Thursday, February 22, 2007

டாட்டா! பை! பை!



கடந்த டிசம்பரிலிருந்து ஓய்வில்லாமல் சோறு தண்ணி (காவிரி தண்ணீர் தான்) கூட சரியாக இல்லாமல் ஆணி பிடுங்கியதில் மிகவும் சோர்வாக உள்ளதால், "சரி! தாமிரபரணி பாயும் நம்ம ஊர் பக்கம் ஒரு ஐந்து நாள் போய் ஓய்வெடுக்கலாம்!னு முடிவு பண்ணி இதோ கிளம்பியாச்சு.

போன தடவை அம்மாவுக்கு தீபாவளி புடவை எடுத்ததில் மதுரையில் இனிமே எந்த கடையிலும் இந்த அம்பிய உள்ள விடக்கூடாது!னு முடிவு பண்ணிடாங்களாம். அதனால் இந்த தடவை திருனேல்வேலி ஆரெம்கேவியல தான் நம்ம கச்சேரி இருக்கு.

ஆமா! தங்கமணிக்கு புடவை எடுக்கனும். ராசு குட்டி மாதிரி நம்ம மனசுல ஒரு டிசைன், கலர்(அதாவது புடவை கலருங்க) எல்லாம் இருக்கு. அதே கலர் அங்கே இருக்கனும். ஜோதிகா அக்கா கூட இந்த கலர்! இந்த கலர்!னு அடிக்கடி டிவி பொட்டியில வராங்க.

ஐம்பதாயிரம் கலர்ல புடவைகள் இருக்கு!னு சொல்றாங்க. நாம நினைக்கறது ஐம்பதாயிரத்து ஒன்னாவது கலரா இருந்தா என்ன பண்றது? அது மட்டுமல்ல, எப்பவுமே நாம செலக்ட் பண்ற புடவைய விட பக்கத்துல இருக்கற பிகர் செலக்ட் பண்ணி கைல வச்சுருக்கற புடவை மேல தான் கண்ணா இருக்கும். எப்படா அந்த பிகர் அத கீழே போடுவாங்க? நாம லபக்குனு கொத்தலாம்?னு நப்பாசையா இருக்கும்.

இன்னும் சிலர், இந்த பேட்ஸ்மேனுக்கு பின்னாடி இருக்கற விக்கட் கீப்பர் மாதிரி, "அய்யே! உங்களுக்கு இந்த கலர் மேட்சே ஆகாது! நல்லா நெய்யில செஞ்ச அல்வா துண்டு மாதிரி இருக்கீங்க! இந்த கலர் டிரை பண்ணுங்க!"னு சொல்லி நைசா ஒரு சிங்குசா கலர் புடவைய தலைல கட்டிருவாங்க.

அந்த டகால்டி வேலை எல்லாம் பண்ண வேண்டி இருக்கும்!னு நினைக்கிறேன். பார்ப்போம்!

வார கடைசியில் போவதால் நம்ம மக்களுடன் தாமிரபரணியில் ஜலக்ரீடை, அருவியில் ஆட்டம்! எல்லாம் நடத்திடலாம்னு பிளான். போட்டோ எல்லாம் புடிச்சுண்டு வரேன்.

ஆக, கல்லிடையில் ஐந்து நாட்களுக்கு யானைகள் முகாம் நடக்க போகுது!னு இப்பவே உடன்பிறப்பின் நக்கல் ஆரம்பித்து விட்டது.

கல்லிடைக்கு போனாலும் போன் சிக்னல் எல்லாம் நல்லா கிடைக்கனும். ம்ஹூம்! என் கவலை எனக்கு!

ஒரு ஐந்து நாட்களுக்கு உங்க கடை கண்ணி(கன்னி இல்ல) பக்கம் வர முடியாது.

கீதா மேடம்! போய்ட்டு வந்து நீங்க போட்ருக்கற பதிவுகளை(பாருங்க எல்லாரும் மொக்கைகளை!னு வாசிக்கறாங்க) எல்லாம் படிச்சுக்கறேன்.

