Wednesday, September 02, 2009

ஓணம் வந்தல்லோ!

பத்து நாளா கேரளா முழுக்க ஒரே கொண்டாட்டங்கள். அதன் சிகரமாக இன்னிக்கு தான் திருவோணம். அது என்ன மாயமோ மந்திரமோ தெரியல, ஓணம் வந்துட்டா எங்க வீட்டு டிவி தானாகவே ஏஷியா நெட்டோ, சூர்யா டிவிக்கோ சேனல் மாறி விடுகிறது. டிவி ரிமோட்ல ஏதோ பிராப்ளம் போல. :)

ஏஷியா நெட்ல ஸ்வைன் ப்ளூ தடுப்பு முறைகளை பத்தி நவ்யா நாயர் ஒரு பேட்டி குடுத்து இருக்காங்க பாருங்க, ஆஹா, டாப் டக்கர். இங்க இப்படின்னா சூர்யா டிவில எக்னாமிக் மெல்டவுன் பத்தி கோபிகா எவ்ளோ பாயிண்ட் பாயிண்டா பேசறாங்க தெரியுமா? அடடா! ஆபிசுக்கு லீவு போட்டு கேக்கலாம், அவ்ளோ விஷயம் இருக்கு அதுல.



குலோபல் வாமிங் பத்தி ஏன் நயன்தாராவிடம் பேட்டி எடுக்க வில்லை? இதை வன்மையாக கண்ணடிக்கிறேன், சே! கண்டிக்கிறேன்.

எப்படித் தான் இவ்ளோ பொறுமையா, அழகா பூக்கோலம் போடறாங்களோ?









ஏதோ ஒரு வருஷம் திருவனந்தபுரத்துல இன்போசிஸ்ல ஓணம் கொண்டாடினாங்களாம், அதை எனக்கு மெயிலா அனுப்பனுமா? நான் கேட்டேனா? :)

என்ட கேரளம், என்ட மலயாளம்னு இருக்காம என்ட இந்தியானு ஒரு பரந்த மனசுடன் இருங்க டே! பாருங்க நானும் வருஷம் தவறாம(2007, 2008) ஓணத்துக்கு பதிவு போடறேன். :)

சரி, இப்படியே இந்த பதிவை நான் நீட்டி முழக்கினா விளைவுகள் கடுமையாக இருக்கலாம்! என கடந்த கால வரலாறு தெரிவிக்கிறது. தங்கமணி வேறு ஊரில் இல்லை, எனவே நான் முடிச்சிக்கறேன்.