Showing posts with label Politics. Show all posts
Showing posts with label Politics. Show all posts

Monday, March 01, 2010

தலாய் லாமா வாழ்க!

சமீபத்தில் ஒபாமாவுக்கு புத்த மதத்தில் சில சந்தேகங்கள் வந்து உடனே தலாய் லாமாவை மீட் பண்ணி தன் டவுட்டை க்ளியர் செய்து கொண்டார் எனபது நமக்கு தெரிந்ததே.
தலாய் லாமா வீட்டுக்கு பால்காரன், பேப்பர் காரன், மளிகைகாரன்னு யார் பாக்கி கேட்க போனா கூட சீனாவுக்கு அடி வயிற்றில் புளியை கரைக்கும். இப்போ அமைதிக்காக நோபல் பரிசை வாங்கிய மன்னிக்கவும், பெற்றுக் கொண்ட ஒபாமாவே த-லாமாவை மீட்டினார் என தெரிந்ததும் சீனா அவசர அவசரமாக அமெரிக்க தூதுவருக்கு சம்மன் அனுப்பி காச்சு காச்சென காச்சியது.

"Tibet is an inalienable part of the inviolable territory of China, and the issues concerning Tibet are purely internal affairs of China."

அமெரிக்க தூதுவருக்கு இந்த சம்மன் எல்லாம் சாம்பார் வடை மாதிரி என்பதால் அவர் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளவில்லை. நீங்க குடுத்த டீயில் அடுத்த தடவை கொஞ்சம் ஏலக்காயை தட்டி போட்டு தாங்க, எனக்கு ரொம்ப பிடிக்கும்! என கூலாக சொல்லி விட்டு வந்து விட்டார்.

நிற்க, இதே சீனா தான் இந்தியாவின் ஒருங்கிணந்த பகுதியான அருணாச்சல பிரதேசத்து பாறை, குட்டி சுவர்களில் "சீனா வாழ்க!", "இதுவும் சீனா தான்!" என கிறுக்கி வைத்தது. நாம சீனா தூதுவரை கூப்பிட்டு காய்ச்சினோமா? என்றால் இல்லை என்பது வருத்தமான செய்தி. நமது பிரதமர் தந்து கூட்டணி கட்சிகளிடம் ஒரு யோசனையாவது கேட்டு இருக்கலாம்.

அப்படி கேட்டு இருந்தால் உடனே மாநில கட்சிகளின் கிளைகள்- அருணாச்சல பிரதேசத்தில் துவங்கி இருக்கலாம். அங்கு நடக்கும் தேர்தலில் மாநில கட்சிகளும் போட்டியிட்டு இருக்கும்.


"வருங்கால முதல்வரே வருக!" "எதிர்கால அருணாசல பிரதேசமே வருக!"னு எல்லா சுவர்களிலும் நாம பெயிண்ட் அடிச்சு இருக்கலாம்.

தினமும் ஒரு வட்ட செயலாளர், மாவட்ட செயலாளர்னு எப்பவுமே அந்த மாநிலம் பிசியாக இருக்கும்.

பிரசார கூட்டங்கள் என் வந்து விட்டால் நம்மூர் பேச்சாளர்களின் திறமைக்கு ஒரு அளவே கிடையாது. நாலு முக்கு சேருகிற இடத்தில் ஒரு மேடையை போட்டு "பீஜிங்கும் இந்தியாவின் ஒரு பகுதி தான்!" 2016ல நாங்க தான்டா பீஜிங்கில் ஆட்சி அமைப்போம்! என போகிற போக்கில் சொல்ல வைத்து விடலாம். என்னடா இது? முதலுக்கே மோசமாயிடும் போல!ன்னு சீனா கப்சிப்னு அடங்கிடும்.

