Saturday, September 30, 2006

சொல்லுக்கடங்காதே! பராசக்தி சூரத்தனங்கள் எல்லாம்!



இந்த ஒன்பது என்ற எண்ணுக்கு தான் எத்தனை சிறப்பு!

1) நவ கிரகங்கள் ஒன்பது.
2) நவ ரத்னங்கள் ஒன்பது
3) ஜோதிஷத்தில் நவாம்சம் என்று சொல்வர்கள்
4) சக்தி உபாசனையில் ஷ்ரி சக்ரத்துக்கு நவாபர்ண பூஜை என்று ஒன்று உண்டு.
5) நவமி திதியில் தானே ராமர் மானிடராக ஜனித்தார்.
6) ஒன்பது ஒளஷதங்களை கொண்டு தான் நவபாஷணம் என்ற அரிய மருந்து தயாரிக்கப் படுகிறது.
7) நவ ரசங்கள் - கோபம், சிருங்காரம், ஹாஸ்யம் என உணர்வுகள் ஒன்பது விதமானதே!
8) பூவுலகில் எம் பெருமாளுக்கு திருப்பதிகள் ஒன்பது.( நவ திருப்பதி)
9) நவராத்திரி - தேவி கொலுவிருந்து ஆட்சி செய்யும் திரு நாட்கள்.


இன்று துர்க்காஷ்டமி. சக்தி சீற்றம் கொண்டு மகிஷனை சம்காரம் செய்த நாள். கருணையே வடிவம் கொண்ட அவளா இவள்? என்று உலகே அதிசயித்த நாள்.

எனக்கு சின்ன குழந்தையிலிருந்தே பாட்டியிடம் கதை கேட்கும் போது அஷ்டபுஜங்களில், சகல விதமான ஆயுதஙளுடனும் சிங்க வாகனத்தில் புயலென நேரில் வருவதை போல உணர்வேன்.


மேலும் சாந்தமான அம்மனை விட, இந்த துர்க்கா, காளி, சண்டி, அபராஜிதா தேவி போன்ற உக்ர தேவிகள் தான் என்னை மிகவும் கவர்ந்தனர்.

சக்தி, இந்த உலகத்துக்கே அவள் தான் ஆதாரம். அந்த சிவனும் இயங்குவதே இந்த சக்தியால் தானே!
துர்க்கை, லக்ஷ்மி, சரஸ்வதி என நாம் அந்த ஆதார சக்தியை பிரித்து அவர்களுக்கு ஒரு உருவமும் குடுத்து வழிபடுகிறோம். ஆனால் இம் மூன்று சக்திகளும் நம்முடனே உள்ளது.

துர்கை (இச்சா சக்தி) - மன உறுதி.
லக்ஷ்மி (க்ரியா சக்தி) - மனம் லயித்த செயல்பாடு.
சரஸ்வதி (க்னான சக்தி) - தெளிந்த ஆறிவு.

நம் உடம்பை கிரியா சக்தியும், புத்தியை இச்சா சக்தியும், ஆத்மாவை க்னான சக்தியும் ஆள்கிறது.

தெளிந்த அறிவுடன் புத்தி சரியாக கட்டளை இட்டால் மனம் லயிகிறது. உடம்பு சொன்னபடி கேட்கிறது. ஒரு வேலையில் உடல், மனம், புத்தி எல்லாம் மன உறுதியுடன் ஈடுபடுகிறது.

நல்ல பழக்கமும், புலன்களை நம் கட்டுக்குள் வைப்பதன் மூலம் லக்ஷ்மி வந்தடைகிறாள். மனதை கட்டுபடுத்துவதன் மூலம் துர்க்கை நம்மை வந்தடைகிறாள்.
உண்மையான, குளிர்ந்த சொற்களை பேசுவதன் மூலம் சரஸ்வதி வருகிறாள்.

இந்த துர்க்காஷ்டமி அன்று தேவியை பார்த்தால் அடுத்த நாள் கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்ற நம்பிக்கை உண்டு. ஏனெனில் துர்க்கை உக்ரமாக தீப்பறக்கும் கண்களுடன், "இனி உனக்கு மன்னிப்பில்லை! தைரியம் இருந்தால் வாடா!"னு அசுரனை அறைகூவல் விடுத்து சம்காரம் முடித்து, குருதி அபிஷேகத்துடன் கோபம் தணியாமல் நின்ற கோலம் அது.



