Showing posts with label Mokkai. Show all posts
Showing posts with label Mokkai. Show all posts

Friday, May 09, 2008

சென்ஷி அண்ணணுக்கு ஒரு கடிதம்(09/05/2008)

//இது சும்மா இட்லிக்கு மாவு ஆட்டிக்கொடுத்துட்டு சாப்டப்புறம் பாத்திரம் கழுவி வைக்குற வேலை இல்ல.. பின்னூட்டம்.//

இட்லிக்கு மாவட்டறதுன்னா சும்மா இல்ல, முந்தின நாளே சரியா எட்டு மணி நேரத்துக்கு முன்னாடி அரிசிய ஊற போட்டனும், 1 மணி நேரத்துக்கு முன்னாடி உளுந்த ஊற போடனும். அதுவும் கருப்பு உளுந்தா இருந்தா களையற வேலை வேற எக்ஸ்ட்ரா.


அப்புறம் இஷ்ட தெய்வத்தை கும்பிட்டு(அட இட்லி பஞ்சு போல வரனும் இல்ல) கிரைண்டரை முதல்ல லேசா கழுவி, மெதுவா ஓட விட்டு கொஞ்சம் கொஞ்சமா அரிசிய முதல்ல போடனும். உளுந்த போட்டா மாவு காலி. மொத்தமா அரிசிய அரைக்க போட்டா கிரைண்டர் சண்டித்தனம் பண்ணி நின்னுடுமாக்கும். நான் சொல்றது சாய்வு வகை கிரைண்டர். குழவி கல்லு கிரைண்டர்னா எடுத்து அலம்பி வைக்கறதுக்குள்ள தாவு தீர்ந்துடும். பத்து நிமிஷத்துக்கு ஒரு முறை கொஞ்சம் கொஞ்சமா தண்ணி விடனும். நைசா வரனுமில்ல.

நாப்பதஞ்சு நிமிஷம் அரச்ச பிறகு அரிசிய வழிச்சு எடுக்கனும்.


அப்புறம் உளுந்து. ஓவரா தண்ணி காட்டினா நாள் முழுக்க நீங்க உளுந்து மட்டும் தான் அரச்சுட்டு இருக்கனும். சன் மீயூசிக்குல ஹேமா சிம்ஹாவை பாத்து மெய் மறந்து, தண்ணி விட மறந்தீங்கன்னா கிரைண்டரில் இருந்து உளுந்து உருண்டை எடுக்கலாம்.

இத எல்லாத்தையும் விட மெயின் மேட்டர், நீங்க மாவாட்டும் சுபயோக சுப நேரத்தில் மின்சாரம் இருக்கனும். நடுவுல புடுங்கிகிச்சுனா மின்சாரம் வர வரைக்கும் தேவுடு காக்கனும். டிவியும் பாக்க முடியாது. ரீப்பீட்ட்ட்யேயும் போட முடியாது.


அப்புறம் தான் மெயின் மேட்டர்:
சரியான விகிதத்துல உப்பு போடனும். எல்லாம் முடிஞ்சு உடனே தூக்கி பிரிஜ்ஜுல வெச்சுடகூடாது. அரை நாள் வெளியே வெச்சா மாவு பொங்கி பாத்ரம் நுனி வரை வரும். அதனால் கொஞ்சம் பெரிய பாத்ரத்துல தான் மாவை சேமிச்சு வைக்கனும். இல்லாட்டி வீட்டை மறுபடி சுத்தம் பண்ற வேலை வேற.

அடுத்த நாள் இட்லி வார்க்கும் படலம் ஆரம்பமாகுது.

இட்லி அடுக்குகளில் லேசா நல்லேண்ணைய தடவிட்டு, ஒரு கரண்டி மாவை விட்டு, கேஸ் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து விட்டு இப்ப நீங்க டிவி பாக்கலாம். அவசரபட்டு முன்னாடியே இட்லி அடுக்கை தொறந்தா அரிசி மாவு களி தான் கிடைக்கும், இட்லி கிடைக்காது.

