Friday, March 31, 2006

பஞ்ச் டயலாக்ஸ்




எதோ நம்மால முடிஞ்ச சேவை. தலைவர் என்ன டயலாக் விட போறாரோ? அந்த ஆண்டவனுக்கு தான் தெரியும்.

Note: right click and open in new window to read all punch dialogues for better clarity.

Wednesday, March 29, 2006

உகாதிலு பண்டிகைலு!


நாளைக்கு உகாதி பண்டிகை. நம்ம ஆபிஸ்ல இருக்கற தெலுங்கு, கன்னட நண்பர்கள் ரொம்ப பாசமா எனக்கு அனுப்பிய வாழ்த்துக்கள் இது.

எனக்கு தெலுங்கு, கன்னடம் எல்லாம் "பிச்சு போட்ட ஜிலேபி மாதிரி தான் தெரியுது. உங்களுக்கும் அப்படி தானே?
அப்புறம், இத அனுப்பிய குல்டி ஜிகிடியே வந்து வாசிச்சு, அர்த்தமும் சொல்லிட்டு போச்சு.
Here's the meaning:
Ugadi is festival for happiness, in every Andharian house its 1st festival, This life is not constant , always change , May this ugadi brings you happiness.

நம்ம தமிழ் வார்த்தைகளுக்கு பின்னாடி "லு" போட்டா அதான் தெலுங்கு.
For ex, "உஷாலு லன்டன்லு உன்னாலு" (Usha is in London). he hee, எப்படி நம்ம தெலுங்கு புலமை!
மனசுலு ஆச்சாலு? சே! புரிஞ்சதோ?

Tuesday, March 28, 2006

சேற்றில் முளைத்த (செந்)தாமரை!

எனக்கு மிகவும் பிடித்த சில கவிஞர்களில் பெண் கவிஞர் தாமரைக்கு தான் முதலிடம். டைமண்ட்முத்து நன்றாக எழுதினாலும், தமிழ் சினிமாவின் வியாபார வலையில் பல தடவை விழுந்தவர் தான்.
ஒரு பெண்ணின் மெல்லிய காதலை சொல்வதில் தாமரையை அடிக்க ஆளில்லை என தைரியமாக நான் சொல்வேன்.
"வசீகரா", "ஒன்றா! ரெண்டா ஆசைகள்!",
"மல்லிகை பூவே! மல்லிகை பூவே பார்த்தாயா",
"அழகிய அசுரா! அழகிய அசுரா!!" என அடுக்கி கொண்டே போகலாம்.

ஒரு வசீகரமான, டீசன்டான (he hee,அம்பி மாதிரி) ஆணின் மெல்லிய காதலை ஏன் தாமரை தன் வரிகளில் இதுவரை வடிக்கவில்லை? என்ற ஆதங்கம் நீண்ட நாளாக இருந்து வந்தது.
அந்த குறையை,
"ஒரு மாலை இள வெயில் நேரம்!" கஜினி பட பாடல் மூலம் போக்கி விட்டார்.

"அவள் அள்ளி விட்ட பொய்கள்....
இதழோரம் சிரிப்போடு கேட்டு கொண்டே நின்றேன்!
உனகேற்ற ஆளாக யெனை மாற்றி கொண்டேனே!"

What a classic touch! இந்த பாடலை சஞ்சய் ராமசாமிய விட நான் தான் அதிகமா முனுமுனுத்து இருப்பேன். என் மொபைல் ரிங்க் டோனும் இன்னும் மாறாம இருக்கு.

ஆபாசம் இல்லாமலும் தமிழ் பாடல்களில் காதலை வெளிப்படுத்த முடியும் என்று நீரூபித்தவர் தாமரை.

ஆனாலும் "வா என்றால் வணக்கம்!
பூ என்றால் மணக்கும்" போன்ற தத்துவ பாடல்களும்,

"சீ!சீ!சீ! என்ன பழக்கம் இது?
சின்ன புள்ள போல!"
வகையறாக்களும் தான் hit ஆகின்றன அல்லது hit ஆக்க படுகின்றன.

அவர்களை சொல்லி குற்றமில்லை. நம்மாத்து சமையலுக்கே, சில சமயம் மசாலா தேவைபடுகிறதே!
ஆனால் மசாலா மட்டுமே சேர்த்து கொண்டு இருந்தால், acidic problem வந்து விடும். கடைசியில் தயிர் சாதம், வடு மாங்காய்க்கு தான் திரும்ப வேண்டும்.
தாமரையின் படைப்புகள் தயிர் சாதம், வடு மாங்காய் ரகம்.

பின்குறிப்பு: he hee, கவிஞர் தாமரை படம் கிடைக்க வில்லை. இத வெச்சு அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்கோ!

Monday, March 27, 2006

ஜிங் சா! ஜிங் சா!!

போன போஸ்டுல, மகளிர் கழக கண்மணிகள் எல்லாம் டாய்! மவனே! அம்பினு, பொங்கி எழுந்துடாங்க. அம்முவிடம், போன்ல மாப்பு! மன்னிப்பு எல்லாம் கேட்க நேர்ந்து விட்டது. நல்ல வேளை, நேர்ல வந்து தோப்புகரணம் எல்லாம் போட சொல்லலை.

அதனால மகளிர் எல்லாம் மகிழும் படியா இந்த போஸ்ட போடலாம்னு முடிவு பண்ணி இருக்கேன். ஒகே யா?

அம்மா என்றழைக்காத உயிரில்லையே!!
அம்மாவை வணங்காது உயர்வில்லையே!!


CHENNAI: World Federation of Tamil Youth (WFTY) on Tuesday said it has nominated Tamil Nadu Chief Minister Jayalalithaa for the Nobel Peace Prize, 2006.

The federation has nominated Jayalalithaa's name from India, Sharjah and the US, for her "dedicated efforts in ushering Peace, Performance, Progressiveness, Productivity, Partnership and Prosperity for the people of the state during the last five years," its president Dr Vijay G Prabhakar said.

