Showing posts with label பண்டிகைகள். Show all posts
Showing posts with label பண்டிகைகள். Show all posts

Wednesday, April 18, 2007

அக்ஷ்ய திருதி

நமக்கு அன்னிக்கு ஒரு பேச்சு இன்னிக்கு ஒரு பேச்சே கிடையாது. போன வருஷம் அக்ஷ்ய திருதிக்கு என்ன பதிவு போட்டேனோ அதே தான் கொஞ்சம் எக்ஸ்ட்ராவா எழுதி காப்பி பேஸ்ட் செய்துள்ளேன்.

ஏப்ரல் 20 2007 - அக்க்ஷ்ய திருதியை. சித்திரை மாதம் அமாவசைக்கு 3ம் நாள் தான் அக்க்ஷ்ய திருதியை. மிகவும் சுபமான நாள்.

இதை பற்றி யஜுர் வேதத்தில் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நாளில் செய்யும் தானம், தர்மங்கள் 7 பிறவிக்கு தொடரும். ஸ்வர்ண தானம் மிக உயர்ந்தது. வெள்ளி, பசு, தயிர், பால், இதுவும் தானம் அளிக்கலாம்.

எல்லாம் சரி. ஆனால் இன்று, இதை வேறு மாதிரி மாற்றி விட்டனர் நமது மக்கள்.

இந்த நாளில் 1 கிராமாவது தங்கம் வாங்கி தமது பீரோவில் வைத்தால், அந்த வருடம் முழுக்க கூரையை பிச்சுண்டு கொட்டும்னு எவனோ விட்ட பீலாவை நம்பி, நம்ம மக்கள், பனகல் பார்கில் பைத்தியமா திரியரா.

இந்த ஒரே நாளில் மட்டும் 400 டன் தங்கம் விற்பனை ஆகும்னு கணக்கிடப்பட்டுள்ளது. இது குறைந்த பட்ச அளவு தான்னு புள்ளி விபரங்கள் சொல்கின்றன. தங்க காசுகளை பிளாட்பாரத்தில் போட்டு விற்றதை போன வருடம், நான் சென்னையில் இருந்த போது பார்திருக்கிறேன்.

பொதுவாக சித்திரையில் கல்யாணங்கள் நடக்கும். தங்கம் உபயோகம் இருக்கும். இதை இதை பயன்படுத்தி, அக்க்ஷ்ய திருதியையை உபயோகப்படுத்தி கொள்ள ஆரம்பித்து விட்டனர் நமது வியாபாரிகள்.

"கேட்கறவன் கேனையனா இருந்தா
கேப்பையில நெய் வடியுதுனு சொல்வானாம்!"

மக்களே! இந்த நாளில் உங்களை தானம், தர்மம் தான் செய்ய சொல்லி இருக்கு. உங்கள் பீரோவை நிரப்ப சொல்ல வில்லை.

ஏற்கனவே தங்கம் கிராம் 880 ரூபாய் ஆகி விட்டது. பாவம் பெண்ணை பெற்றவர்கள். தமிழ் நாட்டில் குறிப்பிட்ட சில வகுப்புகளில் பெண்ணுக்கு நகை போடுவது கிலோ கணக்கில் தான்.

இதில் 60:70 (60 பவுன், 70 ஆயிரம்) என ரேஷியோ எல்லாம் வேற. ஆந்திராவில் இன்னும் மோசம். 50 லட்சம், 60 லட்சம், 1 கோடி வரை பேரம் படியுமாம். என் ஆபிஸ் குல்டி தடியன் பீத்திக் கொண்டான்.

1) நல்ல விஷயங்கள் மீது நம்பிக்கை வையுங்கள். மூட நம்பிக்கை வேண்டாமே!

ஹிஹி, அஸின் எனக்கு கிடைப்பாள்னு நினைத்தா அது நம்பிக்கை.
10 தடவை கஜினி படம் பாத்தேன்! அதனால அஸின் எனக்கு தான் கிடைப்பானு நினைத்தா அது மூட நம்பிக்கை! என்ன கார்த்தி புரிஞ்சதா? :)

2) பெண்ணுக்கு தேவை புன்னகை, பொன்னகை இரண்டாம் பட்சமே!

3) குணத்தில் தங்கமாய் இருங்கள், உங்கள் நேரத்தை தங்கமாய் செலவு செய்யுங்கள்.

4) இந்த புனித நாளில், ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவியுங்கள். இதை விட பெரிய புண்ணியம் வேறு எதுவும் இல்லை.

5) இந்த நல்ல நாளில் உங்கள் தாய், தந்தையர் பெயரில், உங்கள் பள்ளியில், கல்வி அறக்கட்டளை தொடங்குங்கள்.

6) ஊனமுற்றவர்களுக்கு முடிந்த உதவி செய்யுங்கள். இது ஒரு மிக சிறந்த சனி பரிகாரம், தெரியுமா?

7) உங்கள் மனைவியை தங்கமணி!னு அன்போழுக கூப்பிடுங்கள்.
உங்கள் குழந்தையை, "தங்கமே!னு கொஞ்சுங்கள். (தில்லு இருந்தா பக்கத்து சீட்டு பிகரையும் தான்).