இப்ப சொல்லுங்க, கஷ்டப்பட்டு மேட்டர் சேகரிச்சு டாமேஜர் இல்லாத நேரமா பதிவ தட்டி, பின்னூட்டத்துக்கு தேவுடு காத்து கிடந்தா, நீங்க சாவகாசமா வந்து வெறும் ரீப்பிட்டேய்ய்ய்ய் (இதுக்கு தமிழாக்கம் எல்லாம் மிக அருமையா மிஸ்டர் புதசெவி குடுத்து இருக்காரே, பாக்கலையா?) மட்டும் போட்டுட்டு போவீங்களாக்கும்? எந்த ஊர் நியாயம்ண்ணே? :))

டிஸ்கி#1: இந்த பதிவின் உட்பொருள், வெளிபொருள் எல்லாம் கேட்டு குடைய கூடாது.
டிஸ்கி#2: இதுக்கும் மேல ஏதாவது சந்தேகம்னா கைபுள்ளையை தொடர்பு கொள்ளவும். :))

Friday, April 11, 2008

ரெண்டுக்குள்ள உலகம் இருக்கு ராமையா!

இந்த இரண்டு என்ற எண் இருக்கே! சராசரி மனிதன் முதல் சன்யாசி வரை எல்லோர் வாழ்க்கையிலும் ஒரு நீங்கா இடம் பிடித்து விடுகிறது. இன்பம்-துன்பம், பகல்-இரவு, பிறப்பு-இறப்பு, வானம்-பூமி, ஆண்-பெண், இளமை-முதுமை, சூரியன் - சந்திரன், நட்பு-பகை, தேவன் - சாத்தான், அகம்-புறம், சரி-தவறு, இந்த லிஸ்ட் போயிண்டே இருக்கும்.

அட உணவுல கூட பாருங்க நீங்க சைவமா? அசைவமா?னு தான் கேக்கறாங்க. சரி உணவை விட்டு தள்ளுங்க, ஆன்மிகத்துல ஜீவாத்மா-பரமாத்மானு த்வைதம் சொல்லுது. ஜீவன் பரமாத்மாவிலே அடக்கம்னு அத்வைதம் சொல்லுது. (எல்லாம் இந்த கேஆரெஸ் அண்ணன் பெங்களூர் விஜிட்டின் மகிமை.)

அரசியலுல பாருங்க, அது பிரிட்டீஷ் நாட்டுல இரண்டு கட்சி ஆட்சி முறை தான், இங்க தமிழ் நாட்டுலயும் அதே கதி தான்! அடிக்கடி காமராஜர் ஆட்சி அமைப்போம்!னு ஒரு கோஷ்டி காமெடி பண்ணும், அத எல்லாம் கண்டுக்கபடாது. :)

சினிமா துறைய எடுத்துகோங்க, தியாகராஜ பாகவதர் - பி.யூ.சின்னப்பா, சிவாஜி-எம்ஜிஆர், ரஜினி-கமல், என எல்லாமே ரெண்டு தான். ஹிரோக்களை சொல்லிட்டு மகளீர் பத்தி ஜொள்ளியே ஆகனும்னு நான் பாவனா - நயன்தாரானு ஷ்டார்ட் மீஜிக் போட்டால் வீட்ல சாம்பாரில் உப்பு அதிகரிக்க கூடிய சாத்தியங்கள் இருப்பதால், அந்த அரிய பணியை உங்களிடமே விட்டுவிடுகிறேன்.

சலசல! சலசல! ரெட்டைகிளவி தமிழில் உண்டல்லோ?னு ஐஸ் குட்டியே ஜீன்ஸ் படத்துல திருவாய் மலர்ந்திருக்காங்களே! (இன்னிக்கு சாம்பாரில் தெரியும் இந்த வரியின் தாக்கம்)

சினிமா காமடில ஒரு பழம் இந்தா இருக்கு! இன்னோரு பழம் எங்கே?னு கேட்ட அந்த காமடிய நம்மால மறக்க முடியுமா?
என்ன இப்ப எல்லாம் ரெட்டை அர்த்த வசனங்களில் வரும் நகைச்சுவைகளை சகித்து கொள்ள வேண்டி இருப்பது வருந்ததக்க விஷயமே!

