Thursday, June 08, 2006

ஓ! பார்ட்டி, நல்ல பார்ட்டி தான்!

நான் சென்னை தரமணியில் உள்ள ஒரு கம்பெனியில் வேலை பார்த்த போது நடந்த நிகழ்வு இது.

பிராஜக்ட் மேனேஜர், பிராஜக்ட் டெலிவரி நெருங்குகிறதுனு ஏதோ அவர் மனைவி டெலிவரி டேட் நெருங்குவது போல கிட்டத்தட்ட 4 டீம்களை சொடுக்கி விட்டு கொண்டிருந்தார்.

கல்யாணமானவர்கள் எல்லாம், 6.30 மணிக்கு, "சந்தைக்கு போனும், ஆத்தா வைய்யும்"னு என்னை மாதிரி பேச்சுலர் அப்பாவி பசங்க (இ.வா பசங்க) தலையில மிச்ச வேலைகளை கட்டி விட்டு, நைசா கம்பி நீட்டிடுவாங்க.

நாங்களும், நைட்டு லேட்டா கிளம்பினா, கம்பேனி செலவுல சரவண பவன் பிரியாணியும், சப்பாத்தி, சென்னா மசாலா சாப்டலாம்னு சப்பு கொட்டிண்டு மாங்கு மாங்குனு வேலை பார்த்தோம்.
ஒரு வழியா, கிளைன்டுக்கு சொன்ன தேதியில டெலிவரியும் பண்ணிட்டார் அந்த புண்ணியவான்.
ஏதோ தும்பா ஏவுதளத்துலேந்து இன்சாட் 2-D விட்ட மாதிரி ஆகாசத்துக்கும் பூமிக்குமா குதிச்சார் அந்த மகானுபாவர்.

எம்.டி. ரொம்ப அப்பாவி (என்னை மாதிரி). வெளுத்தது எல்லாம் பினாயில்னு நினைப்பவர்.
20 நாள் கழிச்சு கிளைன்ட் காறி துப்ப போறான் என்ற விஷயம் எங்களுக்கு தனே தெரியும்!

உழச்சு, உழச்சு ஓடா தேஞ்ச எங்களுக்கு, கிண்டி-கதிப்பாரா கிட்ட இருக்கற அந்த 5 ஸ்டார் ஓட்டலுக்கு மதியம் லஞ்சு ஏற்பாடு ஆச்சு.
நம்ம பசங்களும், "ஓ சாமி! சோறு போடறாங்க, சோறு!"னு அவனவன் முந்தின நாள் நைட்டுல இருந்தே சாப்டாம ஏகாதசி விரதம் அனுஷ்டிக்க ஆரம்பித்து விட்டனர்.

எல்லாரையும் ஒரு பஸ்ல ஏத்தி, பாட்டு எல்லாம் போட்டு கூத்தடிச்சுண்டே போய் சேர்ந்தோம்.
வீரப்பனுக்கு ஒன்னு விட்ட ஓர்படி பையன் மாதிரி மீசை வச்சுண்டு, சும்பன், நிசும்பன் மாதிரி வாசல்ல இருந்த இரண்டு செக்யூரிடிகளை பார்த்ததும், "சார்! பில்லுக்கு போதுமான பணம் எல்லாம் கொண்டு வந்து இருக்கேளா?"னு என் டவுட்டை கிளியர் பண்ணின்டேன்.

ரிஷப்ஷன்ல சோக்கா ஒரு கிளியை போட்ருந்தா. விமான பணிபெண்கள், ரிஷப்ஷனிஸ்ட், இவாளெல்லாம் இதுக்குனே பிரம்மா படைப்பார் போலிருக்கு.
அடடா! என்ன நளினம்!, என்ன இங்லிபீஸு!, எங்க பசங்க வாயிலேர்ந்து ஜொள் ஆறு கரை புரண்டு ஓடியது.

என் நேரம், என் அப்பாவின் நண்பர் அங்கு வந்து இருந்தார். அதனால, ரொம்ப பவ்யமா இருந்தேன். என்னடா, ஆபிஸுக்கு போகாம இங்கே என்ன பன்ற?னு விசாரிப்பு. ஆபிஸ்லேர்ந்து தான் கூட்டீண்டு வந்தானு அவருக்கு புரிய வைத்தேன்.

விவரமா சொல்லலைனா, ஊருக்கு போய், "உன் பையன் 10 தடிப்பசங்களோட ஓட்டல், ஓட்டலா சுத்திண்டு இருக்கான். கூட ஏழு, எட்டு குட்டிகள் வேற!னு கொளுத்தி விடுவார் அந்த மகானுபாவர்.

