Monday, April 30, 2007

மைசூரை சுத்தி பாக்க போனேன்!

கடந்த ஈஸ்டர் விடுமுறையில் நம்ம டாக்டர் டிடி அக்காவின் குடும்பத்தோடு மைசூர் சுத்தி பாக்க போனோம். பெங்களூரிலிருந்து 3.5 மணி நேரத்தில் மைசூரை அடைந்து விடலாம், நடுவில் இருக்கும் மாண்டியா என்ற மாவட்டத்தில் ஏதும் ரோடு மறியல், பந்த் நடக்காமல் இருந்தால். ஏனெனில் நமது கன்னட கண்மணிகள் சும்மா டீ குடிப்பது போல இந்த ஏரியாவில் பந்த் நடத்துவார்கள்.

மைசூர் போகிற வழியில் ஸ்ரீரங்க பட்னம் என்ற அழகிய புதுமையும் பழமையும் கலந்த ஊர் உள்ளது. தமிழகத்தில் தஞ்சை வழியாக காவிரி ஸ்ரீரங்கத்து எம்பெருமாளின் காலை வருடிக் கொண்டு போவது போல இந்த ஊர் வழியாக தவழும் காவிரி இங்கு கோவில் கொண்டிருக்கும் பெருமாளின் திருவடியை தொட்டுக்கொண்டு செல்கிறது.


பெருமாள் அதே சயன கோலம் தான். வாக்காக கால் அமுக்கி விட தாயார் இருக்கும் போது தூக்கம் வராமலயா இருக்கும்? எனவே நமது வேண்டுதல்களை எல்லாம் தாயாரிடமே சொல்வது நலம். (சரி, உலா வரும் ஒளி கதிர் மாதிரி போகுது போஸ்ட்! அய்யே வேதா! நான் உங்கள சொல்லலை).

ஸ்ரீரங்க பட்னம் எம்பெருமாளின் கருட வாகனம் - பெரிய திருவடி (Air Force One )


இந்த கோவிலில் என்னை மிகவும் கவர்ந்தது இதன் கட்டிட கலை. (எவன்டா அவன்! புளியோதரை தானே?னு நக்கல் விடறது?). விஜய நகரத்து அமைப்பையும், முகலாயர்களின் சாயலும் நன்றாக தெரிந்தது. திப்பு சுல்தான் கூட மானியம், நகைகள் எல்லாம் வாரி வழங்கியதாக கல்வெட்டுக்கள் சொல்கிறது. வசூல் செய்வதில் பெருமாள் பலே கில்லாடி ஆச்சே! கோவில் கொஞ்சம் பராமரிக்கபடலாம். ஆனாலும் ரொம்ப மோசமாக இல்லை.




கோவில் வாயிலில் கணிணி தவிர எல்லாத்தையும் போட்டு விற்கிறார்கள். தாராளமாக பேரம் பேசலாம். வழக்கம் போல "அம்மா! தாயே! கைல இருக்கும் செல்போனையாவது தர்மம் பண்ணுங்க!" போன்ற தொல்லையும் உண்டு. குதிரை எல்லாம் சவாரிக்கு உள்ளது.

இது ஒன்னும் பஞ்சாப் குதிரை இல்லை!



ஹைதர் அலி ஏறிய குதிரையின் கொள்ளு பேத்தி குதிரை தான் இது!னு குதிரைகாரன் அள்ளி விட வாயை பிளந்து கேட்டுக்கொண்டிருந்தது ஒரு மார்வாடி குடும்பம்.


இந்த ஊர் வருவதற்க்கு முன்னாலேயே திப்பு சுல்தானின் கோட்டை, சமாதி எல்லாம் உள்ளது.


மதியம் லஞ்சை நல்ல ஒரு ஹோட்டலில் சாப்பிட்டோம். நல்ல வேளை! "நான் தான் சமைச்சு கொண்டு வருவேன்!"னு டிடி அக்கா அடம் பிடிக்கலை. மைசூர் அரண்மனை பார்க்க கிளம்பினோம்.


இதற்க்கு முந்தைய அரண்மனை தீக்கிரையானதால் கிட்டத்தட்ட சுமார் 14 வருடங்களாக கடின உழைப்போடு 1897ல் கட்டி முடிக்கப்பட்ட இந்த அரண்மனைக்கான செலவு அந்த காலத்திலேயே 40 லட்சம் ரூபாய்.


கன்னட, சாளுக்ய, விஜய நகர, மொகலாய, ஆங்கிலேய கட்டிட கலைகளின் ஒரு கூட்டு கலவையாய் திகழ்கிறது இந்த அரண்மனை. திரும்பிய பக்கமெல்லாம் வண்ண வண்ண ஓவியமென்ன, பளபளக்கும் தரைகள் என்ன, மார்பிள்கள், கிரானைட்டுகள், பெல்ஜியம் கண்ணாடிகள், கலர்கலரான லஸ்தர், சாண்டில்யர் விளக்குகள், சந்தன/பர்மா/தேக்கில்/யானை தந்தத்தில் கதவுகள் என பார்க்கும் இடமெல்லாம் கலையும் செல்வ செழிப்பும் வழிந்தோடுகின்றன.






பல ஓவியங்கள் ரவிவர்மா தீட்டியது. அரண்மனை ஊர்வலங்கள், யானை மேல் அம்பாரி வைத்து ராஜா, ராணி, அவர்களின் ஜால்ராக்கள் ஊர்வலம், சாமுண்டி தேவியின் திருவீதி உலா, ராஜாவின் தர்பார் காட்சிகள் நம் கண் முன்னே விரிகிறது.


"ராஜாதிராஜ, ராஜ கம்பீர, ராஜகுல திலக, விஜய நரசிம்ம அம்பிராஜ உடையார் பராக்! பராக்!என நம்மை அந்த காலத்திற்கே அழைத்து செல்கிறது.

எனக்கு எதோ என் சொந்த அரண்மனைக்கே நுழைந்த மாதிரி ஒரு உணர்வு.

கீழே விஜய நரசிம்ம அம்பிராஜ உடையார் மற்றும் அவரது தம்பி உடையார்!

(சரி, சரி, துப்பறத்துக்கு தான் கமண்ட் செக்க்ஷன் இருக்கே! இப்பவே ஆரம்பிச்சா எப்படி?)


நானும் டிடி அக்காவின் ரங்கமணியும்! :)





அரண்மனை உள்ளே காமிரா கொண்டு செல்ல அனுமதி நஹி. ஆனால் காமிரா மொபைல் கொண்டு போகலாம். என்ன கொடுமை I'm not ACE? :)



உள்ளேயே ஒரு மியூசியம் உள்ளது. பெரிசா ஒன்னும் இல்லை. ராஜா சாபிட்ட தட்டு, சரக்கு அடித்த கண்ணாடி கோப்பைகள், உபயோகித்த வாள், வேல், உடுத்திய சிலுக்கு ஜிப்பாக்கள், பயணித்த பல்லக்கு, காலணிகள், அடித்து கொண்ட செண்டு, இத்யாதி.
ராணியிடம் அடி வாங்கிய பூரி கட்டையை ஏனோ காட்சிக்கு வைக்கவில்லை.

ராஜாவின் பட்டு மேலங்கியை "ராஜா கா கோமணம் ஹை!"னு ஒரு கைடு சில சப்பாத்திகளிடம் அள்ளி விட்டு கொண்டிருந்தான். அரண்மனையின் முக்யமான இடமான அந்தபுரம் எங்கே?னு நைசா தேடி பார்த்தேன். விவரமா பூட்டி வெச்ருக்காங்க.

