Wednesday, September 02, 2009

ஓணம் வந்தல்லோ!

பத்து நாளா கேரளா முழுக்க ஒரே கொண்டாட்டங்கள். அதன் சிகரமாக இன்னிக்கு தான் திருவோணம். அது என்ன மாயமோ மந்திரமோ தெரியல, ஓணம் வந்துட்டா எங்க வீட்டு டிவி தானாகவே ஏஷியா நெட்டோ, சூர்யா டிவிக்கோ சேனல் மாறி விடுகிறது. டிவி ரிமோட்ல ஏதோ பிராப்ளம் போல. :)

ஏஷியா நெட்ல ஸ்வைன் ப்ளூ தடுப்பு முறைகளை பத்தி நவ்யா நாயர் ஒரு பேட்டி குடுத்து இருக்காங்க பாருங்க, ஆஹா, டாப் டக்கர். இங்க இப்படின்னா சூர்யா டிவில எக்னாமிக் மெல்டவுன் பத்தி கோபிகா எவ்ளோ பாயிண்ட் பாயிண்டா பேசறாங்க தெரியுமா? அடடா! ஆபிசுக்கு லீவு போட்டு கேக்கலாம், அவ்ளோ விஷயம் இருக்கு அதுல.



குலோபல் வாமிங் பத்தி ஏன் நயன்தாராவிடம் பேட்டி எடுக்க வில்லை? இதை வன்மையாக கண்ணடிக்கிறேன், சே! கண்டிக்கிறேன்.

எப்படித் தான் இவ்ளோ பொறுமையா, அழகா பூக்கோலம் போடறாங்களோ?









ஏதோ ஒரு வருஷம் திருவனந்தபுரத்துல இன்போசிஸ்ல ஓணம் கொண்டாடினாங்களாம், அதை எனக்கு மெயிலா அனுப்பனுமா? நான் கேட்டேனா? :)

என்ட கேரளம், என்ட மலயாளம்னு இருக்காம என்ட இந்தியானு ஒரு பரந்த மனசுடன் இருங்க டே! பாருங்க நானும் வருஷம் தவறாம(2007, 2008) ஓணத்துக்கு பதிவு போடறேன். :)

சரி, இப்படியே இந்த பதிவை நான் நீட்டி முழக்கினா விளைவுகள் கடுமையாக இருக்கலாம்! என கடந்த கால வரலாறு தெரிவிக்கிறது. தங்கமணி வேறு ஊரில் இல்லை, எனவே நான் முடிச்சிக்கறேன்.

29 comments:

Blogeswari said...

Enda ambi! Gopika endaanu?

Inda mallus tolla-taangamudilappa

sriram said...

அதென்ன அம்பிக்கு அம்மாநிலத்தின் மேல் அப்படியொரு அபிமானம்.. அம்மாடி எவ்வளவு ‘அ’

அன்றும் சே என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

Geetha Sambasivam said...

//தங்கமணி வேறு ஊரில் இல்லை, எனவே நான் முடிச்சிக்கறேன்.//

"அ"தானே! :)))) இல்லைனா அம்பிக்கு ஏது இவ்வளவு தைரியம்??? :P

manjoorraja said...

இனிய ஓணம் வாழ்த்துகள் அம்பி.

ஷைலஜா said...

sriram said...
அதென்ன அம்பிக்கு அம்மாநிலத்தின் மேல் அப்படியொரு அபிமானம்.. அம்மாடி எவ்வளவு ‘அ’

>>>>>>>>>>>>>>>>

அதானே?:)(இன்னொரு அ சேர்த்தாச்சு:)

பாஸ்டன் ஸ்ரீராம்க்கு பெங்களூர் ஸ்ரீராம்(அம்பி)பத்தி ஒண்ணும் தெரியலை அப்பாவியா இருக்கீங்க...! கேசரிதாஸ்(அம்பி) பத்தி நான் உங்களுக்கு போன்ல சொல்றேன் அப்றோமா என்ன?:)

ஷைலஜா said...

//
கீதா சாம்பசிவம் said...
//தங்கமணி வேறு ஊரில் இல்லை, எனவே நான் முடிச்சிக்கறேன்.//

"அ"தானே! :)))) இல்லைனா அம்பிக்கு ஏது இவ்வளவு தைரியம்??? :P

Wed Sep 02, 06:45:00 PM
//

>>>>>>>>>>>>
உங்க வாய்ல நாலு மைசூர்பாக்போடணும் கீதா ...கரெக்டா சொன்னீங்க....

வல்லிசிம்ஹன் said...

Happy Onam Ambi.

sriram said...

