Showing posts with label பிளாஷ்பேக். Show all posts
Showing posts with label பிளாஷ்பேக். Show all posts

Wednesday, April 25, 2007

ஏர்போர்ட்

சங்க காலம் முதல் ஷங்கர் காலம் வரை காதலை பாடிய கவிஞர்கள் எல்லாம் பிரிவையும் பாடாமல் விட்டதில்லை.

"இச்வாகு குலத்தில் பிறந்த நான் என் மனைவியை பிரிந்தேனே!"னு ஷ்ரிராமர் அரற்றுவதை கம்பர் அழகாக பாடி இருப்பார்.

கால தோஷத்தால் தமயந்தியை பிரிந்த நளன் அந்த துயர செயலை நினைத்து நினைத்து புலம்புவதை நள சரித்திரம் படித்தால் கல்லும் கரையும்.

"நாராய்! நாராய்!"னு நாரை விடு தூதில் கூட வறுமையில் வாடும் ஒரு புலவர் மறக்காமல் தனது தங்கமணிக்கு செய்தி சொல்லி இருப்பார்.

தலைவனை பிரிந்ததால் உடல் மெலிந்து, அதனால் தனது கை வளையல்கள் கழன்று விட்டதாக ஒரு தலைவி தனது தோழியிம் சொல்வதாக அக நானூறில் பாடலாக வரும்.

"என்னுயிர் தோழி! கேள் ஒரு சேதி!
இது தானோ உங்கள் மன்னவன் நீதி?"னு அழகான அமீர் கல்யாணி ராகத்தில் சுசீலா அம்மா கர்ணன் படத்தில் பிரிவின் ஏக்கத்தை சொல்லி இருப்பார்.

"ராசாத்தி உன்னை காணாம நெஞ்சு காத்தாடி போலாடுது!"னு கேப்டன் கூட முட்டி வரைக்கும் கோட் எதுவும் போடாம உருக்கமா பாடி இருப்பார்.

"சோலை புஷ்பங்களே! என் சோகம் சொல்லுங்களேன்" என்ற பாட்டை முணுமுணுக்காத இன்றைய ஆன்டிக்கள் யாரும் உண்டோ?

"முதல்வனே! என்னை கண் பாராய்!
முத்த நிவாரணம் எனக்கில்லையா?னு அர்ஜுன் மாமாவை நினைத்து கிராபிக்ஸ் உதவியுடன் மனிஷா மாமி உருகியதை நம்மல் மறக்க முடியுமா?

சரி, இப்ப என்ன சொல்ல வர? எதுக்கு இந்த இழுவை?

தங்கமணியை பிக்கப் செய்வதற்காக(அதான் ஏற்கனவே பிக்கப் பண்ணியாச்சே!னு நீங்கள் முணுமுணுக்கறது கேக்கறது எனக்கு) தமிழ் புத்தாண்டு அன்று இரவு ஏர்போர்ட் செல்ல நேரிட்டது.

ஒரு வித எதிர்பார்ப்பு, பரபரப்பு, மகிழ்ச்சி, பதட்டம் னு கலவையாய் இருந்தது என் மனம். நடு இரவு 12 மணிக்கு கொஞ்சம் கூட தூக்கம் என் கண்களை தழுவ வில்லை. நான் சென்ற காரை விட என் மனம் வேகமாக ஏர்போர்ட் சென்று விட்டது.

அடுத்த பிளைட்டுக்கு கிளம்ப ரெடியாக இருக்கும் அரை டிரவுசர் மாமாக்கள், 2 இஞ்ச் லிப்ஸ்டிக்கை சரி பார்க்கும் மாமிகள், தலையில் மதுரை மல்லி மணக்க இருபுறமும் பின் குத்திய துப்பட்டாவுடன் சுடிதார் அணிந்த தமிழ் நாட்டு ஸ்னேகாக்கள், ஜீன்ஸ் (பேண்டா, டிரவுசரா?னு தெரியாத வகையில்)அணிந்து வலம் வரும் சப்பாத்தி தேச கரிஷ்மா கபூர்/அகர்வால்/குப்தாக்கள், தான் அமெரிக்கனா? இந்தியனா?னு அவர்களுக்கே தெரியாமல், ஹெட்போன் மாட்டி, கோக் குடிக்கும் விடலை சிறுவர்கள், கஸ்டம்ஸ் செக்கிங்கில் எதை அமுக்கலாம்?னு காத்திருக்கும் கோட் போட்ட ஆபிசர்கள், ரங்க்மணிகளுக்கு காத்திருக்கும் தங்கமணிகள், எம்ஸ் படித்து(?) விட்டு வரும் தன் தவபுதல்வனை வறவேற்க காத்திருக்கும் பாசமிக்க பெற்றோர், பேரன்/பேத்தியை எதிர்பார்த்து காத்திருக்கும் 'பூவே பூ சூட வா!' பாட்டிகள்/தாத்தாக்கள் என கலவையாய் மக்கள் கூட்டம்.