ஆளுக்கு அஞ்சு கமண்ட் போட்டு வைங்க, அப்ப தான் அல்வா குடுப்பேன், அட நிஜமான ஒரிஜினல் நயம் திருனெல்வேலி அல்வாவை சொன்னேன் பா!

இது நம்ம 75வது போஸ்ட். உருப்படியா ஏதாவது எழுதனும்!னு தான் நினைச்சேன். பாருங்க மொக்கையாயிடிச்சு. இத தான் பெரியவங்க அன்னிக்கே சொல்லி வெச்சுருகாங்க
"பனை மரத்துக்கு அடியில உக்காந்து பால குடிச்சாலும்,
பாக்கறவன் பகார்டி!னு நினைச்சு பங்கு கேட்பானாம்!"

எல்லாருக்கும் பிர்லா! பை! பை! (எப்பவும் டாட்டா தானே சொல்றோம்! சும்மா ஒரு சேஞ்சுக்கு இருக்கட்டுமே!).... :)

Monday, February 19, 2007

நான் வளர்கிறேனே மம்மி!

பிப்ரவரி 18 2006, விளையாட்டு போக்குல நாம பிளாக் ஆரம்பிச்சு ஒரு வருடம் (with 74 posts) ஓடி விட்டது. ஒரு வருஷத்தில் தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு தான் எத்தனை பயனுள்ள பதிவுகள்! அப்படினு நான் பில்டப் குடுத்தா என் வீட்டுக்கு ஆட்டோ இல்ல, சுமோ இல்ல, ஜாமான் செட்டோட லாரியே வரும்! அனுப்பறத்துக்கு பாசக்கார பயலுங்க அமெரிக்காவுல கூட நிறைய பேரு இருக்காங்க!னு எனக்கு நல்லா தெரியும்.

இந்த ஒரு வருடத்தில் என்ன எழுதி கிழித்தாய்? என்று கேட்கும் எதிர் கட்சியினருக்கு (யாருப்பா அது?) நான் ஒன்று சொல்ல ஆசைப்படுகிறேன்!

"அரைச்சா தான் மாவு!
அடிச்சா தான் தக்காளி!"

(ஆமா! தமிழ்ல எதுகை மோனையோட பேச தெரிஞ்சா இங்கே தலைவர்கள் ஆயிடலாமே, கட்சிக்கும் கொள்கைக்கும் சம்பந்தமா தான் பேசனுமா என்ன?)

ஆரம்ப காலங்களில், கீதா மேடமிடம், எனது அருமை சகோதரி, சியாட்டல் சிங்கம், அவரது ரங்கமணியின் சிம்ம சொப்பனம், கழக கட்டிங்க் பிளயர்! (போர்வாள் தான் இருக்கனுமா என்ன?) 'பாயிண்டர்ஸ்' புகழ் பொற்கேடி ஸாரி, பொற்கொடியும், நானும் டியூஷன் எடுத்துக் கொண்டு மொக்கை பதிவுகள் போட கற்று கொண்டோம். ஆனாலும் மேடத்தை மிஞ்ச முடியலை! முடியவும் முடியாது! என்று மனபூர்வமாக ஒத்துக் கொள்வதில் நான் ஆனந்தம் அடைகிறேன்! :)

நான் நினைத்திருந்தால் இந்த ஒரு வருடத்தில் நூறு மொக்கை பதிவுகள் போட்டு சங்க நாதம் செய்திருக்கலாம். இதை தானா இந்த பிளாக்கர் உலகம் விரும்புகிறது?


பிளாக் எழுதறதுக்கு தான் எனக்கு ஆபிஸ்ல சம்பளம் தரா!னு நான் ரொம்ப நாளா நினைச்சுண்டு இருந்தேன். இல்லைடா அம்பி! ஆணி பிடுங்கவும் தான் சம்பளம்(யாருப்பா அது தண்டச் சம்பளம்!னு வாசிக்கறது?)னு கொஞ்ச நாள் கழிச்சு தான் தெரிய வந்தது.


