Wednesday, November 29, 2006

அக்கடானு நாங்க பிளாக் படிச்சா....





ஆபிச்ல எக்கசக்க வேலை. 3 வாரத்துல Beta product ரிலீஸ்!னு குண்டை தூக்கி போட்டுட்டார் மேனேஜர்.


குழந்தை(me only) ஆடி போயி இருக்கு.

வெந்த புண்னுல வேல பாச்சற மாதிரி நான் இந்த பிளாக் படிக்கறதை எப்படியோ மோப்பம் புடிச்ச நெட்வொர்க் அட்மின், ஆப்பு அடிச்சுட்டான். இதுக்கேல்லாம் அஞ்சுவானா இந்த அம்பி?

ப்ராக்ஸி(proxy) போட்டு டகால்டி பண்ணி சமாளிச்சுண்டு இருக்கேன். பிளாக்கர் - பீட்டா வெர்ஷனுக்கு மாறின புண்ணியவான்கள் சைட்டில்(பிளாக் சைட்டை சொன்னேன்) கமெண்ட் போட முடியலை. தப்ப எடுத்துக்க வேண்டாம்.

இதுக்கு நடுவுல, திடீர்னு சென்னைக்கு வேற இந்த வார கடைசில போக வேண்டி இருக்கு. சென்னைல மழை எல்லாம் எப்படி பெஞ்சு இருக்கு?னு சும்மா பார்த்துட்டு வரலாம்!னு தான். வேற ஒன்னும் இல்லை. ஹிஹி.

வழக்கம் போல TRC சார் வீட்டுல தான் டேரா. இல்லைனா பாவம், அவர் வருத்தபடுவார் இல்ல? ஹிஹி.

நான் ஏதோ அவர் வீட்டுல போயி 3 வேலை மூக்கு முட்ட அமுக்க போறதா எதிர் கட்சிகள் அவதூறு பரப்பலாம்! அவர்களுக்கு இந்த தருணத்தில் நான் ஒன்று சொல்லி கொள்ள விரும்புகிறேன்!
"எங்கள் உறவை யாராலும் பிரிக்க முடியாது! ஆட்ட முடியாது! அசைக்க முடியாது! (TRC சார்! கவுத்திராதீங்க, இந்த தடவை பஜ்ஜி உண்டா?)

முடிந்த வரை உங்கள் பதிவுகளை நேரம் கிடைக்கும் போது படிக்கிறேன். நிலைமை கொஞ்சம் சரியாகட்டும், பீனிக்ஸ் பறவையாய் மீண்டும் வருவேன்.

Friday, November 17, 2006

குட் மார்னிங்க் மிஸ்ஸ்!






பக்கத்து கம்பெனியில் இருந்து வந்த இந்த மெயிலை பாத்துட்டு எங்க டீம்ல ஒரே அமளியாயிடுத்து. சே! நாமளும் Children's Day கொண்டாடி இருக்கலாம்!னு ஒரே ஆதங்கம்.




டீம்ல இருக்கற ஒரு வானரம் சொல்றது, நாம எல்லாம் ஸ்கூல் போற அளவுக்கு இன்னும் வளரல! அதனால கிண்டர் கார்டன் ரேஞ்சுக்கு தான் டிரஸ் பண்ண முடியும். 4.5 ஆரோக்யா பாலை பீடிங்க் பாட்டிலில் விட்டு இந்த அம்பி கையில குடுத்து நாமளும் ஒரு போட்டோ எடுத்து அந்த ஆபிஸ்க்கு பதில் மெயில் அனுப்பினா தான் என் மனசு ஆறும்!

அதுக்கு நான் சொன்னேன், அப்படி மட்டும் நடந்தா உலகம் அழிஞ்சிடும்!

என்னை ஓட்டறது!னா எங்க டீம்ல எல்லோருக்கும் செம குஷி. நாம மட்டும் என்ன ஒழுங்கா என்ன? சான்ஸ் கிடச்சா மேனஜேரையே ஓட்டிடுவோம் இல்ல? :)

சரி, இந்த வாரம் இவ்வளவு தான்! வர்ட்டா? :)

Saturday, November 11, 2006

ரெடி! ஷ்டார்ட்! ஒன்..டூ..த்ரி...!



கதை, கவிதை!னு பட்டய கிளப்பும் பவித்ரா சிஸ்டர் நம்மை எழுத சொன்ன பதிவு இது!

3 Smells I love:

என்ன தான் நாம் ஏலக்காய், கிராம்பு எல்லாம் போட்டு சர்க்கரை பொங்கல் செய்தாலும், அது கோவிலில் நைவேத்யம் ஆகி, சுட சுட நம் கையில் வரும் போது வித்யாசமாக ஒரு நறுமணம் வீசுமே! அந்த தெய்வீக நறுமணம்.

