அன்புடன் வல்லி அம்மா ஒரு கொக்கியில் என்னை மாட்டிவிட்டு விட்டார்கள். ஏற்கனவே ரசிகனின் டேக் பாக்கி. ஆனால் நாம் எழுதுவதில் முக்கால்வாசி மொக்கை வகை தான் என்பதால் தனியா நாம வேற ஒரு டேக் எழுதனுமா?னு ஒரு யோசனை. அதனால கோச்சுகாதீங்க ரசிகன்.
அடியேன் எழுதியதில் பிடித்தது எது?னு ஒன்று! இரண்டு!னு வரிசைபடுத்தி, கீதா பாட்டி மாதிரி, மன்னிக்கவும், அவ்வையார் மாதிரி நமக்கு நாமே திட்டப்படி ஒரு விளம்பரம் தேங்க்!னு சுட்டி(லிங்க்) குடுக்கனும்.
ஆஹா! கைல கிடைச்ச லட்டு போல அருமையான வாய்ப்பு. விட்ருவோமா என்ன? இதோ:
1) சென்னையில் நான் வேலை பாத்த போது நடந்த ஆபிஸ் பார்ட்டி தான் நான் மிகவும் ரசித்து எழுதியது.
(பார்ட்டி என்றால் எல்லோரும் சந்திக்கும் நிகழ்ச்சி! என பொருள் கொள்ளவும்.)
2a) இதே மாதிரி நாங்கள் கலந்து கொண்ட ஒரு இசை போட்டி பற்றிய பதிவுக்கு தான் இரண்டாம் இடம்.
2b) தங்கமணியை பொண்ணு பாக்க போன நிகழ்வுகள் பற்றிய பதிவும் இரண்டாம் இடத்தை பிடிக்கிறது. (ஹிஹி, மூணாம் இடம் குடுத்தா என்ன நடக்கும்?னு எங்களுக்கு தெரியாது?)
3) தீபாவளிக்கு(பாவனா நடிச்ச படம் இல்லை) பஸ் டிக்கட் எடுத்த நிகழ்வு பத்திய பதிவு மூணாம் இடத்தை பிடிக்கிறது.
ஆன்மீக பதிவுகள், என்ன தான் நான் கஷ்டப்பட்டு எழுதினாலும், "எல்லா புகழும் தம்பி கனேசனுக்கே!" என எதிர் கட்சிகள் முழங்குகிறார்கள்.
சரி, பரவாயில்லை, கந்த சஷ்டி விழாவின் போது நான் ரொம்ப ரசித்து, உருகி எழுதியது என் மனதுக்கு நிறைவை தந்த பதிவு.
நான் டேக் செய்ய விரும்பும் நபர்கள்:
1) கண்ணபிரான் ரவி சங்கர் அண்ணா: ஆன்மீகத்தில் பட்டய கிளப்பும் பதிவர்.
2) கைபுள்ளை: காமடி, பயண குறிப்புகள், குவிஜுனு ஒரு நடமாடும் தகவல் சுரங்கம். இட்டிலி நல்லா சாப்ட்டா வந்ருக்கா தல? :)
Showing posts with label சங்கிலி பதிவுகள். Show all posts
Showing posts with label சங்கிலி பதிவுகள். Show all posts
Wednesday, January 16, 2008
Wednesday, June 27, 2007
எட்டுக்குள்ள (பிளாக்) உலகம் இருக்கு ராமையா!
