Friday, April 27, 2007

நரசிம்ம ஜெயந்தி

எங்கேடா உன் ஹரி? ஹிரண்ய கசிபுவின் குரல் அந்த பரந்த மண்டபத்தில் இடி போல எதிரொலித்தது.

அந்த குரலில் தான் எத்தனை ஆணவம், இறுமாப்பு கோபம்!
பின்ன இருக்காதா? மூவுலகிலும் தேவரால், அசுரர்களால், மனிதர்களால், யக்ஷர்களால், கிங்கரர்களால், பஞ்ச பூதங்களால், எந்த வகை ஆயுதங்களால், அஸ்த்ர சஸ்த்ரங்களால், காலை-மதியம்-இரவு வேளைகளில் தனக்கு இறப்பு வர கூடாது! என வரம் வாங்கிய புத்திசாலி அரக்கன் அல்லவா?
அப்பா! என்னுடைய ஹரி எங்கும் இருக்கிறான். இந்த தூணிலும் உள்ளான், அந்த துரும்பிலும் உள்ளான். என் மனதிலும் உள்ளான், தேடுங்கள் உங்கள் மனதிலும் வந்து அமருவான்!
- ஆணவத்திற்க்கு அடக்கம் பதிலளித்தது பிரஹலாதன் என்று தன்னை சொல்லிக் கொண்டு.

இந்த தூணில் இருக்கானாடா உன் ஹரி? அரக்கனுக்கு சந்தேகம்!

இன்னுமா உங்களுக்கு சந்தேகம் தந்தையே?

இதோ தொலைத்து விடுகிறேன் உன் ஹரியை! - தனது கதாயுததால் ஓங்கி அடித்தான் அந்த தூணை.
பக்தருக்கு தன் மோஹன புன்னைகையாலே அருள் பாலிக்கும் அந்த ஹரி எங்கே?

"ஹே! ஆதிமூலமே! அனாதரக்க்ஷகா! ஆபத்பாந்தவா!" என கதறிய கஜேந்ர யானையின் குரலுக்கு பதறியடித்து கொண்டு கருடாழ்வார் மேல் வந்தால் நேரமாகும்! என மனோ வேகத்தில் வந்த அந்த ஹரி எங்கே?

அண்டம் கிடுகிடுக்க, அலைகள் ஆர்பரிக்க, அடித்த தூண் இரண்டாக பிளக்க, இடியோசையுடன், மின்னலென்ன கோடி சூரிய பிரகாசத்துடன், எரிமலையென சீறி, ஆஜானுபாகுவாய், சிங்க முகமும் மனித உடலுடன் கோர பற்களும் கூரிய நகங்களுமாய்,பயங்கரமாக கர்ஜனை புரிந்து கொண்டு ரெள்த்ரமாக வெளி வரும் இந்த நரசிம்ஹனா அந்த ஹரி?
என்ன செய்வது? அரக்கன் வாங்கிய வரத்தை உடைக்க வேண்டுமே? மிருகமும் இல்லை, மனிதனும் இல்லை, கையில் எந்த அஸ்த்ரமும் இல்லை, வந்த பொழுதும் காலையும் இரவும் கலக்கும் சந்தியா(நடிகை இல்லை) வேளை தான்.
அரக்கனுக்கு ஒரு நொடி நேரம் கூட குடுக்க வில்லை நரசிங்கம். காட்டாறு போல பாய்ந்து, அலேக்காக தலைக்கு மேல் தூக்கி விடுவிடுவென வீடும் இல்லை, வெளியிலும் இல்லாத மனையின் வாயிற்படியில் சாவகாசமாக அமர்ந்து, அந்த சுதர்சன சக்ரமே கூரிய நகங்களாய் வர, அரக்கனின் வயிற்றை கிழித்து குடலை உருவி மாலயாய் அணிந்து செங்குருதி முகத்தில் தெளிக்க அந்த தாயாரும் அருகில் வர அச்சப்பட்டு தள்ளி நிற்க பக்தனான பிரகலாதனுக்கு மட்டும் கருணை கடலாக காட்சி அளிக்கிறான் என் நரசிங்கம்! அவன் ஒரு உக்ர சிங்கம்.
ஏப்ரல் 30 - நரசிம்ம ஜெயந்தி!
ஹே சிம்ம பிரபு! இன்றும் இந்த கலியுகத்தில் பல ஹிரண்ய கசிபுக்கள் வலம் வருகிறார்களே. பிஞ்சு குழந்தைகளை படிக்கவிடாமல் கடின வேலைக்கு அனுப்புகிறவர்கள், மக்கள் உண்ணும் உணவில் கலப்படம் செய்பவர்கள், பெண்கள் மீது பாலின வன்முறை செய்பவர்கள், தன்னலத்திற்காக பஞ்சமா பாதகங்கள் செய்ய தயங்காத பதவி வெறி பிடித்த மிருகங்கள் என பட்டியல் நீள்கிறதே!
எங்களுக்கு நிதானமாக வரும் கல்கி வேண்டாம். கூவி அழைத்தவுடன் வரும் சிம்மமே! மீண்டும் வருவாயா? இந்த குழந்தையும் பக்தியுடன் அழைக்கிறேன். ஒரு முறை வந்து விடு, இந்த பூமியின் பாரத்தை குறைத்து விடு!"

Wednesday, April 25, 2007

ஏர்போர்ட்

சங்க காலம் முதல் ஷங்கர் காலம் வரை காதலை பாடிய கவிஞர்கள் எல்லாம் பிரிவையும் பாடாமல் விட்டதில்லை.

"இச்வாகு குலத்தில் பிறந்த நான் என் மனைவியை பிரிந்தேனே!"னு ஷ்ரிராமர் அரற்றுவதை கம்பர் அழகாக பாடி இருப்பார்.

கால தோஷத்தால் தமயந்தியை பிரிந்த நளன் அந்த துயர செயலை நினைத்து நினைத்து புலம்புவதை நள சரித்திரம் படித்தால் கல்லும் கரையும்.

"நாராய்! நாராய்!"னு நாரை விடு தூதில் கூட வறுமையில் வாடும் ஒரு புலவர் மறக்காமல் தனது தங்கமணிக்கு செய்தி சொல்லி இருப்பார்.

தலைவனை பிரிந்ததால் உடல் மெலிந்து, அதனால் தனது கை வளையல்கள் கழன்று விட்டதாக ஒரு தலைவி தனது தோழியிம் சொல்வதாக அக நானூறில் பாடலாக வரும்.

"என்னுயிர் தோழி! கேள் ஒரு சேதி!
இது தானோ உங்கள் மன்னவன் நீதி?"னு அழகான அமீர் கல்யாணி ராகத்தில் சுசீலா அம்மா கர்ணன் படத்தில் பிரிவின் ஏக்கத்தை சொல்லி இருப்பார்.

"ராசாத்தி உன்னை காணாம நெஞ்சு காத்தாடி போலாடுது!"னு கேப்டன் கூட முட்டி வரைக்கும் கோட் எதுவும் போடாம உருக்கமா பாடி இருப்பார்.

"சோலை புஷ்பங்களே! என் சோகம் சொல்லுங்களேன்" என்ற பாட்டை முணுமுணுக்காத இன்றைய ஆன்டிக்கள் யாரும் உண்டோ?

"முதல்வனே! என்னை கண் பாராய்!
முத்த நிவாரணம் எனக்கில்லையா?னு அர்ஜுன் மாமாவை நினைத்து கிராபிக்ஸ் உதவியுடன் மனிஷா மாமி உருகியதை நம்மல் மறக்க முடியுமா?

சரி, இப்ப என்ன சொல்ல வர? எதுக்கு இந்த இழுவை?

தங்கமணியை பிக்கப் செய்வதற்காக(அதான் ஏற்கனவே பிக்கப் பண்ணியாச்சே!னு நீங்கள் முணுமுணுக்கறது கேக்கறது எனக்கு) தமிழ் புத்தாண்டு அன்று இரவு ஏர்போர்ட் செல்ல நேரிட்டது.

ஒரு வித எதிர்பார்ப்பு, பரபரப்பு, மகிழ்ச்சி, பதட்டம் னு கலவையாய் இருந்தது என் மனம். நடு இரவு 12 மணிக்கு கொஞ்சம் கூட தூக்கம் என் கண்களை தழுவ வில்லை. நான் சென்ற காரை விட என் மனம் வேகமாக ஏர்போர்ட் சென்று விட்டது.

அடுத்த பிளைட்டுக்கு கிளம்ப ரெடியாக இருக்கும் அரை டிரவுசர் மாமாக்கள், 2 இஞ்ச் லிப்ஸ்டிக்கை சரி பார்க்கும் மாமிகள், தலையில் மதுரை மல்லி மணக்க இருபுறமும் பின் குத்திய துப்பட்டாவுடன் சுடிதார் அணிந்த தமிழ் நாட்டு ஸ்னேகாக்கள், ஜீன்ஸ் (பேண்டா, டிரவுசரா?னு தெரியாத வகையில்)அணிந்து வலம் வரும் சப்பாத்தி தேச கரிஷ்மா கபூர்/அகர்வால்/குப்தாக்கள், தான் அமெரிக்கனா? இந்தியனா?னு அவர்களுக்கே தெரியாமல், ஹெட்போன் மாட்டி, கோக் குடிக்கும் விடலை சிறுவர்கள், கஸ்டம்ஸ் செக்கிங்கில் எதை அமுக்கலாம்?னு காத்திருக்கும் கோட் போட்ட ஆபிசர்கள், ரங்க்மணிகளுக்கு காத்திருக்கும் தங்கமணிகள், எம்ஸ் படித்து(?) விட்டு வரும் தன் தவபுதல்வனை வறவேற்க காத்திருக்கும் பாசமிக்க பெற்றோர், பேரன்/பேத்தியை எதிர்பார்த்து காத்திருக்கும் 'பூவே பூ சூட வா!' பாட்டிகள்/தாத்தாக்கள் என கலவையாய் மக்கள் கூட்டம்.

நான் ஏர்போர்ட் அடைந்த நேரத்தில் நம்ம பிளைட் வந்து விட்டது. செக்கிங்க் முடிந்து வர நேரமாகும் என்று தெரிந்தது.

"காத்திருந்தால், எதிர்பாத்திருந்தால் ஒரு நிமிஷமும் வருஷமடி!"னு சும்மாவா வைரமுத்து மாமா பாடி வெச்ருக்கார்.

முதல் தடவையாக பேரமே பேசாமல் ஃபொக்கே ஒன்று வாங்கி கொண்டு செக்கின் வாசலையே பார்த்து கொண்டிருப்பதும் ஒன்று தான்! நமக்கு அவசரமாக வரும் போது அடக்கி கொண்டு உள்ளே போய் ஒரு மணி நேரமாக தியானம் பண்ணும் தடியனுக்காக ரெஸ்ட்ரூம் வாசலில் தவமாய் தவமிருப்பதும் ஒன்று தான்.

வரிசையாக பயணியர் வந்து கொண்டே இருந்தனர். பல முகங்களில் எதிர்பார்ப்பு, உறவினர்/ நண்பர்களை எதிர்பார்த்து அலைபாயும் கண்கள், மகிழ்ச்சியில் விரியும் முகங்கள், சில விம்மல்கள், பெருமூச்சுக்கள்.

வெள்ளைகார அம்மணி, குரங்கு குட்டியை சுமப்பது போல தூளி மாதிரி ஒரு வஸ்துவில் குழந்தையை சுமந்து வந்த அவரின் கணவன்(?), பிளைட் ஓட்டிய பைலட் மாமா, சாக்லேட் குடுத்த ஏர்ஹோஸ்டஸ் குதிரைகள்னு வரிசையாய் எல்லோரும் வந்தனர் என் தங்கமணியை தவிர.

என்னடா இது? ஒரு வேளை தங்கமணி கடைசி சீட்டா?
இதுக்கு தான் பைலட் மாமாவை ஐஸ் வெச்சு பேசாம அவர் சீட்டுக்கு அடுத்த சீட்டுல உக்காச்சுண்டு வரணும்!னு நான் சொன்னதை கேட்டா தானே!
இதோ! அதோனு ஒரு வழியா தங்கமணி வந்து சேர்ந்தாங்க. வெளியே வந்ததும் தயாரா இருந்த ஃபொக்கேவை குடுத்தேன். (படத்துல வர மாதிரி முட்டி போட்டு எல்லாம் ஒன்னும் குடுக்கலை.)
இருவர் கண்ணும் மகிழ்ச்சியில் ஒரு கணம் மின்னின. பேச வார்த்தைகளே வர வில்லை. ரேவதி சொன்ன மாதிரி வெறும் காத்து தேங்க் வந்தது.

அவங்க அம்மாவின் கழுத்தை கட்டி கொண்டு உம்மா எல்லாம் குடுத்து மீனம்பாக்கத்துல ஒரே பாச மழை தான். அடுத்து எனக்கு தான்!னு நானும் சப்பு கொட்டிண்டு காத்திருந்தது தான் மிச்சம். ஆசை தோசை அப்பளம் வடை!னு சொல்லிட்டாங்க.
என்ன கொடுமை ACE?(ஹிஹி, உன் பேரு சரவணன் தானே?) :)

Friday, April 20, 2007

என்ன அழகு, எத்தனை அழகு!

எங்க ஊருகாரர் இலவச கொத்தனார் ஆரம்பிச்சு வெச்சாலும் வெச்சார், இதோ நம்மையும் மதிச்சு கார்த்தியும், சுமதி அக்காவும் எழுத சொல்லிட்டாங்க.
1)பெண்மை:
பெண்மையின் எல்லா பரிமாணங்களும் அழகு தான். மாம்பழ கலரில் அரக்கு பார்டர் போட்டு அழகான பட்டு பாவாடை கட்டி, சின்ன கொண்டையில் 100 முல்லை பூ சூடி, காலில் அத்தை போட்ட கொலுசுடன் தத்தி தாவி, நடை பழகி வரும் பெண் குழந்தையாகட்டும், கஸ்தூரி மான் போல துள்ளி வரும் மங்கையாகட்டும்(மீரா ஜாஸ்மின்?), மெலிதாக மேடிட்ட வயதுடன் பூரிப்பாக வரும் தாய்மையாகட்டும்,
"பார்கர்ஸ் பெஞ்சில் அமர உனக்கு ஆசை, எனக்கு தெரியும்!" என தனது சோர்வான ரங்குவுக்கு ஹார்லிக்ஸ் குடுக்கும் அந்த குடும்ப தலைவியாகட்டும்( நம்ம SKM அக்கா?) நரை கூடி, முதுமை அடைந்து தனது அனுபவங்களால் தனது பேரன்/பேத்திகளை கண்ணின் மணி போல காக்கும் பாட்டியாகட்டும்(எலேய் கொடி, அது கீதா மேடம் தான் சந்தேகமே வேண்டாம்!) எல்லாமே அழகு தான்.
அடக்கம், கம்பீரம், தெளிவு, இவை மூன்றும் இருந்தால் அதுவே அழகு. பெண்மையிடத்தில் அது மூன்றும் உள்ளது. ஆனால் பல சமயங்களில் தன்னை அது உணர்ந்து கொள்வதில்லை.
- இப்படியேல்லாம் நான் எழுதினாலும் "ஓவர் சீன் உடம்புக்கு ஆகாதுடா அம்பி!னு தான் கும்மி அடிக்க போறீங்க. ஆனது ஆயி போச்சு,
இதோ இதையும் சொல்லிடறேன். அடுத்த கேபின்ல காக்ரா சோளியில் (சாயந்தரம் ரிஷப்ஷனாம்) உக்காந்து இருக்கும் ரசகுல்லா அழகா? இல்ல சைடு கேபின்ல திருச்சூர் விளக்கு மாதிரி நச்னு வெண்பட்டுல வந்ருக்கற மல்லு பிகர் அழகா?னு ஒரே குழப்பமா இருக்கு.

நாட்டாமை, போட்டோ அனுப்பினா கொஞ்சம் தீர்ப்பு சொல்ல முடியுமா?

2)சுந்தரன் - சொல்லின் செல்வன்:

உருவத்தில் மட்டும் அழகு இருந்து என்ன பயன்? சொல்லும், செயலும் அழகாக இருக்க வேண்டுமே!
"கண்டேன் கற்பின் கனலை"னு உலகின் முதல் தந்தி/SMS சொல்லி அந்த ஷ்ரிராமனுக்கே மகிழ்ச்சியை தந்த அனுமன் தான் அழகு. அதனால தான் சுந்தர காண்டம்!னு பெயர் வந்தது.

நங்கநல்லூர் அனுமனை தங்கமணியுடன் போயி தரிசித்து வந்தேன். என்ன கம்பீரம், பிரமாண்டம், ஆகிருதி, அதே சமயம் துளியும் ஆணவம் இல்லாத கை கூப்பிய அந்த பவ்யம்! அனுமந்தா! நீ தான்யா என்னிக்கும் தல!

