Wednesday, May 24, 2006

Tagged By Gops & Shree

As i mentioned in my prev post, went for a break to madurai (4 days - G'pa & ma home) & kallidai (in t'veli dt to see my parents after 5 months)
athukulla Pasamudan Gops & Shree tag pannitaanga.. (nalla irunga rendu perum)

sari, in the mean gapula, official matteraa chennai visit vera irunthathu. so 2 days in chennai. sema suthifying. actually i was thinking of a bloggers meet at chennai. (Aama inga bng'lre la kizhuchaachuu, intha ammu vaye meet panna mudiyalai).

but coz of no plans, let me leave it this time. next time, we'll plan and organise in gud manner. enna makalee ok vaa? (i guess, many pple from our circle r in chennai except gops, shree, usha, arjun)..

1.Grab the book nearest to you, turn on page 18 and find line 4.
Ans. No book here, (I’m from web café)

2.Stretch your left arm out as far as you can.& catch air?
Ans. Yeeh, I got it. But near by person looks at me differently. Gr..rrr.

3. What is the last thing you watched on TV?
Ans. News

4. Without looking, guess what time it is?
Ans. 2.35 PM

5.Now look at the clock, what is the actual time?
Ans 2.40 PM

6. With the exception of the computer, what can you hear?
Ans. Fan sound. (A/c out of order in this café. Another Gr..rrr)

7.When did you last step outside? What were you doing?
Ans. By 1.35 pm to Jeyachandran stores for a jeans. just did window shopping

8.Before you started this survey, what did you look at?
Ans. He hee, people watching (site adichufying). where did these all gals went..? suthaa wasteee...

9.What are you wearing?
Ans. Tshirt and denim blue jeans

10.When did you last laugh?
Ans. at 12 pm in my old company at Taramani

11.What is on the walls of the room you are in?
Ans. That stupid (out-of-order) A/C.
12.Seen anything weird lately?

Ans. People are mad on shopping at ranganathan st.

13.What do you think of this quiz?
Ans. quiz??. Gr..rrr

14.What is the last film you saw?
Ans. Thirupachhi (in the bus travel at nite) oreeeee kothhuuuuu.

15. If you became a multimillionaire overnight, what would you buy?
Ans. A beautiful saree (silk cotton – Maroon colour) for my mother. (namiteenga thaneee 

16.Tell me something about you that I dunno
Ans. Enathaee solvenuga?

17.If you could change one thing about the world, regardless of guilt or politics, what would you do?
Ans. stop spitting in public places. (chennai pple aniyayathukku thuparaanga)

18.Do u like to Dance?
Ans. Very much. (Asin kooda sernthu adinaaa superaaa irukkum, hope arjuna and kutti won’t object or restrict Asin )

19. Imagine your first child is a girl, what do you call her?
Ans. Aparajithaa.. (konjam over speedaaa thaan porenoo?)

20 Imagine your first child is a boy, what do you call him?
Ans. Aparajith

21.Would you ever consider living abroad?
Ans. Deeply thinking of all pros and cons.

22.What do you want GOD to say to you when you reach the pearly gates?
Ans. So kind of U.

Friday, May 12, 2006

வாழ்க ஜனநாயகம்!

வர வர தமிழ்நாடு லன்டன் மாதிரி ஆகி விட்டதோனு எனக்கு தோனறது. அங்க தான், 2 கட்சி மாறி மாறி ஆட்சிக்கு வரும். இங்கேயும் அப்படி தானே நடந்துன்டு வரது?

மொத்தம் 16% வோட்டு வாங்கி இருக்கார் கேப்டன், அதுவும் தில்லா,தனியா நின்னு. இந்த சதவிதம் தேசிய கட்சினு பீத்திக்கர காங்கிரஸ் கூட வாங்கலை.

சரி, இப்போ அடுத்த முதல்வரின் நன்றியுரையை வாசிங்கோ.

சிறு நரி கூட்டம் ஒன்று, சில காலம் கொக்கரித்து வந்தது. சிங்கம் ஒன்று வருகுது பார்!னு என் தம்பியே நல்ல பாடம் புகட்டினாய்! அக்கூட்டத்துக்கு பாடை கட்டினாய்!

2 ரூபாய்க்கு அரிசி தருவேன் உனக்கு என்று நான் சொன்னதை நம்பி வாய் பிளந்தாய், தம்பி அது உனக்கு வாய்க்கரிசியடா!

வெறும் அரிசி தானா? என்ற உன் ஏக்கம் எனக்கு புரிகிறது. சாம்பார், ரசம், பொறியல், கூட்டு எல்லாம் என் கூட்டணி கட்சிகள் பறிமாறும்! ஊறுகாயை மருத்துவர் பறிமாறுவதாக வாக்களித்து உள்ளார். கவலை கொள்ளாதே!

கலர் டிவி தருவேன் என்றேன். தம்பி, மற்ற தரமற்ற நிகழ்ச்சிகளை பார்த்து உன் மனதை திரிந்து கொள்ளாதே!
என் பேரனின் சன் டிவி மட்டும் பார்!
திராவிடம் வளர்!. இமயம் தொடு!
அதில் நம் கட்சி கொடி நடு!

