Thursday, December 03, 2009

சைனாவின் மற்றுமொரு சதி

இந்த சைனாகாரன் இருக்கானே, சும்மாவே இருக்க மாட்டான். இல்ல, அவங்க மக்கள் தொகையை பத்தி நான் சொல்ல வரல. எல்லையில என்னடானா சின்ன பிள்ளதனமா பாறையில சைனானு எழுதி வைக்கறான். அருணாசல பிரதேசத்துல எல்லாருக்கும் மூக்கு சப்பையா இருக்கு, அதனால் அதுவும் எங்க இடம் தான்னு சொல்லிட்டு இருக்கான். பிராணப் முகர்ஜியும் சும்மா தாமாசு!னு சிரிச்சுகிட்டே அறிக்கை விடறாரு. எப்படியோ ஒழியட்டும்.


ஆட்ட கடிச்சு மாட்ட கடிச்சு கடைசில தமிழ் பதிவர்கள் தலையிலுமா கைய வெப்பான்? உங்க பதிவுகளில் அனானி கமண்ட் போடற ஆப்ஷன் இருந்ததுனா போச்சு! உடனே உங்க பதிவுக்கு வந்து முத்து முத்தா பின்னூட்டம் போட்டுட்டு போயிடுவான். நான் கூட ரொம்ப நாளா நம்ம பதிவு சைனா கொரியா வரைக்கும் ரீச் ஆயிருக்கு போல!னு ஆனந்த கண்ணீர் விட்டுட்டு இருந்தேன்.


அவன் போட்ட கமண்ட் எல்லாம் வைரஸ்ஸாம். நிலா ரசிகனையே புலம்ப வெச்சுருக்கான் பாருங்க.


இதெல்லாத்துக்கும் ஹைலேட்டா அருமை அண்ணன், பக்கபக்கமா எழுதும் உனாதானா அண்ணாச்சியின் பதிவையே கடத்திவிட்டான். அவர் எழுதி இருக்கறத எல்லாம் கடத்தறதுக்கே சைனா காரனுக்கு மூனு நாள் ஆயிருக்குமே! அவ்ளோ எழுதி இருக்காரு அவரு.

சைபர் கிரைமில் புகார் குடுத்தாரா? அப்படியே குடுத்தாலும் ஏதோ கிணத்தை காணல!னு வடிவேலு குடுத்த மாதிரி என் பிளாக்கை காணலை!னு சொன்னா புகாரை எடுத்துப்பாங்களா? ஒன்னும் புரியலை.

சமீபத்தில் பாண்டிசேரி அமைச்சர்களின் தீனிப் பழக்கத்தை எதிர்த்து ஒரு பதிவு போட்டு இருந்தாரு(பாருங்க, அவரு பதிவுக்கு லிங்க் கூட குடுக்க முடியலை இப்போ). ஒரு வேளை இது அரசியல் காழ்ப்பின் காரணமாக இருக்குமோ? என்ற கோணத்திலும் சைபர் போலிஸ் விசாரிக்க வேண்டும்.

இதற்கு பதிலடியாக சைனாகாரனை எதிர்த்து உடனே பதிவர்கள் எல்லாரும் எதிர்வினை ஆத்தி பதிவு போடனும். முடிஞ்சா அவன் பிளாக்குல போய் நாம தமிழ்ல கமண்ட் போட்டுட்டு வரலாம்.

கொஞ்சம் சீரியசா சொல்லனுமா:

1) எல்லாரும் உடனே தங்கள் பதிவை பேக்கப் எடுத்துக் கொள்ளவும். ( நிலா ரசிகன் விரிவா விளக்கி இருக்காரு.)

2) பின்னூட்டத்தை மட்டுறுத்தவும்.

3) மட்டுறுத்த சோம்பலா நினைக்கும் என்னைப் போன்றவர்கள் வேர்டு வெரிபிகேஷன் வைக்கவும். சைனா காரனுக்கு இங்க்லீஸ்னா அலர்ஜி என்பதை நினைவில் கொள்க. :)

4) எல்லாத்துக்கும் மேலே காக்க காக்க என் பிளாக்கை காக்க!னு பிளாகுலக குலசாமி மகர நெடுங்குழை காதனிடம் வேண்டி கொள்ளவும். :))

அவ்ளோ தான் எனக்கு தெரிஞ்சது.