3) ரயில் வண்டி:

நான் ரொம்பப சின்ன குழந்தையா இருக்கும் போதே(Profile போட்டோ பாருங்க) "கூகூகூகூ குச் குச் குச்"னு புகை விட்டுன்டு போற ரயிலை பார்த்தா தான் சாப்பிட போவேன். அதுவும் எங்க வீட்டுலேருந்து பார்த்தாலே இந்த அழகான வயலுக்கு நடுவே ஓடற அந்த பாசஞ்சர் ரயில் ரொம்பவே என்னை ஈர்த்தது.
என் அப்பா: பெரியவனா ஆயி என்ன வேலை பாக்க போற?
குழந்தை அம்பி: அதோ போறதே அந்த ரயிலுக்கு கரி அள்ளி போடற வேலைக்கு போவேன்! (பெருமிதத்துடன்)
இத கேட்டதும் எங்க அப்பா முகம் போன போக்க பாக்கனுமே! :)
4) நதிகரைகள்:
ஜல ராசியில் பிறந்ததாலோ என்னவோ நீர் நிலைகளை கண்டு விட்டால் எனக்கு உற்சாகம் கரை புரண்டோடும். துவட்டி கொள்ள துண்டு இல்லாவிட்டாலும் அப்படியே தண்ணீரில் குதித்த நாட்களும் உண்டு. இந்த கோடையில் கூட குறைவில்லாமல் ஓடும் எங்கள் தாமிரபரணி நதியில் நண்பர்களுடன் தொட்டு பிடித்து விளையாடிய அந்த நாளும் வந்திடாதோ?
5)ஆத்துல இறங்கும் அழகர்:
மதுரைக்காரங்க எல்லோருக்கும் அழகர் ஆத்துல இறங்கற விழா ரொம்ப பிடிக்கும். தக தகனு தங்க குதிரை மேல சும்மா கம்பீரமா ஒரு கையில் சாட்டையுடன் மறு கையில் அபய முத்திரையுடன், மக்கள் கூட்டத்துக்கு நடுவுல அழகர் வைகை ஆத்துல இறங்குவார் பாருங்க! மதுரைக்கு அழகர் அழகா? அழகரால் மதுரை அழகா?னு எண்ண தோணும்.
6) என் தங்கமணியின் மாசில்லா அன்பு:
எத சொல்லுவேன், எப்படி சொல்லுவேன்?
இந்த அமெரிக்கவுல தீடிர்னு எல்லா கடிகாரத்தையும் திருப்பி வெச்சுடானுங்க. நான் காலையிலேயே இந்த பெங்க்ளூர் டிராபிக்ல அடிச்சு பிடிச்சு எங்க ஆபிஸ் பையன் கூட்டி பெருக்கற டைமுக்கு வந்தாலும் எனக்காக இரவு 11- 12 மணி வரைக்கும் முழிச்சு இருந்து என் குரலை கேட்ட பிறகு தான் தினமும் தூங்குவாங்க. இதுல இந்த ஸ்கைப்புல(skype) கனெக்ஷன் சரியா கிடைக்காது. அப்படியே கிடைச்சாலும் அவங்க இடத்துல நெட் கனெக்ஷன் புடிங்கிக்கும்.
ஸ்ப்ப்பா! இவ்ளோ தொல்லை இருந்தலும் என் மேல அன்பை பொழியற தங்கமணியின் மாசில்லா உள்ளம் தான் எனக்கு பிடிச்ச அழகு. நான் போன ஜென்மத்துல கொஞ்சம் புண்ணியம் பண்ணி இருக்கேனோ?
யப்பா! முடிச்சாசு ஒரு வழியா.
இதை தொடர்ந்து,
என்னை கவர்ந்த ஏழரை நாட்டு சனி!
எட்டுக்குள்ள உலகம் இருக்கு ராமையா!
நவகிரகங்கள் ஒன்பது!
பிளாக் உலக சூப்பர் டென்!னு யாராவது ஒரு புதிய டேக் ஆரம்பிச்சுடாதீங்க பா! கல்யாண வேலைகள் நிறைய இருக்கு.
போற போக்குல யார இழுத்து விடலாம்?
1) மலேசியாவுல மையம் கொன்டுள்ள நமது புயல் மை பிரண்ட்
2) அருமை அண்ணன் டுபுக்கு
3) வாழ்வளித்த தெய்வம் வேதா பிராட்டியார்

Wednesday, April 18, 2007

அக்ஷ்ய திருதி

நமக்கு அன்னிக்கு ஒரு பேச்சு இன்னிக்கு ஒரு பேச்சே கிடையாது. போன வருஷம் அக்ஷ்ய திருதிக்கு என்ன பதிவு போட்டேனோ அதே தான் கொஞ்சம் எக்ஸ்ட்ராவா எழுதி காப்பி பேஸ்ட் செய்துள்ளேன்.

ஏப்ரல் 20 2007 - அக்க்ஷ்ய திருதியை. சித்திரை மாதம் அமாவசைக்கு 3ம் நாள் தான் அக்க்ஷ்ய திருதியை. மிகவும் சுபமான நாள்.

இதை பற்றி யஜுர் வேதத்தில் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நாளில் செய்யும் தானம், தர்மங்கள் 7 பிறவிக்கு தொடரும். ஸ்வர்ண தானம் மிக உயர்ந்தது. வெள்ளி, பசு, தயிர், பால், இதுவும் தானம் அளிக்கலாம்.

எல்லாம் சரி. ஆனால் இன்று, இதை வேறு மாதிரி மாற்றி விட்டனர் நமது மக்கள்.

இந்த நாளில் 1 கிராமாவது தங்கம் வாங்கி தமது பீரோவில் வைத்தால், அந்த வருடம் முழுக்க கூரையை பிச்சுண்டு கொட்டும்னு எவனோ விட்ட பீலாவை நம்பி, நம்ம மக்கள், பனகல் பார்கில் பைத்தியமா திரியரா.

இந்த ஒரே நாளில் மட்டும் 400 டன் தங்கம் விற்பனை ஆகும்னு கணக்கிடப்பட்டுள்ளது. இது குறைந்த பட்ச அளவு தான்னு புள்ளி விபரங்கள் சொல்கின்றன. தங்க காசுகளை பிளாட்பாரத்தில் போட்டு விற்றதை போன வருடம், நான் சென்னையில் இருந்த போது பார்திருக்கிறேன்.

பொதுவாக சித்திரையில் கல்யாணங்கள் நடக்கும். தங்கம் உபயோகம் இருக்கும். இதை இதை பயன்படுத்தி, அக்க்ஷ்ய திருதியையை உபயோகப்படுத்தி கொள்ள ஆரம்பித்து விட்டனர் நமது வியாபாரிகள்.

"கேட்கறவன் கேனையனா இருந்தா
கேப்பையில நெய் வடியுதுனு சொல்வானாம்!"

மக்களே! இந்த நாளில் உங்களை தானம், தர்மம் தான் செய்ய சொல்லி இருக்கு. உங்கள் பீரோவை நிரப்ப சொல்ல வில்லை.

ஏற்கனவே தங்கம் கிராம் 880 ரூபாய் ஆகி விட்டது. பாவம் பெண்ணை பெற்றவர்கள். தமிழ் நாட்டில் குறிப்பிட்ட சில வகுப்புகளில் பெண்ணுக்கு நகை போடுவது கிலோ கணக்கில் தான்.

இதில் 60:70 (60 பவுன், 70 ஆயிரம்) என ரேஷியோ எல்லாம் வேற. ஆந்திராவில் இன்னும் மோசம். 50 லட்சம், 60 லட்சம், 1 கோடி வரை பேரம் படியுமாம். என் ஆபிஸ் குல்டி தடியன் பீத்திக் கொண்டான்.

1) நல்ல விஷயங்கள் மீது நம்பிக்கை வையுங்கள். மூட நம்பிக்கை வேண்டாமே!

ஹிஹி, அஸின் எனக்கு கிடைப்பாள்னு நினைத்தா அது நம்பிக்கை.
10 தடவை கஜினி படம் பாத்தேன்! அதனால அஸின் எனக்கு தான் கிடைப்பானு நினைத்தா அது மூட நம்பிக்கை! என்ன கார்த்தி புரிஞ்சதா? :)

2) பெண்ணுக்கு தேவை புன்னகை, பொன்னகை இரண்டாம் பட்சமே!

3) குணத்தில் தங்கமாய் இருங்கள், உங்கள் நேரத்தை தங்கமாய் செலவு செய்யுங்கள்.

4) இந்த புனித நாளில், ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவியுங்கள். இதை விட பெரிய புண்ணியம் வேறு எதுவும் இல்லை.

5) இந்த நல்ல நாளில் உங்கள் தாய், தந்தையர் பெயரில், உங்கள் பள்ளியில், கல்வி அறக்கட்டளை தொடங்குங்கள்.

6) ஊனமுற்றவர்களுக்கு முடிந்த உதவி செய்யுங்கள். இது ஒரு மிக சிறந்த சனி பரிகாரம், தெரியுமா?

7) உங்கள் மனைவியை தங்கமணி!னு அன்போழுக கூப்பிடுங்கள்.
உங்கள் குழந்தையை, "தங்கமே!னு கொஞ்சுங்கள். (தில்லு இருந்தா பக்கத்து சீட்டு பிகரையும் தான்).

8) இந்த வருஷம் வெள்ளை கலரும் நல்லது!னு சரடு விட ஆரம்பிச்சாச்சு. வேற என்ன பிளாடினம் நகைகளை நம்ம தலையில் கட்ட இது ஒரு சாக்கு.
மல்லிகைப் பூவும் வெள்ளை நிறம் தான்.
"பூவைக்கோர் பூ வைத்தாய்!"னு பாட்டு பாடின்டே தங்கமணிகளுக்கு மல்லிகை பூ வாங்கி தலையில் வையுங்கள். (முடிந்தால் காதிலும் தான்).

உலகையே வென்ற அலெக்ஸாண்டர், தான் இறக்கும் போது சொன்னது இது, "எனது இறுதி ஊர்வலத்தில், எனது உள்ளங்கைகளை விரித்து வையுங்கள். இந்த உலகுக்கு தெரியட்டும், உலகை வென்ற நான், எதையும் எடுத்து செல்ல வில்லையென்று!"

எவ்வளவு சத்யமான வார்த்தைகள்!

At the end of the game, both the Pawn and the king goes to the same box.

மொத்ததில், அக்க்ஷ்ய திருதியை லலிதா, GRT, பிரின்ஸ், Fathima ஜுவல்லரி காராளுக்கு தான் நல்லது!

ஊதற சங்க ஊதி விட்டேன்.
வாங்கிண்டு வாங்கனா வாங்கிண்டு வாங்களேன்!னு தங்கமணிகள் அதட்டலுக்கு பயந்து வாங்கிண்டு வரத்துக்கு இது ஒன்னும் இதயம் நல்லெண்னை இல்லை. எதாவது டகால்டி பண்ணி நிலைமையை சமாளிக்க பாருங்கள். இல்லாவிட்டால் இருக்கவே இருக்கு கோ-ஆப்டெக்ஸில் 20% தள்ளுபடியில் தலைல போட்டுக்க துண்டு.

படத்தில் இருப்பது பாகிஸ்தான் பேட்ஸ்மேன் மியான்தத்தின் தவபுதல்வனும், ஊரை அடித்து உலையில் போட்ட தாவூத்தின் தவபுதல்வியும் தான்.(இவ்ளோ பாரம் சுமக்கறதே, கர்ணம் மல்லேஸ்வரி பொண்ணுனு நினைத்தேளோ?)

Friday, April 13, 2007

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

அன்னியன்: நாம் ஆங்கில புத்தாண்டுக்கு குடுக்கும் முக்கியத்துவத்தை தமிழ் புத்தாண்டுக்கு குடுப்பதில்லையோ?னு நிறைய தடவை தோன்றி இருக்கு.
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் என்பதை கூட "ஹேப்பி டமில் நியூ இயர்"னு சொல்லும் வெள்ளைக்கார துரைகளும் இங்கு உண்டு.

அம்பி: சரி விடுங்கோ! நூறு வருஷத்துக்கு மேல துரை தானே நம்மள ஆண்டான். எல்லாத்தையும் அந்த பெருமாள் பாத்துண்டு தான் இருக்கார். எல்லோருக்கும் நன்னா குடுப்பார்.

ரெமோ: " நமீதாவின் தமிழ் புத்தாண்டு!னு சன்/கே டிவில ஒரு ப்ரொக்ராம் இருக்காம்.

அன்னியன்: மாத்தனும்! எல்லாத்தையும் மாத்தனும்!
சாத்தனும்! எல்லாரையும் சாத்தனும்!

அம்பி: பெருமாளே! ரூல்ஸ நாமளே கைல எடுத்துக்கப்படாது! டாக்டர் ராமதாஸ், அவர் புள்ளையாண்டன் எல்லாம் எதுக்கு இருக்கா? பாவம்! அவாளுக்கும் பொழுது போக வேண்டாமா?

ரெமோ: ஹே கமான் பேபி! வாட்ஸ் ராங்க் இன் இட்?

அன்னியன்: தப்பு செஞ்சா தண்டனை!
தங்லீஷ்ல போஸ்ட் போடற எல்லாரும் இனிமே மாதம் ஒரு தடவையாவது தமிழ்ல போஸ்ட் போடனும். இல்லாடி நைட் அவங்க பெட்ல உச்சா போக கடவது!

என்ன மக்களே! நீங்க யாரு சொன்னத கேப்பீங்க அம்பியா? ரேமோவா?(ஷ்யாம் கைய தூக்கறான் பாரு), இல்ல அன்னியன் பேச்சா?

எல்லோருக்கும் இனிய என் உள்ளங்கனிந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

இந்த தமிழ் புத்தாண்டு எனக்கு ரொம்ப எதிர்பார்ப்புடன் துவங்குகிறது.
ஆமா! தங்கமணி ஆணி பிடுங்கிட்டு தாய் நாட்டுக்கு வராங்க. அதனால சென்னைல தான் 4 நாளுக்கு எமது வாசம். அதனால் உங்க கடை பக்கம் வர முடியாது! மாப்பு-மன்னிப்பு!

பரிசா கரடி பொம்மை குடுக்கலாமா? இல்ல மலிவா இருந்தா ஒரு கரடியே(சொம்பு அப்பா ஒன்னும் நான் சொல்லல) வாங்கி குடுக்கலாமா?னு ஒரே யோசனையா இருக்கு.

ஒரு மந்தையிலிருந்து இரண்டு ஆடுகள் தனி தனியே சென்றன. அவை மீண்டும் சந்தித்த போது பேச முடியலையே?னு டயலாக் எல்லாம் மனப்பாடம் பண்ணி வெச்ருக்கேன்.

போய் வா அம்பி!
போய் வா!னு வழியனுப்பி வைங்களேன். :)

Wednesday, April 11, 2007

மனிதம் வளர்ப்போம் வாருங்கள்!

அருணின் H1B visa பற்றிய பதிவை படித்ததும் எனக்குள் ஒரு யோசனை. இதை மாதிரி எத்தனை உருப்படியான தகவல்களை நாம் பறிமாறி கொள்ளலாம்? ஒரு இமெயில் ஐடி கூட இல்லையே?னு சிறிது வருத்தமாக இருந்தது.
இதை பற்றி டிடி அக்காவிடம் வழக்கம் போல OC சாம்பார் வாங்கும் போது பேசியதில் எங்கள் இருவருக்கும் தோன்றியது தான் இந்த ஐடியா.

1) உங்கள் நிஜபெயர், இமெயில் ஐடி, பார்க்கும் வேலை, கம்பெனி போன்ற தகவல்களை இந்த mailto:blog_union@yahoo.com ஐடிக்கு அனுப்பி விடுங்கள். ஒரு தகவல் வங்கியாக செயல்படும்.

2) உங்கள் சித்தி பையனோ, அத்தை பெண்ணோ(ஹிஹி) கல்லூரி இறுதியில் பிராஜக்ட்/வேலை தேடலாம். என்னுடைய அல்லது வேறு சிலரின் கம்பனியில் அதற்கான வாய்ப்புகள் இருக்கலாம் இல்லையா? தகவல்களை பறிமாறி கொள்வோமே? ஷுவை தொலைக்காமலேயே பிராஜக்ட் கிடைக்கட்டுமே! என்ன சரி தானே கார்த்தி? :)

3) உங்கள் பெற்றோர் இங்கு இந்தியாவில் இருக்கலாம். அவர்களுக்கு அவசரமாக ஏதவது ஒரு செய்தி அனுப்ப இருந்து, உடனே அவர்களை தொடர்பு கொள்ள முடியாத நிலையில் இந்தியாவில் உள்ள சக பிளாக்கர்கள் உதவுவார்களே!
அதுக்காக "எங்க அம்மாவோட ஒன்னு விட்ட ஒர்படி பொண்ணு அடுத்த வாரம் US வராங்க. அவர்களிடம் 4 கட்டு பிந்து அப்பளம் வாங்கி அனுப்பவும்"னு மொக்கை தகவல் எல்லாம் அனுப்ப கூடாது, இப்பவே சொல்லிட்டேன் ஆமா! :)

4) எந்த சக ப்ளாகராவது இந்தியாவுக்கு வந்தால் அவருக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால் செய்யனும். ஓட்டல் பில்லை கட்ட இருக்கவே இருக்கார் நம்ம பில்லு பரணி.
30 நாளில் தெலுங்கு கற்பது எப்படி? புக் எங்க கிடைக்கும்னு "காதல் யானை" ப்ரியா கூகிளில் தேட வேண்டாம். எமன்டி! பே ஏரியாவுல எல்லாரும் பாகுன்னாரா? :)

5) முடிந்தால் வருடத்துக்கு ஒரு முறை பிளாகர் மாநாடு நடத்துவோம். சமோசா சப்ளை பண்ண இருக்கவே இருக்கார் நம்ம TRC சார். (எலேய் கொடி, அந்த தடவையும், என் சமோசவ நைஸா நீ அமுக்கிடாத, இப்பவே சொல்லிட்டேன்)
TRC சாரின் வீட்டுக்கு போனா என்ன ஆகும்?னு நான் சொல்லி தான் தெரியனுமா?

முதலில் இந்த ஜோதியில் ஒரு குறிப்பிட்ட மக்கள் மட்டுமே ஐக்கியமாக அழைப்பு.

முடிந்தால் வீட்டு அட்ரஸும் தெரிவிக்கவும். அப்ப தான் ஆட்டோ, சுமோ அனுப்ப எங்களுக்கு வசதியா இருக்கும்.

தகவல்தொடர்புதுறை அமைச்சகம் தனது வேலையை திறம்பட செய்து வருகிறது! என்பதை இந்த தருணத்தில் எதிர்கட்சிகளுக்கு சொல்லி கொள்ள ஆசைப்படுகிறேன்.

எனக்கு தெரிஞ்ச சில பேரின் பெயர்கள் கிழே கொடுத்துள்ளேன். இதில் யாருக்கு விருப்பமோ அவர்கள் மாத்திரம் அனுப்பினால் போதுமானது.
வேறு ஏதாவது உதவி செய்யலாம்னு உங்களுக்கு பட்டா அதையும் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

1) Syam
2) Veda
3) Karthikeyen muthurajan
4) Priya (Priyamana Neram)
5) Ms.C
6) Arunkumar
7) Dreamz
8) Bharani
9) G3 akka
10) Porkodi
11) G-Z
12) Raji
13) Sachin Gops
14) Ramya
15) ACE
16) Sumathi
17) Mani Prakash
18) TRC Sir
19) Geetha Madam
20) Padma Priya
21) Padma
22) Ravishankar Kannabiran
23) SKM
24) my friend
25) kk
26) k4k
27) Usha shankar
28) Devi
29) Kavitha
30) BSK
31) Maduriampathi
32)Mgnithi
33)Nagai siva
34)marutham
35) Ponnarasi kodhandaraman
36) Kutichuvaru
37) Harish
38) Golmaal-gopal

இதே விஷயத்தை பற்றி டிடி அக்கா எழுதிய பதிவு இங்கே பாருங்கள்.
உங்கள் தகவல்களின் ரகசியங்கள் காப்பற்றப்படும்.. அம்பியை நம்பினோர் கை விடபடார். வேணும்னா என் தங்கமணியை கேட்டு பாருங்கள் :)
வாய்பேச்சோடு இல்லாமல் கொஞ்சம் காரியத்திலும் இறங்குவோம். என்ன சொல்றீங்க..?

Friday, April 06, 2007

லூஸாப்பா நீயி?

