Friday, February 22, 2008

போடுங்கம்மா ஓட்டு!

அன்பார்ந்த பிளாக்காளப் பெருங்குடி மக்களே!
நம்ம பிளாக் யூனியன் ஆரம்பித்து ஒரு வருடம் நிறைவடைய போகுது. உருப்படியா என்னத்தை கிழிச்சோம்? என நாளைய சரித்திரம் சொல்லும். (ஹிஹி, வேற எப்படி தான் சமாளிக்கறதாம்?).

சென்னை வரும் நம் யூனியன் மக்களை மிக அன்பாக தட்டி கொடுத்து, ஹோட்டலுக்கு தள்ளிகொண்டு போயி கிடா வெட்டும் நமது ஜி3 அக்காவின் பெருந்தன்மையாகட்டும், ஜிடாக்கில் சிக்கினால், மொக்கை போட்டு எதிராளியை துண்டை காணோம்! துணியை காணோம்! என ஓட வைக்கும் நமது மை பிரண்டின் தன்னிகரில்லா சேவையாகட்டும், மொக்கை போடவென்றே தனியாக ஒரு பிளாக், ஆன்மீகத்துக்கு தனி பிளாக் என பதமாக பிரித்து, இதமாக மொக்கை போடும் நம் பதிவுலக காரக்கால் அம்மையாராம் கீதா பாட்டியின் திருத்தொண்டாகட்டும், நமது யூனியனின் சேவை சொல்ல, சொல்ல புல்லரிக்க வைக்கும்.

இது தவிர, அவ்வப்போது வேலைவாய்ப்பு, பொது விழிப்புணர்வு, சுகாதாரம் சம்பந்தமாக சில பதிவுகளும் வரத்தான் செய்கின்றன.

என்னடா இழுவை?னு நீங்கள் கும்முவதற்க்கு முன்னால் மேட்டருக்கு வருகிறேன். நமது பிளாக் யூனியனையும் சிறந்த வலைப்பூவாக கருதி, சங்கமம் (படம் பெயர் இல்லை) வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுத்து இருக்கிறார்கள்.


ஓட்டு எப்படி போடனும்? என்ன செய்யனும்? என்ற விவரம் எல்லாம் இந்த சுட்டியில் உள்ளது. எனவே நம் யூனியன் மக்கள் அனைவரும் தவறாமல் இந்த வாக்கெடுப்பில் பங்கு கொண்டு நம் பிளாகுலக கடமையை நிறைவேத்திட வேண்டும்.

வாக்களிக்க கடைசி நாள் 29-பிப்பரவரி 2008. வழக்கம் போல பதிவை படித்து விட்டு கமண்ட் போடாமல் நழுவுவது மாதிரி ஓட்டு போடாமல் இருந்துவிட வேண்டாம். :))

12 comments:

mgnithi said...

attendance first..

mgnithi said...

commentum potachu... vote-um pottachu.. :-)

Velai mudinjathu :-)

Anonymous said...

hey b4 u were trying to impress thangamani, so u were putting posts on fridays, but y even now? plz b mor frequent man

Dreamzz said...

/hey b4 u were trying to impress thangamani, so u were putting posts on fridays, but y even now? plz b mor frequent man//
anony thollais comedya thaanya irukku :D

naan vote panniten

ரசிகன் said...

//சென்னை வரும் நம் யூனியன் மக்களை மிக அன்பாக தட்டி கொடுத்து, ஹோட்டலுக்கு தள்ளிகொண்டு போயி கிடா வெட்டும் நமது ஜி3 அக்காவின் பெருந்தன்மையாகட்டும், ஜிடாக்கில் சிக்கினால், மொக்கை போட்டு எதிராளியை துண்டை காணோம்! துணியை காணோம்! என ஓட வைக்கும் நமது மை பிரண்டின் தன்னிகரில்லா சேவையாகட்டும், மொக்கை போடவென்றே தனியாக ஒரு பிளாக், ஆன்மீகத்துக்கு தனி பிளாக் என பதமாக பிரித்து, இதமாக மொக்கை போடும் நம் பதிவுலக காரக்கால் அம்மையாராம் கீதா பாட்டியின் திருத்தொண்டாகட்டும், நமது யூனியனின் சேவை சொல்ல, சொல்ல புல்லரிக்க வைக்கும்.//////
அவ்வ்வ்வ். இம்புட்டு இருக்கா கழக கண்மணிகளின் சேவை?..:)))))))

அம்பியண்ணா,அடிக்கடி ஓட்டு கேக்கற தொனிய பாத்தா,ஏதோ அரசியல் பிரவேசத்துக்கு முன்னோட்டம் மதிரியே தெரியுதே?..;
ஆனா அதெப்படி அண்ணி மட்டும் கரைட்டா எதிர்கட்சிக்கே வாக்களிக்கறாய்ங்க?...:P
அவங்க நம்ம கட்சிக்கு, ஓட்டு போடனும்ன்னா,நீங்க எதிர்கட்சிய புகழ்ந்து பேச வேணாமோ?..:P:)))

ரசிகன் said...

//நம்ம பிளாக் யூனியன் ஆரம்பித்து ஒரு வருடம் நிறைவடைய போகுது. உருப்படியா என்னத்தை கிழிச்சோம்? என நாளைய சரித்திரம் சொல்லும். (ஹிஹி, வேற எப்படி தான் சமாளிக்கறதாம்?).//
கலக்கல்... சூப்பர்.. இன்ரோ...:)

Arunkumar said...

kadamai aache...potruvom.. mai/moi veppangala?

Syam said...

yemba yaarukku vote panrathunnu kadaisi varaikkum sollavae illa :-)

Anonymous said...

See HERE

நிவிஷா..... said...

ennaiyum serthupeengala?
naanum vote podaren anna

natpodu
nivisha

Ramya Ramani said...

Nice interesting Blog!!kalakarel ambi!!

Swamy Srinivasan aka Kittu Mama said...

naanum votu potuttaen.

kittu mama