எட்டி எட்டி பாக்கறியே என் கடைய,ஒரு எட்டு இங்க வந்து எட்டு விளையாடிட்டு போப்பா அம்பி!னு பாசமா வல்லியம்மா கூப்பிட்டு இருக்காங்க. பில்லு பரணி கூப்பிட்டு இருக்காரு! மாமியார் வீடு வேற சென்னைல இருக்கு, பரணி தயவிருந்தா அடிக்கடி சென்னைக்கு போய் வரலாம். என்ன பில்லு, சரி தானே? :)
கல்யாணம் நல்ல படியா நடந்ததா?னு அமெரிக்கவிலிருந்து போன் போட்டு வல்லியம்மா அன்பா விசாரிச்சாங்க. கீதா பாட்டிக்கு பேரன் வயசாகிற இந்த குழந்தை அப்படி என்ன சாதனை பண்ணி இருக்கு இங்க 8 தடவை சொல்றத்துக்கு?(பீத்தறத்துக்கு?னு யாரோ வாசிக்கறாங்களே!)
(கீதா பாட்டி! நோட் தி பாயிண்ட்). :p
ஹிஹி, நாம தீவிர அனுமார் பக்தனாச்சா, அவர மாதிரி தன்னடக்கம் கொஞ்சம் ஜாஸ்தி.(அனுமார் இந்த பதிவை படிச்சா தலைல அடிச்சுப்பார்).
1) எல்கேஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரை முதல் மூன்று ரேங்க் மட்டுமே எடுத்ததுக்கு ஒரு கேசரி சாப்டற பேசின் வாங்கினத இங்க நான் ஒரு சாதனைனு சொல்ல முடியுமா?
முடியாதே! சில பரீட்சைகளில் பக்கத்து சீட்டு ரஞ்சனி பேப்பரை பார்த்து காப்பி-பேஷ்ட் பண்ணி இருக்கோமே! எனவே செல்லாது! செல்லாது!
2) அட! எட்டாம் வகுப்பில் சுற்றுபுற சூழல் சம்பந்தமா கட்டுரை எழுதற போட்டிக்கு நாம வழக்கம் போல எகப்பட்ட டகால்டி பண்ணி ஒரு ஆராய்ச்சி கட்டுரை ரேஞ்சுக்கு ரெடி பண்ணி கன்னியாகுமரி - விவேகானந்தா கேந்திரத்துக்கு அனுப்பி, அவங்க நம்மள ஐந்து நாள் அங்க ஓசியா கூப்ட்டு சோறு போட்டாங்களே! அத சொல்லலாமா?
நாம எழுதினா கையெழுத்து கேசரி கிண்டின மாதிரி இருக்கும்னு அம்மாவை விட்டு இல்ல எழுத சொன்னேன்? அதனால இதுவும் செல்லாது! செல்லாது.
3) தாமிர பரணியில் நீச்சல் கத்துக்கறேன் பேர்வழி!னு மூழ்க இருந்த என் உடன்பிறப்பை கபால்னு நீச்சல் அடிச்சு போயி தலைய பிடிச்சு தூக்கி கரை சேர்ந்தோமே, அது?
ஹிஹி காப்பாத்த போன நானும் கொஞ்ச நேரம் தண்ணி குடிச்சு தத்தளிச்சு, தட்டு தடுமாறி தானே கரை சேர்ந்தோம், இதுவும் செல்லாது.
4) ஸ்கூல் படிக்கும் போது, என்சிசியில் மாவட்டதிலேயே ஒரே ஆளா பஞ்சாப்(ஆமா! ஆமா!) போறதுக்கு செலக்ட் ஆனோமே, அது..?
ஹிஹி, பூரி கிழங்குக்கு ஆசைப்பட்டு என்சிசியில் சேர்ந்த பய தானே நாம! இதுவும் செல்லாது! செல்லாது!
5) ஒரு கல்லூரியில் மாதம் இரண்டு கிலோ லயன் டேட்ஸுக்கு (அதான் பேரீச்சம்பழங்க) வேலை பார்த்த காலத்தில், சுனாமிக்கு கூட ஸ்கூல் பக்கம் ஒதுங்காத சில மக்களுக்கு எழுத்தறிவித்தோமே அது?
ஒரு இந்தியனா, சரி விடுங்க, ஒரு மனிதனா என் கடமையை தானே செஞ்சேன்? அது எப்படி சாதனையாகும்?