எனக்கு கடை இருக்கறது எங்க மேனேஜருக்கே தெரியும். "ராஜா! கண்ணு! என் செல்லம் இல்ல! இங்க்லீஸ்ல எழுதுப்பா!"னு சொல்லி பாத்தாங்க. அஸ்கு புஸ்கு! எழுதறதே உங்கள பத்தி தானே!னு நான் உண்மைய சொல்ல முடியுமா என்ன?

இந்தா! அந்தா!னு ஒரு வழியா ஆபிஸ்ல பிராடக்ட்டை ரீலீஸ் பண்ணியாச்சு!
இனிமே கிளயண்ட் காறி துப்பற வரைக்கும் கவலையில்லை.

பெங்களூருக்கு என்னை பார்க்க வரும் போது மறக்காமல் எனக்கு பிடிச்ச பால் திரட்டிப்பால் வாங்கி வந்த கீதா மேடம், சாம்பு மாமா, கண்ணை இமை காப்பது போல என் தங்கமணியை காத்து வரும் எஸ்கேஎம் அக்கா, என்னை தன் மகனை போல அன்பு காட்டிவரும் திராச(TRC) சார் - உமா மேடம், தவறாது மெயில் பண்ணும் பக்கா திருடன்(தமிழன்) கோபி, சென்னை மாமி, சென்னையில் நடந்த மாபெரும்(?) பிளாக்கர் மாநாட்டில் கலந்து கொண்ட 'திருப்பாவை' புகழ் வேதா(ள்), சியாட்டல் போய் பாயின்டர்ஸ் படிப்பதில் மட்டுமே ரொம்ப பிஸியாக இருந்தாலும்(?) தவறாது எனக்கு மெயில் பண்ணும் பொற்கொடி, தினமும் எனக்கு மெயிலில் கொடுமை அளிக்கும் லண்டன் உஷா, சமயல் குறிப்பு சொல்லும் விஜி, ஜிமெயிலில் மிரட்டும் சுபா, என்னை (பரமார்த்த)குருவாக ஏற்றுக் கொண்டு ஒரு ஷிஷ்ய பரம்பரையை உருவாக்கி வரும் ஆஸ்திரேலியா கோப்ஸ், விரைவில் ஹைதராபாத் மறுமகளாக போகும் 'கண்ணாளனே' புகழ் ப்ரியாலு, நானூறு அடித்த(பதிவுகளை சொன்னேன்பா!) கார்த்தி, தினமும் குட்மார்னிங்க் மெயில் அனுப்பும் சகோதரி தீக்ஷன்யா, எனதருமை நண்பன் அர்ஜுனா, தவறாது வரும் மருதம், பொன்னரசி, எண்ணெய் கத்த்ரிக்காய் புகழ் அருண், தீடிரேன கவிதை எழுதும் ஜி3 அக்கா, அமெரிக்காவிலிருந்து அன்போடு என்னை பார்க்க வந்த கன்யா, குழந்தை வளர்ப்பில் குதித்திருக்கும் ஷ்ரியக்கா, சோடி போட்டு பாடிக் கலக்கும் கிட்டு மாமா & மாமி, நாட்டமை' ஷ்யாம், பெங்க்ளூரில் என்னை சந்தித்து உரையாடிய கில்ஸ்...

ஸ்ஸ்ப்பா! மூச்சு வாங்குது பா! ஜோடா ஒடைச்சு தாங்க பா!

(க்ளக்! பிளக்! க்ளக்! பிளக்! க்ளக்! பிளக்!)