ஐந்து வியர்டு விஷயங்கள் ஒழுங்கா எழுதிடு!னு நம்ம டாக்டர் டிடி அக்கா அன்பு கட்டளை போட்டுட்டாங்க.
ஏற்கனவே நான்
கடவுள் பாதி மிருகம் பாதி!னு எழுதியாச்சு!னு அழுது பார்த்தேன். தினமும் இரவு தரும் சாம்பார்/ரசத்தை கட் பண்ணிடுவேன்!னு மிரட்டறாங்க.
ஹிஹி, ஆமா! சாதம் மட்டும் குக்கரில் வெச்சுட்டு மீதி எல்லாம் அக்கா வீட்டுல தான் ஓசி! (யக்கா! ரசப்பொடி கொஞ்சம் பழைய ஸ்டாக்கோ? நேத்து ரசம் கொஞ்சம் சப்புனு இருந்துச்சு! )

இதெல்லாம் ஒரு பொழப்பா?னு கூட எக்ஸ்ட்ராவா ஒரு கமண்டு போட்டுட்டு போங்க.
"பக்கத்து வீட்டு சாம்பாருக்கும் மணம் உண்டு!"னு சும்மாவா சொல்லி இருக்கா.
சரி, ரெண்டாம் தடவை எழுதிடறேன்!னு சொல்லியாச்சு.

1) ஜயண்ட் வீல்: சின்ன வயசிலிருந்தே இந்த பொருட்காட்சில இருக்கற ஜயண்ட் வீலுல ஏறதுனா ஒரே அலர்ஜி. நான் எம்சிஏ படிகறச்ச இப்படி தான் ஒரு தடவை நண்பர்களுடன் போய் வசமா மாட்டினேன்.
ஜயண்ட் வீலை பாத்தவுடனே, பக்கி மாதிரி எல்லோரும் போயி உக்காச்சுண்டு, எனக்கும் டிக்கட் எடுத்து வலய விரிச்சாங்க.
ஹ! இதெல்லாம் ஜுஜுபி, என் ரேஞ்சே வேற!னு எல்லாம் நைசா சமாளிச்சு பாத்தும் நடக்கலை. தர தரனு இழுத்துண்டு போயிட்டா ஒருத்தி. அந்த வீல் ஜிவ்வுனு மேலே மேலே எழும்பியதும் வைரமுத்து சொன்ன வயத்துக்கும் தொண்டைக்கும் உருவமில்லா உருளை எல்லாம் உருள ஆரம்பித்து விட்டது எனக்கு. நான் ஏறின நேரம், கரக்ட்டா உயரத்துக்கு போனதும் மெஷினில் ஏதோ கசமுசா ஆகி வீல் நின்று விட்டது.
ஆஹா! அதோ பாருடா மீனாக்ஷி கோவில் கோபுரம், கன்னத்துல போட்டுக்கோ! போற வழில புண்ணியம் கிடைக்கும்னு ஒருத்தி சொல்ல, யப்பா! அதுக்கப்புறம் ஜயண்ட் வீல் இருக்கற ஏரியா பக்கமே போகறது இல்லை.
தங்கமணி ஜயண்ட் வீல் ஏற ஆசைபட்டா ஏதாவது சொல்லி சமாளிக்கனும். நல்ல ஐடியாக்கள் வரவேற்க்கப்படுகின்றன.

2) சோப்பு: சின்ன வயசுல சோப்பு!னா எனக்கு உயிர். வாசனையே வெச்சே அது என்ன சோப்பு?னு கரக்ட்டா சொல்லிடுவேன். இதோட முடிஞ்சா பரவாயில்ல. அந்த மோகம் மேலும் அதிகமாகி கொஞ்சம் கொஞ்சம சோப்பை சாப்டற அளவுக்கு ஆகி போச்சு.(மைசூர் சாண்டல் என் பேவரட்)
எங்க அம்மா அன்பா சொல்லி பார்த்தாங்க, முதுகுல நாலு போட்டு பார்த்தாங்க, ஒன்னும் நடக்கலை. அப்புறமா நாங்க மார்கோ சோப்புக்கு(சே என்ன கசப்பு) மாறிட்டோம். இப்ப வெறும்ன வாசனை பிடிக்கறதோட சரி.

3) மிமிக்கிரி: எல்லா குரலையும் மிமிக்ரி பண்றது கஷ்டம். ஆனா சில பெக்யூலியரானவங்க குரல், அவங்க அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தைகள், குரல் மாடுலேஷன் எல்லாம் கவனமா நோட் பண்ணி மிமிக்ரி பண்ணிடுவேன். ஹிஹி, TRC சார், கீதா மேடம் மாதிரியே நானும் தம்பியும் சில சமயம் பேசிப்போம். (தங்கமணி குரலும் தான்).
எனது முந்தைய கமபனியின் பெரிய்ய தலை ஒருத்தர், பிறப்பால் இந்தியர், ஆனால் படிச்சது எல்லாம் லன்டன். தொர இங்க்லீஸ், அதே Accent பொளந்து கட்டுவார். ஒரு தடவை ஆபிஸ்லேருந்து பார்ட்டி போனப்ப, அவர மாதிரியே என் டீம் கிட்ட நான் பேசி காட்ட, உடனே ஒரு ரசகுல்லா அவர்கிட்டேயே போயி சொல்ல, அவரும் ரொம்ப ஆர்வமா என்ன பேச சொல்ல, ஒரு நிமிஷம் எனக்கு உள்ள போன கோபி மஞ்சூரியன் எல்லாம் வேளியே வந்து விட்டது. அப்புறம் பேசி காட்டினேன்.
தொரைக்கு ரொம்ப சந்தோஷம். கட்டி பிடிச்சுண்டார். இதே நம்ம ஊரு பெரிய தலயா இருந்தா அப்ரைஸலுல ஆப்பு தான்!

4) மருதாணி கைல வெச்சுக்க பிடிக்காது. என் அம்மா அவங்க கைல வெச்சுண்டா கூட பிடிக்காது.ஆனா வெச்சதுக்கு அப்புறமா வர டிஸைன பார்க்க பிடிக்கும். இது வரை என் கைல மருதாணி வெச்சதே கிடையாது, இனி மேலும் வைக்க போறது இல்லை.

5) ஸ்டெப்புடு: நடக்கும் போது எனது ஸ்டெப்ஸை எண்ணும் பழக்கம் உண்டு. பஸ் ஸ்டாபிலிருந்து வீட்டுக்கு போயி சேர நேத்திக்கு 500 அடிகள் எடுத்தேன். இன்னிக்கு எவ்வளவு?னு எல்லாம் யோசிப்பேன். இந்த பழக்கம், உங்களுடைய கான்ஸன்ட்ரேஷனை அதிகரிக்க உதவும்!னு ஒரு புக்கில் படிச்சதும் பெருமை தாங்க முடியலை. அட! என்ன நீங்களும் ஷ்டார்ட் பண்ணியாச்சா?

டிடி யக்கா, ஹோம்வுர்க் எழுதியாச்சு, ஒழுங்கா சாம்பார் வந்துரும் இல்ல இன்னிக்கு? சரி யாரையாவது மாட்டி விடலாம்!னு முடிவு பண்ணி
1)மெஹந்தி புகழ் பத்மப்ரியா
2) என்னை வார்த்தைக்கு வார்த்தை அண்ணா!னு பாசமாக அழைக்கும் பத்மா ( நான் என்ன அறிஞர் அண்ணாவா?)
டேக் பண்ணுங்க! வேணாம்னு சொல்லலை! ஆனா ரெண்டாம் தடவ எல்லாம் ரொம்ப ஒவரு! சொல்லிட்டேன் ஆமா! (அடிங்க, ஆனா கைய கழுவிட்டு அடிங்க! -விவேக் ஸ்டைலில் படிக்கவும்)

Wednesday, April 04, 2007

காட்டுக்குயில்-கருகுமணிமாலை!



டிஸ்கி: இந்த கதையில் வரும் பெயர்கள் சம்பவங்கள் எல்லாம் கற்பனையே.

ஒரு ஊர்ல ஷ்யாம்!னு ஒரு வெட்டி இருந்தான். சாரி, விறகு வெட்டி இருந்தான்.
ஒரு நாள் வழக்கம் போல தன் தங்கமணிய கூட்டிண்டு காட்டுக்கு விறகு வெட்ட போனான்.
போனானா, நடு வழில ஒரு ஆறு(திரிஷா நடிச்ச படம் இல்லை)வந்ததாம். "ஏனுங்க, இன்னிக்காவது நீங்க குளிக்க கூடாதா?"னு தங்கமணி கேக்க, "அட! நான் பல்லே தேச்சது கிடையாது, குளிக்க எல்லாம் சொல்றீங்களே எஜமான்?"னு ஷ்யாம் பம்மினான்.
சரி, எப்படியோ போங்க!னு சொல்லிட்டு தங்கமணி முகத்த கழுவ ஆத்துல இறங்கினாங்களாம். நம்ப ஆளு எவ்ளோ பாசம் வெச்சு இருக்கர்ரு?னு டெஸ்ட் பண்ண சும்மா ஆத்துல முங்கினாப்ல முங்கி, "அய்யோ! தண்ணி இழுக்குது, கை குடுங்க!னு கத்தினாங்களாம்.
நம்ப ஆளு பழக்க தோஷத்துல F1 F1னு கத்தினானாம். அப்ப அழகா ஒரு தேவதை (குகிள் தேவதை!னு வெச்சுப்போம்)டொயிங்குனு ஷ்யாம் முன்னாடி வந்து, என்ன வேணும்? ஏன் F1 F1னு கத்தற?னு கேட்க, நம்ப பயலும் விவரம் சொல்லி இருக்கான்.
சரினுட்டு, குகிள் தேவதையும் தண்ணில முங்கி தங்கமணிய வெளிய கொண்டு வந்தாங்களாம்.
அட! அப்ப தான் தெரியுது, அந்த தேவதை கொண்டு வந்தது நமீதாவ!
இது தானே உன்னோட தங்கமணி?னு கேட்க ஷ்யாம் பயலும் தேன் குடிச்ச நரியாட்டும், "ஆமா! ஆமா! இது தான் என்னோட தங்கமணி!"னு குதிச்சானாம்!
தேவதை கோபமா ஒரு லுக்கு விட்டுட்டு, அட பாவி! போன தடவை கோடரிய தண்ணில போட்டுடுட்டு F1 F1னு கத்தின. அப்ப கூட நான் காட்டின தங்க, வெள்ளி கோடரி எல்லாம் என்னோடுதில்லை!னு ஒழுங்கா தானே பதில் சொன்ன. இப்ப நமீதாவ பாத்தவுடனே இப்புடி ஊத்தறியே டா?

அப்பவும் இந்த பூனையும் பகார்டி அடிக்குமா?ங்கற ரேஞ்சுக்கு முகத்த வெச்சுண்டு "நீங்க சொல்றது எல்லாம் கரெக்ட்டு தான்! இது என் தங்கமணி இல்ல தான்! ஆனா பாருங்க, நான் உண்மைய சொன்னா அடுத்து நீங்க பாந்தமா பாவனாவ காட்டுவீங்க! (அய்யே! பரணி இது கதை தான் பா! அளுவாத, உன் டாவு உனக்கு தான்!) நான் அதுவும் இல்லை!னு சொன்னவுடனே நச்சுனு நயன் தாரவ காட்டுவீங்க. கடைசில என் தங்கமணிய காட்டுவீங்க. நானும், ஆமா! ஆமா!னு தலையாட்டினேன்!னு வைங்க, உடனே ஆஹா!
நீ தான்டா மனுஷன்!
தங்கமணிக்கேத்த புருஷன்!னு சொல்லிட்டு மூனு பேரையும் என்கிட்ட தந்ருவீங்க. ஒரு தங்கமணிட்டயே அடி வாங்க முடியலை. மாசம் ஒரு பூரி கட்டை உடையுது. போண்டா எல்லாம் போட வேண்டி இருக்கு. இதுல மூனு பேருனா? தாங்காது மா என் உடம்பு! அதான் வாங்கற அடிய நமீதா கையால வாங்கலாமேனு ஹிஹி ஒரு நப்பாசை!னு சீன் விட்டானாம் ஷ்யாம்.



உடனே தேவதையும், உன்னைய திருத்தவே முடியாது!னு சொல்லி மறைஞ்சு போக, இவ்வளவையும் தண்ணில தம் கட்டி கேட்டுட்டு இருந்த உண்மையான தங்கமணி கோபத்தோட டாய்!னு கிராபிக்ஸ் இல்லாத இராம நாராயணன் படத்து அம்மன் மாதிரி வெளியே வர, அப்புறம் என்ன ஷ்யாம் பயலுக்கு ஷ்டார்ட் மிஜீக் தான்!

எப்பிடி இருக்கு கதை?

எல்லாம் சரி, அது என்னடா இந்த கதைக்கு இப்படி ஒரு டைட்டில்?னு தானே நீங்க கேக்கறீங்க.

பச்சைக்கிளி-முத்துச்சரம்!னு அந்த கதைக்கு அவங்க டைட்டில் வைக்கலாம்! காட்டுக்குயில்-கருகுமணிமாலை!னு இந்த கதைக்கு நான் டைட்டில் வைக்கப்படாதா?

Friday, March 30, 2007

சிருங்கேரி - II

Part - I
2000 வருடங்கள் பழமை வாய்ந்த சந்ர மவுலீஸ்வர லிங்கம். இதையும் சேர்த்து ஐந்து ஸ்படிக லிங்கங்கள் பரமேஷ்வரனால் ஆதி சங்கரருக்கு வழங்கப்பட்டு பாரததின் ஐந்து இடங்களில் ஸ்தாபிக்கப்பட்டது. இந்த ஐந்து லிங்கங்களுக்கும் கடந்த 2000 வருடங்களாக (ஒரு நாள் கூட தவறியதில்லை)மூன்று கால அபிஷேகம், பூஜைகள் செய்யப்பட்டு வந்துள்ளது என்பது சிறப்பு.


2) நாங்கள் சென்ற தினத்தன்று லக்க்ஷ தீபம் ஏற்றி இருந்தார்கள். காண கண் கோடி வேண்டும்.
3) அதி காலை நேர துங்கா நதிக்கரை.


4) இங்குள்ள வித்யா சங்கரர் கோவில் சிற்ப கலைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. அழகான லக்ஷ்மி நரசிம்ஹரை பாருங்கள்.
"கல்லிலே கலை வண்ணம் கண்டான்!"
(நரசிம்மரை பார்த்ததாலோ என்னவோ என் முகத்திலும் சிறிது உக்ரம்!)

5) இரவு நேரத்தில் சாரதா கோவிலின் வாசலில் அழகான ரங்கோலி. சிகப்பு கலரில் இருப்பது நல்ல தாழம்பூ மணக்கும் குங்குமம் (பத்திரிகை இல்லை)


6) ஞான ஸ்வரூபிணியாய், வாக்வினியாய், கலைவாணியாய், அருளமுதை அள்ளி தரும் வாகீஸ்வரியாய் அன்னை சாரதாம்பாள் கொலுவிருக்கும் கோவில்.
7) மற்றுமொரு அழகான வயல்வெளி

பி.கு: அம்பி ஸ்டைலில் ஒரு கதை காட்டுக்குயில்-கருகுமணிமாலை முன்பதிவுக்கு முந்துங்கள்!

Thursday, March 29, 2007

சிருங்கேரி

போன முறை சிருங்கேரிக்கு பயணம் செய்த போதே முடிவு செய்து விட்டேன் - கண்டிப்பாக இந்த இயற்கையோடு இணைந்து இரண்டு நாளாவது வாழ வேண்டும்.
அதன் பின், கடந்த நவம்பரில் ஒரு சனி மஹாபிரதோஷம் வந்தது. அந்த புண்ணீய நாளில் 2000 வருடம் பழமை வாய்ந்த சந்ர மவுலீஸ்வர லிங்கத்தை தரிசனம் செய்தால் பிளாக்கில் நிறைய கமண்ட் விழும் என்பது ஐதீகம்!னு நான் சொன்னா நீங்க நம்பவா போறீங்க?
நானும் உடன்பிறப்பும் கிளம்பி விட்டோம். போன முறை சென்ற போது சிருங்கேரியின் அழகை வர்ணிக்க முயன்று இருந்தேன்.
இந்த தடவை எல்லாமே படம் பார்த்து கதை சொல்ற டெக்னிக் தான்!
1) மேற்க்கு தொடர்ச்சி மலையின் வனப்பில் அழகான வயல் வெளிகள்....
2) ஆரவாரமில்லாமல் அழகாக ஓடி வரும் துங்கா நதி
3) கோபுர தரிசனம் கோடி புண்ணீயம். எல்லோரும் கண்ணத்துல போட்டுகோங்கோ!
4) சைலஷ்ரி அம்பியானந்தா சுவாமிகள் நடந்து வருகையில் மயில்கள் ஆடின, குயில்கள் கூவின!னு நான் சொன்னா நம்பவா போறேள்?
வேணும்னா இப்படி வெச்சுக்கலாம்:
மயில்கள் ஆடும் போது, குயில்கள் கூவும் போது சைலஷ்ரி அம்பியானந்தா சுவாமிகள் நடந்து வந்தார்.

5) நானும் உடன்பிறப்பும்.
அம்பியானந்த சுவாமிகள் கண்ணில் வழியும் அந்த கருணையை பாருங்கள்.
மீதி படங்கள் அடுத்த பதிவில்...

Tuesday, March 27, 2007

ராமன் எத்தனை ராமனடி


தந்தையே, என்னுடைய பாவத்தில் பங்கு ஏற்பீர்களா? பரிதாபமாக கேட்டான் அந்த வேடன்.

குழந்தாய்! குறிப்பிட்ட வயது வரை உன்னை வளர்பது எங்கள் கடமை. நீ பெரியவன் ஆனதும், எங்களை பரிபாலிப்பது உன்னுடைய கடமை. உன் சுக துக்கங்களில் பங்கு ஏற்போமே தவிர பாவத்தில் எப்படியப்பா நாங்கள் பங்கு ஏற்க முடியும்..? இது தந்தை.

நேரே அவனது தங்கமணியிடம் வந்து, "ப்ரியே! நீயாவது என் பாவத்தில் பங்கு கொள்வாயா?" நல்லா இருக்கே கதை! நீங்க சம்பாதித்து தந்தால் நான் செலவழிப்பேன், செலவழித்தது போக முடிந்தால் எதிர்காலத்துக்கு சேர்த்து வைப்பேன்! பாவத்தில் எப்படி பங்கு கொள்ள இயலும்? - இது அவனது தங்கமணி.
அவனது குழந்தைகளும் இதே பதிலை தந்ததால் ஏமாற்றத்துடன் நாரதரிடம் வந்தான் வேடன்.

என் சுமையை நான் தான் சுமக்க வேண்டும்! என் அறிந்து கொண்டேன். புண்ணிய நதிகளில் நீராடியதில்லை, கைலை யாத்திரையும் போனதில்லை. செய்த பாவத்தை போக்க வழி சொல்லுங்கள் பெரியவரே!

