Thursday, June 29, 2006

என்ன தவம் செய்தனை!

2 வாரமாக ஒரே யோசனை. இந்த பிளாக் எழுத ஆரம்பித்து 5 மாதங்கள் ஆகி விட்டது. ஒரு 42 பதிவுகளும் போட்டாச்சு. நாலு பாசக்கார மக்களும் வந்து போறாங்க.
ஒரே மெக்கானிக்கலாக செல்லும் வாழ்க்கையில் இந்த பிளாக் எழுதுவது ஒன்று தான் மகிழ்ச்சியை தந்தது.

போதுமே! பிளாக்கை இழுத்து மூடி விடலாமா?

வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை பற்றி தீவிர சிந்தனை. நாம எழுதலைனா ஒன்னும் குறைந்து விடாது!

கதம்! கதம்!னு சொல்லிவிடலாம் என்று கிட்டத்தட்ட முடிவுக்கு வந்தாச்சு.

இந்த நிலையில், நேற்று ஒரு ISD- கால். என்னடா! நாளைக்கு தானே கான்பிரன்ஸ் கால்!னு நம்ம தல சொல்லிட்டு போச்சு! அதுவும் இப்படி நம்ம மொபைலுக்கு எல்லாம் கூப்பிட மாட்டாங்களே!னு குழப்பம்.

சும்மா வெள்ளைகார துரை மாதிரி, இங்லிபீஸ்ல என் பெயரை உச்சரித்து, நீங்க நல்ல பிளாக் எல்லம் எழுதறிங்க!னு பாராட்டு.

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் (வடிவேலு மாதிரி இழுக்கவும்).

"யாருப்பா, நீ?"னு கேட்டேன்.
அட! நம்மஅர்ஜுனா!

நான் எழுதிய பதிவுகள், (சில கமண்ட்ஸ் கூட) பலதை வரிசையாக சொல்லி, சூப்பரு! எப்படி இதேல்லாம்?னு கேட்க கேட்க, எனக்கு பேச்சே வரலை. ரேவதி சொன்ன மாதிரி, "வெறும் காத்து தேங்க்" வந்தது!

நீண்ட நாளாக பழகியது போன்ற ஒரு உரையாடல், சினேகம். பல பல விஷயங்கள் பேசி விட்டு, "நல்லா எழுதுங்க!, உங்க Tag பாக்கி இருக்கு, ஆராய்ச்சி பணிகள் அதிகமா இருப்பதால் முடியவில்லை!"னு அர்ஜுனா சொல்ல, சொல்ல, எனக்கு "இப்படி ஒரு நல்லவனா?( நீ தான் அர்ஜுனா!)னு ஆச்சர்யம்.

இந்த ஒரு சந்தோஷம் போதுமே வாழ்க்கை முழுதும்! இனி என்ன வேண்டும்?

"ஜப்பான்லேந்து சாக்கிசான் கூப்டாக!
அமேரிக்காலேந்து மைக்கேல் சாக்சன் கூப்டாக!
லண்டன்லேந்து அர்ஜுனா கூப்டாக!!"னு இனி நானும் கோவை சரளா மாதிரி சொல்லிக்கலாம்.

நன்றி!னு ஒரு சொல்லில் உன்னை சிறியவனாக்க விரும்ப வில்லை அர்ஜுனா!

என்றேன்றும் நன்றியுடன்,
அம்பி

Saturday, June 24, 2006

ஆறு, மனமே ஆறு!

சில கேள்விகளுக்கு பதில் தெரியாம நான் பல தடவை முழிச்சதுண்டு. அதுல சில கேள்விகளை இங்கே லிஸ்ட் பண்ணிருக்கேன். பாருங்க,

ஒன்னு: அது என்னங்க, எல்லா பொண்ணுகளுக்கும் டெடி பியர்(கரடி பொம்மை) ரொம்ப பிடிக்குது? ச்ச்ச்சோ ச்வ்வ்வீட்ட்ட்!னு பில்டப் வேற! பேசாம கரடி பொம்மையா பொறந்து இருக்கலாம் போலிருக்கு!

டி.ராஜேந்தர் கூட டெடி பியர் மாதிரி தான் இருக்காரு, எங்கே யாராவது அவர் கன்னத்தை கிள்ளி, ச்ச்ச்சோ ச்வ்வ்வீட்ட்ட்!னு சொல்லி பாருங்களேன்!
"நானா கரடி?
நீ தான் என் எதிரி!
அடிச்சா ஆயிடுவ உதிரி!
ஓடி போ பதறி!"னு அடுக்கு மொழியில குதறி விட மாட்டார் மனுஷன்!

இரண்டு: இப்ப அனேகமாக எல்லா செல்போன் கம்பெனிகளும் நீங்க வாழற வரைக்கும்(Lifetime) இன்கம்மிங்க் பிரீ!னு அறிவிச்சாலும் அறிவிச்சானுங்க, தொல்லை தாங்க முடியலை.

அதுலயும் இந்த CUG (Closed User Group)வசதி வேற இருந்தா அவ்வளவு தான். ஆபிஸ்ல, அடுத்த அடுத்த கேபினுக்கு எல்லாம் போன் போட்டு, சாப்பிட போகலாமா? டீ குடிக்க போகலாமா?னு ஒரே டார்ச்சர் தான். இதுலயும் கேள்ஸ் தான் முண்னணி.
அவங்க குசு குசுனு பேசற விதம் இருக்கே! யப்பா! எதிராளி டென்ஷன் ஆயிடுவான். (ஒன் பிலாக் காப்பி பிளீஸ்!னு ஒரு விளம்பரம் கூட வந்ததே!)

இதுல ஆண்களுக்கு செல்போன்ல பேசவே தெரியாது!

தண்டயார்பேட்டையில தீப்பொறி ஆறுமுகம் (ஒரு செந்தமிழ் பேச்சாளர், காது குடுத்து கேக்க முடியாது) கட்சி மீட்டிங்க் மாதிரி பேசுவாங்க. இப்படி தான் நான் மதுரையில பஸ்ல போகும் போது, பக்கத்துல இருந்த ஒருத்தன் அவன் பொண்ணு பூப்புனித நீராட்டு விழாவுக்கு அவன் சாதி சனத்துக்கு செல் போன்ல முதல் தகவல் சொன்னான். மொத்த பஸ்ஸுக்கும் கேட்டது. பஸ்ஸுல இருந்த சில பேர் அவன் சொல்ல, சொல்ல, அட்ரஸ் எல்லாம் குறிச்சுண்டா.

இதுக்கு நேர்லயே போய் பேசிட்டு வந்துடலாம்.

இந்த செல் போன் இல்லாம நாம வாழவே முடியாதா? அண்ணா யுனிவர்சிட்டியில ஆப்பு அடிச்சது சரி தான்!

மூணு: மெடிக்கல் ரெப்/மார்கெட்டிங்க் துறை என்றாலே டை கட்டிண்டு தான் உலா வரனுமா? நல்ல மே மாத வெயிலுல கூட அவர்கள் டை கட்டிண்டு போறத பாத்தா எனக்கு பாவமா இருக்கும். யாரு இந்த ரூல்ஸ போட்டா?