"We would also be celebrating April 14, the Tamil New Year as 'Selvi J Jayalalithaa day' in 15 countries, highlighting the progress of Tamil Nadu under her leadership," he said.

The federation's India chapter president Dr R Mylvaganan presented a DVD titled "J Governance" produced by the organisation.

Here’s the Link: http://www1.timesofindia.indiatimes.com/articleshow/1449688.cms

படிச்சு முடிச்சதும், ஜெக்கு கேட்டதோ இல்லையோ, எனக்கு ஜிங் சா! ஜிங் சா!னு சவுண்டு கேட்டது. உங்களுக்கும் கேக்குதானு கமெண்ட்ல போடுங்க! :)

Friday, March 24, 2006

Blog Visitors Promotion Techniques

One of our friend Gops asked for tips to promote his blog to be flooded with visitors.
Here are they, which I feel/found works out.

கவித! கவித! Technique :

கவிதை நல்லா ஒர்க்கவுட் ஆகும். கவிதை எழுத கஷ்டப்படவே வேண்டாம்.
"கருவறை, மணவறை,
மாபிள்ளை, வேப்பிலைனு" ஒரு எதுகை மோனையோட எழுதி, நடுவுல இந்த மானே! தேனே! எல்லாம் தூவி விடுங்க. ஆகா! ப்ரமாதம்! கவித, கவித!னு ஆட்கள் குமிஞ்ருவா!

அட்வைஸ் அம்புஜம் Technique:

உங்களுக்கு கால்ல சுளுக்கா? பல்லுல தேங்காய் துகள் புகுந்து விட்டதா? எளிய நிவாரண வழிமுறைகள் இதோ! அப்டினு Google search பண்ணி 4 படத்த போஸ்ட் பண்ணிடுங்கோ! அவ்ளோ தான்! comment ரொம்பி வழியும்.

லைவ் கமண்ட்ரி Technique:

உங்க ஆபிஸ்ல நடந்த கோலிகுண்டு பந்தயத்தை லைவா ஒரு கமண்ட்ரி எழுதி, league match, super six, quarter finals, semi-finals part by partaa publish
பண்ணிடுங்கோ! அப்புறம் என்னாச்சு? அப்புறம் என்னாச்சுனு comment ரொம்பி வழியும்.

ஜொள்ளு Vs பல்பு Technique:

எங்க Australia ஆபிஸ்ல ஒரு வெள்ளைகார குட்டி இருக்கு. அப்படினு ஆரம்பிச்சு நீங்க அது கிட்ட அடி வாங்கினத ஒளிவு மறைவு இல்லாம போஸ்ட் பண்ணிடுங்க. அடுத்தவன் பல்பு வாங்கினத படிக்கறுதுல நம்ம ஆளுகளுக்கு தனி சுகம்.

பிலிம் காட்டும் Technique:

தெரியுமா? Australia வுல உச்சா போறதுக்கு கூட லைஸென்ஸ் எடுக்கனுமாம்! அப்படினு ஒரு பிட்ட போடுங்க. அப்படியா?னு நம்ம ஆளுங்க வாய பொலந்துடுவாங்க. அப்புறம் என்ன, உங்க blog visitors rating எகிறிடும்.

அட, ஒன்னும் ஒர்கவுட் ஆகலியா? கன்னா பின்னானு எல்ல பிளாக்குகும் ஒரு விஸிட் அடிங்க. சூப்பர்! கலக்கிடீங்க! அப்படினு ஆப்ரிக்காகாரன் பிளாக்குல கூட போயி கமெண்ட் பண்ணிட்டு வந்துடுங்க. அவன் வேற வழி இல்லாம, உங்க பிளாகுக்கு விஸிட் அடிப்பான்.

மொத்தமா, Reply கமண்ட் குடுக்காம, தனி தனியா கமண்ட் குடுங்க. So 5 கமெண்ட்ஸ், reply 5 seprate கமெண்ட்ஸ். ஆக மொத்தம் 10 கமெண்ட்ஸ். ஐடியா நல்ல இருக்கு இல்ல?
சில வெட்டி பசங்க, reply commenttuku reply எல்லாம் குடுப்பாங்க. இந்த ரெஞ்சுல போச்சுனா, உங்க பிளாக் yahoo messenger மாதிரி மாறிடும்.

இதுவும் உதவலைனா, "எப்டிடா இதெல்லாம்? பின்னரியேடா! எங்கியோ போயிடடா!"னு உங்களுக்கு நீங்களே கமண்ட் போட்டுகுங்க.

பின்குறிப்பு: இத படிச்சுட்டு, டென்ஸன் ஆகி, "டாய்! எவன்டா இங்க அம்பி?னு சில பேரு தாக்க வரலாம்னு முன் கூட்டியே, உஷாரா கர்நாடகா அதிரடி படை பாதுகாப்போட தான் ஆபிஸ் போய் வருகிறேன்.

Btw, my colleague 'சேச்சி' has started blogging. You can find her @ http://chakarakutty.blogspot.com. (he hee, பிளாக் பெயர் suggest பண்ணியது அம்பி தான்னு உங்களுக்கு நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.)
பத்ர காளிய பத்தி எல்லாம் சேச்சிட்ட விசாரிக்க வேண்டாம். she don't know Thamizh, knows only malayalam, kannada and hindi.

Wednesday, March 22, 2006

கள்வனின் காதலி



எப்டியாவது இந்த வாரம் ரங் தே பாசந்தி பாத்துடனும்னு தொடர்ந்து 4 வது வாரமா, அந்த Multiplex theatreku படையெடுத்தேன். எல்லா டிக்கட்டும் வித்து போச்சே! போயா! போ!னு ஜெயம் சதா ஸ்டைலில் கௌண்டர்காரன் கைய காட்டினான். சே! என்னடா இது? இப்படி ஒரு சோதனைனு நொந்து நூடூல்ஸாகி, வேற் என்ன படம் ஒடுதுனு பாத்தேன்.
கள்வனின் காதலி கண்ணடித்தாள்.
சரினு டிக்கெட் எடுத்து உள்ள போயி உக்காந்தேன். இதோ இந்த ப்ளாக் ரெடி!