என்னை வெச்சு காமெடி பண்ணும் ரவி, ஆபிஸில் கோல்மால் மட்டுமே பண்ணும் கோபாலு, அதி காலை மூனு மணிக்கு, இரவு 12 மணிக்கெல்லாம் என் பிளாக்கை படிக்கும் மை பிரண்ட், மனோஜ், கவிதை எழுதி கலக்கும் டீரிம்ஸ், அமெரிக்காவில் இருந்து என்னை அன்போடு நலம் விசாரிக்கும் ராமச்சந்திரன்,

"அர்ஜுனருக்கு ஒரு கண்ண பரமாத்மா! " போல என்னை வழி நடத்தும் அருமை அண்ணன் டுபுக்கு, எவ்வளவு அடிச்சாலும் தாங்கும், தனக்கென்று ஒரு பாணியில் எழுதும் கைப்புள்ள அங்கிள், பக்கத்து போர்ஷனில் என்னை குடி வைத்து சொந்த செலவில் சூனியம் வைத்து கொண்ட டுபுக்கு டிசைப்பிள், தீபிகா புகழ் பாடும் பரணி, பிசியா இருக்கும் பாலமுருகன், குட்டி(சுவரு), ஆண்களுக்கு பெல்ட் ஐடியா அளிக்கும் சுமதி, என் திருமணத்துக்கு அமெரிக்காவிலிருந்து வருகை புரிந்து ஆயிரம் டாலர்(முருகன் டாலர், ஐயப்பன் டாலர் இல்ல) மொய் எழுத துடிக்கும் ஹேமாக்கா மற்றூம் சுசிக்கா, என பிளாக் மூலம் கிடைத்த நல்ல உள்ளங்களின் லிஸ்ட் நீண்டு கொண்டே போகிறது. யார் பெயராவது விட்டு போயிருந்தால் குழந்தையை மன்னிக்கவும்.
என்னை உங்கள் வீட்டு குழந்தையாக, சரி பிள்ளையாக, அன்பு காட்டிய அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் நன்றி ஹை!னு சொன்னால் அது ரொம்ப சின்னதாக இருக்குமே?....

Friday, February 16, 2007

ஓம் நம சிவாய!


அன்னைக்கு நவராத்திரி என்றால், அய்யனுக்கு இன்று சிவராத்திரி! மாசி மாதம் தேய்பிறை சதுர்தசியில் வருவது தான் சிவராத்திரி.
******************************************************************************
உலகாளும் மன்னனுக்கு உறக்கம் வரவில்லை. எப்படி வரும்? விடிந்தால் அவன் பார்த்து பார்த்து கட்டிய சிவ ஆலய குடமுழுக்கு ஆயிற்றே! எல்லா ஏற்பாடும் தயார் நிலையில். வீதியேங்கும் வண்ண கோலங்கள் என்ன, வான வேடிக்கைகள் என்ன! வேத மந்திரங்களின் கணீர் ஓசை என்ன! சத்திரங்களில் 18 வகை பதார்த்தங்களுடன் வந்தவருக்கு எல்லாம் உணவேன்ன! என்று நாடே திமிலோகப்பட்டது.

"மன்னா! இதை மாதிரி ஒரு ஆலயம் இந்த உலகில் இதுவரை எவரும் கட்டியதில்லை, இனி கட்டப்போவதும் இல்லை!" என்று தலமை சிற்பி இறுமாப்புடன் சொன்ன சொற்கள் மன்னனின் காதில் தேனாய் பாய்ந்ததில் வியப்பேன்ன? நடு ஜாமம் மூன்றாம் நாழிகையிலும் மன்னன் உறங்காமல் புரண்டு படுத்தான்.

எல்லாம் முகஸ்துதி படுத்திய பாடு!

"விடிந்தால் என் லக்ஷியம் நிறைவேறி விடும். உலகை ஆளும் ஈசனுக்கு நான் ஆலயம் எடுத்து விட்டேன்! என வரலாறு இதை பதிவு செய்து விடும்". மெதுவாக கர்வம் அங்கே தலைதூக்கியது.

களைப்பு மிகுதியால் மன்னவனும் கண்யர்ந்தான்.

கனவில் தோன்றினான் பசுபதி நாதன்.






