Monday, September 03, 2007

கிருஷ்ண ஜெயந்தி

பொதுவா நமக்கு பண்டிகைகள் நினைவுக்கு இருக்கோ இல்லியோ, அந்தந்த பண்டிகைக்கு செய்யும் பக்க்ஷனங்கள் எல்லாம் அத்துபடி.

கிருஷ்ணர் என்னிக்குமே ஸ்பெஷல்.


உப்பு சீடை, வெல்ல சீடை, புழுங்கல் அரிசி முறுக்கு, முள்ளு முறுக்கு,தட்டை, தேங்குழல், அப்பம், அதிரசம்.
ஸ்ஸ்ஸ்ப்பா! இதேல்லாம் கிருஷ்ணர் அமுக்கினாரோ இல்லையோ அவர் பெயரை சொல்லி நாம அமுக்கறோம்.
வீட்டுல இருக்கற நம்ம கீதா பாட்டி மாதிரி பெரியவங்க இதையேல்லாம் செய்யறத்துக்கு ஒரு ரகசிய பார்முலா எல்லாம் வெச்சு இருப்பாங்க.

முறுக்கு கடமுடனு வரணும்னா இவ்ளோ அரிசிக்கு இவ்ளோ தண்ணி, இந்த பததுல அரைக்கனும்னு ஒரு ஜிஸெல்வி ராக்கட் விடற ரேஞ்சுக்கு முந்தைய நாளே கவுன் டவுன் எல்லாம் ஆரம்பிச்சுடும்.
சேட்டை பண்ணூம் குழந்தைகளை அந்த ஏரியாவிலிருந்து அப்புறபடுத்துதல், நடுவில் கவுரவ ஆலோசனை சொல்ல துடிக்கும் ரங்குவை "உப்பு வாங்கிண்டு வாங்க! பெருங்காயம் வாங்கிண்டு வாங்க! வெல்லம் பத்தலை!"னு சாக்கு சொல்லி டிரில்(பழி) வாங்கும் படலம் எல்லாம் இனிதே நிறைவேறும்.

உம்மாச்சி கும்பிட்டு முடிஞ்சதும், பக்கத்து வீடு, எதிர் வீடு, அடுத்த வீடு என டிஸ்ட்ரிபியூஷன் அழகா நடக்கும். எல்லோருக்கும் குடுக்கனும்! என்ற நல்ல எண்ணத்தை விட, "முறுக்குனா இப்படி தான் இருக்கனும்!"னு அந்த பரிமளா தெரிஞ்சுக்கட்டும், பெருசா போன கிருஷ்ண ஜெயந்தில உப்பில்லாத முறுக்கை பண்ணிட்டு என்ன பீத்து பீத்தினா அவ! என பீர்(peer not beer) பிரஷர் எல்லாம் தலைகேறும்.

இதுல தெரியாதனமா, "பரிமளா மாமி வீட்டு அதிரசத்துக்கும் மணமுண்டு!"னு ரங்கு திருவாய் மலர்ந்தருளினால் போச்சு!

அன்னிக்கு கிருஷ்ண ஜெயந்தி ரங்குவுக்கு மட்டும் சிவ ராத்திரியாக மாறி விடிய விடிய லக்க்ஷார்சனை, சகஸ்ர நாமாவளி எல்லாம் ஜோரா நடைபெறும்.

அப்புறம் அந்த ஜென்மத்துக்கு ரங்குவிற்கு அதிரசத்தை பார்த்தாலே அலர்ஜியாகி விடும்.

இப்படி ஏகப்பட்ட கலாட்டாக்கள் நடந்தாலும் பண்டிகைகள் என்றுமே இனிமையானது தானே! (மாரல் ஆஃப் தி பதிவு சொல்லிட்டோம்ல).
happy Birthday krishna! :)))