என்ன தான் கலை, ஓவியம்!னு நாம பாராட்டினாலும், ஒரு தனி மனிதனுக்கா இவ்வளவும்?னு சாமனிய மக்களிடம் இருந்து வரும் விமர்சனத்தை தவிர்க்க முடியலை.
இவ்ளோ சிறப்பு பெற்று இருந்தாலும், இந்த ராஜ பரம்பரைக்கு ஒரு சாபம் உள்ளதே! இதை பற்றி நமது டிடி அக்கா வூட்டுல போயி பாத்துக்கோங்க. :)

அரண்மனை மாலை 6 மணிக்கு பூட்டி விடுவார்கள். நாங்கள் அங்கேயே ரொம்ப நேரம் செலவிட்டதால் சாமுண்டி ஹில்ஸ் போக முடியலை. வரும் வழியில் நெடுஞ்சாலையில் உள்ள காமத் ஓட்டலில் இரவு டிபனை அமுக்கினோம். மசால் தோசை சூப்பர்.

அம்பி: டிடி அக்கா! நாம ஒரு தப்பு பண்ணிட்டோம்!
டிடி: என்னடா சொல்ற?
அம்பி: நாம சாப்ட பில்லு கட்ட நம்ம பரணிய கூட்டிண்டு வந்து இருக்கலாம். :))

Friday, April 27, 2007

நரசிம்ம ஜெயந்தி

எங்கேடா உன் ஹரி? ஹிரண்ய கசிபுவின் குரல் அந்த பரந்த மண்டபத்தில் இடி போல எதிரொலித்தது.

அந்த குரலில் தான் எத்தனை ஆணவம், இறுமாப்பு கோபம்!
பின்ன இருக்காதா? மூவுலகிலும் தேவரால், அசுரர்களால், மனிதர்களால், யக்ஷர்களால், கிங்கரர்களால், பஞ்ச பூதங்களால், எந்த வகை ஆயுதங்களால், அஸ்த்ர சஸ்த்ரங்களால், காலை-மதியம்-இரவு வேளைகளில் தனக்கு இறப்பு வர கூடாது! என வரம் வாங்கிய புத்திசாலி அரக்கன் அல்லவா?
அப்பா! என்னுடைய ஹரி எங்கும் இருக்கிறான். இந்த தூணிலும் உள்ளான், அந்த துரும்பிலும் உள்ளான். என் மனதிலும் உள்ளான், தேடுங்கள் உங்கள் மனதிலும் வந்து அமருவான்!
- ஆணவத்திற்க்கு அடக்கம் பதிலளித்தது பிரஹலாதன் என்று தன்னை சொல்லிக் கொண்டு.

இந்த தூணில் இருக்கானாடா உன் ஹரி? அரக்கனுக்கு சந்தேகம்!

இன்னுமா உங்களுக்கு சந்தேகம் தந்தையே?

இதோ தொலைத்து விடுகிறேன் உன் ஹரியை! - தனது கதாயுததால் ஓங்கி அடித்தான் அந்த தூணை.
பக்தருக்கு தன் மோஹன புன்னைகையாலே அருள் பாலிக்கும் அந்த ஹரி எங்கே?

"ஹே! ஆதிமூலமே! அனாதரக்க்ஷகா! ஆபத்பாந்தவா!" என கதறிய கஜேந்ர யானையின் குரலுக்கு பதறியடித்து கொண்டு கருடாழ்வார் மேல் வந்தால் நேரமாகும்! என மனோ வேகத்தில் வந்த அந்த ஹரி எங்கே?

அண்டம் கிடுகிடுக்க, அலைகள் ஆர்பரிக்க, அடித்த தூண் இரண்டாக பிளக்க, இடியோசையுடன், மின்னலென்ன கோடி சூரிய பிரகாசத்துடன், எரிமலையென சீறி, ஆஜானுபாகுவாய், சிங்க முகமும் மனித உடலுடன் கோர பற்களும் கூரிய நகங்களுமாய்,பயங்கரமாக கர்ஜனை புரிந்து கொண்டு ரெள்த்ரமாக வெளி வரும் இந்த நரசிம்ஹனா அந்த ஹரி?
என்ன செய்வது? அரக்கன் வாங்கிய வரத்தை உடைக்க வேண்டுமே? மிருகமும் இல்லை, மனிதனும் இல்லை, கையில் எந்த அஸ்த்ரமும் இல்லை, வந்த பொழுதும் காலையும் இரவும் கலக்கும் சந்தியா(நடிகை இல்லை) வேளை தான்.
அரக்கனுக்கு ஒரு நொடி நேரம் கூட குடுக்க வில்லை நரசிங்கம். காட்டாறு போல பாய்ந்து, அலேக்காக தலைக்கு மேல் தூக்கி விடுவிடுவென வீடும் இல்லை, வெளியிலும் இல்லாத மனையின் வாயிற்படியில் சாவகாசமாக அமர்ந்து, அந்த சுதர்சன சக்ரமே கூரிய நகங்களாய் வர, அரக்கனின் வயிற்றை கிழித்து குடலை உருவி மாலயாய் அணிந்து செங்குருதி முகத்தில் தெளிக்க அந்த தாயாரும் அருகில் வர அச்சப்பட்டு தள்ளி நிற்க பக்தனான பிரகலாதனுக்கு மட்டும் கருணை கடலாக காட்சி அளிக்கிறான் என் நரசிங்கம்! அவன் ஒரு உக்ர சிங்கம்.
ஏப்ரல் 30 - நரசிம்ம ஜெயந்தி!
ஹே சிம்ம பிரபு! இன்றும் இந்த கலியுகத்தில் பல ஹிரண்ய கசிபுக்கள் வலம் வருகிறார்களே. பிஞ்சு குழந்தைகளை படிக்கவிடாமல் கடின வேலைக்கு அனுப்புகிறவர்கள், மக்கள் உண்ணும் உணவில் கலப்படம் செய்பவர்கள், பெண்கள் மீது பாலின வன்முறை செய்பவர்கள், தன்னலத்திற்காக பஞ்சமா பாதகங்கள் செய்ய தயங்காத பதவி வெறி பிடித்த மிருகங்கள் என பட்டியல் நீள்கிறதே!
எங்களுக்கு நிதானமாக வரும் கல்கி வேண்டாம். கூவி அழைத்தவுடன் வரும் சிம்மமே! மீண்டும் வருவாயா? இந்த குழந்தையும் பக்தியுடன் அழைக்கிறேன். ஒரு முறை வந்து விடு, இந்த பூமியின் பாரத்தை குறைத்து விடு!"

Wednesday, April 25, 2007

ஏர்போர்ட்

சங்க காலம் முதல் ஷங்கர் காலம் வரை காதலை பாடிய கவிஞர்கள் எல்லாம் பிரிவையும் பாடாமல் விட்டதில்லை.

"இச்வாகு குலத்தில் பிறந்த நான் என் மனைவியை பிரிந்தேனே!"னு ஷ்ரிராமர் அரற்றுவதை கம்பர் அழகாக பாடி இருப்பார்.

கால தோஷத்தால் தமயந்தியை பிரிந்த நளன் அந்த துயர செயலை நினைத்து நினைத்து புலம்புவதை நள சரித்திரம் படித்தால் கல்லும் கரையும்.

"நாராய்! நாராய்!"னு நாரை விடு தூதில் கூட வறுமையில் வாடும் ஒரு புலவர் மறக்காமல் தனது தங்கமணிக்கு செய்தி சொல்லி இருப்பார்.