ஆமா! என்.டி. ராமாராவே சொல்லி இருக்காரே,
கடமையை செய்!
பலனை எதிர்பார்க்காதே!
6) எவ்வளோ சோதனை வந்தாலும் சைவ உணவு தவிர வேற எதையும் சாப்பிடகூடாது! பெருமாள் கோவில் தீர்த்தம் தவிர வேறு எந்த தீர்த்தமும் குடிக்க கூடாதுனு உறுதியா இருக்கோமே அது..?
7) என்னை மாதிரி பசங்க எழுதற பதிவுகளுக்கு அனானி கமண்ட் விழறதே பெரிசா இருக்கற இந்த காலத்தில் நான் படைத்த இலக்கியங்களை, ஹிஹி பதிவுகளை தமிழை மூன்றாம் மொழியாக ஸ்கூலில் எடுத்த என் தங்கமணி பார்த்து பரவசமாகி, என்னயும் நல்லவன்னு நம்பி கழுத்தை நீட்டி இருக்காங்களே! இது கூட ஒரு சாதனையா? இல்ல இது அவங்களுக்கு வந்த சோதனையா?
8) முகம் தெரிந்த நண்பர்களே முகவரி தொலைந்து போன இந்த நாட்களில், முகம் தெரியா முத்துக்களாகிய என் இனிய பிளாக் உலக மக்களே! உங்களை நண்பர்களாய் அடைய நான் என்ன தவம் செய்தோனோ?
அது மட்டுமா?
அம்பி அண்ணா! அம்பி அண்ணா!னு பாசமாய் அழைத்திடும் பிளாக் உலக தங்கைகள்/தம்பிகள், தம்பி!னு பாசம் காட்டும் டிடி, எஸ்கேஎம் போன்ற அக்காமார்கள், தங்கள் வீட்டில் ஒரு பிள்ளையாய் என்னை வைத்து பார்க்கும் வல்லியம்மாக்கள், தனது பேரனாய் பாசம் காட்டி என் காதை திருகும் கீதா பாட்டிகள்,
அடடா! ஒரே பீலிங்க்ஸ் ஆஃப் பெங்களூரா இருக்கு.
( நல்ல வேளை, என் தங்கமணி மட்டும் அண்ணா!னு அல்வா குடுக்கலை)
ஏற்கனவே நிறைய பேர் எட்டடி பாஞ்சுட்டாங்க. அப்படி பாயாதவங்க, தாராளமா பாயலாம், கமண்ட் போட நான் இருக்கேன்.
ஒன்னு மட்டும் நல்லா தெரியுது, அடுத்த சங்கிலி பதிவு "ஒளிமயமான ஒன்பது" தான். யாரு ஷ்டார்ட் மியூசிக் போட போறாங்களோ? நல்லா இருங்கப்பா!
பி.கு: ஆமா! யாரு அந்த ராமையா?னு யாரும் கேட்கபடாது.
காலம் நம் தோழன் முஸ்தபா!ல முஸ்தபா யாரு?னு நாம கேட்டோமா? இல்லையே! அத மாதிரி தான்!
கல்யாணம் நல்ல படியா நடந்ததா?னு அமெரிக்கவிலிருந்து போன் போட்டு வல்லியம்மா அன்பா விசாரிச்சாங்க. கீதா பாட்டிக்கு பேரன் வயசாகிற இந்த குழந்தை அப்படி என்ன சாதனை பண்ணி இருக்கு இங்க 8 தடவை சொல்றத்துக்கு?(பீத்தறத்துக்கு?னு யாரோ வாசிக்கறாங்களே!)
(கீதா பாட்டி! நோட் தி பாயிண்ட்). :p
ஹிஹி, நாம தீவிர அனுமார் பக்தனாச்சா, அவர மாதிரி தன்னடக்கம் கொஞ்சம் ஜாஸ்தி.(அனுமார் இந்த பதிவை படிச்சா தலைல அடிச்சுப்பார்).
