Part-1, Part-2
நீங்கள் அணிந்து இருக்கும் ஸ்வெட்டர்/ஜெர்கினை வைத்தே பெண்களூருக்கு வந்து எத்தனை காலம் ஆனது?னு சொல்லி விடலாம்.
1) ஜெர்கின் முழு ஜிப்பும் கழுத்து வரை போட்டு குணா கமல் மாதிரி மங்கி தொப்பி போட்டு இருந்தால் இங்கு காலடி வைத்து சில தினங்களே ஆகி உள்ளது.
2) ஜெர்கின் ஜிப்பை போடாமல் டூயட் காட்சியில் வரும் விஜயகாந்த் மாதிரி காட்சி அளித்தால் சில வாரங்கள் கடந்து விட்டீர்கள்.
3) என்னாது? ஜெர்கினே போடலையா? இங்க வந்து ஒரு வருடம் ஆச்சோ?
4) ஸ்லீவ்லெஸ்ஸா..? வேணாம்! நான் வாய தொறக்கறதா இல்லை.
நானும் இப்படி தான் நல்ல குளிர் காலம் ஆரம்பிக்கும் நவம்பரில் ஹாயாக புதிய வானம்! புதிய பூமி!னு பெண்களூர் வந்திறங்கினேன். எங்கெங்கு காணினும் ஒரே பிகர் மயமடா!
மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம்!
பிகரில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்!னு அந்த காலத்துலேயே சும்மாவா பாடி வெச்சுருகாங்க.
ஊரை சுத்தி எக்கசக்க அனுமார் கோவில்கள். பஸ் ஸ்டாப்பில் நாம் கொஞ்ச நேரம் அசையாமல் உட்கார்ந்து இருந்தால் கூட, அனுமார் கோவிலாக்கி விடுவார்கள். சங்கடஹர சதுர்த்திகளில் (பவுர்ணமியில் இருந்து நாலாம் நாள்) பேச்சிலர்கள் இரவு உணவுக்கு ஓட்டல்களுக்கு செல்வதில்லை. ஏனெனில் அன்று இந்த ஊர் பிள்ளையார் கோவிலில்களில் தடபுடலாக பூஜை நடத்தி சுட சுட வெண்பொங்கல், புளியோதரை, கொண்டகடலை சுண்டல் என அமர்களப்படுத்துகிறார்கள். எந்த சாமியா இருந்தா என்ன? மக்கள் வயிற்றுப் பசியை தீர்ப்பதே பெரிய புண்யம் தானே? உண்டி குடுத்தோர் உயிர் குடுத்தோர் அன்றோ? (ஒரு காலத்தில் வாங்கி சாப்பிட்ட பொங்கலுக்கு எவ்ளோ கூவனுமோ கூவியாச்சு) :)
உணவு முறைன்னு பாத்தா ஒரு இட்லிக்கு ஒரு பிளேட் சாம்பார் மாதிரி ஒரு திரவம் குடுக்கறாங்க. பெண் பாக்கும் போது கொடுக்கற கேசரிய தாராளமா ஒரு பிளேட் கேசரிபாத்னு தராங்க.
எரிச்சல் தரகூடிய ஒரு விசயம் என்னனா நூத்துக்கு எழுபது பேர் (அதுல அறுபது பேர் கன்னடர்கள்) வாயில் பான்பராக் போன்ற ஒரு லாகிரி வஸ்துவை போட்டு மெல்வது.
கன்னட திரைப்பட துறை பண்ணும் காமடிக்கு அளவே கிடையாது. எந்த மொழி படங்களும் அப்படியே டப் செய்ய மாட்டார்களாம். ஆனா ஒரு தமிழ் படம் விடாம ரீமேக் செய்து ரிலீஸ் செய்து விடுவார்கள். அதிலும் மறைந்த விஷ்ணுவர்த்தன், சரத்குமார் படங்கள் எல்லாத்தையும் காப்பி அடித்து தானே அப்பா சரத், தாத்தா/பேரன் சரத், பெரியப்பா/சித்தப்பா சரத்னு எல்லா ரோல்களிலும் வந்து இம்சை படுத்துவார்.