அதுக்குள்ள பசங்க எல்லாம் கிளி பேச்சு கேக்க போயிட்டானுங்க.
லிப்ட் எங்கே இருக்கு?ங்க்றான் ஒருத்தன்.
லிப்டுக்கு சுவிட்ச் எங்கே இருக்கு?னு பஸ்ட் கியர் போட்டு தூக்கறான் இன்னொருத்தன்.

இப்படியாக கடலை சாகுபடி ஏக்கருக்கு 100 கிலோவை தாண்டி விட்டது.
ஒரு வழியா சாப்பிட அழைப்பு வந்தது.

சாப்பாடு பபே முறை. முதல்ல சூப் வந்தது. வெஜுக்கு எல்லாம் தக்காளி சூப், மத்தவாளுக்கு எல்லாம் சிக்கன் சூப். அதயே, மாரியம்மன் திருவிழா கூழ் மாதிரி ஆளுக்கு அரை லிட்டர் குடிச்சானுங்க. ஒருத்தன் பழக்க தோஷத்துல, "தொட்டுக்க ஊறுகாய் இல்லையா?'னு உளறி விட்டான்.

கர்மம்!னு மேனேஜர் தலையில அடிச்சுண்டார்.

அடுத்து, கார்கில் போருக்கு போற மாதிரி ஒரு கூட்டம், பந்திக்கு முந்தியது.

நான்-வெஜ்ஜுக்களுக்கு சரியான வேட்டை.

ஒரு படத்துல விவேக் சொன்ன மாதிரி, ஓடறது! ஓடறது போடறது!! பறக்கறது, நீந்தறது, எல்லாம் இருந்தது. மீன்ல இத்தனை வகை இருக்குனு எனக்கு அன்று தான் தெரிஞ்சது.

"சரக்கு வெச்சுருக்கேன்!
இறக்கி வெச்சுருகேன்!"னு அழகு காட்ற மீனாவை தான் நமக்கு தெரியும்.

சொன்ன நம்ப மாட்டீங்க, அந்த 30 - 35 பேர்ல 2 பேர் தான் வெஜ். நானும், என் டீம் லீட் (அய்யங்கார் வீட்டு அழகு). என்னை அவங்க சொந்த தம்பி மாதிரி பாசம் காட்டுவாங்க.

பாவப்பட்ட வெஜ்ஜாகிய எங்களுக்கு பிரைட் ரைஸ், பரோட்டா, கோபி, தயிர் சாதம் தான்.
அவனவன் பிளேட்டுல எல்லா ஐட்டங்களும் ரொம்பி வழிஞ்சது. காடை இல்லையா?னு ஒரு பீடைக்கு ரொம்ப குறை.

சில பேர் குடும்பம், குட்டி எல்லாம் அழைச்சுண்டு வந்திருந்தா. எங்க மேனேஜர், அவர் மனைவியை அழைச்சுண்டு வந்திருந்தார்.
எனக்கு ஒரு பிரண்ட் இருக்கான். கொஞ்ச நேரம் கழிச்சு பிறந்து இருந்தானா வாலோடு பிறந்து இருப்பான். அவ்ளோ சேட்டை.
எங்க மேனேஜர் தீவிர நயன் தாரா ரசிகர். அவர் ரிங்க்டோன் கூட அய்யா படத்துல வர "ஒரு வார்த்தை சொல்ல" பாட்டு தான்.
என் பிரண்டு தன் வேலையை காட்ட ஆரம்பிச்சான். மெதுவா என் மேனேஜர் கிட்ட போய், "சார்! ஒரு ஷூட்டிங்க் முடிஞ்ச்சு, ரெஸ்ட் எடுக்க நயன் தாரா இந்த ஓட்டலுல தான் தங்கி இருக்காளாம்"னு கொளுத்தி போட்டான். அவ்ளோ தான்! மேனேஜர், சீதையை தேட புறப்பட்ட அனுமார் மாதிரி துள்ளி குதிச்சு ரிஷப்ஷனை நோக்கி ஓடிட்டார், அதுவும் அவங்க மனைவிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாம.

பிரண்டு, மெள்ள மேனேஜர் மனைவியிடம் மேற்படி விஷயத்தை சொல்லி(கொளுத்தினு வாசிங்கோ), நாரதர் வேலைய காட்டிட்டு வந்துட்டான்.

இது ஒன்னும் தெரியாம, மேனேஜர், என் பிரண்டு கிட்ட வந்து, "என்னப்பா! நயன் தாரா எல்லாம் தங்கலைனு சொல்றாளே அந்த ரிஷப்ஷன் குட்டி"னு அப்பாவியா கேட்டார். பிரண்டு சளைக்காம, அப்படி தான் சார் அவ சொல்லுவா! நீங்க ரூம் பாய் கிட்ட விசாரிங்க!னு ஏவி விட்டான்.
இவரும், தன் முயற்சியில் சற்றும் சளைக்காத விக்ரமாதித்தன் மாதிரி கிளம்பிட்டார். ஆனா வேதாளம் மாதிரி அவர் மனைவி, வழியிலேயே மடக்கிட்டா.