எங்க ரோல (நான் மற்றும் பொற்கொடி)
ஷைலஜா தனியா Handle பண்றாப்ல இருக்கு.. நடத்துங்க ஷைலஜா மேடம்.

என்னை 781 363 9168 ல் தொடர்பு கொள்ளலாம் (அம்பி பற்றி வம்பு பேச காத்திருக்கிறேன்)

அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

Porkodi (பொற்கொடி) said...

:))))) varusha varusham neenga edhuku onam post podaringa nu kekka nenachen ungluke therinju irukku! edhuku ambi ipdi thedi thedi poringa poori kattai kitta?

Porkodi (பொற்கொடி) said...

//எங்க ரோல (நான் மற்றும் பொற்கொடி)
ஷைலஜா தனியா Handle பண்றாப்ல இருக்கு.. //

Shailaja, idhai naan kanna pinnavena kandikkiren! engalaiyum aattathuku serthukkonga plssss! :(((

Porkodi (பொற்கொடி) said...

//அடடா! ஆபிசுக்கு லீவு போட்டு கேக்கலாம், அவ்ளோ விஷயம் இருக்கு அதுல.//

me sends courier to manni highlighting such lines. apovum oppiceku leave poda vendi irukkum! ;)

ஷைலஜா said...

Porkodi (பொற்கொடி) said...
//எங்க ரோல (நான் மற்றும் பொற்கொடி)
ஷைலஜா தனியா Handle பண்றாப்ல இருக்கு.. //

Shailaja, idhai naan kanna pinnavena kandikkiren! engalaiyum aattathuku serthukkonga plssss! :(((

Wed Sep 02, 08:07
>>>>>>>>>

கொடி (நீங்க)அசைந்ததும் காற்று(நான்) வந்ததே! அம்பியை கலாட்டபண்ண பெரும்படை சேர்ப்போம் ஜகத்தீரே!

Porkodi (பொற்கொடி) said...

ஹையா! பாஸ்டன், நாமளும் ஆட்டத்துல இருக்கோமாம்.. ஓடியாங்க..

நேஷனல் இன்டெக்ரேஷனுக்கு வாழும் உதாரணமே நம்ம அம்பி தானே! அந்த பக்கம் பஞ்சாபோட கடலை வறுத்தாலும் இந்த பக்கம் பொன் ஓணம் கொண்டாடுவார். அம்பை அம்பியானாலும் பெண்களூரில் முடிந்த வரை சைட் அடித்து காலத்தைத் தள்ளுவார் :) அம்பியின் தேச பற்றே பற்று.

ஷைலஜா said...

//sriram said...
எங்க ரோல (நான் மற்றும் பொற்கொடி)
ஷைலஜா தனியா Handle பண்றாப்ல இருக்கு.. நடத்துங்க ஷைலஜா மேடம்.

என்னை 781 363 9168 ல் தொடர்பு கொள்ளலாம் (அம்பி பற்றி வம்பு பேச காத்திருக்கிறேன்)

//

>>>>>>>>>>>>>>>>>>>
பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்றாலும் இன்று மாலுமாலுன்னு சுத்துவதால் வெள்ளி எழுமுன் வியாழனறு மதியம் தொலைபேசறேன் திரு இராம்!(யார் இப்படி விளக்கமா செந்தமிழ்ல கேட்டாங்கன்னு நினைக்காதீங்க...மலையாளவாசனைத்
தலைப்புகொண்ட அம்பியின் பதிவிற்கு
செந்தமிழில் இங்க ஏதாவது எழுத நினைச்சேன் அதான்:):):)

Porkodi (பொற்கொடி) said...

"அழகு அம்மணிகளிடம் அடாது ஆட்டம் ஆடும் அம்பை அம்பியின் அந்தரங்கம் அம்பலம்!"

இது எப்படி இருக்கு ஷைலா? :)

மன்னிக்கணும் இப்போ தான் ஜூனியர் விகடன் பாத்துட்டு வர்றேன் அதான்.

ஷைலஜா said...

Porkodi (பொற்கொடி) said...
////..

நேஷனல் இன்டெக்ரேஷனுக்கு வாழும் உதாரணமே நம்ம அம்பி தானே! அந்த பக்கம் பஞ்சாபோட கடலை வறுத்தாலும் இந்த பக்கம் பொன் ஓணம் கொண்டாடுவார். அம்பை அம்பியானாலும் பெண்களூரில் முடிந்த வரை சைட் அடித்து காலத்தைத் தள்ளுவார் ///
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
ச்சேச்சே அம்பி தங்கக்கம்பி பொற்கொடி...!:)

Porkodi (பொற்கொடி) said...