உதாரணமாக நம்மூர் நாட்டாமை படத்தை இங்க சிம்ஹாத்ரி சிம்ஹா!னு காப்பி பேஷ்ட் பண்ணி விஜயகுமார் ரோலிலும் வி-வர்த்தனே கையில் கிராபிக்ஸ் உதவியுடன் செல்ல பிராணியாக ஒரு சிங்கத்துடன் திரையில் வந்து விட்டார்.
நடுரோட்டில் நின்று கொண்டு மஞ்சுநாத்/பரமேஷா/மஞ்சுளா/ராஜ்குமார் இந்த நாலு பெயரில் ஏதாவது ஒன்னை சொல்லி கூப்பிட்டால் குறைஞ்சது ஐம்பது பேராவது திரும்பி பார்ப்பார்கள்.
மக்களுக்கு கடவுள் பக்தி ரொம்ப்ப ஜாஸ்த்தி. எல்ல கன்னடியர்களும் மூக்கு ஆரம்பிக்குமிடத்தில் ஒரு குங்கும பொட்டு வைத்திருப்பார்கள். கன்னடம்/ராஜ்குமார்னு நீங்க கொஞ்சம் சத்தம் போட்டு பேசினால் மிக்ஸி விளம்பரத்தில் சொன்ன மாதிரி தர்ம அடிக்கு நான் கியாரண்டி.
கன்னட மக்கள் அடிப்படையில் பார்த்தால் அன்பானவர்கள். உதவும் மனப்பான்மை மிக்கவர்கள். ஆனால் நம்மைப் போலவே எளிதில் உணர்ச்சி வசபடுபவர்கள். இதனை இங்குள்ள அரசியல்/இன சக்திகள் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். ம்ம், இக்கரைக்கு அக்கரை மஞ்சள், சாரி, பச்சை. :))
இந்தியாவிலேயே அதிக விலைக்கு பெட்ரோல் விற்கபடுவது இங்கு தான்.
ஆசியாவிலேயே அதிகமான பப்புகள் இருப்பதும் இங்கு தான். (பப்புனா குழந்தைக்கு ஊட்டும் பப்பு சாதம் அல்ல).
நூற்றுக்கு தொன்னூறு சதவீத பெண்கள் லிப்ஸ்டிக் அடித்துக் கொள்கிறார்கள். பத்து சதவீதம் பேர் அன்றைய தினம் லிப்ஸ்டிக் தீர்ந்து போனதால் மறுபடியும் வாங்க கடைகளில் நிற்கிறார்கள்.
தென்னிந்தியாவிலேயே அதிக பிகர்கள் இருக்கும் சிட்டியும் இது தான்!னு கைபுள்ள என்கிட்ட ரகசியமா சொன்னார். கேரளாவை அவர் கணக்குல சேர்க்க வில்லை என்று எண்ணுகிறேன். ஆயிரம் இருந்தாலும்... (சரி இதுக்கே மண்டகபடி இருக்கு எனக்கு).
சராசரியாக ஒரு நாளைக்கு பத்து பேர் தங்கள் வேலையை ரீசைன் செய்து விட்டு வேற கம்பனிக்கு மாறுகிறார்கள். ஆனா புடுங்க போவது என்னவோ ஒரே வகை ஆணியை தான்.
இங்கு மக்களுக்கு எரிச்சல் தரக்கூடிய ஒரு பெரிய விஷயம் டிராபிக் நெரிசல் தான். எல்க்ட்ரானிக் சிட்டி, ஐடிபிஎல் செல்லும் கம்பனி பேருந்துகளிலேயே பெரும்பாலும் பிராஜக்ட் ஸ்டேடஸ் மீட்டீங்கை நடத்தி முடித்து விடுகிறார்கள். சிலர் இன்னும் ஒருபடி மேலே போய் அடுத்த கம்பனி பஸ்ஸில் தமது பயோடேட்டாவை குடுத்து ஒரு வாரத்தில் பஸ் மாறி விடுகிறார்கள். அந்த அளவுக்கு டிராபிக் நெருக்கடி உள்ளது. டிசம்பர் 2010ல கிழக்கே போகும் மெட்ரோ ரயில் வரும்னு சொல்றாங்க, பாப்போம், நம்பிக்கை தானே வாழ்கை.
