Monday, March 31, 2008

பிரம்ம சாம்பார் குடிக்கலாம் வாங்க!

இந்த கூத்து தானே எல்லா ஆபிஸ்லயும் நடக்குது!

இது முழுக்க முழுக்க கற்பனையே! என இந்த தருணத்தில் நான் எதிர்கட்சிகளுக்கு சொல்லி கொள்கிறேன்.

என்ன டீச்சர்! சந்தோஷமா?

இது சத்யமா நானில்லை. நம்புங்க எஜமான்! :))

வ.வா சங்க போட்டிக்காக தான் இதேல்லாம்.

Saturday, March 01, 2008

கும்மி அடிக்க வாரீகளா?

வ.வா சங்கத்தில் நான்காம் பதிவு வெளி வந்து விட்டது. காண தவறாதீர்

சற்றே பசி எடுக்க துவங்கும் பகல் சுமார் பன்னிரெண்டு மணிவாக்கில் ஆபிசில் நாம் பிசியாக வேலையில் மூழ்கி இருந்த போது (சரி, இதுக்கே சிரிச்சா எப்படி?) ஒரு போன் கால். யாருனு பாத்தா அட நம்ம தல கைப்புள்ளை. பரஸ்பரம் ஷேமம்! உபயஷேமம், எல்லாம் விசாரித்தபின் மேட்டருக்கு வந்தார் நம்ம தல.

வ.வா.சங்கத்தில் மார்ச் மாத அட்லாஸ் வாலிபராக நம்மை தேர்ந்தேடுத்துள்ளதாகவும், ஒரு மாதம் அங்க வந்து கும்மி அடித்து சிறப்பிக்க வேணும்! என அவர் சொன்னதை கேட்டவுடன், நமக்கு ஒரு சின்ன தயக்கம். என்னடா! எம்பெருமான் இலவச கொத்தனாரும், இளயனார் கண்ணபிரானும் கட்டிகாத்த வ.வா.சங்கத்தில் இந்த குழந்தை வந்து என்ன செய்ய போறது? நீங்களே சொல்லுங்கள்!

அட்லாஸ் குழந்தை கேட்டகரியில் வர வேண்டிய நம்மை இப்படி வாலிபர் கேட்டகரியில் சேர்த்தால் எப்படி அது நியாயம்..? நாம ஏற்கனவே ஒரு இளஞ்சிங்கம்! என்பது வேறு விஷயம் என நைசா சைடு கேப்பில் கோல் போட முயற்சிக்க, தங்கமணிக்கு தொண்டையில் கிச் கிச். பொதுவாக தொண்டையில் கிச் கிச் வந்தால் விக்ஸ் சாப்பிடனும், இல்லாட்டி நன்றாக காறி துப்பி விட வேண்டும். அது என்னவோ முக்ய தருணங்களில் எல்லா தங்கமணிகளும் இரண்டாவது வழியை தான் கடைபிடிக்கிறார்கள்.

சரி, வருடம் ஒரு முறை திருஷ்டி கழிக்க நம்மை கூப்பிட்டு இருக்கிறார்கள் போலும். ஆக மார்ச் மாதம் வவா சங்கத்தில் தான் நம்ம கச்சேரி. ஆமா! இங்க கிழிச்சாச்சு! என்ன செய்ய? வீட்லயும், ஆபிஸ்லயும் ஒரே வேலை. ஒத்து கொண்டதால் வாரம் ஒரு பதிவாவது அங்கே கண்டிப்பாக போட்டு விடுவேன்! என்ற நம்பிக்கையுடன் உங்கள் ஆதரவை வழக்கம் போல் எதிர்பார்த்து இருக்கிறேன்.

Friday, February 22, 2008

போடுங்கம்மா ஓட்டு!

அன்பார்ந்த பிளாக்காளப் பெருங்குடி மக்களே!
நம்ம பிளாக் யூனியன் ஆரம்பித்து ஒரு வருடம் நிறைவடைய போகுது. உருப்படியா என்னத்தை கிழிச்சோம்? என நாளைய சரித்திரம் சொல்லும். (ஹிஹி, வேற எப்படி தான் சமாளிக்கறதாம்?).

சென்னை வரும் நம் யூனியன் மக்களை மிக அன்பாக தட்டி கொடுத்து, ஹோட்டலுக்கு தள்ளிகொண்டு போயி கிடா வெட்டும் நமது ஜி3 அக்காவின் பெருந்தன்மையாகட்டும், ஜிடாக்கில் சிக்கினால், மொக்கை போட்டு எதிராளியை துண்டை காணோம்! துணியை காணோம்! என ஓட வைக்கும் நமது மை பிரண்டின் தன்னிகரில்லா சேவையாகட்டும், மொக்கை போடவென்றே தனியாக ஒரு பிளாக், ஆன்மீகத்துக்கு தனி பிளாக் என பதமாக பிரித்து, இதமாக மொக்கை போடும் நம் பதிவுலக காரக்கால் அம்மையாராம் கீதா பாட்டியின் திருத்தொண்டாகட்டும், நமது யூனியனின் சேவை சொல்ல, சொல்ல புல்லரிக்க வைக்கும்.

இது தவிர, அவ்வப்போது வேலைவாய்ப்பு, பொது விழிப்புணர்வு, சுகாதாரம் சம்பந்தமாக சில பதிவுகளும் வரத்தான் செய்கின்றன.

என்னடா இழுவை?னு நீங்கள் கும்முவதற்க்கு முன்னால் மேட்டருக்கு வருகிறேன். நமது பிளாக் யூனியனையும் சிறந்த வலைப்பூவாக கருதி, சங்கமம் (படம் பெயர் இல்லை) வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுத்து இருக்கிறார்கள்.


ஓட்டு எப்படி போடனும்? என்ன செய்யனும்? என்ற விவரம் எல்லாம் இந்த சுட்டியில் உள்ளது. எனவே நம் யூனியன் மக்கள் அனைவரும் தவறாமல் இந்த வாக்கெடுப்பில் பங்கு கொண்டு நம் பிளாகுலக கடமையை நிறைவேத்திட வேண்டும்.

வாக்களிக்க கடைசி நாள் 29-பிப்பரவரி 2008. வழக்கம் போல பதிவை படித்து விட்டு கமண்ட் போடாமல் நழுவுவது மாதிரி ஓட்டு போடாமல் இருந்துவிட வேண்டாம். :))

Friday, February 01, 2008

பொங்கல் ரிலீஸ்

இந்த சன் டிவியில் கோட் சூட் அணிந்து, சலூன் கடை சேரில் கால் மேல் கால் போட்டு கொண்டு திரை விமர்சனம் செய்ய வருவாரே ஒருத்தர், அது மாதிரி என்னை நினைத்து கொண்டு மேலே படியுங்கள். பொங்கலுக்கு ரீலீஸ் ஆன படங்களில் பீமா, பழனி, மற்றும் காளை ஆகிய படங்களை தான் இப்போ கிழிக்க போறோம்.

முதலில் பீமா. படத்துக்கு இந்த பேர் வைச்சதுக்கே இயக்குனருக்கு சுத்தி போடனும். ஏற்கனவே தர்மா, அர்ஜுனா, கர்ணா எல்லாம் வந்து விட்டது. இந்த வரிசையில் இனி நகுலா, துரியோதனா, துச்சாதனா! சகுனினு வரலாம். கெளரவர்கள் நூறு பேர் பெயரும் என்ன?னு தெரிஞ்சா நம் தமிழ் இயக்குனர்களுக்கு ரொம்ப வசதியா இருக்கும்.

சரி படத்துக்கு போவோம்! விக்ரம் இந்த படத்தில் பஜாஜ் பல்சர் பைக் மாதிரி கும்முனு இருக்கார். படத்தில் அவர் வரும் பைக்குக்கும் அவருக்கும் வித்யாசமே தெரியலை. பாட்டி வடை சுடுவது போல டுமீல், டுமீல்னு படம் முழுக்க துப்பாக்கியால் யாரையோ சுட்டு கொண்டே இருக்கார். பாவம்! தயாரிப்பாளர் சம்பள பாக்கி வைத்து விட்டாரோ என்னவோ? படத்தில் பிரகாஷ் ராஜ் கூட இருக்கிறார். இப்படி பத்து படம் நடித்தால் தான் அவரால் மொழி போன்ற படம் தயாரிக்க முடியும் என்பதால் மன்னித்து விடுவோம்.

த்ரிஷா டூயட் பாடல் காட்சிகளில் காத்தாட வளைய வருகிறார் என்பதால் இசை மற்றும் பாடல் வரிகளை கவனிக்கவே முடியலை. அப்படியே கவனிக்க முயன்றாலும் (இசையை தான் சொன்னேன்) தங்கமணி டக்குனு கார்ட்டூன் நெட்வர்க் மாத்தி விடுகிறார். என் நிலையை பாத்து டாம் & ஜெர்ரி கூட விழுந்து விழுந்து சிரிக்கிறதோ?னு ஒரு சந்தேகம் அடி மனதில் உள்ளது.

பொதுவாக லிங்குசாமி படங்களின் கிளைமாக்ஸ் எல்லாம் ஒரு பாட்டில் பீரை இரண்டு லிட்டர் தண்ணி கலந்து குடித்தது போல சப்புனு இருக்கும். இந்த படத்திலும் அப்படித்தான். இந்த பீர் மேட்டர் எல்லாம் நண்பன் ஒருத்தன் தான் டெக்னிகல் சப்போர்ட் என்று நான் சத்யம் செய்தால் நீங்கள் நம்பி தான் ஆகனும்!
ஆக மொத்ததில், பீமா - பலசாலி இல்லை!

அடுத்து வருவது பழனி. படத்தின் பெயரை கேட்டவுடன் முருகன் பத்திய பக்தி படம் என நினைத்து, பதிவு போட ஏதாவது மேட்டர் கிடைக்கும் என சப்பு கொட்டிகொண்டு ஆன்மிக பதிவர்களான அண்ணன் கண்ணபிரான், ஜி.ரா, கீதா பாட்டி மற்றும் சிலர் தியேட்டருக்கு காவடி எடுக்க வேண்டாம் என இந்த சமயத்தில் எச்சரிக்கபடுகின்றனர்.

பாய்ஸ் படத்தில் அறிமுகமான பலரில் ஓரளவுக்கு உருப்பட்டது பரத், மற்றும் சித்தார்த் (இந்த வரியை படித்தவுடன் மை பிரண்ட் முகத்தில் பிரகாசமாய் பல்ப் எரியுது பாருங்க).

அஜித்தை வைத்து திருப்பதி என்ற முழு நீள காமெடி வெற்றி படம் குடுத்த இயக்குனர் பேரரசு "நல்ல வெயிட்டான ரோல்"னு பரத்துக்கு பஞ்சாமிர்தம் குடுத்திருக்கிறார்.

"வெட்டி சீவ நான் ஒன்னும் இளனி இல்ல பழனி" போன்ற காமெடி வசனங்களுக்காகவே படத்தை கண்டிப்பா பாக்கனும். ஏனேனில் வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும். பூ பூத்து, காயாகி, பழமாகி...னு பல்லை கடித்து கொண்டு பரத் வசனம் பேசி முடிக்கும்போது வில்லனுக்கு மட்டுமல்ல, நமக்கும் கொட்டாவி வருவது நிச்சயம்.

ஆக பழனி தயாரிப்பாளருக்கு மொட்டை! ரசிகர்களுக்கு அரோகரா!