ஆனால் மறு நாள், கருணையே வடிவாக, கையில் மாணிக்க வீணையேந்தி, மதுர மொழிகள் பேசி, அபய முத்திரை காட்டி, தம்மை நாடி வருபவர்களுக்கு அவரவர் தகுதிக்கு ஏற்ப கலைகளை வாரி வழங்கும் சரஸ்வதியாக அருள் பாலிக்கிறாள்.

Pic courtasy: www.starsai.com

போஜ ராஜன் தீவிர லக்ஷ்மி உபாசகன். எனவே, அவனது மெய்யான பக்திக்கு கட்டுபட்டு, அஷ்ட லக்ஷிமிகளும் அவனது தேசத்தில் வாசம் செய்தனர்.

ஒரு நாள், மாஹாலக்ஷ்மி அவன் முன் தோன்றி, "போஜ ராஜனே! உன் நாட்டிலேயே பல காலமாக நாங்கள் தங்கி இருந்தால், மற்ற இடங்களுக்கு நாங்கள் எப்போழுது செல்வது? என முறையிட்டாள்.

போஜனும், சரி அம்மா! ஒரெ ஒரு லக்ஷ்மியை தவிர மீதி எல்லோரும் விடை பெறுங்கள்" என கூற, மஹாலக்ஷ்மியும் சம்மதிதாள்.

போஜன் கேட்டது தைரிய லக்ஷ்மியை தான்!

தைரிய லக்ஷ்மி அவனுடன் இருக்க, மற்ற லக்ஷ்மிகளும் வேறு வழியில்லாமல் மறுபடி அவனிடமே வந்தடைந்தனர்.


இந்த நவராத்திரி - விஜயதசமி நன் நாளில் நம் எல்லோர் மனதிலும் அந்த தைரிய லக்ஷ்மி குடி கொள்ளட்டும். மற்ற எல்லா லக்ஷிமிகளும் தன்னாலே நம்மை வந்தடைவார்களாக!

If she is with You, Who can be against to You?

Friday, September 22, 2006

கடவுள் பாதி! மிருகம் பாதி!



கேப்டனின் அகில உலக கொள்கை பரப்பு செயலாளரும், எனது நண்பனுமான அர்ஜுனா மற்றும் புளியோதரை மன்னனின் பாசமலருமான வேதா(ளம்) இருவரும் "Five wierd Things in Me" என்ற தலைப்பில் எழுத சொன்னார்கள். அது தான் "கடவுள் பாதி! மிருகம் பாதி!" என்று நான் என் ஸ்டைலில் மாற்றி விட்டேன்.

ரெளத்ரம் பழகு!
சிறு வயதில் நான் கொஞ்சம் அதிகமாகவே பழகி விட்டேன். கோபம் அதிகமாக வரும். போதா குறைக்கு சின்ன வயதிலிருந்தே நரசிம்மர்(கேப்டன் படம் இல்லை)மீது தீவிர பக்தி, உபாசனை. கோபம் வரும் சமயங்களில் அம்மா மட்டும் தான் சமாதானப் படுத்த முடியும். நானும் இந்த கோபத்தை அடக்க வேண்டும்! என்று பல வழிகள் கையாண்டு பார்த்து விட்டேன்.
ஒரு சத்ரு சொன்னானேனு தாமிர பரணி நதியின் 12 அடி ஆழத்தில் தம் பிடித்து யோகத்தில் அமர்ந்து எல்லாம் பார்த்தேன். கண் முன்னால் ஒரு பாம்பு வந்து, "என்ன அம்பி சவுக்கியமா?"னு குசலம் விசாரித்ததில் அலறி புடைத்து கொண்டு துண்டை காணும், துணியை காணும்!னு வந்தது தான் மிச்சம். அப்புறம் என் உடன்பிறப்பு கிருஷ்ண பரமாத்மா மாதிரி கரையில் வந்து துண்டு குடுத்து காப்பற்றினான். இதை கேட்டு விட்டு அந்த சத்ரு சொல்றான், "அது நாக கன்னிகை டா மாப்ளே! நாக லோகம் போயி அமிர்தம் எல்லாம் பருகி இருக்கலாம். நல்ல சான்ஸை மிஸ் பண்ணிடியே!"