பெங்களுரில் தவிர்க்க வேண்டிய நபர்கள்:
1) கின்டர் கார்டன் ஸ்கூல் நடத்துபவர்கள். சில பள்ளிகளில் பெற்றோருக்கு பஞ்சாமிர்தமும் குடுத்து மொட்டையும் போட்டு விடுகிறார்கள்.
2) ரியல் எஸ்டேட்காரர்கள்: பெரும்பாலும் ரெட்டிகளே! ஆனால் பலே கெட்டிகாரர்கள். கணக்கு போட்டு பாத்தா கார் பார்கிங்குக்கா இவ்ளோ லோன் போட்டு குடுத்தோம்?னு தோணும்.
3) மெகா மால்காரர்கள்: தோலிருக்க சுளை முழுங்குவதில் டாக்டர் பட்டம் பெற்றவர்கள். ஒரு பாப்கார்ன் பாகெட்டை நாப்பது ரூவாய்க்கு விற்று விடுகிறார்கள். நீ எதுகுய்யா வாங்கற?னு தான் நானும் கேக்கறேன்.
இதுவும் கண்டவர் விண்டிலர்! கதை மாதிரி தான் போலிருக்கு.
இவ்ளோ சங்கடங்கள் இருந்தாலும் இந்த ஊருக்கே உரித்தான வானிலை அடடா! ஆனா சம்மரில் இங்கும் வெய்யில் கொளுத்தத் தான் செய்கிறது.
சென்னையை விட ஆணி புடுங்க சம்பளம் தாராளமா தராங்க. செலவும் ஜாஸ்தியா தான் இருக்கு என்பது வேற விஷயம். சில விஷயங்களை ஆராயகூடாது, அனுபவிக்கனும். (அப்பாடி, மாரல் ஆப் தி பதிவு சொல்லியாச்சு!)
Showing posts with label ஊர் வம்பு. Show all posts
Showing posts with label ஊர் வம்பு. Show all posts
Tuesday, February 17, 2009
மதுரை
பெங்களூரில் இருந்து மதுரைக்கு செல்லும் ஒன்னே ஒன்னு! கண்ணே கண்ணு டிரெயினில் லல்லு பிரசாத் யாதவுக்கு மட்டுமே டிக்கட் கிடைக்கும் போலிருக்கு. ஒரு மாதம் முன் கூட்டியே ஆன்லைனில் டிக்கட் நிலவரம் பார்த்தால் வெய்டிங்க் லிஸ்ட் என பல்லிளிக்கிறது.
மதுரை - தென் தமிழகத்தின் தலை நகரம். இரவு பன்னிரெண்டு மணிக்கு கூட சுடசுட இட்லியும், தொட்டுக்க மூனு வகை சட்னிகளும், போதாகுறைக்கு தளதளவென கொதிக்கும் சாம்பாரும் தந்து, நல்லா பிணைஞ்சுச் சாப்டுங்கண்ணே! காசில்லாட்டி நாளைக்கு தாங்க!என பாசத்தை போதிக்கும் உறங்கா நகரம். தென் மாவட்ட மக்களுக்கு ஏதெனும் கேஸ், வாய்தான்னாலும் மதுரை தான். வெட்டு குத்து கேசில் ஆஸ்பத்திரி என்றாலும் மதுரை தான்.
இங்கு பல விஷயங்கள் பேசி தீர்க்கபடுகின்றன, சில விஷயங்கள் தீர்க்கப்பட்டு பேசப்படுகின்றன.
இங்குள்ள மக்களுக்கு வாக்கும்,கையும் ரொம்பவே சுத்தம். மதுரை மல்லி, ஜில் ஜில் ஜிகர் தண்டா, முருகன் இட்லி கடை, தமிழ் மாதங்களின் பெயர்களில் வீதிகள் என தனக்கே உரிய சிறப்புடன் திகழ்வது மதுரை தான்.