தமிழகத்தின் ஒரு கட்சி அங்க போனா மத்த கட்சிகள் சும்மா இருக்குமா? அருணாசல பிரதேசத்து குழாய்களில் தண்ணி வரலை, கக்கூஸ் இல்லைனு தினமும் ஏதாவது ஒரு போராட்டம் நடத்தலாம். இத்தனை நாளா எல்லாப் பயலும் சும்மா தானே இருந்தாங்க, தீடீர்னு எப்படிடா இவ்ளோ கூட்டம்னு சீனா மண்டைய பிச்சுக்கும்.


இதெல்லாம் சரி படலைன்னா கடைசி ஆயுதமாக, சன் பிக்சர்ஸ் தலாய் லாமாவை வைத்து சைன மொழியில் ஒரு படம் எடுக்கலாம். அஞ்சு நிமிஷத்துக்கு ஒரு தரம் அந்த படத்தின் ட்ரேய்லரை போட்டே சைனாவை கடுப்பேத்தலாம்.


இருக்கவோ இருக்கு, தமிழக திரைப்பட விருதுகள். தலாய் லாமாவுக்கும் ஒரு விருது வழங்கலாம், ஒரே டேக்கில் எப்படி குறிப்பிட்ட காட்சியை தலாய் லாமா நடித்து காட்டினார்?னு மேடையில் அவரையே சொல்ல வைக்கலாம்.

இல்லாட்டி குறைந்த பட்சம் ஒரு கலைமாமணியாவது வழங்கலாம். அந்த விழாவையும் அருணாச்சல பிரதேசத்திலேயே வைத்து கொள்ளலாம். விழான்னு வந்துட்டா எப்படியும் கலை நிகழ்ச்சிகள் இருக்கனும். மானாட மயிலாட கோஷ்ட்டியை அங்க எறக்கினா சீனா அலறி அடித்து கொண்டு ஓடி விடாதோ?

இதைப் போல உங்களுக்கும் ஏதாவது யோசனை இருந்தால் பின்னூட்டத்தில் கும்முங்க பாப்போம்.

பி.கு: என் பதிவுகளுக்கு அடிக்கடி வந்து தொல்லை குடுக்கும் சைனா காரர்களை கடுப்பேத்தவே தலாய் லாமாவுக்கு ஆதரவாய் இந்த பதிவு.

Friday, November 28, 2008

மும்பை - மாரல் ஆப் தி ஸ்டோரி

முதலாம் நூற்றாண்டு

கோவலனா கள்வன்? தவறான நீதி வழங்கிய நானே கள்வன்! நானே கள்வன்! - பாண்டியன் நெடுஞ்செழியன் தம் உயிரை விடுகிறான்.

மாரல்: அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்(எமனாகும்).

இருபதாம் நூற்றாண்டு - 1919 AD

ஜாலியன் வாலா பாக் படுகொலைக்கு முக்ய காரணகர்த்தாவாய் திகழ்ந்த ஜெனரல் டயர் சாகும் தருவாயில் சொன்னது, ""but I don’t want to get better. Some say I did right, while others say I did wrong. I only want to die... and know of my maker whether I did right or wrong" .


இருபதாம் நூற்றாண்டு - 1956


நிகழ்ந்த ரயில் விபத்துக்கு தார்மீக பொறுப்பேற்று லால் பகதூர் சாஸ்திரி தம் மத்திய ரயில்வே மந்திரி பதவியை நேரு மிகவும் வேண்டி கேட்டும் ராஜினாமா செய்தார்.

மாரல்: சில நேரங்களில் தன்னெஞ்சே தன்னைச் சுடும்.

இருபத்தி ஒன்னாம் நூற்றாண்டு - 2006 AD

மும்பை புற நகர் ரயிலில் வெடிகுண்டு வெடித்து 200 அப்பாவி பொது மக்கள் பலி.

