Showing posts with label சங்கிலி தொடர்கள். Show all posts
Showing posts with label சங்கிலி தொடர்கள். Show all posts

Monday, July 02, 2007

மீண்டும் ஒரு காதல் கதை!

பரணி ஆரம்பிச்சு வைக்க, ப்ரியா அதை அழகா டெவலப் பண்ணியதை கொடி கொத்து பரோட்டா போட அம்சமா அருண் சமாளிச்சு இப்ப பூமாலையா எங்கிட்ட வந்ருக்கு! (சரி, அடுத்து என்ன கமண்ட் விழும்?னு எனக்கே தெரியும்)

********************************************************************************
இதுவரை:

"ஹலோ....ஆமாங்க, அவன் அம்மா தான் பேசுறேன்

......"அப்டியா..

"...."பையன் எங்ககிட்ட சொல்லல..

அவங்க அப்பா வந்ததுக்குஅப்பறம் பேசிட்டு சொல்றோங்க..

".."

நானும் நல்லதே நடக்கணும்னு விரும்பறேன். கடவுள் சித்தம்."

ஃபோன் கட் பண்ணிட்டு.. "டேய், எத்தன நாளாடா இது நடக்குது..

" "அம்மா.. அது.. வந்து..."
***********************************************************************************
இதோ நம்ம மியூஜிக்:

என்ன வந்து? போயி... சிகரட் பிடிக்கறத விட்டுடேன்!னு போன மாசமே சொன்ன, அதனால இப்போ சார் சொக்கலால் பீடிக்கு மாறிட்டீங்களோ? மனசுல என்ன மம்முட்டினு நினைப்பா? கீழே கிடந்த பீடி பாக்கட் நொடியில் அம்மாவை பத்ரகளியாய் மாற்றியது.

யம்மா! என்னமா நீயி! இது டெலிபோன் சர்வீஸ் பண்ண வந்த ஆளு பாக்கட்டுல இருந்து விழுந்தது! நீ கூட வீடு முழுக்க ஒரே பீடி வாடை அடிக்குதுனு கத்தினியே!

அடடா ஆமா, சாரிடா கார்த்தி!

சரி, சரி, போன்ல யாருமா? ஏதோ ஜாதகம் மோதகம்னு சொன்னியே, ஹிஹி, எனக்கேதுக்குமா இப்பவே கல்யாணம்?

நீ படிகற லட்சணத்துக்கு ஒரு கம்பனிகாரன் உன்னை நம்பி பிராஜக்ட் குடுக்கறதே பெரிசு. அதுக்கப்புறம் உனக்கு ஒரு வேலை கிடைக்கனும். அது மட்டுமா? இந்த காலத்து பொண்ணுங்க எல்லாம் ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம், எம்.எஸ்னு மாங்கு மாங்குனு படிச்சு அமெரிக்கவிலிருந்து வாழ்வு குடுக்கறதுக்குனே(பன்னு திங்கறதுக்குனும் வாசிக்கலாம்) க்ரீன் கார்டோட வர அப்பாவி ரங்குஸ் தான் வேணும்!னு தெளிவா இருக்காங்க. இன்னும் உன் பேரை ரேஷன் கார்டுலயே சேர்க்க முடியலை. சாமியே சைக்கிள்ள போகுதாம்! பூசாரி புல்லட் கேட்டானாம்! அம்மா காந்திமதியாய் மாறி விட்டார்.

ஏன்மா இப்டி டோட்டலா டேமேஜ் பண்ற? அப்ப போன்ல யாரு?னு சொல்லேன்.

உன் பெரிப்பா பையன் சூர்யா, அவன் அப்பா இறந்ததுக்கு அப்புறம் நம்ம வீட்ல தானே தங்கி படிச்சான், அவனுக்கு ஒரு வரன் வந்து இருக்கு, அது சம்பந்தமா தான் போன். போதுமா?