வேடனே கேள்! எந்த நாமத்தை சொன்னால் எல்லோருக்கும் சந்தோஷத்தை தருமோ, எந்த நாமத்தை சொன்னால் சம்சாரம் என்ற சாகரத்தை எளிதாக கடக்க முடியுமோ, எந்த நாமத்தை பரமேஷ்வரனே பார்வதிக்கு உபதேசித்தானோ அந்த நாமத்தை உனக்கு உபதேசிக்கிறேன். கவனமாக கேள்!
அய்யா! கோவிலுக்கும் போனதில்லை, கையெடுத்து கும்மிட்டதில்லை. மந்திரமும் நான் அறியேன்! என்ன செய்வது?

சரி, இது தான் மரா மரம். இந்த மரத்தின் பெயரை விடாது சொல்லி வா! உனக்கு முக்தி கிடைக்கும் - நாரதர் சென்று விட்டார்.

வேடன் துவங்கி விட்டான்

மரா மரம்

மரா மரம்

மராமரம்

ராம ராம ராம ராம ராம ராம ராம ராம

நாட்கள் வாரங்களாகி, மாதங்கள் வருடங்களாய் உருண்டது. வேடன் வால்மீகி முனிவராய் ஞானம் பெற்று ராமாயண இதிகாசத்தை இயற்ற முடிந்தது.
இன்று(27/3/2007) ஷ்ரி ராம நவமி.
ஒரு சொல்!
ஒரு வில்!
ஒரு இல்!
தந்தையின் ஒரு சொல்லுக்கு கட்டுப்பட்டவனாம், ஒரே வில்லில் பகைவரை அழித்தவனாம், ஒரே இல்லாளுடன் வாழ்ந்தவனாம், தன்னுடைய பக்தர்களுக்கு கோசல ராமனாக, தசரத ராமனாக, சீதாராமனாக, அயோத்தி ராமனாக, ராஜாராமனாக, ஜானகி ராமனாக, ரகுராமனாக, ரங்கராமனாக(!) அருள் பாலிக்கும் அந்த ஷ்ரிராமனின் நாமாவை ஒரு முறையேனும் சொல்வோமாக!
பக்தி பதிவானதால், எல்லோருக்கும் கண்டிப்பாக வடை, சுண்டல், பானகம் உண்டு.

பி.கு: இந்த பதிவை படிக்கும் எல்லா வானரங்களுக்கும் அந்த ராமன் அருள் பரிபூரணமாக கிடைக்கட்டும்! :)
ராம ராம ராம ராம ராம ராம ராம ராம

Friday, March 23, 2007

பார்த்த முதல் நாளே! - II


Part-I


என் முறைப்பை புரிந்து கொண்ட TRC சார், "சரி! பொண்ண வர சொல்லுங்கோ!னு சிக்னல் குடுக்க, தாய்மாமா, " TRC சார் வந்ருக்காக, மாப்ள மொக்கை போஸ்ட் அம்பி வந்ருக்காக! மற்றும் நம் உறவினரேல்லாம் வந்ருகாக! வாம்மா! மின்னல்!னு ஒன்னும் டயலாக் அடிக்கலை. அம்மணியும் மின்னல் மாதிரி சரட்டுனு எல்லாம் ஒன்னும் வரலை.

மெதுவாக இட்ட அடி எடுக்க, எடுத்த அடி நோக, வருவது அன்னமா?
மயிலா?னு பார்ப்பவர்களுக்கு சந்தேகம் வரும்படி எனக்கு பிடிச்ச மெரூன் கலர் பட்டு புடவையில்(ஹிஹி, நானும் போன்ல நேயர் விருப்பம் சொல்லிட்டேன்) பாந்தமாக வந்தாங்க. (முந்தின நாள் ரிகர்ஸல் பண்ணி இருப்பாங்க போலிருக்கு!)
என் போஸ்ட் படிச்சதும் உடனே அம்மணி பிளாக் என்ன கலர்?னு கிளிக் பண்ணி பாக்கற வேலை எல்லாம் வேண்டாம், இப்பவே சொல்லிட்டேன் ஆமா!
வந்து பெரியவங்களுக்கு நமஸ்காரம் எல்லாம் பண்ணினாங்க.
"விழுந்து எழுந்தது அவள்
வலித்தன என் கால்கள்!
கால்கள் மட்டுமல்ல
இதயமும் தான்!!
விழுவதே எழுவதற்க்கு தான்!
என எனக்கு புரிய வைத்தாளே!
என்னை புன்னகை புரிய வைத்தாளே!!"

(சரி, சரி, இதேல்லாம் கண்டுக்கப்படாது!)
எல்லாரும் ஒரு வழியா அவங்க அவங்க இடத்துல செட்டில் ஆனதுக்கு அப்புறமா டிபனும் வந்து சேர்ந்தது. வேற என்ன, கேசரி தான்! பஜ்ஜிக்கு பதிலா போண்டா!
கேசரி நன்னா இருந்தது. போண்டா தான் கொஞ்சம் ஹார்டா இருந்தது. மிருதுவா இருக்க வேண்டாமோ?

சரி, மறப்போம்! மன்னிப்போம்!

அடுத்த தடவை சரி பண்ணிடுவாங்க!னு நம்பறேன்.
டீயா? காப்பியா?னு தங்கமணி அம்மா விசாரிக்க நான் பால்!னு அசடு வழிந்தேன்.
இந்த இடைப்பட்ட கேப்புல, சில பெரியவர்கள் இரண்டாம் தடவை எல்லாம் கேசரி சாப்ட்டுடாங்க. அது TRC சார் தானா?னு நீங்க சந்தேகப்படலாம். தப்பில்லை. :)

எனக்கு ஒரு தடவை தான் கேசரி கிடைச்சது!

இதுக்கு தான், சைட் அடித்து கொண்டே உண்ணேல்!னு அவ்வையார் சொல்லி இருக்காங்க.
அண்ணலும் நோக்கினேன்!
அண்ணியும் பதிலுக்கு நோக்கினாள்!
அவள் மாமாவும் நோக்கி விட்டார்!
எனவே கண்ணும் கண்ணும் நோக்கியா!னு மலேசியா ஏர்போர்ட் எல்லாம் போயி டூயட் பாட முடியலை.

தங்கமணி பரத நாட்டிய டான்ஸர்! அதுக்காக நடு ஹால்ல சலங்கைய கட்டிண்டு, ரா! ரா! சரசுக்கு ரா! ரா!னு ஆட சொல்ல முடியுமா?
எங்க அப்பாவுக்கு பாட்டுனா உயிர். காலையில 4 மணிக்கு எழுந்து சாதகம் எல்லாம் நடக்கும். அதுவும் முருகன் பாட்டுனா அவ்ளோ இஷ்டம். அதுனால ஏற்கனவே தங்கமணிய ஏதவது முருகன் பாட்டு நாலு வரி பிராக்டிஸ் பண்ணி வை!னு சொல்லிட்டேன்.
சொல்லிட்டாலும் எனக்கு ஒரே பயம்!
மேடம், "பழம் நீயப்பா! தமிழியான பழம் நீயப்பா!னு பாடிட்டா என்ன பண்றது? நல்ல வேளை! அம்மணியும் பொறுப்பா நெட்ல தேடி 4 வரில நச்னு பாடிட்டாங்க. எங்க அப்பா ரொம்ப சந்தோஷப்பட்டு, அவரும் ஒரு பாட்டு பாடிட்டார். அம்மணி வீட்டுல எல்லோருக்கும் செம ஷாக். மாமனாரே இவ்ளோ கேஷுவலா பந்தா பண்ணாம பாட்டு பாடறாரே?

ஹிஹி அன்னிக்குனு பாத்து எனக்கு தொண்டை சரியில்லை. இல்லாட்டி... (சரி துப்ப வேண்டாம்.)

எல்லோரும் கேசரிய முழுங்கறதுலயே கவனமா இருந்தாங்களே தவிர, அடே! பொண்ணு கூட தனியா பேசறீங்களா(கடலை போடறீங்களா) அம்பி?னு யாருக்கும் தோணலை.
இதுக்கா நான் இவ்ளோ கஷ்டப்பட்டு தமிழ்ல பிளாக் எழுதி, 68 போஸ்ட் போட்டு, தங்கமணிய புடிச்சு, டகால்டி பண்ணி, கேசரி தின்னு... ம்ஹூம்...

அப்ப தான் ஒரு வழியா தாய் மாமா திருவாய் மலர்ந்தார், "பொண்ணு கிட்ட ஏதவது தனியா கேக்க(வறுக்க) ஆசைப்படறீங்களா?"

என் வயத்துல ஆரோக்யா பால வார்த்தீங்க மாமா!னு தடால்!னு எழுந்துட்டேன்.
TRC சார் உடனே சுதாரிச்சு, அம்பி முழியே சரியில்லை. கைய கால வெச்சுண்டு சும்மா இருக்க மாட்டான். எதுக்கும், நீயும் அவன் கூட போயிட்டு வா!னு என் உடன்பிறப்பையும் என் கூட அனுப்பி விட்டார்.
மைக்கேல் மதன காமராஜன் படம் மாதிரி, திருப்பு! என்னது இது? நான் கேள்விப்பட்டதே இல்லை. கடைசி வரைக்கும் இந்த அவினாசி கூடவே இருப்பானா?னு நானும் டயலாக் விடாத குறை தான்.
பக்கதுல இருக்கற தங்கமணியின் தனியறையில் உள்ளே நுழைந்தது தான் தாமதம், நானும் தங்கமணியும் விக்கட் எடுத்த வீரர்கள் கை தட்டி கொள்வதை போல தட்டி கொண்டோம். என் தம்பி தலையில் அடித்து கொண்டான்.
ம்ம், ம்ம், அப்புறம்?னு எல்லோரும் சப்பு கொட்ட வேண்டாம்.

வெறும்ன பேசிட்டு வெளியே வந்தோம்.(வர வெச்சுட்டாங்க).
எனக்கு அந்த பொண்ணை தான் பிடிச்சு இருக்கு!னு ரோஜா படத்து அரவிந்தசாமி மாதிரி மச்சினியை எல்லாம் கை காட்ட முடியலை.
ஊருக்கு போயி லெட்டர் போடரோம்!னு அல்வா குடுக்கலை. உடனே ரிஸல்ட் டிக்ளேர் செய்யப்பட்டது.
நல்ல நாள் பார்த்து நிச்ச்யதார்த்தம் வெச்சுக்கலாம்!னு நடுவர் மன்றம் தீர்ப்பு கூறியது! :)

Friday, March 16, 2007

பார்த்த முதல் நாளே!

பெண் பாக்கற அந்த நிமிடம் வரை தங்கமணியை நேர்ல பாக்கலை, போட்டோல பாத்தது தான். அதுனால சம்ப்ரதாயபடி பொண்ணு பாக்க வாங்க!னு அழைப்பு வந்ததும், நானும் என் உடன்பிறப்பும் பெங்க்ளூரில் இருந்து சென்னைக்கு வந்து TRC சார் வீட்டுல டேரா போட்டோம். எங்க பெற்றோர் திருனெல்வெலியிலிருந்து தங்கமணிக்கு அல்வா எல்லாம் வாங்கிண்டு வந்து சேர்ந்தாங்க.

என்னடா ஆரம்பமே அல்வாவா?னு நீங்க யோசிக்கலாம். ஹிஹி, அது தான் நெல்லை ஸ்டைல்.

"ஸ்கை ப்ளு தான்
எனக்கு புடிச்ச கலரு!
(டொயிங்க்! டொயிங்க்!)"
னு அம்மணி போன்ல பாடினதுனால சென்னைக்கு வரதுக்கு முன்னாடியே ஜிலேபி தேசத்துல புதுசா வாங்கியாச்சு! அண்ணனுக்கு ஒரு நீல கலர் சட்டை பார்சல்!னு தம்பி வேற மானத்த(எங்கே இருக்கு?) வாங்கிட்டான்.

காலையில அம்மா கூட GRT ல ஷாப்பிங்க் எல்லாம் போயிட்டு சாயந்தரம் பொண்ணு பார்க்க TRC சாரோட கிளம்பினோம்.
(ஹிஹி அப்ப தானே டிபன் கிடைக்கும்!)

சாரோட நீல கலர் கார்ல சர்ர்ருனு போயி இறங்கியாச்சு! தங்கமணி வீடு மாடில இருந்ததால மேல இருந்து ஒரு க்ரூப் நேரடி வர்ணனை குடுத்து கொண்டு இருந்தது.

அவங்க வீட்டுகுள்ள போனா,

ஆஹா! தங்கமணி பெரிம்மா, பெரியப்பா, அவங்க பசங்க, மாமா, மாமி, அவங்க பசங்க, சித்தி, சித்தப்பா!னு சுத்தி கும்மி அடிக்க ரெடியா இருந்தாங்க.
மூனு அத்தைமார்கள் ஊருல இருந்து வர டிக்கட் கிடைக்கலையாம்.
கிழிஞ்சது கிருஷ்ணகிரி!
நம்பள வெச்சு காமெடி கீமெடி எதுவும் பண்ணிடுவாங்களோ?னு எனக்கு கொஞ்சம் உதறல் தான்!
க்ரூப் டிஸ்கஷன் மாதிரி என்னை உக்காத்தி வெச்சு சுத்தி உக்காந்து இருந்தாங்க.
நட்ட நடு ஹால்ல அவங்க தாய் மாமா நாட்டாமை மாதிரி உக்காந்து, "கேள்விகளை நீ கேட்கிறாயா? நான் கேட்கட்டுமா?"னு என்னை ஒரு லுக்கு விட்டு அஹம்!னு தொண்டையை கணைத்து கொண்டார்.
சரி எதுக்கு வம்பு?னு நானே முதல்ல என்னை பத்தி சுருக்கமா சொல்லிக்கலாம்!னு நான் எல்கேஜில வாங்கின மார்க்லேந்து இப்ப பிடுங்கற ஆணி சைஸ் வரைக்கும் சொல்லி முடிச்சேன்.
அவங்களும் அம்மணி, நல்லவள், வல்லவள்! நாலும் தெரிஞ்சவள்!னு சொன்னாங்க. பரத நாட்யத்துல அம்மணி பட்டைய கிளப்பி இருக்காங்க!னு போட்டோ எல்லாம் காமிச்சாங்க. சிதம்பரம் நாட்யாஞ்சலில ஆடி இருக்காங்க!னு சொன்னாங்க.

இவங்க கூட தான் காதலன் படத்துல நக்மா( நடிகர் சூர்யா மச்சினி) ஆடினாங்களா மாமா?னு கேக்கனும்னு வாய் வரைக்கும் வந்து விட்டது.

அப்புறம், செல்லாது! செல்லாது!னு தீர்ப்பு சொல்லிட்டா என்ன பண்றது?
" மனமே பொறு!
மாலையை இடு!
அப்புறம் காட்டு உன் வாலுத்தனத்தை!"னு அசடு வழிய ஒரு சிரிப்பு சிரிச்சேன்.
இப்படியே அரை மணி நேரம் ஓட்டிடாங்க.
கேசரியும் காணும்! பொண்ணையும் காணும்!
செம கடுப்பா TRC சாரை ஒரு லுக்கு விட்டேன்.

மீதியை அடுத்த பதிவில் பார்ப்போமா? :)

Wednesday, March 14, 2007

Pointers in C

உங்களுக்கு ஆபிஸில் ரொம்ப வேலை பளுவா?
ரெஸ்ட் எடுக்க ஒரு ரிஸர்ட் வேணுமா?
ஆணி பிடுங்கி பிடுங்கி சோர்ந்து விட்டீர்களா?

ஆமாம்பா ஆமாம்! என்பது உங்கள் பதிலாக இருந்தால் உடனே நீங்கள் போக வேண்டிய இடம் கிண்டியில் இருக்கும் TRC சாரின் அழகிய வீடு.

இந்த பக்கம் நிஜமான நாலு கால் குதிரைகள் ஓடும் ரேஸ்கோஸ் மைதானம், அந்த பக்கம் பசுமையான கோல்ப்(Golf) புல்வெளி.

ஒரு 2 நாளுக்கு தேவையான உடைகளுடன் போய் விடுங்கள். நல்லா ஒரு குளியல்(வென்னீரும் உண்டு) போட்டு, உமா மேடம் சமயலை ஒரு கட்டு கட்டி விட்டு அருகில் இருக்கும் சோபாவில் சாய்ந்து கொண்டு ஒரு குட்டி தூக்கம் போடுங்கள்.
பக்கத்துல இருந்து சார் ஏதாவது தொண தொணனு பேசினாலும் ஒன்னும் கண்டுக்க வேண்டாம்.
சாயந்தரம் ஏலக்காய் மணக்க டீயுடன் சமோசாவும் உண்டு. (எலேய் கொடி, எத்தனை சமோசாவை நைஸா அமுக்கின எனக்கு தராம?)
சாயந்தரம், அப்படியே ரிலாக்ஸ் பண்ணிக்க இந்த பீச், நாரத கான சபா எல்லாம் TRC சாரே கூட்டிண்டு போவார்.

மிகவும் ராசியான வீடு. பிளாகர் மாநாட்டில் கலந்து கொண்ட என் அருமை சகோதரி பொற்கொடிக்கு ஒரே மாதத்தில் டும் டும் டும்! எனக்கு 2 வது மாததில் தங்கமணி பிக்கப்பு! :)

அட! இப்பவே நிறைய பேரு கிளம்பறாங்க பாருடா! ஷ்யாம் நீ எங்க புறப்படற?
நான் சொல்வதில் சந்தேகம் இருந்தால் பக்கா திருடனையோ அல்லது வேதா(ளத்தை)வையோ கேட்டு பாருங்கள்.

இந்த கோடை விடுமுறையை கொண்டாடுங்கள் TRC சாரின் வீட்டில்.
பேஜர் கிடையாது, பேக்ஸ் கிடையாது. போனா வராது! கேட்டாலும் கிடைக்காது! உடனே முன்பதிவுக்கு முந்துவீர்!

என்னடா தலைப்புக்கும், பதிவுக்கும் சம்பந்தமே இல்லையே?னு நீங்க கேக்கலாம். தப்பில்லை.
இப்ப முஸ்தபா! முஸ்தபா! டொன்ட் வொரி முஸ்தபா! பாட்டுல எங்கே முஸ்தபா வரான்? நாம கேட்டோமா? அதே மாதிரி தான் இதுவும்.
கூகிள்ல யாராவது "Pointers in C"னு தட்டினா ஹிஹி நம்ம பிளாக்கும் அவன் கண்ணுக்கு படும். ஹேப்பியா எல்லா வேலையவும் மூட்டை கட்டி வெச்சுட்டு (பொற்கொடி மாதிரி) நம்ம பிளாக்கை படிப்பான். கமண்டும் விழும். இதுவும் ஒரு பிளாக் பிரமோஷன் டெக்னிக் தான். எப்புடி நம்ம டகால்டி...?