மதுரை மீனாட்சி அம்மனை தம் வீட்டுப் பெண்ணாகவே பாவிக்கின்றனர். நீ பண்றது கொஞ்சம் கூட நல்லாயில்ல, உன் மனசுல என்ன தான் நினச்சுட்டு இருக்க?ன்னு மீனாட்சி கோவிலில் என் அருகில் இருந்த ஒரு அம்மா மிக இயல்பாக அம்மன் சன்னதியை பாத்து கேக்க எனக்கு அது ஒன்றும் வியப்பாக இல்லை.
ஏப்ரல் எட்டாம் தேதி கும்பாபிஷேகத்துக்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது மீனாட்சி கோவில். இப்போதெல்லாம் டூரிஸ்ட் கூட்டம் ரொம்பவே அதிகம். கோவிலை சுற்றி இருக்கும் வீதிகளை சிமெண்ட் தளம் அமைத்து வாகனங்கள் நுழையாதவாறு செய்து விட்டனர். உருப்படியான விஷயம். அப்படியே பொற்றாமரைக் குளத்தையும் தூர் வாரினால் நல்லா இருக்கும்.
மதுரையிலும் மெல்ல மெல்ல அப்பார்ட்மெண்ட் கலாச்சாரம் அடி எடுத்து வைத்து இருக்கிறது. இன்னும் டைடல் பார்க் வேற வரப் போகுதாம். வரிசையாக மால்கள், நாப்பது ரூபாய்க்கு ஒரு பாக்கெட் பாப்கார்ன், ஐநாக்ஸ் எல்லாம் வந்து விடும். மீனாட்சி தான் காப்பாத்தனும்.
எதிரியை ஓட ஒட விரட்டியவரே! தென் மண்டல தளபதியே! நாளைய நாடாளுமன்றமே! ( நல்ல வேளை, ஜனாதிபதி மாளிகையை விட்டு வெச்சாங்க), எதிரிகளுக்கு பட்டை நாமம் சாத்தியவரே! எதிர்கால சிம்மாசனமே! - இதெல்லாம் அஞ்சா நெஞ்சரை போற்றி ஒட்டப்பட்ட போஸ்டர்கள் தான். சும்மாவா? சங்கம் வெச்சு தமிழ் வளர்த்த மதுரையாச்சே!
மதுரைக்கு போகும் போது பஸ்ஸில் போக்கிரி படம் போட்டார்கள். ஏதோ அசினுக்காக படத்தை பாத்தாச்சு. திரும்பி வரும் போது கன்டக்டருக்கு என்ன தோணியதோ டபக்குனு வில்லு பட டிவிடியை போட்டு விட்டார். என்ட்ரி சாங்குல ராமன் கிட்ட வில்லை கேட்டேன், பீமன் கிட்ட கதய கேட்டேன்னு வரிசையா இளைய தளபதி அடுக்கிக் கொண்டே போக, டக்குனு ஒரு பெரியவர், ஏம்பா! இனிமே டைரக்டர் கிட்ட கதைய கேளுப்பா முதல்ல!னு சத்தமா சொல்ல பஸ் முழுக்க சிரிப்பொலி. மதுரைகாரங்க நக்கல் நையாண்டி, குசும்புக்கு ரொம்பவே பெயர் பெற்றவர்கள் என சொல்வது உண்மை தானே?
மதுரை - தென் தமிழகத்தின் தலை நகரம். இரவு பன்னிரெண்டு மணிக்கு கூட சுடசுட இட்லியும், தொட்டுக்க மூனு வகை சட்னிகளும், போதாகுறைக்கு தளதளவென கொதிக்கும் சாம்பாரும் தந்து, நல்லா பிணைஞ்சுச் சாப்டுங்கண்ணே! காசில்லாட்டி நாளைக்கு தாங்க!என பாசத்தை போதிக்கும் உறங்கா நகரம். தென் மாவட்ட மக்களுக்கு ஏதெனும் கேஸ், வாய்தான்னாலும் மதுரை தான். வெட்டு குத்து கேசில் ஆஸ்பத்திரி என்றாலும் மதுரை தான்.