போதும் தாயே! போதும். ஆள விடுங்க.
டிவி ரிமோட்டை எடுத்து சன் மியூசிக் மாற்ற 'காதல்' சந்தியா நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்!னு ஜீவாவுடன் டூயட் பாடி கொண்டிருந்தாள். பதறியடித்து சன் டிவி மாற்ற, அங்கு "பஞ்சாப்பில் பாங்ரா திருவிழா!" - சந்தியா ராஜகோபால் செய்தி வாசிக்க, "என்னாங்கடா! சொல்லி வெச்சு கடுப்பேத்றீங்களா?
டிவியை ஆஃப் செய்து குளிக்க கிளம்பினான் கார்த்திக்
.~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ இடம்: சந்தியாவின் வீடு

சந்தியா, "யப்பா! நைசா அம்மகிட்ட பேச்ச ஆரம்பிங்கப்பா!"


இருமா! உங்க அம்மா நல்ல மூட்ல இருக்காளானு பார்ப்போம்.

கோதாவரி, இன்னிக்கு வானம் மூடாப்பா இருக்குல்ல?

அய்யோ! என் பேரு காவேரி, நீங்க என்னிக்கு தான் திருந்த போறீங்களோ? ஒரு படம் பார்த்தா உடனே அதுல வர பெயரை வெச்சு என்னை ஒரு வாரம் கூப்ட வேண்டியது. நேத்திக்கு என்ன சம்சாரம் அது மின்சாரமா?

நான் கூட தான் முந்தானேத்து பதினாறு வயதினிலே பார்த்தேன், உங்கள ஒரு வாரம் பரட்டை!னு கூப்டவா? இல்லாட்டி சப்பாணினு கூப்டவா? - சந்தியாவின் அம்மாவாச்சே!சும்மாவா சொல்லி இருக்கா, தஞ்சாவூர் காராளுக்கு வாய் நீளம்னு!

சே! ஆரம்பமே சொதப்பல் இந்த அப்பாவால! இன்னிக்கு இவர் மேட்டரை ஓப்பன் பண்ணின மாதிரி தான்! இதுக்கு நானே சொல்லி இருக்கலாம்.

அம்மா! ஒரு முக்கியமான விஷயம் உங்கிட்ட பேசனும்.

சொல்லுமா!

நான் பிராஜக்ட் பண்ண டெல்லி போயிருந்த போது என் சம்மதம் கேக்காம நீ நிச்சயம் பண்ணியது எனக்கு சுத்தமா பிடிக்கலை.

தீர்க்கமான முகத்துடன் அம்மா, இதோ பாரு சந்தியா! உனக்கு எது நல்லது?னு எங்களுக்கு தெரியும். உன் தலைல தடவர ஹேர் ஆயிலுல இருந்து காலுல போடற கொலுசு வரைக்கும் இந்த அம்மா தான்மா பாத்து பாத்து செலக்ட் செஞ்சேன். உனக்கேத்தவர் யாருனு? எங்களுக்கு தெரியாதா?

அம்மா! நீ சொல்றது எல்லாம் சரி. ஆனா, என் கருத்தையும் நீ கேட்டு இருக்கலாமே! ஒரு ஹேர் ஆயில் பிடிக்கலைனா இன்னொன்னு வாங்கிட்டு வந்துடலாம். ஆனா இது அப்படியில்லையே! காலம் முழுக்க நான் தானே வாழ போறேன்?

சந்தியா, உன்ன கேக்காம, நீ இல்லாத நேரத்துல நிச்சயம் வரைக்கும் போனது தப்பு தான். சரி, யாரந்த பையன்..?

அம்மா! அது வந்து காலேஜ்ல...

உன் தயக்கம் புரியுது, நாளைக்கு உனக்கு நிச்சயம் பண்ணிய பையன் யூஸ்லேருந்து உன்னை பாக்க வரான்.
பையனை பாரு! பேசு! அப்புறம் ஒரு முடிவுக்கு வா! இப்ப நான் உனக்கு ஹிட்லரா தெரியலாம். ஆனா நீ தான் எனக்கு எப்பவுமே ஜெர்மனி. நீ காலேஜுக்கு கிளம்பு. சாயந்தரம் வீட்டுக்கு வந்துடுவ இல்ல?