உடனே இதை பார்த்து எதிர்கட்சிகள்னு வரிசையாக
1) ASP .NET
2) C#
3) UNIX and LINUX in 30 Days போஸ்ட் போட வேண்டாம். ஏற்கனவே அதை எல்லாம் காப்பிரைட் வாங்கி வெச்சுருக்கோமாக்கும். :)
பி.கு: அடுத்த பதிவு நீங்கள் கும்மி அடிக்க ஆவலுடன் காத்திருக்கும் "பார்த்த முதல் நாளே!"

Friday, March 09, 2007

உளறுதல் என் உள்ளத்தின் வேலை!









மருண்ட விழி பார்த்து
மானே என்றேன்!
இருண்ட கூந்தலை
கார் முகில் தான் என்றேன்!
செவ்விதழ் பார்த்து
செர்ரி என்றேன்
பித்தன் என்றனர்!
பிதற்றுகிறான் என உமிழ்ந்தனர்.
கவலையில்லை என் கண்மணி!
பிறை சூடி மான் மழு ஏந்தி
சதிக்கு நிகராய் சதிராடிய
சண்முகன் தகப்பனும்
பித்தன் தானே என் பொன்மணி!

அண்ணா சாலையில் பாலே நடனம்
சன் டிவியில் பிளாஷ் நியூஸ்!
ஓ! சாலையில் ஒயிலாக நீ நடந்தாயா?
டிராபிக் ஜாமானது என் மனது!
சிவப்பு விளக்காய் உன் மாமன்
ஆரஞ்சு விளக்காய் என் மச்சினி
பச்சை விளக்காய் நீ கண் சிமிட்டினால்
டாப் கியரில் பறக்காதோ நம் காதல் வண்டி?

நேர்-நேர் தேமாவாம்!
நிரை-நேர் புளிமாவாம்!
இலக்கணம் சொன்னது மல்லிகா டீச்சர்!
நான்-நீ இணைந்தால் என்ன மா?
இதை நான் கேட்டால் தப்பா மா?

பக்குவமாய் நாள் பார்த்து
பதவிசாய் உன் பக்கம் அமர்ந்து
பரவசமாய் பரிசமிட்டேன்
கண்ணாலே பல கதைகள் பேசி
காதோரம் கதைத்து விட்டு
கடமை அழைக்கிறது! என
காற்றாய் பறந்து விட்டாய்!
கரிசனமாய் கணினியில் கையசைத்து
கண்ணோரம் வந்த நீர் துடைத்து
கல கலவென வெளியே சிரித்து
ஓவென உள்ளே அழுது
நாளைய ஆஸ்காருக்கு காத்திருக்கிறேன்
நானும் ஒரு கைதேர்ந்த நடிகனாய்!

.......... அம்புட்டு தான் பா! ஸ்ப்ப்பா மூச்சு வாங்குது!

ரொம்ப நாளா களுத, இந்த காதல் கவித எல்லாம் எழுதனும்!னு ஒரே ஆசை.
அட பாருங்க, இந்த நேரம் பார்த்து நமக்கு பாட்டெழுத வரல! பாட்டெழுத வரல! மண்டபத்துல யாரோ எழுதி குடுத்தத வாங்கவும் மனசு இல்ல.


இந்த நேரத்துல ரிலே கவிதை எழுதி எனகுள்ள தூங்கிட்டு இருந்த சிங்கத்த சொறிஞ்சு விட்டுடாங்க.
சரி உளறல் தானே!னு விடுட முடியுமா? நாளைக்கு பாராளுமன்றத்துல எதிர் கட்சிகள் எள்ளி நகையாடிட கூடாது இல்ல? அதுனால கவிதை எழுத என்னென்ன வேணும்?னு ஒரு லிஸ்ட் போட்டேன்.

இதோ உங்கள் பார்வைக்கு:


1) மானே! தேனே! எல்லாம் சரளமா அங்கங்க தூவிக்கனும்.


2) கண்மணி போட்டா பொண்மணி கண்டிப்பா போடனும், அப்ப தான் கவிதை tally ஆகும்.

3) எதுகை மோனை இருந்தா டாப்பு டக்கர், உதாரணமா
மாப்பிள்ளை
வேப்பிலை
(கருவேப்பிலை கூட போட்டுக்கலாம் தப்பில்லை!)


தொடர் ஒட்டத்தில்---------------------------------

தலைவர்(கார்த்திக்) : கொதிக்கின்ற நீருக்குள் குதிக்கும் பொருளாய்

நிதியமைச்சர் (பரணி) : விழி விழுந்து என் விதி பார்த்துது.

துணைமுதல்வர் (வேதா) : உன் உதோட்டோர வழியும் சிரிப்பில்

கலை மற்றும் விளம்பரதுறை (மணி) : என் எல்லா நாட்காட்டி பொழுதுகளிலும்
பொதுப்பணித் துறை (ஜி-Z): சத்தமில்லாமல் புன்னகையிலும்...

மத்திய தகவல் தொடர்புதுறை (அடியேன்) : நானும் ஒரு கைதேர்ந்த நடிகனாய்!

டிஸ்கி: அந்த படத்தை பார்த்து ஒன்னும் நான் கவிதை எழுதலை! என்னய நம்புங்க எஜமான்! :)

Tuesday, March 06, 2007

மத்திய அமைச்சர் பதவியேற்ப்பு விழா!

நாட்டாமை ஷ்யாம் (ஓ.பன்னீர்செல்வம்!னு வாசிக்கபடாது) தலைமையில் பிளாக் முன்னேற்ற கழக மாநில அமைச்சர்கள் பதவியேற்ற கையோடு
மத்திய அமைச்சர்களும் பதவியேற்று கொண்டதை கழக செய்தி மலரான சங்கொலி மூலம் நீங்கள் அறிவீர்கள்.



நாம் என்றுமே பதவியை தேடி போனதில்லை, வந்த பதவியை ஒரு வழி பண்ணாமல் விட்டதில்லை, மேலும் பதவி என்பது நமக்கு மூக்கில் ஒழுகும் சளி போல, எந்த நேரமும் சிந்தி விட்டு போயிவிடுவோம்! என்பதை தமிழகம் அறியும். தரணியும் புகழும்.



இந்த நேரத்தில் மத்திய தகவல் தொடர்புதுறை அமைச்சர் பதவி என்னை தேடி வந்ததால் வேறு வழியில்லாமல் தம்பி! உன் சொல்லுக்கு கட்டுப்பட்டு இந்த முள் கீரீடத்தை சுமக்க இசைந்து விட்டேன், தலை அசைத்து விட்டேன்.


இதோ நாம் பதவியேற்றுக் கொண்ட காணக் கிடைக்காத காட்சி! (படத்துக்கு நன்றி கோல்மால் கோபால்)
தூர்தர்ஷன் முதல் கிரான்ட்ஸன் டிவி வரை கோலங்கள் மற்றும் செல்வி சீரியலின் நடுவே ஒரு வாரத்துக்கு ஒளிபரப்பும் செய்யப்படும். நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் குடும்ப குத்து விளக்கு செல்வி கவுஷா! இந்த நிகழ்ச்சியின் விளம்பரதாரர் நாயுடு ஹால். (பார்த்தே ஆகனும்! அது உங்க தலைவிதி)

நாட்டு மக்களுக்கு என்ன சலுகைகள்? என்று கேட்கும் எதிர்கட்சிகளின் வாயை அடைக்க இதோ:

1a) புதிதாக என்கேஜ்மெண்ட் ஆன ஜோடிகளுக்கு இலவச சாடிலைட் போன், வெப் காமிரா.(ஒரு நாளைக்கு 18 மணி நேரம் மட்டுமே டாக் டைம்).

1b) உள்ளூர், வெளியூர் கட்டணங்களூம் அவர்களுக்கு ப்ரீ. (என்ன சந்தோஷம் தானே பிரியா?)

2) பத்து பைசாவில் பஞ்சாப்புக்கு கால் செய்யலாம்! அதாவது பஞ்சாபில் உள்ள மக்களுக்கு கால் செய்யலாம்!னு சொல்ல வந்தேன். (எவன்டா அவன்! என் தங்கமணிட்ட போட்டு கொடுக்கறது?)

3) பிளாக் எழுதும் இளம் பேச்சுலர்களுக்கு ஆபிஸில் ஸ்பெஷல் பெர்மிஷன், ஒரு நாளைக்கு 4 மணி நேரம் மட்டும் வேலை செய்தால் போதும்.(அந்த நேரத்திலும் கமண்ட் போட்டுண்டு இருக்க கூடாது)

எப்படியோ நல்லது நடந்தா சரி! :)

4) இனி ஒவ்வோர் ஊரிலும் எத்தனை கல்லூரிகள், எத்தனை பிகர்கள் என்ற தகவல் சுரங்கம் டச் ஸ்கீரினில் அந்த கல்லூரி வாசலிலேயே நிறுவப்படும். நாட்டமை சில வருஷங்களுக்கு முன் மிகவும் கஷ்ட்டப்பட்டதாக கேள்வி, அதான் இந்த ஏற்பாடு!


5) மொக்கை போஸ்ட் போடுபவர்களுக்கு ஊக்க தொகை வழங்கப்படும். அதை வருடம் தோறும் நடக்கும் மொக்கைகள் முன்னேற்ற கழகத்தின் தற்போதைய தலைவியாம் நமது ஜி3 அக்கா வழங்குவார்கள். கீதா மேடம் தான் அந்த கட்சியின் நிறுவனர் எனபதை நீங்கள் அறிவீர்கள்.

இதை எல்லாம் வரவேற்காமல் வெளி நடப்பு செய்ய நினைக்கும் எதிர்கட்சிகளுக்கு நான் ஒன்று சொல்ல ஆசைப்படுகிறேன்.

எங்கள் வாரிய தலைவர்கள் வசம் சகாய வாடகைக்கு ஆட்டோக்கள், சுமோக்கள், லாரிகள் எல்லாம் ஜாமான் செட்டுக்களுடன் தயாராக உள்ளன. ரெண்டு முட்டை பிரியாணி மட்டும் தான் எங்களுக்கு செலவு, ஆகவே ஒழுங்கா மரியாதையா நாடாளு மன்றத்தில் அவரவர் இருக்கையில் அமரவும்.

Thursday, March 01, 2007

அந்ந்ந்த கலர்!

ஜிலேபி தேசத்திலிருந்து திருனெல்வேலி வரை பஸ்ஸில் பயணம் செய்து ஒரு வழியாக கல்லிடைக்கு பஸ் பிடிக்க பாபநாசம் செல்லும் பேருந்தில் ஏறி சன்னலோர இருக்கையில் அமர்ந்தவுடன், "என்ன லே புறத்தாலயே நிக்க! முன்னால வாலே!னு கண்டக்டர் நெல்லைத் தமிழிலில் கொஞ்சியதை கேட்டவுடன் பாரதியின் காதில் பாய்ந்த தேன் என் காதிலும் பாய்ந்தது!

ஹப்பா! எவ்ளோ நாளாச்சு இத எல்லாம் கேட்டு!

எல்லா வயல்களிலும் அறுவடைக்கு அனேகமாக இன்னும் ஒரு வாரம் இருக்கும். மண நாளை எதிர்பார்த்து காத்திருக்கும் நிச்சயக்கப்பட்ட பெண் போல (ஹிஹி, என் தங்கமணியைப் போல!னும் வாசிக்கலாம்) நெற்கதிர்கள் மேற்க்குத்தொடர்ச்சி மலையின் காற்றில் தலை சாய்த்து நிற்கும் காட்சியை நேரில் பார்த்தால் தான் அழகு! என்பதால் போட்டோ பிடிக்க வில்லை.

(ஹிஹி, காமிரா கொண்டு போக மறந்துவிட்டேன்! என்ற மேட்டரை பின்ன எப்படி சமாளிக்கறதாம்? தங்கமணியிடம் செம ஆப்பு! :(

ஊருக்கு போனவுடன் சுகமாக தாமிரபரணியில் 2 மணி நேர குளியல், சுடச்சுட அடை!னு மெனு களை கட்டியது.



மறு நாள் அதிகாலையிலேயே நெல்லை ஆரேம்கேவிக்கு பயணம். கடையவே நாம தான் தொறந்தோம்.

அடடா! எத்தனை புடவைகள்! எத்தனை கலர்கள்!

இந்த பாவப்பட்ட ஆண்களுக்கு திரும்ப திரும்ப ஒரு சில பொதுவான நிறங்களில் தான் சட்டையும் சரி, பேண்டும் சரி அமையும். ஆனால் மீனா ஆண்டி சொல்லியபடி லேடிஸ்க்கு தான் எத்தனை சிங்குசா கலர்கள்!

மாம்பழ கலர்ல அரக்கு பார்டர்!


எம்.ஸ் ப்ளு, நேவி ப்ளு, ஸ்கை ப்ளு, டார்க் ப்ளு, காப்பர் சல்பேட் ப்ளு


கேவா கலர் (தெரியுமா?), பால் கோவா கலர், நவாப்பழ கலர்,


வெங்காய கலர் (அதுல பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம் வேற)

பாட்டில் க்ரீன், ஆலிவ் க்ரீன், கிளிப்பச்சை,


பர்கண்டி(ஜருகண்டி இல்லை),


மெரூன் ரெட், பிளட் ரெட், அஜித் ரெட்,


வெளிர்மஞ்சள், பச்சமஞ்சள், பொன்னிறம்(ஹிஹி, ஐஸ் குட்டி நிறம்!னு நான் கேட்டேன்),


லைட் பிரவுன், டார்க் பிரவுன், காப்பி பிரவுன்,


யானை கலர், கழுதை கலர்(கஷ்ட காலம்),


சிமெண்ட் கலர், செங்கற்பொடி கலர்,

அடங்கப்பா சாமி! என்ன, படிக்கற உங்களுக்கே கண்ண கட்டுதா?
கடைகாரனுக்கு எப்படி இருக்கும்?

100 வருஷமா கடை நடத்தறாங்க, அதுனால நாங்க கேட்ட கலர், பிடிச்ச டிஸைன் எல்லாம் ஜஸ்ட் ஒரு 3 மணி நேரத்துல கிடைத்து விட்டது.

"பார்த்தது போதும்! சட்டுபுட்டுனு ஒன்ன செலக்ட் பண்ணு!"னு அவசரப்படுத்தும் ரங்கமணிகளை பாண்டி பஜாருக்கு டிக்கட் எடுத்து குடுத்து நாயுடு ஹாலுக்கு அனுப்பி விடுவது சாலச் சிறந்தது!

அங்கே தான் எடுத்து போட்ட நாலுல, ஒன்ன செலக்ட் பண்ணிண்டு வந்துண்டே இருக்கலாம். (இப்ப அதுலயும் டிசைன் எல்லாம் வந்துடுத்தாம்! )

பாரம்பரிய பட்டு தவிர, இப்ப ஸ்டோன் வர்க்(stone work), திரட் வர்க்(thread work) வெச்சு எல்லாம் வந்துருக்கு. இது போதாது!னு பனாரஸ் பட்டு, பாந்தினி சில்க்ஸ், போச்சம்பள்ளி சாரீஸ் வேற அட்டகாசமா இருக்கு!


- எதிர்கால தங்கமணிகள் கவனிக்கவும். வருங்கால, நிகழ்கால ரங்கமணிகள் கோ-ஆப்டெக்ஸ் துண்டு(அதுவும் 10% தள்ளுபடியில்) வாங்கி கொள்ளவும், வேற எதுக்கு தலைல போட்டுக்க தான்!

நான் எதிர்பார்த்தபடியே எங்களுக்கு பக்கதுல ஒரே கசமுசா!

"ஈ கலரு எனக்கு மேட்ச்சாயிட்டு இருக்கும்! நோக்கிக்கோ" - சூர்யா டிவி டாப் டக்கராயிட்டு ஓடிக்கொண்டிருந்தது.



ஆயிரம் ஏஞ்சலினா வந்தாலும் ஒரு கேரளாவுக்கு ஈடு இணை ஆகுமா?



ஓ! ஆ கலரு நிங்களுக்கு ஒன்னாம் கிளாஸாயிட்டு(first classaa) இருக்கும்! இது சத்யமாக்கும்!னு சொல்லி நெஜாமாலுமே அவங்களுக்கு மேட்ச்சான கலரில் ஒன்னை சுட்டி காட்டி சம்மன் இல்லாம ஆஜர் ஆக வேண்டி இருந்தது,



ஏனெனில் ஆப்பெண்குட்டி கையில் யான் தேடிக் கொண்டிருந்த கலர்ல எம்ராய்டரி பண்ணிய பட்டு புடவையாக்கும்!

ஹிஹி, எல்லா கலருமே அவங்களுக்கு மேட்ச் தான்! (சொக்கா! எனகில்லை! எனக்கில்லை!)

பாலக்காட்டு குட்டிக்கு பரம சந்தோஷம்! (ஆமா! அருண் & KK, அவங்களுக்கு பாலக்காடு தான் ஓரிஜினாம், மத்தபடி ஊரு மட்டும் தான் விசாரிச்சேன்.)

(இது தங்கமணிக்கு- என்ன நம்புங்க எஜமான்!)

கூட வந்த அச்சன் சுதாரிக்குமுன், நைசா அந்த புடவைக்கு பில்லை போட்டு விட்டேன். ஒரு வழியா எல்லா ஷாப்பிங்கும் முடிஞ்சு உங்களுக்கு அல்வா எல்லாம் வாங்கிண்டு இதோ மறுபடி ஆணி பிடுங்க வந்தாச்சு!

நான் சாப்டா நீங்க சாப்ட மாதிரி தானே!னு இந்த தடவையும் நான் அல்வா குடுக்க முடியலை. ஏனெனில் பக்கத்து வீட்டு டுபுக்கு டிசிப்பிள் கொத்தா சட்டைய பிடிச்சு அவங்க பங்கை எடுத்துண்டு தான் எனக்கே குடுத்தாங்க.



அல்வாவை முழுங்கிட்டு அப்டியே போகத லே! நச்சுனு நாலு கமண்ட் போட்டுட்டு போல!


பி.கு: மார்ச் மாத வெளியீடு "பார்த்த முதல் நாளே!" விரைவில் உங்கள் அபிமான பிரவுஸர்களில் உலகமெங்கும்!

Thursday, February 22, 2007

டாட்டா! பை! பை!



கடந்த டிசம்பரிலிருந்து ஓய்வில்லாமல் சோறு தண்ணி (காவிரி தண்ணீர் தான்) கூட சரியாக இல்லாமல் ஆணி பிடுங்கியதில் மிகவும் சோர்வாக உள்ளதால், "சரி! தாமிரபரணி பாயும் நம்ம ஊர் பக்கம் ஒரு ஐந்து நாள் போய் ஓய்வெடுக்கலாம்!னு முடிவு பண்ணி இதோ கிளம்பியாச்சு.