பாராளும் மன்னனே! நாளை நீ எமக்கு அமைத்த ஆலயத்தில் யாம் குடி பெயற இயலாது. அன்பன் ஒருவன் இதே நாளில் கோலாகலமாக குடமுழுக்கு ஏற்பாடு செய்துள்ளான். வேறு முஹூர்த்தம் பார்த்து கொள்! முடிந்தால் நீயும் அந்த விழாவில் கலந்து கொள்!

உறக்கம் கலைந்து துள்ளி எழுந்தான். குழப்பத்தில் ஆழ்ந்தான்.

யாரங்கே! கூட்டடா மந்திரி சபையை!
நாலாம் ஜாமம் முடிவில் அவசர கூட்டமா? என்ன நேர்ந்தது?

ஆனாலும் கூப்பிட்டது மன்னன், தலைபணிந்தது அரசவை.

"என் நாட்டில் இன்னொரு குடமுழுக்கா? யாரது? எங்கே? எப்படி எனக்கு தெரியாமல்? ஒற்றர் படை உறங்கி விட்டதா? விரைவோம் ஈசன் சொன்ன அனபரது இருப்பிடத்துக்கு!" - அதிகாரம் சாட்டையை சொடுக்கியது.

சாதாரண குடில். குடமுழுக்குக்கான அறிகுறி எதுவும் இல்லை.

யாரது வீட்டில்?

என்ன விஷயம்? பாராளும் மன்னன் பரதேசி என் வீட்டு வாயிலில்...?

கனவின் விவரம் அறிவிக்கப்பட்டது. கையது பொத்தி, கண்ணீர் மலகி மெய்யொழுக வாய் திறந்தார் அன்பர்.
மன்ன! நீங்கள் கட்டிய ஆலயம் பார்த்து அன்பனும் ஆசை கொண்டேன்.

"உள்ளம் பெருங்கோவில்!
ஊண் உடம்பு ஆலயம்!
கண்ணிரன்டும் தூங்கா மணி விளக்கு!" எனவும்


நெஞ்சகமே கோவில்!
நினைவே சுகந்தம்!
அன்பே மஞ்சன நீர்!
பூஜை கொள்ள வாராய் பராபரமே! என்று உருகி அழைத்தேன். அதற்க்கு தானோ என்னவோ நம் ஈசன் தலை சாய்த்து இருக்கிறான்.


"நட்ட கல்லை தெய்வம் என்று
நாலு புஷ்பம் சாத்தியே
சுற்றி வந்து முனுமுனுவென்று
சொல்லும் மந்திரம் ஏதடா?

நட்ட கல்லும் பேசுமோ நாதன்
உள்ளிருகாயில்?
சுட்ட சட்டி சட்டுவம்
கறிச்சுவை தான் அறியுமோ?"

- சிவ வாக்கியர் (சித்தர் பாடல்கள்)


அன்பரது தாள் பணிந்து வணங்கியது அதிகாரம்.



படோப பூஜைகள், அபிஷேகங்கள், தூப தீப வழிபாடுகள் என மனம் லயிக்காமல் ஸ்வாமி கும்மிடுவதை விட மனமுருகி நாலு வில்வம் சாத்தினால் நாதன் செவி சாய்க்காமலும் இருப்பானோ?


இந்த சிவ ராத்திரி நன்னாளில் " நெட் கனெக்க்ஷன் வரலை! பிளாக்கர் பப்ளிஷ் ஆகலை! போட்ட போஸ்ட்டுக்கு கமண்ட் வரலை! போன்ற முக்கியமான உலக கவலைகளை சிறிது தள்ளி வைத்து சூடான பில்டர் காப்பியையும் மறந்து ஈசன் நினைவும் கொள்வோமே! :)
பி.கு: இந்த பதிவை படித்து விட்டு "எலேய் அம்பி! மெய்யாலுமே நீ தானா இப்படி போஸ்ட் போட்டது? உன் லிங்க் தானா?னு செக் பண்ணினேன்!" அப்படினு என்னை வெச்சு காமடி, கீமடி எதுவும் பண்ண படாது. இப்பவே சொல்லிட்டேன் ஆமா!
எனக்கும் அப்பப்ப கொஞ்சம் நல்ல புத்தி வரும்.
ஓம் நம சிவாய!ஓம் நம சிவாய! ஓம் நம சிவாய! ஓம் நம சிவாய!