அடப்பாவி! பொட்டுனு ஒரு போடு போட்டிருந்தா தெரிஞ்சு இருக்கும், அது நாக கன்னிகையா? இல்ல நான் தான் ஜெமினி கனேசனா?னு. Now i'm Mr.Cool. (upto some extent) :)

சுதந்திரம் எமது பிறப்புரிமை!
ஒரு விஷயம் வேண்டும்/செய்ய வேண்டும்! என்று முடிவெடுத்து விட்டால் ரொம்ப உறுதியாக இருந்திருக்கிறேன். ஸ்கூல் படிக்கும் போது பஞ்சாபில்(யாரு யா அது? நமுட்டு சிரிப்பு சிரிக்கறது?) (Ambala District) நடந்த ஒரு NCC கேம்ப்பில் கலந்து கொள்ள நான் தேர்வாகி விட்டேன். ஆனால் அப்போ தீவிரவாதிகள் அட்டகாசம் அதிகம் என்பதால் என் அப்பா என்னை அனுப்ப மறுத்து விட்டார். எனக்கு பயங்கர கோபம், வருத்தம், ஏமாற்றம், எல்லாம்! ஒரு மாதம் என் அப்பாவிடம் நான் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அதன் பின் சுசீந்தரத்தில் நடந்த இன்னொரு கேம்புக்கு அப்பாவே அனுப்பி வைத்தார்.
அந்த அளவுக்கு பிடிவாதம் இப்போ இல்லை.

நாராயண! நாராயண!
இனியவர்களை வம்புக்கு இழுத்து, கலகம் மூட்டி, சீண்டுவது மிகவும் பிடிக்கும். என் உடன்பிறப்பை செமையா சீண்டுவேன். "இன்னிக்கி அம்மா சுட சுட கேசரி பண்ணி இருந்தா! கொஞ்சமா இருந்ததா, நானே எல்லாத்தையும் சாப்டாச்சே! ஏவ்வ்வ்வ்!னு ஒரு ஏப்பமும் விட்டாச்சுனா உடன்பிறப்புக்கு(Srini) பிரஷர் குப்புனு ஏறிடும். அப்புறம் என்ன? ஏது?னு கூட விசாரிக்க மாட்டான். தாமிரக்கனி ஸ்டைலில் என்னை நாலு தட்டு தட்டுவான். அம்மாவிடம் போயி குதிப்பான். எனக்கு செம ஜாலி. இப்ப பிளாக்குலயும் இந்த சேவையை செவ்வனே செய்து வருகிறேன். விட்டு விடலாமா?னு யோசிக்கிறேன்.

நியாபகம் வருதே! நியாபகம் வருதே!
என் நியாபக சக்தி மீது எனக்கு அபார நம்பிக்கை உண்டு. பல சமயங்களில் இது வரம், சில நேரங்களில் சாபம். நம் முதுகில் குத்தியவர்களை பார்த்தால் அவர்களது கீழான செயல் தான் நினைவுக்கு வந்து தொலைக்கும்.
"மன்னிகறவன் மனுஷன்!
மன்னிப்பு கேட்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்!" - விருமாண்டி டயலாக் தான் இப்போ எல்லாம் சொல்லி பழகறேன்.


"நான் சந்தோஷம் கொண்டாடும் சன்யாசி!"
2 நாட்களுக்கு முன்னால் கீதையில் கர்ம யோகம் படித்து கொண்டு இருந்தேன்.(நம்புங்க ப்ளிஸ்).

அதில் ஒரு வரி, "ஏ பார்த்தா! எவன் ஒருவன் தன்னுடய கடமையில் உறுதியாக இருந்து, முழு மனதுடன் அதில் ஈடுபடுகிறானோ, அவனை அந்த கர்மத்தின் பலன் பாதிப்பதில்லை!" எனவே உன் கடமையில் இருந்து சிறிதும் பிறழாதே!"

அடடா! என்ன ஒரு சத்யமான வரிகள்!னு அனுபவித்து கொண்டிருக்கும் போது தானா ஒருத்தன் என்னை செல் போனில் அழைகணும்?