2008 AD

பெங்களூர், ஐதராபாத், அஹமதாபாத், டெல்லி, புனே, மீண்டும் மும்பை ஆகிய இடங்களில் குண்டு வெடித்து மீண்டும் அப்பாவி மக்கள் பலி (இறந்தவர் எண்ணிக்கை தெரியல, மேலும் நான் கணக்குல வீக்கு)

சோனியா, மற்றும் பிரதமர் காயமடைந்தவர்களை நேரில் சென்று பார்த்து, "அச்சசோ அடி பட்டுச்சா? தெண்பாண்டி சீமையிலே! தேரோடும் வீதியிலே! மான் போல வந்தவனே! யாரடிச்சாரோ!" என பாடி விட்டு வந்தனர்.

சிவராஜ் பாட்டீல் நீல கலர் கோட்டா? கருப்பு கலர் கோட்டா?னு குழம்பி, அவர் மனைவி முடிவு சொல்லி, இறுதியாக கருப்பு கோட் அணிந்து "தீவிரவாதிகளை கண்டு இந்த அரசு பயப்படாது! இரும்பு கரம் கொண்டு அடக்க (ஒருவழியா) முடிவு எடுக்கலாமா?ன்னு காரிய கமிட்டி கூடி விவாதித்து, முடிவு எடுத்துகிட்டே இருப்போம்" என நாசமா போன CNN, நாறிட்டு இருக்கும் NDடிவிக்கு பேட்டி குடுத்தார்.

மாரல்: இடுக்கண் வருங்கால் நகுக! :(

டேய்! உங்களுக்கு வெக்கமே கிடையாதா டா? ஆசை வெக்கமறியாதோ? வேணாம், நெல்லை தமிழ்ல ஏதாவது திட்டிட போறேன்.

Friday, October 03, 2008

காமராஜர் ஆட்சி அமைப்போம்!

நான் தேய்த்து குளிக்கும் ஹமாம் சோப்(நேர்மையான சோப் யு நோ..?) போல நாளும், வாரங்களும் கரைவதே தெரிவதில்லை. சமீபத்தில் டிவியில்/இணையத்தில் பார்த்த, படித்த சில காட்சிகள்/செய்திகள் என்னையறியாமல் நகைக்க வைத்தது.

காட்சி#1: பொதுவாக நம்மூர் பிரதம மந்திரிகள் வெளிநாடுகளுக்கு சுற்றுபயணம் செய்யும் போது, தம் விமான பயணத்தில் போர் அடிக்காமல் இருக்க, "ஆமா! ஆமா! பெரியய்யா! ஆமா! ஆமா! சின்னய்யா!" என கே. எஸ். ரவிகுமார் படங்களில், கையது கட்டி, வாயது பொத்தி வரும் சில கேரக்டர்களை போல, சில பேமஸ்(?) பத்திரிகையாளர்களை தம்முடன் அழைத்து செல்வது வழக்கம். அவங்களும் ஓசில விமானத்திலும் கூட பஜ்ஜி போண்டா கிடைக்குதேன்னு பிரதமர் கிட்ட, "நீங்க பள்ளி படிக்கும் போது டாவடித்த அனுபவம் உண்டா? நாக்கு முக்க சாங்க் கேட்டாச்சா?"னு எல்லாம் மொக்கை போட்டு வருவார்கள்.

அது போல தற்போதைய பிரதமர் என அழைக்கப்படும் மன்மோகன் சிங்க்ஜியுடனும் ஒரு ஜால்ரா கோஷ்டி விமானம் ஏறி அமெரிக்கா, பிரான்ஸ்(ராப்பை பாத்தீங்களாப்பா?) சுத்தி பாத்து வந்தார்களாம். நடு வானில் நம்ம பிரதமரும் பொறுப்பா பேட்டி குடுக்கறத டிவியில காட்னாங்க. ஒரிஸ்ஸாவிலும், கர்நாடகாவிலும் நடந்த கலவரங்கள் தான் தம் வாழ்க்கையிலேயே மிகவும் வருத்தபட வைத்த நிகழ்வுகள்னு நம்மாளு ஒரு பிட்டை போட்டாரு. அப்ப பெங்களுர், ஐதரபாத், அஹமதபாத், டில்லினு பொட்டலம் பொட்டலம் வெச்சாங்களே அதெல்லாம் உப்பு பெறாத விஷயங்களா?