சினிமால டபுள் ஆக்க்ஷன் படங்கள் சக்கை போடு போட்டு இருக்கு. எங்க வீட்டு பிள்ளை, கெளரவம், வாணி-ராணி, பில்லா, நாட்டாமைனு ஒரு பெரிய லிஸ்டே நீளும். ஆனா இப்ப எல்லாம் ஹீரோக்கள், அப்பா, பெரியப்பா, மகன், பேரன்னு சகட்டு மேனிக்கு எல்லா வேஷங்களையும் கலந்து கட்டி அடிக்கறாங்க. இதுனால் என்ன ஆகுது? இந்த அப்பா ரோலில் வரும் வி.எஸ்.ராகவன், பூர்ணம் விஸ்வ நாதன், மேஜர் சுந்தர்ராஜன் எல்லாம் பீல்ட் அவுட் ஆகி வீட்ல கோலங்கள் சீரியல் பாக்கற நிலைமை உருவாகிடுச்சு.

இசைத் துறையிலும் இந்த இரண்டு ஆதிக்கம் செலுத்திகிறது. கர்நாடக இசையில் ப்ரியா சகோதரிகள், கனேஷ்-குமரேஷ் (வயலின்), மான்டலின் ஷ்ரினிவாஸ்-ராஜேஷ்,மாம்பலம் சகோதரிகள், சூலமங்கலம், பாம்பே சகோதரிகள்னு எல்லாம் இரண்டு மயம் தான்.

(இன்னும் யாரையாவது மிஸ் பண்ணி இருந்தா பின்னூட்டதில் தெரிவிக்கலாமே!)

சினிமா இசையிலும் விஸ்வநாதன்-ராமமூர்த்தி, லக்ஷ்மிகாந்த்-பியாரேலால், சங்கர் கணேஷ், டைரக்டர்கள் ஜெடி-ஜெர்ரினு ரெண்டு ரெண்டா கலக்கி இருக்காங்க.

விளையாட்டு துறைய பாருங்க, டென்னிஸ்ல வீனஸ்-செரினா வில்லியம்ஸ் சகோதரிகள், கிரிக்கெட்டுல மார்க் வாக் - ஸ்டீவ் வாக்(ஆஸி), கிராண்ட் பிளவர்- ஆன்டி பிளவர்(ஜிம்பாவே)னு ரெண்டு ஆதிக்கம் செலுத்துகிறது.

உளவியல் ரீதியா சொல்லனும்னா, மனிதர்கள் எல்லோருக்குமே ரெண்டு முகங்கள் உண்டு. ஒன்னு சமூகத்தில் அவர்கள் காட்டும் முகம், மற்றது தனிப்பட்ட வாழ்க்கையில் காட்டும் முகம். கூடியவரை இந்த ரெண்டு வாழ்க்கையிலும் கோபம், பொறாமை, பேராசை,காம கசடுகள் இல்லாமல் பாத்து கொள்வது தனி மனிதனுக்கும், சமூகத்துக்கும் நல்லது. இல்லையா?

எதுக்குடா அம்பி இவ்ளோ பெரிய வில்லுபாட்டு?னு நீஙக கேக்கலாம்.

இந்த வ.வா.சங்கத்து இரண்டாம் ஆண்டு விழவுக்கு அவங்க அறிவிச்சு இருக்கற போட்டிக்கு தான் இந்த மொக்கை. அதானே! எலி ஏன் அம்மணமா ஓடுது?னு இப்ப புரிஞ்சுருக்குமே உங்களுக்கு.

ஆங்க்! சொல்ல மறந்துட்டேனே! வ.வா.சங்கம் ஏற்கனவே அறிவிச்சு இருந்த பிரம்ம ரச புகைப்பட போட்டிக்கு நான் அனுப்பி இருந்த படங்களில் எனது இரண்டாம் படத்துக்கு இரண்டாம் பரிசு அறிவிச்சு இருக்காங்க. (அட பாருங்க! இங்கயும் இரண்டு தான்).

Monday, March 31, 2008

பிரம்ம சாம்பார் குடிக்கலாம் வாங்க!

