Tuesday, July 31, 2007

அடிச்சுட்டோம் இல்ல செஞ்சுரி!

ஹச்! ஹச்! என்னடா ஒரே தும்மலா இருக்கேனு பாத்தா ஒரே தூசி நம்ம கடையில. ஆமா! ஒரு மாசமா நம்ம கடை பக்கம் வரவே முடியலை. எங்கெங்கு திரும்பினும் ஒரே ஆணிகள் மயம். அதுல கிடந்து உழன்றதுல உடலும் உள்ளமும் செம டேமேஜ் ஆயிடுச்சு.

கிட்டதட்ட சாப்பாடே தங்கமணி எனக்கு ஊட்டி விடற நிலமை ஆயிடுச்சு. கையை தூக்கவே முடியலை. ஒரே பொசிஷன்ல கையை வெச்சு பழகியதுல, விரல்கள் எல்லாம் வீங்கிடுச்சு(யாருப்ப அது? அடி வாங்கினா அப்படி தான் வீங்கும்னு சவுண்டு விடறது?).
சரி, விடுங்க, இப்ப பிசியோதெரப்பி பண்ணிட்டு இருக்கேன், நல்ல யோசனைகள் வரவேற்க்கப்படுகின்றன. காப்பாத்த உம்மாச்சி இருக்கார்.
"சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும்"னு பாடினா தங்கமணி நக்கல சிரிக்கறாங்க. நம்ம ராசி அப்படி!

டென்டுல்கர் மதிரி கரேக்ட்டா நூறு அடிக்க மட்டும் ரொம்ப டைம் எடுத்துக்க வேண்டியதா போச்சு. போன பதிவே(கதையே) நூறாவது பதிவு தான்!னு பிளாக்கர் சொன்னது. சரி, நூத்தியோன்னா ரவுண்டா மொய் மாதிரி இருகட்டும்!னு தான் இந்த மொக்கை.

மீண்டும் பழைய உற்சாகத்துடன்
மீண்டு வருவேன் பீனீக்ஸ் பறவையாய்!



Monday, July 02, 2007

மீண்டும் ஒரு காதல் கதை!

பரணி ஆரம்பிச்சு வைக்க, ப்ரியா அதை அழகா டெவலப் பண்ணியதை கொடி கொத்து பரோட்டா போட அம்சமா அருண் சமாளிச்சு இப்ப பூமாலையா எங்கிட்ட வந்ருக்கு! (சரி, அடுத்து என்ன கமண்ட் விழும்?னு எனக்கே தெரியும்)

********************************************************************************
இதுவரை:

"ஹலோ....ஆமாங்க, அவன் அம்மா தான் பேசுறேன்

......"அப்டியா..

"...."பையன் எங்ககிட்ட சொல்லல..

அவங்க அப்பா வந்ததுக்குஅப்பறம் பேசிட்டு சொல்றோங்க..

".."

நானும் நல்லதே நடக்கணும்னு விரும்பறேன். கடவுள் சித்தம்."

ஃபோன் கட் பண்ணிட்டு.. "டேய், எத்தன நாளாடா இது நடக்குது..

" "அம்மா.. அது.. வந்து..."
***********************************************************************************
இதோ நம்ம மியூஜிக்:

என்ன வந்து? போயி... சிகரட் பிடிக்கறத விட்டுடேன்!னு போன மாசமே சொன்ன, அதனால இப்போ சார் சொக்கலால் பீடிக்கு மாறிட்டீங்களோ? மனசுல என்ன மம்முட்டினு நினைப்பா? கீழே கிடந்த பீடி பாக்கட் நொடியில் அம்மாவை பத்ரகளியாய் மாற்றியது.

யம்மா! என்னமா நீயி! இது டெலிபோன் சர்வீஸ் பண்ண வந்த ஆளு பாக்கட்டுல இருந்து விழுந்தது! நீ கூட வீடு முழுக்க ஒரே பீடி வாடை அடிக்குதுனு கத்தினியே!

அடடா ஆமா, சாரிடா கார்த்தி!

சரி, சரி, போன்ல யாருமா? ஏதோ ஜாதகம் மோதகம்னு சொன்னியே, ஹிஹி, எனக்கேதுக்குமா இப்பவே கல்யாணம்?

நீ படிகற லட்சணத்துக்கு ஒரு கம்பனிகாரன் உன்னை நம்பி பிராஜக்ட் குடுக்கறதே பெரிசு. அதுக்கப்புறம் உனக்கு ஒரு வேலை கிடைக்கனும். அது மட்டுமா? இந்த காலத்து பொண்ணுங்க எல்லாம் ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம், எம்.எஸ்னு மாங்கு மாங்குனு படிச்சு அமெரிக்கவிலிருந்து வாழ்வு குடுக்கறதுக்குனே(பன்னு திங்கறதுக்குனும் வாசிக்கலாம்) க்ரீன் கார்டோட வர அப்பாவி ரங்குஸ் தான் வேணும்!னு தெளிவா இருக்காங்க. இன்னும் உன் பேரை ரேஷன் கார்டுலயே சேர்க்க முடியலை. சாமியே சைக்கிள்ள போகுதாம்! பூசாரி புல்லட் கேட்டானாம்! அம்மா காந்திமதியாய் மாறி விட்டார்.

