கிட்டதட்ட சாப்பாடே தங்கமணி எனக்கு ஊட்டி விடற நிலமை ஆயிடுச்சு. கையை தூக்கவே முடியலை. ஒரே பொசிஷன்ல கையை வெச்சு பழகியதுல, விரல்கள் எல்லாம் வீங்கிடுச்சு(யாருப்ப அது? அடி வாங்கினா அப்படி தான் வீங்கும்னு சவுண்டு விடறது?).
சரி, விடுங்க, இப்ப பிசியோதெரப்பி பண்ணிட்டு இருக்கேன், நல்ல யோசனைகள் வரவேற்க்கப்படுகின்றன. காப்பாத்த உம்மாச்சி இருக்கார்.
"சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும்"னு பாடினா தங்கமணி நக்கல சிரிக்கறாங்க. நம்ம ராசி அப்படி!
டென்டுல்கர் மதிரி கரேக்ட்டா நூறு அடிக்க மட்டும் ரொம்ப டைம் எடுத்துக்க வேண்டியதா போச்சு. போன பதிவே(கதையே) நூறாவது பதிவு தான்!னு பிளாக்கர் சொன்னது. சரி, நூத்தியோன்னா ரவுண்டா மொய் மாதிரி இருகட்டும்!னு தான் இந்த மொக்கை.
மீண்டும் பழைய உற்சாகத்துடன்
மீண்டு வருவேன் பீனீக்ஸ் பறவையாய்!