அப்புறம் என்ன, ஒரு 10 நிமிஷத்துக்கு மேனேஜருக்கு ரண்டக்க! ரண்டக்க!! ரண்டக்க!!
தான்! லட்சார்சணை பலமா இருந்தது.

வெஜ்ஜுக்கு இவ்வளவு தான் ஐட்டங்களா?னு நான் விரிவாக கஸ்டமர் கேரில் குமறி விட்டேன். அதற்கு பலன் 2 நாள் கழித்து கொரியரில் அந்த ஓட்டல் கஸ்டமர் கேர் மேனேஜரிடம் இருந்து ஒரு கடிதமும், 2 பேருக்கான டின்னர் கூப்பனுமாக(60% discount) வந்தது.

அஸின் வெளி நாடு ஷூட்டிங்க் போயிருப்பதால், டின்னர் சாப்பிட வர முடியாமைக்கு வருத்தம் தெரிவித்து போன் பண்ணினா. (kutti, note the point)
ஐஸ் குட்டி போன்ல ஒரு பாட்டம் அழுதே விட்டாள். சமாதானம் படுத்துவதற்குள் போதும், போதும்னு ஆகி விட்டது.

எனவே கூப்பனை, பவ்யமா, என் மேனேஜர் கிட்ட குடுத்துடேன்.

லூஸா டா நீ?னு நண்பர்கள் கத்தினார்கள்.

விஷயம் இருக்கு இதுல, வேடிக்கை பாருங்க!னு சொல்லிட்டேன்.
அடுத்த மாதம், சுட சுட ஒரு இன்க்ரிமன்ட் வந்தது.
ஷத்ரியன் இல்லைடா நீ, சாணக்யன் டா!னு புகழ்ந்து விட்டு,ட்ரீட் என்ற பெயரில் என் கழுத்தில் மாலை போட்டு, மஞ்சள் தண்ணி தெளிச்சு, வெட்டி விட்டனர்.

பின் குறிப்பு: he hee,என் பிரண்டுக்கு, அந்த நாரதர் ஐடியாவை குடுத்தது நான் இல்லீங்கோ! நம்பிடீங்க தானே?

24 comments:

kuttichuvaru said...

sooper post ambi!! oppice-la okkanthu bayangara ROTFL!! nalla ezhuthi irukkeenga!!

I noted the point!! aana, inga thaan neenga onnu miss pannitteeng!! Asin velinaattula irukkaa-nnu sonnaale, en kooda thaan irukkaa-nnu sollave illiyaa?? naan ennoda post-la sonna dinner matter antha trip-la thaan nadanthuthu!!

Prabhu said...

ambi lol :)
samma funny aa irunthuthu...

Asin/Ice ellam old, ipo shreya thaan hot machi :)

Ram said...

//எல்லாரும், ஒழுங்கா வேலைய முடிச்சா, லஞ்ச் முடிஞ்சதும், கேம்ஸ் ஷோ எல்லாம் நடத்துவேன். சரியா?னு ஒரு பிட்ட போட்டேன்.//

Wipro pasanga Game show kkaga velaiyai seekiram mudikkirangala???
ore athirchiya irukke!!???

Butterflies said...

typical ambi post!,....appa...adangunga ambi adangunga!

மு.கார்த்திகேயன் said...

hiyO ambi..ovvoru line-um summa nagaichivai pinni pedal edukuthu..
vizhunthu sirichathula hospital poga vendiyathu agiduchchuna paththukongalEn..

summa agmark tamiz ragalai post :-)

Gopalan Ramasubbu said...

ROFTL:)

//ஐஸ் குட்டி போன்ல ஒரு பாட்டம் அழுதே விட்டாள்//

enakennamo Aish kutti ithai padicha பாட்டா serupulaye adipa nu thonuthu ;)

Sasiprabha said...

Hayyo... Hayyo... ore nagaichuvaiyaai irukkuiradhu pongo..

Story Teller said...

hehehehe...Pillaiyaiyum killivitutu thotilaiyum atureengalae... (i know u must have given that idea to ur friend!)

Anonymous said...

//சரவண பவன் பிரியாணியும், சப்பாத்தி, சென்னா மசாலா சாப்டலாம்னு சப்பு கொட்டிண்டு மாங்கு மாங்குனு வேலை பார்த்தோம்.//

appiya enna? :)

வெளுத்தது எல்லாம் பினாயில்னு நினைப்பவர் :))

Geetha Sambasivam said...