சில விஷயங்களை/மனிதர்களை மறுபடி, மறுபடி செய்து/பார்த்து வந்தால் நமக்கு பழகி விடும்! அது போல தான் SJ.சூர்யாவும்!
எந்த கிரக வாசி இதுனு முதல் படத்தில் எல்லாரும் கொழம்பி போயிட்டா! இப்பொ நமக்கு முகம் பழகி விட்டது!மனிதர் என்னம்மா ஆட்டம் போடுகிறார்! ( நான் danceaa சொன்னேன்)

"ஒரு நல்லவன் எப்பொ வேணா கெட்டவனாகலாம்! ஆனா ஒரு கெட்டவன் நல்லவனா மாறிட்டானா, அவன் கெட்டவன் ஆக மாட்டான்!!" இது தான் படத்தோட லைன்.

முழு கதைய நான் இங்க சொன்னா டைரக்டர் என்னை அடிக்க வருவார்.
இப்பொதெல்லாம், A சர்டிபிகேட் வாங்கினா தான் படத்துக்கு பெருமை போலிருக்கு! ஸென்சார், கொஞ்சம் கத்ரிய சானை பிடிச்சு இருக்கலாம்! (எல்லாம் பாத்துட்டு, நல்ல புள்ளையாட்டும் நடிக்காதடானு உங்க பொருமல் கேக்கறது!)

நயன் தாராவை பத்தி 4 வரி எழுதலைனா, நான் நைட்டு சாப்பிட போகும் பிரைடு ரைஸ் செமிக்காது நேக்கு!
வஞ்சகம் இல்லாம வளர்ந்து இருக்கு குழந்தை!
கேமிரா மேன் அடிக்கடி நயனின் முகத்தை க்ளொஸப் ஷாட்ல வேற காட்டி தொலைக்கிறார். 70 mm ஸ்கிரீன் பத்த வில்லை! அம்மணி, நமீதாவுக்கு போட்டியா வந்துன்ட்ருக்கா!
உடனடியா ஜிம் போகலைனா, மார்டன் டிரஸ் எல்லாம் தை மாத போகி பண்டிகைக்கு கொளுத்த வேண்டியது தான்!
கவிஞர் வாலி, மற்றும் சில கவிஞர்களை குயின்ஸ் லெண்டில் உள்ள ரொலர் கோஸ்டரில் ஏத்தி விட்டு, கீழே இறங்குமுன் பாடல்கள் வேண்டும்னு டைரக்டர் சொல்லி இருப்பார் போல! எல்ல பாடல்களும் படு ஸ்பீடு!ஒரு வரி கூட நினைவில் இல்லை!
காமடிக்கு சூர்யா போதாதுனு விவேக் வேற தனி டிராக் ஒட்டுகிறார். அரைத்த மாவை அரைச்சா கூட தாங்கிகலாம். ஆனா புளிச்ச மாவை புளிக்க வச்சு அரைச்சா கடுப்பு தான் வரும், இல்லையா? இன்னும் எத்தனை படத்தில், பின்னாடி தீ பட்ட ஜோக்கை அரைக்க போகிறாரோ?
சில காட்சிகள், சிங்கிள் மீனிங், டபுள் மீனிங்,ட்ரிபுள் மீனிங்னு அவ்வையார் வரிசை படுத்தி பாடி விடும் அளவுக்கு உள்ளது! சென்சார் மெம்பர்கள், நடுவுல பக்கோடா திங்க போயிருப்பா போலிருக்கு!
புது டைரக்டர், யுவன் ஷங்கர் ராஜாட்ட நன்னா வேலை வாங்கி இருக்க வேண்டாமோ? (யுவன்! நீங்க செல்வ ராகவனுக்கு மட்டும் தான் சோக்கா மீஜிக் போடுவேளா?)
குத்து பாட்டு இல்லாத தமிழ் படமா? "சின்ன வீடா வரட்டுமா" புகழ் தேஜாஷ்ரி சும்மா வாங்கின காசுக்கு வஞ்சகம் இல்லாம ஆடி (குத்தி) இருக்கார்!
"கொட கூலி குடுத்தாச்சு!
குடியேற வரலாமே!"

ஆகா! ஆழ்ந்த கருத்து! அற்புதமான சிந்தனை! 6.5 கோடி தமிழர்களுக்கும் தீர்ந்தது சந்தேகம்!
பக்கத்து சீட்ல உட்காந்து இருந்தவர் குழந்தை ( நிஜமான குழந்தை - 6 வயசு இருக்கலாம்) ஒரு சந்தேகம் கேட்டது அவ அப்பா கிட்ட. நான் நைஸா ஒட்டு கேட்டேன்.

பொதுவா இப்ப எல்லாம், படத்தோட டைட்டில் போடும் போது, அந்த படத்துக்கு ஒரு சப்-டைட்டில் வேற போடுகிறார்கள். For example, காக்க காக்க – The Police.
இந்த படத்துக்கும் ஒரு சப்-டைட்டில் போட்டாங்க! கள்வனின் காதலி (36-28-36)

அந்த குழந்தை கேட்டது, "what does those numbers mean daddy?"
டாடி முகம் போன போக்க பார்கனுமே, அடடா! கண் கொள்ளா காட்சி!

குடும்பத்துடன் காண வேண்டிய படம்னு advertise பண்ணிடானா என்ன?

அதுக்கு அந்த டாடி சொன்ன பதில் செம காமெடி. "அதுவாடா கண்ணா! Those are the bus numbers for the director’s home town”.

மொத்ததில், கள்வனின் காதலி இனிக்கவும் இல்லை! கசக்கவும் இல்லை! (read as if Sun TV - Sunday super Top Ten effect)

மதியம் செஞ்ச பாவத்தை தொலைக்க, மாலை banglore khemfort ஷிவா மந்திர் போயி பாவ மன்னிப்பு கேட்டேன்.