ஏன்மா இப்டி டோட்டலா டேமேஜ் பண்ற? அப்ப போன்ல யாரு?னு சொல்லேன்.

உன் பெரிப்பா பையன் சூர்யா, அவன் அப்பா இறந்ததுக்கு அப்புறம் நம்ம வீட்ல தானே தங்கி படிச்சான், அவனுக்கு ஒரு வரன் வந்து இருக்கு, அது சம்பந்தமா தான் போன். போதுமா?

போதும் தாயே! போதும். ஆள விடுங்க.
டிவி ரிமோட்டை எடுத்து சன் மியூசிக் மாற்ற 'காதல்' சந்தியா நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்!னு ஜீவாவுடன் டூயட் பாடி கொண்டிருந்தாள். பதறியடித்து சன் டிவி மாற்ற, அங்கு "பஞ்சாப்பில் பாங்ரா திருவிழா!" - சந்தியா ராஜகோபால் செய்தி வாசிக்க, "என்னாங்கடா! சொல்லி வெச்சு கடுப்பேத்றீங்களா?
டிவியை ஆஃப் செய்து குளிக்க கிளம்பினான் கார்த்திக்
.~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ இடம்: சந்தியாவின் வீடு

சந்தியா, "யப்பா! நைசா அம்மகிட்ட பேச்ச ஆரம்பிங்கப்பா!"


இருமா! உங்க அம்மா நல்ல மூட்ல இருக்காளானு பார்ப்போம்.

கோதாவரி, இன்னிக்கு வானம் மூடாப்பா இருக்குல்ல?

அய்யோ! என் பேரு காவேரி, நீங்க என்னிக்கு தான் திருந்த போறீங்களோ? ஒரு படம் பார்த்தா உடனே அதுல வர பெயரை வெச்சு என்னை ஒரு வாரம் கூப்ட வேண்டியது. நேத்திக்கு என்ன சம்சாரம் அது மின்சாரமா?

நான் கூட தான் முந்தானேத்து பதினாறு வயதினிலே பார்த்தேன், உங்கள ஒரு வாரம் பரட்டை!னு கூப்டவா? இல்லாட்டி சப்பாணினு கூப்டவா? - சந்தியாவின் அம்மாவாச்சே!சும்மாவா சொல்லி இருக்கா, தஞ்சாவூர் காராளுக்கு வாய் நீளம்னு!

சே! ஆரம்பமே சொதப்பல் இந்த அப்பாவால! இன்னிக்கு இவர் மேட்டரை ஓப்பன் பண்ணின மாதிரி தான்! இதுக்கு நானே சொல்லி இருக்கலாம்.

அம்மா! ஒரு முக்கியமான விஷயம் உங்கிட்ட பேசனும்.

சொல்லுமா!

நான் பிராஜக்ட் பண்ண டெல்லி போயிருந்த போது என் சம்மதம் கேக்காம நீ நிச்சயம் பண்ணியது எனக்கு சுத்தமா பிடிக்கலை.

தீர்க்கமான முகத்துடன் அம்மா, இதோ பாரு சந்தியா! உனக்கு எது நல்லது?னு எங்களுக்கு தெரியும். உன் தலைல தடவர ஹேர் ஆயிலுல இருந்து காலுல போடற கொலுசு வரைக்கும் இந்த அம்மா தான்மா பாத்து பாத்து செலக்ட் செஞ்சேன். உனக்கேத்தவர் யாருனு? எங்களுக்கு தெரியாதா?

அம்மா! நீ சொல்றது எல்லாம் சரி. ஆனா, என் கருத்தையும் நீ கேட்டு இருக்கலாமே! ஒரு ஹேர் ஆயில் பிடிக்கலைனா இன்னொன்னு வாங்கிட்டு வந்துடலாம். ஆனா இது அப்படியில்லையே! காலம் முழுக்க நான் தானே வாழ போறேன்?

சந்தியா, உன்ன கேக்காம, நீ இல்லாத நேரத்துல நிச்சயம் வரைக்கும் போனது தப்பு தான். சரி, யாரந்த பையன்..?

அம்மா! அது வந்து காலேஜ்ல...

உன் தயக்கம் புரியுது, நாளைக்கு உனக்கு நிச்சயம் பண்ணிய பையன் யூஸ்லேருந்து உன்னை பாக்க வரான்.
பையனை பாரு! பேசு! அப்புறம் ஒரு முடிவுக்கு வா! இப்ப நான் உனக்கு ஹிட்லரா தெரியலாம். ஆனா நீ தான் எனக்கு எப்பவுமே ஜெர்மனி. நீ காலேஜுக்கு கிளம்பு. சாயந்தரம் வீட்டுக்கு வந்துடுவ இல்ல?