நான் ஏர்போர்ட் அடைந்த நேரத்தில் நம்ம பிளைட் வந்து விட்டது. செக்கிங்க் முடிந்து வர நேரமாகும் என்று தெரிந்தது.

"காத்திருந்தால், எதிர்பாத்திருந்தால் ஒரு நிமிஷமும் வருஷமடி!"னு சும்மாவா வைரமுத்து மாமா பாடி வெச்ருக்கார்.

முதல் தடவையாக பேரமே பேசாமல் ஃபொக்கே ஒன்று வாங்கி கொண்டு செக்கின் வாசலையே பார்த்து கொண்டிருப்பதும் ஒன்று தான்! நமக்கு அவசரமாக வரும் போது அடக்கி கொண்டு உள்ளே போய் ஒரு மணி நேரமாக தியானம் பண்ணும் தடியனுக்காக ரெஸ்ட்ரூம் வாசலில் தவமாய் தவமிருப்பதும் ஒன்று தான்.

வரிசையாக பயணியர் வந்து கொண்டே இருந்தனர். பல முகங்களில் எதிர்பார்ப்பு, உறவினர்/ நண்பர்களை எதிர்பார்த்து அலைபாயும் கண்கள், மகிழ்ச்சியில் விரியும் முகங்கள், சில விம்மல்கள், பெருமூச்சுக்கள்.

வெள்ளைகார அம்மணி, குரங்கு குட்டியை சுமப்பது போல தூளி மாதிரி ஒரு வஸ்துவில் குழந்தையை சுமந்து வந்த அவரின் கணவன்(?), பிளைட் ஓட்டிய பைலட் மாமா, சாக்லேட் குடுத்த ஏர்ஹோஸ்டஸ் குதிரைகள்னு வரிசையாய் எல்லோரும் வந்தனர் என் தங்கமணியை தவிர.

என்னடா இது? ஒரு வேளை தங்கமணி கடைசி சீட்டா?
இதுக்கு தான் பைலட் மாமாவை ஐஸ் வெச்சு பேசாம அவர் சீட்டுக்கு அடுத்த சீட்டுல உக்காச்சுண்டு வரணும்!னு நான் சொன்னதை கேட்டா தானே!
இதோ! அதோனு ஒரு வழியா தங்கமணி வந்து சேர்ந்தாங்க. வெளியே வந்ததும் தயாரா இருந்த ஃபொக்கேவை குடுத்தேன். (படத்துல வர மாதிரி முட்டி போட்டு எல்லாம் ஒன்னும் குடுக்கலை.)
இருவர் கண்ணும் மகிழ்ச்சியில் ஒரு கணம் மின்னின. பேச வார்த்தைகளே வர வில்லை. ரேவதி சொன்ன மாதிரி வெறும் காத்து தேங்க் வந்தது.

அவங்க அம்மாவின் கழுத்தை கட்டி கொண்டு உம்மா எல்லாம் குடுத்து மீனம்பாக்கத்துல ஒரே பாச மழை தான். அடுத்து எனக்கு தான்!னு நானும் சப்பு கொட்டிண்டு காத்திருந்தது தான் மிச்சம். ஆசை தோசை அப்பளம் வடை!னு சொல்லிட்டாங்க.
என்ன கொடுமை ACE?(ஹிஹி, உன் பேரு சரவணன் தானே?) :)

Friday, March 23, 2007

பார்த்த முதல் நாளே! - II


Part-I


என் முறைப்பை புரிந்து கொண்ட TRC சார், "சரி! பொண்ண வர சொல்லுங்கோ!னு சிக்னல் குடுக்க, தாய்மாமா, " TRC சார் வந்ருக்காக, மாப்ள மொக்கை போஸ்ட் அம்பி வந்ருக்காக! மற்றும் நம் உறவினரேல்லாம் வந்ருகாக! வாம்மா! மின்னல்!னு ஒன்னும் டயலாக் அடிக்கலை. அம்மணியும் மின்னல் மாதிரி சரட்டுனு எல்லாம் ஒன்னும் வரலை.