8) இந்த வருஷம் வெள்ளை கலரும் நல்லது!னு சரடு விட ஆரம்பிச்சாச்சு. வேற என்ன பிளாடினம் நகைகளை நம்ம தலையில் கட்ட இது ஒரு சாக்கு.
மல்லிகைப் பூவும் வெள்ளை நிறம் தான்.
"பூவைக்கோர் பூ வைத்தாய்!"னு பாட்டு பாடின்டே தங்கமணிகளுக்கு மல்லிகை பூ வாங்கி தலையில் வையுங்கள். (முடிந்தால் காதிலும் தான்).

உலகையே வென்ற அலெக்ஸாண்டர், தான் இறக்கும் போது சொன்னது இது, "எனது இறுதி ஊர்வலத்தில், எனது உள்ளங்கைகளை விரித்து வையுங்கள். இந்த உலகுக்கு தெரியட்டும், உலகை வென்ற நான், எதையும் எடுத்து செல்ல வில்லையென்று!"

எவ்வளவு சத்யமான வார்த்தைகள்!

At the end of the game, both the Pawn and the king goes to the same box.

மொத்ததில், அக்க்ஷ்ய திருதியை லலிதா, GRT, பிரின்ஸ், Fathima ஜுவல்லரி காராளுக்கு தான் நல்லது!

ஊதற சங்க ஊதி விட்டேன்.
வாங்கிண்டு வாங்கனா வாங்கிண்டு வாங்களேன்!னு தங்கமணிகள் அதட்டலுக்கு பயந்து வாங்கிண்டு வரத்துக்கு இது ஒன்னும் இதயம் நல்லெண்னை இல்லை. எதாவது டகால்டி பண்ணி நிலைமையை சமாளிக்க பாருங்கள். இல்லாவிட்டால் இருக்கவே இருக்கு கோ-ஆப்டெக்ஸில் 20% தள்ளுபடியில் தலைல போட்டுக்க துண்டு.

படத்தில் இருப்பது பாகிஸ்தான் பேட்ஸ்மேன் மியான்தத்தின் தவபுதல்வனும், ஊரை அடித்து உலையில் போட்ட தாவூத்தின் தவபுதல்வியும் தான்.(இவ்ளோ பாரம் சுமக்கறதே, கர்ணம் மல்லேஸ்வரி பொண்ணுனு நினைத்தேளோ?)

Friday, April 13, 2007

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

அன்னியன்: நாம் ஆங்கில புத்தாண்டுக்கு குடுக்கும் முக்கியத்துவத்தை தமிழ் புத்தாண்டுக்கு குடுப்பதில்லையோ?னு நிறைய தடவை தோன்றி இருக்கு.
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் என்பதை கூட "ஹேப்பி டமில் நியூ இயர்"னு சொல்லும் வெள்ளைக்கார துரைகளும் இங்கு உண்டு.

அம்பி: சரி விடுங்கோ! நூறு வருஷத்துக்கு மேல துரை தானே நம்மள ஆண்டான். எல்லாத்தையும் அந்த பெருமாள் பாத்துண்டு தான் இருக்கார். எல்லோருக்கும் நன்னா குடுப்பார்.

ரெமோ: " நமீதாவின் தமிழ் புத்தாண்டு!னு சன்/கே டிவில ஒரு ப்ரொக்ராம் இருக்காம்.

அன்னியன்: மாத்தனும்! எல்லாத்தையும் மாத்தனும்!
சாத்தனும்! எல்லாரையும் சாத்தனும்!

அம்பி: பெருமாளே! ரூல்ஸ நாமளே கைல எடுத்துக்கப்படாது! டாக்டர் ராமதாஸ், அவர் புள்ளையாண்டன் எல்லாம் எதுக்கு இருக்கா? பாவம்! அவாளுக்கும் பொழுது போக வேண்டாமா?

ரெமோ: ஹே கமான் பேபி! வாட்ஸ் ராங்க் இன் இட்?

அன்னியன்: தப்பு செஞ்சா தண்டனை!
தங்லீஷ்ல போஸ்ட் போடற எல்லாரும் இனிமே மாதம் ஒரு தடவையாவது தமிழ்ல போஸ்ட் போடனும். இல்லாடி நைட் அவங்க பெட்ல உச்சா போக கடவது!

என்ன மக்களே! நீங்க யாரு சொன்னத கேப்பீங்க அம்பியா? ரேமோவா?(ஷ்யாம் கைய தூக்கறான் பாரு), இல்ல அன்னியன் பேச்சா?

எல்லோருக்கும் இனிய என் உள்ளங்கனிந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

இந்த தமிழ் புத்தாண்டு எனக்கு ரொம்ப எதிர்பார்ப்புடன் துவங்குகிறது.
ஆமா! தங்கமணி ஆணி பிடுங்கிட்டு தாய் நாட்டுக்கு வராங்க. அதனால சென்னைல தான் 4 நாளுக்கு எமது வாசம். அதனால் உங்க கடை பக்கம் வர முடியாது! மாப்பு-மன்னிப்பு!

பரிசா கரடி பொம்மை குடுக்கலாமா? இல்ல மலிவா இருந்தா ஒரு கரடியே(சொம்பு அப்பா ஒன்னும் நான் சொல்லல) வாங்கி குடுக்கலாமா?னு ஒரே யோசனையா இருக்கு.

ஒரு மந்தையிலிருந்து இரண்டு ஆடுகள் தனி தனியே சென்றன. அவை மீண்டும் சந்தித்த போது பேச முடியலையே?னு டயலாக் எல்லாம் மனப்பாடம் பண்ணி வெச்ருக்கேன்.

போய் வா அம்பி!
போய் வா!னு வழியனுப்பி வைங்களேன். :)