தலைவனை பிரிந்ததால் உடல் மெலிந்து, அதனால் தனது கை வளையல்கள் கழன்று விட்டதாக ஒரு தலைவி தனது தோழியிம் சொல்வதாக அக நானூறில் பாடலாக வரும்.

"என்னுயிர் தோழி! கேள் ஒரு சேதி!
இது தானோ உங்கள் மன்னவன் நீதி?"னு அழகான அமீர் கல்யாணி ராகத்தில் சுசீலா அம்மா கர்ணன் படத்தில் பிரிவின் ஏக்கத்தை சொல்லி இருப்பார்.

"ராசாத்தி உன்னை காணாம நெஞ்சு காத்தாடி போலாடுது!"னு கேப்டன் கூட முட்டி வரைக்கும் கோட் எதுவும் போடாம உருக்கமா பாடி இருப்பார்.

"சோலை புஷ்பங்களே! என் சோகம் சொல்லுங்களேன்" என்ற பாட்டை முணுமுணுக்காத இன்றைய ஆன்டிக்கள் யாரும் உண்டோ?

"முதல்வனே! என்னை கண் பாராய்!
முத்த நிவாரணம் எனக்கில்லையா?னு அர்ஜுன் மாமாவை நினைத்து கிராபிக்ஸ் உதவியுடன் மனிஷா மாமி உருகியதை நம்மல் மறக்க முடியுமா?

சரி, இப்ப என்ன சொல்ல வர? எதுக்கு இந்த இழுவை?

தங்கமணியை பிக்கப் செய்வதற்காக(அதான் ஏற்கனவே பிக்கப் பண்ணியாச்சே!னு நீங்கள் முணுமுணுக்கறது கேக்கறது எனக்கு) தமிழ் புத்தாண்டு அன்று இரவு ஏர்போர்ட் செல்ல நேரிட்டது.

ஒரு வித எதிர்பார்ப்பு, பரபரப்பு, மகிழ்ச்சி, பதட்டம் னு கலவையாய் இருந்தது என் மனம். நடு இரவு 12 மணிக்கு கொஞ்சம் கூட தூக்கம் என் கண்களை தழுவ வில்லை. நான் சென்ற காரை விட என் மனம் வேகமாக ஏர்போர்ட் சென்று விட்டது.

அடுத்த பிளைட்டுக்கு கிளம்ப ரெடியாக இருக்கும் அரை டிரவுசர் மாமாக்கள், 2 இஞ்ச் லிப்ஸ்டிக்கை சரி பார்க்கும் மாமிகள், தலையில் மதுரை மல்லி மணக்க இருபுறமும் பின் குத்திய துப்பட்டாவுடன் சுடிதார் அணிந்த தமிழ் நாட்டு ஸ்னேகாக்கள், ஜீன்ஸ் (பேண்டா, டிரவுசரா?னு தெரியாத வகையில்)அணிந்து வலம் வரும் சப்பாத்தி தேச கரிஷ்மா கபூர்/அகர்வால்/குப்தாக்கள், தான் அமெரிக்கனா? இந்தியனா?னு அவர்களுக்கே தெரியாமல், ஹெட்போன் மாட்டி, கோக் குடிக்கும் விடலை சிறுவர்கள், கஸ்டம்ஸ் செக்கிங்கில் எதை அமுக்கலாம்?னு காத்திருக்கும் கோட் போட்ட ஆபிசர்கள், ரங்க்மணிகளுக்கு காத்திருக்கும் தங்கமணிகள், எம்ஸ் படித்து(?) விட்டு வரும் தன் தவபுதல்வனை வறவேற்க காத்திருக்கும் பாசமிக்க பெற்றோர், பேரன்/பேத்தியை எதிர்பார்த்து காத்திருக்கும் 'பூவே பூ சூட வா!' பாட்டிகள்/தாத்தாக்கள் என கலவையாய் மக்கள் கூட்டம்.

நான் ஏர்போர்ட் அடைந்த நேரத்தில் நம்ம பிளைட் வந்து விட்டது. செக்கிங்க் முடிந்து வர நேரமாகும் என்று தெரிந்தது.

"காத்திருந்தால், எதிர்பாத்திருந்தால் ஒரு நிமிஷமும் வருஷமடி!"னு சும்மாவா வைரமுத்து மாமா பாடி வெச்ருக்கார்.

முதல் தடவையாக பேரமே பேசாமல் ஃபொக்கே ஒன்று வாங்கி கொண்டு செக்கின் வாசலையே பார்த்து கொண்டிருப்பதும் ஒன்று தான்! நமக்கு அவசரமாக வரும் போது அடக்கி கொண்டு உள்ளே போய் ஒரு மணி நேரமாக தியானம் பண்ணும் தடியனுக்காக ரெஸ்ட்ரூம் வாசலில் தவமாய் தவமிருப்பதும் ஒன்று தான்.

வரிசையாக பயணியர் வந்து கொண்டே இருந்தனர். பல முகங்களில் எதிர்பார்ப்பு, உறவினர்/ நண்பர்களை எதிர்பார்த்து அலைபாயும் கண்கள், மகிழ்ச்சியில் விரியும் முகங்கள், சில விம்மல்கள், பெருமூச்சுக்கள்.

வெள்ளைகார அம்மணி, குரங்கு குட்டியை சுமப்பது போல தூளி மாதிரி ஒரு வஸ்துவில் குழந்தையை சுமந்து வந்த அவரின் கணவன்(?), பிளைட் ஓட்டிய பைலட் மாமா, சாக்லேட் குடுத்த ஏர்ஹோஸ்டஸ் குதிரைகள்னு வரிசையாய் எல்லோரும் வந்தனர் என் தங்கமணியை தவிர.

என்னடா இது? ஒரு வேளை தங்கமணி கடைசி சீட்டா?
இதுக்கு தான் பைலட் மாமாவை ஐஸ் வெச்சு பேசாம அவர் சீட்டுக்கு அடுத்த சீட்டுல உக்காச்சுண்டு வரணும்!னு நான் சொன்னதை கேட்டா தானே!
இதோ! அதோனு ஒரு வழியா தங்கமணி வந்து சேர்ந்தாங்க. வெளியே வந்ததும் தயாரா இருந்த ஃபொக்கேவை குடுத்தேன். (படத்துல வர மாதிரி முட்டி போட்டு எல்லாம் ஒன்னும் குடுக்கலை.)
இருவர் கண்ணும் மகிழ்ச்சியில் ஒரு கணம் மின்னின. பேச வார்த்தைகளே வர வில்லை. ரேவதி சொன்ன மாதிரி வெறும் காத்து தேங்க் வந்தது.

அவங்க அம்மாவின் கழுத்தை கட்டி கொண்டு உம்மா எல்லாம் குடுத்து மீனம்பாக்கத்துல ஒரே பாச மழை தான். அடுத்து எனக்கு தான்!னு நானும் சப்பு கொட்டிண்டு காத்திருந்தது தான் மிச்சம். ஆசை தோசை அப்பளம் வடை!னு சொல்லிட்டாங்க.
என்ன கொடுமை ACE?(ஹிஹி, உன் பேரு சரவணன் தானே?) :)

Friday, April 20, 2007

என்ன அழகு, எத்தனை அழகு!