'பொருளாதார நிபுணர்' மன்மோகன் சிங்கை கூட அரசியல்வாதி ஆக்கிட்டாங்களே!னு முதல்வன் படத்து வசனம் தான் நினைவுக்கு வந்தது.


காட்சி#2: டில்லியில கனாட் ப்ளேஸ் என்ற முக்ய இடத்துல நீங்கள் நடந்து போகும் போது "என் குழந்தைக்கு உடம்பு சரியில்லை! என் தங்கமணிக்கு சுளுக்கு"னு அழகா வெள்ளகார துரை கணக்கா இங்கிலிபீசுல நைச்சியமா பேசி பணத்தை கறந்ருவாங்களாம். சில கொடாகொண்டர்கள், சரி வா! நானே அந்த மருந்தை வாங்கி தரேன்!னு சொல்லி மருந்தகத்துக்கு கூட்டி போனாலும், இந்த லகுடுபாண்டிகள் அசருவதில்லையாம். ஏன்னா அந்த கடைகாரர் கூட இந்த பயலுவ ஏற்கனவே ஒரு டீல் போட்ருப்பாங்களாம். சில ஏமாந்த வெள்ளகார துரைங்க ஏடிஎம்ல பணம் டிராப் பண்ணி எல்லாம் குடுத்து ஏமாந்து போயிருகாங்களாம். மேலும் தெரிஞ்சுக்க இக்கட சூடுங்க.

முத்துலட்சுமியக்கா உஷாரா இருந்துகுங்க. உங்களுக்கு இளகிய மனசு. :)


காட்சி#3: இளங்கோவன் "காமராஜர் ஆட்சி அமைப்போம்"னு உதாரா பேட்டி குடுக்கறத டிவில பாத்தேன். இதையே தங்கபாலு அணியினரும் சொல்றாங்க, ஜி.கே.வாசன் அணியும் சொல்றாங்க. (வேற ஏதாவது அணி இருந்தா (கண்டிப்பா இருக்கும்) பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.)

சத்யமூர்த்தி பவனில் உள்ள டாய்லெட்டில் காணாம போன சொம்பு(சிம்பு இல்ல) பத்தி விசாரிக்கறத்துக்கே டெல்லியிலிருந்து மேலிட பார்வையாளர் வர வேண்டி இருக்கு. இதுல என்னத்த ஜெயிச்சு? என்னத்த அமைச்சு?

என்னது? சத்யமூர்த்தி பவனில் டாய்லெட்டே கிடையாதா? கிழிஞ்சது கிருஷ்ணகிரி. :)

காட்சி#4: அக்டோபர் 2 முதல் பொது இடங்களில் தம்மடிக்க தடைன்னு எங்க ஆபிஸ்ல கூட மெயில் அனுப்பினாங்க. ஏன்னா சிட்டிக்கு நடுவுல எம்ஜி ரோட்டில் தான் எங்க ஆபிஸ். அதனால ஆபிஸ்ல இருக்கற பல பிகர்கள், ஹாயா பில்டர் பிடித்து கொண்டே அமெரிக்க பொருளாதாரம் பத்தி கதையடிக்கும். இதுனாலேயே பல கடலை மகசூலில் நான் கலந்து கொள்ள முடியாத அவல நிலை இருந்து வந்தது. இனிமே.....ஹிஹி, அன்புமணி அய்யாவுக்கு நன்றி ஹை!