போன தடவை அம்மாவுக்கு தீபாவளி புடவை எடுத்ததில் மதுரையில் இனிமே எந்த கடையிலும் இந்த அம்பிய உள்ள விடக்கூடாது!னு முடிவு பண்ணிடாங்களாம். அதனால் இந்த தடவை திருனேல்வேலி ஆரெம்கேவியல தான் நம்ம கச்சேரி இருக்கு.

ஆமா! தங்கமணிக்கு புடவை எடுக்கனும். ராசு குட்டி மாதிரி நம்ம மனசுல ஒரு டிசைன், கலர்(அதாவது புடவை கலருங்க) எல்லாம் இருக்கு. அதே கலர் அங்கே இருக்கனும். ஜோதிகா அக்கா கூட இந்த கலர்! இந்த கலர்!னு அடிக்கடி டிவி பொட்டியில வராங்க.

ஐம்பதாயிரம் கலர்ல புடவைகள் இருக்கு!னு சொல்றாங்க. நாம நினைக்கறது ஐம்பதாயிரத்து ஒன்னாவது கலரா இருந்தா என்ன பண்றது? அது மட்டுமல்ல, எப்பவுமே நாம செலக்ட் பண்ற புடவைய விட பக்கத்துல இருக்கற பிகர் செலக்ட் பண்ணி கைல வச்சுருக்கற புடவை மேல தான் கண்ணா இருக்கும். எப்படா அந்த பிகர் அத கீழே போடுவாங்க? நாம லபக்குனு கொத்தலாம்?னு நப்பாசையா இருக்கும்.

இன்னும் சிலர், இந்த பேட்ஸ்மேனுக்கு பின்னாடி இருக்கற விக்கட் கீப்பர் மாதிரி, "அய்யே! உங்களுக்கு இந்த கலர் மேட்சே ஆகாது! நல்லா நெய்யில செஞ்ச அல்வா துண்டு மாதிரி இருக்கீங்க! இந்த கலர் டிரை பண்ணுங்க!"னு சொல்லி நைசா ஒரு சிங்குசா கலர் புடவைய தலைல கட்டிருவாங்க.

அந்த டகால்டி வேலை எல்லாம் பண்ண வேண்டி இருக்கும்!னு நினைக்கிறேன். பார்ப்போம்!

வார கடைசியில் போவதால் நம்ம மக்களுடன் தாமிரபரணியில் ஜலக்ரீடை, அருவியில் ஆட்டம்! எல்லாம் நடத்திடலாம்னு பிளான். போட்டோ எல்லாம் புடிச்சுண்டு வரேன்.

ஆக, கல்லிடையில் ஐந்து நாட்களுக்கு யானைகள் முகாம் நடக்க போகுது!னு இப்பவே உடன்பிறப்பின் நக்கல் ஆரம்பித்து விட்டது.

கல்லிடைக்கு போனாலும் போன் சிக்னல் எல்லாம் நல்லா கிடைக்கனும். ம்ஹூம்! என் கவலை எனக்கு!

ஒரு ஐந்து நாட்களுக்கு உங்க கடை கண்ணி(கன்னி இல்ல) பக்கம் வர முடியாது.

கீதா மேடம்! போய்ட்டு வந்து நீங்க போட்ருக்கற பதிவுகளை(பாருங்க எல்லாரும் மொக்கைகளை!னு வாசிக்கறாங்க) எல்லாம் படிச்சுக்கறேன்.

ஆளுக்கு அஞ்சு கமண்ட் போட்டு வைங்க, அப்ப தான் அல்வா குடுப்பேன், அட நிஜமான ஒரிஜினல் நயம் திருனெல்வேலி அல்வாவை சொன்னேன் பா!

இது நம்ம 75வது போஸ்ட். உருப்படியா ஏதாவது எழுதனும்!னு தான் நினைச்சேன். பாருங்க மொக்கையாயிடிச்சு. இத தான் பெரியவங்க அன்னிக்கே சொல்லி வெச்சுருகாங்க
"பனை மரத்துக்கு அடியில உக்காந்து பால குடிச்சாலும்,
பாக்கறவன் பகார்டி!னு நினைச்சு பங்கு கேட்பானாம்!"

எல்லாருக்கும் பிர்லா! பை! பை! (எப்பவும் டாட்டா தானே சொல்றோம்! சும்மா ஒரு சேஞ்சுக்கு இருக்கட்டுமே!).... :)

Monday, February 19, 2007

நான் வளர்கிறேனே மம்மி!

பிப்ரவரி 18 2006, விளையாட்டு போக்குல நாம பிளாக் ஆரம்பிச்சு ஒரு வருடம் (with 74 posts) ஓடி விட்டது. ஒரு வருஷத்தில் தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு தான் எத்தனை பயனுள்ள பதிவுகள்! அப்படினு நான் பில்டப் குடுத்தா என் வீட்டுக்கு ஆட்டோ இல்ல, சுமோ இல்ல, ஜாமான் செட்டோட லாரியே வரும்! அனுப்பறத்துக்கு பாசக்கார பயலுங்க அமெரிக்காவுல கூட நிறைய பேரு இருக்காங்க!னு எனக்கு நல்லா தெரியும்.

இந்த ஒரு வருடத்தில் என்ன எழுதி கிழித்தாய்? என்று கேட்கும் எதிர் கட்சியினருக்கு (யாருப்பா அது?) நான் ஒன்று சொல்ல ஆசைப்படுகிறேன்!

"அரைச்சா தான் மாவு!
அடிச்சா தான் தக்காளி!"

(ஆமா! தமிழ்ல எதுகை மோனையோட பேச தெரிஞ்சா இங்கே தலைவர்கள் ஆயிடலாமே, கட்சிக்கும் கொள்கைக்கும் சம்பந்தமா தான் பேசனுமா என்ன?)

ஆரம்ப காலங்களில், கீதா மேடமிடம், எனது அருமை சகோதரி, சியாட்டல் சிங்கம், அவரது ரங்கமணியின் சிம்ம சொப்பனம், கழக கட்டிங்க் பிளயர்! (போர்வாள் தான் இருக்கனுமா என்ன?) 'பாயிண்டர்ஸ்' புகழ் பொற்கேடி ஸாரி, பொற்கொடியும், நானும் டியூஷன் எடுத்துக் கொண்டு மொக்கை பதிவுகள் போட கற்று கொண்டோம். ஆனாலும் மேடத்தை மிஞ்ச முடியலை! முடியவும் முடியாது! என்று மனபூர்வமாக ஒத்துக் கொள்வதில் நான் ஆனந்தம் அடைகிறேன்! :)

நான் நினைத்திருந்தால் இந்த ஒரு வருடத்தில் நூறு மொக்கை பதிவுகள் போட்டு சங்க நாதம் செய்திருக்கலாம். இதை தானா இந்த பிளாக்கர் உலகம் விரும்புகிறது?


பிளாக் எழுதறதுக்கு தான் எனக்கு ஆபிஸ்ல சம்பளம் தரா!னு நான் ரொம்ப நாளா நினைச்சுண்டு இருந்தேன். இல்லைடா அம்பி! ஆணி பிடுங்கவும் தான் சம்பளம்(யாருப்பா அது தண்டச் சம்பளம்!னு வாசிக்கறது?)னு கொஞ்ச நாள் கழிச்சு தான் தெரிய வந்தது.


எனக்கு கடை இருக்கறது எங்க மேனேஜருக்கே தெரியும். "ராஜா! கண்ணு! என் செல்லம் இல்ல! இங்க்லீஸ்ல எழுதுப்பா!"னு சொல்லி பாத்தாங்க. அஸ்கு புஸ்கு! எழுதறதே உங்கள பத்தி தானே!னு நான் உண்மைய சொல்ல முடியுமா என்ன?

இந்தா! அந்தா!னு ஒரு வழியா ஆபிஸ்ல பிராடக்ட்டை ரீலீஸ் பண்ணியாச்சு!
இனிமே கிளயண்ட் காறி துப்பற வரைக்கும் கவலையில்லை.

பெங்களூருக்கு என்னை பார்க்க வரும் போது மறக்காமல் எனக்கு பிடிச்ச பால் திரட்டிப்பால் வாங்கி வந்த கீதா மேடம், சாம்பு மாமா, கண்ணை இமை காப்பது போல என் தங்கமணியை காத்து வரும் எஸ்கேஎம் அக்கா, என்னை தன் மகனை போல அன்பு காட்டிவரும் திராச(TRC) சார் - உமா மேடம், தவறாது மெயில் பண்ணும் பக்கா திருடன்(தமிழன்) கோபி, சென்னை மாமி, சென்னையில் நடந்த மாபெரும்(?) பிளாக்கர் மாநாட்டில் கலந்து கொண்ட 'திருப்பாவை' புகழ் வேதா(ள்), சியாட்டல் போய் பாயின்டர்ஸ் படிப்பதில் மட்டுமே ரொம்ப பிஸியாக இருந்தாலும்(?) தவறாது எனக்கு மெயில் பண்ணும் பொற்கொடி, தினமும் எனக்கு மெயிலில் கொடுமை அளிக்கும் லண்டன் உஷா, சமயல் குறிப்பு சொல்லும் விஜி, ஜிமெயிலில் மிரட்டும் சுபா, என்னை (பரமார்த்த)குருவாக ஏற்றுக் கொண்டு ஒரு ஷிஷ்ய பரம்பரையை உருவாக்கி வரும் ஆஸ்திரேலியா கோப்ஸ், விரைவில் ஹைதராபாத் மறுமகளாக போகும் 'கண்ணாளனே' புகழ் ப்ரியாலு, நானூறு அடித்த(பதிவுகளை சொன்னேன்பா!) கார்த்தி, தினமும் குட்மார்னிங்க் மெயில் அனுப்பும் சகோதரி தீக்ஷன்யா, எனதருமை நண்பன் அர்ஜுனா, தவறாது வரும் மருதம், பொன்னரசி, எண்ணெய் கத்த்ரிக்காய் புகழ் அருண், தீடிரேன கவிதை எழுதும் ஜி3 அக்கா, அமெரிக்காவிலிருந்து அன்போடு என்னை பார்க்க வந்த கன்யா, குழந்தை வளர்ப்பில் குதித்திருக்கும் ஷ்ரியக்கா, சோடி போட்டு பாடிக் கலக்கும் கிட்டு மாமா & மாமி, நாட்டமை' ஷ்யாம், பெங்க்ளூரில் என்னை சந்தித்து உரையாடிய கில்ஸ்...

ஸ்ஸ்ப்பா! மூச்சு வாங்குது பா! ஜோடா ஒடைச்சு தாங்க பா!

(க்ளக்! பிளக்! க்ளக்! பிளக்! க்ளக்! பிளக்!)

என்னை வெச்சு காமெடி பண்ணும் ரவி, ஆபிஸில் கோல்மால் மட்டுமே பண்ணும் கோபாலு, அதி காலை மூனு மணிக்கு, இரவு 12 மணிக்கெல்லாம் என் பிளாக்கை படிக்கும் மை பிரண்ட், மனோஜ், கவிதை எழுதி கலக்கும் டீரிம்ஸ், அமெரிக்காவில் இருந்து என்னை அன்போடு நலம் விசாரிக்கும் ராமச்சந்திரன்,

"அர்ஜுனருக்கு ஒரு கண்ண பரமாத்மா! " போல என்னை வழி நடத்தும் அருமை அண்ணன் டுபுக்கு, எவ்வளவு அடிச்சாலும் தாங்கும், தனக்கென்று ஒரு பாணியில் எழுதும் கைப்புள்ள அங்கிள், பக்கத்து போர்ஷனில் என்னை குடி வைத்து சொந்த செலவில் சூனியம் வைத்து கொண்ட டுபுக்கு டிசைப்பிள், தீபிகா புகழ் பாடும் பரணி, பிசியா இருக்கும் பாலமுருகன், குட்டி(சுவரு), ஆண்களுக்கு பெல்ட் ஐடியா அளிக்கும் சுமதி, என் திருமணத்துக்கு அமெரிக்காவிலிருந்து வருகை புரிந்து ஆயிரம் டாலர்(முருகன் டாலர், ஐயப்பன் டாலர் இல்ல) மொய் எழுத துடிக்கும் ஹேமாக்கா மற்றூம் சுசிக்கா, என பிளாக் மூலம் கிடைத்த நல்ல உள்ளங்களின் லிஸ்ட் நீண்டு கொண்டே போகிறது. யார் பெயராவது விட்டு போயிருந்தால் குழந்தையை மன்னிக்கவும்.
என்னை உங்கள் வீட்டு குழந்தையாக, சரி பிள்ளையாக, அன்பு காட்டிய அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் நன்றி ஹை!னு சொன்னால் அது ரொம்ப சின்னதாக இருக்குமே?....

Friday, February 16, 2007

ஓம் நம சிவாய!


அன்னைக்கு நவராத்திரி என்றால், அய்யனுக்கு இன்று சிவராத்திரி! மாசி மாதம் தேய்பிறை சதுர்தசியில் வருவது தான் சிவராத்திரி.
******************************************************************************
உலகாளும் மன்னனுக்கு உறக்கம் வரவில்லை. எப்படி வரும்? விடிந்தால் அவன் பார்த்து பார்த்து கட்டிய சிவ ஆலய குடமுழுக்கு ஆயிற்றே! எல்லா ஏற்பாடும் தயார் நிலையில். வீதியேங்கும் வண்ண கோலங்கள் என்ன, வான வேடிக்கைகள் என்ன! வேத மந்திரங்களின் கணீர் ஓசை என்ன! சத்திரங்களில் 18 வகை பதார்த்தங்களுடன் வந்தவருக்கு எல்லாம் உணவேன்ன! என்று நாடே திமிலோகப்பட்டது.

"மன்னா! இதை மாதிரி ஒரு ஆலயம் இந்த உலகில் இதுவரை எவரும் கட்டியதில்லை, இனி கட்டப்போவதும் இல்லை!" என்று தலமை சிற்பி இறுமாப்புடன் சொன்ன சொற்கள் மன்னனின் காதில் தேனாய் பாய்ந்ததில் வியப்பேன்ன? நடு ஜாமம் மூன்றாம் நாழிகையிலும் மன்னன் உறங்காமல் புரண்டு படுத்தான்.

எல்லாம் முகஸ்துதி படுத்திய பாடு!

"விடிந்தால் என் லக்ஷியம் நிறைவேறி விடும். உலகை ஆளும் ஈசனுக்கு நான் ஆலயம் எடுத்து விட்டேன்! என வரலாறு இதை பதிவு செய்து விடும்". மெதுவாக கர்வம் அங்கே தலைதூக்கியது.

களைப்பு மிகுதியால் மன்னவனும் கண்யர்ந்தான்.

கனவில் தோன்றினான் பசுபதி நாதன்.






பாராளும் மன்னனே! நாளை நீ எமக்கு அமைத்த ஆலயத்தில் யாம் குடி பெயற இயலாது. அன்பன் ஒருவன் இதே நாளில் கோலாகலமாக குடமுழுக்கு ஏற்பாடு செய்துள்ளான். வேறு முஹூர்த்தம் பார்த்து கொள்! முடிந்தால் நீயும் அந்த விழாவில் கலந்து கொள்!

உறக்கம் கலைந்து துள்ளி எழுந்தான். குழப்பத்தில் ஆழ்ந்தான்.

யாரங்கே! கூட்டடா மந்திரி சபையை!
நாலாம் ஜாமம் முடிவில் அவசர கூட்டமா? என்ன நேர்ந்தது?

ஆனாலும் கூப்பிட்டது மன்னன், தலைபணிந்தது அரசவை.

"என் நாட்டில் இன்னொரு குடமுழுக்கா? யாரது? எங்கே? எப்படி எனக்கு தெரியாமல்? ஒற்றர் படை உறங்கி விட்டதா? விரைவோம் ஈசன் சொன்ன அனபரது இருப்பிடத்துக்கு!" - அதிகாரம் சாட்டையை சொடுக்கியது.

சாதாரண குடில். குடமுழுக்குக்கான அறிகுறி எதுவும் இல்லை.

யாரது வீட்டில்?

என்ன விஷயம்? பாராளும் மன்னன் பரதேசி என் வீட்டு வாயிலில்...?

கனவின் விவரம் அறிவிக்கப்பட்டது. கையது பொத்தி, கண்ணீர் மலகி மெய்யொழுக வாய் திறந்தார் அன்பர்.
மன்ன! நீங்கள் கட்டிய ஆலயம் பார்த்து அன்பனும் ஆசை கொண்டேன்.

"உள்ளம் பெருங்கோவில்!
ஊண் உடம்பு ஆலயம்!
கண்ணிரன்டும் தூங்கா மணி விளக்கு!" எனவும்


நெஞ்சகமே கோவில்!
நினைவே சுகந்தம்!
அன்பே மஞ்சன நீர்!
பூஜை கொள்ள வாராய் பராபரமே! என்று உருகி அழைத்தேன். அதற்க்கு தானோ என்னவோ நம் ஈசன் தலை சாய்த்து இருக்கிறான்.


"நட்ட கல்லை தெய்வம் என்று
நாலு புஷ்பம் சாத்தியே
சுற்றி வந்து முனுமுனுவென்று
சொல்லும் மந்திரம் ஏதடா?

நட்ட கல்லும் பேசுமோ நாதன்
உள்ளிருகாயில்?
சுட்ட சட்டி சட்டுவம்
கறிச்சுவை தான் அறியுமோ?"

- சிவ வாக்கியர் (சித்தர் பாடல்கள்)


அன்பரது தாள் பணிந்து வணங்கியது அதிகாரம்.



படோப பூஜைகள், அபிஷேகங்கள், தூப தீப வழிபாடுகள் என மனம் லயிக்காமல் ஸ்வாமி கும்மிடுவதை விட மனமுருகி நாலு வில்வம் சாத்தினால் நாதன் செவி சாய்க்காமலும் இருப்பானோ?


இந்த சிவ ராத்திரி நன்னாளில் " நெட் கனெக்க்ஷன் வரலை! பிளாக்கர் பப்ளிஷ் ஆகலை! போட்ட போஸ்ட்டுக்கு கமண்ட் வரலை! போன்ற முக்கியமான உலக கவலைகளை சிறிது தள்ளி வைத்து சூடான பில்டர் காப்பியையும் மறந்து ஈசன் நினைவும் கொள்வோமே! :)
பி.கு: இந்த பதிவை படித்து விட்டு "எலேய் அம்பி! மெய்யாலுமே நீ தானா இப்படி போஸ்ட் போட்டது? உன் லிங்க் தானா?னு செக் பண்ணினேன்!" அப்படினு என்னை வெச்சு காமடி, கீமடி எதுவும் பண்ண படாது. இப்பவே சொல்லிட்டேன் ஆமா!
எனக்கும் அப்பப்ப கொஞ்சம் நல்ல புத்தி வரும்.
ஓம் நம சிவாய!ஓம் நம சிவாய! ஓம் நம சிவாய! ஓம் நம சிவாய!