பிள்ளையார் பிடிக்க போயி குரங்கானாலும் பரவாயில்லை! பெருச்சாளி ஆகி விட்டது!

Tuesday, March 21, 2006

இந்தியா ஒளிர்கிறது!



Ennathaa solla..? இந்தியா ஒளிர்கிறது! avloo thaan!

note: scripting for next post. until, i used to post such pic's...
one of the techniques of retaining the blog visitors... he hee :)

Monday, March 20, 2006

கேசரி - அமிர்தம்

எப்பொ, எப்டினு சொல்ல தெரியலை! இந்த கேசரி மீது எனக்கு எப்படி இவ்வளவு காதல், (மோகம்னு கூட சொல்லலாம்)வந்தது?

ஒரு வேளை எங்க அம்மா கை பக்குவமா?
கேசரியின் ஆரஞ்சு கலரா?

"தெரியலை பா!" தெரியலைனு நாயகன் கமல் மாதிரி டயலாக் தான் வருது!

மொத்த குடும்பத்துக்கும்(4 பேரு) செஞ்சு வெச்ச கேசரிய, ஒத்த ஆளா உக்காந்து முழுங்கிட்டு, "என்னமா! இன்னிக்கி, என் பங்கு கொஞ்சம் கம்மியா வச்சுட்ட போலிருக்கு?னு சொன்ன என்னை பார்த்து அழுவதா, சிரிப்பதா?னு தெரியாமல் எங்க அம்மா திணற, அது வரை பொறுமை காத்து, பேசி தீர்க்கலாம்னு இருந்த என் உடன்பிறப்பு, டாய்!னு பாஞ்சு, சும்மா கேசரிய சட்டியில பொரட்டி,பொரட்டி எடுக்கற மாதிரி பொரட்டி எடுத்துட்டான்.

"கேசரி ரொம்ப நன்னா இருக்கு!" ஆனா பொண்ண பிடிக்கல!னு நான் சொல்லிட்டா, இது எல்லாம் ஒரு பொழப்பானு? மொத்த குடும்பத்துக்கும் தர்ம அடி விழலாம்னு பயந்து தானோ என்னவோ, எங்க அம்மா எனக்கு பொண்ணு பார்க்க பயப்படுகிறார்.

நம்ப ஆபிஸ் கேண்டீன்ல north Indian ஆலு பரோட்டா, south Indian இட்லி வடைனு பல வகை இருந்தாலும், என் சாய்ஸ் எப்பவுமே + combination கேசரி தான். ஒரு கட்டத்துல, என்னை பாத்ததுமே, கேசரினு பில்லு போட்டு குடுக்கற அளவுக்கு நிலமை போயி விட்டது.

இது கூட பரவாயில்லை!

மீதி சில்லறை வாங்க மறந்த என்னை, Hello! கேசரி! இந்தாங்க, மிச்ச சில்லறைனு ரொம்ப அவமானபடுத்திடான் அந்த கடங்காரன்! !(அதுவும், பல பிகர்கள் முன்னாடி!)

நான் என்ன சீத்தாராம் கேசரி பேரனா?

இனியும் அவமானம் பொறுக்க முடியாது!னு முடிவு செய்து, 1 வாரம் கேசரி வேண்டாம்னு பிலிம் காட்டினேன்.

"குற்றம் என்ன கண்டாய்? என் கொற்றவனே!"
கேசரியின் சுவையிலா?, அதன் மணத்திலா?னு அழுது புலம்பியபடி, என்னிடம் வந்து விட்டார் தலைமை சமையல்காரர்.

உடம்புக்கு முடியலை, Oil சேர்க்க கூடாதுனு Docter சொல்லிட்டார்னு நான் விட்ட ரீலை எல்லாம் அவர் நம்பவில்லை. தினமும், கேசரிக்கு கொசுறு கேட்கும் அல்பமாச்சே நான்!

பின், "மீண்டும் JKP!"னு சிந்து பைரவி சிவகுமார் மாதிரி, 4 இட்லி, 1 plate கேசரி!னு ஆர்டர் குடுத்த என்னை, "வாடி, வா! நீ வருவெனு எனக்கு தெரியும்டி!"னு நக்கல் பார்வை பார்த்தான் அந்த தடியன்!

இப்படியாக, என் கேசரி மோகம், நாளொரு மேனியும், பொழுதொரு Plate கேசரியுமா போயிண்டுருக்கு!

கேசரி, கேசரி, cheee! சரி, சரி, நேக்கு கேசரி சாப்பிட நேரம் ஆகிறது! அடுத்த post la சந்திப்போமா?

Friday, March 17, 2006

தன்மான தமிழன்!



அரசியல்ல இதல்லாம் சகஜம்பா!

Wednesday, March 15, 2006

நம்பள பத்தி நச்சுனு நாலு விஷயம்!

பிடித்த இடம் 1: கல்லிடைகுறிச்சி, ரங்கா(ராம)ஜென்ம பூமி! தாமிர பரணி கரைகள், அகஸ்தியர் அருவி, பாண தீர்த்தம் (ரோஜா படம் - சின்ன சின்ன ஆசை) Hhhhhhmmm! "அந்த நாளும், வந்திடாதோ!"

பிடித்த இடம் 2: "மச்சான் பேரு மதுரை" அமெரிக்கன் கல்லூரி - என்னை செதுக்கிய இடம். என் சைக்கிள் தடம் பதியாத மதுரை வீதிகள் கம்மி.

பிடித்த இடம் 3: சென்னை, "என்னை போடா வெண்ணை என்றது!"
2 வருஷம், சென்னை வாசம்! எருமை மாடு மாதிரி 3 மணி நேரம், தாமிர பரணியில் குளித்த என்னை, ஒரு வாளி (அதுவும் ஓட்டை வாளி) தண்ணீரில் குளிக்க வைத்த இடம்.