பொது இடம்னா இது, இது, இவங்க எல்லாம் ஃபைன் வசூலிக்கலாம்!னு சொல்லி இருக்காங்க. ரோட்ல குடிக்ககூடாது! பஸ் ஸ்டாப்புல குடிக்க கூடாதுன்னா நாங்க எங்க தான்யா குடிக்கறது? எங்களை கட்டுபடுத்த நாங்க என்ன ஆடுமாடா?னு புகை வண்டிகள் எல்லாம் போர்குரல் குடுத்து இருக்காங்க. :)


ஒரு சட்டம் போடும் போது, தெள்ளத்தெளிவாக வரைமுறைகளை வகுத்து விட வேண்டும். இல்லாட்டி இப்படித் தான் வெண்டைகாயை நறுக்கி விட்டு தண்ணீரில் கழுவின மாதிரி ஆயிடும். (ஒரு தடவை முயன்று பாருங்களேன், என் அனுபவத்தில் சொல்கிறேன்)

Friday, August 01, 2008

இப்படிக்கு பெங்களூரிலிருந்து அம்பி

கடந்த வெள்ளி லீவு எடுத்து கொண்டு சென்னை சென்ற பின், முழுதுமாக என்னை ஊடகங்களிடமிருந்து தொடர்பற்றவனாக்கி கொண்டாலும் மதியம் என் ஆபிஸ் நண்பனிடம் வந்த குறுஞ்செய்தி என்னை அவசரமாக டிவி பார்க்க சொன்னது. நடந்து போன விபரீதமும் புரிந்தது. அடுத்த நாள் முந்தைய நாள் நிகழ்வுகள் ச்சும்மா டிரெயிலர் தான் என்பதும் அறிந்து கொள்ள முடிந்தது.

பொட்டலம் பொட்டலமாக வைத்தவர்களது கொள்(ல்)கை வெற்றி பெற்றதா? என அதையும் ஈமெயில் செய்தால் நன்றாக இருந்திருக்கும். விடுமுறை முடிந்து சென்னை சென்ட்ரல் வந்தால் ஒரே களேபரம். என் மாமியார் எனக்கு கட்டி குடுத்த சப்பாத்திகளை எல்லாம் போலிஸ்காரரிடம் காட்ட வேண்டி இருந்தது. தொட்டுக்க ஒன்னும் இல்லையா?னு அவர் கேட்டு விடுவாரோ என எனக்கு பயம். அவர் பக்கத்தில் இருந்த நாய் வேறு என்னை பார்த்து சினேகமாக வால் எல்லாம் ஆட்டியது. படக்குனு சப்பாத்தி பாக்கெட்டை கவ்வின்டு ஓடிட்டா என்ன செய்வதுனு என் கவலை.

பாதுகாப்புக்கு இருந்த அத்தனை காவல்துறையினர் முகத்திலும் ஒரு வித பதட்டம் தெரிந்தது. வீரம் என்பது பயம் இல்லாத மாதிரி நடிப்பது!னு சும்மாவா சொன்னார்கள். பாவம் அவர்களுக்கும் குழந்தை குட்டி இருக்குமே! இந்த பாமை செயலிழக்க செய்யும் வீரர்களுக்கு எந்த ஒரு நிறுவனமும் இன்ஷுரன்ஸ் அளிக்க முன்வருவதில்லையாம். வருத்தப்பட வேண்டிய விஷயம்.

பெங்களூரில் மக்கள் இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீள வில்லை. பஸ் ஸ்டாபில் ஒருவரை ஒருவர் சந்தேகத்துடன் பார்த்து கொள்கிறார்கள். தியேட்டர்களில் எல்லாம் ரூவாய்க்கு மூனு டிக்கட்னு கூவாத நிலை தான். மெகா மால்களில் மக்கள் செல்ல தயங்குகிறார்கள். அனேகமாக பெங்களூரில் இன்று பசுபதி நடித்த குசேலன் ரீலிஸ் செய்வார்கள் என எண்ணுகிறேன். அதுல ரஜினி கூட வந்து போயிருக்காராம். அதான் ரஜினி மாப்பு மன்னிப்பு எல்லாம் கேட்டு இருக்காரேன்னு பாத்தா, அவர் இங்கு நேர்ல வந்து மன்னிப்பு கேக்கனுமாம். இது கன்னட கண்மணிகளின் கோரிக்கை(மிரட்டல்னு கூட வாசிக்கலாம்).