இதை தான் நமது அறிஞர் அண்ணா அன்றே சொன்னார்,
"பிகருக்கு தெரியுமா பெருங்காய வாசனை?
ஜிகிடிக்கு தெரியுமா ஜிஞ்சர் வாசனை?" என்று!

இனி நமது பேச்சு, முழுமூச்சு எல்லாம் நமது அருமை புதல்வன், பட்டத்து இளவரசன் ஸ்டாலினை ஆட்சி கட்டிலில் அமர்த்துவதே!
இது தான் உனது ஆசை, லட்சியம், நமது கட்சியின் கொள்கை என நான் சொல்லவும் வேண்டுமோ?

தாத்தா, என்னை மறக்கலாமா? என எனது பேரன், "உலக தகவல் தொடர்பே"! என்று உன்னால் புகழப்பட்ட வீரன், விவேகன், என் மறுமகன் மாறனின் தவ புதல்வன், தயாள குணம் படைத்தவனாம் தயா நிதி மாறன் அழுவது கண்டு உன் மனம் விம்மும் என நான் அறிவேன்.

எனவே தான் சுழற்சி முறையில், மகன், பேரன் என்ற முறையில் ஆட்சி அமைக்கலாம் என்ற உன் முடிவை, என் தலையாய கடமையாக மேற்கொள்ள போகிறேன்.

பேத்தியும் வர வேண்டுமென கட்சி செயற்குழு கூட்டம் தீர்மானம் இயற்ற உள்ளது.
கழக கன்மணியே! உனக்கு நன்றாக தெரியும், நான் என்றுமே கட்சி செயற்குழுவுக்கு கட்டுப்பட்டவன் என்று!

மகிழ்ச்சி கொள்! மறக்காமல் எனது மடல்களை படித்து உன் பொது அறிவை வளர்த்து கொள்! IAS வினாத்தாள்களில் கூட அதிலிருந்து தான் கேள்விகள் வருகின்றன.

வாழ்க நம் கட்சி! வாழ்க நம் குடும்பம்!!

இனி புதிய ஆட்சியாளர்கள் எப்படி பங்கு பிரிச்சுப்பானு பார்க்கலாம்!

1)வழக்கம் போல பேராசிரியர் அன்பழகனுக்கு கல்விதுறையோ, இளிச்சவாய்துறையோ போகும். (உருவாகலாம், யாருக்கு தெரியும்?)

2)தம்பி "துச்சாதனன்" துரை முருகனுக்கு வளம் கொழிக்கும் பொதுப்பணி துறை. (ஆனா பாதி பங்கு உரிய இடத்துக்கு போய் சேரும்!)

3)"தியாக செம்மல்" பழனிவேல் ராஜனுக்கு சபா நாயகர் பதவி. (இலவசமாக சின்சா ஒன்று வழங்கப்படும்).

4)"கழக போர் வாள்" பொன்முடிக்கு போக்குவரத்து துறை. (தினப்படி வசூலை வாரிக் கொண்டு வர கண்டக்டர் பை ஒன்று வழங்கப்படும்)

5)நிதிதுறை, நீதித்துறை, காவல்துறை, கல்லா துறை,வசூல் துறை, நாமம் போடும் துறை, அல்வா துறை எல்லாம் முதல்வர் பொறுப்பில்.

இப்போழுதே சில காவல் துறை, IAS அதிகாரிகள் பெட்டி படுக்கை எல்லாம் கட்டி வைத்தால் நல்லது. எப்படியும் குரு பெயற்ச்சிபடி இட மாற்றம், உத்தியோக மாற்றம், எல்லாம் வர போகுது. தண்ணி இல்லாத காடு எங்கேனு கூகிள் டாட் காமில் தேடவும்.

மற்றபடி, சட்டசபைக்கு, நமது கேப்டன் உஜாலா வேட்டி, சட்டையில் வருவாரா? இல்லை காக்கி யூனிபார்மில், முட்டி வரை தொடும் கோட் அணிந்து வருவாரா?னு சைதாப்பேட்டையில் சாலமன் பாப்பையா தலைமையில் பட்டி மன்றம் நடக்கலாம். சென்னை வாசிகள் தவறாது கலந்து கொள்ளவும்.

பின்குறிப்பு: ஒரு வாரம் லீவு எடுத்து கொண்டு, மதுரை, கல்லிடை எல்லாம் போய் வரலாம்னு இருக்கேன். என் பிளாக்கை பத்ரமா பாத்துகோங்கோ!

பின் பின்குறிப்பு: நாளை (13-May-2006) தனது 7 th மண நாளை கொண்டாடும் என் அருமை அண்ணன் டுபுக்குஅவர்களுக்கு 123 வது வட்டத்தின் சார்பாக இந்த அருமை தம்பி அம்பி, தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறான். (மன்னி, நல்லா வெயிட்டா பில்லு தீட்டுங்க!)