சிறு குழந்தைகளை குளிப்பாடி, அதன் மேல் ஜான்ஸன் பவுடர் எல்லாம் போட்டாலும், அந்த பவுடரை மீறி ஒரு வாசனை வருமே! அது சூப்பர்.

முல்லைப்பூ அல்லது பிச்சிப்பூ (இரண்டும் ஒன்று தானா?) வாசனை. அதுவும் இந்த பூச்சரங்கள் இருக்க வேண்டிய தலையில் இருந்தால், டாப்பு டக்கர். (ஹிஹி)



3 Smells I hate:

பீடி சிகரெட் வாடை. சே! குமட்டிக்கொண்டு வரும். இந்த கருமத்தை எப்படி தான் ஊதறாங்களோ?

பான் பராக் வாடை - இந்த ஜிலேபி தேசத்தில் எல்லார் வாயிலும் பான் பராக் தான். கொஞ்சம் கூட இங்கிதம் இல்லாமல் கண்ட இடத்தில் புளிச்!னு துப்பும் அந்த ஜந்துக்களை பார்க்கும் போது நான் மெய்யாலுமே சில வினாடிகளுக்கு அன்னியனாக மாறி விடுகிறேன்.

கொய்யா/பலாப்பழ வாசனை - அது என்னவோ சின்ன வயசுல இருந்தே இந்த ரெண்டு பழங்களோட வாசனைனா அலர்ஜி.

3 Jobs that I have had in my life:

முதலில் ஒரு வருடம் பார்த்த லெக்சரர் வேலை. மிகவும் போர் அடிக்கும் சப்ஜக்ட்ஸை கூட பையன்களுக்கு எப்படி சுவாரசியமாக எடுக்கலாம்?னு தினமும் யோசிச்சு புதுசு புதுசா பல டெக்னிக்குகளை(டகால்டிகளை) பயன்படுத்திய காலங்கள்.

சென்னையில் பார்த்த சாப்ட்வேர் வேலை.

இப்போ பாக்ற வேலை. (நான் ஆபிஸ்ல நிஜமாலுமே வேலை எல்லாம் செய்றேன்!னு என் தம்பி கூட நம்ப மாட்டேங்கறான்.)

3 Movies that I could watch over and over:

தில்லுமுல்லு - தேங்காய் சீனிவாசன் ரஜினியை இன்டர்வியூ பண்ணூம் சீன், எத்தனை தடவை பார்த்தாலும் அலுக்காது.

தில்லானா மோஹனாம்பாள் - "அடேங்கப்பா! ஆட்டம் ரொம்ப ஜாஸ்த்தியா இருக்கே!"னு பாலையா நக்கல் விடுவாரே! அப்படி ஒரு படம் இப்ப எல்லாம் சான்ஸே இல்லை.

காதலிக்க நேரமில்லை(படம் பெயரை தான் சொன்னேன்) - இங்கேயும் பாலையா தான் பட்டய கிளப்புவார்.

3 Fond memories:
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் எனது முதல் நாள். நெல்லையில் படித்த எனக்கு அந்த கல்லூரியின் பிரமாண்டம், பழமை, மக்கள் எல்லாரையும் பார்த்து ஒரு வித மலைப்பு, பிரமிப்பு, படபடப்பு. பட்டிகாட்டான் யானையை பார்த்த மாதிரி. ரெண்டே நாள் தான், அப்புறம் நம்ப வால்தனத்தை ஸ்டார்ட் பண்ணிட்டோம் இல்ல?

என் முதல் கம்பெனியின் கடைசி நாள். நான் கிளம்பும் போது அங்கே இருந்த ஆபிஸ் பாய் கண்களில் துளிர்த்த கண்ணீர் துளிகள். "இனிமே எங்கிட்ட எல்லாம் யார் சார் பேசுவாங்க?"னு சொன்ன அவரின் வார்த்தைகள். ஒரே பீலீங்க்ஸ் ஆப் இந்தியாவா போச்சு!

ஒரு மாதம் முன்னாடி எங்க மேனேஜர், "தமிழ்ச் சங்கம் தீர்த்து வைக்க முடியாத ஒரு சந்தேகததை, இந்த அம்பி தீர்த்து வெச்சுபுட்டான்!"னு சொல்லி டீம் மீடிங்க்ல ஒரு பெரிய காட்பரீஸ் சாக்லேட் குடுத்தாங்க. ரூமை விட்டு வெளியே வந்ததும் வழக்கம் போல பஞ்சாபி தட்டி பறிச்சுடுச்சு! :(

3 Jobs I would love to have:
மறுபடி கல்லூரி வேலை. நம்மால முடிஞ்ச அளவு சமூகத்தில நாலு நல்லது செய்யனும்.அவ்ளோ தான்!

3 Things I like to do:

சின்ன குழந்தைகளோடு என் பொழுதை இனிமையாக கழிப்பது.