நாலு: இந்த இந்தி கார பசங்க எல்லாம் மொழுக்குனு மீசைய எடுத்துடுவாங்க. இந்தி பேசனும்னா மீசை வெச்சுக்க கூடாதா? என்னையும், "மீசையை எடுத்துடு"!னு இந்த ரசகுல்லா ரொம்ப டார்ச்சர் குடுத்தது. முடியவே முடியாது! நாங்க எல்லாம் பாரதி வம்சம். மீசையை எடுத்தா எங்க அம்மா ரேஷன் கார்டுலேருந்து என் பெயரை எடுத்துடுவா, என்னை வீட்டுகுள்ளவே விட மாட்டா!னு கண்டிப்பா சொல்லிட்டேன்.

அது மட்டுமா, அசின் ஆத்திரப்படுவா! ஐஸ் குட்டி அழுவா! கோபிகா கோச்சுப்பா! நயன் தாரா நக்கல் விடுவா!னு உங்க எல்லாருக்கும் தெரியாதா என்ன?
(அசினுக்கு ரொம்ப போட்டி கூடிடே போகுது, அதான் ஒரு சேப்டிக்கு கோபிகா, நயன் எல்லாம்).

ஐந்து: இந்த ஜீன்ஸ் பேண்டை பார்த்தாலே துவைக்கனும்னே தோண மாட்டேங்குதே, அது ஏன்? இந்த விஷயுத்துல பேச்சுலர் பசங்களை அடிச்சுக்கவே முடியாது. 2 மாதம், 3 மாதம்னு ஒரே ஜீன்ஸ போட்டு அடிப்பானுங்க பாரு! அதுக்கு வாய் இருந்தா அழுதுடும். நான் லீவுக்கு ஊருக்கு போனா, என் அம்மா கேட்கிற முதல் கேல்வி, "எப்போ ஜீன்ஸை தோய்ச்ச?"


ஆறு: நாம ஸ்கூல் படிக்கும் போது, எல்லாருக்கும் ஒரு ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது லெட்டர் ரைட்டிங்க் சொல்லி தருவாங்க. முதல் லெட்டர் என்ன சொல்லுங்க பார்ப்போம்.
லீவு லெட்டர் தான். "As i'm suffering fever" எழுதாத ஆளுங்களே கிடையாது. இன்னிக்கும் ஆபிஸ்ல லீவு வேணும்னா அதே பொய் தான் சொல்ல வேண்டி இருக்கு. மேக்னி ஷோ படம் பார்க்க போறேன்! அதனால லீவு வேணும்னா சொல்ல முடியும்? ஒரு சேஞ்சுக்கு, ஏன் வேற லெட்டர் எழுத எல்லாம் சொல்லி தர மாட்டேங்கிறாங்க?

இந்த ஆறு மனமே ஆறு! விளையாட்டுக்கு, என்னை இழுத்து விட்ட புண்ணியம் ஒரு
சின்ன பெண்ணை போய் சேருகிறது.

நான் ஏற்கனவே என்னை பத்தி
நச்சுனு நாலு விஷயங்கள் சொல்லிடதுனால, ஆறு கேள்விகளா இங்கு கேட்ருக்கேன்.

ஒரு ஆறு பேரை இழுத்து விடுவோம் முடிவு பண்ணி,

1) சுபா - ஒரு நாளைக்கு ஒரு பிளாக் போடும் பிளாக் உலக இளம் புயல். ( நாளைக்கே இத பத்தி இவங்க போஸ்ட் போட்ருவாங்க, பாருங்க!)

2) Ms.Congeniality - பிளாக் உலகம் கண்டேடுத்த பத்மா சுப்ரமணியம். இவங்க எழுதறதும் ரொம்ப நளினமா இருக்கும்.

3) சச்சின்(கோப்ஸ்) - செம காமெடியா எழுதுவாரு. சமையல் கலையில அறுசுவை நடராஜன்.

4) விஜி - மாசத்துக்கு ஒரே ஒரு போஸ்ட் போடும் குழந்தை. பேசாம இவங்க பிளாக் யுசர் ஐடி, பாஸ்வேர்டை தந்தாங்கனா, நாமளே போஸ்ட் போட்டுடலாம்.(அந்த பொறுப்பை சுபா பார்த்துப்பாங்க)

5) கோப்ஸ் - ரொம்ப நல்ல்ல்லவன். திருப்பூர் பா.சிதம்பரம். என்னையும் குருவா ஏற்று கொண்ட சிஷ்யன்.

6) அர்ஜுனா - ஏடாகூடமா போஸ்ட் போடற ஆளு. இவர் முடி வெட்டிடுண்டதை கூட பிளாக்ல சொல்லிடுவார்.

நீங்கள் உங்களை பத்தி ஆறு விஷயங்கள் சொல்லலாம், என்னை மாதிரி ஆறு கேள்விகள் தான் கேக்கனும்னு இல்லை.

முதலில் இந்த வேதா, ஷ்ரி, 'கொடுமை'உஷா இவங்களை இழுக்கலாம்னு நினைத்தேன். அப்புறம் நான் தர்ம அடி வாங்க வேண்டி இருக்கும். எதுக்கு வம்பு?

இந்த ஆறு பேர் தான் எழுதனும்னு இல்லை. ஆறு கோடியே ஐம்பது லட்சம் தமிழர்களும் எழுதலாம். தப்பில்லை.

Tuesday, June 20, 2006

பாட்டு பாட வா - II

Part-1

மத்த டீம் எல்லாம் புது, புது பாட்டா செலக்ட் பண்ணியிருந்தனர். ஒரு சேஞ்சுக்கு, நாம ஏன் பழைய பாட்டு பாடக்கூடாது?னு தோணியது.
என் டீம்ல இருந்த ஒருத்தன் உடனே, "ஆயிரத்தில் ஒருவன்" படத்திலிருந்து "அதோ அந்த பறவை போல" பாடலாம்! அதுலயும் நிறைய தடவை லலா! லா! எல்லாம் வரும்னு உருப்படியா ஐடியா குடுத்தான்.

உடனே மளமளவென காரியத்தில் இறங்கினோம். ஒருத்தன், நெட்டுலேருந்து பாட்டை எம்.பி.3யா டவுன்லோட் பண்ணி மொபைல் போனுக்கு கொண்டு வந்தான். இன்னொருவன், பாட்டு வரிகளை ப்ரிண்ட் அவுட் எடுத்து பனகல் பார்கில் சரவணா ஸ்டோர்ஸ் நோட்டிஸ் மாதிரி மத்தவர்களுக்கு வினியோகம் செய்தான். எதுக்கு தெரியுமா? கரெக்ட்டா, எந்த எடத்துல, எத்தனை தடவை லலா! லா! பாடனும்னு தெரியனும் இல்ல? அதுக்கு தான்!

நாங்களும், ரகசியமா பிராக்டிஸ் பண்ண ஆரம்பிச்சோம்.
எங்க டீம்ல ஒரிசாகாரர் ஒருத்தர் இருந்தார். தனி தவிலுக்கு,இந்தி பாட்டு பாடலாம்னு முடிவு பண்ணி, "ஓ! எக் லடிக்கி கோ தேக்கா தோ ஏஸா லகா!"னு 1942-லவ் ஸ்டோரி (R.D பர்மனின் கடைசி படம்)யை செலெக்ட் பண்ணிவிட்டேன். அவருக்கு அருமையான குரல்.