இந்த கூத்து தானே எல்லா ஆபிஸ்லயும் நடக்குது!

இது முழுக்க முழுக்க கற்பனையே! என இந்த தருணத்தில் நான் எதிர்கட்சிகளுக்கு சொல்லி கொள்கிறேன்.

என்ன டீச்சர்! சந்தோஷமா?

இது சத்யமா நானில்லை. நம்புங்க எஜமான்! :))

வ.வா சங்க போட்டிக்காக தான் இதேல்லாம்.

Wednesday, December 05, 2007

உள்ளேன் மக்களே!

அடுத்த பதிவு போட ரொம்பவே நாளாகி விட்டது, என்ன செய்ய, ஆபிஸ்ல மலை போல வேலை பளு.சரி, இப்படியே விட்டா நம்ம பிளாக் பாஸ்வேர்டே நமக்கு மறந்து விடும் போலிருக்கு. என்னத்தை எழுத?னு ஒரே யோசனை வேற.

பேசாம, ஒரு மொக்கைய போட்டு அதை நாலு நாலு வரியா பிரிச்சு எழுதி கவிதை!னு லேபிள் குடுத்ரலாமா? இல்லாட்டி, சன்/விஜய்/ஜெயா டிவிகளில் வரும் மெகா சீரியல் பாடல்களை "எனக்கு பிடித்த பாடல்"னு ஒரு பதிவு போட்ரலாமா? இல்லாட்டி
"அ முதல் ஃ தானடா!
என் அக்கா பொண்ணு கிக்கு தானடா!" என்ற செந்தமிழ் பாடல் வரிகளை பதிவா போடலாமா?னு ஒரே குழப்பம்.

எனக்கு தான் மேட்டர் பஞ்சம்னு பாத்தா இந்த சாட்டிலைட் சானல்களுக்கும் இதே கதி தான் போலிருக்கு. எந்த டிவிய திருப்பினாலும் ஏதோ ஒரு க்ரூப் மேடையில் ஆடுகிறார்கள், அல்லது மைக்கை பிடித்து கொண்டு பாடுகிறார்கள். அதுக்கு நடுவரா ஒரு நாலு பேர் - மார்கட் போயே போன நடிகை, போனா போறதுனு ஒரு இளிச்சவாய டான்ஸ் மாஸ்டர்/பாடகர்/இசையமைப்பாளர் என அல்லோலபடுகிறது.

இதில் கலைஞர் டிவியில் வரும் நடன நிகழ்ச்சிக்கு நமீதா நடுவராய் வருவதால் எங்கள் வீட்டில் அந்த நிகழ்ச்சி நிரந்தரமாய் தடை செய்யப்பட்டு அதற்க்கு மாற்றாக பொதிகையில் வரும் வயலும் வாழ்வும் ஒளிபரப்ப படுகிறது. இதுக்கு நான் கார்ட்டூன் சானலே மேல்!னு சமரச உடன்பாடு செய்து கொண்டு விட்டேன்.

இடைப்பட்ட கேப்பில், பிறந்த நாள் எல்லாம் வந்து போனது. நேத்து நடந்த மாதிரி இருக்கு. போன வருடம் இதே நாளில் தான் சுடச்சுட கேசரி சாப்பிட போனேன். ஹிஹி, தங்கமணியையும் பார்த்தேன்.

இந்த குழந்தையையும் மறக்காமல், கைபுள்ளை, வல்லி சிம்ஹன், பிலாக்கேஸ்வரி, கீதா பாட்டி போன்றவர்கள் போனிலும், மெயிலிலும் வாழ்த்தினார்கள். மிகவும் சந்தோஷம். தலப்பிறந்த நாளுக்கு எங்க அண்ணன் பெயரை சொல்லி வெயிட்டா அவருக்கு வேட்டு வைங்க மன்னி!னு பொற்கொடி வேலை மெனக்கெட்டு என் தங்கமணிக்கு மெயிலில் அட்வைஸ் வேற. என்னத்த சொல்ல?

இப்போதைக்கு இவ்ளோ மொக்கை போதும்.

விரைவில் எதிர்பாருங்கள் 2007 பிளாகர் அவார்டுகள்!