Monday, May 08, 2006

Mistress of Spices - a Review

"Persons attempting to find a motive in this narrative will be prosecuted; persons attempting to find a moral in it will be banished; persons attempting to find a plot in it will be shot."- Mark Twain in Adventures of Huckleberry Finn. (thanks Viji)

உழைப்பாளிகள் தினத்தை சிறப்பா கொண்டாடனும்னு முடிவு பண்ணி, முந்தைய நாளே, மிஸ்ட்ரெஸ் ஆப் ஸ்பைஸிஸ்கு டிக்கெட் புக் பண்ணிட்டு வந்துட்டேன்.
மார்னிங்க் ஷோக்கே செம கூட்டம். எல்லாரும் நம்மை மாதிரி உழைப்பாளிகள் தினத்தை கொண்டாடறா போலிருக்கு.

பொதுவாக மருத்துவம், ஆன்மிகம், ஜோதிடம் போன்ற துறைகளில் இருப்பவர்கள், தங்களை அந்த துறைக்கு அர்பணித்து விட வேண்டியது காலத்தின் கட்டாயம். தனது சொந்த விருப்பங்களை தியாகம் செய்து விட வேண்டும். முன்னாடி அரசியலும் இந்த பட்டியலில் இருந்தது. இப்போ மகன், மறுமகன், பேரன் என குடும்ப அரசியலாகி விட்டதால், அதை நான் சேர்க்க வில்லை.(பொதுவா சொன்னேன் பா!)

சரி, கதைக்கு வருவோம். Chithra divakaruni என்ற பெங்காலிய எழுத்தாளரின் கதையை அப்படியே படமாகிருக்கிறார்கள். கதைப்படி, ஐஸ் நிஜமாவே குழந்தையா இருக்கும் போதே, டெலிபதி என்ற சக்தி இருப்பதால், ஒரு கொள்ளை கூட்டம் ஐஸின் பெற்றோரை உம்மாச்சிட்ட அனுப்பி விட்டு, ஐஸை கடத்துகிறது. ஆனா, நம்ம ஐஸ் குட்டி நைஸா தப்பிச்சு ஒரு இயற்கை மருத்துவம் போதிக்கும் பாட்டியிடம் வந்து சேர்கிறாள். ஸ்பைஸிஸ் என நம் உபயோகிக்கும் கிராம்பு, இஞ்சி,சுக்கு,மிளகு, பட்டை, சோம்பு, மிளகாய் வத்தல், இவற்றுக்கெல்லாம் அதீத சக்தி உண்டு என அந்த பாட்டி சொல்லி தருகிறார்.

அதோடு மட்டுமல்ல 3 முக்கிய நிபந்தனை இடுகிறார்.
1) ஸ்பைஸிஸை உனது சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்த கூடாது.
2)பிற மனிதர்கள் உன் உடலையோ, அல்லது நீ பிறரையோ தீண்டக் கூடாது. (ஆகா! பாட்டி, நீ வாழ்க!)
3)ஸ்பைஸிஸ் இருக்கும் (shop)இடத்தை விட்டு, நீ ஜாலியாக,அபிஷேக் பச்சன் கூட எல்லாம் சுத்த கூடாது.(அம்பியோட சுத்தலாம், தப்பில்லை)

குட்டி ஐஸ், வளர்ந்து, பெரிய ஐஸ் குட்டியாகி ஸ்பைஸிஸ் ஷாப் வைக்க அமெரிக்காவுக்கு பறந்து விடுகிறார்.

எங்க ஊர்லயும் தான் ஒரு கடை இருக்கு. கட்டம் போட்ட லுங்கிய முட்டி வரை மடிச்சு கட்டி, வீல் சோப்பு படம் போட்ட பனியன் போட்டு, ஸ்டண்ட் நடிகர் பொன்னம்பலம் சாயல்ல ஒருத்தன் தான் கடையில இருப்பான். "வேற என்ன வேணும்?னு அவன் கேட்கற தொனியிலயே, எனக்கு கதி கலங்கிடும். அம்மா வாங்கிண்டு வர சொன்ன பத்து ஐட்டதுல நாலு ஐட்டம் மறந்துடுவேன். இப்படி ஐஸ் குட்டி கடையில இருந்தா, தினமும் 50 கிராம் கடுகாவது வாங்க கடைக்கு வர மாட்டேனா?

இப்படியாக, நமது ஐஸ் குட்டி ஸ்பைஸிஸ் பஜார்னு ஜம்முனு ஒரு கடைய அமெரிக்காவுல போட்டு, தனது வாடிக்கையாளர்களுக்கு தொண்டாற்றி வருகிறார்.

ஐஸின் சேவைக்கு சில சேம்பிள்கள்:
1) ஒரு காஷ்மீரிக்கு, அவனது எதிர்காலத்துக்கு தேவையான ஆலோசனைகள்.
2) ஒரு நீக்ரோவுக்கு அவனது காதலியை கவர, பூண்டு உபயோகிக்க சொல்லி ஆலோசனை.
3) ஒரு சீக்கிய பயந்தாங்கொள்ளி பையனை திருத்த பட்டை சோம்பு குடுத்து உதவுதல்.
4) வயசான அனுபம் கேருக்கு தனது பேத்தி கன்னா பின்னானு டிரஸ் பண்றாளே!னு, பேத்திய பத்தி ரொம்ப கவலை. இந்தியர்கள் என்ற உணர்வையும் விட முடியாமல், துரைகளின் கலாச்சாரத்தையும் ஏத்துக்க முடியாமல் தவிக்கும் நியாயமான கவலை. எனவே அவரது மன அமைதிக்கும், பேத்திக்கு நல்ல புத்தி வரவும் தேவையான மருத்துவ மூலிகைகள்.