1) எல்கேஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரை முதல் மூன்று ரேங்க் மட்டுமே எடுத்ததுக்கு ஒரு கேசரி சாப்டற பேசின் வாங்கினத இங்க நான் ஒரு சாதனைனு சொல்ல முடியுமா?
முடியாதே! சில பரீட்சைகளில் பக்கத்து சீட்டு ரஞ்சனி பேப்பரை பார்த்து காப்பி-பேஷ்ட் பண்ணி இருக்கோமே! எனவே செல்லாது! செல்லாது!
2) அட! எட்டாம் வகுப்பில் சுற்றுபுற சூழல் சம்பந்தமா கட்டுரை எழுதற போட்டிக்கு நாம வழக்கம் போல எகப்பட்ட டகால்டி பண்ணி ஒரு ஆராய்ச்சி கட்டுரை ரேஞ்சுக்கு ரெடி பண்ணி கன்னியாகுமரி - விவேகானந்தா கேந்திரத்துக்கு அனுப்பி, அவங்க நம்மள ஐந்து நாள் அங்க ஓசியா கூப்ட்டு சோறு போட்டாங்களே! அத சொல்லலாமா?
நாம எழுதினா கையெழுத்து கேசரி கிண்டின மாதிரி இருக்கும்னு அம்மாவை விட்டு இல்ல எழுத சொன்னேன்? அதனால இதுவும் செல்லாது! செல்லாது.
3) தாமிர பரணியில் நீச்சல் கத்துக்கறேன் பேர்வழி!னு மூழ்க இருந்த என் உடன்பிறப்பை கபால்னு நீச்சல் அடிச்சு போயி தலைய பிடிச்சு தூக்கி கரை சேர்ந்தோமே, அது?
ஹிஹி காப்பாத்த போன நானும் கொஞ்ச நேரம் தண்ணி குடிச்சு தத்தளிச்சு, தட்டு தடுமாறி தானே கரை சேர்ந்தோம், இதுவும் செல்லாது.
4) ஸ்கூல் படிக்கும் போது, என்சிசியில் மாவட்டதிலேயே ஒரே ஆளா பஞ்சாப்(ஆமா! ஆமா!) போறதுக்கு செலக்ட் ஆனோமே, அது..?
ஹிஹி, பூரி கிழங்குக்கு ஆசைப்பட்டு என்சிசியில் சேர்ந்த பய தானே நாம! இதுவும் செல்லாது! செல்லாது!
5) ஒரு கல்லூரியில் மாதம் இரண்டு கிலோ லயன் டேட்ஸுக்கு (அதான் பேரீச்சம்பழங்க) வேலை பார்த்த காலத்தில், சுனாமிக்கு கூட ஸ்கூல் பக்கம் ஒதுங்காத சில மக்களுக்கு எழுத்தறிவித்தோமே அது?
ஒரு இந்தியனா, சரி விடுங்க, ஒரு மனிதனா என் கடமையை தானே செஞ்சேன்? அது எப்படி சாதனையாகும்?
ஆமா! என்.டி. ராமாராவே சொல்லி இருக்காரே,
கடமையை செய்!
பலனை எதிர்பார்க்காதே!
6) எவ்வளோ சோதனை வந்தாலும் சைவ உணவு தவிர வேற எதையும் சாப்பிடகூடாது! பெருமாள் கோவில் தீர்த்தம் தவிர வேறு எந்த தீர்த்தமும் குடிக்க கூடாதுனு உறுதியா இருக்கோமே அது..?
7) என்னை மாதிரி பசங்க எழுதற பதிவுகளுக்கு அனானி கமண்ட் விழறதே பெரிசா இருக்கற இந்த காலத்தில் நான் படைத்த இலக்கியங்களை, ஹிஹி பதிவுகளை தமிழை மூன்றாம் மொழியாக ஸ்கூலில் எடுத்த என் தங்கமணி பார்த்து பரவசமாகி, என்னயும் நல்லவன்னு நம்பி கழுத்தை நீட்டி இருக்காங்களே! இது கூட ஒரு சாதனையா? இல்ல இது அவங்களுக்கு வந்த சோதனையா?