மெதுவாக இட்ட அடி எடுக்க, எடுத்த அடி நோக, வருவது அன்னமா?
மயிலா?னு பார்ப்பவர்களுக்கு சந்தேகம் வரும்படி எனக்கு பிடிச்ச மெரூன் கலர் பட்டு புடவையில்(ஹிஹி, நானும் போன்ல நேயர் விருப்பம் சொல்லிட்டேன்) பாந்தமாக வந்தாங்க. (முந்தின நாள் ரிகர்ஸல் பண்ணி இருப்பாங்க போலிருக்கு!)
என் போஸ்ட் படிச்சதும் உடனே அம்மணி பிளாக் என்ன கலர்?னு கிளிக் பண்ணி பாக்கற வேலை எல்லாம் வேண்டாம், இப்பவே சொல்லிட்டேன் ஆமா!
வந்து பெரியவங்களுக்கு நமஸ்காரம் எல்லாம் பண்ணினாங்க.
"விழுந்து எழுந்தது அவள்
வலித்தன என் கால்கள்!
கால்கள் மட்டுமல்ல
இதயமும் தான்!!
விழுவதே எழுவதற்க்கு தான்!
என எனக்கு புரிய வைத்தாளே!
என்னை புன்னகை புரிய வைத்தாளே!!"

(சரி, சரி, இதேல்லாம் கண்டுக்கப்படாது!)
எல்லாரும் ஒரு வழியா அவங்க அவங்க இடத்துல செட்டில் ஆனதுக்கு அப்புறமா டிபனும் வந்து சேர்ந்தது. வேற என்ன, கேசரி தான்! பஜ்ஜிக்கு பதிலா போண்டா!
கேசரி நன்னா இருந்தது. போண்டா தான் கொஞ்சம் ஹார்டா இருந்தது. மிருதுவா இருக்க வேண்டாமோ?

சரி, மறப்போம்! மன்னிப்போம்!

அடுத்த தடவை சரி பண்ணிடுவாங்க!னு நம்பறேன்.
டீயா? காப்பியா?னு தங்கமணி அம்மா விசாரிக்க நான் பால்!னு அசடு வழிந்தேன்.
இந்த இடைப்பட்ட கேப்புல, சில பெரியவர்கள் இரண்டாம் தடவை எல்லாம் கேசரி சாப்ட்டுடாங்க. அது TRC சார் தானா?னு நீங்க சந்தேகப்படலாம். தப்பில்லை. :)

எனக்கு ஒரு தடவை தான் கேசரி கிடைச்சது!

இதுக்கு தான், சைட் அடித்து கொண்டே உண்ணேல்!னு அவ்வையார் சொல்லி இருக்காங்க.
அண்ணலும் நோக்கினேன்!
அண்ணியும் பதிலுக்கு நோக்கினாள்!
அவள் மாமாவும் நோக்கி விட்டார்!
எனவே கண்ணும் கண்ணும் நோக்கியா!னு மலேசியா ஏர்போர்ட் எல்லாம் போயி டூயட் பாட முடியலை.

தங்கமணி பரத நாட்டிய டான்ஸர்! அதுக்காக நடு ஹால்ல சலங்கைய கட்டிண்டு, ரா! ரா! சரசுக்கு ரா! ரா!னு ஆட சொல்ல முடியுமா?
எங்க அப்பாவுக்கு பாட்டுனா உயிர். காலையில 4 மணிக்கு எழுந்து சாதகம் எல்லாம் நடக்கும். அதுவும் முருகன் பாட்டுனா அவ்ளோ இஷ்டம். அதுனால ஏற்கனவே தங்கமணிய ஏதவது முருகன் பாட்டு நாலு வரி பிராக்டிஸ் பண்ணி வை!னு சொல்லிட்டேன்.
சொல்லிட்டாலும் எனக்கு ஒரே பயம்!
மேடம், "பழம் நீயப்பா! தமிழியான பழம் நீயப்பா!னு பாடிட்டா என்ன பண்றது? நல்ல வேளை! அம்மணியும் பொறுப்பா நெட்ல தேடி 4 வரில நச்னு பாடிட்டாங்க. எங்க அப்பா ரொம்ப சந்தோஷப்பட்டு, அவரும் ஒரு பாட்டு பாடிட்டார். அம்மணி வீட்டுல எல்லோருக்கும் செம ஷாக். மாமனாரே இவ்ளோ கேஷுவலா பந்தா பண்ணாம பாட்டு பாடறாரே?