இந்த நேரத்தில், படத்தின் கதா நாயகன் வருகிறான். (1.50 பைசா குடுத்து ஒரு பிளேடு வாங்கி ஷேவ் பண்ணிக்கபடோதோ?) அவனை, என்னால் Heroவா ஒத்துக்கவே முடியலை.
"பூ விழி வாசலிலே"னு ஒரு சத்யராஜ் படம் வந்தது தெரியுமா? அதுல நடித்த தாடிக்கார வில்லன் மாதிரி இருக்கான். சரியான த்ராவை!( நெல்லை வட்டார வழக்கில் சில நல்ல வார்த்தைகள் என் வாயில வருது, கஷ்டப்பட்டு என்னை கட்டுபடுத்திக்கிறேன்).

அந்த தடியன், ஐஸ் குட்டிய சுத்தி சுத்தி வறான். பாவம், ஐஸ் குட்டி, உலகம் அறியா குழந்தை. பாட்டி சொன்னதை எல்லாம் மறக்காமல் உஷாரா தான் இருக்கா.
இருந்தாலும், கைப்புள்ள சொன்ன மாதிரி, "இது வாலிப வயசு!"னு கொஞ்சம் சலனப்படுகிறாள்.இது போதாதுனு அந்த தடியன் அம்மா சென்டிமெண்ட் பேசி அனுதாப அலையை எழுப்பி விடுகிறான்.
ஐஸ் குட்டி,வாடிக்கையாளர்களுக்கு தப்பு தப்பா மருந்து குடுக்கறா.
1) டாக்ஸி டிரைவர் ரவுடிகளால் தாக்கப்படுகிறான்.
2) நீக்ரோவின் காதல் புட்டுகுது.
3) சீக்கீய பையன், தறுதலையாகிறான்.
4) அனுபம் கேர் பேத்தி, ஆத்த விட்டு ஓடி போறா.
5) அந்த த்ராவையோட ஊர் சுத்தினதுனால, ஐஸின் கடை கொள்ளை போகிறது.

இப்போ தான் ஐஸ் தனது தவறை உணர்ந்து, ஒரு முடிவுக்கு வருகிறாள்.

நம்ம தமிழ் படத்துல எல்லா மறுமகளும் சொல்வாளே, "இந்த வீட்டுல,ஒன்னு நான் இருக்கனும், இல்ல உங்க அம்மா இருக்கனும்!" அது போல, ஐஸும், பலசரக்கு கடைய மூடிட்டு,அந்த த்ராவையோட ஒரு நாளாவது வாழனும் (குஜால்சா இருக்கனும்னு படிக்கவும்), இல்லை, மூட்டை முடிச்சோட, இந்தியாவுக்கு கிளம்பிடனும்னு முடிவு பன்றா பரதேவதை.


என் வயிறு பத்தி எறிய, ஐஸ் முதல் முடிவையே எடுக்கறா. மிளகாய்பழ கலர்ல புடவை, காத்தோட்டமா ஜன்னல் வெச்ச, இல்லை,இல்லை கதவே வெச்ச சோளினு சொக்கா டிரஸ் பண்ணிண்டு,(படம் போட்ருக்கேன் பாருங்கோ) அந்த த்ராவையோட கைய கோத்துண்டு ஊர சுத்தறா. எனக்கு பத்திண்டு வந்தது.

ஒரு நாள் ஆனதுக்கு அப்புறம், கடைக்கு தீய வெச்சுண்டு, பத்தினி தெய்வமாட்டும் தானும் அதுலயே விழறா. ஆனா ஐஸ் குட்டி சாகலை. அது எப்படினு கேட்டு டைரக்டருக்கு மெயில் அனுப்பிருக்கேன். அவரும் ஐஸ் குட்டி ரசிகர் போலிருக்கு.

படம் முழுக்க முகத்தில் ஒரு வித பரிதவிப்போடவே ஐஸ் குட்டி நடிச்சு இருக்கா. புரடியூசர் பேசிய சம்பளத்தை ஒழுங்கா தருவாரோ? மாட்டாரோ?னு பயம் போலிருக்கு.