8) முகம் தெரிந்த நண்பர்களே முகவரி தொலைந்து போன இந்த நாட்களில், முகம் தெரியா முத்துக்களாகிய என் இனிய பிளாக் உலக மக்களே! உங்களை நண்பர்களாய் அடைய நான் என்ன தவம் செய்தோனோ?
அது மட்டுமா?
அம்பி அண்ணா! அம்பி அண்ணா!னு பாசமாய் அழைத்திடும் பிளாக் உலக தங்கைகள்/தம்பிகள், தம்பி!னு பாசம் காட்டும் டிடி, எஸ்கேஎம் போன்ற அக்காமார்கள், தங்கள் வீட்டில் ஒரு பிள்ளையாய் என்னை வைத்து பார்க்கும் வல்லியம்மாக்கள், தனது பேரனாய் பாசம் காட்டி என் காதை திருகும் கீதா பாட்டிகள்,
அடடா! ஒரே பீலிங்க்ஸ் ஆஃப் பெங்களூரா இருக்கு.
( நல்ல வேளை, என் தங்கமணி மட்டும் அண்ணா!னு அல்வா குடுக்கலை)
ஏற்கனவே நிறைய பேர் எட்டடி பாஞ்சுட்டாங்க. அப்படி பாயாதவங்க, தாராளமா பாயலாம், கமண்ட் போட நான் இருக்கேன்.
ஒன்னு மட்டும் நல்லா தெரியுது, அடுத்த சங்கிலி பதிவு "ஒளிமயமான ஒன்பது" தான். யாரு ஷ்டார்ட் மியூசிக் போட போறாங்களோ? நல்லா இருங்கப்பா!
பி.கு: ஆமா! யாரு அந்த ராமையா?னு யாரும் கேட்கபடாது.
காலம் நம் தோழன் முஸ்தபா!ல முஸ்தபா யாரு?னு நாம கேட்டோமா? இல்லையே! அத மாதிரி தான்!
Friday, May 04, 2007
மொக்கை டேக்
மலேசிய புயல், காமடி க்வீன் (யாருப்பா அது கோவை சரளா!னு வாசிக்கறது?) ஃமை பிரண்ட் ஒரு மொக்கை டேக் எழுத சொல்லி இந்தா அந்தா!னு போக்கு காட்டி ஒரு மாசம் ஆச்சு.
அதாவது, உங்க எல்.கே.ஜி ஸ்கூல் டீச்சரிலிருந்து +2 வரை படித்த பள்ளீயின் டீச்சர் பெயர் எல்லாம் சொல்லனுமாம். நல்லா துபாய்ல ரூம் போட்டு யோசிப்பாங்க போலிருக்கு. (ஆமா! இந்த டேக்கை ஆரம்பிச்சு வெச்சவருக்கு தான் இந்த அர்ச்சனை)
நான் ரெண்டே ஸ்கூலுல தான் படிச்சேன்.
எல்கேஜி முதல் ஐந்தாம் கிளாஸ் வரை ஒரு ஸ்கூல்.
6 முதல் 12 ம் வகுப்பு வரை இன்னொரு ஸ்கூல். அதுலயும் எனக்கு ரொம்ப பிடிச்ச டீச்சர்ஸ் பத்தி தான் எழுதுவேன். இலவச இணைப்பா கூட படிச்ச, சில கேள்ஸ் பெயரும், ஹிஹி. என்ன சரியா?