அடுத்து வருவது சிம்பு நடித்த(?) காளை. அட பெயரை கேட்டவுடன் களுக்குனு யாருப்பா அங்க சிரிக்கறது? பொங்கல் சமயத்தில் படம் ரிலீஸ் என்பதால் காளைனு பெயர் வைத்தால் படம் தறி கெட்டு ஓடி விடும் என முடிவு செய்து விட்டார்கள் போலும். உண்மை தான்! தியேட்டரை விட்டு படம் தறி கெட்டு ஓடுகிறது, ரசிகர்களும் தான்.

நீளமாய் முடி வைத்த சிம்புவை அடிக்க வரும் அடியாட்களும் நீளமாய் ஹேர்ஸ்டையிலில் இருப்பதால் எல்லோருமே அடியாட்களாய் தெரிவதை தவிர்க்க முடியலை. "டண்டணக்கா டணக்கு டக்கா" என செவிக்கு இனிமையாய் பாடல்களை கேட்கும் போது, தயாரிப்பு செலவை குறைக்க பேசாம சிம்பு அப்பாவையே பாட்டு எழுத சொல்லி விட்டனரோ?னு நமக்கு சந்தேகம் வருகிறது. ஹிரோயின் பெயர் நினைவில் இல்லை.

பாடல்களை படமாக்கிய விதத்தை பாக்கும் போது சென்சார் போர்டில் உள்ளவர்கள் பாதி படத்தில் எழுந்து போய் பக்கோடா சாப்பிட போய் விட்டனர் என நினைக்கிறேன்.அனேகமாக எல்லா பாடல்களுமே ஏதோ விஜய் டிவியில் வரும் ஜோடி நம்பர் ஒன் சீசன்:ஐந்து பார்ப்பது போல் உள்ளது. ப்ரித்விராஜ்(எ) பப்லு தான் முதல் நாள் முதல் காட்சி முதலில் டிக்கட் எடுத்து தியேட்டரில் குலுங்கி குலுங்கி சிரித்தார் என ரகசிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மொத்தத்தில் காளை - ரொம்பவே முட்டி விட்டது.

பழனியையும் காளையையும் ஆஸ்கார் நாமினேஷனுக்கு இந்தியா சார்பாக அனுப்பியே தீருவோம்! என இரண்டு இயக்குனர்களும் அடம் பிடிக்கிறார்களாம்.

வெற்றி பெற நம் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Friday, January 25, 2008

அவுட்லுக்

உங்கள் கம்பனி தனியாக இமெயில் ஐடி குடுத்து இருக்கிறதா? அப்படினா இந்த பதிவுக்கும் உங்களுக்கும் நெருங்கிய சம்பந்தம் உள்ளது. அதுக்காக மற்றவர்களுக்கு தொடர்பில்லைணு அர்த்தம் கொள்ள கூடாது.

அடிச்சு பிடிச்சு டிராபிக்ல சிக்கி ஒரு வழியா ஆபிஸ் போய், கணினி பொட்டியை தொறந்தவுடன் நாம், சரி, நான் செய்யும் முதல் வேலை என்ன? அவுட்லுக்கை தொறந்து என்ன மெயில் வந்ருக்குனு பாக்கறது தானே?

என்னதான் யாஹூ, ஜிமெயில்னு இருந்தாலும், கம்பெனி ஐடியில வர ஈமெயிலை படிக்கற சுகமே அலாதி.

காலையில், ஒரு கரடி கையில ரோஜா பூவை வைத்து கொண்டு குட் மார்னிங்க் சொல்லும் மெயிலாகட்டும், மதியம் புவா முடிந்ததும் ஒரு அரை மயக்கத்தில் நாம் என்ன தட்டுகிறோம்?னு நமக்கும் தெரியாம, கணினிக்கும் தெரியாத அந்த பேரானந்த நிலையை அடையும் போது என்ன தூக்கமா?னு வரும் மெயிலாகட்டும், சாயந்தரம் டீ குடித்த சூடு தணிவதற்குள் ஐஸ் குட்டி முழுகாம இருக்காளாம்!னு என்டி.டிவி கர்ம சிரத்தையாக அளித்த ரிப்போர்டை காப்பி பேஷ்ட் பண்ணி நமக்கு வரும் மெயிலாகட்டும் அடடா! நாம் பிறந்த பயனை அடைந்தே விடுவோம்.

வெள்ளிகிழமையானா போதும் "ஏ மானிடா திங்ககிழமை உலகம் இருக்குமோ இருக்காதோ, அதனால அடுத்து வரும் இரண்டு நாட்களில் வாழ்க்கையை முழுதும் வாழ்ந்து விடு!" என கருத்து கந்தசாமிகள் வீக் எண்ட் ஸ்பெஷல் மெயில் அனுப்புவதை தன் தலையாய கடமையாக கொண்டுள்ளனர்.

இது போதாதுனு பல பேர் ஊர்ல இருக்கற மொக்கை சைட்டுல அதாவது வெப் சைட்டுல எல்லாம் போயி எனக்கும் கம்பெனி ஐடி இருக்கு! எனக்கும் கம்பெனி ஐடி இருக்கு!னு போஸ்டர் அடிச்சு ஓட்டாத குறையா ரிஜிஸ்டர் பண்ணிட்டு வந்து விடுவர்.
அப்புறம் என்ன? இந்தா பிடினு அவனும் தினமும் "விருச்சிக ராசி நேயர்களே! இன்று உங்கள் பதிவுக்கு கமண்ட் போடாம கமுக்கமா படிச்சுட்டு போற கூட்டம் தான் அதிகம்! கவனமா இருக்கனும்"னு ஒத்த ரூவா பொட்டு வெச்ச ஓம் உலக நாதன் ரேஞ்சுக்கு தின, வார, மாத பலன் எல்லாம் அழகாய் அனுப்பி வைப்பான்.

ஏதாவது ஒரு ஏடாகூட வெப்சைட்காரனுக்கு நம்ம ஐடி தெரிந்து விட்டால் போதும், டாலருக்கு நாலு நயாகரா வாங்கிக்கோ! வயாக்ரா வாங்கிக்கோ!னு மெயில் அள்ளி விடுவான்.

நம்ம பாசக்கார மக்கள் மட்டும் என்ன சும்மாவா? தியேட்டருக்கு போனா பக்கத்து சீட்ல யாரு இருக்கா?னு பாக்காம உன் சீட்டுல ஊசி இருக்கா?னு பாரு. இப்படி தான் ஐதராபாத்துல ஐதர் அலி உக்காந்த சீட்டுல எயிட்ஸ் பரப்புற ஊசி இருந்ததாம்! இந்த மெயிலை ஐந்து பேருக்கு அனுப்பினா ஐஸ் குட்டி கனவுல வருவா! பத்து பேருக்கு அனுப்பினா பத்ம ப்ரியா வருவா! 15 பேருக்கு அனுப்பினா...னு பீதியை கிளப்பி விடுவர்.

சாப்பிட்ட பின், உடனே ஜில்லுனு தண்ணி குடிச்சா கான்சர் வரும், பழங்களை உணவு உண்ட பின் எடுத்து கொண்டால் கக்கா வரும்!னு இந்த லிஸ்ட் நீண்டு கொண்டே போகும்.

ஆபிஸில் இந்த யாஹூ, ஜிமெயில் எல்லாம் தடா செய்யப்பட்ட திக்கற்றவர்களுக்கு அவுட்லுக்கே துணை! சதா சர்வ காலமும் ஜிமெயிலிலேயே மோன நிலையில் தவம் கிடக்கும் ஒரு க்ரூப்புக்கு(இப்போ உங்களுக்கு ஜி3 அக்கா, ரசிகன் எல்லாம் நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பில்லை) தப்பி தவறி சவுக்கியமா?னு மெயில் அனுப்பினா நம்ம ஐடிக்கு சும்மா வளைச்சு வளைச்சு கும்மி அடித்து விடுவார்கள்.

ஒரு கட்டத்தில் நமக்கு வரும் மெயிலுக்கு, நமது ஆபிஸில் பொழுது போகாமல் பிளாக் படித்து கொண்டிருக்கும் நாகை சிவா போன்ற நெட்வர்க் அட்மின்களே பதில் போடும் அளவுக்கு நம் இன்பாக்ஸ் எகிறி விடும்.

இந்த களேபரத்தில், "சாயந்தரம் வரும் போது அரைகிலோ தக்காளி, மற்றும் எலுமிச்சம்பழம் வாங்கி வரவும்! வழக்கம் போல, கறிவேப்பிலைக்கு தனியாக காசு குடுத்து ஏமாற வேண்டாம்"னு பின்குறிப்பு போட்டு தங்கமணியிடமிருந்து வந்திருக்கும் அதிமுக்யமான மெயிலை காண தவறிவிட்டால், சாலமன் பாப்பையா சொன்ன மாதிரி, இந்த நாள் இனிய நாளாகி விடும்.

இரண்டு வருடங்களுக்கு ஒருதரம், ஒரு கம்பெனி விட்டு இன்னொரு கம்பெனி தாவும் என்னை போன்ற வானரங்களுக்கு, அட்ரஸ்புக்கில் இருக்கும் ஈமெயில் ஐடிகளை சிந்தாமல் சிதறாமல் கொண்டு போவதே பெரிய வேலை.

புது கம்பெனியில் பிளாக் எல்லாம் பிலாக் ஆகாமல் இருக்கனும்!
நம்ம கணினியில் சீன, ஜப்பான் மொழி எல்லாம் வராமல் தமிழ் எழுத்துக்கள் தெரியனும், நாம் உட்காரும் சீட் டேமேஜர் சீட்டுக்கு முதுகுபக்கமா இருக்கனும், அப்ப தான் நம்ம வழக்கமான தமிழ்தொண்டை(ஹிஹி) தங்குதடையில்லாமல் செய்ய முடியும்! போன்ற நியாயமான கவலைகள் எல்லாம் தலைவிரித்தாடும்.

Wednesday, January 16, 2008

எழுதியதில் பிடித்தது

அன்புடன் வல்லி அம்மா ஒரு கொக்கியில் என்னை மாட்டிவிட்டு விட்டார்கள். ஏற்கனவே ரசிகனின் டேக் பாக்கி. ஆனால் நாம் எழுதுவதில் முக்கால்வாசி மொக்கை வகை தான் என்பதால் தனியா நாம வேற ஒரு டேக் எழுதனுமா?னு ஒரு யோசனை. அதனால கோச்சுகாதீங்க ரசிகன்.

அடியேன் எழுதியதில் பிடித்தது எது?னு ஒன்று! இரண்டு!னு வரிசைபடுத்தி, கீதா பாட்டி மாதிரி, மன்னிக்கவும், அவ்வையார் மாதிரி நமக்கு நாமே திட்டப்படி ஒரு விளம்பரம் தேங்க்!னு சுட்டி(லிங்க்) குடுக்கனும்.

ஆஹா! கைல கிடைச்ச லட்டு போல அருமையான வாய்ப்பு. விட்ருவோமா என்ன? இதோ:

1) சென்னையில் நான் வேலை பாத்த போது நடந்த ஆபிஸ் பார்ட்டி தான் நான் மிகவும் ரசித்து எழுதியது.
(பார்ட்டி என்றால் எல்லோரும் சந்திக்கும் நிகழ்ச்சி! என பொருள் கொள்ளவும்.)

2a) இதே மாதிரி நாங்கள் கலந்து கொண்ட ஒரு இசை போட்டி பற்றிய பதிவுக்கு தான் இரண்டாம் இடம்.
2b) தங்கமணியை பொண்ணு பாக்க போன நிகழ்வுகள் பற்றிய பதிவும் இரண்டாம் இடத்தை பிடிக்கிறது. (ஹிஹி, மூணாம் இடம் குடுத்தா என்ன நடக்கும்?னு எங்களுக்கு தெரியாது?)