படம் முழுக்க கொஞ்சம் டாக்குமெண்ட்ரி வாடை வருது.
படம் பார்க்க போறவா, கையில ஒரு சின்ன நோட்புக் கொண்டு போறது நல்லது. ஐஸ் எத்தனை கலர் புடவை மாத்தினானு குறிக்கறதுக்கு இல்லை, என்ன ஸ்பைஸிஸ் எதுக்கு நல்லது?னு குறிக்க.
சில சேம்பிள்ஸ்:
1) மிளகு - பிறர் மனதில் உள்ளதை வெளிக் கொண்டு வர.
2) துளசி - நல்ல நினைவாற்றலுக்கு
3) கடுகு, மி-வற்றல், எள் - கண் திருஷ்டி கழிய

காமிரா, நம்ம சந்தோஷ் சிவன். அழகுக்கு(ஐஸுக்கு) அழகு சேத்ருக்கார். மிளகாய் பழம் கூட குளோஸப்புல அழகா தெரியுது.
கடைசில கிளைமாக்ஸ் செம சொதப்பல். ஐஸ் இருக்கும் போது,கிளைமாக்ஸாவது கத்திரிக்காயாவது!

பின் சீட்டுல 2 தடிப்பசங்க. அதுல ஒருத்தன் சொல்றான், "மச்சான்! ஒரு பிட்டு கூட இல்லயேடா"
அடப்பாவி மக்கா! பக்கத்து தியேட்டர்ல(yeeh, it's a multiplex complex) போட்ருக்கற Basic Instinct-IIகு டிக்கெட் வாங்கிட்டு, தெரியா தனமா இந்த தியேட்டர்ல நுழன்சுட்டானுங்க போலிருக்கு!
(He hee, முந்தின நாளே அந்த படத்துக்கு டிக்கெட் எல்லாம் வித்து போச்சு.)

இதே கதைய நம்ம ஊர் "உல்டா மன்னன்" P.வாசுவோ, "செண்டிமென்ட் சிங்கம்" K.S.ரவிகுமாரோ எடுத்துருந்தா அம்மா செண்டிமென்ட், தாலி செண்டிமென்ட், மாரியம்மன் பாட்டு, நடுவுல வடிவேலு காமடி, முக்கியமா மும்தாஜ் குத்து ஸாங்க் எல்லாம் வெச்சு "மசாலா மங்கை"னு படத்தை ஒரு நூறு நாளைக்கு ஓட்டிபுடுவாங்க. ம்ம்ம்ம்....துரைகளுக்கு இன்னும் விவரம் பத்தலை.

Thursday, May 04, 2006

இன்ப, துன்பம்!

பொன்னுக்கெல்லாம் அரசியாம் பொன்னரசி அருமை தோழி, பாசமுடன் நம்மை இழுத்து விட்டதனால்,(அது வேற கொக்கி, எனக்கு அதுக்கு என்ன எழுதனு தெரியலை, அட்ஜஸ்ட் பண்ணிக்க மா! பொன்னரசி) தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு இன்னொரு பதிவு.

1) எப்படா லீவு கிடைக்கும்னு தீபாவளி, பொங்கல்னு ஒரு மாதத்துக்கு முன்னாடியே காலண்டரை பார்த்து, பார்த்து, அடிச்சு பிடிச்சு ரயில்வே கவுண்டரில்(ஜாதி பெயர் இல்லீங்கோ)வரிசையில நின்னு, ரொம்ப வள்ளல் மாதிரி பக்கத்து ஜிகிடிக்கு பேனா எல்லாம் குடுத்து, ஏரியா, ஈமெயில், எல்லாம் நைஸா விசாரிச்சு டிக்கட் புக் பண்ணுவது இன்பம்.

இவ்ளோ கஷ்டப்பட்டு, வரிசையில நின்னு, நம்ம முறை வரும் போது மட்டும், டிக்கட் குடுக்கற தடியன், ஈனு பக்கத்து சீட் ஆன்டியோட கடலை போடறத பாக்கறது துன்பம்.

2) 4 நாளு லீவுல வீட்டுல ராஜ மரியாதை நடக்கும். 4 மாதம் மட்டுமே துவைக்காத ஜீன்ஸ், மற்றும் பிற துணிகள் எல்லாம் அம்மாவே தோய்ச்சு தருவா. சரவண பவன் ஓட்டல் மெனு மாதிரி வித விதமா ஐட்டங்கள் வந்துன்டே இருக்கும். "என்னடா! முதுமலை காட்டுல யானைக்கு கேம்ப் நடக்குற மாதிரி நம்ம வீட்டு அம்மா உனக்கு சமைச்சு போடறா போலிருக்கு"னு என் பாசக்கார தம்பி நக்கல் விடுவானே! அடடா அது இன்பம்!

2a) குளிக்க போறேன்னு சொல்லிட்டு, எங்கள் வற்றாத ஜீவ நதியாம் தாமிரபரணியில், குறைந்தது 3 மணி நேரம்(எருமை மாடு போல), நண்பர்களுடன் ஆட்டம் போட்டுவிட்டு, கேப்டன் மாதிரி கண்கள் சிவக்க, கையோடு கொண்டு போன தக்காளி சாதம், தயிர் சாதம், எல்லாம் ஒரு பிடி பிடித்து விட்டு வீட்டுக்கு வருவது இன்பம்.

