மைசூர் போகிற வழியில் ஸ்ரீரங்க பட்னம் என்ற அழகிய புதுமையும் பழமையும் கலந்த ஊர் உள்ளது. தமிழகத்தில் தஞ்சை வழியாக காவிரி ஸ்ரீரங்கத்து எம்பெருமாளின் காலை வருடிக் கொண்டு போவது போல இந்த ஊர் வழியாக தவழும் காவிரி இங்கு கோவில் கொண்டிருக்கும் பெருமாளின் திருவடியை தொட்டுக்கொண்டு செல்கிறது.
பெருமாள் அதே சயன கோலம் தான். வாக்காக கால் அமுக்கி விட தாயார் இருக்கும் போது தூக்கம் வராமலயா இருக்கும்? எனவே நமது வேண்டுதல்களை எல்லாம் தாயாரிடமே சொல்வது நலம். (சரி, உலா வரும் ஒளி கதிர் மாதிரி போகுது போஸ்ட்! அய்யே வேதா! நான் உங்கள சொல்லலை).
ஸ்ரீரங்க பட்னம் எம்பெருமாளின் கருட வாகனம் - பெரிய திருவடி (Air Force One )
இந்த கோவிலில் என்னை மிகவும் கவர்ந்தது இதன் கட்டிட கலை. (எவன்டா அவன்! புளியோதரை தானே?னு நக்கல் விடறது?). விஜய நகரத்து அமைப்பையும், முகலாயர்களின் சாயலும் நன்றாக தெரிந்தது. திப்பு சுல்தான் கூட மானியம், நகைகள் எல்லாம் வாரி வழங்கியதாக கல்வெட்டுக்கள் சொல்கிறது. வசூல் செய்வதில் பெருமாள் பலே கில்லாடி ஆச்சே! கோவில் கொஞ்சம் பராமரிக்கபடலாம். ஆனாலும் ரொம்ப மோசமாக இல்லை.
கோவில் வாயிலில் கணிணி தவிர எல்லாத்தையும் போட்டு விற்கிறார்கள். தாராளமாக பேரம் பேசலாம். வழக்கம் போல "அம்மா! தாயே! கைல இருக்கும் செல்போனையாவது தர்மம் பண்ணுங்க!" போன்ற தொல்லையும் உண்டு. குதிரை எல்லாம் சவாரிக்கு உள்ளது.
இது ஒன்னும் பஞ்சாப் குதிரை இல்லை!
இந்த ஊர் வருவதற்க்கு முன்னாலேயே திப்பு சுல்தானின் கோட்டை, சமாதி எல்லாம் உள்ளது.
மதியம் லஞ்சை நல்ல ஒரு ஹோட்டலில் சாப்பிட்டோம். நல்ல வேளை! "நான் தான் சமைச்சு கொண்டு வருவேன்!"னு டிடி அக்கா அடம் பிடிக்கலை. மைசூர் அரண்மனை பார்க்க கிளம்பினோம்.
இதற்க்கு முந்தைய அரண்மனை தீக்கிரையானதால் கிட்டத்தட்ட சுமார் 14 வருடங்களாக கடின உழைப்போடு 1897ல் கட்டி முடிக்கப்பட்ட இந்த அரண்மனைக்கான செலவு அந்த காலத்திலேயே 40 லட்சம் ரூபாய்.
கன்னட, சாளுக்ய, விஜய நகர, மொகலாய, ஆங்கிலேய கட்டிட கலைகளின் ஒரு கூட்டு கலவையாய் திகழ்கிறது இந்த அரண்மனை. திரும்பிய பக்கமெல்லாம் வண்ண வண்ண ஓவியமென்ன, பளபளக்கும் தரைகள் என்ன, மார்பிள்கள், கிரானைட்டுகள், பெல்ஜியம் கண்ணாடிகள், கலர்கலரான லஸ்தர், சாண்டில்யர் விளக்குகள், சந்தன/பர்மா/தேக்கில்/யானை தந்தத்தில் கதவுகள் என பார்க்கும் இடமெல்லாம் கலையும் செல்வ செழிப்பும் வழிந்தோடுகின்றன.