எங்க ஊருகாரர் இலவச கொத்தனார் ஆரம்பிச்சு வெச்சாலும் வெச்சார், இதோ நம்மையும் மதிச்சு கார்த்தியும், சுமதி அக்காவும் எழுத சொல்லிட்டாங்க.
1)பெண்மை:
பெண்மையின் எல்லா பரிமாணங்களும் அழகு தான். மாம்பழ கலரில் அரக்கு பார்டர் போட்டு அழகான பட்டு பாவாடை கட்டி, சின்ன கொண்டையில் 100 முல்லை பூ சூடி, காலில் அத்தை போட்ட கொலுசுடன் தத்தி தாவி, நடை பழகி வரும் பெண் குழந்தையாகட்டும், கஸ்தூரி மான் போல துள்ளி வரும் மங்கையாகட்டும்(மீரா ஜாஸ்மின்?), மெலிதாக மேடிட்ட வயதுடன் பூரிப்பாக வரும் தாய்மையாகட்டும்,
"பார்கர்ஸ் பெஞ்சில் அமர உனக்கு ஆசை, எனக்கு தெரியும்!" என தனது சோர்வான ரங்குவுக்கு ஹார்லிக்ஸ் குடுக்கும் அந்த குடும்ப தலைவியாகட்டும்( நம்ம SKM அக்கா?) நரை கூடி, முதுமை அடைந்து தனது அனுபவங்களால் தனது பேரன்/பேத்திகளை கண்ணின் மணி போல காக்கும் பாட்டியாகட்டும்(எலேய் கொடி, அது கீதா மேடம் தான் சந்தேகமே வேண்டாம்!) எல்லாமே அழகு தான்.
அடக்கம், கம்பீரம், தெளிவு, இவை மூன்றும் இருந்தால் அதுவே அழகு. பெண்மையிடத்தில் அது மூன்றும் உள்ளது. ஆனால் பல சமயங்களில் தன்னை அது உணர்ந்து கொள்வதில்லை.
- இப்படியேல்லாம் நான் எழுதினாலும் "ஓவர் சீன் உடம்புக்கு ஆகாதுடா அம்பி!னு தான் கும்மி அடிக்க போறீங்க. ஆனது ஆயி போச்சு,
இதோ இதையும் சொல்லிடறேன். அடுத்த கேபின்ல காக்ரா சோளியில் (சாயந்தரம் ரிஷப்ஷனாம்) உக்காந்து இருக்கும் ரசகுல்லா அழகா? இல்ல சைடு கேபின்ல திருச்சூர் விளக்கு மாதிரி நச்னு வெண்பட்டுல வந்ருக்கற மல்லு பிகர் அழகா?னு ஒரே குழப்பமா இருக்கு.

நாட்டாமை, போட்டோ அனுப்பினா கொஞ்சம் தீர்ப்பு சொல்ல முடியுமா?

2)சுந்தரன் - சொல்லின் செல்வன்:

உருவத்தில் மட்டும் அழகு இருந்து என்ன பயன்? சொல்லும், செயலும் அழகாக இருக்க வேண்டுமே!
"கண்டேன் கற்பின் கனலை"னு உலகின் முதல் தந்தி/SMS சொல்லி அந்த ஷ்ரிராமனுக்கே மகிழ்ச்சியை தந்த அனுமன் தான் அழகு. அதனால தான் சுந்தர காண்டம்!னு பெயர் வந்தது.

நங்கநல்லூர் அனுமனை தங்கமணியுடன் போயி தரிசித்து வந்தேன். என்ன கம்பீரம், பிரமாண்டம், ஆகிருதி, அதே சமயம் துளியும் ஆணவம் இல்லாத கை கூப்பிய அந்த பவ்யம்! அனுமந்தா! நீ தான்யா என்னிக்கும் தல!

3) ரயில் வண்டி:

நான் ரொம்பப சின்ன குழந்தையா இருக்கும் போதே(Profile போட்டோ பாருங்க) "கூகூகூகூ குச் குச் குச்"னு புகை விட்டுன்டு போற ரயிலை பார்த்தா தான் சாப்பிட போவேன். அதுவும் எங்க வீட்டுலேருந்து பார்த்தாலே இந்த அழகான வயலுக்கு நடுவே ஓடற அந்த பாசஞ்சர் ரயில் ரொம்பவே என்னை ஈர்த்தது.
என் அப்பா: பெரியவனா ஆயி என்ன வேலை பாக்க போற?
குழந்தை அம்பி: அதோ போறதே அந்த ரயிலுக்கு கரி அள்ளி போடற வேலைக்கு போவேன்! (பெருமிதத்துடன்)
இத கேட்டதும் எங்க அப்பா முகம் போன போக்க பாக்கனுமே! :)
4) நதிகரைகள்:
ஜல ராசியில் பிறந்ததாலோ என்னவோ நீர் நிலைகளை கண்டு விட்டால் எனக்கு உற்சாகம் கரை புரண்டோடும். துவட்டி கொள்ள துண்டு இல்லாவிட்டாலும் அப்படியே தண்ணீரில் குதித்த நாட்களும் உண்டு. இந்த கோடையில் கூட குறைவில்லாமல் ஓடும் எங்கள் தாமிரபரணி நதியில் நண்பர்களுடன் தொட்டு பிடித்து விளையாடிய அந்த நாளும் வந்திடாதோ?
5)ஆத்துல இறங்கும் அழகர்:
மதுரைக்காரங்க எல்லோருக்கும் அழகர் ஆத்துல இறங்கற விழா ரொம்ப பிடிக்கும். தக தகனு தங்க குதிரை மேல சும்மா கம்பீரமா ஒரு கையில் சாட்டையுடன் மறு கையில் அபய முத்திரையுடன், மக்கள் கூட்டத்துக்கு நடுவுல அழகர் வைகை ஆத்துல இறங்குவார் பாருங்க! மதுரைக்கு அழகர் அழகா? அழகரால் மதுரை அழகா?னு எண்ண தோணும்.
6) என் தங்கமணியின் மாசில்லா அன்பு:
எத சொல்லுவேன், எப்படி சொல்லுவேன்?
இந்த அமெரிக்கவுல தீடிர்னு எல்லா கடிகாரத்தையும் திருப்பி வெச்சுடானுங்க. நான் காலையிலேயே இந்த பெங்க்ளூர் டிராபிக்ல அடிச்சு பிடிச்சு எங்க ஆபிஸ் பையன் கூட்டி பெருக்கற டைமுக்கு வந்தாலும் எனக்காக இரவு 11- 12 மணி வரைக்கும் முழிச்சு இருந்து என் குரலை கேட்ட பிறகு தான் தினமும் தூங்குவாங்க. இதுல இந்த ஸ்கைப்புல(skype) கனெக்ஷன் சரியா கிடைக்காது. அப்படியே கிடைச்சாலும் அவங்க இடத்துல நெட் கனெக்ஷன் புடிங்கிக்கும்.
ஸ்ப்ப்பா! இவ்ளோ தொல்லை இருந்தலும் என் மேல அன்பை பொழியற தங்கமணியின் மாசில்லா உள்ளம் தான் எனக்கு பிடிச்ச அழகு. நான் போன ஜென்மத்துல கொஞ்சம் புண்ணியம் பண்ணி இருக்கேனோ?
யப்பா! முடிச்சாசு ஒரு வழியா.
இதை தொடர்ந்து,
என்னை கவர்ந்த ஏழரை நாட்டு சனி!
எட்டுக்குள்ள உலகம் இருக்கு ராமையா!
நவகிரகங்கள் ஒன்பது!
பிளாக் உலக சூப்பர் டென்!னு யாராவது ஒரு புதிய டேக் ஆரம்பிச்சுடாதீங்க பா! கல்யாண வேலைகள் நிறைய இருக்கு.
போற போக்குல யார இழுத்து விடலாம்?
1) மலேசியாவுல மையம் கொன்டுள்ள நமது புயல் மை பிரண்ட்
2) அருமை அண்ணன் டுபுக்கு
3) வாழ்வளித்த தெய்வம் வேதா பிராட்டியார்

Wednesday, April 18, 2007

அக்ஷ்ய திருதி

நமக்கு அன்னிக்கு ஒரு பேச்சு இன்னிக்கு ஒரு பேச்சே கிடையாது. போன வருஷம் அக்ஷ்ய திருதிக்கு என்ன பதிவு போட்டேனோ அதே தான் கொஞ்சம் எக்ஸ்ட்ராவா எழுதி காப்பி பேஸ்ட் செய்துள்ளேன்.