2b) தாத்தா பாட்டி வீட்டுக்கு போய், சைக்கிள் எடுத்துண்டு, மதுரைய சுத்து, சுத்துனு சுத்தி, உள்ளூர் பாசக்கார நண்பர்களை நலம் விசாரிச்சு, "ஊருக்குள்ள ஜிகிடிகள் எல்லாம் சவுக்கியமா"னு ரவுசு விடறது இன்பம்.

4 நாளு லீவு 4 நிமிஷம் மாதிரி கரைஞ்சு போயி, மறுபடி பொட்டிய தூக்கும் போது ஒரு பீலிங் வருமே! அது துன்பம்.


3)நல்ல கொளுத்தற வெயில்ல, நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாட போய், "டாய்! எங்க சிங்கம் களம் எறங்குது டா! இப்போ போடுங்க டா பவுலிங்கு"!னு நம்மை கைப்புள்ள மாதிரி ஏத்தி விட்டு ஓப்பனிங் பேட்ஸ்மேனா களம் எறக்கிடுவாங்க. நாமளும், குஷியா சேவாக் மாதிரி பேட்ட சும்மா சுத்து சுத்துனு சுத்தி 3 ஓவர் 30 ரன் குவிச்சுருவோம்.

கடுப்பாகி போன எதிர் கட்சிக்காரன், நாகாஸ்திரம் மாதிரி பந்த நம்ம நெஞ்சுக்கு குறி வெச்சு, ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் மாதிரி வந்து எறிஞ்சுடுவான். நாம ரொம்ப விவரமா தப்பிக்கறதா நினைச்சு வாலறுந்த குரங்கு மாதிரி குதிப்போம். பந்து நம்ம வலது முட்டிய நச்சுனு பதம் பார்க்கும். "சாய்ச்சுபுட்டான்யா"!னு 4 நாள் நடக்க முடியாம கஷ்டப்படுவோமே! அது இன்பமான துன்பம்.

4) செமஸ்டர் முழுக்க படிக்காம, கரெக்ட்டா எக்ஸாமுக்கு முந்தின ராத்திரி, முட்டு முட்டுனு முட்டிட்டு, டாஸ் எல்லாம் போட்டு பாத்து, இந்த கொஸ்டீன் தான் கேப்பான்னு நாம எதோ பெரிய யாகவா முனிவர் மாதிரி குறி பார்த்து, எக்ஸாம் ரூமுக்கு நுழையறத்துக்கு முன்னாடி குல தெய்வத்தில் இருந்து, முக்கு சந்து முனீஸ்வரன் வரை வேண்டிக்கிட்டு, கொஸ்டின் பேப்பர திறக்கற நேரம் இருக்கே! அது தான்யா இன்பமான துன்பம்!

5) நம்மை பழி வாங்கனும்னே கஷ்டமான (படிக்காதனு வாசிக்கவும்) கொஸ்டின் வந்து சேரும். நாமளும், முடிஞ்ச மட்டும் டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் பாதி, ஆப்ரேஷனல் ரிஸர்ச் பாதி, சொந்த கதை, சோக கதை மீதினு பக்கத்த நிரப்புவோம். இந்த டெக்னிக் கூட தெரியாம நம்ம பாசக்கார பயலுங்க, ரொம்ப தாராளமா நம்ம பேப்பர நைஸா வாங்கி காப்பி அடிப்பானுங்க.
கடைசியில நம்ம பேப்பரையும் சேர்த்து அவன் பேப்பரோட கட்டிடுவாங்க கூமுட்டை பசங்க. திரும்பி நம்ம பேப்பர மீட்கற த்ரில் இருக்கே, யப்பா! அது தான் இன்பமான துன்பம்.

6) ப்ராஜக்ட் பன்றோம்னு சென்னை வந்துட்டு, ஒட்டல் சாப்பாடு எல்லாம் நல்லா இல்லைனு, நாமளே சமைச்சா என்ன?னு 4 தடிப்பசங்களோட(என்னையும் சேர்த்து தான்) கூட்டணி போட்டு, வெங்கல் கடையில யானை புகுந்த மாதிரி, கிச்சனை ஒரு போர்களமாக்கி, ஒரு வழியா ஏதோ ஒரு வஸ்து சட்டியில வரும்.

ஆகா! ப்ரமாதம்!னு நாங்களே ஒருத்தர் முதுகுல ஒருத்தர் தட்டி குடுத்துப்போம். ஆனா, சமைச்ச பாத்ரம் அலம்பனும்னு சொன்னா 3 பேரும் சுனாமி வந்த மாதிரி ஓடிடுவாங்க. ஏன்டா சமைச்சோம், சாப்டோம்னு பாத்ரம் கழுவற அந்த நேரத்துல ஒரு பீலிங்க் வருமே, அது தான் இன்பமான துன்பம்.

சரி,விருப்பமுள்ளவர்கள் (வெட்டியா இருப்பவர்கள்னு படிக்கவும்) இதே டாபிக்ல எழுதுங்கோ.