நேரம் கிடைக்கும் போது இந்த பிளாக் எல்லாம் படிக்கறது,(இத தானே முழு நேரமும் செய்யறது!னு குத்தி காட்ட வேண்டாம்.)

என் உடன்பிறப்புடன் தினமும் ஆபிசில் நடந்த விஷயங்களை பற்றி அரட்டை அடிப்பது.

3 Of my favorite foods:

Butter scotch Ice Cream
தக்காளி சாதம், தயிர் சாதம்
ஹிஹி, கேசரி.

3 Places I would like to be right now:

நெல்லை அகத்தியர் அருவி, பாண தீர்த்த அருவிக் கரைகள்,

மதுரையில் அமைதியான என் தாத்தா வீடு, கடை வீதிகள்.

எனக்கு ப்ரியமானவர்கள் இதயத்தில் எப்பொழுதும்.(டச் பண்ணிட்டேன் இல்ல?).

3 Things that make me cry:

உண்மையானவர்கள்!னு நான் நம்பியவர்கள் புரியும் நம்பிக்கை துரோகங்கள். நான் அதிகம் கண்ணீர் சிந்துவதில்லை.

சரி, மூனு பேரை இழுத்து விட்ருவோம் இந்த தடவை.

1)SKM - எழுத ஒன்னும் இல்லை!னு சொன்னீங்க இல்ல? நல்ல ஹோம்வொர்க், ம்ம் ம்ம், ஒழுங்கா எழுதுங்க.

2) கைப்புள்ளை - தல! நீங்க இந்த அடியவன் வீட்டுக்கு வரதே பெரிசு, ஹிஹி, அதான் ஏதோ என்னால முடிஞ்ச கைங்கர்யம்.

3)கார்த்திக் - இந்த போஸ்ட்டை நீங்க படிச்சு முடிக்கறத்துக்கு முன்னாடி கார்த்திக், என் டேகை எழுதி போஸ்டா போட்ருப்பார் பாருங்க.

Friday, November 03, 2006

சொர்க்கமே! என்றாலும்....



ஒரு வழியா தீபாவளி முடிஞ்சு மறுபடி வந்தாச்சு! திட்டமிட்டபடி முதலில் மதுரைக்கு போய் டிரஸ் எல்லாம் அங்கே எடுத்துண்டு போகலாம்!னு சொல்லி நம்ப சேக்காளி ஒருத்தனையும் கூட கூட்டிண்டு கடை வீதிக்கும் போயாச்சு. முதலில் அம்மாவுக்கு புடவை எடுத்துடலாம்!னு முடிவு பண்ணி புடவை கடைக்கு நுழைஞ்சா ஆண்களை அதுவும் பால் வடியும் முகம் கொண்ட என்ன மாதிரி குழந்தைகளை எல்லாம் ஒரு பொருட்டாகவே மதிக்க மாட்டா! போலிருக்கு.

தம்பி! வீட்டுலேருந்து விவரம் தெரிஞ்ச யாரும் வரலையா?னு நக்கல் விடறான் கடைக்காரன்.
அப்புறம் போனா போகுது!னு ரெண்டே ரெண்டு புடவைகளை மட்டும் எடுத்து போட்டு செலக்ட் பண்ணூங்க!னு மிரட்றான்.

சரி, இன்னிக்கு இவனை சோடா குடிக்க வெச்சுபுடனும்!னு முடிவு பண்ணிட்டு, கார்டன் புடவைகளின் குவாலிடியில, மெட்டல் ஷிபான் வகை பளபளப்போட, பூனம் சில்க்ஸ் புடவை மாதிரி லேசா, பீக்காக் சில்க்ஸ் மாதிரி பார்டர் டிஸைன் போட்டு மைசூர் சில்க்ஸ் மாதிரி, பகல ஒரு ஷேடு, நைட்ல ஒரு ஷேடு காட்ற மாதிரி டபுள் ஷேடோட இருக்கற மாதிரி காப்பர் சல்பேட் ப்ளூ அல்லது நல்ல மெரூன் ரெட் ஆலிவ் க்ரீன் கலர் பார்டர் (சிங்கிள் சைடு மட்டும்)போட்டு ஒரு புடவை எடுத்து போடுய்யா! பார்ப்போம்!னு சொன்னேன்.

அதுக்கபுறமா அவன் வாயவே தொறக்கலை.

பின்ன என்ன, 4 வருஷமா எங்க அம்மாவுக்கு பார்த்து பார்த்து புடவை எடுக்கற இந்த அம்பிய, ஆபிஸ்ல இருக்கற மேனேஜர் மேடத்துக்கே காஸ்டியூம் ஐடியா குடுக்கற இந்த அம்பிய பார்த்து ரெண்டு புடவையில ஒண்ண செலக்ட் பண்ணு!னு சொன்னா என்ன அர்த்தம்?