மேரி மிஸ்: அழகா பேபி பிங்க் கலர்ல மெட்டல் ஷிபான் சாரி கட்டி, போஃனி டெயில் போட்டு, கைல ஒரு குடையோட வருவாங்க கடலோர கவிதைகள் ரேகா மாதிரி. எப்பவும் சிரிச்ச முகமா இருப்பாங்க. நான் கிளாஸ்ல என்ன அட்டகாசம் பண்ணாலும் எங்க அம்மாட்ட போட்டே குடுக்க மாட்டாங்க.
ரஞ்சனி: என் கூட படிச்ச சக வானரம். ரஞ்சனி!னு பெயருக்கு பதிலா லங்கினினு வெச்சு இருக்கலாம். எப்ப பாரு! என்னய தான் டார்ச்சர் பண்ணுவா. அவ பேனா எழுதறதா?னு என் பின்மண்டையில எழுதி செக் பண்ணிப்பா. நான் மிஸ்ஸ்!னு கத்தினா தொடையில நிமிட்டாம்பழம் வேற. அடியே ரஞ்சனி! உனக்கு லட்டுவா ஒரு பொண்ணு பொறந்து என் பையன விட்டு என் கணக்க டேலி பண்ணிகறேன் பாரு!
சாந்தா - ஹிந்தி மிஸ்: நான் இப்ப ரசகுல்லா கூட சக்ஸஸ்புல்லா கடலை போடறேன்னா அந்த பெருமை எல்லாம் இந்த மிஸ்ஸையே சாரும். நல்ல வேளை, மிஸ் பிளாக் எல்லாம் படிக்க மாட்டாங்க.
தப்பா எழுதினா தொடைல நறுக்குனு கிள்ளு விழும். 7ம் கிளாஸ்லேயே கபீரின் கவிதைகளை ரசிக்க முடிந்தது இந்த குருவின் தயவால்.
காயத்ரி: ஸ்கூல் ஆண்டு விழாவுல எப்பவுமே நமக்கு இவங்க தான் ஜோடி. அப்பவே மூக்கும் முழியுமா இருப்பாங்க. ராமர் வேஷம் போட்டா இவங்க சீதை, கிருஷ்ணர் வேஷம் போட்டா, இவங்க தான் ருக்கு!
ருக்கு மட்டும் தானா? சத்யபாமா கிடையாதா?னு மிஸ் கிட்ட ஒரு தடவை கேட்டதுக்கு அடுத்த தடவை உனக்கு அனுமார் வேஷம் தான்!னு தீர்ப்பு சொல்லிட்டாங்க.
கிருஷ்ண மூர்த்தி சார்: ஸ்கூலில் அஸிஸ்டண்ட் ஹெட்மாஸ்டர். அதனால பாதி நாள் கிளாஸுக்கு வர மாட்டார். வந்தார்னா ஒரே நாளில் பாதி புக் முடிச்சுட்டு போயிடுவார். என்ன நடத்தினார்?னு அவருக்கும் தெரியாது, எங்களுக்கும் தெரியாது.
ஆமா, எட்டாம் கிளாஸ் புக்கை வெச்சு ஆறாம் கிளாஸுக்கு கணக்கு நடத்திடார் ஒரு தடவை. சிலபஸ்ல கிடையாது!னு சொல்லி எக்ஸாம்ல மார்க் வாங்கிட்டோம். இப்பவும் எனக்கு மேத்ஸ்னா கொஞ்சம் அலர்ஜி.
வினோதா: இலங்கையிலிருந்து தமிழகத்துக்கு புலம் பெயர்ந்த குடும்பம். சிங்களத்து சின்ன குயிலே!னு பாடினா மின்னல் கீற்றா ஒரு புன்னகை எட்டிப் பார்க்கும். பேஸ்கட் பால் பிளேயர். வினோதாவுக்காக பாதி ஸ்கூல் கிரிக்கட்டை மறந்து பேஸ்கட் பால் ஆடியது.
(ச)ரோஜா டீச்சர்: இந்த தமிழ் மேடம் தினமும் தனது கொண்டையில் ரோஜா வெச்சுண்டு வருவாங்க. அதனால் சரோஜா டீச்சர் ரோஜா டீச்சர் ஆயிட்டாங்க.