ஹிஹி அன்னிக்குனு பாத்து எனக்கு தொண்டை சரியில்லை. இல்லாட்டி... (சரி துப்ப வேண்டாம்.)

எல்லோரும் கேசரிய முழுங்கறதுலயே கவனமா இருந்தாங்களே தவிர, அடே! பொண்ணு கூட தனியா பேசறீங்களா(கடலை போடறீங்களா) அம்பி?னு யாருக்கும் தோணலை.
இதுக்கா நான் இவ்ளோ கஷ்டப்பட்டு தமிழ்ல பிளாக் எழுதி, 68 போஸ்ட் போட்டு, தங்கமணிய புடிச்சு, டகால்டி பண்ணி, கேசரி தின்னு... ம்ஹூம்...

அப்ப தான் ஒரு வழியா தாய் மாமா திருவாய் மலர்ந்தார், "பொண்ணு கிட்ட ஏதவது தனியா கேக்க(வறுக்க) ஆசைப்படறீங்களா?"

என் வயத்துல ஆரோக்யா பால வார்த்தீங்க மாமா!னு தடால்!னு எழுந்துட்டேன்.
TRC சார் உடனே சுதாரிச்சு, அம்பி முழியே சரியில்லை. கைய கால வெச்சுண்டு சும்மா இருக்க மாட்டான். எதுக்கும், நீயும் அவன் கூட போயிட்டு வா!னு என் உடன்பிறப்பையும் என் கூட அனுப்பி விட்டார்.
மைக்கேல் மதன காமராஜன் படம் மாதிரி, திருப்பு! என்னது இது? நான் கேள்விப்பட்டதே இல்லை. கடைசி வரைக்கும் இந்த அவினாசி கூடவே இருப்பானா?னு நானும் டயலாக் விடாத குறை தான்.
பக்கதுல இருக்கற தங்கமணியின் தனியறையில் உள்ளே நுழைந்தது தான் தாமதம், நானும் தங்கமணியும் விக்கட் எடுத்த வீரர்கள் கை தட்டி கொள்வதை போல தட்டி கொண்டோம். என் தம்பி தலையில் அடித்து கொண்டான்.
ம்ம், ம்ம், அப்புறம்?னு எல்லோரும் சப்பு கொட்ட வேண்டாம்.

வெறும்ன பேசிட்டு வெளியே வந்தோம்.(வர வெச்சுட்டாங்க).
எனக்கு அந்த பொண்ணை தான் பிடிச்சு இருக்கு!னு ரோஜா படத்து அரவிந்தசாமி மாதிரி மச்சினியை எல்லாம் கை காட்ட முடியலை.
ஊருக்கு போயி லெட்டர் போடரோம்!னு அல்வா குடுக்கலை. உடனே ரிஸல்ட் டிக்ளேர் செய்யப்பட்டது.
நல்ல நாள் பார்த்து நிச்ச்யதார்த்தம் வெச்சுக்கலாம்!னு நடுவர் மன்றம் தீர்ப்பு கூறியது! :)

Friday, March 16, 2007

பார்த்த முதல் நாளே!

பெண் பாக்கற அந்த நிமிடம் வரை தங்கமணியை நேர்ல பாக்கலை, போட்டோல பாத்தது தான். அதுனால சம்ப்ரதாயபடி பொண்ணு பாக்க வாங்க!னு அழைப்பு வந்ததும், நானும் என் உடன்பிறப்பும் பெங்க்ளூரில் இருந்து சென்னைக்கு வந்து TRC சார் வீட்டுல டேரா போட்டோம். எங்க பெற்றோர் திருனெல்வெலியிலிருந்து தங்கமணிக்கு அல்வா எல்லாம் வாங்கிண்டு வந்து சேர்ந்தாங்க.