பிடித்த இடம் 4: குளு குளு பெங்களூர் – ஊரூக்கே a/c போட்ருகானுங்க பா! (he heee, பிகர்களும் குளு குளு)

(Paris, Los angels nu சொல்ல ஆசையா தான் இருக்கு! பார்கலாம்! "Every dog has its day"!)

நீண்ட கால சாதனை: We miss you a lot! nu பல பேரை சொல்ல வைத்தது!

சமீப கால சாதனை: போனா போகுதுனு, என்னையும் taggi உள்ள சில நல்ல உள்ளங்களை சம்பாதித்து இருப்பது! (sentimenttu touchhu paa!)

நீண்ட கால எரிச்சல்: 2 முறை படையெடுத்தும், IAS clear பன்ன முடியாமல், அசின், கோபிகா போல் சரியா 1 மணிக்கு என் தூக்கத்தை கெடுக்கும் பற்றி எறியும் எண்ணம்!

சமீப கால எரிச்சல்: B+ve ரத்தம் கேட்கும் இரவு நேர கொசுக்கள்.


பிடித்த உணவு 1: ரவா கேசரி - தனியா ஒரு postae போடலாம்னு இருக்கேன்!

பிடித்த உணவு 2: சப்பாத்தி - veg குருமா, ஆகா! இன்னும் குடுமானு கேட்டு வாங்கி சாப்டுவேன்!

பிடித்த உணவு 3: திருநெல்வேலி அல்வா பத்தி நான் சொல்ல வேண்டியதே இல்லை!(அதான், என் போஸ்ட படிக்க்ரேளெ!)

பிடித்த உணவு 4: ஆயிரம் சொல்லுங்கோ! நம்மாத்து தயிர் சாதம், மாவடுக்கு முன்னாடி, எதுவுமே நிக்க முடியாது!

"உத்யோகம் புருஷ லக்க்ஷணம்"

வேலை 1: MCA படிக்கும் போது, பிகர்களே நமக்கு செலவு பன்றாளெனு ரோஷப்பட்டு, நண்பர்களுடன் ஒரு computer center ஆரம்பித்து பின் அம்பியின் வறு கடலை களமாக மாறியது!

ராபின் hood போல, இருப்பவர்களிடம் HTMLku 5000 ரூபாய் வாங்கி, மிடில் கிலாஸ்கலுக்கு சகாய விலையில் C++ நடத்தினேன்!

பிகர்களுக்கு, வாரம் இருமுறை, பிரைட் ரைஸ் வாங்கி தரும் அளவுக்கு லாபம் வந்தது!

வேலை 2: MCA முடிந்ததும், ஒசாமா குண்டு போட்ட புண்ணியத்தில் campus interview எல்லாம் கோவிந்தா! கோவிந்தா! வாகி விட அப்பாவிடம் இனி மேலும் காசு வாங்க கூடாது என்ற வைராக்யத்துடன் ஒரு பெயர் சொல்ல விரும்பாத கல்லூரியில் Programmer வேலை! Programming வேலை தவிர எல்லா வேலையும் வாங்கினார்கள்.(ஒரு தடியனுக்கு டீ கூட ஒரு நாள் வாங்கின்டு போனேன். அடுத்த நாள், அவனுக்கு பேதி புடிங்கிருத்து! அம்பி சாபம் சும்மா விடுமா?)

வேலை 3: பின்பு, ஒரு பெயர் சொல்ல விரும்பாத Deemed universityla ஒன்ரயணா சம்பளத்துக்கு Lecturer வேலை!
பசங்கள விட class எடுக்க, நான் தான் நிறைய படிச்சேன்!
நான் எடுத்த Digital electronics paperla 100% percent result வந்தால், திருசெந்தூர் முருகன் சன்னதியில் மொட்டை அடிக்க வேண்டி கொன்டேன்! பாவி பசங்க, பாசாகி தொலச்சுட்டாங்க! அப்புறம் என்ன, அரோகரா தான்!

வேலை 4: சென்னை எல்னெட் பார்கில் "Instructional designer" வேலை.
அமெரிக்கா மடையனுக்கு இந்தியாவில் இருந்தே பாடம் எடுக்கும் வேலை!

வேலை 5: அஸிம் பிரெம்ஜிக்கு உழச்சு கொட்ரேன் இப்பொ!


Now I pass on this chain post to veda, ammu,neighbour, known stranger, ponnarasi. You pple tell about yourself in ur post. Ok vaa?

Tuesday, March 14, 2006

ரிஷி மூலம்!

என் பெயரின் முதல் பாதியும்,
உன் பெயரின் முதல் பாதியும்,
சேர்த்து நம் குழ்ந்தைக்கு
பெயர் வைப்போம்! என்று
முடிவு எடுத்தோம் அன்று!

ஆனால்,இன்று
உன் முழு பெயர்
என் குழந்தைக்கு,
என் முழு பெயர்
உன் குழந்தைக்கு!!

பரவாயில்லை! உன் இளைய மகள் பெயர் யாருக்கு சொந்தம்?
உன் கணவரிடம் கேட்பாயா கண்மணி?
என் இளைய மகனுக்கு பெயரிட்டவள் என் மனைவி தான்!!

பின்குறிப்பு: கடைசி 3 வரி தான் நம்ம சொந்த சரக்கு!

Monday, March 13, 2006

கப்பல் ஓட்டிய கேப்டன்!

டைட்டானிக் படத்தை நம்ப கேப்டனை herovaa போட்டு எடுத்தால் எப்படி இருக்கும்னு நேற்று இரவு ஒரு சின்ன trailer ஓட்டி பாத்தேன்.

சரி, இத பத்தி bloggaலாம்னு தோனித்து நேக்கு!

தோட்டா தரணி புண்ணியத்தில், 150 container லாரிய ஒன்னா சேர்த்தா டைடானிக் கப்பல் ரெடி.