நான் உங்க பொண்ணு மா!

அம்மா எப்பவுமே வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு தான்!

மறு நாள் சந்தியாவின் வீடு பரபரப்பாக இயங்கியது. கிச்சனில் கேசரி ஆவின் நெய் புண்ணியத்தில் கமகமத்தது. போதா குறைக்கு முந்திரி பக்கோடா, வெங்காய பக்கோடா என ரெண்டு காரங்கள் வேறு.

பையன் வீட்டு காரங்க வந்தவுடன் ஏலக்காய் டீ கலந்துக்கலாம், சூடு ஆறிடும்! அம்மா ஏறக்குறைய விஜய சாந்தி ஐபிஸ்ஸாக மாறி கட்டளையிட்டு கொண்டிருக்க, அப்பா வழக்கமான ரங்கமணிகள் போல உத்தரவு எஜமான்! போட்டு கொண்டிருந்தார்.

பதவிசாக ஸ்கார்பியோ கார் அப்பார்ட்மெண்ட் கேட்டை வழுக்கி நின்றது.
இந்த அப்பார்ட்மென்டில் தானே சந்தியா குட்டி இருக்கா, எந்த ஃப்ளோர்னு தான் தெரியலை - வாட்ச்மேன் தடியன் ஒரு வில்ஸ் பாக்கேட்டையும் வாங்கிண்டு கவுத்திட்டான் - கார்த்தி யோசனையில் ஆழ்ந்தான்.
லிப்ட்டில் மூணாவது ஃப்ளோர் வந்து நின்றது.

வாங்கோ! வாங்கோ! வாயேல்லாம் பல் செட்டாக அப்பா வரவேற்றார்.
கார்த்தியின் பெரியப்பா பையன் சூர்யா ஜீன்ஸ் படத்து கதாநாயகி பிரசாந்த் போல அனியாயத்துக்கு வெக்கப்பட்டான்.
எல்லோரும் ஒரு வழியாக அவரவர் சீட்டில் செட்டில் ஆனதும், முதல்ல டிபன் சாப்டுடலாமா? இல்லாட்டி பொண்ண வர சொல்லட்டுமா? கேசரி ஆறிடும், அதான்! - அப்பா பஞ்சாயத்தை ஆரம்பித்தார். அவர் கவலை அவருக்கு.

முதல்ல பொண்ணை வர சொல்லுங்கோ! - எதிர் பாட்டு பாடியது பையன் வீடு.

சரி! அரை மனசாக தலையசைத்து விட்டு, அப்பா (இந்த தடவை சொதப்பாமல்) காவேரி!னு சவுண்டு விட,
மயில் கழுத்து கலர் மெட்டல் ஷிபான் சரசரக்க, அதற்கு மேட்சிங்கா சந்தன கலர் பிளவுஸ், சிறிது லூஸாக பின்னிய பின்னலில் ஒரு முழம் மட்டும் முல்லைப்பூ சூடி, குட்டியாக ஒரு ஜிமிக்கி அசைந்தாட, லேசாக ஐ லைனரும், லேக்மே நேச்சுரல் கலர் லிப்ஸ்டிக்கும் போட்டு, கழுத்தில் ஹைத்ராபாத் வெண்முத்தில் கட்டிய நீளமான மாலையில் வந்த சந்தியாவை பார்த்ததும் (ஸ்ஸ்ஸ்ப்பா, இருங்க நான் முதல்ல கொஞ்சம் தண்ணிய குடிச்சுகறேன்) சூர்யா, கார்த்தி இரண்டு இதயங்களும் டமால்னு வெடித்தன.

அட இது என்ன? சந்தியாவின் ஜெராக்ஸ் உருவமாய் இன்னோரு சந்தியா.
இல்லை! இல்லை! அது தான் சந்தியாவா?