என்னடா ஆரம்பமே அல்வாவா?னு நீங்க யோசிக்கலாம். ஹிஹி, அது தான் நெல்லை ஸ்டைல்.

"ஸ்கை ப்ளு தான்
எனக்கு புடிச்ச கலரு!
(டொயிங்க்! டொயிங்க்!)"
னு அம்மணி போன்ல பாடினதுனால சென்னைக்கு வரதுக்கு முன்னாடியே ஜிலேபி தேசத்துல புதுசா வாங்கியாச்சு! அண்ணனுக்கு ஒரு நீல கலர் சட்டை பார்சல்!னு தம்பி வேற மானத்த(எங்கே இருக்கு?) வாங்கிட்டான்.

காலையில அம்மா கூட GRT ல ஷாப்பிங்க் எல்லாம் போயிட்டு சாயந்தரம் பொண்ணு பார்க்க TRC சாரோட கிளம்பினோம்.
(ஹிஹி அப்ப தானே டிபன் கிடைக்கும்!)

சாரோட நீல கலர் கார்ல சர்ர்ருனு போயி இறங்கியாச்சு! தங்கமணி வீடு மாடில இருந்ததால மேல இருந்து ஒரு க்ரூப் நேரடி வர்ணனை குடுத்து கொண்டு இருந்தது.

அவங்க வீட்டுகுள்ள போனா,

ஆஹா! தங்கமணி பெரிம்மா, பெரியப்பா, அவங்க பசங்க, மாமா, மாமி, அவங்க பசங்க, சித்தி, சித்தப்பா!னு சுத்தி கும்மி அடிக்க ரெடியா இருந்தாங்க.
மூனு அத்தைமார்கள் ஊருல இருந்து வர டிக்கட் கிடைக்கலையாம்.
கிழிஞ்சது கிருஷ்ணகிரி!
நம்பள வெச்சு காமெடி கீமெடி எதுவும் பண்ணிடுவாங்களோ?னு எனக்கு கொஞ்சம் உதறல் தான்!
க்ரூப் டிஸ்கஷன் மாதிரி என்னை உக்காத்தி வெச்சு சுத்தி உக்காந்து இருந்தாங்க.
நட்ட நடு ஹால்ல அவங்க தாய் மாமா நாட்டாமை மாதிரி உக்காந்து, "கேள்விகளை நீ கேட்கிறாயா? நான் கேட்கட்டுமா?"னு என்னை ஒரு லுக்கு விட்டு அஹம்!னு தொண்டையை கணைத்து கொண்டார்.
சரி எதுக்கு வம்பு?னு நானே முதல்ல என்னை பத்தி சுருக்கமா சொல்லிக்கலாம்!னு நான் எல்கேஜில வாங்கின மார்க்லேந்து இப்ப பிடுங்கற ஆணி சைஸ் வரைக்கும் சொல்லி முடிச்சேன்.
அவங்களும் அம்மணி, நல்லவள், வல்லவள்! நாலும் தெரிஞ்சவள்!னு சொன்னாங்க. பரத நாட்யத்துல அம்மணி பட்டைய கிளப்பி இருக்காங்க!னு போட்டோ எல்லாம் காமிச்சாங்க. சிதம்பரம் நாட்யாஞ்சலில ஆடி இருக்காங்க!னு சொன்னாங்க.

இவங்க கூட தான் காதலன் படத்துல நக்மா( நடிகர் சூர்யா மச்சினி) ஆடினாங்களா மாமா?னு கேக்கனும்னு வாய் வரைக்கும் வந்து விட்டது.

அப்புறம், செல்லாது! செல்லாது!னு தீர்ப்பு சொல்லிட்டா என்ன பண்றது?
" மனமே பொறு!
மாலையை இடு!
அப்புறம் காட்டு உன் வாலுத்தனத்தை!"னு அசடு வழிய ஒரு சிரிப்பு சிரிச்சேன்.
இப்படியே அரை மணி நேரம் ஓட்டிடாங்க.
கேசரியும் காணும்! பொண்ணையும் காணும்!
செம கடுப்பா TRC சாரை ஒரு லுக்கு விட்டேன்.

மீதியை அடுத்த பதிவில் பார்ப்போமா? :)