Friday, February 09, 2007

நடந்தாய் வாழி காவேரி!



மண், பெண், பொன் இவை மூன்றுக்கும் சண்டையிட்ட மனித இனம் தண்ணீருக்கும் சண்டையிட தவறியதில்லை. (ஷ்யாம், தண்ணினா நிஜமான தண்ணி, பகார்டியோ, பேக்பைபரோ இல்லை)

17 வருஷமா 600 முறை கூடி பேசி சும்மா ஜவ்வா இழுத்து காவேரி நதி விஷயத்துல ஒரு தீர்ப்பை சொல்லிட்டாங்க. வழக்கம் போல ஜிலேபி தேசம் " நாட்டாமை!(ஷ்யாம் இல்லை) தீர்ப்பை மாத்தி சொல்லு!"னு கத்திடாங்க. தமிழக பஸ்கள் வர/போக முடியலை, ரோடு எல்லாம் மறியல், அம்மா டிவி, (கிராண்ட்)சன் டிவி எல்லாம் கட். பந்த் வேற நடக்க போகுது. ஒரே கும்மமேளா தான்!

இந்த தடவை பாதுகாப்பு ஏற்பாடுகளை கொஞ்சம் நன்னா பண்ணிருந்ததால அதிகம் சேதம் இல்லை, (இதுவரைக்கும்).

"அம்பி! இந்த தடவை உன்னை தான் நாலு சாத்து சாத்துவா! எங்களை அடிக்க மாட்டா! - இது எங்க ஆபிஸ்ல இருக்கற ஒரு ரசகுல்லாவின் அல்ப சந்தோஷம்.

இந்த தடவை உஷாரா பிரட், பிஸ்கட் எல்லாம் முன்னாடியே வாங்கி வெச்சுட்டேன். இல்லைனா ஹிஹி,இருக்கவே இருக்காங்க நம்ப டுபுக்கு டிசிப்பிள்.

சரி, மேட்டருக்கு வருவோம்.

1) இப்ப நாஸிக்குல நோட்டு அடிக்கறாங்க, அதுக்காக எங்களுக்கு போக தான் மீதிய இந்தியாவுக்கு அனுப்புவோம்!னு அந்த ஊர்காரங்க சொன்னா எப்படி இருக்கும்?

2) நம்ப நெய்வேலில கரிய தோண்டி அனல் நிலையம் மூலமா மின்சாரம் தயாரிச்சு அனுப்பறாங்க. எங்களுக்கு தான் எல்லாம்!னா சொல்றோம்?

என்ன இது சிறு பில்லத்தனமா இல்ல இருக்கு..?

இது போதாது!னு நம்மூர்ல இருக்கற கழக கண்மனிகள்
"கன்னடம் வென்றாய்!
காவேரி தந்தாய்!
கழகம் காத்தாய்!
கத்ரிக்காய் பொரித்தாய்!"னு போஸ்டர் அடிச்சா இங்க எங்களுக்கு ரிவிட்டு அடிப்பாங்க.அதனால கொஞ்சம் அடக்கி வாசிங்கண்ணா!

இயற்கையின் மீது உரிமை கொண்டாட வேண்டாம். பதிலுக்கு இயற்கையும் நம் மீது உரிமை கொண்டாட ஆரம்பித்து விட்டால்
"பினாமி வைத்திருப்பவன் கூட
சுனாமியில் போய் சேர வேண்டியது தான்! அப்புறம்
அனானி கமண்ட் கூட கிடைக்காது!"