அடடா! அப்படியா? அனைவரும் அம்பியை அலுமினியக்கம்பி என்று அழைப்பதாக அல்லவா கேள்விப்பட்டேன்?

bhardwaj said...

ambi
now only i have started reading your blogs

another ammanchi from ambai?

best wishes

balasubramanyan vellore

Anonymous said...

poo kolam photo(the first one) romba sooper,sir!

ambi said...

வாங்க பிளாக் அக்கா, மொத போணி நீங்களா இன்னிக்கு? :)

ஸ்ரீராம், பக்கத்துலயே இருக்காங்க, நான் மாநிலத்தை சொன்னேன். அபிமானம் இருக்காதா என்ன? :p

வாங்க கீதா மேடம். :)

நன்றி மஞ்சூர் ராசா, வல்லி மேடம். :)

ஷைலக்கா, போன் வேறயா? நடக்கட்டும். கீதா மேடம் வாயில ஒரு மை பாவே போதும். அவங்க உடம்பு தாங்காது. :))

Anonymous said...

enga ambi,thangamani nijamave oorukku poittanga pola irukku!!!!ayyo naanum 2 naalikku,asianet,surya ellam parthen..enakkennavo adhula vara programmme kaatilum,nagai kadai ads romba pidichirukku...nijamave pon onam celebrate panraanga...indha maadhiri ads pathadhila mathadhu ellam kannila pada veyilla....any ways unga near and dearkku onam ashamsagal solliteenglla...
thangamanikku,onam shopping undaa???(edho ennal annadhu)ungallukku pudicha pandigai aache!!
nivi.

sriram said...

பொற்கொடி
“அழகு அம்மணிகளிடம் அடாது ஆட்டம் ஆடும் அம்பை அம்பியின் அந்தரங்கம் அம்பலம்!" ’’ பாவம்மா அம்பி அழுதுடப்போறாரு...
’’அடடா! அப்படியா? அனைவரும் அம்பியை அலுமினியக்கம்பி என்று அழைப்பதாக அல்லவா கேள்விப்பட்டேன்’’
இது ஜூப்பரு..
கேள்விப்பட்டேனுக்கு பதிலா “அவதானித்தேன்” போட்ட்ருந்தா இன்னொரு அ வந்திருக்கும், பிளாக்ல இப்போ இந்த வார்த்தைதான் Famous

Anonymous said...

மலையாளிகள் சிவப்பு அரிசி சாதம் சாப்பிடுகிறார்கள். அது புழுகலரிசியா அல்லது பச்சரிசியா?

Is it nutritionally better than other varieies of rice, whether purboiled or raw?

Could you tell me?

Geetha Sambasivam said...

//மலையாளிகள் சிவப்பு அரிசி சாதம் சாப்பிடுகிறார்கள். அது புழுகலரிசியா அல்லது பச்சரிசியா?//

புழுங்கலரிசி தான், சிவப்புக் கார் அரிசி, சிலருக்கு அதில் இட்லி, தோசை கூடப் பிடிக்கும். அரிசி சிவப்பாகவே இருக்கும். இதைத் தவிர புட்டு அரிசினும் ஒரு வகை இன்னும் கொஞ்சம் சிவப்பாய் இருக்கு. அதில் தான் குழாய்ப்புட்டு செய்வாங்க.!
அப்பாடா, ஓணம் சமையலில் ஏதோ ஒண்ணாவது சொல்லி ஓணம் கொண்டாடிட்டேன், தாமதமானாலும்.

@ஷைலஜா, மை.பா. வேண்டாம், பயம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மாஆஆஆ இருக்கே! பல் பத்திரமா இருக்குமா? :P

ரெண்டு said...

அது ஏன்னு தெரியலீங்க, கேரளா பசங்கள மட்டும்(note this point) எனக்கு புடிக்காது. என்னோட பிரண்ட்ஸ் எனக்கு வயத்தெரிச்சல்னு சொல்றனுக. உண்மையா இருந்தா வர்ற கஷ்ட்ங்கள பாருங்க...............

குப்பன்.யாஹூ said...

but whatever it is, Kerala still does not bring richness in celebrations.

I want Director Shankar to take one malayala film. I want to see that.

Anonymous said...

Just started reading your blog from your first post.. Interesting :)

sriram said...

அம்பி
அடுத்த மல்லு Festival வந்தால்தான் அடுத்த பதிவு போடுவீங்களா??

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

Anonymous said...

電波拉皮歐化廚具
外籍新娘果凍矽膠
流行服飾室內設計
汽車旅館日光花園
法拍屋隔熱紙
雙眼皮新彩整形
大陸新娘高雄租車
中秋禮盒肉毒桿菌
瑜珈教室高雄旅遊
保健食品乳酪蛋糕
台中住宿墾丁旅遊
整形外科首頁科技