Monday, October 08, 2007

2007 - அல்வா அவார்டுகள்

இந்த வருடத்தில் மிகச் சிறப்பாக அல்வா கிண்டி கொடுத்தவர்கள் யார் யார்? என முதலில் பார்ப்போம். அவர்களில் மிகச்சிறந்த போட்டியாளரை 2007 - சிறப்பாக அல்வா கொடுத்தவராக தேர்ந்தெடுக்கபடுவார்.

போட்டியாளர்#1: மாறன் சகோதரர்கள்

கை வீசமா கை வீசு!
டெல்லிக்கு போகலாம் கை வீசு!
மந்திரியாகலாம் கை வீசு!னு ஆசை ஆசையாய் பாலூட்டி, சீராட்டி வளர்த்த தாத்தாவுக்கே சும்மா அரை கிலோ அல்வா கிண்டி குடுத்த பெருமை இந்த சகோதரர்களையே சாரும். கிளிக்கு றெக்கை முளைச்சு பறந்து போயிடுத்து!

போட்டியாளர்#2: முஷரப் - தி பாஸ்

நானே ராஜா!
நானே மந்திரி!
எனக்கொரு கவலையில்ல! என உற்சாகமாக பாடிகொண்டு ஒட்டுமொத்த பாகிஸ்தானுக்கும் அல்வா கொடுத்து கொண்டிருக்கும் முஷரப் இந்த போட்டியில் கலந்து கொள்ளா தகுதியானவரே!
நவாஸ் ஷெரீப் வந்திறங்கிய பிளைட்டுலேயே அவரை திரும்ப ஏத்தி, கராச்சிக்கு போகுது வண்டி!னு சொல்லிட்டு அரேபியாவுக்கு ஒட்டகம் மேய்க்க அனுப்பி, "இந்தா வெச்சுக்க அல்வா!"னு கிண்டி கொடுத்த முஷரப்பின் திறமையை பார்த்து பெரிய அண்ணாச்சி அமெரிக்கவே இன்னும் திறந்த வாயை மூடலையாம்!

போட்டியாளர்#3: தேவ கவுடா & குமாரசாமி

அப்பாவும் பிள்ளையும் கூட்டணி அமைத்து இருபது மாதங்களுக்கு முன்னால் காங்கிரசுக்கு சூப்பரா அல்வா குடுத்து விட்டு, பி.ஜேபியிடம் "உனக்கொரு வாய்! எனக்கொரு வாய்!னு ஆட்சியை பங்கு போட்டுகலாம், என்ன?னு சொல்லிட்டு, இப்ப என்னடானா பங்கா? எந்த பங்கு? எந்த ஆட்சி? "காக்கா தூக்கிண்டு போச்சு!"னு இந்த வருடத்தின் மெகா அல்வா குடுத்த தேவ கவுடா மற்றும் அவரது தவமாய் தவமிருந்து பெத்த பிள்ளை குமாரசாமி ரெண்டு பெரும் இந்த போட்டிக்கு லாயக்கானவர்களே!

போட்டியாளர்#4: சொம்பு மற்றும் பப்லு

விஜய் டிவில ஜோடி நம்பர் ஒன்னு!னு ஒரு புரோகிராம். மெகா சீரியலுல அழுத மூஞ்சிகள் எல்லாம் சோக்கா பவுடர் அடிச்சுண்டு, புது சொக்கா எல்லாம் போட்டுண்டு
"தாம் தக்கா!
தைய தக்க!"னு ஆட்டம் போடறாங்க.
அதுக்கு சொம்புவும் ஒரு நாட்டாமையாம்! (என்ன கொடுமை இது காணாம போன ஏஸ்?)
யப்பா! 9 மாசத்துலேயே நான் டான்ஸ் ஆடி, பிரசவம் பாத்த நர்ஸை கரக்ட் பண்ணினவனாக்கும்!னு சொம்பு விடற பில்டபுக்கு எல்லாம் உச்சகட்டமாக கடந்த வாரம் பப்லுவ பார்த்து என்ன ஆடற நீயி?னு வாய குடுக்க, "நான் ஆடவேயில்லை!னு சொம்பு சொல்லிடுச்சு!னு பப்லு குதிக்க, பாக்கற நாம மண்டைய பிச்சுக்க வெச்சுட்டானுங்க.
இதை பற்றி விரிவாக அறிய மலேசிய மாரியாத்தா சொல்றதை கேளுங்க.