ஏப்ரல் 20 2007 - அக்க்ஷ்ய திருதியை. சித்திரை மாதம் அமாவசைக்கு 3ம் நாள் தான் அக்க்ஷ்ய திருதியை. மிகவும் சுபமான நாள்.

இதை பற்றி யஜுர் வேதத்தில் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நாளில் செய்யும் தானம், தர்மங்கள் 7 பிறவிக்கு தொடரும். ஸ்வர்ண தானம் மிக உயர்ந்தது. வெள்ளி, பசு, தயிர், பால், இதுவும் தானம் அளிக்கலாம்.

எல்லாம் சரி. ஆனால் இன்று, இதை வேறு மாதிரி மாற்றி விட்டனர் நமது மக்கள்.

இந்த நாளில் 1 கிராமாவது தங்கம் வாங்கி தமது பீரோவில் வைத்தால், அந்த வருடம் முழுக்க கூரையை பிச்சுண்டு கொட்டும்னு எவனோ விட்ட பீலாவை நம்பி, நம்ம மக்கள், பனகல் பார்கில் பைத்தியமா திரியரா.

இந்த ஒரே நாளில் மட்டும் 400 டன் தங்கம் விற்பனை ஆகும்னு கணக்கிடப்பட்டுள்ளது. இது குறைந்த பட்ச அளவு தான்னு புள்ளி விபரங்கள் சொல்கின்றன. தங்க காசுகளை பிளாட்பாரத்தில் போட்டு விற்றதை போன வருடம், நான் சென்னையில் இருந்த போது பார்திருக்கிறேன்.

பொதுவாக சித்திரையில் கல்யாணங்கள் நடக்கும். தங்கம் உபயோகம் இருக்கும். இதை இதை பயன்படுத்தி, அக்க்ஷ்ய திருதியையை உபயோகப்படுத்தி கொள்ள ஆரம்பித்து விட்டனர் நமது வியாபாரிகள்.

"கேட்கறவன் கேனையனா இருந்தா
கேப்பையில நெய் வடியுதுனு சொல்வானாம்!"

மக்களே! இந்த நாளில் உங்களை தானம், தர்மம் தான் செய்ய சொல்லி இருக்கு. உங்கள் பீரோவை நிரப்ப சொல்ல வில்லை.

ஏற்கனவே தங்கம் கிராம் 880 ரூபாய் ஆகி விட்டது. பாவம் பெண்ணை பெற்றவர்கள். தமிழ் நாட்டில் குறிப்பிட்ட சில வகுப்புகளில் பெண்ணுக்கு நகை போடுவது கிலோ கணக்கில் தான்.

இதில் 60:70 (60 பவுன், 70 ஆயிரம்) என ரேஷியோ எல்லாம் வேற. ஆந்திராவில் இன்னும் மோசம். 50 லட்சம், 60 லட்சம், 1 கோடி வரை பேரம் படியுமாம். என் ஆபிஸ் குல்டி தடியன் பீத்திக் கொண்டான்.

1) நல்ல விஷயங்கள் மீது நம்பிக்கை வையுங்கள். மூட நம்பிக்கை வேண்டாமே!

ஹிஹி, அஸின் எனக்கு கிடைப்பாள்னு நினைத்தா அது நம்பிக்கை.
10 தடவை கஜினி படம் பாத்தேன்! அதனால அஸின் எனக்கு தான் கிடைப்பானு நினைத்தா அது மூட நம்பிக்கை! என்ன கார்த்தி புரிஞ்சதா? :)

2) பெண்ணுக்கு தேவை புன்னகை, பொன்னகை இரண்டாம் பட்சமே!

3) குணத்தில் தங்கமாய் இருங்கள், உங்கள் நேரத்தை தங்கமாய் செலவு செய்யுங்கள்.

4) இந்த புனித நாளில், ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவியுங்கள். இதை விட பெரிய புண்ணியம் வேறு எதுவும் இல்லை.

5) இந்த நல்ல நாளில் உங்கள் தாய், தந்தையர் பெயரில், உங்கள் பள்ளியில், கல்வி அறக்கட்டளை தொடங்குங்கள்.

6) ஊனமுற்றவர்களுக்கு முடிந்த உதவி செய்யுங்கள். இது ஒரு மிக சிறந்த சனி பரிகாரம், தெரியுமா?

7) உங்கள் மனைவியை தங்கமணி!னு அன்போழுக கூப்பிடுங்கள்.
உங்கள் குழந்தையை, "தங்கமே!னு கொஞ்சுங்கள். (தில்லு இருந்தா பக்கத்து சீட்டு பிகரையும் தான்).

8) இந்த வருஷம் வெள்ளை கலரும் நல்லது!னு சரடு விட ஆரம்பிச்சாச்சு. வேற என்ன பிளாடினம் நகைகளை நம்ம தலையில் கட்ட இது ஒரு சாக்கு.
மல்லிகைப் பூவும் வெள்ளை நிறம் தான்.
"பூவைக்கோர் பூ வைத்தாய்!"னு பாட்டு பாடின்டே தங்கமணிகளுக்கு மல்லிகை பூ வாங்கி தலையில் வையுங்கள். (முடிந்தால் காதிலும் தான்).

உலகையே வென்ற அலெக்ஸாண்டர், தான் இறக்கும் போது சொன்னது இது, "எனது இறுதி ஊர்வலத்தில், எனது உள்ளங்கைகளை விரித்து வையுங்கள். இந்த உலகுக்கு தெரியட்டும், உலகை வென்ற நான், எதையும் எடுத்து செல்ல வில்லையென்று!"

எவ்வளவு சத்யமான வார்த்தைகள்!

At the end of the game, both the Pawn and the king goes to the same box.

மொத்ததில், அக்க்ஷ்ய திருதியை லலிதா, GRT, பிரின்ஸ், Fathima ஜுவல்லரி காராளுக்கு தான் நல்லது!

ஊதற சங்க ஊதி விட்டேன்.
வாங்கிண்டு வாங்கனா வாங்கிண்டு வாங்களேன்!னு தங்கமணிகள் அதட்டலுக்கு பயந்து வாங்கிண்டு வரத்துக்கு இது ஒன்னும் இதயம் நல்லெண்னை இல்லை. எதாவது டகால்டி பண்ணி நிலைமையை சமாளிக்க பாருங்கள். இல்லாவிட்டால் இருக்கவே இருக்கு கோ-ஆப்டெக்ஸில் 20% தள்ளுபடியில் தலைல போட்டுக்க துண்டு.

படத்தில் இருப்பது பாகிஸ்தான் பேட்ஸ்மேன் மியான்தத்தின் தவபுதல்வனும், ஊரை அடித்து உலையில் போட்ட தாவூத்தின் தவபுதல்வியும் தான்.(இவ்ளோ பாரம் சுமக்கறதே, கர்ணம் மல்லேஸ்வரி பொண்ணுனு நினைத்தேளோ?)