"சற்று தொலைவிலே அவள் முகம் பார்த்தேன்!
அங்கே தொலந்தவன் நானே!"

என்ற தேவ கானம்(ஹி, ஹி) காதில் விழ, இந்த பாடலை எழுதிய கவிதாயினி தாமரையின் வரிகளை மெச்சுவதா? அந்த பாடலில் கண்ணாலேயே எல்லாம் பேசி, ஒயிலாக நடை பயிலும் அசினின் நடைழகை மெச்சுவதா? என்று நான் பேரின்ப நிலையை அடைந்தேன்.
(அடச்சீ! இது ஒரு பொழப்பா?னு நீங்க துப்பினாலும் பரவாயில்லை. ஏனெனில் கர்மத்தின் பலன் என்னை சாராது, ஹி,ஹி, கிருஷ்ணர் சொல்லியிருகாரே)

கத்திரிக்கா! கத்திரிக்கா!
யாரு தான் இதை கண்டுபிடிச்சாங்களோ? சே! எனக்கு பிடிக்காத காய்கறியில் டாப் - 10 இல் தொடர்ந்து 26 வருடங்களாக முதலிடம் வகிக்கிறது. ஊரில் "அம்மா! உங்க பெரிய பையன் வீட்டுல இல்லையே"?னு கேட்டு விட்டு தான் தெருவில் கத்திரிகாய் விற்க காய்கறிகாரன் வருவான். TRC ஸார், உங்க வீட்டுல நான் வரும் போது இந்த காய் செஞ்சு போட்டு என்னை பழி வாங்கிடாதீங்க. நான் பாவம் இல்ல?

சரி, உண்மையை சொல்றவங்க தெய்வத்துக்கு சமம்! தன்னுடைய குறைகளை வெளிப்படையாக சொல்வதே ஒரு நல்ல குணம் தானே! (ஆமாம்!னு சொல்லுங்கோ)நான் என்னை மாற்றி கொள்வேன், கொள்கிறேன்!

"ஒரு குழந்தையை வையாதே பாப்பா!"னு எனக்காக பாரதி அன்னிக்கே சொல்லிருக்கார். அதுனால ஹி,ஹி!

இந்த தொடர் பதிவில் சில பேரை இழுத்து விடலைனா நன்னாவா இருக்கும்?

1) 'கில்லி' ப்ரியா! - புதிதாக வீடு கட்டி இருப்பவர். இவரது எழுத்து நடை எனக்கு மிகவும் பிடிக்கும்.

2) 'கொடி கொடியாம்' பொற்கொடியாம்! - டகால்டி ராணி! என்னிடம் பென்ஸ் கார் கேட்ட புண்ணியவதி.

3) 'எந்தரோ மஹானுபாவுலு' TRC ஸார் - எதுகை மோனையில் புகுந்து விளையாடுபவர். என்னை அவர் வீட்டுக்கு அழைத்து பெரிய ரிஸ்க் எடுத்துள்ளார். ம்ஹும்... விதி யாரை விட்டது?

பி.கு: அடுத்த பதிவு ஒரு ஆளுக்கு வசமா ஆப்பு! யாருக்கு?னு யோசிச்சுண்டே இருங்க.

Saturday, September 16, 2006

சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா?....



செப் - 17 எமது இனிய தோழி விஜி பூவுலகில் உதித்த நாள்.

காவிரிக்கரையில் உதித்த தோழிக்கு எவ்வுலகமும் போற்றும் தாமிரபரணியிலிருந்து ஒரு பிறந்த நாள் வாழ்த்து மடல்.

"ஆதியும் நானறியேன்! நிஸ்ரமும் நானறியேன்!
கண்டசாப்பை கனவிலும் அறியேன்!
ரூபகமாய் நான் வரைந்த வாழ்த்திதுவே!"