எத்தனை ஸ்பெல்லிங்க் மிஸ்டேக் விடற?னு என்கிட்ட கத்துவாங்க. கட்டுரை போட்டி, நாடக போட்டினு எந்த போட்டி வந்தாலும் என்னய கேக்கமலேயே "அந்த கோட்டி பெயர எழுதிக்கோ!"னு என் பெயரை எழுதி அனுப்பிடுவாங்க.
சுப்பையா சார்: ரொம்ப துடிப்பானவர். என்ஸிஸி ஆபிசர் வேற. எனக்கு அரைகுறை ஹிந்தி தெரியும்! என்ற ஒரே காரணத்துக்காக பூரி கிழங்குக்கு ஆசைபட்டு என்ஸிஸில சேர்ந்த என்னை, பஞ்சாப்புக்கு எல்லாம் கேம்ப் கூட்டிண்டு போறேன்!னு சொன்ன நல்லவர். எங்க அப்பா கேம்புக்கு விட மாட்டேன்!னு சொல்லிட்டார்.
அவ்ளோ தான்பா! யாராவது சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்ள விரும்புவர்கள் இந்த மொக்கை டேக்கை தொடரலாம். ;)
அதாவது, உங்க எல்.கே.ஜி ஸ்கூல் டீச்சரிலிருந்து +2 வரை படித்த பள்ளீயின் டீச்சர் பெயர் எல்லாம் சொல்லனுமாம். நல்லா துபாய்ல ரூம் போட்டு யோசிப்பாங்க போலிருக்கு. (ஆமா! இந்த டேக்கை ஆரம்பிச்சு வெச்சவருக்கு தான் இந்த அர்ச்சனை)
நான் ரெண்டே ஸ்கூலுல தான் படிச்சேன்.
எல்கேஜி முதல் ஐந்தாம் கிளாஸ் வரை ஒரு ஸ்கூல்.
6 முதல் 12 ம் வகுப்பு வரை இன்னொரு ஸ்கூல். அதுலயும் எனக்கு ரொம்ப பிடிச்ச டீச்சர்ஸ் பத்தி தான் எழுதுவேன். இலவச இணைப்பா கூட படிச்ச, சில கேள்ஸ் பெயரும், ஹிஹி. என்ன சரியா?
மேரி மிஸ்: அழகா பேபி பிங்க் கலர்ல மெட்டல் ஷிபான் சாரி கட்டி, போஃனி டெயில் போட்டு, கைல ஒரு குடையோட வருவாங்க கடலோர கவிதைகள் ரேகா மாதிரி. எப்பவும் சிரிச்ச முகமா இருப்பாங்க. நான் கிளாஸ்ல என்ன அட்டகாசம் பண்ணாலும் எங்க அம்மாட்ட போட்டே குடுக்க மாட்டாங்க.
ரஞ்சனி: என் கூட படிச்ச சக வானரம். ரஞ்சனி!னு பெயருக்கு பதிலா லங்கினினு வெச்சு இருக்கலாம். எப்ப பாரு! என்னய தான் டார்ச்சர் பண்ணுவா. அவ பேனா எழுதறதா?னு என் பின்மண்டையில எழுதி செக் பண்ணிப்பா. நான் மிஸ்ஸ்!னு கத்தினா தொடையில நிமிட்டாம்பழம் வேற. அடியே ரஞ்சனி! உனக்கு லட்டுவா ஒரு பொண்ணு பொறந்து என் பையன விட்டு என் கணக்க டேலி பண்ணிகறேன் பாரு!
சாந்தா - ஹிந்தி மிஸ்: நான் இப்ப ரசகுல்லா கூட சக்ஸஸ்புல்லா கடலை போடறேன்னா அந்த பெருமை எல்லாம் இந்த மிஸ்ஸையே சாரும். நல்ல வேளை, மிஸ் பிளாக் எல்லாம் படிக்க மாட்டாங்க.