எல்லாம் புரோகிராமை பேமஸ் ஆக்க அவங்க கிண்டி குடுக்கற அல்வா! நீங்க ஒழுங்கா சப்பாத்திக்கு மாவு பிசைங்க!னு தங்கமணி என் தலைல தட்டினதுக்கு அப்புறம் தான் நமக்கு பல்பு எறிய ஆரம்பிச்சது.

அட பாவிகளா! இதை பாக்கற நேரத்துல 10 சப்பாத்தி தோசை கல்லுல போட்டு எடுத்ருப்பேனே!

சரி, இவங்க தான் நம்ம போட்டியாளர்கள். இப்ப நீங்களே இதுல 2007 - மிக சிறந்த அல்வா கொடுத்தவர் யாரு?னு தேர்ந்தெடுங்க பார்க்கலாம்! :)

Wednesday, August 29, 2007

ஒரு அறிவிப்பு

என்னவோ நான் தான், கல்யாணத்துக்கு அப்புறம் என் தங்கமணியை எழுத விடலை!னு எதிர் கட்சிகள் சுமத்திய பழி இதோ தூள் தூளாகிறது.

என்னை "நல்லவன்! வல்லவன்! நாலும் தெரிந்தவன்!" என போற்றி புகழ்ந்து அம்மணி எழுதிய பதிவை பாரீர். (போய் பாருங்க, அப்புறம் தெரியும்).
அங்க போனோமா, பதிவை படிச்சோமானு இருக்கனும். ஐடியா குடுக்கற வேலை எல்லாம் வேணாம்! இப்பவே சொல்லிக்கறேன்.

இதேல்லாம் ஒரு பொழப்பா?னு மண்டகபடியை இங்கயும் ஆரம்பிக்கலாம்.

Tuesday, August 28, 2007

ரக்க்ஷா பந்தன் ஒச்சாயினு!

என் இனிய பதிவுலக பாச மலர்களாம் அக்கா, தங்கைகளுக்கு இனிய ரக்க்ஷா பந்தன் வாழ்த்துக்கள்.

கீழே படத்தில் அல்லாடி கொண்டிருப்பது எனது அருமை தம்பி, குவைத் புகழ், பக்கா திருடன் என செல்லமாக அழைக்கபடும் நமது சச்சின் கோப்ஸ் இல்லை! என நான் உறுதியாக கூறுகிறேன்.

*ahem, இரண்டாம் படத்தில் இருப்பது அம்பி தான்! என சில எதிர் கட்சிகள் புரளியை கிளப்பி விட்டு கொண்டிருக்கிறார்கள்.

அவர்களுக்கு எல்லாம் நான் ஒன்று சொல்லி கொள்கிறேன்.

ஆயிரம் பூரி கட்டைகளை பார்த்தும் தனது கொள்கையில்(என்னது?) உறுதியாக அஞ்சாமல் இருப்பான் இந்த அம்பி! :)


பிளாஷ் நியூஸ்: நமது மலேசியா மாரியாத்தா! காமடி குயின் "மை ஃபிரண்ட்" 'பாய்ஸ் புகழ்' சித்தார்த்தை தனது உடன் பிறவா சகோதரனாக ஏற்று கொண்டு ஒரு ராக்கி அனுப்பி உள்ளார்.

அதை தம்பி சித்தார்த்தும் தொல்லை விட்டது! என மிகவும் மகிழ்ச்சியாக ஏற்று கொண்டு விட்டார்! என்பதை நமது பிமுகவின் தகவல் தொடர்பு துறை உறுதி செய்கிறது. :)))


Wednesday, March 14, 2007

Pointers in C

உங்களுக்கு ஆபிஸில் ரொம்ப வேலை பளுவா?
ரெஸ்ட் எடுக்க ஒரு ரிஸர்ட் வேணுமா?
ஆணி பிடுங்கி பிடுங்கி சோர்ந்து விட்டீர்களா?