ஏதோ மிஸ்ஸாகிற மாதிரி எனக்கு ஒரு உறுத்தல். நாங்க தலைகீழா நின்னு பாடினா கூட டி.எம்.ஸ் மாதிரி பாட முடியாது. அந்த பாட்டு வேற நல்ல பாட்டு. நம்ம குறை தெரியாம இருக்கனும்னா பார்கற மக்களை திசை திருப்பனும்! ஏதாவது டகால்டி வேலை பண்ணிட வேண்டியது தான்!னு முடிவு பண்ணினேன்.

நாங்கள் எதிர்பார்த்த நாள் வந்து சேர்ந்தது. காலையிலிருந்தே பலப்பல போட்டிகளில் எங்கள் டீம் நன்னா புகுந்து விளையாடியது. மதியம் நடந்த எறிபந்து போட்டியில், எல்லா பயலும் மேனேஜருக்கே குறி வெச்சு எறிஞ்சானுங்க. (he, hee,எறிய சொன்னதே நான் தானே!)

மதியம் லஞ்ச்க்கு வந்த ஐஸ்கீரீமை பாட்டு பாடற கோஷ்டி யாருமே தொடலையே! குரல் கெட்டு விடுமாம்.

மாலை வெயில் தாழ்ந்ததுக்கு அப்புறம், கடற்கரை மணலில் எல்லாரும் சேர் போட்டு உக்காச்சுண்டா. முதலில் தனி தவில்களின் போட்டி ஆரம்பிச்சது. VGP-ஆர்கெஸ்ட்ரா சப்போர்ட் வேற கிடைத்தது.

முதலில் எல்லா பெரிய தலைகலையும் ஜட்ஜுகளா போடலாம்னு முடிவாச்சு. ஆனா, ஒரு தீவிரவாதி கும்பல், "எங்க பக்கம் தீர்ப்பு சொல்லலைனா, ஒரு பிராஜக்ட்டும் கிளைண்டுக்கு டெலிவரி ஆகாது. அப்படியே ஆனாலும், 1 வரிக்கு 4 எரர் வரும், எப்படி வசதி?"னு அன்பாக மிரட்டியதால் பெரிய தலைகளின் உள்துறை அமைச்சர்களை (மனைவி மார்களை) "நல்ல தீர்ப்பு சொல்லு தாயி!"னு சேர் போட்டு உக்கார வெச்சோம்.

பல பாம்பே ஜெயஷ்ரீகளும், சுவர்ண லதாக்களும் வசீகராவையும், அழகிய அசுரனையும் கூவி,கூவி கூப்பிட்டு கொண்டு இருந்தனர். சுருதி, தாளம் எல்லாம் சேரவேயில்லை.

எங்க டீம் ஒரிசாகாரர் போய் பட்டய கிளப்பிட்டார்.

போட்டி ரிஸல்ட் உடனே அறிவிக்கப்பட்டது. நாங்க தான் முதல் இடம்.
கடுப்பாகி போன மத்த டீம், நாங்க கோஷ்டி கானத்தில் ஒரு கை பாத்துக்கறோம்!னு உறுமினர்.

எம்.டி "நான் பாடறேன்! பார்க்க வாங்க!"னு தன் அப்பா, அம்மா, மனைவி, மச்சினினு குடும்பத்தையே கூட்டி வந்திருந்தார். இவ்வளவுக்கும் அவர் ரண்டக்க! ரண்டக்க!! கோரஸ் தான் பாடினார்.

ஒரு வழியா போட்டி ஆரம்பித்தது.
முதலில் "சகலகலா வல்லவன்" இளமை இதோ! இதோ! பாட்டு பாடியது ஒரு கோஷ்டி. (அதுலயும் லலா லலா வருமே!)
ரொம்ப நல்லா பாடினாங்க.

ரெண்டாவதா, அன்னியன் உலா வந்தார். எம்.டி. மனைவி விழுந்து, விழுந்து சிரிச்சாங்க.

'Ahem' மூணாவதா, நம்ம பாட்டு! உஷாரா மேடை ஸ்கீரினை போட சொன்னேன். பேக்ரவுண்ட் மியூசிக் ஒலிக்க ஆரம்பித்ததும், திரை விலகியது. மேடையில நாங்க ஒருத்தருமே இல்லையே!
திமு திமுனு ஒரு பத்து பேரு, மேடைக்கு சைடுலேருந்து ஓடி வந்து மேடை ஏறினாங்க. எல்லோரும் ஒரே மாதிரி 5 பீளிட் வச்ச பேகி பேண்ட், கை இல்லாத பனியன், தலையில குல்லா!
லலா லா! லா! லலா லா லா!னு பாடிகிட்டே மேடையில அங்கேயும், இங்கேயும் ஓடினாங்க.

"அதோ! அந்த பறவை போல வாழ வேண்டும்!
இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்!"னு மேடைக்கு சைடுலேருந்து ஒரு கயிற்றில் தொங்கியபடி இப்போ தான் எம்.ஜி.ஆர்(அம்பி) என்ட்ரி. எனக்கும் அதே காஸ்டியூம் தான்.

பொதுவா, எம்.ஜி.ஆர் மாதிரி ஆடறது ரொம்ப ஈஸி. இடது கைய 4 தடவை தூக்கனும், வலது கைய 8 தடவை தூக்கனும். கையை தூக்கும் போது மறக்காம தலையை ஆட்டனும். ஒரு இடத்துலயே நிக்க கூடாது. கையை பின்னாடி கட்டிண்டு வளைஞ்சு வளைஞ்சு ஓடணும். எல்லா கூத்தும் தெளிவா பண்ணினேன்.

ஒருத்தனை நம்பியார் மாதிரி செட் பண்ணினேன். அவனும், கையை பிசைந்து கொண்டு, கையில வாள் எல்லாம் வச்சுண்டு தலைய, தலைய ஆட்டிண்டு,அங்கேயும், இங்கேயும் நடந்தான். ஒரு சரணம் முடிஞ்சதும், எம்.ஜி.ஆரும், நம்பியாரும் வாள் சண்டை எல்லாம் போட்டனர். எப்பவுமே, எம்.ஜி.ஆர் மூணு தடவை அடி வாங்கிட்டு தான் திருப்பி அடிப்பார். அந்த கூத்தும் நடந்தது. என் குரல் ஏதோ பரவாயில்லை. டி.எம்.ஸ் மாதிரி எல்லாம் என்னால பாட முடியுமா? அதான், இப்படி ஒரு டகால்டி வேலை.

கடைசி லலா லா முடிஞ்சதும், எங்க டீம்ல ஒருத்தன், "ரீப்பீட்ட்ட்டு"னு கத்தினான். மறுபடி ஒரு லலா லா பாடினோம்.