முதல் ஷாட், நம்ப கேப்டன், White naval uniform மற்றும், முட்டி வரை தொடும் ஒரு நீள கோட் அணிந்து, கருப்பு கலர் cooling glass கெட்டப்புல slow motionla நடக்குற மாதிரி வெச்சுடலாம்!( side effectukku !ஒரெ சமயத்தில், 10 கேப்டன் வர மாதிரி செட் பண்ணிடலாம்)

Title song இல்லாம கேப்டன் படமா?

"வாரான்டா தமிழன்!
பேச்சிமுத்து பேரன்!
கப்பல் ஓட்ட போறான்!
நம்ம காக்க வாரான்!!"

C centersla விசில் பறக்காதோ?

டைரக்டர் கன்டிப்பா "ஸென்டிமெண்ட் சிங்கம்" K.S.Ravikumar or "உல்டா மன்னன்"P.Vaasu தான்!

மியுஜிக், நம்ம "காப்பி ஸ்பெஷலிஸ்ட்" தேவா தான். கன்டிப்பா ஒரு கானா பாடல் உண்டு.

அடுத்து, கதா நாயகி யாரு?னு மண்டைய பிச்சுக்கவே வேண்டாம்.

நமீதா தான் கேப்டனுக்கு best choice! (ரெண்டும் weight party)

அசின்,or திரிஷா தான் வேணும்னு கேப்டன் அடம் பிடிச்சா நான் பொறுப்பில்லை!

அப்படி நடந்தா,ரெண்டு பேரும், கேப்டன பெரியப்பானு தான் படம் முழுக்க கூப்பிட்டாகனும்னு censor board object பண்ணும்!

உனக்கு கப்பல பத்தி என்ன தெரியும்னு? தப்பி தவறி யாராவது கேட்கட்டும் பாப்போம்!

வழக்கமான தனது அடிக்குரலில், "ஏய்! இந்த கப்பல்ல மொத்தம் 6000 பேர் இருக்காங்க. அதுல ஆண்கள் 2756, பெண்கள் 2232, குழந்தைகள் 1012.
பெண்கள்ல பிகர்கள் எண்ணிக்கை மட்டும் 1075.
மொத்தம் 1145 தமிழர்கள் இந்த கப்பல்ல இருக்காங்க!
Withoutla பயணம் செய்ற எண்ணிக்கை மட்டும், என்னையும் சேர்த்து 750!
மொத்தம் 300 ரூம்கள் இருக்கு, 450 கக்கூஸ் இருக்கு, அதுல சரியா தண்ணி விடாத கக்கூஸ் எண்ணிக்கை மட்டும் 272!" nu லியாகத் அலிக்கான் வசனத்த சொன்னா படம் 250 நாளுக்கு நான் கியாரண்டி.

காமெடிக்கு, கப்பல் சர்வராக வடிவேலுவை போடலாம்.

சரி ரொமான்ஸ் இல்லாம தமிழ் படமா? (அதுவும் நமீதா இருக்கும் போது!)

கண்டிப்பா ஒரு மழை song வெச்சாகணும்! நமீதா Costume செலவு மட்டும் கம்மி! அம்மணி தீவன செலவு அதை ஈடு கட்டி விடும்.

எதுக்கும் கேப்டன் படபிடிப்புக்கு முன், ஜிம் சென்று வருவது உசிதம். அப்ப தான் நமீதாவ தூக்கி டூயட் எல்லாம் பாட முடியும்.

அம்மா சென்டிமென்டுக்கு, "ஒரு வாயி சாப்டு போட்டு வண்டி(கப்பல்) ஓட்டு கண்ணு!"னு மனோரம்மா ஆச்சி இருக்கும் போது என்ன கவலை?

"எங்க ஊரு ஏரி வழியா கப்பல் ஓட்டாத கேப்டன 18 வருஷம் இந்த பஞ்சாயத்து தள்ளி வைக்குதுனு!" நாட்டாமை விஜயகுமார தீர்ப்பு சொல்ல வைக்கலாம்.

கிளைமாக்ஸ் காட்சியில், ஒரு கையில் நமீதவை சுமந்து, கயிற்றில் தொங்கியபடி, ஐஸ் பாறையை தனது இடது காலால் கேப்டன் உதை விட்டா தூள், தூளாகி விடாதோ அந்த பாறை!

Last, but not least, ஒரு 45 நிமிஷ கோர்ட் ஸீன் கண்டிப்பா வெச்சே ஆகனும்.

பாகிஸ்தான் தீவிரவாதிகள், தன்டயார்பேட்டை வழியாக இந்தியாவுக்குள் ஊடுரூவி, டைடானிக் கப்பல் போகும் பாதையில் அவ்லோ பெரிய்ய ஐஸ் பாறை வெடிகுண்டை சிவகாசியில் தயாரித்து, வைகை, காவேரி, கூவம் வழியா அரபி கடலில் செட் செய்து விட்டனர்!
அதை தமிழ் நாடு போலீஸ் உளவுபிரிவு கண்டுபிடித்து, நமது கேப்டனை ஸ்பெசல் ஆபிஸராக நியமித்து, 10 நாளில் கப்பல் ஓட்ட பயிற்சியும் அளித்தது! என்ற சஸ்பென்ஸ் கடைசி ரீலில் தான் தெரிய வரும்.

படத்தின் ஒரு காப்பியை, James camroonuku அனுப்பி வைத்தால் இனிமேல், அவர் படம் எடுப்பார்?

பின்குறிப்பு: "படத்த ஆஸ்காருக்கு அனுப்பலைனா தீ குளிப்போம்!" என்று கேப்டன் ரசிகர்கள் போராட்டம் நடத்தினா ஆச்சர்யபடாதீர்கள்!

Friday, March 10, 2006

A Friend in Need! - II

களத்தில் குதிக்கறத்துக்கு முன் அம்பி என்னிக்குமே, Risk Factor Analysis Study பன்ணிட்டு தான் எறங்குவான். இல்லைனா, கைப்புள்ள rangeku அடி பட வேண்டிருக்கும்னு நேக்கு நன்னா தெரியும்.