கார்த்தியின் கண்கள் சொருகின....
*************************************************************************************
ஹையா! ஹோம்வர்க் முடிச்சாச்சு!


சாரி பரணி, மூணு நாளுல டேக் எழுத முடியலை.

உனக்கேன்னப்பா! பசிச்சா ஹோட்டலுல போயி ஆர்டர் பண்ணி சாப்டுட்டு அப்படியே பக்கத்து சீட்டுக்காரன் பில்லையும் செட்டில் பண்ணிட்டு வந்துடுவ. நாங்க அப்படியா?

இன்னிக்கு அரிசிய ஊற போட்டு மாவாட்டினா தான்(கிரைண்டர்ல தான்) நாளைக்கு இட்டிலி. தெரிஞ்சுக்கோ!

அதனால இப்படி இரண்டு நாளுல எழுது! மூணு நாளுல எழுது!னு எல்லாம் ரூல்ஸ் போடப்படாது!

இந்த கதையை அடுத்து கலக்க போவது யாரு?


வேற யாரு நம்ம மலேசிய புயல் ஃமை பிரண்ட் தான்!

Friday, April 20, 2007

என்ன அழகு, எத்தனை அழகு!

எங்க ஊருகாரர் இலவச கொத்தனார் ஆரம்பிச்சு வெச்சாலும் வெச்சார், இதோ நம்மையும் மதிச்சு கார்த்தியும், சுமதி அக்காவும் எழுத சொல்லிட்டாங்க.
1)பெண்மை:
பெண்மையின் எல்லா பரிமாணங்களும் அழகு தான். மாம்பழ கலரில் அரக்கு பார்டர் போட்டு அழகான பட்டு பாவாடை கட்டி, சின்ன கொண்டையில் 100 முல்லை பூ சூடி, காலில் அத்தை போட்ட கொலுசுடன் தத்தி தாவி, நடை பழகி வரும் பெண் குழந்தையாகட்டும், கஸ்தூரி மான் போல துள்ளி வரும் மங்கையாகட்டும்(மீரா ஜாஸ்மின்?), மெலிதாக மேடிட்ட வயதுடன் பூரிப்பாக வரும் தாய்மையாகட்டும்,
"பார்கர்ஸ் பெஞ்சில் அமர உனக்கு ஆசை, எனக்கு தெரியும்!" என தனது சோர்வான ரங்குவுக்கு ஹார்லிக்ஸ் குடுக்கும் அந்த குடும்ப தலைவியாகட்டும்( நம்ம SKM அக்கா?) நரை கூடி, முதுமை அடைந்து தனது அனுபவங்களால் தனது பேரன்/பேத்திகளை கண்ணின் மணி போல காக்கும் பாட்டியாகட்டும்(எலேய் கொடி, அது கீதா மேடம் தான் சந்தேகமே வேண்டாம்!) எல்லாமே அழகு தான்.
அடக்கம், கம்பீரம், தெளிவு, இவை மூன்றும் இருந்தால் அதுவே அழகு. பெண்மையிடத்தில் அது மூன்றும் உள்ளது. ஆனால் பல சமயங்களில் தன்னை அது உணர்ந்து கொள்வதில்லை.
- இப்படியேல்லாம் நான் எழுதினாலும் "ஓவர் சீன் உடம்புக்கு ஆகாதுடா அம்பி!னு தான் கும்மி அடிக்க போறீங்க. ஆனது ஆயி போச்சு,
இதோ இதையும் சொல்லிடறேன். அடுத்த கேபின்ல காக்ரா சோளியில் (சாயந்தரம் ரிஷப்ஷனாம்) உக்காந்து இருக்கும் ரசகுல்லா அழகா? இல்ல சைடு கேபின்ல திருச்சூர் விளக்கு மாதிரி நச்னு வெண்பட்டுல வந்ருக்கற மல்லு பிகர் அழகா?னு ஒரே குழப்பமா இருக்கு.