"உனது காலைபொழுது பூபாளமாய்
வார்த்தைகள் அனைத்தும் கல்யாணியாய்
காட்சிகள் முழுதும் இன்பம் சுரக்கும் ஆரபியாய்
பிரியமானவர்கள் மனதில் என்றும் மோஹனமாய்
கயவர்கள் காதுகளுக்கு கம்பீர நாட்டையாய்

மக்களின் நெஞ்சுருட்டிச் செல்லும் செஞ்சுருட்டியாய்
நீல வானில் சுடர்விடும் நீலாம்பரியாய்
மலைத்தேனை வெட்க செய்யும் நாட்டை குறிஞ்சியாய்
சோர்ந்து விழும் மனங்களுக்கு ஒரு காப்பியாய்
எளியவர் துயர் தீர்க்கும் சாரங்கனாய்

அறிவில் உயர்ந்தவர் கொலுவிருக்கும் தர்பாராய்
வள்ளிக் கணவன் துள்ளி குதிக்கும் காவடிச்சிந்தாய்
ஆதிசேஷனும் கிரங்கி நிற்க்கும் புன்னக வராளியாய்
பாதி தந்தவனை மீதியும் தர வைக்கும் காம்போதியாய்
சுக துக்கங்கள் அனைதிலும் மத்யாமாவதியாய்

ஆபரணங்கள் எதிலும் உயர்ந்த சங்கராபரணமாய்
கண்டவர் முகங்களுக்கு என்றும் நளின காந்தியாய்
பெற்றவர் மனதிற்க்கு தித்திக்கும் ஷ்ரிரஞ்ஜனியாய்
நான்முகன் நாவில் களி நடம் புரியும் கீரவாணியாய்
குழந்தை மனம் கொண்டு குதூகலிக்கும் ஆனந்த பைரவியாய்

தோழிகள் மனம் மகிழ வைக்கும் தோடியாய்
மிஸ்ரசாப்புடன் தேனாய் இனிக்கும் சாருகேசியாய்
(அ)ரங்கனின் திருமார்பில் அம்சமாய் வீற்றிருக்கும் ஷ்ரியாய்
நல்லவர் என்றுமே முகழும் ராகமாலிகையாய்
பல்லாண்டு வாழ இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்!"

- Srini (அம்பியின் உடன்பிறப்பு)

என் உடன்பிறப்புக்கு தமிழில் என்னை விட புலமை அதிகம். லெப்ட், ரைட், U-Turn போட்டு வருவான். பேச்சு, கவிதை போட்டினு கல்லூரியில் கும்மி அடித்து விட்டு வருவான். ஒவ்வோரு முறை நான் ஊருக்கு போகும் போதும் கப்பு, மெடல்கள்னு மேஜையில் அடுக்கி இருக்கும். "லீவுக்கு வந்தது தான் வந்துட்ட, எல்லாத்தையும் சுத்தமா தொடச்சு வை!னு நக்கல் விடுவான். என்ன செய்ய? நான் ஜெயித்த போட்டிகளில் எல்லாம் கேசரி சாப்பிடும் பேசின் தான் எனக்கு குடுத்தா.

என் மீது பாசம் அதிகம். இந்த கவிதையை எழுதி வாங்க நான் குட்டிகரணம் எல்லாம் போட வேண்டி இருந்தது. நாம, இந்த கவிதை ஏரியாவில் கொஞ்சம் வீக்.

"கண்மணி! பொன்மணி!" எல்லாம் போட்டு, இந்த மானே! தேனே! எல்லாம் நடுவுல தூவி எப்படியாவது ஒரு கவிதை எழுதிடனும்!னு தான் பாக்கறேன்.
ஒன்னும் தோண மாட்டேங்கறது. படிக்கற காலத்துல படிப்பே கதி!னு இருந்துட்டோமா! அதான்! (இதை நீங்க நம்பி தான் ஆகனும்!) ஒரு வேளை ஓட்டலில் ரூம் போட்டு யோசிச்சா, எழுத வருமோ என்னவோ?

பி.கு: இது ஒரு அவசர பதிவு. விரைவில் எதிர்பாருங்கள்! உங்கள் அபிமான பிரவுஸர்களில் கடவுள் பாதி! மிருகம் பாதி!

Saturday, September 09, 2006

பூ மழை தூவி, வசந்தங்கள் வாழ்த்த!.....