Friday, February 09, 2007

நடந்தாய் வாழி காவேரி!



மண், பெண், பொன் இவை மூன்றுக்கும் சண்டையிட்ட மனித இனம் தண்ணீருக்கும் சண்டையிட தவறியதில்லை. (ஷ்யாம், தண்ணினா நிஜமான தண்ணி, பகார்டியோ, பேக்பைபரோ இல்லை)

17 வருஷமா 600 முறை கூடி பேசி சும்மா ஜவ்வா இழுத்து காவேரி நதி விஷயத்துல ஒரு தீர்ப்பை சொல்லிட்டாங்க. வழக்கம் போல ஜிலேபி தேசம் " நாட்டாமை!(ஷ்யாம் இல்லை) தீர்ப்பை மாத்தி சொல்லு!"னு கத்திடாங்க. தமிழக பஸ்கள் வர/போக முடியலை, ரோடு எல்லாம் மறியல், அம்மா டிவி, (கிராண்ட்)சன் டிவி எல்லாம் கட். பந்த் வேற நடக்க போகுது. ஒரே கும்மமேளா தான்!

இந்த தடவை பாதுகாப்பு ஏற்பாடுகளை கொஞ்சம் நன்னா பண்ணிருந்ததால அதிகம் சேதம் இல்லை, (இதுவரைக்கும்).

"அம்பி! இந்த தடவை உன்னை தான் நாலு சாத்து சாத்துவா! எங்களை அடிக்க மாட்டா! - இது எங்க ஆபிஸ்ல இருக்கற ஒரு ரசகுல்லாவின் அல்ப சந்தோஷம்.

இந்த தடவை உஷாரா பிரட், பிஸ்கட் எல்லாம் முன்னாடியே வாங்கி வெச்சுட்டேன். இல்லைனா ஹிஹி,இருக்கவே இருக்காங்க நம்ப டுபுக்கு டிசிப்பிள்.

சரி, மேட்டருக்கு வருவோம்.

1) இப்ப நாஸிக்குல நோட்டு அடிக்கறாங்க, அதுக்காக எங்களுக்கு போக தான் மீதிய இந்தியாவுக்கு அனுப்புவோம்!னு அந்த ஊர்காரங்க சொன்னா எப்படி இருக்கும்?

2) நம்ப நெய்வேலில கரிய தோண்டி அனல் நிலையம் மூலமா மின்சாரம் தயாரிச்சு அனுப்பறாங்க. எங்களுக்கு தான் எல்லாம்!னா சொல்றோம்?

என்ன இது சிறு பில்லத்தனமா இல்ல இருக்கு..?

இது போதாது!னு நம்மூர்ல இருக்கற கழக கண்மனிகள்
"கன்னடம் வென்றாய்!
காவேரி தந்தாய்!
கழகம் காத்தாய்!
கத்ரிக்காய் பொரித்தாய்!"னு போஸ்டர் அடிச்சா இங்க எங்களுக்கு ரிவிட்டு அடிப்பாங்க.அதனால கொஞ்சம் அடக்கி வாசிங்கண்ணா!

இயற்கையின் மீது உரிமை கொண்டாட வேண்டாம். பதிலுக்கு இயற்கையும் நம் மீது உரிமை கொண்டாட ஆரம்பித்து விட்டால்
"பினாமி வைத்திருப்பவன் கூட
சுனாமியில் போய் சேர வேண்டியது தான்! அப்புறம்
அனானி கமண்ட் கூட கிடைக்காது!"

நைல் நதி, கங்கைகரை, தாமிரபரணி(எங்க ஊர விட்டு குடுக்க மாட்டோம் இல்ல) என நதிக்கரைகளில் தான் மனித நாகரீகம் தழைத்து வளர்ந்தது. அந்த நதியை வைத்தே இன்று மனிதன் மாக்களாய் மாறி சண்டையிடுவதை நினைத்தால் நாம் வெட்கப்படனும், வேதனைப்படனும். ஆனா பாருங்க நிறைய பேரு ஹையா! பந்த்! ஒரு நாள் லீவு! ஜாலி!னு குதிக்கறாங்க.

இந்த தீர்ப்பு வரதுக்கே 17 வருஷம் ஆயி போச்சு! இதுக்கு தான் நம்ப சின்ன கவுண்டரை தீர்ப்பு சொல்ல சொல்லி இருந்தா பத்து நிமிஷத்துல தோளுல துண்ட மாத்தி போட்டு தீர்ப்பு சொல்லி இருப்பாரு! இத நான் இங்க சொன்னா நாலு சாத்து சாத்துவானுங்க! எதுக்கு வம்பு!
நல்லா தண்ணி காட்றாங்க பா!

பி.கு: காதலர் தின ஸ்பெஷல் - உலக பிரவுசர்களை கலக்க வருகிறது ஆதலால் பிளாக் எழுதுவீர் - II

Friday, February 02, 2007

பால் காய்ச்சியாச்சு!





பேச்சிலரா சிவனேனு இருந்த(இருக்கற) இந்த குழந்தைய வசமா மாட்டிவுட்டுடாங்க. இது வரைக்கும் சின்னதா ஒரு ரூம்ல இருந்த நான் இனிமே இருக்க முடியுமா? அதுனால, சரி! அழகா, சின்னதா, ஒரு வீடு (இது தங்கமணிக்கு - சின்ன வீடு இல்ல எஜமான்) பாத்துடலாம்!னு முடிவு பண்ணி இந்த ஜிலேபி தேசதுல சுத்தி சுத்தி வந்தேன்.

எல்லா பயலும் வீடு வாடகைக்கு பதிலா வீட்டோட விலையேவே சொல்றான். ஒரு வீட்ட பாக்க போன போது பாதி ரூம் கட்டி முடிக்காம இருக்கே! என்னயா மேட்டர்?னு கேட்டா உங்க கிட்ட அட்வான்ஸ் வாங்கி தான் மீதிய கட்டனும்! எப்படி வசதி?னு பல்ல காட்றான்.

அப்ப தான் கம்பருக்கு ஒரு சடையப்ப வள்ளல் மாதிரி நம்ப
டுபுக்குடிசிப்பிள் என் மேல இரக்கப்பட்டு பொங்கல் அன்னிக்கி சாப்பிட கூப்டாங்க. நமக்கு தான் சோறு கண்ட இடம் சொர்க்கம் ஆச்சே! நைட்டுக்கு பார்சலும் சேர்த்து தருவீங்களா?னு முன்னாடியே போன்ல விசாரிச்சுண்டு அவங்க வீட்டுக்கு போயி சும்மா கட்டு கட்டுனு கட்டிடேன்.

சூப்பரா சமச்சு இருந்தாங்க. (ஹிஹி, ரசத்துல தான் கொஞ்சம் காரம் கம்மி).
அப்ப தான் அவங்க பக்கத்து அபார்ட்மெண்ட் காலி!னு கேள்விப்பட்டு கப்புனு அமுக்கிட்டேன்.
விதி யாரை விட்டது? இனிமே தான் இருக்கு அவங்களுக்கு தலைவலியே!
நல்ல பவுர்ணமி அன்னிக்கி பாலும் காச்சியாச்சு!



அடுத்த போஸ்ட் "வீட்டுக்கு வெள்ளை அடிச்சாச்சு! கக்கூஸ் கழுவியாச்சு!னு எல்லாம் கண்டிப்பா போட மாட்டேன். பயப்படாதீங்க.

ஆகவே மக்களே! இப்ப சொல்லுங்க, பிளாக் எழுதினா உங்களுக்கு என்ன என்ன கிடைக்கும்..?

Next Post: ஆதலால் பிளாக் எழுதுவீர் - II Don't miss it. :)

Saturday, January 13, 2007

பொங்கலோ பொங்கல்!



போன போஸ்டுக்கு நான் தனி தனியா எல்லோருக்கும் பதில் போட முடியலை. ஆபிஸ்ல இன்னும் ஏகப்பட்ட ஆணி பிடுங்க வேண்டி இருக்கு. ஆதலால் மன்னிக்கவும். இதுக்கு நடுவுல போன் கால் வேற அட்டெண்ட் பண்ண வேண்டி இருக்கு, ஹிஹி. நானும் தெரிஞ்ச வரைக்கும் விசாரிச்சு பார்த்துட்டேன், ரிலயன்ஸ், டாட்டா இன்டிகாம், ஏர்டெல்னு எல்லா பயலுகளும் இன்கம்மிங்க் தான் ப்ரீ!னு சொல்றானுங்க. இந்த குழந்தை மேல இரக்கப்பட்டு அவுட்கோயிங்க் ப்ரீ!னு சொல்ல கூடாதா? ஏதோ இந்த ஸ்கைப்!னு ஒன்னு இருக்கறதால தப்பிச்சோம்.

ஆனா சும்மா சொல்ல கூடாது, பய புள்ளைங்க சுத்தி சுத்தி வந்து கும்மி அடிச்சுட்டு போயிருக்கீங்க. சைடு கேப்புல இந்த ஷ்யாம் பயல் "அம்பியின் தங்கமணி யாரு?" யாரு மனசுல யாரு?னு போட்டி வெச்சு 10$ ஆட்டய போட பாக்கறான். :)

சரி, எல்லோருக்கும் எங்கள் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
வழக்கம் போல குக்கரில் சக்கரை பொங்கல், சாலமன் பாப்பையா பட்டிமன்றம், பாவனா பேட்டி, 'குடும்ப குத்து விளக்கு' நமீதா கொண்டாடும் பொங்கல்! உலக தொலைகாட்சிகளில் முதன் முறையாக!னு டிவி முன்னாடி நிறைய நேரம் கழிக்க வேண்டாம்.

Tuesday, December 19, 2006

ஹேப்பி பர்த்டே டியர் ஆஞ்சேனேயா!




டிசம்பர் 20 - மார்கழி மாதம் - மூல நக்ஷத்திரம் வாயு குமாரன், அஞ்சனா மைந்தன், ஷ்ரிராம தூதன், அடக்கமே வடிவானவன், சொல்லின் செல்வன், கூப்பிட்ட குரலுக்கு மனோ வேகத்தில் ஓடி வருபவன், என் நெஞ்சில் என்றும் குடி கொண்டு இருக்கும் ஆஞ்சேனேய ஸ்வாமி அவதரித்த திரு நாள்.

இவரை பற்றி எழுத இந்த ஒரு பதிவு போதாது! தன்னடக்கம் என்றால் அது ஆஞ்சேனேயர் தான்!

அயோத்தி மா நகரம் திருவிழா கோலம் பூண்டு இருந்தது. ஆம்! 14 வருடங்கள் கழித்து அவர்கள் உள்ளம் கவர் ரகு வம்சத்தில் உதித்த ஷ்ரிராமன் மரவுரி களைந்து ராஜாராமனாக வெண் பட்டுடை அணிந்து, நெற்றியில் சூரிய திலகம் இட்டு, மார்பில் முத்து மாலைகள் அசைய, பரந்து விரிந்த தோளில் சிவப்பு நிற அங்கவஸ்தரம் புரள, ஒரு கையில் கோதண்ட வில்லும், மறு கையில் ஒர் அம்புமாக சீதா தேவி இடப்புறம் அமர சிம்மாசனத்தில் அமர்ந்து வசிஷ்டர் தலமையில் வேத மந்த்ரங்கள் முழங்க பஞ்ச வாத்தியங்கள் முழங்க, ரகுகுலத்தின் நவரத்ன கீரீடத்தை தன் திருமுடியில் சூட்டிக் கொள்ளும் திருநாள்.


ஒரு புறம் உருவிய வாளுடன் லக்ஷ்மணனும் சத்ருகனனும் மெய்காப்பாளர்களாக நிற்க, மறு புறம் கூப்பிய கைகளுடன் பரதன், விபீஷணன், சுக்ரீவன், அங்கதன், ஜாம்பவான் ஆகியோர் நிற்க, எல்லார் கண்ணும் தேடுகிறதே யாரை..? எங்கே ஷ்ரிராமனின் தாசன் அனுமான்..?

இதோ,ஷ்ரிராமனின் திருவடிகளில் கண்ணீர் மள்க கூப்பிய கரங்களுடன், மண்டியிட்டு "இந்த காண கிடைக்காத காட்சியை காண தானே பிரபு, இந்த அடியவன் காத்திருந்தேன்! என்று என் தலைவன் பவ்யமாக அமர்ந்து இருக்கிறான்.

சூரிய பகவானிடம் 4 வேதங்களையும் கற்க அவருடன் சரிசமமாக பயணம் செய்து குருகுலம் பயின்ற அந்த தீக்கொழுந்தா இவன்..?

விஸ்வரூபம் எடுத்து கடலை சர்வ சாதாரணமாக தாண்டிய அந்த உருவமா இது..?

ராவணன் முன்னால் கம்பீரமாக வாலினால் சிம்மாசனம் போட்டு அமர்ந்த அந்த அனுமனா?

இலங்கைக்கு தீ வைத்து விட்டு சற்றும் தளர்வடையாமல் பறந்து வந்து, "கண்டேன் கற்பின் கொழுந்தை!" என சொன்ன அந்த சொல்லின் செல்வனா இவன்..?

பட்டாபிஷேகம் முடிந்ததும், அவரவர்க்கு பரிசுகளை வாரி வழங்கிய ஷ்ரிராமனை பார்த்து சீதா தேவி, ஸ்வாமி! அனுமனை மறந்து விட்டீர்களே?என்று கேட்க, ராமனும் இல்லை ப்ரியே! அவனுக்கு குடுக்க என்னிடம் ஒன்றுமே இல்லையே! என்று தான் யோஜனை, இருந்தாலும் நமது கல்யாணத்தில் அணிந்த முத்து மாலையை அளிப்போம்! என்று அனுமனுக்கு அளிக்கிறார்.

அதோடு, சிரஞ்சீவி(எலேய் ஷ்யாம்! தெலுங்கு நடிகர் இல்லை) பட்டத்தையும் அளித்து, எங்கேல்லாம் ராம நாமம் சொல்லபடுகிறதோ அங்கெல்லாம் அனுமன் இருந்து அதை காது குளிர கேட்க்கும் வரத்தையும் அளிக்கிறார்.

இந்த பதிவையும் எனது தலைவன் அனுமன் கண்டிப்பாக படித்து பூரிப்பான்! ஹிஹி, கமெண்ட்டும் போடுவான். :)
அதனால் தான் ராமர் பட்டாபிஷேகத்தை பற்றி விரிவாக எழுதி உள்ளேன். ஹேப்பி பர்த்டே தல!

1) முதன் முதலாக Open heart surgery பண்ணி தனது நெஞ்சில் ராமரை காட்டியது எனது தங்க தலைவன் தான்!

2) முதன் முதலாக கூரியர் சர்வீஸை அறிமுகபடுத்தி ராமரின் கணையாழி, சீதையின் சூடாமணியை பத்ரமாக அவரவரிடம் சேர்த்தவன் என் தல தான்!



3) முதன் முதலாக பறக்கும் ஆம்புலன்ஸை(சஞ்சீவி மலை) அறிமுகப்படுத்தியது நீங்க தானே தல!

4) முதன் முதலாக பாஸ்போர்ட், விசா இல்லாமல் இமிக்ரேஷனில் மாட்டிக்காமல் பயணம் செய்தது என்னுடைய தல தான்!

5) அவர் பிரம்மசரிய விரததில் இருந்தாலும், தனது வாலில் பொட்டு வைக்கும் பெண்களுக்கு(பிகர்களுக்கு!னு வாசிக்கப்படாது ஷ்யாம்!) திருமணம் நடத்தி வைக்கிற அவரது பெருந்தண்மை தான் என்னே!

இந்த நாள் வரை அனுமனை வழிபடாமல் எந்த காரியமும் செய்த்ததில்லை, அவரும் என்னை கைவிட்டதில்லை. இதோ இந்த வருடம், அவரது அருள் எனக்கு பரிபூரணமாக கிடைத்து உள்ளது! சென்னையில் மழை பெஞ்சு இருக்கா?னு பார்க்க போன நான் சனிகிழமை நங்க நல்லூர் ஆஞ்சேனேயர் கோவிலுக்கும் சென்று பிரார்த்தனை நிறைவேற்றி வந்தேன்!

45 நாட்கள் சுந்தர காண்டம் படித்தால் நமது நியாயமான விருப்பங்கள் கண்டிப்பாக நிறைவேறும்! என்று என் அம்மா சொல்லி இருக்கிறார்கள். இந்த சுந்தர காண்டத்தின் சிறப்பை பற்றி தனியாக ஒரு பதிவு போடலாம்! என்று ஆசை. அனுமார் கருணையினால் நடக்கும் என்று நம்புகிறேன்.

எத்தகைய உயர்ந்த பதவியில் இருந்தாலும், லட்சம் கோடி சம்பாதித்தாலும், தன்னடக்கத்தையும் பவ்யத்தையும் அந்த அனுமன் நமக்கும் தரட்டும்! என்று வேண்டிக் கொள்கிறேன். ஜெய் ஷ்ரிராம்! ஜெய் ஆஞ்சேனேயா!


பி.கு:    விரைவில் வெளிவருகிறது "ஆதலால் பிளாக் எழுதுவீர்" உலகமெங்கும்!

Wednesday, December 13, 2006

நன்றி ஹை!



இந்த குழந்தையின் பிறந்த நாளை கரக்ட்டா நினைவில வெச்சுண்டு வாழ்த்தின அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் நன்றி ஹை!

வெறும்ன நன்றி சொன்னா நன்னாவா இருக்கும்? அதுனால எல்லாருக்கும் கேக்.


வழக்கமா அல்வா தான் குடுக்கனும்!னு கூகிளில் தேடினேன். இன்னும் கிண்டலையாம். அதுனால இத வெச்சு அட்ஜ்ஸ்ட் பண்ணிக்கோங்க.

எனக்கு நைட் 12 மணிக்கு கமேண்ட் போட்ட G3 அக்காவுக்கு ஸ்பெஷலா ஒரு கேக்.



கைப்புள்ள அங்கிள்! உங்களை மறப்பேனா? அதுனால உங்களுக்கு ஒன்னு!


இன்னும் ஆபிஸ்ல, வேலை எல்லாம் செய்ய சொல்றா! பிளாக் எழுதலைனா நமக்கு கையும் காலும் எதோ Beer கண்ட பெங்களுர் குடிமகன் போல என்னவோ பண்றது. சீக்ரமே திரும்பி வரேன்.