நாட்டாமை, போட்டோ அனுப்பினா கொஞ்சம் தீர்ப்பு சொல்ல முடியுமா?

2)சுந்தரன் - சொல்லின் செல்வன்:

உருவத்தில் மட்டும் அழகு இருந்து என்ன பயன்? சொல்லும், செயலும் அழகாக இருக்க வேண்டுமே!
"கண்டேன் கற்பின் கனலை"னு உலகின் முதல் தந்தி/SMS சொல்லி அந்த ஷ்ரிராமனுக்கே மகிழ்ச்சியை தந்த அனுமன் தான் அழகு. அதனால தான் சுந்தர காண்டம்!னு பெயர் வந்தது.

நங்கநல்லூர் அனுமனை தங்கமணியுடன் போயி தரிசித்து வந்தேன். என்ன கம்பீரம், பிரமாண்டம், ஆகிருதி, அதே சமயம் துளியும் ஆணவம் இல்லாத கை கூப்பிய அந்த பவ்யம்! அனுமந்தா! நீ தான்யா என்னிக்கும் தல!

3) ரயில் வண்டி:

நான் ரொம்பப சின்ன குழந்தையா இருக்கும் போதே(Profile போட்டோ பாருங்க) "கூகூகூகூ குச் குச் குச்"னு புகை விட்டுன்டு போற ரயிலை பார்த்தா தான் சாப்பிட போவேன். அதுவும் எங்க வீட்டுலேருந்து பார்த்தாலே இந்த அழகான வயலுக்கு நடுவே ஓடற அந்த பாசஞ்சர் ரயில் ரொம்பவே என்னை ஈர்த்தது.
என் அப்பா: பெரியவனா ஆயி என்ன வேலை பாக்க போற?
குழந்தை அம்பி: அதோ போறதே அந்த ரயிலுக்கு கரி அள்ளி போடற வேலைக்கு போவேன்! (பெருமிதத்துடன்)
இத கேட்டதும் எங்க அப்பா முகம் போன போக்க பாக்கனுமே! :)
4) நதிகரைகள்:
ஜல ராசியில் பிறந்ததாலோ என்னவோ நீர் நிலைகளை கண்டு விட்டால் எனக்கு உற்சாகம் கரை புரண்டோடும். துவட்டி கொள்ள துண்டு இல்லாவிட்டாலும் அப்படியே தண்ணீரில் குதித்த நாட்களும் உண்டு. இந்த கோடையில் கூட குறைவில்லாமல் ஓடும் எங்கள் தாமிரபரணி நதியில் நண்பர்களுடன் தொட்டு பிடித்து விளையாடிய அந்த நாளும் வந்திடாதோ?
5)ஆத்துல இறங்கும் அழகர்:
மதுரைக்காரங்க எல்லோருக்கும் அழகர் ஆத்துல இறங்கற விழா ரொம்ப பிடிக்கும். தக தகனு தங்க குதிரை மேல சும்மா கம்பீரமா ஒரு கையில் சாட்டையுடன் மறு கையில் அபய முத்திரையுடன், மக்கள் கூட்டத்துக்கு நடுவுல அழகர் வைகை ஆத்துல இறங்குவார் பாருங்க! மதுரைக்கு அழகர் அழகா? அழகரால் மதுரை அழகா?னு எண்ண தோணும்.
6) என் தங்கமணியின் மாசில்லா அன்பு:
எத சொல்லுவேன், எப்படி சொல்லுவேன்?
இந்த அமெரிக்கவுல தீடிர்னு எல்லா கடிகாரத்தையும் திருப்பி வெச்சுடானுங்க. நான் காலையிலேயே இந்த பெங்க்ளூர் டிராபிக்ல அடிச்சு பிடிச்சு எங்க ஆபிஸ் பையன் கூட்டி பெருக்கற டைமுக்கு வந்தாலும் எனக்காக இரவு 11- 12 மணி வரைக்கும் முழிச்சு இருந்து என் குரலை கேட்ட பிறகு தான் தினமும் தூங்குவாங்க. இதுல இந்த ஸ்கைப்புல(skype) கனெக்ஷன் சரியா கிடைக்காது. அப்படியே கிடைச்சாலும் அவங்க இடத்துல நெட் கனெக்ஷன் புடிங்கிக்கும்.
ஸ்ப்ப்பா! இவ்ளோ தொல்லை இருந்தலும் என் மேல அன்பை பொழியற தங்கமணியின் மாசில்லா உள்ளம் தான் எனக்கு பிடிச்ச அழகு. நான் போன ஜென்மத்துல கொஞ்சம் புண்ணியம் பண்ணி இருக்கேனோ?
யப்பா! முடிச்சாசு ஒரு வழியா.
இதை தொடர்ந்து,
என்னை கவர்ந்த ஏழரை நாட்டு சனி!
எட்டுக்குள்ள உலகம் இருக்கு ராமையா!
நவகிரகங்கள் ஒன்பது!
பிளாக் உலக சூப்பர் டென்!னு யாராவது ஒரு புதிய டேக் ஆரம்பிச்சுடாதீங்க பா! கல்யாண வேலைகள் நிறைய இருக்கு.
போற போக்குல யார இழுத்து விடலாம்?
1) மலேசியாவுல மையம் கொன்டுள்ள நமது புயல் மை பிரண்ட்
2) அருமை அண்ணன் டுபுக்கு
3) வாழ்வளித்த தெய்வம் வேதா பிராட்டியார்