மேடைக்கு கீழே கூட்டம் விழுந்து விழுந்து சிரிக்குது. ஜட்ஜுகளும் சிரிப்பை அடக்க முடியாம தவிக்கறாங்க.
எம்.டி.யின் அப்பா தீவிர எம்.ஜி.ஆர் ரசிகராம். அவரால சந்தோஷத்தை கட்டுப்படுத்த முடியலை. "பாட்டு பாட சொன்னா, ஒலியும் ஒளியும் காட்றீங்களே பா!"னு ஓடி வந்து எங்க டீமை அணைத்துக் கொண்டார்.

நம்பியாரை நோக்கி எங்க ஆபிஸ்ல வேலை பார்க்கற ஒரு பொண்ணு வந்தா. அவளுக்கு நாங்க சரோஜா தேவினு பட்டபெயர் வெச்சு இருந்தோம். கண்ணுக்கு இட்டுகற மை காது வரைக்கும் போகும், அதான் அந்த பட்டபெயர். நம்பியார் அந்த பொண்ணை டாவடிச்சுகிட்டு இருந்தான்.

சரோஜா தேவி: நீங்க சரியான மாங்கா!னு இத்தனை நாளா நினைச்சேன். இவ்ளோ நல்லா டான்ஸ் எல்லாம் ஆடுவீங்களா? நடிப்பும் ரொம்ப நல்லா இருந்தது.

நம்பியார்: (வழிந்தபடி) ரொம்ப தேங்க்ஸ்ங்க! உங்களுக்கு பிடிச்சு இருந்ததா?

சரோஜா: (பதிலுக்கு வழிந்தபடி) ம்ம்! ஆமா! ரொம்ப பிடிச்சு இருந்தது.(அட்ரா சக்கை! அட்ரா சக்கை!)

நம்ம பயலுக தான், கோடு காட்டினா போதுமே, ஜல்லி அடிச்சு, தண்ணி தெளிச்சு, தார் ஊத்தி, NH-7 ரோடே போட்ருவாங்களே! அப்படியே பிக்கப் பண்ணிட்டான் பையன். நான் பெனால்டி கார்னர்லேருந்து பந்தை பாஸ் பண்ணினேன், கரெக்ட்டா நம்பியார் கோல் போட்டுட்டான்.

நம்பியாரா நடிக்கவே மாட்டேனு அடம் பிடிச்சான். இமேஜ் ஸ்பாயில் ஆயிடுமாம். நான் தான் நல்ல வார்த்தை சொல்லி சம்மத்திக்க வெச்சேன்.

போட்டி முடிவு அறிவிக்கப்பட்டது. சகலகலாவல்லவனுக்கு முதல் இடம், எங்களுக்கு இரண்டாம் இடம், அன்னியனுக்கு மூன்றாம் இடம். எம்.டி.யின் அப்பா தனியாக எங்கள் டீமுக்கு ஆயிரம் ரூபாய் பரிசளித்தார். மொத்த போட்டிகளிலும் வாகை சூடி நாங்கள் சிறந்த டீமாக தேர்ந்தெடுக்கப்பட்டோம். குஷி தாங்காமல் என் அணியினர், என்னை தூக்கி, தூக்கி போட்டு பிடித்து, தங்கள் விசுவாசத்தை காட்டினர். பரிசுப் பணம் 15 ஆயிரம் தேறியது.

ஓட்டல் போகலாம், தீர்த்தம் சாப்டலாம்னு ஆளாளுக்கு யோசனை.

தாம்பரத்தில் உள்ள தொண்டு நிறுவனத்துக்கு உதவி அளிக்கலாம்னு நான் முன்மொழிந்ததை ஏக மனதாக ஏற்று கொண்டனர். இரண்டாம், மூன்றாம் இடத்தை பெற்ற அணிகளும் எங்களோடு சேர்ந்து கொண்டது. எம்.டி கையாலேயே, அந்த நிதியை நன்கொடை அளித்தோம். எம்.ஜி.ஆர் பாட்டு பாடிட்டு நன்கொடை அளிக்கலைனா நல்லாவா இருக்கும்? தர்மம் தானே தலை காக்கும்!

2 நாள் கழித்து, ஆபிஸ்லேயே திரை கட்டி, டெண்ட் கொட்டகை மாதிரி படம் போட்டு காட்டினர். சரோஜா தேவியும், நம்பியாரும் அருகருகே அமர்ந்து படம் பார்த்தனர். நாங்க அவங்களை பார்த்து கொண்டு இருந்தோம். போன நவம்பரில், இரு வீட்டார் சம்மததுடன் நம்பியாருக்கும், சரோஜா தேவிக்கும் டும் டும் டும்.

பின் குறிப்பு: இப்போ சரோஜா தேவி ஐந்து மாதமாம். (ஆனாலும், நம்பியார், ரொம்ப தான் பாஸ்ட்டு). பையன் பொறந்தா என் பெயர் தான் வைக்க போறானாம்! "ப்ளீஸ் அதேல்லாம் வேண்டாம்!"னு சொல்லிட்டேன்.

Thursday, June 15, 2006

பாட்டு பாட வா!

இந்த நிகழ்வும் (கூத்தும்), சென்னை கம்பெனியில் நடந்தது தான்.

வருடா வருடம் அப்ரைசல் வருதோ இல்லையோ, கம்பெனி ஆண்டு விழா கரெக்ட்டா வந்து விடும். போன வருடமும்,அப்படி தான்.

பொதுவாக, கடற்கரை சாலையில் உள்ள ஏதாவது ஒரு ரிஸார்ட்டில் தான் நடக்கும். இந்த தடவை, VGP-கோல்டன் பீச்சீல் நடத்தலாம்னு சாமி (எம்.டி) வரம் குடுக்க, பூசாரியும் (HR) தலையசைக்க, கும்பமேளாவுக்கு நாள் குறிக்கப்பட்டது.

இந்த போட்டி, அந்த போட்டினு பல போட்டிகள் இருந்தாலும், எல்லார் கண்ணும் பாட்டு போட்டி மேல தான். விஷயம் இருக்கு அதுல.
கிட்டத்தட்ட, முக்கால் வாசி பேர், பாத்ரூம் பாடகர்கள், எங்கள் எம்.டி உட்பட. தங்கள் பாடும் திறமையை நீரூபிக்க இதை விட ஒரு நல்ல சந்தர்ப்பம் வராதுனு எல்லாருக்கும் புரிஞ்சு போச்சு.
எனவே பாட்டு போட்டியை
1) தனி திறமை
2) கூட்டத்தோடு கோவிந்தானு 2 விதமா பிரிச்சா.

100+ நபர்களை 8 டீமா பிரிச்சா.

ரொம்ப தில் உள்ளவர்கள் மட்டும் தனி திறமைக்கு நான் தயார்!னு மார் தட்டினா.
பங்க்ஷனுக்கு 2 நாளைக்கு முன்னரே கச்சேரி களை கட்ட தொடங்கியது.
எம்.டி.யும் ஒரு டீம்ல இருந்ததால், ஆபிஸ்ல 2 நாளைக்கு ஒரு வேலையும் நடக்கலை.