உங்கள் அபிமான பிரவுஸர்களில் விரைவில் எதிர்பாருங்கள்! "ஆதலால் பிளாக் எழுதுவீர்!"

Wednesday, November 29, 2006

அக்கடானு நாங்க பிளாக் படிச்சா....





ஆபிச்ல எக்கசக்க வேலை. 3 வாரத்துல Beta product ரிலீஸ்!னு குண்டை தூக்கி போட்டுட்டார் மேனேஜர்.


குழந்தை(me only) ஆடி போயி இருக்கு.

வெந்த புண்னுல வேல பாச்சற மாதிரி நான் இந்த பிளாக் படிக்கறதை எப்படியோ மோப்பம் புடிச்ச நெட்வொர்க் அட்மின், ஆப்பு அடிச்சுட்டான். இதுக்கேல்லாம் அஞ்சுவானா இந்த அம்பி?

ப்ராக்ஸி(proxy) போட்டு டகால்டி பண்ணி சமாளிச்சுண்டு இருக்கேன். பிளாக்கர் - பீட்டா வெர்ஷனுக்கு மாறின புண்ணியவான்கள் சைட்டில்(பிளாக் சைட்டை சொன்னேன்) கமெண்ட் போட முடியலை. தப்ப எடுத்துக்க வேண்டாம்.

இதுக்கு நடுவுல, திடீர்னு சென்னைக்கு வேற இந்த வார கடைசில போக வேண்டி இருக்கு. சென்னைல மழை எல்லாம் எப்படி பெஞ்சு இருக்கு?னு சும்மா பார்த்துட்டு வரலாம்!னு தான். வேற ஒன்னும் இல்லை. ஹிஹி.

வழக்கம் போல TRC சார் வீட்டுல தான் டேரா. இல்லைனா பாவம், அவர் வருத்தபடுவார் இல்ல? ஹிஹி.

நான் ஏதோ அவர் வீட்டுல போயி 3 வேலை மூக்கு முட்ட அமுக்க போறதா எதிர் கட்சிகள் அவதூறு பரப்பலாம்! அவர்களுக்கு இந்த தருணத்தில் நான் ஒன்று சொல்லி கொள்ள விரும்புகிறேன்!
"எங்கள் உறவை யாராலும் பிரிக்க முடியாது! ஆட்ட முடியாது! அசைக்க முடியாது! (TRC சார்! கவுத்திராதீங்க, இந்த தடவை பஜ்ஜி உண்டா?)

முடிந்த வரை உங்கள் பதிவுகளை நேரம் கிடைக்கும் போது படிக்கிறேன். நிலைமை கொஞ்சம் சரியாகட்டும், பீனிக்ஸ் பறவையாய் மீண்டும் வருவேன்.

Friday, November 17, 2006

குட் மார்னிங்க் மிஸ்ஸ்!






பக்கத்து கம்பெனியில் இருந்து வந்த இந்த மெயிலை பாத்துட்டு எங்க டீம்ல ஒரே அமளியாயிடுத்து. சே! நாமளும் Children's Day கொண்டாடி இருக்கலாம்!னு ஒரே ஆதங்கம்.




டீம்ல இருக்கற ஒரு வானரம் சொல்றது, நாம எல்லாம் ஸ்கூல் போற அளவுக்கு இன்னும் வளரல! அதனால கிண்டர் கார்டன் ரேஞ்சுக்கு தான் டிரஸ் பண்ண முடியும். 4.5 ஆரோக்யா பாலை பீடிங்க் பாட்டிலில் விட்டு இந்த அம்பி கையில குடுத்து நாமளும் ஒரு போட்டோ எடுத்து அந்த ஆபிஸ்க்கு பதில் மெயில் அனுப்பினா தான் என் மனசு ஆறும்!

அதுக்கு நான் சொன்னேன், அப்படி மட்டும் நடந்தா உலகம் அழிஞ்சிடும்!

என்னை ஓட்டறது!னா எங்க டீம்ல எல்லோருக்கும் செம குஷி. நாம மட்டும் என்ன ஒழுங்கா என்ன? சான்ஸ் கிடச்சா மேனஜேரையே ஓட்டிடுவோம் இல்ல? :)

சரி, இந்த வாரம் இவ்வளவு தான்! வர்ட்டா? :)

Saturday, November 11, 2006

ரெடி! ஷ்டார்ட்! ஒன்..டூ..த்ரி...!



கதை, கவிதை!னு பட்டய கிளப்பும் பவித்ரா சிஸ்டர் நம்மை எழுத சொன்ன பதிவு இது!

3 Smells I love:

என்ன தான் நாம் ஏலக்காய், கிராம்பு எல்லாம் போட்டு சர்க்கரை பொங்கல் செய்தாலும், அது கோவிலில் நைவேத்யம் ஆகி, சுட சுட நம் கையில் வரும் போது வித்யாசமாக ஒரு நறுமணம் வீசுமே! அந்த தெய்வீக நறுமணம்.

சிறு குழந்தைகளை குளிப்பாடி, அதன் மேல் ஜான்ஸன் பவுடர் எல்லாம் போட்டாலும், அந்த பவுடரை மீறி ஒரு வாசனை வருமே! அது சூப்பர்.

முல்லைப்பூ அல்லது பிச்சிப்பூ (இரண்டும் ஒன்று தானா?) வாசனை. அதுவும் இந்த பூச்சரங்கள் இருக்க வேண்டிய தலையில் இருந்தால், டாப்பு டக்கர். (ஹிஹி)



3 Smells I hate:

பீடி சிகரெட் வாடை. சே! குமட்டிக்கொண்டு வரும். இந்த கருமத்தை எப்படி தான் ஊதறாங்களோ?

பான் பராக் வாடை - இந்த ஜிலேபி தேசத்தில் எல்லார் வாயிலும் பான் பராக் தான். கொஞ்சம் கூட இங்கிதம் இல்லாமல் கண்ட இடத்தில் புளிச்!னு துப்பும் அந்த ஜந்துக்களை பார்க்கும் போது நான் மெய்யாலுமே சில வினாடிகளுக்கு அன்னியனாக மாறி விடுகிறேன்.

கொய்யா/பலாப்பழ வாசனை - அது என்னவோ சின்ன வயசுல இருந்தே இந்த ரெண்டு பழங்களோட வாசனைனா அலர்ஜி.

3 Jobs that I have had in my life:

முதலில் ஒரு வருடம் பார்த்த லெக்சரர் வேலை. மிகவும் போர் அடிக்கும் சப்ஜக்ட்ஸை கூட பையன்களுக்கு எப்படி சுவாரசியமாக எடுக்கலாம்?னு தினமும் யோசிச்சு புதுசு புதுசா பல டெக்னிக்குகளை(டகால்டிகளை) பயன்படுத்திய காலங்கள்.

சென்னையில் பார்த்த சாப்ட்வேர் வேலை.

இப்போ பாக்ற வேலை. (நான் ஆபிஸ்ல நிஜமாலுமே வேலை எல்லாம் செய்றேன்!னு என் தம்பி கூட நம்ப மாட்டேங்கறான்.)

3 Movies that I could watch over and over:

தில்லுமுல்லு - தேங்காய் சீனிவாசன் ரஜினியை இன்டர்வியூ பண்ணூம் சீன், எத்தனை தடவை பார்த்தாலும் அலுக்காது.

தில்லானா மோஹனாம்பாள் - "அடேங்கப்பா! ஆட்டம் ரொம்ப ஜாஸ்த்தியா இருக்கே!"னு பாலையா நக்கல் விடுவாரே! அப்படி ஒரு படம் இப்ப எல்லாம் சான்ஸே இல்லை.

காதலிக்க நேரமில்லை(படம் பெயரை தான் சொன்னேன்) - இங்கேயும் பாலையா தான் பட்டய கிளப்புவார்.

3 Fond memories:
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் எனது முதல் நாள். நெல்லையில் படித்த எனக்கு அந்த கல்லூரியின் பிரமாண்டம், பழமை, மக்கள் எல்லாரையும் பார்த்து ஒரு வித மலைப்பு, பிரமிப்பு, படபடப்பு. பட்டிகாட்டான் யானையை பார்த்த மாதிரி. ரெண்டே நாள் தான், அப்புறம் நம்ப வால்தனத்தை ஸ்டார்ட் பண்ணிட்டோம் இல்ல?

என் முதல் கம்பெனியின் கடைசி நாள். நான் கிளம்பும் போது அங்கே இருந்த ஆபிஸ் பாய் கண்களில் துளிர்த்த கண்ணீர் துளிகள். "இனிமே எங்கிட்ட எல்லாம் யார் சார் பேசுவாங்க?"னு சொன்ன அவரின் வார்த்தைகள். ஒரே பீலீங்க்ஸ் ஆப் இந்தியாவா போச்சு!

ஒரு மாதம் முன்னாடி எங்க மேனேஜர், "தமிழ்ச் சங்கம் தீர்த்து வைக்க முடியாத ஒரு சந்தேகததை, இந்த அம்பி தீர்த்து வெச்சுபுட்டான்!"னு சொல்லி டீம் மீடிங்க்ல ஒரு பெரிய காட்பரீஸ் சாக்லேட் குடுத்தாங்க. ரூமை விட்டு வெளியே வந்ததும் வழக்கம் போல பஞ்சாபி தட்டி பறிச்சுடுச்சு! :(

3 Jobs I would love to have:
மறுபடி கல்லூரி வேலை. நம்மால முடிஞ்ச அளவு சமூகத்தில நாலு நல்லது செய்யனும்.அவ்ளோ தான்!

3 Things I like to do:

சின்ன குழந்தைகளோடு என் பொழுதை இனிமையாக கழிப்பது.

நேரம் கிடைக்கும் போது இந்த பிளாக் எல்லாம் படிக்கறது,(இத தானே முழு நேரமும் செய்யறது!னு குத்தி காட்ட வேண்டாம்.)

என் உடன்பிறப்புடன் தினமும் ஆபிசில் நடந்த விஷயங்களை பற்றி அரட்டை அடிப்பது.

3 Of my favorite foods:

Butter scotch Ice Cream
தக்காளி சாதம், தயிர் சாதம்
ஹிஹி, கேசரி.

3 Places I would like to be right now:

நெல்லை அகத்தியர் அருவி, பாண தீர்த்த அருவிக் கரைகள்,

மதுரையில் அமைதியான என் தாத்தா வீடு, கடை வீதிகள்.

எனக்கு ப்ரியமானவர்கள் இதயத்தில் எப்பொழுதும்.(டச் பண்ணிட்டேன் இல்ல?).

3 Things that make me cry:

உண்மையானவர்கள்!னு நான் நம்பியவர்கள் புரியும் நம்பிக்கை துரோகங்கள். நான் அதிகம் கண்ணீர் சிந்துவதில்லை.

சரி, மூனு பேரை இழுத்து விட்ருவோம் இந்த தடவை.

1)SKM - எழுத ஒன்னும் இல்லை!னு சொன்னீங்க இல்ல? நல்ல ஹோம்வொர்க், ம்ம் ம்ம், ஒழுங்கா எழுதுங்க.

2) கைப்புள்ளை - தல! நீங்க இந்த அடியவன் வீட்டுக்கு வரதே பெரிசு, ஹிஹி, அதான் ஏதோ என்னால முடிஞ்ச கைங்கர்யம்.

3)கார்த்திக் - இந்த போஸ்ட்டை நீங்க படிச்சு முடிக்கறத்துக்கு முன்னாடி கார்த்திக், என் டேகை எழுதி போஸ்டா போட்ருப்பார் பாருங்க.

Friday, November 03, 2006

சொர்க்கமே! என்றாலும்....



ஒரு வழியா தீபாவளி முடிஞ்சு மறுபடி வந்தாச்சு! திட்டமிட்டபடி முதலில் மதுரைக்கு போய் டிரஸ் எல்லாம் அங்கே எடுத்துண்டு போகலாம்!னு சொல்லி நம்ப சேக்காளி ஒருத்தனையும் கூட கூட்டிண்டு கடை வீதிக்கும் போயாச்சு. முதலில் அம்மாவுக்கு புடவை எடுத்துடலாம்!னு முடிவு பண்ணி புடவை கடைக்கு நுழைஞ்சா ஆண்களை அதுவும் பால் வடியும் முகம் கொண்ட என்ன மாதிரி குழந்தைகளை எல்லாம் ஒரு பொருட்டாகவே மதிக்க மாட்டா! போலிருக்கு.

தம்பி! வீட்டுலேருந்து விவரம் தெரிஞ்ச யாரும் வரலையா?னு நக்கல் விடறான் கடைக்காரன்.
அப்புறம் போனா போகுது!னு ரெண்டே ரெண்டு புடவைகளை மட்டும் எடுத்து போட்டு செலக்ட் பண்ணூங்க!னு மிரட்றான்.

சரி, இன்னிக்கு இவனை சோடா குடிக்க வெச்சுபுடனும்!னு முடிவு பண்ணிட்டு, கார்டன் புடவைகளின் குவாலிடியில, மெட்டல் ஷிபான் வகை பளபளப்போட, பூனம் சில்க்ஸ் புடவை மாதிரி லேசா, பீக்காக் சில்க்ஸ் மாதிரி பார்டர் டிஸைன் போட்டு மைசூர் சில்க்ஸ் மாதிரி, பகல ஒரு ஷேடு, நைட்ல ஒரு ஷேடு காட்ற மாதிரி டபுள் ஷேடோட இருக்கற மாதிரி காப்பர் சல்பேட் ப்ளூ அல்லது நல்ல மெரூன் ரெட் ஆலிவ் க்ரீன் கலர் பார்டர் (சிங்கிள் சைடு மட்டும்)போட்டு ஒரு புடவை எடுத்து போடுய்யா! பார்ப்போம்!னு சொன்னேன்.

அதுக்கபுறமா அவன் வாயவே தொறக்கலை.

பின்ன என்ன, 4 வருஷமா எங்க அம்மாவுக்கு பார்த்து பார்த்து புடவை எடுக்கற இந்த அம்பிய, ஆபிஸ்ல இருக்கற மேனேஜர் மேடத்துக்கே காஸ்டியூம் ஐடியா குடுக்கற இந்த அம்பிய பார்த்து ரெண்டு புடவையில ஒண்ண செலக்ட் பண்ணு!னு சொன்னா என்ன அர்த்தம்?

ஒரு முக்கால் மணி நேரம், 4 அலமாரிய காலி பண்ணி கடைசியா நான் கேட்ட ஷேடுல (பார்டர் கலர் மட்டும் வேற) ஒரு புடவை கிடைத்து, கிடைதே விட்டது. என்னை விட, அந்த சேல்ஸ்மேனுக்கு ரொம்ப சந்தோஷம்.

அதுக்கபுறமா, பக்கத்து கடையில எனக்கு ஒரு ஜீன்ஸ், ஷர்ட், அப்பா/தம்பிக்கு ஒரு ஷர்ட் வெறும் பத்து நிமிடத்தில் கிடைத்து விட்டது.

இரவே மதுரையிலிருந்து கல்லிடை வந்தாச்சு! தொடர்ந்து மழை பெய்ததால் இந்த தடவை தாமிரபரணிக்கு போக அம்மா 144 தடை உத்தரவு போட்டு விட்டார்கள்.

சரி, வந்ததுக்கு ஒரு வெங்காய சாம்பார் நம் கையால் செய்வோம்!னு வெங்கல கடையில் யானை நுழைந்தது போல கிச்சனை அத களபடுத்தியாச்சு!


நல்லா 4 நாள் அம்மா சமையலை வெட்டியதில், புதுசாக வாங்கி வந்த ஜீன்ஸை அணிய தீபாவளி அன்று சிறிது சிரமப் படவேண்டி இருந்தது. எங்கள் வீட்டில் வாங்கிய நெல்லை அல்வா, பக்கத்து மாமியாத்து தேங்காய் பர்பி, எதிர் வீட்டு மாமி குடுத்த மாலாடு, அத்தையாத்து பாதுஷா, பெரியப்பா வீட்டு மைசூர் பாகு என்று கணக்கு வழக்கில்லாமல் ரைஸ்மில் டபுள் டியூட்டி பார்த்தது.தீபாவளி இஞ்சி லேகியம் வேறு தன் வேலையை காட்ட தொடங்க கார்க் புடுங்கி கொள்ளும் அறிகுறி வேறு பிரகாசமாக தெரிந்தது.

தீபாவளி அன்று, ஸ்வீட் என்ன வேணும்? சேமியா பாயசமா? ரவ கேசரியா?னு அம்மா கேட்க, ஹிஹி, எல்லார் ஓட்டையும் பெற்று தனிபெறும் மெஜாரிட்டியில் எப்போழுதும் போல ரவா கேசரியே வந்தது. (இல்லைனா நடக்கறதே வேற!)


கிலோ கணக்கில் லிஸ்ட் போட்டு வாங்கி வந்த திருனெல்வேலி அல்வாவை ஆபிஸ்ல எல்லோருக்கும் பங்கு வெச்சு குடுத்தது போக எனக்கும், உடன்பிறப்புக்கும் ஆளுக்கு கால் கிலோ தான் தேறியது.

நான் புதுசா நிக்கான் டிஜிட்டல் கேமரா வாங்கி இருக்கேன்!னு உங்க கிட்ட சொல்லாம(பீத்தாம) வேற யாருகிட்ட போய் சொல்லுவேன்?(பீத்துவேன்?)

எங்கள் வீட்டு மேல் மாடியிலிருந்து தொங்கியபடியே மேற்கு தொடர்ச்சி மலையை ஜூம் பண்ணி எடுத்தது.


எங்கள் வீட்டிலிருந்து தாமிர பரணிக்கு போகும் வழியில் உள்ள நெல்வயல்கள்.(இப்போ அறுவடை ஆகி விட்டது.) "என் இனிய தமிழ் மக்களே"!னு எத்தனை பாரதி ராஜா, K.S.ரவிக்குமார் படங்களில் பார்த்திருப்பீர்கள்?


அதோ கிழக்கால தெரியுதே! அந்த வாழைத்தோப்புலிருந்து, மேற்கால தெரியற மாந்தோப்பு வரை எல்லாம் நம்மது தான்! அப்படினு நான் இங்கே அள்ளி விட்டா தோப்புக்கு சொந்தக்காரங்க என்னை தூக்கி போட்டு மிதிப்பாங்க! :)


பி.கு: கல்லிடையை பற்றி இன்னும் தெரிந்து கொள்ள தவறாமல் படியுங்கள் TRC சார் பிளாக்கை. (ஏற்கனவே நாலு போஸ்ட் போட்டுட்டார்!) சீக்கிரம்! சீக்கிரம்! இன்னுமா லேட்டு?

(TRC சார்! குடுத்த காசுக்கு அதிகமாவே கூவியாச்சு! அடுத்த தடவை பஜ்ஜி வேணும்!)