பின்குறிப்பு: விளம்பர துறையில் ஆர்வமுள்ளவர்கள், நமது அக்கா
blogeswari (he hee, இவங்க L.R. ஈஸ்வரிக்கு ஒன்னு விட்ட ஓற்படி பொண்ணு) தனது பிளாகில் சும்மா கலக்கு கலக்குனு கலக்கிட்டு வராங்க. நிறைய தகவல் தெரியுது. Already, she has posted 5 posts in this area. போய் பாருங்க. உங்களுக்கும் பிடிக்கும், அக்கா பிளாகேஸ்வரிக்கு நான் கியாரண்டி.

பின்-பின்குறிப்பு: Next post - an Ambi style review on Mistress of Spices - Aish kutti.

Tuesday, May 02, 2006

உம்மாச்சி காப்பாத்து..!

Click here to read Part-1 Part-2

முன்குறிப்பு: பஸ்ஸில் வந்த மஞ்சள் கலர் ஜிகிடி, சரியாக 1.30 am ku பெயர் தெரியாத ஒரு ஊரில், அத்தையுடன் (ஆமா! அழகு பெண்ணின் தாயார் என்றால் அத்தை தானே! வைரமுத்து சொல்லிருக்காரே!) இறங்கி விட்டது. அவள் பறந்து போனாளே!

சிருங்கேரி பஸ் நிலையம், மிக சின்னது. 9 மணிக்கு உடுப்பி செல்லும் பஸ் வரும்னு அரைகுறையா கன்னடத்தில் சொன்னதை புரிந்து கொண்டேன். அங்கு காவி உடையில் ஒரு வெள்ளைகார துரை இருந்தார். என்னை அறிமுகப்படுத்தி கொண்டேன். அவரும் உடுப்பி செல்ல தான் காத்திருப்பதாக சொன்னார். புளி மூட்டை மாதிரி அடைத்து கொண்டு பஸ் வந்தது.
துரை ரொம்ப அஸால்டாக பஸ்ஸில் ஏறி, என்னை பார்த்து, "it’s very usual, get inside!"னு கை குடுத்தார். தோடா! திரு நெல்வேலிக்கே அல்வாவா?
பின் கூட்டதில் நீந்தி பின் சீட்டுக்கு அருகில் நின்று கொண்டோம்.

அவர் ஜெர்மன் நாட்டை சேர்ந்தவர். சிருங்கேரியில் தான் தங்கி உள்ளார். வருடத்துக்கு 3 மாதம் ஷ்ரிலங்காவில் யோகா கிலாஸ் எடுப்பாராம். 3 மாதம் ஜெர்மனியில். 6 மாதம் சிருங்கேரியில் தங்குவாராம். குடும்பம் ஒன்றும் இல்லை. பின் பேச்சு, யோகா பற்றி சென்றது. சில பல ஆசனங்கள் பற்றி விவாதிதோம். ஜெர்மனியில் தடுக்கி விழுந்த இடம் எல்லாம் யோகா பள்ளிகள் தானாம். நம்மை விட துரைகள் யோகா, தியானம் எல்லாம் ஆர்வமாக கற்று கொள்கிறார்கள்.
இவர், கண்ணன் மீது பற்று கொண்டு "Hebert" என்ற தனது பெயரை முகுந்தா!னு மாற்றி கொண்டு உள்ளார்.

" கிருஷ்ணா! முகுந்தா! முராரே!னு பாகவதர் குரலில் எனது மிமிக்ரி வித்தையை அவரிடம் காட்டினேன். சந்தோஷம், தாள முடியலை மனுஷனுக்கு!
இந்தியா எவ்வளவு சிறந்தது! இதை விட்டு நீங்க ஏன் அமெரிக்கா, லண்டன்னு போறீங்க?னு கேள்வி எழுப்பினார்.

"பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை!
அருளிலார்க்கு அவ்வுலகம் இல்லை!! என்பதை சூசகமாக புரிய வைத்தேன். உண்மை தான்!னு ஒத்துக் கொண்டார்.

பஸ்காரன் மேலும்,மேலும் ஆட்களை அடைத்துக் கொண்டிருந்தான். டிரைவரே கிட்டத்தட்ட நின்று கொண்டு தான் வண்டி ஓட்டினார்.

பகலில், மலை பாதையின் வளைவுகள், நெளிவுகள் எல்லாம் அற்புதமான காட்சி.(he hee, பக்தி போஸ்ட் என்பதால் இதை வேறு விதமாக கம்பேர் பண்ண விரும்பலை.)
2.5 மணி நேரம் நானும், முகுந்தாவும் நின்று கொண்டே வந்தோம். ஒரு பயலும் சீட்டு தரலை.வெள்ளைகாரியா இருந்தா மடியில உக்காச்சுகோ!னு பல்ல காட்டி இருப்பானுங்க கேடிப்பசங்க!

ஒரு வழியா உடுப்பி வந்து சேர்ந்தோம். 2 நாள் தங்கி உடுப்பி க்ருஷ்ணணை தரிசிக்க போறேன், ஓட்டல் ரூம் பார்க்க போறேன்னு முகுந்தா விடை பெற்றுக் கொண்டார். நான் மட்டும், மறுபடி, தனியே, தன்னந்தனியே கோவிலை நோக்கி சென்றேன். தாகத்தை தணிக்க ஒரு உடுப்பி ஓட்டலில் ஜூஸ் குடித்தேன். நாங்க எல்லாம் உடுப்பிக்கே போய் உடுப்பி ஓட்டலில் ஜூஸ் குடிச்சோம்னு இனிமே ஸ்டைலா என் நண்பர்களிடம் சொல்லிக்கலாம்.