மேனேஜர் யாராவது தப்பி தவறி பிராஜக்ட் ஸ்டேடஸ் கேட்டா, "அவன நிறுத்த சொல்லு! நான் நிறுத்தறேன்"னு நாயகன் டயலாக் பேச ஆரம்பிச்சுட்டானுங்க எங்க பசங்க.

என்ன பாட்டு பாடலாம்?னு ஒரு பெரிய ஆராய்ச்சியே நடந்தது.
எம்.டி டீம், உஷாரா, "ரண்டக்க! ரண்டக்க!" பாட்டை காப்பி ரைட் வாங்கி விட்டது. 2 நாளைக்கு எம்.டி ரூம்லேயே, ஒரே ரண்டக்க! ரண்டக்க! பிராக்டிஸ் தான்.

இதுல சில டீம், "நாங்க விழா மேடையில தான் பாட்டை அறிவிப்போம்!"னு ரொம்ப ரகசியமா பிராக்டிஸ் பண்ண ஆரம்பிச்சுட்டா.

எனக்கும் ஒரு டீம் வந்து சேர்ந்தது. டீம்ல ஒரு லேடி மெம்பர் கூட கிடையாது. பொதுவா, கேள்ஸ் குரல் கும்பல் கோரஸ்ஸுக்கு எல்லாம் நன்னா இருக்கும்.

அது மட்டும் இல்லை, என் டீம்ல சொல்லி வெச்ச மாதிரி எல்லா பேரும், நாங்க பாத்ரூம்ல மட்டும் தான் பாடுவோம்!னு சத்தியம் பண்ரா. இதுக்காக, விழா மேடையில் தோட்ட தரணியை கூப்பிட்டு பாத்ரூம் செட்டா போட முடியும்? அப்படியே போட்டாலும், நாங்க குளிச்சுண்டே தான் பாடுவோம்!னு சொன்னா என்ன பண்றது?

சரி, டீமுக்கு தலைவரா போயிட்டோம், நாம தான் சமாளிக்கனும்! அதோட மட்டும் இல்லை, நாம தான் மார்கழி மாத பஜனையில் எல்லாம் பாடி இருக்கோமே! நம்ம பாட்டை மெச்சி, எக்ஸ்ட்ரா பொங்கல் எல்லாம் தந்தாளே!னு ஒரு அசட்டு தைரியத்துல, நான் பாத்துக்கறேன்!னு சொல்லிட்டேன்.

என் கோஷ்டியும், "தல! நீ அப்டியே முன்னால பாடிட்டே போ தல! நாங்க பின்னாடியே, லல்லல் லா பாடிட்டே வரோம் தல!"னு கைப்புள்ளையை ஏத்தி விட்ற மாதிரி ஏத்தி விட்டானுங்க.
அடுத்து, என்ன பாட்டு பாடலாம்னு ஒரே யோசனை.

இவனுங்க லல்லல் லா மட்டுமே பாடனும்னா, அது கண்டிப்பா விக்ரமன் & S.A.ராஜ்குமார் பட பாடல்கள் தான். ஏன்னா, அவர் படத்துல தான், முதலில் ஆண் குரலில் ஒரு பாட்டு வரும், பின் அதே பாட்டு பெண் குரலில் வரும். பின் ஆண்,பெண் ரெண்டு பேர் குரலிலும் அதே பாட்டு வரும். அந்த பாட்டோட பல்லவி மட்டும்
"லல்லல்லா லாலே லல்லல்லா!"னு படம் முழுக்க வரும். (ரோஸாப்பூ சின்ன ரோஸாப்பூ!னு நீங்க பாடினா, அதுக்கு நான் பொறுப்பில்லை)

தியேட்டரிலிருந்து,வீட்டுக்கு போய் ஒரு வாரம் வரைக்கும் நம்ம காதுல ஒரே லல்லல்லா தான் கேட்கும்.
ஆகவே, அப்படிபட்ட பாட்டு எது?னு நெட்டுல தேடினோம்.(இதுக்கு தானே ஆபிஸ்ல நெட் கனக்க்ஷன் எல்லாம்!)

மத்த டீம் எல்லாம் வேட்பாளர் பட்டியல் அறிவிச்சு, பிராக்டிஸ் எல்லாம் பண்ணி பின்னி பெடலெடுக்க ஆரம்பிச்சுட்டானுங்க.

பாத்ரூம் பாடகர்கள் எல்லாம் சரியான மூடு வரணும்னு கும்பல் கும்பலா ஒரே பாத்ரூமுக்குள்ள போயிண்டு, "ரண்டக்க! ரண்டக்க!"னு பாடி பிராக்டிஸ் பண்ணி பக்கத்து பாத்ரூமுக்குள்ள போறவாளை பயமுறுத்த ஆரம்பிச்சுட்டா.

இது போதாதுனு,
"வருது! வருது! விலகு! விலகு! வேங்கை வெளியே வருது!!"னு தனி தவில்கள் உபத்ரவம் வேற! (ரெஸ்ட் ரூம்ல பாடற பாட்டா டா இது?னு மத்தவங்க மொத்திட்டானுங்க.)

எங்களுக்கு,ஒரு பாட்டும் திருப்திகரமா இல்லை. போட்டிக்கு 2 நாள் தான் இருக்கு.

"என்ன தல, ஆட்டத்துல நாம இருக்கோமா, இல்லையா? ஜெய்காட்டியும் பரவாயில்லை, டெபாசிட்டே இழந்துடுவோம் போலிருக்கே!"னு என் டீம்காரர்களே சந்தேகபட ஆரம்பித்து விட்டனர். இது போதாதுனு எதிர் கட்சிகாரர்களின் நக்கல் வேற!

இந்த நிலையில் தான், நச்சுனு அந்த பாடல் நினைவுக்கு வந்தது.

அது எந்த பாடல்னு அடுத்த போஸ்ட்டுல பார்ப்போமா?

Thursday, June 08, 2006

ஓ! பார்ட்டி, நல்ல பார்ட்டி தான்!

நான் சென்னை தரமணியில் உள்ள ஒரு கம்பெனியில் வேலை பார்த்த போது நடந்த நிகழ்வு இது.

பிராஜக்ட் மேனேஜர், பிராஜக்ட் டெலிவரி நெருங்குகிறதுனு ஏதோ அவர் மனைவி டெலிவரி டேட் நெருங்குவது போல கிட்டத்தட்ட 4 டீம்களை சொடுக்கி விட்டு கொண்டிருந்தார்.

கல்யாணமானவர்கள் எல்லாம், 6.30 மணிக்கு, "சந்தைக்கு போனும், ஆத்தா வைய்யும்"னு என்னை மாதிரி பேச்சுலர் அப்பாவி பசங்க (இ.வா பசங்க) தலையில மிச்ச வேலைகளை கட்டி விட்டு, நைசா கம்பி நீட்டிடுவாங்க.

நாங்களும், நைட்டு லேட்டா கிளம்பினா, கம்பேனி செலவுல சரவண பவன் பிரியாணியும், சப்பாத்தி, சென்னா மசாலா சாப்டலாம்னு சப்பு கொட்டிண்டு மாங்கு மாங்குனு வேலை பார்த்தோம்.
ஒரு வழியா, கிளைன்டுக்கு சொன்ன தேதியில டெலிவரியும் பண்ணிட்டார் அந்த புண்ணியவான்.
ஏதோ தும்பா ஏவுதளத்துலேந்து இன்சாட் 2-D விட்ட மாதிரி ஆகாசத்துக்கும் பூமிக்குமா குதிச்சார் அந்த மகானுபாவர்.