3) தீபாவளிக்கு(பாவனா நடிச்ச படம் இல்லை) பஸ் டிக்கட் எடுத்த நிகழ்வு பத்திய பதிவு மூணாம் இடத்தை பிடிக்கிறது.

ஆன்மீக பதிவுகள், என்ன தான் நான் கஷ்டப்பட்டு எழுதினாலும், "எல்லா புகழும் தம்பி கனேசனுக்கே!" என எதிர் கட்சிகள் முழங்குகிறார்கள்.
சரி, பரவாயில்லை, கந்த சஷ்டி விழாவின் போது நான் ரொம்ப ரசித்து, உருகி எழுதியது என் மனதுக்கு நிறைவை தந்த பதிவு.

நான் டேக் செய்ய விரும்பும் நபர்கள்:

1) கண்ணபிரான் ரவி சங்கர் அண்ணா: ஆன்மீகத்தில் பட்டய கிளப்பும் பதிவர்.

2) கைபுள்ளை: காமடி, பயண குறிப்புகள், குவிஜுனு ஒரு நடமாடும் தகவல் சுரங்கம். இட்டிலி நல்லா சாப்ட்டா வந்ருக்கா தல? :)

Sunday, January 06, 2008

சுந்தர காண்டம்

ராமாயணத்தில் ராமனின் சிறப்பை சொல்ல பல பகுதிகளாக(காண்டங்களாக) பிரித்த கம்பர், சுந்தர காண்டம் என ஒரு பகுதிக்கு பெயரிட்டுள்ளார். இந்த பகுதியில் மட்டும் முழுக்க முழுக்க அனுமனின் சிறப்பை நமக்கு விளக்குகிறது. சுந்தர காண்டம் படித்தால் முழு ராமயணமே படித்த மாதிரி. ஏனேனில் சீதையை அசோக வனத்தில் பார்க்கும் அனுமன், ராமனின் பிறப்பு, வளர்ப்பு என அத்தனையும் பாட்டாக பாடி விடுகிறார். மேலும் துயரம் கொள்ளும் சீதையை தேற்றும் விதமாக, "ராவண வதம் நடந்து, நீங்கள் இருவரும் சந்தோஷமாக அயோத்தி சென்று ராஜ்ய பரிபாலனம் செய்வீர்கள்!" என முழு ராமாயணத்தையும் சொல்லி விடுகிறார்.
சுந்தரன் என்றால் அழகன் என பொருள்படும். உருவத்தால் மட்டுமல்ல, குணத்தால், நல்ல மனதால், இனிமையான வார்த்தைகளால் எவர் ஒருவர் பிரகாசிகின்றாரோ அவரே சுந்தரன். தமது இனிமையான, புத்திசாலித்தனமான பேச்சால், துயரத்தில் வாடும் ராமனையும், சீதையையும் தேற்றும் அனுமன் சுந்தரன் தானே!
என்ன தான் ராமன் தெய்வ அம்சமென்றாலும், மனித ஜென்மம் எடுத்ததால், மனைவியை பிரிந்த துயரால் பலவாறு புலம்ப, அப்போழுது அனுமனே தக்க வார்த்தைகள் பேசி தேற்றுகிறான்.
அதே போல வரங்கள் பல வாங்கி இருந்தாலும், ஈஸ்வர பட்டமே பெற்று இருந்தாலும், பிறர் மனை நோக்கும் ஈனச் செயலை ராவணன் செய்துவிடுகிறான். இலங்கைக்கு செல்லும் அனுமன் கடைசி முயற்சியாக ராவணனுக்கு நல்ல புத்தி சொல்கிறார்.
ஆக, பிறப்பால் குரங்காக அவதாரம் எடுத்தாலும், மனிதனாய் பிறந்த ராமனுக்கும், வல்லமை படைத்த அரக்க குலத்தில் பிறந்த ராவணனக்கும் புத்தி சொல்லும் உயரிய நிலைக்கு அனுமன் உயர்கிறார்.
சுருங்க சொல்லி பொருள் விளங்க வைப்பதில் அனுமனுக்கு இணையே இல்லை.
"கண்டேன் கற்பின் கனலை" என்ற ஒற்றை வரியில் தான் எத்தனை பொருள்?
1) எந்த காரியத்துக்கு நான் சென்றேனோ அது ராமன் அருளால் வெற்றி என சூசகமாக, அடக்கமாக சொல்கிறார் அனுமன்.
2) சீதை உயிரோடு இருக்கிறாள், மேலும் சீரிய கற்போடு இருக்கிறாள் என மிக அழகாக தெரிவிக்கிறார் அனுமன்.

இவ்வளவு சிறப்புகள் பெற்றிருந்த போதும், அதை பற்றி துளியும் கர்வம் கொள்ளாமல், "தன்னடக்கமே உன் பெயர் அனுமனா?" என வியக்கும் வண்ணம், ராம பட்டாபிஷேகத்தின் போது, ராமனின் காலடியில் பவ்யமாக அமர்ந்திருந்து, இந்த பூவுலகில் எங்கெல்லாம் ராம நாமம் ஜெபிக்கபடுகிறதோ அங்கெல்லாம் வந்து சேவை சாதிக்கும் அந்த அனுமன் அவதரித்த திருநாள் மார்கழி மாதம் அமாவாசை திதியும் மூல நட்சத்திரமும் கூடிய நன்னாள் வரும் செவ்வாய்கிழமை(8th ஜனவரி) வருகிறது. இந்த நன்னாளில் சின்ன திருவடி என போற்றப்படும் அஞ்சனா மைந்தன், வாயு குமாரன், வானரவீரன், ராமதூதன், பக்தர்களின் குரலுக்கு ஓடி வருபவன் எல்லா வளங்களையும், என்றும் மாறா தன்னடக்கத்தையும் நமக்கு தரட்டும்.


சென்ற வருட பதிவு இங்கே!

Monday, December 31, 2007

இனிய (ஆங்கில) புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்


தனித்தனியா மெயில் அனுப்ப சோம்பலா இருப்பதால் இப்படி போஸ்டர் அடித்து வாழ்த்து சொல்லியுள்ளேன்.
பதிவு போட்டுவிட்டு கருத்து சொல்லலைனா எப்படி..?
ஆங்கில புத்தாண்டை கொண்டாடுகிறேன் பேர்வழி!னு இன்று பல ஸ்டார் ஹோட்டல்களில் ஆட்டம் பாட்டம் கேளிக்கை என தூள் பரக்க போகிறது என்பது ஊரறிந்த ரகசியம். மார்கட் போன பல நடிகைகள் எல்லாம் வந்து நடனமாடி புத்தாண்டை வரவேற்க போகிறார்களாம். (தமிழ் குடிதாங்கிகள் இன்னும் கோதாவில் குதிக்க வில்லையா? )
இந்த விஷயங்களுக்கு காசை சும்மா தண்ணீயா(தண்ணிக்கும்) செலவழிக்கும் மக்கள் மூன்றில் ஒரு பங்காவது தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை வழங்கி போற வழிக்கு புண்ணியமும், இருக்கும் வரைக்கும் வருமான வரி விலக்கும் பெற்று கொள்ளலாமே!

Saturday, December 29, 2007

போடுங்கம்மா ஓட்டு!

அன்பார்ந்த பிளாக்காளர் பெருமக்களே! சர்வேசன் நடத்தும் கதைப்போட்டி பற்றி கேள்விபட்டிருப்பீர்கள். நமக்கு விழபோவது என்னவோ ஒரு ஓட்டு தான், அதுவும் என்னுடைய ஓட்டு தான்! என நன்றாக தெரிந்து இருந்தும், மனம் தளராமல் பிரசாரத்தை வீட்டிலிருந்தே ஆரம்பிக்கலாம் என முடிவு செய்து, தங்கமணியிடம் கேட்டால், வழக்கம் போல இதெல்லாம் ஒரு பொழப்பா? என்பதையே ரொம்ப டீசன்டா சொன்னதில் இனி வழியில்லை என்பதால் இந்த பதிவு.
பிளாக்கில் பதிவு போட்டு கமண்ட் பொட்டியை தொறந்து வைத்து நாம் தேவுடு காத்து கிடந்தால், அனானியாக வந்து ஆப்படித்த கூட்டம் ஒரு பக்கம் என்றால் சத்தமே போடாமல் வந்து பதிவை படித்து விட்டு இடத்தை காலி செய்த கூட்டம் மறுபுறம். இதையெல்லாம் மீறி போனா போகுது!னு சில நல்லவர்கள், வல்லவர்கள் வந்து போவது மனதுக்கு ஆறுதலாய் இருக்கிறது.

சரி மேட்டருக்கு வருவோம். இந்த லிங்கில் போய் உங்களுக்கு பிடித்த கதையை தேர்வு செய்து உங்கள் ஓட்டை போட்டு விடுங்கள். எனக்கு ஓட்டு போடுங்கள்! என நான் கேட்க போவது இல்லை.

"எம்பெருமான் இலவச கொத்தனாரும், இளையனார் கண்ணபிரானும் கட்டி காத்து வரும் தமிழ் மணத்தில் தகுதியான ஒரு கதை முதலிடம் பெற்றால் அதை கண்டு சந்தோஷபடும் முதல் மனிதன் நான் தான்!, என சீன் போட விரும்பவில்லை. ஹிஹி, என் கதை யாழினியும் உங்களுக்கு பிடிக்கும். எனவே மறக்காமல் ஓட்டு போடுங்கள். கடைசி தேதி டிசம்பர் 31 - 2007.

பி.கு: எதிர் கட்சிகள் இந்த சந்தர்ப்பத்தை நன்றாக பயன்படுத்தி கொள்ளவும்.

Sunday, December 23, 2007

யாழினி

நாள்: 20- பிப்ரவரி-2030

நேரம்: மாலை 4 மணி அடிக்க ஐந்து நிமிஷம்

மிதமாக குளிரூட்டப்பட்ட அந்த கான்பிரன்ஸ் ஹால் அனைத்து உலக டெலிவிஷன், பத்திரிகை, மீடியா மக்களால் நிரம்பி வழிந்தது. மரபியல் விஞ்ஞானி புரபசர் பத்ரிநாத் தீடிரென்று அழைத்தால் விஷயம் இல்லாமல் இருக்குமா? ஏதாவது புதுவகை லேகியம் கண்டுபிடித்து விட்டாரா?

சரியாக மணி நாலு அடிக்க, அந்த ஹாலில், கையில் லாப்டாபுடன் புரபசரின் உதவியாளினி மிஸ்.யாழினி உள்ளே நுழைய ஹால் களை கட்டியது. சுடசுட நெய் விட்டு சட்டியிலிருந்து இறக்கிய கேசரி போல இருக்கும் யாழினியை பற்றி நாம் வர்ணிக்க ஆரம்பித்தால் இது தொடர்கதையாகி விடும் என்பதால் வழுக்கை தலை, கோல்ட் பிரேம் கண்ணாடியுடன் உற்சாகமாக வரும் நமது புரபசர் பக்கம் திரும்புவோம்.

புரபசர் மரபியல் துறையில் ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் பழம் தின்னு கொட்டை போட்டவர். இரண்டு முறை நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கபட்டு, ரஷ்ய, அமெரிக்கர்களின் உருப்படாத கண்டுபிடிப்புகளால் கோட்டை விட்டவர். சரி, புரபசருக்கு இவ்ளோ அறிமுகம் போதும். புரபசரும், யாழினியும் தமது இருக்கைகளில் அமர்ந்து கொள்ள கூட்டம் நிமிர்ந்து உட்கார்ந்தது. யாழினி, தனது லாப்டாப்பை உயிர்ப்பித்து, விரல்கள் நோகாமல் அதில் பியோனோ வாசிக்க ஆரம்பித்தாள். குடுத்து வைத்த லாப்டாப்.