பின் கோவிலுக்கு உள்ளே நுழைந்தேன். சரியான டூரிஸ்ட் கூட்டம். கோவில் கொஞ்சம் கேரளா பாணியில் இருந்தது. நடை சார்த்தி விட்டனர். இருந்தாலும், ஒரு சிறிய ஜன்னல் வழியாக குட்டி கண்ணணை பாத்துக்கோனு அனுமதி அளித்தனர்.

அடடா! அடடா! கொள்ளை அழகு!


நெய் விளக்கொளியில், மயில் பீலி மெல்லிய காற்றில் அசைந்தாட, காலில் கட்டிய சலங்கையுடன், கண்களில் குறும்பு கொப்பளிக்க, குறு நகை புரிந்து, ஒரு கையில் புல்லாங்குழலுடன், மறு கையை இடுப்பில் கை வைத்துக் கொண்டு, சவுக்யமா இருக்கியா அம்பி?னு கண்ணால் கேட்பது போன்று இருந்தது.

"குழலூதி மனமெல்லாம் கொள்ளை
கொண்ட பின்பு, குறை ஏதும் எனகேதடி?"னு ஊத்துகாடு வெங்கட சுப்பையர் பாடியது ஆச்சரியமே இல்லை! ( நன்றி விஜி).


இந்த தேவகி மைந்தன், யசோதை குமாரன் புரிந்த லீலைகள் தான் எத்தனை! குழந்தையாக பாவித்தால் அவர்களுக்கு குழந்தையாக, நண்பனாக,

கலாபக் காதலனாக!(சே! சே!ஆர்யா இல்லை), தூதுவனாக, கடமை போதிக்கும் கர்ம வீரனாக! அப்பப்பா!


வையகத்தில் ஒரு பிள்ளை!
அம்மம்மா நான் கண்டதில்லை!

அன்னமாச்சார்யார், மிக அழகாக தெலுங்கில் க்ருதிகளாக இயற்றி உள்ளார். எம்.எஸ் அம்மா பாடி இருக்கும் கேஸட் போன வாரம் தான் லேண்ட்மார்கில் வாங்கினேன். இரவு நல்ல தூக்கம் வருகிறது.

சரியாக ஒரு நிமிஷம் தான் தரிசனம். இருந்தும் ஆவல் அடங்க வில்லை. மனித ஜென்மம் தானே!


குறை ஒன்றும் இல்லை, மலை மூர்த்தி கண்ணா!
குறை ஒன்றும் இல்லை கண்ணா!னு வாய் தான் பாடுகிறது. மனம் முழுக்க கோரிக்கைகள், வேட்பு மனுக்கள். ம்ம்ம்ம்! நிறைய பக்குவப்படனும் போலிருக்கு.

தரிசனம் முடிந்து கோவிலிலேயே மம்மம் எல்லாம் போட்டனர். சாம்பார், ரசம், கூட்டு, கடலை பருப்பு பாயசம்(கண்ணனும் நம்ம மாதிரி நிறைய கடலை போட்டவர் என்பதாலா?), மைசூர் பாகுனு சாப்பாடு அட்டகாசமா இருந்தது.

கோவிலுக்கு வெளியே வந்தவுடன், ஆபிஸிலிருந்து போன்!

இந்த பைலை எங்கே சேவ் பண்ணிருக்கே? அந்த பைலை எங்கே சேவ் பண்ணிருக்கேனு! ரொம்ப சைட் அடிக்காதே!னு இலவசமா அட்வைஸ் வேற!
காசிக்கு போனாலும் கழுதையோட பாவம் தொலையாது போலிருக்கு!

பாவி பசங்க! உடுப்பில கூட உம்மாச்சி படம் போட்ருக்கானுங்க!( Gops உம்மாச்சி படம்னா என்னனு கமண்ட்ஸ்ல சந்தேகம் கேக்காதே!). (Arjuna யாரு நடிச்சதுனு சந்தேகம் கேக்காதே!). (Kutti DVD எங்கே கிடைக்கும்னு சந்தேகம் கேக்காதே!)
தேசிய ஒருமைப்பாடு இதுல தான் போலிருக்கு. க்ருஷ்ணா! க்ருஷ்ணா!னு கன்னத்துல போட்டுன்டேன்.(போஸ்டர பாத்து இல்ல, உடுப்பி கோபுரத்தை பாத்து!)

அக்கம் பக்கம் விசாரிச்சா, கொல்லூர் மூகாம்பிகை அருகில் தான்னு தெரிய வந்தது. என் லக், வழியிலேயே பஸ் கிடைத்தது.
....பாதைகள் நீளும்.

பின்குறிப்பு: அடுத்த போஸ்ட் இன்பம், துன்பம்! Tagged by Ponnarasi...