நைல் நதி, கங்கைகரை, தாமிரபரணி(எங்க ஊர விட்டு குடுக்க மாட்டோம் இல்ல) என நதிக்கரைகளில் தான் மனித நாகரீகம் தழைத்து வளர்ந்தது. அந்த நதியை வைத்தே இன்று மனிதன் மாக்களாய் மாறி சண்டையிடுவதை நினைத்தால் நாம் வெட்கப்படனும், வேதனைப்படனும். ஆனா பாருங்க நிறைய பேரு ஹையா! பந்த்! ஒரு நாள் லீவு! ஜாலி!னு குதிக்கறாங்க.

இந்த தீர்ப்பு வரதுக்கே 17 வருஷம் ஆயி போச்சு! இதுக்கு தான் நம்ப சின்ன கவுண்டரை தீர்ப்பு சொல்ல சொல்லி இருந்தா பத்து நிமிஷத்துல தோளுல துண்ட மாத்தி போட்டு தீர்ப்பு சொல்லி இருப்பாரு! இத நான் இங்க சொன்னா நாலு சாத்து சாத்துவானுங்க! எதுக்கு வம்பு!
நல்லா தண்ணி காட்றாங்க பா!

பி.கு: காதலர் தின ஸ்பெஷல் - உலக பிரவுசர்களை கலக்க வருகிறது ஆதலால் பிளாக் எழுதுவீர் - II

Friday, February 02, 2007

பால் காய்ச்சியாச்சு!





பேச்சிலரா சிவனேனு இருந்த(இருக்கற) இந்த குழந்தைய வசமா மாட்டிவுட்டுடாங்க. இது வரைக்கும் சின்னதா ஒரு ரூம்ல இருந்த நான் இனிமே இருக்க முடியுமா? அதுனால, சரி! அழகா, சின்னதா, ஒரு வீடு (இது தங்கமணிக்கு - சின்ன வீடு இல்ல எஜமான்) பாத்துடலாம்!னு முடிவு பண்ணி இந்த ஜிலேபி தேசதுல சுத்தி சுத்தி வந்தேன்.

எல்லா பயலும் வீடு வாடகைக்கு பதிலா வீட்டோட விலையேவே சொல்றான். ஒரு வீட்ட பாக்க போன போது பாதி ரூம் கட்டி முடிக்காம இருக்கே! என்னயா மேட்டர்?னு கேட்டா உங்க கிட்ட அட்வான்ஸ் வாங்கி தான் மீதிய கட்டனும்! எப்படி வசதி?னு பல்ல காட்றான்.

அப்ப தான் கம்பருக்கு ஒரு சடையப்ப வள்ளல் மாதிரி நம்ப
டுபுக்குடிசிப்பிள் என் மேல இரக்கப்பட்டு பொங்கல் அன்னிக்கி சாப்பிட கூப்டாங்க. நமக்கு தான் சோறு கண்ட இடம் சொர்க்கம் ஆச்சே! நைட்டுக்கு பார்சலும் சேர்த்து தருவீங்களா?னு முன்னாடியே போன்ல விசாரிச்சுண்டு அவங்க வீட்டுக்கு போயி சும்மா கட்டு கட்டுனு கட்டிடேன்.

சூப்பரா சமச்சு இருந்தாங்க. (ஹிஹி, ரசத்துல தான் கொஞ்சம் காரம் கம்மி).
அப்ப தான் அவங்க பக்கத்து அபார்ட்மெண்ட் காலி!னு கேள்விப்பட்டு கப்புனு அமுக்கிட்டேன்.
விதி யாரை விட்டது? இனிமே தான் இருக்கு அவங்களுக்கு தலைவலியே!
நல்ல பவுர்ணமி அன்னிக்கி பாலும் காச்சியாச்சு!



அடுத்த போஸ்ட் "வீட்டுக்கு வெள்ளை அடிச்சாச்சு! கக்கூஸ் கழுவியாச்சு!னு எல்லாம் கண்டிப்பா போட மாட்டேன். பயப்படாதீங்க.

ஆகவே மக்களே! இப்ப சொல்லுங்க, பிளாக் எழுதினா உங்களுக்கு என்ன என்ன கிடைக்கும்..?

Next Post: ஆதலால் பிளாக் எழுதுவீர் - II Don't miss it. :)