ஒரு முக்கால் மணி நேரம், 4 அலமாரிய காலி பண்ணி கடைசியா நான் கேட்ட ஷேடுல (பார்டர் கலர் மட்டும் வேற) ஒரு புடவை கிடைத்து, கிடைதே விட்டது. என்னை விட, அந்த சேல்ஸ்மேனுக்கு ரொம்ப சந்தோஷம்.

அதுக்கபுறமா, பக்கத்து கடையில எனக்கு ஒரு ஜீன்ஸ், ஷர்ட், அப்பா/தம்பிக்கு ஒரு ஷர்ட் வெறும் பத்து நிமிடத்தில் கிடைத்து விட்டது.

இரவே மதுரையிலிருந்து கல்லிடை வந்தாச்சு! தொடர்ந்து மழை பெய்ததால் இந்த தடவை தாமிரபரணிக்கு போக அம்மா 144 தடை உத்தரவு போட்டு விட்டார்கள்.

சரி, வந்ததுக்கு ஒரு வெங்காய சாம்பார் நம் கையால் செய்வோம்!னு வெங்கல கடையில் யானை நுழைந்தது போல கிச்சனை அத களபடுத்தியாச்சு!


நல்லா 4 நாள் அம்மா சமையலை வெட்டியதில், புதுசாக வாங்கி வந்த ஜீன்ஸை அணிய தீபாவளி அன்று சிறிது சிரமப் படவேண்டி இருந்தது. எங்கள் வீட்டில் வாங்கிய நெல்லை அல்வா, பக்கத்து மாமியாத்து தேங்காய் பர்பி, எதிர் வீட்டு மாமி குடுத்த மாலாடு, அத்தையாத்து பாதுஷா, பெரியப்பா வீட்டு மைசூர் பாகு என்று கணக்கு வழக்கில்லாமல் ரைஸ்மில் டபுள் டியூட்டி பார்த்தது.தீபாவளி இஞ்சி லேகியம் வேறு தன் வேலையை காட்ட தொடங்க கார்க் புடுங்கி கொள்ளும் அறிகுறி வேறு பிரகாசமாக தெரிந்தது.

தீபாவளி அன்று, ஸ்வீட் என்ன வேணும்? சேமியா பாயசமா? ரவ கேசரியா?னு அம்மா கேட்க, ஹிஹி, எல்லார் ஓட்டையும் பெற்று தனிபெறும் மெஜாரிட்டியில் எப்போழுதும் போல ரவா கேசரியே வந்தது. (இல்லைனா நடக்கறதே வேற!)


கிலோ கணக்கில் லிஸ்ட் போட்டு வாங்கி வந்த திருனெல்வேலி அல்வாவை ஆபிஸ்ல எல்லோருக்கும் பங்கு வெச்சு குடுத்தது போக எனக்கும், உடன்பிறப்புக்கும் ஆளுக்கு கால் கிலோ தான் தேறியது.

நான் புதுசா நிக்கான் டிஜிட்டல் கேமரா வாங்கி இருக்கேன்!னு உங்க கிட்ட சொல்லாம(பீத்தாம) வேற யாருகிட்ட போய் சொல்லுவேன்?(பீத்துவேன்?)

எங்கள் வீட்டு மேல் மாடியிலிருந்து தொங்கியபடியே மேற்கு தொடர்ச்சி மலையை ஜூம் பண்ணி எடுத்தது.


எங்கள் வீட்டிலிருந்து தாமிர பரணிக்கு போகும் வழியில் உள்ள நெல்வயல்கள்.(இப்போ அறுவடை ஆகி விட்டது.) "என் இனிய தமிழ் மக்களே"!னு எத்தனை பாரதி ராஜா, K.S.ரவிக்குமார் படங்களில் பார்த்திருப்பீர்கள்?


அதோ கிழக்கால தெரியுதே! அந்த வாழைத்தோப்புலிருந்து, மேற்கால தெரியற மாந்தோப்பு வரை எல்லாம் நம்மது தான்! அப்படினு நான் இங்கே அள்ளி விட்டா தோப்புக்கு சொந்தக்காரங்க என்னை தூக்கி போட்டு மிதிப்பாங்க! :)


பி.கு: கல்லிடையை பற்றி இன்னும் தெரிந்து கொள்ள தவறாமல் படியுங்கள் TRC சார் பிளாக்கை. (ஏற்கனவே நாலு போஸ்ட் போட்டுட்டார்!) சீக்கிரம்! சீக்கிரம்! இன்னுமா லேட்டு?

(TRC சார்! குடுத்த காசுக்கு அதிகமாவே கூவியாச்சு! அடுத்த தடவை பஜ்ஜி வேணும்!)