நான் உங்க பொண்ணு மா!

அம்மா எப்பவுமே வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு தான்!

மறு நாள் சந்தியாவின் வீடு பரபரப்பாக இயங்கியது. கிச்சனில் கேசரி ஆவின் நெய் புண்ணியத்தில் கமகமத்தது. போதா குறைக்கு முந்திரி பக்கோடா, வெங்காய பக்கோடா என ரெண்டு காரங்கள் வேறு.

பையன் வீட்டு காரங்க வந்தவுடன் ஏலக்காய் டீ கலந்துக்கலாம், சூடு ஆறிடும்! அம்மா ஏறக்குறைய விஜய சாந்தி ஐபிஸ்ஸாக மாறி கட்டளையிட்டு கொண்டிருக்க, அப்பா வழக்கமான ரங்கமணிகள் போல உத்தரவு எஜமான்! போட்டு கொண்டிருந்தார்.

பதவிசாக ஸ்கார்பியோ கார் அப்பார்ட்மெண்ட் கேட்டை வழுக்கி நின்றது.
இந்த அப்பார்ட்மென்டில் தானே சந்தியா குட்டி இருக்கா, எந்த ஃப்ளோர்னு தான் தெரியலை - வாட்ச்மேன் தடியன் ஒரு வில்ஸ் பாக்கேட்டையும் வாங்கிண்டு கவுத்திட்டான் - கார்த்தி யோசனையில் ஆழ்ந்தான்.
லிப்ட்டில் மூணாவது ஃப்ளோர் வந்து நின்றது.

வாங்கோ! வாங்கோ! வாயேல்லாம் பல் செட்டாக அப்பா வரவேற்றார்.
கார்த்தியின் பெரியப்பா பையன் சூர்யா ஜீன்ஸ் படத்து கதாநாயகி பிரசாந்த் போல அனியாயத்துக்கு வெக்கப்பட்டான்.
எல்லோரும் ஒரு வழியாக அவரவர் சீட்டில் செட்டில் ஆனதும், முதல்ல டிபன் சாப்டுடலாமா? இல்லாட்டி பொண்ண வர சொல்லட்டுமா? கேசரி ஆறிடும், அதான்! - அப்பா பஞ்சாயத்தை ஆரம்பித்தார். அவர் கவலை அவருக்கு.

முதல்ல பொண்ணை வர சொல்லுங்கோ! - எதிர் பாட்டு பாடியது பையன் வீடு.

சரி! அரை மனசாக தலையசைத்து விட்டு, அப்பா (இந்த தடவை சொதப்பாமல்) காவேரி!னு சவுண்டு விட,
மயில் கழுத்து கலர் மெட்டல் ஷிபான் சரசரக்க, அதற்கு மேட்சிங்கா சந்தன கலர் பிளவுஸ், சிறிது லூஸாக பின்னிய பின்னலில் ஒரு முழம் மட்டும் முல்லைப்பூ சூடி, குட்டியாக ஒரு ஜிமிக்கி அசைந்தாட, லேசாக ஐ லைனரும், லேக்மே நேச்சுரல் கலர் லிப்ஸ்டிக்கும் போட்டு, கழுத்தில் ஹைத்ராபாத் வெண்முத்தில் கட்டிய நீளமான மாலையில் வந்த சந்தியாவை பார்த்ததும் (ஸ்ஸ்ஸ்ப்பா, இருங்க நான் முதல்ல கொஞ்சம் தண்ணிய குடிச்சுகறேன்) சூர்யா, கார்த்தி இரண்டு இதயங்களும் டமால்னு வெடித்தன.

அட இது என்ன? சந்தியாவின் ஜெராக்ஸ் உருவமாய் இன்னோரு சந்தியா.
இல்லை! இல்லை! அது தான் சந்தியாவா?

கார்த்தியின் கண்கள் சொருகின....
*************************************************************************************
ஹையா! ஹோம்வர்க் முடிச்சாச்சு!


சாரி பரணி, மூணு நாளுல டேக் எழுத முடியலை.

உனக்கேன்னப்பா! பசிச்சா ஹோட்டலுல போயி ஆர்டர் பண்ணி சாப்டுட்டு அப்படியே பக்கத்து சீட்டுக்காரன் பில்லையும் செட்டில் பண்ணிட்டு வந்துடுவ. நாங்க அப்படியா?

இன்னிக்கு அரிசிய ஊற போட்டு மாவாட்டினா தான்(கிரைண்டர்ல தான்) நாளைக்கு இட்டிலி. தெரிஞ்சுக்கோ!

அதனால இப்படி இரண்டு நாளுல எழுது! மூணு நாளுல எழுது!னு எல்லாம் ரூல்ஸ் போடப்படாது!

இந்த கதையை அடுத்து கலக்க போவது யாரு?


வேற யாரு நம்ம மலேசிய புயல் ஃமை பிரண்ட் தான்!