புரபசர் தொண்டையை கனைத்து கொண்டு பேச்சை ஆரம்பித்தார். டியர் பிரண்ட்ஸ்! என் அழைப்பை ஏற்று வந்தமைக்கு முதலில் நன்றி. நான் மரபியல் துறையில் ஒரு மாபெரும் புரட்சிக்கு வித்திட்டு இருக்கிறேன். அதை பற்றி விளக்க தான் இந்த கூட்டம். விளக்கமா சொல்றேன்.

நம்ம எல்லோருக்குமே தத்தம் குழந்தைகள் பெரிய டாக்டரா, இஞ்சினியரா, ஒரு கிரிகட் ஸ்டாரா வரனும்! என்ற கனவு இருக்கு இல்லையா? ஆனா, படிக்க வசதி வாய்ப்பு இருந்தும், ஒரு சில பேர் தான் அவங்க துறையில மிளிர முடியுது. இதுக்கு வெளி காரணிகள் பலது இருந்தாலும், ஒரு மரபியல் விஞ்ஞானியா நான் கண்டுபிடிச்சது அவங்க ஜீன்களின் அமைப்பு தான் மெயின் காரணம்.

இன்னும் விளக்கமா சொல்லனும்னா, ஒரு சிலர் கணக்குல புலியா இருப்பாங்க. அதுக்கு அவங்க மரபியல் அமைப்பே காரணம். இந்த ஜீன்களின் அமைப்பை நமது விருப்பத்துக்கேப்ப மாத்த முடிஞ்சா, அதாவது கணினி புரோகிராமிங்க் மாதிரி எல்லாம் ஒரு கட்டுகோப்பா நடக்கும்.

என்னோட ஆராய்ச்சிபடி, கருவில ஒரு உயிர் உருவானவுடன் சரியாக அறுபதாவது நாளில், 0.12 மில்லிமீட்டர் மட்டுமே இருக்கும் அந்த உயிரின் க்ரோமோசோம் கட்டமைப்பை மாத்தி அமைச்சா உங்க விருப்பத்துக்கு ஏத்த மாதிரி உங்க குழந்தை பெரிய டாக்டராவோ, விண்வெளி வீரனாகவோ, வர முடியும்! என சொல்லி நிறுத்தி ஒரு மடக்கு தண்ணீரை புரபசர் பருக,

இது சாத்யமா புரபசர்? இதை நீங்கள் எப்படி நிரூபிக்க முடியும்? ஒரு ரிப்போட்டர் இடைமறித்தார்.

முப்பது வருஷத்து ஆராய்ச்சி இது. இன்னிக்கி புகழ் பெற்று விளங்கும் சில பேர் என்னோட ஆராய்ச்சிக்கு உட்படுத்தபட்டவர்கள் தான், என சில பெயர்களை உரக்க சொல்ல, வரிசையாக புகழ் பெற்ற சில டாக்டர்கள், கம்யூட்டர் புலிகள், விளையாட்டு வீரர்கள் அணிவகுத்து வந்து புரபசரின் கூற்று உண்மை தான்! என கூறினர்.

இந்த ஆராய்ச்சியில் உள்ள தீமைகள் ஏதாவது சொல்ல முடியுமா புரபசர்?

இந்த ஆராய்ச்சியில் நன்மைகள் தான் அதிகம். ஒரு ஆரோக்கியமான, வலிமையான பாரதத்தை நாம் உருவாக்க முடியும். நம் குழந்தை என்னவாக வேண்டும்? என்பதை கருவிலேயே நாம் முடிவு செய்து விடலாம். தீமைகள்னு பாத்தா, இவங்க தம் துறை தவிர மத்த விஷயங்களில் கிட்டத்தட்ட பூஜ்யமா இருப்பாங்க. உதாரணமா சொல்லனும்னா, கம்யூட்டர் துறையை சேர்ந்த ஒருவர், ஆபிஸ்ல உக்காந்து பிளாக் எல்லாம் எழுத மாட்டார், ஏன்னா அவருக்கு மொக்கை போடவே தோணாது.

அதாவது, கிட்டதட்ட ஒரு ரோபோ மதிரி இருப்பாங்க!னு சொல்றீங்க இல்லையா புரபசர்?

இல்ல, ஏவி விட்ட ஏவுகணை மாதிரி இருப்பாங்க.என பெருமையுடன் சொன்ன அந்த மைக்ரோ வினாடி, யாழினியின் செல்பேசி, "பூம்பாவாய் ஆம்பல்! ஆம்பல்! புன்னகையோ மெளவல்! மெளவல்!" என்ற பழைய திரைபட பாடலை ரிங்க்டோனாக ஒலித்தது.

ஈஸிட்? ரியலி? ஐ கான்ட் பீலீவ் திஸ் நியூஸ்! என ஏற்கனவே பெரிதான தனது அழகிய கண்களை இன்னும் அதிகமாக விரித்து பல ரிப்போட்டர்களின் இதய துடிப்பை அதிகரிக்க செய்தாள் யாழினி.

என்ன விஷயம்? எனபது போல புரபசர் புருவத்தை தூக்க, உங்களுக்கு மரபியல் துறையில், இந்த மிகப் பெரிய ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு அறிவிச்சு இருக்காங்க! என யாழினி திருவாய் மலர, அந்த அரங்கமே கரகோஷத்தில் அதிர்ந்தது. சந்தோஷத்தாலும், ரிப்போட்டர்களின் வாழ்த்துக்களாலும் திக்குமுக்காடி போனார் புரபசர்.

சார், ஒன் மோர் குட் நியூஸ் பார் யூ! உங்க பொண்ணு ஒரு அழகான ஆண் குழந்தைக்கு அம்மாவாகி இருக்காங்க, இப்ப தான் ஹஸ்பிடலில் இருந்து கால் வந்தது என மறுபடி யாழினி இன்ப அதிர்ச்சி குடுக்க,

யாழ்! நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்! போதும், இன்னிக்கு இவ்ளோ சந்தோஷம் போதும். நான் உடனே என் மகளை பாக்க ஹாஸ்பிடல் கிளம்பறேன். நீ இந்த ரிப்போட்டர்ஸ்க்கு நம் ஆராய்ச்சி பற்றி தேவையான மேட்டரை குடுத்து பிரஸ் மீட்டை முடிச்சுடு. எனக்கு வரும் வாழ்த்துக்களை பதிவு செய்து, நன்றி தெரிவித்து விடு. பை டேக் கேர்! என சொல்லி விர்ரென புரபசர் பறந்தார்.

போடா போ! அங்க உன் பேர குழந்தை என்ற பெயரில் பிறந்து இருக்கும் ரோபோவை பாக்க போ! உன் ஆராய்ச்சிக்கு என் அக்கா குழந்தையை பலி வாங்கின இல்ல, உன் பேரனின் ஜீன் அமைப்பை உனக்கு தெரியாமல் மாத்தியாச்சு. 3 வருஷம் கழிச்சு அது உன்னை பாத்து தாத்தா!னு ஆசையா கூப்டாது. மாமா! பிஸ்கோத்துனு கேக்கும் பாரு.

இது தான் நான் உனக்கு குடுக்கும் தண்டனை! என மனதுக்குள் சிரித்துக் கொண்டே அழுதாள் யாழினி.

பி.கு: சர்வேசன் நடத்தும் நச்சுனு ஒரு கதை போட்டிக்கு கடைசி நாளான இன்று அவசரமாய் எழுதியது. வழக்கம் போல நீங்க ஷ்டாட் மிஜீக் போடுங்க.

Sunday, December 16, 2007

2007 பிளாகர் அவார்டுகள்

இந்த 2007 வருடத்தில் நம்மை கவர்ந்த சில பிளாகர்கள் வாங்கிய அவார்டுகளை இப்போ பார்ப்போம்:
முதல் போட்டியாளர்:
இவர் வலைபூவை திறந்தாலே திருப்பதிக்குள்ள நுழைஞ்ச மாதிரி ஒரு எபக்ட் கிடைக்கும். திருப்பதி லட்டு பத்தி நம்மாழ்வார் என்ன சொல்றாரு? புளியோதரை பத்தி பெரியாழ்வார் என்ன சொல்றாரு?னு அ முதல் ஃ வரை சும்மா பிரிச்சு மேஞ்சுபுடுவாரு. :)

அட சே! நாமளும் தான் பதிவு எழுதறோமே?னு சில(பல)சமயம் வெக்கபட வெச்சுபுடுவாரு.



போட்டோவுல சும்மா ஹாலிவுட் ஹீரோ கணக்கா இருந்தாலும், அண்ணாச்சி தமிழ்ல சும்மா லெப்ட், ரைட்டுனு யூ டர்ன் போட்டு வருவாரு. அண்ணாச்சியை வெச்சு ஏதேனும் காமடி பண்ணலாம்னு நினைச்ச சங்கத்து சிங்கங்களுக்கு, வெங்கல கடையில் யானை புகுந்த கதையா நமது அண்ணன் அதிர்ச்சி வைத்தியம் குடுத்துட்டார் என்பது டாக் ஆஃப் தி தமிழ்மணம்.
எனவே இந்த வருடத்தின் பழம் நீயப்பா! அவார்டை போட்டியின்றி தட்டி செல்கிறார்.

இரண்டாவது போட்டியாளர்:
தில்லுமுள்ளு படத்தில் ஒரு ரோஜா மாலைக்காக சுவர் ஏறி குதிச்சு அம்மாவா நடிச்ச செளகார் ஜானகியை உங்களுக்கு நியாபகம் இருக்கா? நல்லது!
நல்லா எழுதி இருக்கீங்க! அல்லது சிறந்த பதிவு!னு நீங்க ஒரு கமண்ட் போட்டா உங்கள் மீது பாச மழை பொழிவார் இவர். போன் போட்டு சொன்னா நீங்க அனானியா இருந்தா கூடா உங்க பேர்ல தனி பதிவு போட்டு விடுவார்.
கைலாச யாத்ரை போற வழில பில்டர் காப்பி கேட்டு அந்த டிராவல் ஏஜண்டை ஓட ஓட விரட்டிய கதைய சொல்லவா? இல்லாட்டி, அமர்நாத் யாத்ரையில் குதிரை ஏறி இவங்க பாரம் தாங்காமல் அது குப்புற விழுந்த கதைய சொல்லவா?

சமயம் கிடைக்கும் போதெல்லாம் நான் தான் ரவுடி! நான் தான் ரவுடி!னு வடிவேல் சொல்ற மாதிரி நான் தான் தலைவி! நான் தான் தலைவி!னு சொல்லிப்பாங்க. ஆன்மிகம், தமிழ், பாரதி, சுதந்திர போராட்ட வரலாறுனு அவியல் மாதிரி கலந்து கட்டி அடித்தாலும் மவுஸ் வேலை செய்யலை! என் வீட்டு (ரங்கு வைக்கற) ரசத்துல புளி இல்லை!னு இவங்க போடற மொக்கை தான் மக்கள் மனசுல நிலைச்சு இருப்பதால் (மொக்கை) பதிவுச் சூறாவளி - 2007 என்ற அவார்டை இவர் போட்டியின்றி தட்டி செல்கிறார்.