எம்.டி. ரொம்ப அப்பாவி (என்னை மாதிரி). வெளுத்தது எல்லாம் பினாயில்னு நினைப்பவர்.
20 நாள் கழிச்சு கிளைன்ட் காறி துப்ப போறான் என்ற விஷயம் எங்களுக்கு தனே தெரியும்!

உழச்சு, உழச்சு ஓடா தேஞ்ச எங்களுக்கு, கிண்டி-கதிப்பாரா கிட்ட இருக்கற அந்த 5 ஸ்டார் ஓட்டலுக்கு மதியம் லஞ்சு ஏற்பாடு ஆச்சு.
நம்ம பசங்களும், "ஓ சாமி! சோறு போடறாங்க, சோறு!"னு அவனவன் முந்தின நாள் நைட்டுல இருந்தே சாப்டாம ஏகாதசி விரதம் அனுஷ்டிக்க ஆரம்பித்து விட்டனர்.

எல்லாரையும் ஒரு பஸ்ல ஏத்தி, பாட்டு எல்லாம் போட்டு கூத்தடிச்சுண்டே போய் சேர்ந்தோம்.
வீரப்பனுக்கு ஒன்னு விட்ட ஓர்படி பையன் மாதிரி மீசை வச்சுண்டு, சும்பன், நிசும்பன் மாதிரி வாசல்ல இருந்த இரண்டு செக்யூரிடிகளை பார்த்ததும், "சார்! பில்லுக்கு போதுமான பணம் எல்லாம் கொண்டு வந்து இருக்கேளா?"னு என் டவுட்டை கிளியர் பண்ணின்டேன்.

ரிஷப்ஷன்ல சோக்கா ஒரு கிளியை போட்ருந்தா. விமான பணிபெண்கள், ரிஷப்ஷனிஸ்ட், இவாளெல்லாம் இதுக்குனே பிரம்மா படைப்பார் போலிருக்கு.
அடடா! என்ன நளினம்!, என்ன இங்லிபீஸு!, எங்க பசங்க வாயிலேர்ந்து ஜொள் ஆறு கரை புரண்டு ஓடியது.

என் நேரம், என் அப்பாவின் நண்பர் அங்கு வந்து இருந்தார். அதனால, ரொம்ப பவ்யமா இருந்தேன். என்னடா, ஆபிஸுக்கு போகாம இங்கே என்ன பன்ற?னு விசாரிப்பு. ஆபிஸ்லேர்ந்து தான் கூட்டீண்டு வந்தானு அவருக்கு புரிய வைத்தேன்.

விவரமா சொல்லலைனா, ஊருக்கு போய், "உன் பையன் 10 தடிப்பசங்களோட ஓட்டல், ஓட்டலா சுத்திண்டு இருக்கான். கூட ஏழு, எட்டு குட்டிகள் வேற!னு கொளுத்தி விடுவார் அந்த மகானுபாவர்.

அதுக்குள்ள பசங்க எல்லாம் கிளி பேச்சு கேக்க போயிட்டானுங்க.
லிப்ட் எங்கே இருக்கு?ங்க்றான் ஒருத்தன்.
லிப்டுக்கு சுவிட்ச் எங்கே இருக்கு?னு பஸ்ட் கியர் போட்டு தூக்கறான் இன்னொருத்தன்.

இப்படியாக கடலை சாகுபடி ஏக்கருக்கு 100 கிலோவை தாண்டி விட்டது.
ஒரு வழியா சாப்பிட அழைப்பு வந்தது.

சாப்பாடு பபே முறை. முதல்ல சூப் வந்தது. வெஜுக்கு எல்லாம் தக்காளி சூப், மத்தவாளுக்கு எல்லாம் சிக்கன் சூப். அதயே, மாரியம்மன் திருவிழா கூழ் மாதிரி ஆளுக்கு அரை லிட்டர் குடிச்சானுங்க. ஒருத்தன் பழக்க தோஷத்துல, "தொட்டுக்க ஊறுகாய் இல்லையா?'னு உளறி விட்டான்.

கர்மம்!னு மேனேஜர் தலையில அடிச்சுண்டார்.

அடுத்து, கார்கில் போருக்கு போற மாதிரி ஒரு கூட்டம், பந்திக்கு முந்தியது.

நான்-வெஜ்ஜுக்களுக்கு சரியான வேட்டை.

ஒரு படத்துல விவேக் சொன்ன மாதிரி, ஓடறது! ஓடறது போடறது!! பறக்கறது, நீந்தறது, எல்லாம் இருந்தது. மீன்ல இத்தனை வகை இருக்குனு எனக்கு அன்று தான் தெரிஞ்சது.

"சரக்கு வெச்சுருக்கேன்!
இறக்கி வெச்சுருகேன்!"னு அழகு காட்ற மீனாவை தான் நமக்கு தெரியும்.

சொன்ன நம்ப மாட்டீங்க, அந்த 30 - 35 பேர்ல 2 பேர் தான் வெஜ். நானும், என் டீம் லீட் (அய்யங்கார் வீட்டு அழகு). என்னை அவங்க சொந்த தம்பி மாதிரி பாசம் காட்டுவாங்க.

பாவப்பட்ட வெஜ்ஜாகிய எங்களுக்கு பிரைட் ரைஸ், பரோட்டா, கோபி, தயிர் சாதம் தான்.
அவனவன் பிளேட்டுல எல்லா ஐட்டங்களும் ரொம்பி வழிஞ்சது. காடை இல்லையா?னு ஒரு பீடைக்கு ரொம்ப குறை.

சில பேர் குடும்பம், குட்டி எல்லாம் அழைச்சுண்டு வந்திருந்தா. எங்க மேனேஜர், அவர் மனைவியை அழைச்சுண்டு வந்திருந்தார்.
எனக்கு ஒரு பிரண்ட் இருக்கான். கொஞ்ச நேரம் கழிச்சு பிறந்து இருந்தானா வாலோடு பிறந்து இருப்பான். அவ்ளோ சேட்டை.
எங்க மேனேஜர் தீவிர நயன் தாரா ரசிகர். அவர் ரிங்க்டோன் கூட அய்யா படத்துல வர "ஒரு வார்த்தை சொல்ல" பாட்டு தான்.
என் பிரண்டு தன் வேலையை காட்ட ஆரம்பிச்சான். மெதுவா என் மேனேஜர் கிட்ட போய், "சார்! ஒரு ஷூட்டிங்க் முடிஞ்ச்சு, ரெஸ்ட் எடுக்க நயன் தாரா இந்த ஓட்டலுல தான் தங்கி இருக்காளாம்"னு கொளுத்தி போட்டான். அவ்ளோ தான்! மேனேஜர், சீதையை தேட புறப்பட்ட அனுமார் மாதிரி துள்ளி குதிச்சு ரிஷப்ஷனை நோக்கி ஓடிட்டார், அதுவும் அவங்க மனைவிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாம.