Friday, April 13, 2007

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

அன்னியன்: நாம் ஆங்கில புத்தாண்டுக்கு குடுக்கும் முக்கியத்துவத்தை தமிழ் புத்தாண்டுக்கு குடுப்பதில்லையோ?னு நிறைய தடவை தோன்றி இருக்கு.
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் என்பதை கூட "ஹேப்பி டமில் நியூ இயர்"னு சொல்லும் வெள்ளைக்கார துரைகளும் இங்கு உண்டு.

அம்பி: சரி விடுங்கோ! நூறு வருஷத்துக்கு மேல துரை தானே நம்மள ஆண்டான். எல்லாத்தையும் அந்த பெருமாள் பாத்துண்டு தான் இருக்கார். எல்லோருக்கும் நன்னா குடுப்பார்.

ரெமோ: " நமீதாவின் தமிழ் புத்தாண்டு!னு சன்/கே டிவில ஒரு ப்ரொக்ராம் இருக்காம்.

அன்னியன்: மாத்தனும்! எல்லாத்தையும் மாத்தனும்!
சாத்தனும்! எல்லாரையும் சாத்தனும்!

அம்பி: பெருமாளே! ரூல்ஸ நாமளே கைல எடுத்துக்கப்படாது! டாக்டர் ராமதாஸ், அவர் புள்ளையாண்டன் எல்லாம் எதுக்கு இருக்கா? பாவம்! அவாளுக்கும் பொழுது போக வேண்டாமா?

ரெமோ: ஹே கமான் பேபி! வாட்ஸ் ராங்க் இன் இட்?

அன்னியன்: தப்பு செஞ்சா தண்டனை!
தங்லீஷ்ல போஸ்ட் போடற எல்லாரும் இனிமே மாதம் ஒரு தடவையாவது தமிழ்ல போஸ்ட் போடனும். இல்லாடி நைட் அவங்க பெட்ல உச்சா போக கடவது!

என்ன மக்களே! நீங்க யாரு சொன்னத கேப்பீங்க அம்பியா? ரேமோவா?(ஷ்யாம் கைய தூக்கறான் பாரு), இல்ல அன்னியன் பேச்சா?

எல்லோருக்கும் இனிய என் உள்ளங்கனிந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

இந்த தமிழ் புத்தாண்டு எனக்கு ரொம்ப எதிர்பார்ப்புடன் துவங்குகிறது.
ஆமா! தங்கமணி ஆணி பிடுங்கிட்டு தாய் நாட்டுக்கு வராங்க. அதனால சென்னைல தான் 4 நாளுக்கு எமது வாசம். அதனால் உங்க கடை பக்கம் வர முடியாது! மாப்பு-மன்னிப்பு!

பரிசா கரடி பொம்மை குடுக்கலாமா? இல்ல மலிவா இருந்தா ஒரு கரடியே(சொம்பு அப்பா ஒன்னும் நான் சொல்லல) வாங்கி குடுக்கலாமா?னு ஒரே யோசனையா இருக்கு.

ஒரு மந்தையிலிருந்து இரண்டு ஆடுகள் தனி தனியே சென்றன. அவை மீண்டும் சந்தித்த போது பேச முடியலையே?னு டயலாக் எல்லாம் மனப்பாடம் பண்ணி வெச்ருக்கேன்.

போய் வா அம்பி!
போய் வா!னு வழியனுப்பி வைங்களேன். :)

Wednesday, April 11, 2007

மனிதம் வளர்ப்போம் வாருங்கள்!

அருணின் H1B visa பற்றிய பதிவை படித்ததும் எனக்குள் ஒரு யோசனை. இதை மாதிரி எத்தனை உருப்படியான தகவல்களை நாம் பறிமாறி கொள்ளலாம்? ஒரு இமெயில் ஐடி கூட இல்லையே?னு சிறிது வருத்தமாக இருந்தது.
இதை பற்றி டிடி அக்காவிடம் வழக்கம் போல OC சாம்பார் வாங்கும் போது பேசியதில் எங்கள் இருவருக்கும் தோன்றியது தான் இந்த ஐடியா.

1) உங்கள் நிஜபெயர், இமெயில் ஐடி, பார்க்கும் வேலை, கம்பெனி போன்ற தகவல்களை இந்த mailto:blog_union@yahoo.com ஐடிக்கு அனுப்பி விடுங்கள். ஒரு தகவல் வங்கியாக செயல்படும்.

2) உங்கள் சித்தி பையனோ, அத்தை பெண்ணோ(ஹிஹி) கல்லூரி இறுதியில் பிராஜக்ட்/வேலை தேடலாம். என்னுடைய அல்லது வேறு சிலரின் கம்பனியில் அதற்கான வாய்ப்புகள் இருக்கலாம் இல்லையா? தகவல்களை பறிமாறி கொள்வோமே? ஷுவை தொலைக்காமலேயே பிராஜக்ட் கிடைக்கட்டுமே! என்ன சரி தானே கார்த்தி? :)

3) உங்கள் பெற்றோர் இங்கு இந்தியாவில் இருக்கலாம். அவர்களுக்கு அவசரமாக ஏதவது ஒரு செய்தி அனுப்ப இருந்து, உடனே அவர்களை தொடர்பு கொள்ள முடியாத நிலையில் இந்தியாவில் உள்ள சக பிளாக்கர்கள் உதவுவார்களே!
அதுக்காக "எங்க அம்மாவோட ஒன்னு விட்ட ஒர்படி பொண்ணு அடுத்த வாரம் US வராங்க. அவர்களிடம் 4 கட்டு பிந்து அப்பளம் வாங்கி அனுப்பவும்"னு மொக்கை தகவல் எல்லாம் அனுப்ப கூடாது, இப்பவே சொல்லிட்டேன் ஆமா! :)

4) எந்த சக ப்ளாகராவது இந்தியாவுக்கு வந்தால் அவருக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால் செய்யனும். ஓட்டல் பில்லை கட்ட இருக்கவே இருக்கார் நம்ம பில்லு பரணி.
30 நாளில் தெலுங்கு கற்பது எப்படி? புக் எங்க கிடைக்கும்னு "காதல் யானை" ப்ரியா கூகிளில் தேட வேண்டாம். எமன்டி! பே ஏரியாவுல எல்லாரும் பாகுன்னாரா? :)

5) முடிந்தால் வருடத்துக்கு ஒரு முறை பிளாகர் மாநாடு நடத்துவோம். சமோசா சப்ளை பண்ண இருக்கவே இருக்கார் நம்ம TRC சார். (எலேய் கொடி, அந்த தடவையும், என் சமோசவ நைஸா நீ அமுக்கிடாத, இப்பவே சொல்லிட்டேன்)
TRC சாரின் வீட்டுக்கு போனா என்ன ஆகும்?னு நான் சொல்லி தான் தெரியனுமா?

முதலில் இந்த ஜோதியில் ஒரு குறிப்பிட்ட மக்கள் மட்டுமே ஐக்கியமாக அழைப்பு.

முடிந்தால் வீட்டு அட்ரஸும் தெரிவிக்கவும். அப்ப தான் ஆட்டோ, சுமோ அனுப்ப எங்களுக்கு வசதியா இருக்கும்.

தகவல்தொடர்புதுறை அமைச்சகம் தனது வேலையை திறம்பட செய்து வருகிறது! என்பதை இந்த தருணத்தில் எதிர்கட்சிகளுக்கு சொல்லி கொள்ள ஆசைப்படுகிறேன்.