அம்பி, இன்னிக்கு என்ன எல்லாருக்கும் விளம்பரம் கொடுத்துக்கிட்டு இருக்கீங்க? கார்த்திக் ப்ளாகில் டுபுக்கு, இதிலே கார்த்திக்குக்கா?

Geetha Sambasivam said...

அம்பி, உங்க அம்மா உங்களுக்குப் பெண் பார்த்தாச்சாமே?

My days(Gops) said...

comedy'o comedy...really nice to read...

@பேச்சுலர் அப்பாவி பசங்க (இ.வா பசங்க) தலையில மிச்ச வேலைகளை கட்டி விட்டு.
ella idaithulaium ipaddi thaana?

@"தொட்டுக்க ஊறுகாய் இல்லையா?'னு உளறி விட்டான்.
he he he...idha first padicha'pa i laughd a lot..

Unknown said...

Funny post....realistic-a ezhudhi irukeenga....keep up the gud work

shree said...

hey ambi, rombo supera yeludharadaa. very funny that am laughing out aloud at times. kalakkare chandru!! :) sariyana vaaluda nee. but anegamana brahmins panra thappu - adhan non vega oru kai pakradhu - adha ne pannala, really appreciating it.

shree said...

@prabhu- yarunga adhu shreya?

Syam said...

ROFTL:)...ithuku enna expansion nu theriala aana vilundhu vilundhu sirichen (ithum athum onnu thaana)..unga narration ellaam super ambi...

Ms Congeniality said...

adhaane paathen, right from the beginning of the narration ongaloda vandha pasanga idhu pannaanga adhu panaanga nu, neenga mattum nalla pillai maadhiri sollirndheenga. Appave sandhega pattadhu kadaisi line padichona urjidhamaachu ;-)

Seri comedy aa irundhudhu post :-)

KC! said...

enikavadhu unaku oru wife vandhu, avanga irukumpodhu yaravadhu kolutha poranga...appo iruku sangu unaku! ;)

ambi said...

@kutti, danks.. Un anni asin kooda nee dinner sapda urimai irukku pa!

@prabhu, danks, shreyavaa? Asin/Aish evergreen machi.

@ram, this is prev post. romba late, anyway danks.

@shubha, Gr...rr.

@veda, he hee, athaan my dad frnd vanthutaaree!

@karthik, danks Gilli :)

@gops, danks, shishyaa, U too brutas? Gr..rr

@sasi, he hee, danks..

@delhi, satham pottu sollathengaa.. he hee..

@dubukku, chenna masala naa ennanu ungalukku theriyaathu? :)

@geetha, yes, parents started the process... How do you know? :)

@my days, bachelor pasanga romba paavam.. danks..

@bala.g, nandi...

ambi said...

@shree, happy that my post made me to laugh.. i'm a pure veg. vaalaa..? Gr...rrr (ofcourse true..!)

@syam, ROTFL - Rolling on the floor.. danks pa!

@ms.congeniality, namba matteengalee ennai! enakku theriyum :)

@sri, 6 times commentsaaaa? pullarikuthu...

@usha, correctaa sonna, enakkum athaan bayamaa irukku.. :)

தி. ரா. ச.(T.R.C.) said...

நானும், என் டீம் லீட் (அய்யங்கார் வீட்டு அழகு). என்னை அவங்க சொந்த தம்பி மாதிரி பாசம் காட்டுவாங்க
ammbi sirichunde paditha ennai en manaivi parthaparvai nalla velai Dr. Mathrubootham illai.Munbu nadodi enru oru ezhuththalar irunthar avar ippadithan ezhuthuvaar.TRC

Geetha Sambasivam said...

அம்பி.. உங்க பின்னூட்டத்தை ஏன் காணலைனு கேட்டதுக்காக எனக்கு இந்த மாதிரி துரோகம் செய்வீர்கள் என்று எதிர்பாரக்கவே இல்லை. என்வயது 17ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
என்ன கொடுமை இது? என்றும் 16 ஆன எனக்கு இது வேணும் தான்.எல்லாருக்கும் வயசு ஏறினால் எனக்கு மட்டும் இறங்கும் தெரிஞ்சுக்கங்க.

Geetha Sambasivam said...

என்ன இது, ஒண்ணுமே எழுதலை. அப்புறம் நான் சிலப்பதிகாரத்திலே இருந்து கேள்விகள் கேட்க ஆரம்பிப்பேன்.

Ravi said...

Ambi, toooo good. Your choice of words is very apt. Keep up the great work! Ippellam thamizhla azhaga ezhudharavanga ennikkai koranjutte varudhu. So keep writing!