9 th செப். இந்த நாள் ஒவ்வொரு தமிழரும் மறக்க கூடாத நாள். எனது பிளாக் உலக அருமை தங்கை, பாச மலர், பவள கொடி, நல்லவள், வல்லவள், நாற்பதும் தெரிந்தவள், சென்னையின் சுனாமி, ஒரு வாய் தண்ணி! தண்ணி(ஹி, ஹி) கூட குடிக்காமல் போர் முரசு போல பிளாகில் முழங்குபவள், "தினம் ஒரு பிளாக்" புகழ் சுபா பூமியில் திருஅவதாரம் செய்த நாள். மறக்காமல் எனக்கு ரக்ஷா பந்தன் வாழ்துக்கள் சொன்ன போதே என் தங்கைக்கு நான் வாக்களித்திருந்தேன், "உடன்பிறப்பே! உனக்கு ஒரு Swift கார் உண்டு!" என்று!
சொன்ன சொல் மாறாத சூரிய குலத்தில் உதித்த இந்த அம்பி, குடுத்த வாக்கை நிறைவேற்ற இரவு பகல் பாராமல், வியர்வை, ரத்தம், ஜொள்(சே! பழக்க தோஷம்) எல்லாம் சிந்தி கடுமையாக உழைத்து இதோ வாங்கி விட்டான்.


"பூ மழை தூவி, வசந்தங்கள் வாழ்த்த ஊர்வலம் நடக்கின்றது!
எழில் பொங்கும் அன்பு தங்கையின் நெற்றியில்
குங்குமம்(or ஸ்டிக்கர் பொட்டு) சிரிக்கின்றது"

என்று நான் அவளது திருமண ஊர்வலத்தில்
பாட்டு பாட, என் தங்கை காரில் வரும் நாள் வெகு தொலைவில் இல்லை.
அது மட்டுமா? அவளது திருமண ஊர்வலத்தில்

"அத்தானை பார்!(not surya, ofcourse) என்று தோழி உனை கிள்ள
முகம் நாணத்தால் செந்தூர நிறம் கொள்ள"
என்ற பாச காட்சியும் உண்டு.

தனது அறிவை வளர்க்க ஒரு பரமார்த்த குரு போதாது! என்று கருதி இரண்டு பரமார்த்த குருக்களிடம் கல்வி பயிலும் என் தங்கையின் அறிவே அறிவு!

இப்போழுது கட்சி பணி காரணமாக, திருச்சி, கும்பகோணம்(ஹி, ஹி) என சுற்று பயணம் செய்து கொண்டிருக்கும் எனது தங்கையை நேரில் வாழ்த்தி கார் சாவியை வழங்க முடிய வில்லை. தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்த என்னிடம் "சில்லுனு ஒரு காதல் கதை" பிளாப்பா அண்ணா?"னு பொறுப்பு சிகாமணியாக தனது இன்னொரு அண்ணன் சூர்யாவை பற்றி விசாரித்த என் தங்கையின் சகோதர பாசத்தை என்ன என்று சொல்ல்வது?

எனவே அன்பு தங்கையே! எப்பொழுது வேண்டுமானாலும் வந்து உனது காரை தாராளமாக பெற்று கொள் கண்மணி! அது வரை நானும், உனது மன்னியும் காரை பத்திரமாக பார்த்து கொள்வதில் உனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லயே பொன்மணி!

இந்த பொன்னான தருணத்தில், எதிர் கட்சிகளுக்கு நான் ஒரு அறைகூவல் விடுக்கிறேன்!
தில்லு இருந்தால், உப்பு போட்டு புளியோதரை(ஹி, ஹி) தின்பவராக இருந்தால், சொன்ன சொல்லை காக்க நினைத்தால், எங்கே நீங்கள் வாக்களித்த அந்த வைர மூக்குத்தியை
பரிசளியுங்கள் பார்க்கலாம்! அப்படி பரிசளிப்பதாக இருந்தால், எங்கள் சார்பாக மூக்கு குத்த ஒரு கோணி ஊசி வழங்கப்படும். நாங்கள் ரெடி! நீங்கள் ரெடியா?( ஜாதி பெயர் இல்லீங்கோ!)
நல்ல சான்ஸ்! மிஸ் பண்ண வேண்டாம்!

ஒரு செல்ல தங்கை Octavia கார் கேட்டு உள்ளார். இன்னொரு பாச மலர், பென்ஸ் கார் கேட்டு உள்ளார். அவை இரண்டும் பரீசீலனையில் உள்ளன.