அடுத்த போட்டியாளர்:
உங்கள் கையில் நயன் தாரா அல்லது கோபிகா படம் கிடைத்தால் என்ன செய்வீர்கள்? சபையில் சொல்ல கூச்சமாக இருக்கலாம். இவர் கையில் கிடைத்தால் "கை வண்ணம் இங்கு கண்டேன்! கால் வண்ணம் அங்கு கண்டேன்!" என நடுவில் மானே! தேனே போட்டு தேவதைகளை ஊர்வலம் வர செய்து விடுவார்.
இவரது மன நிலைக்கு ஏற்ப திரிஷா சிரிப்பார் அல்லது முறைப்பார். இவர் ஒரு போட்டியாளர். சரி அடுத்த ஆளை பார்ப்போம்.

சுட்ட பழம் வேணுமா? சுடாத பழம் வேணுமா?னு அவ்வைக்கு முருகன் கேட்ட மாதிரி இவர் சுட்ட பதிவு வேணுமா? சுடாத பதிவு வேணுமா?னு லெவல் காட்டுவார்.
இவர் போகாத ஹோட்டல் கிடையாது. இவருக்கு ட்ரீட் தந்து ஓட்டலில் மாவு ஆட்டாத பதிவரும் கிடையாது. இவரும் ஒரு போட்டியாளர்.

மூன்றாம் போட்டியாளரை பார்ப்போம்.
எல்லோரும் கவிதையோ கவிஜயோ தங்களது பதிவிலேயே போட்டு பதிவு எண்ணிக்கையை கூட்டுவர். ஆனா கவிதைக்கு தனி கடை வைத்து, தோணும் போதேல்லாம் கவிதைய போட்டு அது குப்பை தொட்டியோ, ரோஜா செடியோ எத பத்தி வேணாலும் பதிஞ்சு விடிவார். அவ்ளோ லேசுல புரியற மாதிரி இல்லாட்டியும், அங்க தான் நீங்க நிக்கறீங்க! அப்படினு எல்லோரும் பாராட்டுவாங்க, அது வேற விஷயம்.
எனவே இந்த மூனு போட்டியாளர்களில் கவிதைக்கு தனிகடை வைத்த தங்கம்! என்ற பட்டத்தை இவர் தட்டி செல்கிறார்.

இதைப் போல உங்களை கவர்ந்த பிளாக்கர்களுக்கு நீங்களும் அவார்டுகளை வாரி வழங்கலாமே! :)

Wednesday, December 05, 2007

உள்ளேன் மக்களே!

அடுத்த பதிவு போட ரொம்பவே நாளாகி விட்டது, என்ன செய்ய, ஆபிஸ்ல மலை போல வேலை பளு.சரி, இப்படியே விட்டா நம்ம பிளாக் பாஸ்வேர்டே நமக்கு மறந்து விடும் போலிருக்கு. என்னத்தை எழுத?னு ஒரே யோசனை வேற.

பேசாம, ஒரு மொக்கைய போட்டு அதை நாலு நாலு வரியா பிரிச்சு எழுதி கவிதை!னு லேபிள் குடுத்ரலாமா? இல்லாட்டி, சன்/விஜய்/ஜெயா டிவிகளில் வரும் மெகா சீரியல் பாடல்களை "எனக்கு பிடித்த பாடல்"னு ஒரு பதிவு போட்ரலாமா? இல்லாட்டி
"அ முதல் ஃ தானடா!
என் அக்கா பொண்ணு கிக்கு தானடா!" என்ற செந்தமிழ் பாடல் வரிகளை பதிவா போடலாமா?னு ஒரே குழப்பம்.

எனக்கு தான் மேட்டர் பஞ்சம்னு பாத்தா இந்த சாட்டிலைட் சானல்களுக்கும் இதே கதி தான் போலிருக்கு. எந்த டிவிய திருப்பினாலும் ஏதோ ஒரு க்ரூப் மேடையில் ஆடுகிறார்கள், அல்லது மைக்கை பிடித்து கொண்டு பாடுகிறார்கள். அதுக்கு நடுவரா ஒரு நாலு பேர் - மார்கட் போயே போன நடிகை, போனா போறதுனு ஒரு இளிச்சவாய டான்ஸ் மாஸ்டர்/பாடகர்/இசையமைப்பாளர் என அல்லோலபடுகிறது.

இதில் கலைஞர் டிவியில் வரும் நடன நிகழ்ச்சிக்கு நமீதா நடுவராய் வருவதால் எங்கள் வீட்டில் அந்த நிகழ்ச்சி நிரந்தரமாய் தடை செய்யப்பட்டு அதற்க்கு மாற்றாக பொதிகையில் வரும் வயலும் வாழ்வும் ஒளிபரப்ப படுகிறது. இதுக்கு நான் கார்ட்டூன் சானலே மேல்!னு சமரச உடன்பாடு செய்து கொண்டு விட்டேன்.

இடைப்பட்ட கேப்பில், பிறந்த நாள் எல்லாம் வந்து போனது. நேத்து நடந்த மாதிரி இருக்கு. போன வருடம் இதே நாளில் தான் சுடச்சுட கேசரி சாப்பிட போனேன். ஹிஹி, தங்கமணியையும் பார்த்தேன்.

இந்த குழந்தையையும் மறக்காமல், கைபுள்ளை, வல்லி சிம்ஹன், பிலாக்கேஸ்வரி, கீதா பாட்டி போன்றவர்கள் போனிலும், மெயிலிலும் வாழ்த்தினார்கள். மிகவும் சந்தோஷம். தலப்பிறந்த நாளுக்கு எங்க அண்ணன் பெயரை சொல்லி வெயிட்டா அவருக்கு வேட்டு வைங்க மன்னி!னு பொற்கொடி வேலை மெனக்கெட்டு என் தங்கமணிக்கு மெயிலில் அட்வைஸ் வேற. என்னத்த சொல்ல?

இப்போதைக்கு இவ்ளோ மொக்கை போதும்.

விரைவில் எதிர்பாருங்கள் 2007 பிளாகர் அவார்டுகள்!

Friday, November 16, 2007

ஓம் ஷாந்தி ஓம்!

இப்ப எங்க டீம்ல இருக்கற எல்லாரும் மாஞ்சு மாஞ்சு ஈ ஓட்டிட்டு இருக்கறதுனால, என்ன பண்ணலாம்?னு கான்பிரன்ஸ் ரூம் புக் பண்ணி யோசிச்சோம். அப்ப தான் ஒரு சப்பாத்திக்கு இப்ப ரிலீஸ் ஆகியிருக்கற இந்த படம் போகலாம்னு பல்பு எறிய, மடமடனு மானேஜரையும் ஆட்டத்துக்கு சேர்த்து, ஒரு முக்யமான மீட்டிங்க் இருக்கு, லேட்டா வருவேன்!னு தங்கமணிக்கும் தகவல்(அல்வா) குடுத்து டிக்கட் புக் பண்ணியாச்சு.

சரி, படத்தின் பெயரை பாத்தால் எதோ தியானம், மன அமைதி, உம்மாச்சி வர பக்தி படம்னு பாத்தா கதை என்னவோ நம் தமிழில் ஒரு டஜன் படங்களுக்கு மேலாக அரைத்த மறுஜென்மம் மாவு தான் என்றாலும், இவங்க கொஞ்சம் பிரஷ்ஷா தண்ணி விட்டு அரச்சு இருக்காங்க.
பொதுவா ஹாரூக் படம் எல்லாம் எனக்கு போகோ சானல் பாக்கற மாதிரி காமடியா இருக்கும். இந்த படமும் அதே மாதிரி தான். எழுபதுகளில் வாழ்ந்த ஒரு ஜூனியர் ஆர்டிஸ்டாக ஷாரூக் வருகிறார். பெரிய காலருடன் கலர் கலர் சட்டை, பெல்பாட்டம் பெண்ட் அணிந்து தன் நண்பனுடன் அவர் அடிக்கும் லூட்டி சிரிப்பை வரவழைக்கிறது.


பிலிம் பேர் அவார்டுக்கு டகால்டி பண்ணி ஹாலுக்கு உள்ளே நுழையும் காட்சி டாப் என்றால் தன் உள்ளங்கவர் நடிகையை கவர தமிழ் ஹீரோ மாதிரி சண்டையிடும் ஹூட்டிங்க் காட்சி விவிசி.


ஹீரோயின் புதுமுகம் தீபிகா படுகோனே - பிரபல பாட்மிட்டன் சாம்பியன் ப்ரகாஷ் படுகோனேவின் மகள். அம்மணிக்கு ஒளிமயமான எதிர்காலம் காத்து இருக்கு. ஷாரூக் படத்தில் ஹீரோயின்(கள்) எல்லாம் எம்டிஆர் ஆவக்காய் ஊறுகாய் கணக்கா சும்மா தொட்டு கொள்ள வந்து போவார்கள். இதில் தலை கீழ். அம்மணிக்கு நடிப்பதற்க்கு செம வாய்ப்பு. அழகாய் ஸ்கோர் பண்ணி இருக்கிறார்.
வர வர கலி முத்தி விட்டது. பின்ன என்ன, சல்மான் தான் சட்டை இல்லாமல் பாடல் காட்சியில் வலம் வருவார் என்றால் இந்த ஷாரூக் கூட சட்டை இல்லாமல் ஐட்டம் சாங்க் ஆடுகிறார்.
காமிரா நம்ம ஊர் மணிகண்டன். படம் முழுக்க கண்ணை உறுத்தாத வகையில் காமிரா கோணங்கள். கலை சாபு சிரில்.படத்தில் வரும் பிரமாண்ட ஸ்டுடியோ செட்கள் சும்மா அதிருது.


ரெண்டு பாட்டு முணுமுணுக்க வைக்குது.
ஒரு பாட்டுக்கு ஹிந்தி படவுலகே திரண்டு வந்து ஷாரூக்கோடு ஆட்டம் போடுகிறது. பின்னணி இசையில் கவனம் செலுத்திய மீஜிக் டைரக்டர் பாட்டுகளை சும்மா காத்தாட விட்டு விட்டார்.
ரெண்டாம் பாதி கொஞ்சம் ஜவ்வா இழுக்குது. முடிவு எல்லாம் நாம் அதுவும் தமிழர்கள் ஈசியா யூகிக்க கூடியது தான். நெஞ்சம் மறப்பதில்லை!னு ஆரம்பிச்சு, நானே வருவேன்! வரைக்கும் எத்தனை தமிழ் படம் பாத்து இருப்போம்.
சும்மா உங்க பிரண்ட்ஸோடு ஜாலியா போயிட்டு வாங்க. படத்துல காத்து இல்லை,கருத்து இல்லைனு எல்லாம் குத்தம் சொல்ல கூடாது. மேசேஜ் சொல்றத்துக்கு இந்த படம் என்ன செல்போனா?
ஷாரூக் சொந்த காசை போட்டு படம் எடுத்ருக்கார்.
ஏற்கனவே படம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டாம். கல்லா களை கட்டியாச்சாம்.

Thursday, November 15, 2007

வேல்


முருக வழிபாட்டில் வேலுக்கு முக்யமான ஒரு இடம் உண்டு. ஏனேனில் வேலானது சக்தியின் மறுப்ரதியாகவே கருதபடுகிறது. முருகனடியார்கள் வேலை தம் இல்லத்தில் வைத்து வணங்குவது வழக்கம். திருபரங்குன்றத்தில் கூட வேலுக்கு தான் சகல விதமான அபிஷேகங்கள் செய்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.(தகவல் தவறாயிருப்பின், வலிக்காமல் குட்டி திருத்தவும்).