எனக்கு தெரிஞ்ச சில பேரின் பெயர்கள் கிழே கொடுத்துள்ளேன். இதில் யாருக்கு விருப்பமோ அவர்கள் மாத்திரம் அனுப்பினால் போதுமானது.
வேறு ஏதாவது உதவி செய்யலாம்னு உங்களுக்கு பட்டா அதையும் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

1) Syam
2) Veda
3) Karthikeyen muthurajan
4) Priya (Priyamana Neram)
5) Ms.C
6) Arunkumar
7) Dreamz
8) Bharani
9) G3 akka
10) Porkodi
11) G-Z
12) Raji
13) Sachin Gops
14) Ramya
15) ACE
16) Sumathi
17) Mani Prakash
18) TRC Sir
19) Geetha Madam
20) Padma Priya
21) Padma
22) Ravishankar Kannabiran
23) SKM
24) my friend
25) kk
26) k4k
27) Usha shankar
28) Devi
29) Kavitha
30) BSK
31) Maduriampathi
32)Mgnithi
33)Nagai siva
34)marutham
35) Ponnarasi kodhandaraman
36) Kutichuvaru
37) Harish
38) Golmaal-gopal

இதே விஷயத்தை பற்றி டிடி அக்கா எழுதிய பதிவு இங்கே பாருங்கள்.
உங்கள் தகவல்களின் ரகசியங்கள் காப்பற்றப்படும்.. அம்பியை நம்பினோர் கை விடபடார். வேணும்னா என் தங்கமணியை கேட்டு பாருங்கள் :)
வாய்பேச்சோடு இல்லாமல் கொஞ்சம் காரியத்திலும் இறங்குவோம். என்ன சொல்றீங்க..?

Friday, April 06, 2007

லூஸாப்பா நீயி?

ஐந்து வியர்டு விஷயங்கள் ஒழுங்கா எழுதிடு!னு நம்ம டாக்டர் டிடி அக்கா அன்பு கட்டளை போட்டுட்டாங்க.
ஏற்கனவே நான்
கடவுள் பாதி மிருகம் பாதி!னு எழுதியாச்சு!னு அழுது பார்த்தேன். தினமும் இரவு தரும் சாம்பார்/ரசத்தை கட் பண்ணிடுவேன்!னு மிரட்டறாங்க.
ஹிஹி, ஆமா! சாதம் மட்டும் குக்கரில் வெச்சுட்டு மீதி எல்லாம் அக்கா வீட்டுல தான் ஓசி! (யக்கா! ரசப்பொடி கொஞ்சம் பழைய ஸ்டாக்கோ? நேத்து ரசம் கொஞ்சம் சப்புனு இருந்துச்சு! )

இதெல்லாம் ஒரு பொழப்பா?னு கூட எக்ஸ்ட்ராவா ஒரு கமண்டு போட்டுட்டு போங்க.
"பக்கத்து வீட்டு சாம்பாருக்கும் மணம் உண்டு!"னு சும்மாவா சொல்லி இருக்கா.
சரி, ரெண்டாம் தடவை எழுதிடறேன்!னு சொல்லியாச்சு.

1) ஜயண்ட் வீல்: சின்ன வயசிலிருந்தே இந்த பொருட்காட்சில இருக்கற ஜயண்ட் வீலுல ஏறதுனா ஒரே அலர்ஜி. நான் எம்சிஏ படிகறச்ச இப்படி தான் ஒரு தடவை நண்பர்களுடன் போய் வசமா மாட்டினேன்.
ஜயண்ட் வீலை பாத்தவுடனே, பக்கி மாதிரி எல்லோரும் போயி உக்காச்சுண்டு, எனக்கும் டிக்கட் எடுத்து வலய விரிச்சாங்க.
ஹ! இதெல்லாம் ஜுஜுபி, என் ரேஞ்சே வேற!னு எல்லாம் நைசா சமாளிச்சு பாத்தும் நடக்கலை. தர தரனு இழுத்துண்டு போயிட்டா ஒருத்தி. அந்த வீல் ஜிவ்வுனு மேலே மேலே எழும்பியதும் வைரமுத்து சொன்ன வயத்துக்கும் தொண்டைக்கும் உருவமில்லா உருளை எல்லாம் உருள ஆரம்பித்து விட்டது எனக்கு. நான் ஏறின நேரம், கரக்ட்டா உயரத்துக்கு போனதும் மெஷினில் ஏதோ கசமுசா ஆகி வீல் நின்று விட்டது.
ஆஹா! அதோ பாருடா மீனாக்ஷி கோவில் கோபுரம், கன்னத்துல போட்டுக்கோ! போற வழில புண்ணியம் கிடைக்கும்னு ஒருத்தி சொல்ல, யப்பா! அதுக்கப்புறம் ஜயண்ட் வீல் இருக்கற ஏரியா பக்கமே போகறது இல்லை.
தங்கமணி ஜயண்ட் வீல் ஏற ஆசைபட்டா ஏதாவது சொல்லி சமாளிக்கனும். நல்ல ஐடியாக்கள் வரவேற்க்கப்படுகின்றன.

2) சோப்பு: சின்ன வயசுல சோப்பு!னா எனக்கு உயிர். வாசனையே வெச்சே அது என்ன சோப்பு?னு கரக்ட்டா சொல்லிடுவேன். இதோட முடிஞ்சா பரவாயில்ல. அந்த மோகம் மேலும் அதிகமாகி கொஞ்சம் கொஞ்சம சோப்பை சாப்டற அளவுக்கு ஆகி போச்சு.(மைசூர் சாண்டல் என் பேவரட்)
எங்க அம்மா அன்பா சொல்லி பார்த்தாங்க, முதுகுல நாலு போட்டு பார்த்தாங்க, ஒன்னும் நடக்கலை. அப்புறமா நாங்க மார்கோ சோப்புக்கு(சே என்ன கசப்பு) மாறிட்டோம். இப்ப வெறும்ன வாசனை பிடிக்கறதோட சரி.

3) மிமிக்கிரி: எல்லா குரலையும் மிமிக்ரி பண்றது கஷ்டம். ஆனா சில பெக்யூலியரானவங்க குரல், அவங்க அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தைகள், குரல் மாடுலேஷன் எல்லாம் கவனமா நோட் பண்ணி மிமிக்ரி பண்ணிடுவேன். ஹிஹி, TRC சார், கீதா மேடம் மாதிரியே நானும் தம்பியும் சில சமயம் பேசிப்போம். (தங்கமணி குரலும் தான்).
எனது முந்தைய கமபனியின் பெரிய்ய தலை ஒருத்தர், பிறப்பால் இந்தியர், ஆனால் படிச்சது எல்லாம் லன்டன். தொர இங்க்லீஸ், அதே Accent பொளந்து கட்டுவார். ஒரு தடவை ஆபிஸ்லேருந்து பார்ட்டி போனப்ப, அவர மாதிரியே என் டீம் கிட்ட நான் பேசி காட்ட, உடனே ஒரு ரசகுல்லா அவர்கிட்டேயே போயி சொல்ல, அவரும் ரொம்ப ஆர்வமா என்ன பேச சொல்ல, ஒரு நிமிஷம் எனக்கு உள்ள போன கோபி மஞ்சூரியன் எல்லாம் வேளியே வந்து விட்டது. அப்புறம் பேசி காட்டினேன்.
தொரைக்கு ரொம்ப சந்தோஷம். கட்டி பிடிச்சுண்டார். இதே நம்ம ஊரு பெரிய தலயா இருந்தா அப்ரைஸலுல ஆப்பு தான்!