இங்கு பல விஷயங்கள் பேசி தீர்க்கபடுகின்றன, சில விஷயங்கள் தீர்க்கப்பட்டு பேசப்படுகின்றன.
இங்குள்ள மக்களுக்கு வாக்கும்,கையும் ரொம்பவே சுத்தம். மதுரை மல்லி, ஜில் ஜில் ஜிகர் தண்டா, முருகன் இட்லி கடை, தமிழ் மாதங்களின் பெயர்களில் வீதிகள் என தனக்கே உரிய சிறப்புடன் திகழ்வது மதுரை தான்.
மதுரை மீனாட்சி அம்மனை தம் வீட்டுப் பெண்ணாகவே பாவிக்கின்றனர். நீ பண்றது கொஞ்சம் கூட நல்லாயில்ல, உன் மனசுல என்ன தான் நினச்சுட்டு இருக்க?ன்னு மீனாட்சி கோவிலில் என் அருகில் இருந்த ஒரு அம்மா மிக இயல்பாக அம்மன் சன்னதியை பாத்து கேக்க எனக்கு அது ஒன்றும் வியப்பாக இல்லை.
ஏப்ரல் எட்டாம் தேதி கும்பாபிஷேகத்துக்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது மீனாட்சி கோவில். இப்போதெல்லாம் டூரிஸ்ட் கூட்டம் ரொம்பவே அதிகம். கோவிலை சுற்றி இருக்கும் வீதிகளை சிமெண்ட் தளம் அமைத்து வாகனங்கள் நுழையாதவாறு செய்து விட்டனர். உருப்படியான விஷயம். அப்படியே பொற்றாமரைக் குளத்தையும் தூர் வாரினால் நல்லா இருக்கும்.
மதுரையிலும் மெல்ல மெல்ல அப்பார்ட்மெண்ட் கலாச்சாரம் அடி எடுத்து வைத்து இருக்கிறது. இன்னும் டைடல் பார்க் வேற வரப் போகுதாம். வரிசையாக மால்கள், நாப்பது ரூபாய்க்கு ஒரு பாக்கெட் பாப்கார்ன், ஐநாக்ஸ் எல்லாம் வந்து விடும். மீனாட்சி தான் காப்பாத்தனும்.
எதிரியை ஓட ஒட விரட்டியவரே! தென் மண்டல தளபதியே! நாளைய நாடாளுமன்றமே! ( நல்ல வேளை, ஜனாதிபதி மாளிகையை விட்டு வெச்சாங்க), எதிரிகளுக்கு பட்டை நாமம் சாத்தியவரே! எதிர்கால சிம்மாசனமே! - இதெல்லாம் அஞ்சா நெஞ்சரை போற்றி ஒட்டப்பட்ட போஸ்டர்கள் தான். சும்மாவா? சங்கம் வெச்சு தமிழ் வளர்த்த மதுரையாச்சே!
மதுரைக்கு போகும் போது பஸ்ஸில் போக்கிரி படம் போட்டார்கள். ஏதோ அசினுக்காக படத்தை பாத்தாச்சு. திரும்பி வரும் போது கன்டக்டருக்கு என்ன தோணியதோ டபக்குனு வில்லு பட டிவிடியை போட்டு விட்டார். என்ட்ரி சாங்குல ராமன் கிட்ட வில்லை கேட்டேன், பீமன் கிட்ட கதய கேட்டேன்னு வரிசையா இளைய தளபதி அடுக்கிக் கொண்டே போக, டக்குனு ஒரு பெரியவர், ஏம்பா! இனிமே டைரக்டர் கிட்ட கதைய கேளுப்பா முதல்ல!னு சத்தமா சொல்ல பஸ் முழுக்க சிரிப்பொலி. மதுரைகாரங்க நக்கல் நையாண்டி, குசும்புக்கு ரொம்பவே பெயர் பெற்றவர்கள் என சொல்வது உண்மை தானே?
Subscribe to:
Posts (Atom)