இவ்வளவு நாளாக மன்னிப்பு கேட்க தோன்றாத எண்ணம் தீடிர்னு ரஜினிக்கு தோணியது ஒன்றும் ஆச்சர்யம் இல்லை. இதே போல தெரியாம குண்டு வெச்சுட்டோம்!னு எதிர்காலத்தில் அவர்களும் மன்னிப்பு கேட்கலாம். நமக்கு தான் பெரிய மனசாச்சே! கேசை ஜவ்வாக இழுத்து மன்னித்து விடுவோம். ரெண்டு வாரத்துக்கு குசேலனில் நியூட்டன் தியரி, ஐன்ஸ்டீன் தியரினு திறனாய்வு பதிவுகளும், பசுபதிக்கு பல்பு, மீனாவுக்கு அல்வா, ரஜினிக்கு ஒரு திறந்து மூடிய கடிதம்னு பதிவுகள் தமிழ்மணத்தில் வலம் வரலாம். வாழ்க இந்திய ஜன நாயகம்!

Friday, February 22, 2008

போடுங்கம்மா ஓட்டு!

அன்பார்ந்த பிளாக்காளப் பெருங்குடி மக்களே!
நம்ம பிளாக் யூனியன் ஆரம்பித்து ஒரு வருடம் நிறைவடைய போகுது. உருப்படியா என்னத்தை கிழிச்சோம்? என நாளைய சரித்திரம் சொல்லும். (ஹிஹி, வேற எப்படி தான் சமாளிக்கறதாம்?).

சென்னை வரும் நம் யூனியன் மக்களை மிக அன்பாக தட்டி கொடுத்து, ஹோட்டலுக்கு தள்ளிகொண்டு போயி கிடா வெட்டும் நமது ஜி3 அக்காவின் பெருந்தன்மையாகட்டும், ஜிடாக்கில் சிக்கினால், மொக்கை போட்டு எதிராளியை துண்டை காணோம்! துணியை காணோம்! என ஓட வைக்கும் நமது மை பிரண்டின் தன்னிகரில்லா சேவையாகட்டும், மொக்கை போடவென்றே தனியாக ஒரு பிளாக், ஆன்மீகத்துக்கு தனி பிளாக் என பதமாக பிரித்து, இதமாக மொக்கை போடும் நம் பதிவுலக காரக்கால் அம்மையாராம் கீதா பாட்டியின் திருத்தொண்டாகட்டும், நமது யூனியனின் சேவை சொல்ல, சொல்ல புல்லரிக்க வைக்கும்.

இது தவிர, அவ்வப்போது வேலைவாய்ப்பு, பொது விழிப்புணர்வு, சுகாதாரம் சம்பந்தமாக சில பதிவுகளும் வரத்தான் செய்கின்றன.

என்னடா இழுவை?னு நீங்கள் கும்முவதற்க்கு முன்னால் மேட்டருக்கு வருகிறேன். நமது பிளாக் யூனியனையும் சிறந்த வலைப்பூவாக கருதி, சங்கமம் (படம் பெயர் இல்லை) வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுத்து இருக்கிறார்கள்.


ஓட்டு எப்படி போடனும்? என்ன செய்யனும்? என்ற விவரம் எல்லாம் இந்த சுட்டியில் உள்ளது. எனவே நம் யூனியன் மக்கள் அனைவரும் தவறாமல் இந்த வாக்கெடுப்பில் பங்கு கொண்டு நம் பிளாகுலக கடமையை நிறைவேத்திட வேண்டும்.

வாக்களிக்க கடைசி நாள் 29-பிப்பரவரி 2008. வழக்கம் போல பதிவை படித்து விட்டு கமண்ட் போடாமல் நழுவுவது மாதிரி ஓட்டு போடாமல் இருந்துவிட வேண்டாம். :))

Saturday, December 29, 2007

போடுங்கம்மா ஓட்டு!