Friday, April 06, 2007

லூஸாப்பா நீயி?

ஐந்து வியர்டு விஷயங்கள் ஒழுங்கா எழுதிடு!னு நம்ம டாக்டர் டிடி அக்கா அன்பு கட்டளை போட்டுட்டாங்க.
ஏற்கனவே நான்
கடவுள் பாதி மிருகம் பாதி!னு எழுதியாச்சு!னு அழுது பார்த்தேன். தினமும் இரவு தரும் சாம்பார்/ரசத்தை கட் பண்ணிடுவேன்!னு மிரட்டறாங்க.
ஹிஹி, ஆமா! சாதம் மட்டும் குக்கரில் வெச்சுட்டு மீதி எல்லாம் அக்கா வீட்டுல தான் ஓசி! (யக்கா! ரசப்பொடி கொஞ்சம் பழைய ஸ்டாக்கோ? நேத்து ரசம் கொஞ்சம் சப்புனு இருந்துச்சு! )

இதெல்லாம் ஒரு பொழப்பா?னு கூட எக்ஸ்ட்ராவா ஒரு கமண்டு போட்டுட்டு போங்க.
"பக்கத்து வீட்டு சாம்பாருக்கும் மணம் உண்டு!"னு சும்மாவா சொல்லி இருக்கா.
சரி, ரெண்டாம் தடவை எழுதிடறேன்!னு சொல்லியாச்சு.

1) ஜயண்ட் வீல்: சின்ன வயசிலிருந்தே இந்த பொருட்காட்சில இருக்கற ஜயண்ட் வீலுல ஏறதுனா ஒரே அலர்ஜி. நான் எம்சிஏ படிகறச்ச இப்படி தான் ஒரு தடவை நண்பர்களுடன் போய் வசமா மாட்டினேன்.
ஜயண்ட் வீலை பாத்தவுடனே, பக்கி மாதிரி எல்லோரும் போயி உக்காச்சுண்டு, எனக்கும் டிக்கட் எடுத்து வலய விரிச்சாங்க.
ஹ! இதெல்லாம் ஜுஜுபி, என் ரேஞ்சே வேற!னு எல்லாம் நைசா சமாளிச்சு பாத்தும் நடக்கலை. தர தரனு இழுத்துண்டு போயிட்டா ஒருத்தி. அந்த வீல் ஜிவ்வுனு மேலே மேலே எழும்பியதும் வைரமுத்து சொன்ன வயத்துக்கும் தொண்டைக்கும் உருவமில்லா உருளை எல்லாம் உருள ஆரம்பித்து விட்டது எனக்கு. நான் ஏறின நேரம், கரக்ட்டா உயரத்துக்கு போனதும் மெஷினில் ஏதோ கசமுசா ஆகி வீல் நின்று விட்டது.
ஆஹா! அதோ பாருடா மீனாக்ஷி கோவில் கோபுரம், கன்னத்துல போட்டுக்கோ! போற வழில புண்ணியம் கிடைக்கும்னு ஒருத்தி சொல்ல, யப்பா! அதுக்கப்புறம் ஜயண்ட் வீல் இருக்கற ஏரியா பக்கமே போகறது இல்லை.
தங்கமணி ஜயண்ட் வீல் ஏற ஆசைபட்டா ஏதாவது சொல்லி சமாளிக்கனும். நல்ல ஐடியாக்கள் வரவேற்க்கப்படுகின்றன.