சில பிகர்கள், BSRB exam எழுதவே அவஙக அப்பா, அன்ணன், தம்பி (வெட்டியா இருக்கும் பட்சத்தில்) ஒரு கோஷ்டியா தான் வரும்.
அப்பா, சும்மா இடி அமீன் மாதிரி இருப்பார். வெள்ளை வேஷ்டிய உஜாலா சொட்டு நீலம் போட்டு "மயிலிற்கே, மயிலிற்கே!" பாடலில் வரும் soorya வேஷ்டி கலரில் கட்டி இருப்பார். அதே வெள்ளை (ப்ளு) கலரில் சட்டையை தோள் வரை மடிச்சு விட்டு,ஒரு special effect தருவார்.

அண்ணன்மாருங்க, சோனியா காந்திய சுத்தி, வட்டமிட்டு வரும் பூனை படை போல இருப்பானுங்க.

நண்பன் ஒருத்தன், "என்னம்மா மின்னல்! இது எத்தனாவது படையெடுப்புனு? நக்கலடிக்க, அந்த பொண்ணு அப்பா குடுத்தார் பாரு ஒண்ணு! அவன் கடவா பல்லு கழண்டு விட்டது.

ஆழம் தெரியாமல் கால விட்டோம், அவ்ளோ தான்! பின்னி,பிருச்சுடுவாங்க!

Officela இதெல்லாம் கிடையாதே அம்பினு! உங்களுக்கு doubt வரும். ஆனா, இஙக வேற ரூபத்தில் வரும். சில, பல பசங்க, team membersnu buildup குடுத்துட்டு, எப்போதும், பிகர்களின் துப்பட்டாவ பிடிசுண்டு திரிவா!

இது எல்லாம் போதாதுனு இந்த TL, PL, PM nu ஒரு கூட்டம் உரிமை கொண்டாடும்!

இதெல்லாம், ரொம்ப carefulla analysis பண்ணினேன்!

நான் பயந்தபடியே ஒரு சின்ன சிக்கல் இருந்தது.
அந்த புயலின், எதிர் seatla அந்த டீம் லீடர் 6 அடி, 90 கிலோ சைசுல குட்டி கிங்காங் மாதிரி உக்காந்து இருக்கான்.

அந்த கிங்காங்கும்,எங்க பத்ர காளியும் daily lunch share பண்ணிக்ற அளவுக்கு நட்பாம்னு! Bengali ரசகுல்லா உளவுதுறை எச்சரிக்கை செய்தது.

கண்டிப்பா, அந்த பொண்ணு பத்தின details வேணுமா டா? nu அந்த சாது கிட்ட கேட்டேன்.

கேவலமா ஒரு பார்வை பார்த்தான்.

சரி, இனி அம்பி, ரெமொவா மாறினா தான் சரிப்படும்னு முடிவு பண்ணிட்டேன்.
Next day lunch hourla தடாலடியா, நேர அந்த பொண்ணு seat க்கு போயி, “hi, னு நான் ஆரம்பிக்குமுன்னரெ, அது, ஏய்! நீ மதுரை American காலேஜ் தானே! எங்க காலேஜ்க்கு competition க்கு வந்து தோத்துட்டு போனீங்களே! னு மானத்த வாங்கியது.

சரி, 5 போட்டில, 4 ஜெயிபோம், 1 வெற்றி வாயிப்பை இழப்போம்! (positive attitude, he hee)இதெல்லாம் பெரிசு படுத்த கூடாது! வீரனுக்கு அழகு விழுப்புண்கள்! nu சமாளிச்சேன்.

ஓகோ! எங்க college கே வந்து, எங்க prinicipal யே mimicry பண்ணி prize won பண்ணியே! அது தான்டா function highlightu!! (டா!வா? சைடுல சிந்து பாடறா?)

அப்புறம் என்ன, "யாக்கை திரி!" Rangekku ஒரெ வறுத்தல் படலம் தான்! லஞ்ச் வேற அவள் cabinla முடிஞ்சது!(சன்னா மசாலா கொஞ்சம் காரம்!)

அத்தனையும், சாது பாத்துண்டு இருந்தது!

டேய்! அவள் பேர தானெடா கேட்க சொன்னேன்! நீ டாப் கியர் போட்டு போயிட்ட போலிருக்கு!னு என் கழுத்த பிடித்தான்.

பொறுமையா கேளுடா! இப்பொ,நீ வேற, நான் வேறயாடா?
let’s assume x=y. that mean y=x னு சமாளிக்க பாத்தா, அதுக்குள்ள, நான் அவன்கிட்ட தள்ளி விட்ட tasks எல்லாத்தையும் delete பண்ணின்டு இருக்கான்.

இது போதாதுனு, நான் அந்த பொண்ணு கூட லஞ்ச் சாப்டத பத்ர காளி வேற பாத்து தொலசுட்டா! என்னை கொத்தா அள்ளின்டு போயி ஒரெ அர்ச்சனை! (இந்தில தான்!)
நம்ப இந்தி, அச்சா! பச்சா! hai Range தான்!

என்ன தான் சொன்னானு பெஙகாலி குலொப்ஜாமோன்ட கேட்டேன்.
"இந்த temala அடிக்கற லூட்டி போதாதுனு, அடுத்த teamla வேற pickup பன்னுரியா? மவனே! பொலந்துடுவேன்னு ரொம்ப decentaa சொன்னாளாம்!

எல்லாம் சரி, இந்த pickuppu na என்ன சட்டர்ஜி? nu அப்பாவியா கேட்டேன்.

லக லகனு சிரிச்சுடுத்து ரசகுல்லா!

பின்குறிப்பு: இப்பொ அந்த சாது, வேற ஒரு பொண்ணை பாத்து பெருமூச்சு விட்ரது. Help பன்ன தான் நான் இருக்கேன் என்ற தைரியம்! :)

Monday, March 06, 2006

A Friend in Need!