தப்பா எழுதினா தொடைல நறுக்குனு கிள்ளு விழும். 7ம் கிளாஸ்லேயே கபீரின் கவிதைகளை ரசிக்க முடிந்தது இந்த குருவின் தயவால்.
காயத்ரி: ஸ்கூல் ஆண்டு விழாவுல எப்பவுமே நமக்கு இவங்க தான் ஜோடி. அப்பவே மூக்கும் முழியுமா இருப்பாங்க. ராமர் வேஷம் போட்டா இவங்க சீதை, கிருஷ்ணர் வேஷம் போட்டா, இவங்க தான் ருக்கு!
ருக்கு மட்டும் தானா? சத்யபாமா கிடையாதா?னு மிஸ் கிட்ட ஒரு தடவை கேட்டதுக்கு அடுத்த தடவை உனக்கு அனுமார் வேஷம் தான்!னு தீர்ப்பு சொல்லிட்டாங்க.
கிருஷ்ண மூர்த்தி சார்: ஸ்கூலில் அஸிஸ்டண்ட் ஹெட்மாஸ்டர். அதனால பாதி நாள் கிளாஸுக்கு வர மாட்டார். வந்தார்னா ஒரே நாளில் பாதி புக் முடிச்சுட்டு போயிடுவார். என்ன நடத்தினார்?னு அவருக்கும் தெரியாது, எங்களுக்கும் தெரியாது.
ஆமா, எட்டாம் கிளாஸ் புக்கை வெச்சு ஆறாம் கிளாஸுக்கு கணக்கு நடத்திடார் ஒரு தடவை. சிலபஸ்ல கிடையாது!னு சொல்லி எக்ஸாம்ல மார்க் வாங்கிட்டோம். இப்பவும் எனக்கு மேத்ஸ்னா கொஞ்சம் அலர்ஜி.
வினோதா: இலங்கையிலிருந்து தமிழகத்துக்கு புலம் பெயர்ந்த குடும்பம். சிங்களத்து சின்ன குயிலே!னு பாடினா மின்னல் கீற்றா ஒரு புன்னகை எட்டிப் பார்க்கும். பேஸ்கட் பால் பிளேயர். வினோதாவுக்காக பாதி ஸ்கூல் கிரிக்கட்டை மறந்து பேஸ்கட் பால் ஆடியது.
(ச)ரோஜா டீச்சர்: இந்த தமிழ் மேடம் தினமும் தனது கொண்டையில் ரோஜா வெச்சுண்டு வருவாங்க. அதனால் சரோஜா டீச்சர் ரோஜா டீச்சர் ஆயிட்டாங்க.
எத்தனை ஸ்பெல்லிங்க் மிஸ்டேக் விடற?னு என்கிட்ட கத்துவாங்க. கட்டுரை போட்டி, நாடக போட்டினு எந்த போட்டி வந்தாலும் என்னய கேக்கமலேயே "அந்த கோட்டி பெயர எழுதிக்கோ!"னு என் பெயரை எழுதி அனுப்பிடுவாங்க.
சுப்பையா சார்: ரொம்ப துடிப்பானவர். என்ஸிஸி ஆபிசர் வேற. எனக்கு அரைகுறை ஹிந்தி தெரியும்! என்ற ஒரே காரணத்துக்காக பூரி கிழங்குக்கு ஆசைபட்டு என்ஸிஸில சேர்ந்த என்னை, பஞ்சாப்புக்கு எல்லாம் கேம்ப் கூட்டிண்டு போறேன்!னு சொன்ன நல்லவர். எங்க அப்பா கேம்புக்கு விட மாட்டேன்!னு சொல்லிட்டார்.
அவ்ளோ தான்பா! யாராவது சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்ள விரும்புவர்கள் இந்த மொக்கை டேக்கை தொடரலாம். ;)
Subscribe to:
Posts (Atom)