கந்த சஷ்டி கவசத்தில் முருகனை பாதாதிகேசம் அழகாக வர்ணித்த பால தேவராயர், முருகன் கை வேலை அடியவர் தம் அனைத்து அவயங்களையும் காக்க வருமாறு அழைக்கிறார். பக்தர்தம் துன்பத்தை போக்க, எப்படி விஷ்ணுவின் சுதர்சன சக்ரம் விரைந்து வருமோ அதை போல முருகன் வருமுன் அவனது கைவேல் விரைந்து வந்து விடுமாம்.

பொதுவாக தமிழ் பேசும் இடங்களில் எல்லாம் முருகன் வியாபித்து இருக்கிறான். அது மலேசியாவாகட்டும், சிங்கப்பூர், லன்டன், அமெரிக்கா என முருகனடியார்கள் அவனது திருபுகழை பாடி பரவசமடைகிறார்கள். இதனால் தானோ என்னவோ அம்பிகையை பாடி வந்த ஆதிசங்கரர் திருசெந்தூரில் குடி கொண்டிருக்கும் முருகனை சுப்ரமண்ய புஜங்கம் பாடி வழிபட்டார்.
சஷ்டியில் (விரதம்) இருந்தால் அகப்பையில் வரும் என்பதை தான் நம் மக்கள் சட்டியில் இருந்தால் ஆப்பையில்(கேசரி?) வரும் என மாற்றி விட்டனர்.

இன்று கந்த சஷ்டி. திருசெந்தூரில் மக்கள் கூட்டம் கடல் அலையென கூடி நிற்கும். அகங்காரம் அழித்து, பகைவருக்கும் அருள் புரிந்து நிற்பான் கந்தன்.
சரவண பவ! என வள்ளி கணவனை காவடி சிந்து பாடி, கூவி அழைத்தால் கண்டிப்பாக குரல் குடுப்பான்.


பி.கு: தலைப்பை பார்த்து தலைதெறிக்க வந்த பக்த கோடிகளுக்காக பழனி பஞ்சாமிர்தம். :)
சென்ற வருட பதிவு இங்கே

Tuesday, November 06, 2007

தல தீபாவளி



லூசா இருக்கும் டிராயரை அடிக்கடி தூக்கி விட்டு கொண்டு, காமராஜர் மாதிரி முழங்கை வரைக்கும் சட்டை போட்டு கொண்டு, ஓடி ஓடி பிஜிலி வெடி போட்டு, பொதிகை டிவில ரஜினி, கமல் புது பட டிரெயிலர் பார்த்து பெருமூச்சு விட்டு, அம்மா செஞ்சு வெச்ச கேசரில ஆரம்பிச்சு, பக்கத்து வீட்டு ஆன்டி குடுத்த கல்கோனா (மைசூர் பாகுனு அவங்க சொல்லிக்குவாங்க) வரை உள்ளே தள்ளி, அடுத்த நாளே கார்க் புடுங்கி தீபாவளி கொண்டாடிய நாட்கள் போய், பத்து நாட்களுக்கு முன்னாடி வரைக்கும் லீவுக்காக மேனேஜர் கேபினுக்கு காவடி எடுத்து, டிரேயின் எல்லாம் கோட்டை விட்டு, பாடவதி பஸ்ஸில் பயணம் செய்து ஒரு வழியாக ஊருக்கு போய், பாத்து பாத்து வாங்கிய புடவையை அம்மாக்கு குடுத்து அவர்கள் முகத்தில் மின்னல் கீற்றாய் ஒளிர்ந்து மறையும் புன்னகையை பாத்து சந்தோஷப்பட்டு, தீபாவளி கொண்டாடிய காலமும் கடந்து போய்,புடவை எல்லாம் இந்த பெங்களூரில் ஒன்னும் சரியா அமையாது! எல்லாம் சென்னைல பாத்து, கேட்டு உனக்கு எடுத்து தரேன், இல்லாட்டி ராசுகுட்டி மாதிரி ஒரு புடவை நாமளே ஆர்டர் குடுத்ருவோம் என்ன?னு தங்கமணிக்கு மெய்யாலுமே அல்வா குடுத்து தல தீபாவளி கொண்டாட கிளம்பியாச்சு.

தல தீபாவளினாலே, எல்லோரும் அடுத்து கேட்கும் கேள்வி, அப்பறம், மாமனாருக்கு எவ்ளோ வேட்டு வைக்க போற? செயினா? மோதிரமா?

ஆஹா, இதேல்லாம் நம்ம கீதா பாட்டி காலத்துல வேணா நடந்ததா இருக்கலாம். இப்ப எந்த ரங்குவாவது வாய் திறந்து கேட்க முடியுமா? இல்ல, நினைக்க தான் முடியுமா? பின்னி பிரிய கழட்டிடுவாங்க இல்ல? :)

சென்னைல மழை கொட்டு கொட்டுனு கொட்டுது. இதுல எங்க போய் வெடி வெடிக்க? அப்படியே வெடிச்சாலும், எல்லாம் புஸ்ஸுனு தான் போக போகுது. அதனால பேசாம, மாமியார் செஞ்ச மிகசரோட சோபாவுல செட்டில் ஆயிட்டோம்னா நமீதாவோட சேர்ந்து நாமளும் தீபாவளி கொண்டாடிடலாம்.

என்னை போலவே தல தீபாவளி கொண்டாடும் நமது நண்பர்களான கைப்புள்ள, 'பிரியமான நேரம்' ப்ரியா, பொற்கொடி, பத்ம ப்ரியா, மணிப்ரகாஷ் ஆகிய எல்லோருக்கும் என் தீபாவளி வாழ்த்துக்கள். அடுத்த வருஷம் தல தீபாவளி கொண்டாட ரெடியாக இருக்கும் நண்பர்களுக்கும் அட்வான்ஸ் வாழ்த்துக்கள். :)

பி.கு: என்னடா இந்த பதிவுக்கு அஜித் படம் போட்டு இருக்கே?னு நீங்க கேக்கலாம். மறுபடி ஒரு தடவை தலைப்பை வாசித்து பார்க்கவும்.

Friday, November 02, 2007

விளம்பரங்கள் - II

part- I

ஒரு விளம்பரம் வெற்றியடைய அடிப்படையாக சில விஷயங்கள் தேவை.

1) மக்கள் வாழ்வோடு தொடர்புடைய நிகழ்வுகளை சிம்பிளாக சொல்லும் விதம். எ.கா: குழந்தைகள் உண்டியலில் சேமிக்கும் பழக்கத்தை அழகாக தங்கள் வங்கிக்கு பயன்படுத்தி இருப்பார்கள் பாங்க் ஆப் இந்தியா.

2) எளிமையான, நாம் அன்றாடம் புழங்கும் வார்த்தைகள், வரிகள், பாடல்கள். புது வீடு! புது மனைவி! கலக்கற சந்துரு! - ஏஷியன் பெயின்ட்ஸ்.

3) விளம்பர படத்தில் நடிக்க தேர்ந்தெடுக்கப்படும் மாடல்கள் நமது பக்கத்து, எதிர் வீட்டு தெரிந்த முகங்கள் போல இருப்பது பிளஸ் பாயிண்ட். பத்தே மூவுல செக் மேட் என பிஸ்து காட்டுவாரே அந்த ஏர்டெல் தாத்தா மாதிரி.

இது மூணும் சரியாக இருந்து விட்டால் அந்த விளம்பரம் ஹிட் என நான் அடித்து கூறுவேன்.

வளவள டயலாக்ஸ், சொல்ல வந்த விஷயத்தை தலையை சுத்தி மூக்கை தொடும் பாணி, முகம் சுளிக்க வைக்கும் விதமாய் படமாக்கிய விதம் என பல விஷயங்கள் ஒரு நல்ல பிராண்டை கூட மக்கள் ஏறெடுத்து பார்க்காத நிலைக்கு தள்ளி விடும்.

நான் சொன்ன அடிப்படை விஷயங்கள் தவிர ஒவ்வோரு பொருளை மார்கட் பண்ண ஒரு தனி டெக்னிக் கையாள வேண்டி இருக்கும்.
உதாரணமாக, "வாஷிங்க் பவுடர் நிர்மா! பாலை போல வெண்மை - நிர்மாவாலே வருமே!" என பாட்டு பாடி, நிர்மாவின் சிறப்பை சொல்லுவது ஒரு விதம் என்றால் மஞ்ச கட்டியை வாங்கினா மஞ்ச சட்டை, நீல கட்டியை வாங்கினால் வெள்ளை சட்டை என கம்பேரிசன் பண்ணி தனது மார்கட் எதிரிக்கு ஆப்பு வைப்பது ஒரு வகை.

ஆடை வகைகளுக்கு என்றுமே ஒரு தனி மார்கட் உண்டு. பொங்கலுக்கு ஆரம்பித்தால் கிறிஸ்மஸ் வரை புத்தாடை வாங்காத ஆள் தான் யாரு? அதுவும் புடவை என்றால் கேட்கவே வேணாம்.
எனவே ஜவுளி கடைகள் போட்டி போட்டு கொண்டு விளம்பர ஏஜன்சிகளை அணுகி ஒரு படம் எடுத்து குடுங்க எஜமான்! என கெஞ்சுகின்றன. இதில் டாப் டக்கர் என சொன்னால் சென்னை சில்க்ஸ் தான்!
"மத்தாப்பு சுட்டு சுட்டு போட தான் வேணும்" என ரீமேக் சாங்க் பாடி, சென்னை சில்க்ஸில் தீபாவளி! என ஒரு தீபாவளியை நம் கண் முன் கொண்டு வந்து விடுகிறார்கள். முக்யமாக, இவர்கள் தேர்ந்தெடுக்கும் மாடல்கள் இருக்கே! ஆஹா! சுப்பரோ சூப்பர்!

இப்போழுது ஸ்ரீதேவி சில்க்ஸ் - கோவை ஒரு விளம்பரம் காட்டுகிறார்கள்.
ஏதோ ஒரு பழைய பாடலை நினைவுபடுத்தும் வகையில் "ஆசை அதற்க்கும் மேலே!" என ஒரு மாடல் தன் தோழியரோடு ஆடுவது அடடா! கண் கொள்ளா காட்சி. அந்த மாடல் நடிகை பத்மப்ரியா தான்! என என் தங்கமணி அடித்து(தரையில தான்) கூற, நான் இல்லை என மறுக்க, இப்படியாக இன்னும் அந்த விளம்பரம் சென்சார் இல்லாமல் எங்கள் வீட்டில் ஓடி கொண்டிருக்கிறது. (இனி என்ன ஆகுமோ?)

சரவணா ஸ்டோர்ஸ்காரர்கள் சினேகாவை தங்கள் விளம்பரங்களுக்கு வருட கான்டிராக்ட் போட்டுவிடுவார்கள் போலும். ஆனால் தீடிர்னு "எல்லோர் கண்களும் எந்தன் மேலே"னு அழகான ஒரு அமீர் கல்யாணி ராகத்தில் அமைந்த ஜிங்கிளுக்கு ஷ்ரேயா ஆடி வருகிறார்.