OFficela நேக்கு ஒரு தமிழ் friend இருக்கான். ஆனா தமிழ் பேச மட்டும் தான் தெரியும். அதுவும், Hey Raam படத்தில் ஷாருக்கான் பேசும் தமிழ விட கேவலமா இருக்கும். அம்பி மாதிரி பரம சாது.(சரி,சரி, புரியுது நேக்கு!)


ஒரு மாசமா பையன் ஒரு rangeaa இருக்கானே nu நேக்கு ஒரு சின்ன doubt.

என்னடா, என்ன matter? nu மெல்ல கிண்டினேன்.

மொதல்ல ஒன்னும் இல்லைனு ஜகா வாங்கினான்.

"சும்மா சொல்லுடா!, நாம அப்படியா பழகி இருக்கோம்!னு ஒரு பிட்ட போட்டேன்.

பையன் உன்டியல கவுத்துன மாதிரி கட கடனு கக்கிட்டான்.

ஒரு மாசமா, எஙக ODC (Offshore Devlopmnt Centre) la இன்னொரு team la மையம் கொண்டு இருக்கும் ஒரு புயலால் தாக்கபட்ருக்கான் பையன்!

சரிடா, எதாவது பேசினியா?(வழிஞ்சியா?) nu கேட்டேன்.

நான் என்ன அம்பியா? னு கேட்டுட்டான் படவா ராஸ்கல்!

இந்த அவமானம் உனக்கு தேவயா? nu உள்மனசுல வடிவேலு கேட்டாலும், பொது வாழ்க்கைல இதேல்லாம் ஜகஜம் டா அம்பினு! நேக்கு நானே சமாதானம் சொல்லின்டு,
தன் முயற்சியில் சலிக்காத விக்ரமாதித்தன் போல, "யாருடா நான்? நான் யாரு? உன் உயிர் நண்பன்,சூர்யா! nu தளபதி ரஜினி டயலாக்க எடுத்து விட்டேன்.

பையன் உருகிட்டான்.

பேச எல்லாம், எனக்கு எதுடா தில்லு? நீ தான்டா உதவனும்னு ஒரெ அழுகை!

சரி, சரி, பொன்ணு பேரு என்னடா? அதாவது தெரியுமானு கேட்டேன்.

இல்லடா!னு பேக்கு மாதிரி பதில் சொல்றான்.

நேக்கு கோபம் வருமா, வராதா? நீங்களே சொல்லுங்கோ!

இருந்தாலும், மனசு கேக்கலை நேக்கு! 24 மணி நேரம் பொறுடா! அவாத்து Ration cardee கொண்டு வரென்னு ஜம்பமா சொல்லிட்டேன். என்னமோ சஞ்ஜீவீ மலைய கொன்டு வர மாதிரி!

அவனுக்கு தலை கால் புரியலை! Side gapula என் daily tak listla ரெண்ட அவன் தலையில கட்டினேன்!

சும்மாவா! அவனுக்கு எவ்லோ பெரிய உதவி பன்ண போறேன் நான்!

பையன் சந்தோஷமா, அந்த குழந்தைய காட்டினான்! மூக்கும், முழியுமா நன்னாவே இருந்தது!

எப்டிடா பேச போறே அம்பினு கேட்டான். அதோட விட்டு இருந்தா கூட அம்பிக்கு கோபம் வந்து இருக்காது!

நேரடியா போயி, "டைம் என்ன?"னு பேச்சு குடுனு எனக்கே ஐடியா குடுத்தான்.

bells pant போட்டுன்டு, அந்த காலத்து மைக் Mohan idea எல்லாம் இப்பொ workout ஆகுமோ?

தூ! nu துப்பிட்டு போயிராதோ அந்த பொன்ணு? நீங்களே சொல்லுங்கோ!

இதோ பாருடா! என்னை நம்பு, உன் திரு வாய பொத்தின்டு பேசாம வேடிக்கை பாருனு சொல்லிட்டேன்!

மீதி கதை அடுத்த போஸ்டுல!

Saturday, March 04, 2006

Psychology Test Results

99% எவ்லோ நகை போட்டுன்டுருக்கா டி இந்த பொன்ணு! அப்படினு நினைத்திருந்தால், you used to be very simple and naturally a shy type to show off your face in public.

What about the rest of 1%..?

a) புள்ளையான்டன் Indian bowler Zaheer khan or Tennis player Pet sampras மாதிரி இருக்கானே nu நீங்கள் நினைத்திருந்தால் you’ve great interest in outdoor activities and outdoor games (of course Gilli, pambaram, gollikundu, paandi, he hee...). Do spend some time in home also.

b) சம்கி வச்சு, bandhini silks superra இருக்கே! nu நீங்கள் நினைத்திருந்தால், you are very fond of shopping (wandering in MG Road or Renganathan st..?). You always wants to be in center of attraction and you manage to succeed also.

c) புள்ளையான்டன் கட்டி இருக்கும் tie double knot, blazer Raymondsaa, Gwalioraa nu நீங்கள் நினைத்திருந்தால், கைய குடுங்கோ! You can shine in marketing field, with your impressive and humerous communication skills. உடும்பு mark ஜட்டிகளை கூட imported material nu தலையில கட்டி விடலாம்.

d) ஆகா! Super figure! or who is this smart Guy? nu நீங்கள் நினைத்திருந்தால், மாட்றான் தோட்டது மல்லிகைக்கும் மணம் உண்டு type, (அதான், புள்ளையான்டன் பக்கத்துல நிக்கரானே, no chance!)

எல்லாம் சரி, அம்பி, நோக்கு என்ன தோனித்து? nu கேக்கறெளா, நேக்கு except choice 'd' எல்லாமே தோனித்து 1 minutelaa..

அம்பி, என்னிக்குமே பிறர் மனை நோக்கா பேராண்மையாளன்! தெரியுமா?

தோடா!

Note: Thinking deeply for the next blog. heading kooda selected "A Friend in need!" this is also a comedy anectode of myself and my friend related to a girl( he hee)in my office.