பிரண்டு, மெள்ள மேனேஜர் மனைவியிடம் மேற்படி விஷயத்தை சொல்லி(கொளுத்தினு வாசிங்கோ), நாரதர் வேலைய காட்டிட்டு வந்துட்டான்.

இது ஒன்னும் தெரியாம, மேனேஜர், என் பிரண்டு கிட்ட வந்து, "என்னப்பா! நயன் தாரா எல்லாம் தங்கலைனு சொல்றாளே அந்த ரிஷப்ஷன் குட்டி"னு அப்பாவியா கேட்டார். பிரண்டு சளைக்காம, அப்படி தான் சார் அவ சொல்லுவா! நீங்க ரூம் பாய் கிட்ட விசாரிங்க!னு ஏவி விட்டான்.
இவரும், தன் முயற்சியில் சற்றும் சளைக்காத விக்ரமாதித்தன் மாதிரி கிளம்பிட்டார். ஆனா வேதாளம் மாதிரி அவர் மனைவி, வழியிலேயே மடக்கிட்டா.

அப்புறம் என்ன, ஒரு 10 நிமிஷத்துக்கு மேனேஜருக்கு ரண்டக்க! ரண்டக்க!! ரண்டக்க!!
தான்! லட்சார்சணை பலமா இருந்தது.

வெஜ்ஜுக்கு இவ்வளவு தான் ஐட்டங்களா?னு நான் விரிவாக கஸ்டமர் கேரில் குமறி விட்டேன். அதற்கு பலன் 2 நாள் கழித்து கொரியரில் அந்த ஓட்டல் கஸ்டமர் கேர் மேனேஜரிடம் இருந்து ஒரு கடிதமும், 2 பேருக்கான டின்னர் கூப்பனுமாக(60% discount) வந்தது.

அஸின் வெளி நாடு ஷூட்டிங்க் போயிருப்பதால், டின்னர் சாப்பிட வர முடியாமைக்கு வருத்தம் தெரிவித்து போன் பண்ணினா. (kutti, note the point)
ஐஸ் குட்டி போன்ல ஒரு பாட்டம் அழுதே விட்டாள். சமாதானம் படுத்துவதற்குள் போதும், போதும்னு ஆகி விட்டது.

எனவே கூப்பனை, பவ்யமா, என் மேனேஜர் கிட்ட குடுத்துடேன்.

லூஸா டா நீ?னு நண்பர்கள் கத்தினார்கள்.

விஷயம் இருக்கு இதுல, வேடிக்கை பாருங்க!னு சொல்லிட்டேன்.
அடுத்த மாதம், சுட சுட ஒரு இன்க்ரிமன்ட் வந்தது.
ஷத்ரியன் இல்லைடா நீ, சாணக்யன் டா!னு புகழ்ந்து விட்டு,ட்ரீட் என்ற பெயரில் என் கழுத்தில் மாலை போட்டு, மஞ்சள் தண்ணி தெளிச்சு, வெட்டி விட்டனர்.

பின் குறிப்பு: he hee,என் பிரண்டுக்கு, அந்த நாரதர் ஐடியாவை குடுத்தது நான் இல்லீங்கோ! நம்பிடீங்க தானே?

Friday, June 02, 2006

Applying Thoughts

முன்குறிப்பு: இந்த சம்பவம் நடந்து ஒரு மாதம் இருக்கும். சுட சுட பதிய முடியலை.

ஒரு நாள் காலை ஆபிஸுக்கு வந்ததும் வராததுமா, அவசரமா பத்ரகாளியிடமிருந்து(my team lead) அழைப்பு.
பத்ரகாளியின் திருவிளையாடல்களை அறிய read
Part-1 and
Part-2

என்னடா, நாம இப்போதைக்கு ஒரு சேட்டையும் பண்ணலையே, எதுக்கு கூப்படறா?னு யோசனையோடு போனேன்.

உக்காச்சுகோ அம்பி!னு ரொம்ப பாசம சொன்னா. சரி! எதோ குஷியான மேட்டர் தான்னு முடிவு பண்ணினேன்.

என் குழந்தைக்கு ஒரு வயசு ஆறது. மொட்டை போடனுமாம்.

நல்ல விஷயம் தானே? (அய்யோ! மொட்டைக்கு மொய் எழுதனுமா?)

சொந்த ஊரு, ராஞ்சில தான் போடனும்னு என் மாமியார் கண்டிப்பா சொல்லிட்டா. அவள் ரொம்ப பொல்லாதவள். சொன்னா, சொன்னது தான்.

(மனசுக்குள்ள,"உனக்கே ஆப்பு அடிக்க ஒருத்தி இருக்காளா?")

நான்,"பெரியவங்க சொன்னா அதுல ஒரு அர்த்தம் இருக்கும்". கண்டிப்பா சொந்த ஊருல தான் தான் மொட்டை போடனும்.

(கடுப்போட) சரி, சரி,15 நாள் லீவுல போரேன் அம்பி. நீ சேட்டை பண்ணினாலும், வேலைல கெட்டி. நீ தான் டீமை பாத்துக்கனும். ஒழுங்கா செய்வியா?

நீ உக்காந்த சீட்ல நானா? சிங்கம் உக்காந்த சீட்ல சுண்டலியா? எப்படி? எப்படி மா? வேணும்னா உன் பாத ரட்சகைய குடுத்துட்டு போ மா! நான் பரதன் மாதிரி ஆட்சி நடத்துரேன்னு ஐஸ் மழை பொழிஞ்சேன்.

சிரிப்போடு, சரி, சரி, இந்த மேட்டர டீம்ல இப்பவே டமுக்கு அடிக்க வேன்டாம். சரியா?
சரி, சரி...

ஒரு வழியா, பத்ரகாளி next day ஊருக்கு போயிட்டா...

எனக்கு அக்னி நட்சத்திரம் ஜனகராஜ் மாதிரி, "பத்ரகாளி (தங்கமணி) ஊருக்கு போயிட்டா!னு கத்தனும் போல இருந்தது..

அடுத்த நாள் காலையில, அவசரமா என் கேபினெட்ட(டீமை) Team மீட்டிங்க்!னு சொல்லி கூட்டினேன்.
ஒரு குஷியான மேட்டர் சொல்ல போரேன், நான் சொல்லி முடிச்சதும் யாரும் விசில் எல்லாம் அடிக்க கூடாது, சேச்சி, உனக்கு தான் மா!