சரி, டிராக் மாறி விட்டேன்.
இப்போ விளம்பர ஏஜன்சிகளின் லேட்டஸ்ட் டிரண்ட் குழந்தைகளை முன்னிலைபடுத்தி விளம்பரங்களை அமைப்பது.
a) மூணு மாசம் முழுகாம இருக்கேன்!னு தன் கணவனுக்கு ப்ரூ காப்பி குடுத்து புரிய வைக்கிறாள் அவரது தங்கமணி.
b) ஆரோக்யம்னா அது கோல்ட் வின்னர் தான்!னு சமையலே தெரியாத ஒரு குழந்தை அம்மாக்களுக்கு அறிவுறுத்துகிறது.
c) கறை நல்லதாக்கும்!னு ஒரு பாசமலர் அண்ணன் -தங்கை குழந்தைகள் சொல்கின்றன.
d) தாத்தா குடுத்த உண்டியலை, பத்ரமா பாங்க் ஆப் இந்தியாவின் லாக்கரில் வைக்கிறான் அந்த பொடியன்.
e) நூடுல்ஸ் எங்கே?னு வீட்டையே அட்டகாசம் செய்கிறான் ஹார்லிக்ஸ் பொடியன்.

அடிப்படையில் லாஜிக் இல்லை என்றாலும், நம் மனதில் இத்தகைய விளம்பரங்கள் ஒரு மாஜிக் செய்து விடுகின்றன, இல்லையா?
விளம்பரங்கள் காலத்துக்கேற்ப மாறிக்கொண்டே வரனும். இல்லாவிட்டால் மக்களுக்கு போரடித்து விடும்.
அமுல் - டேஸ்ட் ஆஃப் இந்தியா சிறந்த உதாரணம். சென்னையில் பனகல் பார்க், மவுண்ட் ரோடு என நெரிசல் மிகுந்த சிக்னல்களில் பில் போர்டுகள் வைத்து இருப்பார்கள். வாரம் ஒரு முறை, அந்த வாரத்தில் நடந்த ஏதேனும் முக்ய நிகழ்வுகளை ஹைலைட் பண்ணியிருப்பார்கள். கவனித்ததுண்டா?

கற்பனை வளமும், கிரியேட்டிவா திங்க் பண்ண தெரிந்து இருந்தாலும், மக்களின் மனசை பல்ஸ் பிடித்து பார்க்க தெரிந்து இருந்தால், எல்லாவற்றுக்கும் மேலாக நீங்கள் செய்யும் விஷயத்தை ரசித்து, அனுபவித்து செய்ய கூடிய மனபான்மை இருந்தால், விளம்பர துறை உங்களுக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்க தயாராக இருக்கிறது.

வாய்ப்பு கிடைத்தால், கோபிகாவுடனோ, யானா குப்தாவுடனோ மாடலாக நடிக்க நான் கூட தயாராக தான் உள்ளேன். ஒரு பயலும் கூப்ட மாட்டேங்கறான். மீசையை எடுத்து, கோட் சூட் போட்டா நானும் சஞ்சய் ராமசாமி தான்!னு சொன்னா தங்கமணி வாயை மூடிக் கொண்டு சிரிக்கற நிலைமை தான் உள்ளது. ஹும்! ஆசை இருக்கு தாசில் பண்ண! அதிர்ஷடம் இருக்கு பிளாக் எழுத! :)

நாகை சிவா வீட்டுக்கு போய் பல விளம்பரங்களை கண்டு ரசியுங்களேன்.

Monday, October 29, 2007

சும்மா தட்டி பாருங்க!

கூகிள் ஆண்டவர் இந்தியாவுல நிறைய பேரு பிளாக் கலை சேவை செய்யறாங்கனு தெரிஞ்சுகிட்டு, புதுசா ஒரு கருவிய கொண்டு வந்திருக்காங்க. கீழே உள்ள லிங்குக்கு(தமிழ்ல என்னபா?) போயி தமிங்கலத்துல உங்க டேமேஜர் இல்லாத நேரமா பாத்து தட்டுங்க.

http://www.google.com/transliterate/indic/tamil

அப்புறம் என்ன காப்பி-பேஸ்ட் டெக்னாலஜி பயன்படுத்தி பதிவுகளை(மொக்கைகளைனு கீதா பாட்டி படிக்கறாங்க பாருங்க) போட்டு தள்ளுங்க.

இதுல என்ன விஷேசம்னா உங்க ஆபிஸ்ல இருக்கும் சப்பாத்தி, ஆந்திர கொங்க்ரா, கன்னட மற்றும் கேரள குத்து விளக்குகளுக்கு அவங்க அவங்க மொழில மெசேஜ் (எவன்டா அது மசாஜ்னு படிக்கறது?) பண்ணலாம். :)

அந்த லிங்குல தமிழுக்கு பதிலா அந்தந்த மொழி பெயரை தட்டச்சினா அதற்க்குரிய லிங்க் வந்து சேரும். உதாரணத்துக்கு, இப்ப நீங்க திருச்சூர் விளக்குக்கு குட் மார்னிங்க் ஜொள்ள நினைச்சா இது தான் லிங்கு:
http://www.google.com/transliterate/indic/malayalam

மேலே சொன்ன பாராவுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது, சும்மா ஒரு உதாரணத்துக்கு, ஹிஹி... (இந்த டிஸ்கி யாருக்கு?னு நான் சொல்லவும் வேணுமா?) :)

எப்படி? கலக்கிட்டார் இல்ல கூகிள் ஆண்டவர். :)

இனிமே தமிழ்தொண்டு செய்ய கலப்பை, கோடாலினு தேடிட்டு இருக்க வேணாம். ஆனா உங்க வீட்டுல நெட் கனக்ஷன் வேணுமே, சரி, விடுங்க சில பேர் மொக்கை போட அவுட் சோர்ஸிங்க் பண்றாங்க, பக்கத்து வீடு எல்லாம் போறாங்க.

.... Type any Hindi/Malayalam/Kannada/Tamil language word in English (same way as we pronounce it) and press "SPACE bar"...it gets translated to that regional language. That too, it is very accurate !!!!!

Friday, October 19, 2007

நவராத்திரி ஸ்பெஷல்!

மு.கு: இது ஒரு மறு ஒளிபரப்பு, எல்லாம் பக்த கோடிகளுக்காக தான்!
சுண்டல் எங்கே? சக்கர பொங்கல் எங்கே?னு எல்லாம் கேக்கபடாது. பக்கத்து வீட்டுல வாங்கி சாப்பிட தான் எனக்கு தெரியும். :)

இந்த ஒன்பது என்ற எண்ணுக்கு தான் எத்தனை சிறப்பு!

1) நவ கிரகங்கள் ஒன்பது.
2) நவ ரத்னங்கள் ஒன்பது
3) ஜோதிஷத்தில் நவாம்சம் என்று சொல்வர்கள்.
4) சக்தி உபாசனையில் ஷ்ரி சக்ரத்துக்கு நவாபர்ண பூஜை என்று ஒன்று உண்டு.
5) நவமி திதியில் தானே ராமர் மானிடராக ஜனித்தார்.
6) ஒன்பது ஒளஷதங்களை கொண்டு தான் நவபாஷணம் என்ற அரிய மருந்து தயாரிக்கப் படுகிறது.
7) நவ ரசங்கள் - கோபம், சிருங்காரம், ஹாஸ்யம் என உணர்வுகள் ஒன்பது விதமானதே!
8) பூவுலகில் எம் பெருமாளுக்கு திருப்பதிகள் ஒன்பது.( நவ திருப்பதி)
9) நவராத்திரி - தேவி கொலுவிருந்து ஆட்சி செய்யும் திரு நாட்கள்.

இன்று துர்க்காஷ்டமி. சக்தி சீற்றம் கொண்டு மகிஷனை சம்காரம் செய்த நாள். கருணையே வடிவம் கொண்ட அவளா இவள்? என்று உலகே அதிசயித்த நாள்.

எனக்கு சின்ன குழந்தையிலிருந்தே பாட்டியிடம் கதை கேட்கும் போது அஷ்டபுஜங்களில், சகல விதமான ஆயுதஙளுடனும் சிங்க வாகனத்தில் புயலென நேரில் வருவதை போல உணர்வேன்.

மேலும் சாந்தமான அம்மனை விட, இந்த துர்க்கா, காளி, சண்டி, அபராஜிதா தேவி போன்ற உக்ர தேவிகள் தான் என்னை மிகவும் கவர்ந்தனர்.

சக்தி, இந்த உலகத்துக்கே அவள் தான் ஆதாரம். அந்த சிவனும் இயங்குவதே இந்த சக்தியால் தானே!
துர்க்கை, லக்ஷ்மி, சரஸ்வதி என நாம் அந்த ஆதார சக்தியை பிரித்து அவர்களுக்கு ஒரு உருவமும் குடுத்து வழிபடுகிறோம். ஆனால் இம் மூன்று சக்திகளும் நம்முடனே உள்ளது.

துர்கை (இச்சா சக்தி) - மன உறுதி.
லக்ஷ்மி (க்ரியா சக்தி) - மனம் லயித்த செயல்பாடு.
சரஸ்வதி (க்னான சக்தி) - தெளிந்த ஆறிவு.

நம் உடம்பை கிரியா சக்தியும், புத்தியை இச்சா சக்தியும், ஆத்மாவை க்னான சக்தியும் ஆள்கிறது.

தெளிந்த அறிவுடன் புத்தி சரியாக கட்டளை இட்டால் மனம் லயிகிறது. உடம்பு சொன்னபடி கேட்கிறது. ஒரு வேலையில் உடல், மனம், புத்தி எல்லாம் மன உறுதியுடன் ஈடுபடுகிறது.

நல்ல பழக்கமும், புலன்களை நம் கட்டுக்குள் வைப்பதன் மூலம் லக்ஷ்மி வந்தடைகிறாள். மனதை கட்டுபடுத்துவதன் மூலம் துர்க்கை நம்மை வந்தடைகிறாள்.
உண்மையான, குளிர்ந்த சொற்களை பேசுவதன் மூலம் சரஸ்வதி வருகிறாள்.

இந்த துர்க்காஷ்டமி அன்று தேவியை பார்த்தால் அடுத்த நாள் கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்ற நம்பிக்கை உண்டு. ஏனெனில் துர்க்கை உக்ரமாக தீப்பறக்கும் கண்களுடன், "இனி உனக்கு மன்னிப்பில்லை! தைரியம் இருந்தால் வாடா!"னு அசுரனை அறைகூவல் விடுத்து சம்காரம் முடித்து, குருதி அபிஷேகத்துடன் கோபம் தணியாமல் நின்ற கோலம் அது.



ஆனால் மறுநாள், கருணையே வடிவாக, கையில் மாணிக்க வீணையேந்தி, மதுர மொழிகள் பேசி, அபய முத்திரை காட்டி, தம்மை நாடி வருபவர்களுக்கு அவரவர் தகுதிக்கு ஏற்ப கலைகளை வாரி வழங்கும் சரஸ்வதியாக அருள் பாலிக்கிறாள்.

Pic courtasy: www.starsai.com

போஜ ராஜன் தீவிர லக்ஷ்மி உபாசகன். எனவே, அவனது மெய்யான பக்திக்கு கட்டுபட்டு, அஷ்ட லக்ஷிமிகளும் அவனது தேசத்தில் வாசம் செய்தனர்.


ஒரு நாள், மாஹாலக்ஷ்மி அவன் முன் தோன்றி, "போஜ ராஜனே! உன் நாட்டிலேயே பல காலமாக நாங்கள் தங்கி இருந்தால், மற்ற இடங்களுக்கு நாங்கள் எப்போழுது செல்வது? என முறையிட்டாள்.

போஜனும், சரி அம்மா! ஒரெ ஒரு லக்ஷ்மியை தவிர மீதி எல்லோரும் விடை பெறுங்கள்" என கூற, மஹாலக்ஷ்மியும் சம்மதிதாள்.

போஜன் கேட்டது தைரிய லக்ஷ்மியை தான்!