அன்பார்ந்த பிளாக்காளர் பெருமக்களே! சர்வேசன் நடத்தும் கதைப்போட்டி பற்றி கேள்விபட்டிருப்பீர்கள். நமக்கு விழபோவது என்னவோ ஒரு ஓட்டு தான், அதுவும் என்னுடைய ஓட்டு தான்! என நன்றாக தெரிந்து இருந்தும், மனம் தளராமல் பிரசாரத்தை வீட்டிலிருந்தே ஆரம்பிக்கலாம் என முடிவு செய்து, தங்கமணியிடம் கேட்டால், வழக்கம் போல இதெல்லாம் ஒரு பொழப்பா? என்பதையே ரொம்ப டீசன்டா சொன்னதில் இனி வழியில்லை என்பதால் இந்த பதிவு.
பிளாக்கில் பதிவு போட்டு கமண்ட் பொட்டியை தொறந்து வைத்து நாம் தேவுடு காத்து கிடந்தால், அனானியாக வந்து ஆப்படித்த கூட்டம் ஒரு பக்கம் என்றால் சத்தமே போடாமல் வந்து பதிவை படித்து விட்டு இடத்தை காலி செய்த கூட்டம் மறுபுறம். இதையெல்லாம் மீறி போனா போகுது!னு சில நல்லவர்கள், வல்லவர்கள் வந்து போவது மனதுக்கு ஆறுதலாய் இருக்கிறது.

சரி மேட்டருக்கு வருவோம். இந்த லிங்கில் போய் உங்களுக்கு பிடித்த கதையை தேர்வு செய்து உங்கள் ஓட்டை போட்டு விடுங்கள். எனக்கு ஓட்டு போடுங்கள்! என நான் கேட்க போவது இல்லை.

"எம்பெருமான் இலவச கொத்தனாரும், இளையனார் கண்ணபிரானும் கட்டி காத்து வரும் தமிழ் மணத்தில் தகுதியான ஒரு கதை முதலிடம் பெற்றால் அதை கண்டு சந்தோஷபடும் முதல் மனிதன் நான் தான்!, என சீன் போட விரும்பவில்லை. ஹிஹி, என் கதை யாழினியும் உங்களுக்கு பிடிக்கும். எனவே மறக்காமல் ஓட்டு போடுங்கள். கடைசி தேதி டிசம்பர் 31 - 2007.

பி.கு: எதிர் கட்சிகள் இந்த சந்தர்ப்பத்தை நன்றாக பயன்படுத்தி கொள்ளவும்.

Tuesday, March 06, 2007

மத்திய அமைச்சர் பதவியேற்ப்பு விழா!

நாட்டாமை ஷ்யாம் (ஓ.பன்னீர்செல்வம்!னு வாசிக்கபடாது) தலைமையில் பிளாக் முன்னேற்ற கழக மாநில அமைச்சர்கள் பதவியேற்ற கையோடு
மத்திய அமைச்சர்களும் பதவியேற்று கொண்டதை கழக செய்தி மலரான சங்கொலி மூலம் நீங்கள் அறிவீர்கள்.



நாம் என்றுமே பதவியை தேடி போனதில்லை, வந்த பதவியை ஒரு வழி பண்ணாமல் விட்டதில்லை, மேலும் பதவி என்பது நமக்கு மூக்கில் ஒழுகும் சளி போல, எந்த நேரமும் சிந்தி விட்டு போயிவிடுவோம்! என்பதை தமிழகம் அறியும். தரணியும் புகழும்.



இந்த நேரத்தில் மத்திய தகவல் தொடர்புதுறை அமைச்சர் பதவி என்னை தேடி வந்ததால் வேறு வழியில்லாமல் தம்பி! உன் சொல்லுக்கு கட்டுப்பட்டு இந்த முள் கீரீடத்தை சுமக்க இசைந்து விட்டேன், தலை அசைத்து விட்டேன்.