பல ஓவியங்கள் ரவிவர்மா தீட்டியது. அரண்மனை ஊர்வலங்கள், யானை மேல் அம்பாரி வைத்து ராஜா, ராணி, அவர்களின் ஜால்ராக்கள் ஊர்வலம், சாமுண்டி தேவியின் திருவீதி உலா, ராஜாவின் தர்பார் காட்சிகள் நம் கண் முன்னே விரிகிறது.
"ராஜாதிராஜ, ராஜ கம்பீர, ராஜகுல திலக, விஜய நரசிம்ம அம்பிராஜ உடையார் பராக்! பராக்!என நம்மை அந்த காலத்திற்கே அழைத்து செல்கிறது.
எனக்கு எதோ என் சொந்த அரண்மனைக்கே நுழைந்த மாதிரி ஒரு உணர்வு.
கீழே விஜய நரசிம்ம அம்பிராஜ உடையார் மற்றும் அவரது தம்பி உடையார்!
(சரி, சரி, துப்பறத்துக்கு தான் கமண்ட் செக்க்ஷன் இருக்கே! இப்பவே ஆரம்பிச்சா எப்படி?)
நானும் டிடி அக்காவின் ரங்கமணியும்! :)
அரண்மனை உள்ளே காமிரா கொண்டு செல்ல அனுமதி நஹி. ஆனால் காமிரா மொபைல் கொண்டு போகலாம். என்ன கொடுமை I'm not ACE? :)
உள்ளேயே ஒரு மியூசியம் உள்ளது. பெரிசா ஒன்னும் இல்லை. ராஜா சாபிட்ட தட்டு, சரக்கு அடித்த கண்ணாடி கோப்பைகள், உபயோகித்த வாள், வேல், உடுத்திய சிலுக்கு ஜிப்பாக்கள், பயணித்த பல்லக்கு, காலணிகள், அடித்து கொண்ட செண்டு, இத்யாதி.
ராணியிடம் அடி வாங்கிய பூரி கட்டையை ஏனோ காட்சிக்கு வைக்கவில்லை.
ராஜாவின் பட்டு மேலங்கியை "ராஜா கா கோமணம் ஹை!"னு ஒரு கைடு சில சப்பாத்திகளிடம் அள்ளி விட்டு கொண்டிருந்தான். அரண்மனையின் முக்யமான இடமான அந்தபுரம் எங்கே?னு நைசா தேடி பார்த்தேன். விவரமா பூட்டி வெச்ருக்காங்க.
என்ன தான் கலை, ஓவியம்!னு நாம பாராட்டினாலும், ஒரு தனி மனிதனுக்கா இவ்வளவும்?னு சாமனிய மக்களிடம் இருந்து வரும் விமர்சனத்தை தவிர்க்க முடியலை.
இவ்ளோ சிறப்பு பெற்று இருந்தாலும், இந்த ராஜ பரம்பரைக்கு ஒரு சாபம் உள்ளதே! இதை பற்றி நமது டிடி அக்கா வூட்டுல போயி பாத்துக்கோங்க. :)
அரண்மனை மாலை 6 மணிக்கு பூட்டி விடுவார்கள். நாங்கள் அங்கேயே ரொம்ப நேரம் செலவிட்டதால் சாமுண்டி ஹில்ஸ் போக முடியலை. வரும் வழியில் நெடுஞ்சாலையில் உள்ள காமத் ஓட்டலில் இரவு டிபனை அமுக்கினோம். மசால் தோசை சூப்பர்.
அம்பி: டிடி அக்கா! நாம ஒரு தப்பு பண்ணிட்டோம்!
டிடி: என்னடா சொல்ற?
அம்பி: நாம சாப்ட பில்லு கட்ட நம்ம பரணிய கூட்டிண்டு வந்து இருக்கலாம். :))