4) மருதாணி கைல வெச்சுக்க பிடிக்காது. என் அம்மா அவங்க கைல வெச்சுண்டா கூட பிடிக்காது.ஆனா வெச்சதுக்கு அப்புறமா வர டிஸைன பார்க்க பிடிக்கும். இது வரை என் கைல மருதாணி வெச்சதே கிடையாது, இனி மேலும் வைக்க போறது இல்லை.

5) ஸ்டெப்புடு: நடக்கும் போது எனது ஸ்டெப்ஸை எண்ணும் பழக்கம் உண்டு. பஸ் ஸ்டாபிலிருந்து வீட்டுக்கு போயி சேர நேத்திக்கு 500 அடிகள் எடுத்தேன். இன்னிக்கு எவ்வளவு?னு எல்லாம் யோசிப்பேன். இந்த பழக்கம், உங்களுடைய கான்ஸன்ட்ரேஷனை அதிகரிக்க உதவும்!னு ஒரு புக்கில் படிச்சதும் பெருமை தாங்க முடியலை. அட! என்ன நீங்களும் ஷ்டார்ட் பண்ணியாச்சா?

டிடி யக்கா, ஹோம்வுர்க் எழுதியாச்சு, ஒழுங்கா சாம்பார் வந்துரும் இல்ல இன்னிக்கு? சரி யாரையாவது மாட்டி விடலாம்!னு முடிவு பண்ணி
1)மெஹந்தி புகழ் பத்மப்ரியா
2) என்னை வார்த்தைக்கு வார்த்தை அண்ணா!னு பாசமாக அழைக்கும் பத்மா ( நான் என்ன அறிஞர் அண்ணாவா?)
டேக் பண்ணுங்க! வேணாம்னு சொல்லலை! ஆனா ரெண்டாம் தடவ எல்லாம் ரொம்ப ஒவரு! சொல்லிட்டேன் ஆமா! (அடிங்க, ஆனா கைய கழுவிட்டு அடிங்க! -விவேக் ஸ்டைலில் படிக்கவும்)

Wednesday, April 04, 2007

காட்டுக்குயில்-கருகுமணிமாலை!



டிஸ்கி: இந்த கதையில் வரும் பெயர்கள் சம்பவங்கள் எல்லாம் கற்பனையே.

ஒரு ஊர்ல ஷ்யாம்!னு ஒரு வெட்டி இருந்தான். சாரி, விறகு வெட்டி இருந்தான்.
ஒரு நாள் வழக்கம் போல தன் தங்கமணிய கூட்டிண்டு காட்டுக்கு விறகு வெட்ட போனான்.
போனானா, நடு வழில ஒரு ஆறு(திரிஷா நடிச்ச படம் இல்லை)வந்ததாம். "ஏனுங்க, இன்னிக்காவது நீங்க குளிக்க கூடாதா?"னு தங்கமணி கேக்க, "அட! நான் பல்லே தேச்சது கிடையாது, குளிக்க எல்லாம் சொல்றீங்களே எஜமான்?"னு ஷ்யாம் பம்மினான்.
சரி, எப்படியோ போங்க!னு சொல்லிட்டு தங்கமணி முகத்த கழுவ ஆத்துல இறங்கினாங்களாம். நம்ப ஆளு எவ்ளோ பாசம் வெச்சு இருக்கர்ரு?னு டெஸ்ட் பண்ண சும்மா ஆத்துல முங்கினாப்ல முங்கி, "அய்யோ! தண்ணி இழுக்குது, கை குடுங்க!னு கத்தினாங்களாம்.
நம்ப ஆளு பழக்க தோஷத்துல F1 F1னு கத்தினானாம். அப்ப அழகா ஒரு தேவதை (குகிள் தேவதை!னு வெச்சுப்போம்)டொயிங்குனு ஷ்யாம் முன்னாடி வந்து, என்ன வேணும்? ஏன் F1 F1னு கத்தற?னு கேட்க, நம்ப பயலும் விவரம் சொல்லி இருக்கான்.
சரினுட்டு, குகிள் தேவதையும் தண்ணில முங்கி தங்கமணிய வெளிய கொண்டு வந்தாங்களாம்.
அட! அப்ப தான் தெரியுது, அந்த தேவதை கொண்டு வந்தது நமீதாவ!
இது தானே உன்னோட தங்கமணி?னு கேட்க ஷ்யாம் பயலும் தேன் குடிச்ச நரியாட்டும், "ஆமா! ஆமா! இது தான் என்னோட தங்கமணி!"னு குதிச்சானாம்!
தேவதை கோபமா ஒரு லுக்கு விட்டுட்டு, அட பாவி! போன தடவை கோடரிய தண்ணில போட்டுடுட்டு F1 F1னு கத்தின. அப்ப கூட நான் காட்டின தங்க, வெள்ளி கோடரி எல்லாம் என்னோடுதில்லை!னு ஒழுங்கா தானே பதில் சொன்ன. இப்ப நமீதாவ பாத்தவுடனே இப்புடி ஊத்தறியே டா?

அப்பவும் இந்த பூனையும் பகார்டி அடிக்குமா?ங்கற ரேஞ்சுக்கு முகத்த வெச்சுண்டு "நீங்க சொல்றது எல்லாம் கரெக்ட்டு தான்! இது என் தங்கமணி இல்ல தான்! ஆனா பாருங்க, நான் உண்மைய சொன்னா அடுத்து நீங்க பாந்தமா பாவனாவ காட்டுவீங்க! (அய்யே! பரணி இது கதை தான் பா! அளுவாத, உன் டாவு உனக்கு தான்!) நான் அதுவும் இல்லை!னு சொன்னவுடனே நச்சுனு நயன் தாரவ காட்டுவீங்க. கடைசில என் தங்கமணிய காட்டுவீங்க. நானும், ஆமா! ஆமா!னு தலையாட்டினேன்!னு வைங்க, உடனே ஆஹா!
நீ தான்டா மனுஷன்!
தங்கமணிக்கேத்த புருஷன்!னு சொல்லிட்டு மூனு பேரையும் என்கிட்ட தந்ருவீங்க. ஒரு தங்கமணிட்டயே அடி வாங்க முடியலை. மாசம் ஒரு பூரி கட்டை உடையுது. போண்டா எல்லாம் போட வேண்டி இருக்கு. இதுல மூனு பேருனா? தாங்காது மா என் உடம்பு! அதான் வாங்கற அடிய நமீதா கையால வாங்கலாமேனு ஹிஹி ஒரு நப்பாசை!னு சீன் விட்டானாம் ஷ்யாம்.



உடனே தேவதையும், உன்னைய திருத்தவே முடியாது!னு சொல்லி மறைஞ்சு போக, இவ்வளவையும் தண்ணில தம் கட்டி கேட்டுட்டு இருந்த உண்மையான தங்கமணி கோபத்தோட டாய்!னு கிராபிக்ஸ் இல்லாத இராம நாராயணன் படத்து அம்மன் மாதிரி வெளியே வர, அப்புறம் என்ன ஷ்யாம் பயலுக்கு ஷ்டார்ட் மிஜீக் தான்!

எப்பிடி இருக்கு கதை?

எல்லாம் சரி, அது என்னடா இந்த கதைக்கு இப்படி ஒரு டைட்டில்?னு தானே நீங்க கேக்கறீங்க.

பச்சைக்கிளி-முத்துச்சரம்!னு அந்த கதைக்கு அவங்க டைட்டில் வைக்கலாம்! காட்டுக்குயில்-கருகுமணிமாலை!னு இந்த கதைக்கு நான் டைட்டில் வைக்கப்படாதா?