பி.கு: குடுத்த காசுக்கு அதிகமாவே கூவிட்டேன் மா! மறக்காம account transfer பண்ணிடு! என்ன? :)

Friday, September 01, 2006

உமையொரு பாகன்!



கடவுளின் விசித்ரமான படைப்புகளில் அரவாணைகளும் அடங்குவர். உருவத்தால் பெண் போலவும், குரலில் ஆணாகவும், சிவனின் "உமையொரு பாகன்!" தத்துவத்தை விளக்க வந்த படைப்பாகவே எனக்கு தோன்றும். இவர்களை பற்றி மகாபாரததில் கூட குறிப்பு உள்ளது.

மகாபாரத போர் துவங்குமுன், களபலியாக அர்ஜுனன் மகன் அரவாணன் தேர்ந்தெடுக்கப்பட்டு, களபலி ஆவான். அவனையே தங்கள் கணவனாக வரித்து, இந்த அரவாணைகள் சித்திரை மாத பவுணர்மி அன்று கூத்தாண்டவர் கோவிலில் (விழுப்புரம் அருகில் உள்ளது) தங்களுக்கு தானே தாலி கட்டி கொண்டு, அடுத்த நாள் அவன் இறந்ததாக பாவித்து, அந்த தாலியை அறுத்தெறிந்து அழுது புலம்புவது ஒரு சடங்காக உள்ளது.

வட இந்தியாவிற்கு நாம் ரயிலில் பயணம் செய்ய நேரிட்டால், சில ஸ்டேஷன்ங்களில் கூட்டம் கூட்டமாக இவர்கள் ரயிலில் ஏறி பயணிகளிடம் காசு வசூலிப்பார்கள் என்றும், சேட்டு வீட்டு திருமணங்கள் நடக்கும் இடங்களுக்கு இவர்கள் சென்று அந்த தம்பதியரை ஆசிர்வாதம் செய்து வசூல் வேட்டையும் நடத்துவர் என்றும் கேள்விப்பட்டுள்ளேன்..

மும்பையில் அதிரடியாக, ஸ்கார்பியோ காரில் வலம் வரும் ஒரு பிரபல தாதா ஒரு அரவாணை. பின்பு என்கவுண்டர் செய்யப்பட்டதாக கேள்வி!
அவனை மையமாக வைத்து தான் அப்பு என்ற படத்தில் பிரகாஷ் ராஜ் ஒரு அரவாணையாக நடித்திருப்பார்.

எத்தகைய வேதனையை தமக்குள் சுமந்து கொண்டு, அதை துளியும் வெளிக் காட்டி கொள்ளாமல் இவர்களால் எப்படி முடிகிறது? என்று நான் பலமுறை வியந்தது உண்டு.

பெறும்பாலும் பல அரவாணைகள் தங்கள் பெற்றவர்களால் புறக்கணிக்கப்பட்டு, துரத்தப்பட்டு நாடோடியாக திரிகிறார்கள்.
இந்த சமூகமும் இவர்களை ஏளனமாகவும், ஒரு வித வேற்று கிரக ஜந்துவை போலவும் தான் நடத்துகிறது.
சினிமாவில் காமடி டிராக்கில் இவர்கள் கண்டிப்பாக தேவைப்படுவார்கள். பெறும்பாலும் நமது ஹீரோக்களை கலாய்க்க, பாட்டுக்கு நடுவில் ஏடாகூட வசனம் பேச இவர்களை தான் பயன்படுத்துவார்கள்.

ஒரு வாரமாக இந்த ஜிலேபி தேசத்தில் ஒரு கூத்தை பார்த்து வருகிறேன். முக்கியமான டிராபிக் சிக்னல்களில் வண்டிகள் குறைந்த பட்சம் 5 - 10 நிமிடங்கள் நிற்க வேண்டி உள்ளது. அப்பொழுது, குபீரென ஒரு அரவாணை கூட்டம் கொரில்லா தாக்குதல் நடத்தி அவர்கள் வழக்கப்படி கைகளை தட்டி,அனைவரது தலைகளிலும் இலவசமாக ஆசிர்வாதம் செய்து, காசு குடு! என்று அன்பாக மிரட்டுகிறார்கள். மினிமம் பத்து ரூபாய் குடுக்க வேண்டும். இல்லா விட்டால் என்ன நடக்கும்? என்று நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியது இல்லை.