இதோ நாம் பதவியேற்றுக் கொண்ட காணக் கிடைக்காத காட்சி! (படத்துக்கு நன்றி கோல்மால் கோபால்)
தூர்தர்ஷன் முதல் கிரான்ட்ஸன் டிவி வரை கோலங்கள் மற்றும் செல்வி சீரியலின் நடுவே ஒரு வாரத்துக்கு ஒளிபரப்பும் செய்யப்படும். நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் குடும்ப குத்து விளக்கு செல்வி கவுஷா! இந்த நிகழ்ச்சியின் விளம்பரதாரர் நாயுடு ஹால். (பார்த்தே ஆகனும்! அது உங்க தலைவிதி)

நாட்டு மக்களுக்கு என்ன சலுகைகள்? என்று கேட்கும் எதிர்கட்சிகளின் வாயை அடைக்க இதோ:

1a) புதிதாக என்கேஜ்மெண்ட் ஆன ஜோடிகளுக்கு இலவச சாடிலைட் போன், வெப் காமிரா.(ஒரு நாளைக்கு 18 மணி நேரம் மட்டுமே டாக் டைம்).

1b) உள்ளூர், வெளியூர் கட்டணங்களூம் அவர்களுக்கு ப்ரீ. (என்ன சந்தோஷம் தானே பிரியா?)

2) பத்து பைசாவில் பஞ்சாப்புக்கு கால் செய்யலாம்! அதாவது பஞ்சாபில் உள்ள மக்களுக்கு கால் செய்யலாம்!னு சொல்ல வந்தேன். (எவன்டா அவன்! என் தங்கமணிட்ட போட்டு கொடுக்கறது?)

3) பிளாக் எழுதும் இளம் பேச்சுலர்களுக்கு ஆபிஸில் ஸ்பெஷல் பெர்மிஷன், ஒரு நாளைக்கு 4 மணி நேரம் மட்டும் வேலை செய்தால் போதும்.(அந்த நேரத்திலும் கமண்ட் போட்டுண்டு இருக்க கூடாது)

எப்படியோ நல்லது நடந்தா சரி! :)

4) இனி ஒவ்வோர் ஊரிலும் எத்தனை கல்லூரிகள், எத்தனை பிகர்கள் என்ற தகவல் சுரங்கம் டச் ஸ்கீரினில் அந்த கல்லூரி வாசலிலேயே நிறுவப்படும். நாட்டமை சில வருஷங்களுக்கு முன் மிகவும் கஷ்ட்டப்பட்டதாக கேள்வி, அதான் இந்த ஏற்பாடு!


5) மொக்கை போஸ்ட் போடுபவர்களுக்கு ஊக்க தொகை வழங்கப்படும். அதை வருடம் தோறும் நடக்கும் மொக்கைகள் முன்னேற்ற கழகத்தின் தற்போதைய தலைவியாம் நமது ஜி3 அக்கா வழங்குவார்கள். கீதா மேடம் தான் அந்த கட்சியின் நிறுவனர் எனபதை நீங்கள் அறிவீர்கள்.

இதை எல்லாம் வரவேற்காமல் வெளி நடப்பு செய்ய நினைக்கும் எதிர்கட்சிகளுக்கு நான் ஒன்று சொல்ல ஆசைப்படுகிறேன்.

எங்கள் வாரிய தலைவர்கள் வசம் சகாய வாடகைக்கு ஆட்டோக்கள், சுமோக்கள், லாரிகள் எல்லாம் ஜாமான் செட்டுக்களுடன் தயாராக உள்ளன. ரெண்டு முட்டை பிரியாணி மட்டும் தான் எங்களுக்கு செலவு, ஆகவே ஒழுங்கா மரியாதையா நாடாளு மன்றத்தில் அவரவர் இருக்கையில் அமரவும்.