட்டிக் கிடக்கிறது. பெண்ணுக்கு அழகு புன்னகையே! என கல்யாணமான புதிதில் சாலமன் பாப்பையா மாதிரி நான் தீர்ப்பு சொன்னதில் நொந்து போன என் தங்கமணி அமைதியாக எல்லாத்தையும் பார்த்துக் கொண்டே வந்தார் என நினைத்தது சில வினாடிகளில் தப்பா போச்சு.

அந்த பிளாக் கலர் டாப்ஸ் போட்ட பொண்ணை தானே பாத்தீங்க? என அம்மணி அதிரடியாய் கேட்க, "கட்டிடம் எல்லாம் என்னமா கட்டியிருக்கான், லைட்டு எல்லாம் என்னமா மின்னுது!" என நான் சமாளிக்க பாத்தும் கதை ஒப்பேறவில்லை. நிலைமையை உடனே சமாளிக்க அபியும் நானும் படத்துக்கு டிக்கட் வாங்க வேண்டியதா போச்சு. படம் முழுக்க தேடியும் அபி அப்பாவுக்கு பதில் பிரகாஷ்ராஜ் தான் வந்தார். என்ன அனியாயம்? முடிந்தால், விரிவாக இந்த படத்தை பற்றி எழுத உத்தேசம். ஏற்கனவே பலர் இப்படத்தை பற்றி எழுதியாச்சு.

சிட்டி சென்டர் வாசலில் முகேஷ் அம்பானி மட்டுமே ஆட்டோ பிடிக்க முடியும். எங்க போகனும்?னு கேக்கறதுக்கு முன்னாடியே டூபிப்ட்டி குடு சார்! என கூலாக கேட்கிறார்கள். ஒன்னும் சொல்றதுக்கில்லை.

Friday, January 09, 2009

நடந்தது என்ன? - நான் தான் ஜோதா அக்பர்


நேற்று இரவு விஜய் டிவி பாத்த போது ஒரு சுவாரசியமான விஷயத்தை காட்டினார்கள். முன் ஜென்ம நினைவு, மறுபிறவி இதிலெல்லாம் அனேகமாக எல்லாருக்கும் ஒரு வித எதிர்பார்ப்புடன் கூடிய குருகுருப்பு இருக்கும். " நான் போன ஜென்மத்துல ராணியா பொறந்திருப்பேன்" போன்ற டயலாக்குகளை அடிக்கடி நீங்கள் கேட்டிருக்கலாம்.

அதை போல தமிழ் நாட்டில் பிரபலமான குடும்பத்தை சேர்ந்த அந்த அம்மா தமக்கு ஏற்பட்ட நினைவலைகளை பகிர்ந்து கொண்டார். பதேஃபூர் சிக்ரி அரன்மனையை சுற்றி பார்க்கும் போது தமக்கு ஏற்கனவே அங்கு வாழ்ந்த நினைவு இருப்பதாக உணர்ச்சிபூர்வமாய் அவர் கூறியபோது நம்மால் நம்பாமல் இருக்க முடியலை.

இதை போல பல சம்பவங்கள் உலகமெங்கும் நடந்தேறி இருக்கிறது. நமக்கே சில விசித்திர கனவுகள் வரும். அதன் பொருள் நமக்கு தெரியாது. ஆனால் ஏதோ ஒரு தருணத்தில் சிலபல ஆண்டுகள் கழித்து அதே மாதிரி ஒரு சம்பவம் நடக்கும் போது பளீர்னு மின்னல் வெட்டுவது போல நினைவலைகள் தோன்றும்.

குதிரைகளை பாக்கும் போது ஏதோ காலகாலமாய் அதனுடன் பழகியது போலவும், சான்டில்யன் கதைகளை படிக்கும் போது ஏற்கனவே அந்த கால சூழலில் வாழ்ந்தது போலவும் தோணுகிறதே. அதான் அந்த ஆசிரியரின் வெற்றி என நான் கருதுகிறேன். உங்களுக்கு இந்த மாதிரி அனுபவம் ஏற்பட்டு இருக்கிறதா?

நான் பலமுறை இதை மாதிரி உணர்ந்து இருக்கிறேன். இதை ஒரு அம்மானுஷ்ய சக்தி என்று சொல்வதா? மூளையின் நினைவுகளில் ஏற்படும் தாக்கம் என கொள்வதா? எனக்குள்ள ஒரு பட்சி சொல்லுது என பலபேர் சொல்வதை கேட்டு இருக்கோம். தம் உள்ளூணர்வை தான் அப்படி நாம் சொல்கிறோம்.

இந்த நிகழ்ச்சியின் இடையில் நானும் ரொம்ப சீரியசா முகத்தை வைத்து கொண்டு என் தங்கமணியிடம், "போன ஜென்மத்துல நான் தான் ராஜ ராஜ சோழன்னு எனக்கு தோணுது, இதை பத்தி நீ என்ன நினைக்கிறாய்?" என சீரியசா கேட்க, அம்மணிக்கு சிரிப்பை அடக்க முடியலை.

சரி, உங்களுக்கு இப்படி ஏதும் தோணி இருக்கா? சும்மா சொல்லுங்க பாப்போம்.