தைரிய லக்ஷ்மி அவனுடன் இருக்க, மற்ற லக்ஷ்மிகளும் வேறு வழியில்லாமல் மறுபடி அவனிடமே வந்தடைந்தனர்.
இந்த நவராத்திரி - விஜயதசமி நன் நாளில் நம் எல்லோர் மனதிலும் அந்த தைரிய லக்ஷ்மி குடி கொள்ளட்டும். மற்ற எல்லா லக்ஷிமிகளும் தன்னாலே நம்மை வந்தடைவார்களாக!

Monday, October 15, 2007

விளம்பரங்கள்

அது என்னவோ தெரியல, சின்ன குழந்தையில இருந்தே எனக்கு டிவில வரும் விளம்பரங்கள் மீது ஒரு வித ஈர்ப்பு. முதலில் பாடல்கள், மியூசிக், என வளர்ந்த அந்த ஆர்வம், பின் அந்த விளம்பரத்தை படமாக்கிய விதம், ஒளி அமைப்பு, சொல்லிய விதம், தேர்ந்தெடுத்த நடிகர்கள் என நோண்டி பார்க்க வைத்தது.

ஆரம்ப காலங்களில் "இந்தியா, மலேசியா, சிங்கபூர் போன்ற நாடுகளில் மக்கள் தேய்க்கும் ஒரே பற்பொடி கோபால் பற்பொடி" போன்ற விளம்பரங்களை ஆல் இந்தியா ரேடியோ திருனெல்வேலி வானோலியில் கேட்டு அடடா! அந்த ஊர்ல மக்கள் பல்லு தேய்கறதுக்கு காரணம் நம்ம கோபால் பல்பொடி தான்!னு புல்லரித்து போயிருக்கிறேன்.

டிவி பொட்டி வந்தபிறகு விளம்பரங்கள் இன்னும் மெருகேறின.
"தீபாவளிக்கு ஜவுளி வாங்க கைராசியான ஸ்தாபனம் போத்தீஸ்!" என்று பஸ்டாண்ட் முனையில் கூவி விறபது போல ரேடியோவில் சொன்ன நிலை மாறி, "சாமுத்ரிகா பட்டு! சர்வ லட்சணமான பட்டு!"னு மீரா ஜாஸ்மினுக்கு பட்டு புடவை கட்டி தாலி கட்டி கல்யாணம் எல்லாம் பண்ணி வைத்து என் வயிதெறிச்சலை கொட்டி கொண்டனர். புடவையை சொல்றாங்களா? மீரா ஜாஸ்மினை சொல்றாங்களா?னு எனக்கு அடிக்கடி சந்தேகம் வேற வந்து விடும்.

காலத்துக்கேற்ப விளம்பரங்களும் வளர்ச்சியடைந்து நவீன டெக்னாலஜி எல்லாம் பயன்படுத்தி 10- 20 செகண்டுகளில் ஒரு குட்டி கதையே சொல்லி விடுகிறார்கள்.
சிட்டுகுருவி லேகியம் விற்க தெருவோரத்தில் கூவுவது போல, கூவிய நிலை மாறி, ஸ்கிரிப்ட் ரெடி பண்ணி, ஷூட்டிங்க ஸ்பாட் எல்லாம் பாத்து வைத்து, டெக்னிகல் க்ரூ முடிவு செய்து, மாடல்களை தேர்வு செய்து, காப்பி எடிட்டர்களை புழிய புழிய வேலை வாங்கி, எத்திராஜ் போகும் மயில்களை ஜிங்கிள் எல்லாம் பாட வைத்து, மாடல்களை அழகா மிங்கிள் பண்ண வைத்து அர்ஜுன் அம்மா யாரு?னு நம்மை கதற வைத்து விடுகிறார்கள்.

பன்னாட்டு கமபெனிகள் இந்திய சந்தைக்குள் வந்த பிறகு விளம்பர துறைக்கு மவுசு கூடிவிட்டது. லக்ஸ் தேய்ச்சு குளிங்க!னு பாத் டப்புக்குள் ஷாரூகான் இறங்குறார், காட்பரீஸ் சாக்லேட்டுக்கு அமிதாப் ஆலாய் பறக்கிறார், சூர்யா சன் ஃபீஸ்ட் பிஸ்கோத்து விக்கறார், ஜெயசந்திரனில் ஆடை திருவிழா!னு கோபிகா குட்டி குதிக்கறா!

எல்லாம் டப்பு படுத்தற பாடுங்க.

"திரைப்படத்தின் இப்பகுதியை உங்களுக்கு வழங்குபவர்கள்...." என ஆரம்பித்தாலே நம் கைகள் தானாக ரிமோட் பட்டனை அழுத்தும். இல்லையா?
ஆனால் ஒரு சில விளம்பரங்கள் மட்டும் நம் கவனத்தை ஈர்த்து விடும். பத்து அல்லது இருபது செகண்டுகள் நம்மை தன்பால் ஈர்க்க என்னவெல்லாம் செய்ய வேண்டி இருக்கு? என்று நினைத்து பாருங்கள். இன்று பல சாடிலைட் சானல்கள் ஓடிகொண்டிருப்பது இந்த மண்டகபடிதாரர்கள் தயவில் தான்.

போதிய விளம்பரதாரர் இல்லையேனில் அவசர அவசரமாக கோலங்கள்-அபிக்கு குண்டடி படும். நடன போட்டியில் சொம்பு அழுது கொண்டு பஞ்ச்(சர்) டயலாக் விடுவார். எல்லாம் செந்தில் சொன்ன மாதிரி "ஒரு விளம்பரதேங்க்"

சரி, ஒரு விளம்பரம் வெற்றியடைய ஏதேனும் வெற்றி பார்முலா உண்டா? என கேட்டால் நிச்சயம் உண்டு என்பேன்.

எப்படி தாலி, குங்குமம், வேப்பிலை, குரங்கு, நாய், பாம்பு, யானை, கிராபிக்ஸ்,தீமிதி, நாட்டாமை, (நிஜமான) சொம்பு எல்லாம் ராம நாராயணன் படத்தின் வெற்றி பார்முலாவோ அதே போல விளம்பரங்களுக்கும் சில நுணுக்கங்கள் உண்டு. அவை என்ன? என அடுத்த பதிவில் பார்ப்போமா?
(அப்ப தானே என் அடுத்த பதிவின் ஹிட் ஏறும்? - இது என்னோட பார்முலா, ஹிஹி)

பி.கு: நேரமும், ஆர்வமும் இருந்தால், நீங்களும் இந்த விளம்பர விளையாட்டில் கலந்து கொள்ளுங்களேன்.

Monday, October 08, 2007

2007 - அல்வா அவார்டுகள்

இந்த வருடத்தில் மிகச் சிறப்பாக அல்வா கிண்டி கொடுத்தவர்கள் யார் யார்? என முதலில் பார்ப்போம். அவர்களில் மிகச்சிறந்த போட்டியாளரை 2007 - சிறப்பாக அல்வா கொடுத்தவராக தேர்ந்தெடுக்கபடுவார்.

போட்டியாளர்#1: மாறன் சகோதரர்கள்

கை வீசமா கை வீசு!
டெல்லிக்கு போகலாம் கை வீசு!
மந்திரியாகலாம் கை வீசு!னு ஆசை ஆசையாய் பாலூட்டி, சீராட்டி வளர்த்த தாத்தாவுக்கே சும்மா அரை கிலோ அல்வா கிண்டி குடுத்த பெருமை இந்த சகோதரர்களையே சாரும். கிளிக்கு றெக்கை முளைச்சு பறந்து போயிடுத்து!

போட்டியாளர்#2: முஷரப் - தி பாஸ்

நானே ராஜா!
நானே மந்திரி!
எனக்கொரு கவலையில்ல! என உற்சாகமாக பாடிகொண்டு ஒட்டுமொத்த பாகிஸ்தானுக்கும் அல்வா கொடுத்து கொண்டிருக்கும் முஷரப் இந்த போட்டியில் கலந்து கொள்ளா தகுதியானவரே!
நவாஸ் ஷெரீப் வந்திறங்கிய பிளைட்டுலேயே அவரை திரும்ப ஏத்தி, கராச்சிக்கு போகுது வண்டி!னு சொல்லிட்டு அரேபியாவுக்கு ஒட்டகம் மேய்க்க அனுப்பி, "இந்தா வெச்சுக்க அல்வா!"னு கிண்டி கொடுத்த முஷரப்பின் திறமையை பார்த்து பெரிய அண்ணாச்சி அமெரிக்கவே இன்னும் திறந்த வாயை மூடலையாம்!

போட்டியாளர்#3: தேவ கவுடா & குமாரசாமி

அப்பாவும் பிள்ளையும் கூட்டணி அமைத்து இருபது மாதங்களுக்கு முன்னால் காங்கிரசுக்கு சூப்பரா அல்வா குடுத்து விட்டு, பி.ஜேபியிடம் "உனக்கொரு வாய்! எனக்கொரு வாய்!னு ஆட்சியை பங்கு போட்டுகலாம், என்ன?னு சொல்லிட்டு, இப்ப என்னடானா பங்கா? எந்த பங்கு? எந்த ஆட்சி? "காக்கா தூக்கிண்டு போச்சு!"னு இந்த வருடத்தின் மெகா அல்வா குடுத்த தேவ கவுடா மற்றும் அவரது தவமாய் தவமிருந்து பெத்த பிள்ளை குமாரசாமி ரெண்டு பெரும் இந்த போட்டிக்கு லாயக்கானவர்களே!

போட்டியாளர்#4: சொம்பு மற்றும் பப்லு

விஜய் டிவில ஜோடி நம்பர் ஒன்னு!னு ஒரு புரோகிராம். மெகா சீரியலுல அழுத மூஞ்சிகள் எல்லாம் சோக்கா பவுடர் அடிச்சுண்டு, புது சொக்கா எல்லாம் போட்டுண்டு
"தாம் தக்கா!
தைய தக்க!"னு ஆட்டம் போடறாங்க.
அதுக்கு சொம்புவும் ஒரு நாட்டாமையாம்! (என்ன கொடுமை இது காணாம போன ஏஸ்?)
யப்பா! 9 மாசத்துலேயே நான் டான்ஸ் ஆடி, பிரசவம் பாத்த நர்ஸை கரக்ட் பண்ணினவனாக்கும்!னு சொம்பு விடற பில்டபுக்கு எல்லாம் உச்சகட்டமாக கடந்த வாரம் பப்லுவ பார்த்து என்ன ஆடற நீயி?னு வாய குடுக்க, "நான் ஆடவேயில்லை!னு சொம்பு சொல்லிடுச்சு!னு பப்லு குதிக்க, பாக்கற நாம மண்டைய பிச்சுக்க வெச்சுட்டானுங்க.
இதை பற்றி விரிவாக அறிய மலேசிய மாரியாத்தா சொல்றதை கேளுங்க.

எல்லாம் புரோகிராமை பேமஸ் ஆக்க அவங்க கிண்டி குடுக்கற அல்வா! நீங்க ஒழுங்கா சப்பாத்திக்கு மாவு பிசைங்க!னு தங்கமணி என் தலைல தட்டினதுக்கு அப்புறம் தான் நமக்கு பல்பு எறிய ஆரம்பிச்சது.

அட பாவிகளா! இதை பாக்கற நேரத்துல 10 சப்பாத்தி தோசை கல்லுல போட்டு எடுத்ருப்பேனே!

சரி, இவங்க தான் நம்ம போட்டியாளர்கள். இப்ப நீங்களே இதுல 2007 - மிக சிறந்த அல்வா கொடுத்தவர் யாரு?னு தேர்ந்தெடுங்க பார்க்கலாம்! :)