சேச்சி நன்னா விசில் அடிப்பா. அவ அடிச்சா, பாலக்காடு வரைக்கும் கேக்கும். என் மண்டையில குட்டி, குட்டி எனக்கு அவ தான் விசில் அடிக்க சொல்லி தரா. கொஞ்சம் தேறிருக்கேன்.
என் டீம்ல எல்லாம் சரியான வானரங்கள்! (என்னையும் சேர்த்து தான்). மீட்டிங்னு எல்லாரையும் கூட்டினா, சேர்ல ஒக்காச்சுகாம, டேபிள ஏறி உக்காரும். அதான் ஒரு முன்னெச்சரிக்கை அறிவிப்பு.
பக்குவமா, விஷயத்தை போட்டு உடைத்தேன்.
சொல்லி முடிச்சதும், உய்ய்ய்ய்ய்னு ஒரு விசில் பறந்தது. யாருனு பார்த்தா, பெங்காலி ரசகுல்லா. ரெண்டு வெண்டைக்காய்களை (he hee, ladies fingers = விரல்களை) மடக்கி வாயில் வைத்து நச்சுனு விசில் அடிச்சா.
அடிச்சுட்டு, லைலா மாதிரி ஒரு சிரிப்பு வேற. அவளை நான் எதுவும் சொல்ல மாட்டேன். பாவம், தாய் இல்லா குழந்தை. அவ ஆத்துல எது நடந்தாலும், ஓடி வந்து என் கிட்ட தான் யோசனை கேப்பா.
அவ ஆத்து வேலைகாரி பாலம்மா வேலைய விட்டு நின்னுட்டா, அவ செல்ல நாய்குட்டி அவ பெட்டுல உச்சா போயிடுத்துனு சொல்லின்டே போகலாம். நானும், அறிவுப்பூர்வமா, பாலம்மா போனா என்ன, ஒரு நாகம்மாவை சேத்துக்கோ, உன் நாய்குட்டிக்கு snuggy pad கட்டி விட்டுடுனு யோசனை வாரி வழங்குவேன்.

சரி, இந்த வானர கூட்டத்திடம் வேலை வாங்கனும்னா டகால்டி வேலை காட்டி தான் முடியும்னு எனக்கு தெரியும். அதனால, ஒரு அறிவிப்பு செய்தேன்.

எல்லாரும், ஒழுங்கா வேலைய முடிச்சா, லஞ்ச் முடிஞ்சதும், கேம்ஸ் ஷோ எல்லாம் நடத்துவேன். சரியா?னு ஒரு பிட்ட போட்டேன்.

பிரமாதமான வரவேற்பு. உடனே, என்ன கேம்ஸ் எல்லாம் நடத்தலாம்னு கூட்டம் சிந்திக்க ஆரம்பிச்சது.

ஒரே குரல்ல, எல்லாரும் அந்தாக்க்ஷரினு கத்தியது. அந்த ஏரியாவுல நான் கொஞ்சம் வீக். தமிழ் பாட்டுனா பொளந்து கட்டிடலாம்.
ஆனா, இங்க எல்லாம் "சனம், மனம்,தீவானா,இஷ்க்,பிஷ்க்னு இந்தி பாட்டுனா பாடும்!"

நமக்கு, "ரூப் தேரா மஸ்தானா!" (அதுவும் முதல் 4 வரி) தான் தெரியும். நாம பெப்பரபேன்னு வாய தான் பாத்துண்டு இருக்கணும்.

செல்லாது! செல்லாது!னு நான் தீர்ப்பு சொன்னா " நாட்டாமை, தீர்ப்பை மாத்தி சொல்லு! இல்ல, தலைய எடுத்துருவோம்"னு மிரட்டல் விடுகிற கூட்டம் இது. அரை மனசா சரினு சொல்லிட்டேன். ரசகுல்லா டீம்ல நான் சேர்ந்து கொன்டேன். (அவ இதுல கில்லாடி).

அப்புறம், "ரிங்கா ரிங்கா ரோஸஸ்", தம்ஷராட், Ad-act, குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.

நானும் என் பங்குக்கு, "குலை குலையா முந்திரிக்கா" கேம்ஸை முன்மொழிந்தேன்.

அப்படினா என்ன?னு எல்லாரும் கேட்டா. ஆட்ட விதிகள் எல்லாம் சொன்னவுடன், எல்லாருக்கும் ரொம்ப பிடிச்சு போச்சு. இப்பவே ஒரு ட்ரயல் பாக்கலாமா?னு ஒரு கூட்டம், தோள் தட்டியது. சரி தான்! கிழிஞ்சது க்ரிஷ்ணகிரி!னு ரொம்ப கஷ்டப்பட்டு மதியம் வரை பொறுத்திருக்க சொன்னேன்.

எல்லா பிராஜக்ட் வேலைகளையும், சரி சமமா, எல்லாருக்கும் அஸைன் பண்ணிட்டு, இருக்கருதுலயே கஷ்டமான வேலையை எனக்கு எடுத்துக் கொண்டேன்.

அது தானே ஒரு நல்ல தலைக்கு அழகு! அது என்ன வேலைனு சொல்ல மறந்துட்டேனே! பிளாக் எழுதற/படிக்கற வேலை தான் அது! ( நீங்க காறி துப்புவீங்கனு எனக்கு தெரியும்)

ஒரு வழியா, டீம் மீட்டிங்க் முடிவடைந்தது!னு சொல்லி சங்கத்தை கலைத்தேன். இவ்ளோ கூத்து நடந்தும், பெரிய தலைகள் எல்லாம் அவா, அவா கேபினை விட்டு வெளியே வரவேயில்லை. அவாளும் என்னை மாதிரி பிளாக் எழுதரா போலிருக்கு!

என் டெக்னிக் நல்லவே வொர்க்கவுட் ஆச்சு. இத முடிக்க 2 நாள் ஆகும்னு டகால்டி காட்டும் பசங்க எல்லாம் அரை நாளுல முடிச்சுடாங்க. எப்பவுமே ஓப்பி அடிக்கும் குல்டி ஜிகிடிகள் எல்லாம் 2 நாள் வேலையை சேர்த்து முடிச்சுடுத்து.

அப்புறம் என்ன, மதியம் லஞ்ச் முடிஞ்சதும், ஒரே கூத்து தான்.

இத பாத்துட்டு, பக்கத்து டீம்ல பல பேர் (ஜிகிடிகள்னே வாசிக்கலாம், தப்பில்லை), எங்களையும் ஆட்டதுல சேர்த்துக்க சொல்லு!னு சின்ன புள்ள தனமா காங்கிரஸ் மாதிரி ரசகுல்லா மூலமா என்னிடம் தூது விடும் படலம். (ரசகுல்லா விடு தூதுனு புற நானூறுல ஒரு கவிதை வரலாம் எதிர்காலத்தில், யாரு கண்டா!)

எதுனாலும், யாருனாலும், நான் பொது குழுவை கூட்டி தான் ஒரு முடிவு எடுப்பேன்னு பந்தாவா சொல்லிட்டேன்.

ஆட்டம் ரொம்ப சுவாரஸ்யமா நடந்துண்டு இருக்கும் போது, பத்ரகாளியிடம் இருந்து போன். பிராஜக்ட் எப்படி போகுதுனு விசாரிப்பு. சூப்பரா போகுது தாயே! ஒன்னும் அவசரம் இல்லை, உன் கொழந்தைக்கு மொட்டை அடிச்சு, மறுபடி முடி வளர்ந்ததுக்கு அப்புறமா நீ வந்தா போதும், அவசரப்பட்டு பிளைட்டுல எல்லாம் வந்துடாதே! ரயிலுல வந்தா போதும்!னு பவ்யமா சொல்லிட்டேன்.

Ofcourse, we are not doing anything against our company policy. Yeeh, we are just "Applying thoughts".