இப்படி தான் ஒரு நாள் மாலை அதிசயமாக கொஞ்சம் சீக்கிரமாக 6.30 மணிக்கே ஆபிசை விட்டு கிளம்பி எம்.ஜி.ரோட்டில் வரும் போது, வசமாக ஒரு அரவாணையிடம் மாட்டிக் கொண்டேன். நாம தான் தர்ம மகா பிரபு ஆச்சே! 5 ரூபாய் குடுத்தால், முடியாது! 10 ரூபாய் தான் வேண்டும்! என்று அடம். அடுத்த கட்ட கொரில்லா தாக்குதல் நடக்குமுன் நான் சுதாரித்து கொண்டேன்.

"ஒரு காரணம்! ஒரெ ஒரு காரணம் சொல்! உனக்கு ஏன் நான் 10 ரூபாய் குடுக்கனும்? என்று எனது "ஏக் காவ் மேம் ஏக் கிஸான்" இந்தியில், புருவத்தை உயர்த்தி குரலில் கோபம் தெறிக்க கேப்டன் போல கேட்டேன்.
சில சமயங்களில் ரெளத்ரம் பழக வேண்டி இருக்கிறது. என்னை ஆழ்ந்து ஒரு பார்வை பார்தார்(ள்). "ஒரு பத்து ரூபாய் குடுக்க கூடாதா?" என்று பாவமாக முகத்தை வைத்து கொண்டு கேட்க, அதற்கு மேல் நான் எதுவும் பேச முடியலை. குடுத்து விட்டு நகர்ந்தேன்.

சரி, எனக்குள் சில கேள்விகள்:
1) அரசாங்கம் இவர்களை கண்டு கொண்டுள்ளதா? ஒரு துரும்பையாவது இவர்களுக்காக நகர்த்தி உள்ளதா? இவர்களுடைய நிலை என்ன? என்பதை இந்திய அரசு தெளிவுபடுத்துமா?
இவர்களை "Physically Challenged Category"ல் சேர்த்தால் ரிசர்வேஷன் கோட்டா கிடைக்க வழி உண்டே!

இவர்களது எண்ணிக்கை மட்டும் ஒரு தொகுதிக்கு பத்தாயிரம் இருந்தால் நமது கரை வேட்டிகள் வாக்குறுதிகளை அள்ளி வீசி இருக்க மாட்டார்கள்? அப்பவும் உங்களுக்கு சினிமாவில் நடிக்க சான்ஸ் வாங்கி தரோம்!னு தான் சொல்லி இருப்பார்கள், அது வேற விஷயம்!
வாக்குறுதி அள்ளி வீசுவதில் எல்லா X.மு.க. கட்சிகளும் ஒன்னு தான். (X = You pple fill up the blanks)

2) இவர்களும், தங்கள் தன்மானத்தை ஏன் விட்டு கொடுத்து, இப்படி திரிய வேண்டும்? படங்களில் தங்களை கேவலமாக சித்தரித்துக் கொள்ள வேண்டும்?

3) நேர்மையாக பிழைக்க எத்தனையோ வழிகள் உள்ளதே! சுய உதவி குழுக்கள் உதவியை நாடலாமே!

பண்டைய தமிழகத்தில் அந்தப்புர காவலில்(ஹி,ஹி, நம்மூர் ராஜாக்கள் ரொம்ப தான் உஷாரு!) அரவாணைகள் இருந்ததாக படித்து உள்ளேன்.
தனியார் செக்யூரிட்டி சர்வீஸ்களில் இவர்களை ஏன் சேர்க்க கூடாது? இவர்கள் ஏன் சேர கூடாது?

ம்ம்ம், இந்த 33% சதவீத ஒதுக்கீட்டுக்கே துப்பை காணோம்! ம்ம்ம்ம்! யானைக்கு யார் Snuggy pad கட்டுகிறார்கள்?னு பார்ப்போம்!பூனைக்கு யார் மணி கட்டுகிறார்கள் என்ற டயலாக்கையே எத்தனை நாளைக்கு சொல்வது? :)

பி.கு: அடுத்த பதிவு "கடவுள் பாதி! மிருகம் பாதி!"