ஆமாம்பா ஆமாம்! என்பது உங்கள் பதிலாக இருந்தால் உடனே நீங்கள் போக வேண்டிய இடம் கிண்டியில் இருக்கும் TRC சாரின் அழகிய வீடு.

இந்த பக்கம் நிஜமான நாலு கால் குதிரைகள் ஓடும் ரேஸ்கோஸ் மைதானம், அந்த பக்கம் பசுமையான கோல்ப்(Golf) புல்வெளி.

ஒரு 2 நாளுக்கு தேவையான உடைகளுடன் போய் விடுங்கள். நல்லா ஒரு குளியல்(வென்னீரும் உண்டு) போட்டு, உமா மேடம் சமயலை ஒரு கட்டு கட்டி விட்டு அருகில் இருக்கும் சோபாவில் சாய்ந்து கொண்டு ஒரு குட்டி தூக்கம் போடுங்கள்.
பக்கத்துல இருந்து சார் ஏதாவது தொண தொணனு பேசினாலும் ஒன்னும் கண்டுக்க வேண்டாம்.
சாயந்தரம் ஏலக்காய் மணக்க டீயுடன் சமோசாவும் உண்டு. (எலேய் கொடி, எத்தனை சமோசாவை நைஸா அமுக்கின எனக்கு தராம?)
சாயந்தரம், அப்படியே ரிலாக்ஸ் பண்ணிக்க இந்த பீச், நாரத கான சபா எல்லாம் TRC சாரே கூட்டிண்டு போவார்.

மிகவும் ராசியான வீடு. பிளாகர் மாநாட்டில் கலந்து கொண்ட என் அருமை சகோதரி பொற்கொடிக்கு ஒரே மாதத்தில் டும் டும் டும்! எனக்கு 2 வது மாததில் தங்கமணி பிக்கப்பு! :)

அட! இப்பவே நிறைய பேரு கிளம்பறாங்க பாருடா! ஷ்யாம் நீ எங்க புறப்படற?
நான் சொல்வதில் சந்தேகம் இருந்தால் பக்கா திருடனையோ அல்லது வேதா(ளத்தை)வையோ கேட்டு பாருங்கள்.

இந்த கோடை விடுமுறையை கொண்டாடுங்கள் TRC சாரின் வீட்டில்.
பேஜர் கிடையாது, பேக்ஸ் கிடையாது. போனா வராது! கேட்டாலும் கிடைக்காது! உடனே முன்பதிவுக்கு முந்துவீர்!

என்னடா தலைப்புக்கும், பதிவுக்கும் சம்பந்தமே இல்லையே?னு நீங்க கேக்கலாம். தப்பில்லை.
இப்ப முஸ்தபா! முஸ்தபா! டொன்ட் வொரி முஸ்தபா! பாட்டுல எங்கே முஸ்தபா வரான்? நாம கேட்டோமா? அதே மாதிரி தான் இதுவும்.
கூகிள்ல யாராவது "Pointers in C"னு தட்டினா ஹிஹி நம்ம பிளாக்கும் அவன் கண்ணுக்கு படும். ஹேப்பியா எல்லா வேலையவும் மூட்டை கட்டி வெச்சுட்டு (பொற்கொடி மாதிரி) நம்ம பிளாக்கை படிப்பான். கமண்டும் விழும். இதுவும் ஒரு பிளாக் பிரமோஷன் டெக்னிக் தான். எப்புடி நம்ம டகால்டி...?

உடனே இதை பார்த்து எதிர்கட்சிகள்னு வரிசையாக
1) ASP .NET
2) C#
3) UNIX and LINUX in 30 Days போஸ்ட் போட வேண்டாம். ஏற்கனவே அதை எல்லாம் காப்பிரைட் வாங்கி வெச்சுருக்கோமாக்கும். :)
பி.கு: அடுத்த பதிவு நீங்கள் கும்மி அடிக்க ஆவலுடன் காத்திருக்கும் "பார்த்த முதல் நாளே!"