2) சோப்பு: சின்ன வயசுல சோப்பு!னா எனக்கு உயிர். வாசனையே வெச்சே அது என்ன சோப்பு?னு கரக்ட்டா சொல்லிடுவேன். இதோட முடிஞ்சா பரவாயில்ல. அந்த மோகம் மேலும் அதிகமாகி கொஞ்சம் கொஞ்சம சோப்பை சாப்டற அளவுக்கு ஆகி போச்சு.(மைசூர் சாண்டல் என் பேவரட்)
எங்க அம்மா அன்பா சொல்லி பார்த்தாங்க, முதுகுல நாலு போட்டு பார்த்தாங்க, ஒன்னும் நடக்கலை. அப்புறமா நாங்க மார்கோ சோப்புக்கு(சே என்ன கசப்பு) மாறிட்டோம். இப்ப வெறும்ன வாசனை பிடிக்கறதோட சரி.

3) மிமிக்கிரி: எல்லா குரலையும் மிமிக்ரி பண்றது கஷ்டம். ஆனா சில பெக்யூலியரானவங்க குரல், அவங்க அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தைகள், குரல் மாடுலேஷன் எல்லாம் கவனமா நோட் பண்ணி மிமிக்ரி பண்ணிடுவேன். ஹிஹி, TRC சார், கீதா மேடம் மாதிரியே நானும் தம்பியும் சில சமயம் பேசிப்போம். (தங்கமணி குரலும் தான்).
எனது முந்தைய கமபனியின் பெரிய்ய தலை ஒருத்தர், பிறப்பால் இந்தியர், ஆனால் படிச்சது எல்லாம் லன்டன். தொர இங்க்லீஸ், அதே Accent பொளந்து கட்டுவார். ஒரு தடவை ஆபிஸ்லேருந்து பார்ட்டி போனப்ப, அவர மாதிரியே என் டீம் கிட்ட நான் பேசி காட்ட, உடனே ஒரு ரசகுல்லா அவர்கிட்டேயே போயி சொல்ல, அவரும் ரொம்ப ஆர்வமா என்ன பேச சொல்ல, ஒரு நிமிஷம் எனக்கு உள்ள போன கோபி மஞ்சூரியன் எல்லாம் வேளியே வந்து விட்டது. அப்புறம் பேசி காட்டினேன்.
தொரைக்கு ரொம்ப சந்தோஷம். கட்டி பிடிச்சுண்டார். இதே நம்ம ஊரு பெரிய தலயா இருந்தா அப்ரைஸலுல ஆப்பு தான்!

4) மருதாணி கைல வெச்சுக்க பிடிக்காது. என் அம்மா அவங்க கைல வெச்சுண்டா கூட பிடிக்காது.ஆனா வெச்சதுக்கு அப்புறமா வர டிஸைன பார்க்க பிடிக்கும். இது வரை என் கைல மருதாணி வெச்சதே கிடையாது, இனி மேலும் வைக்க போறது இல்லை.

5) ஸ்டெப்புடு: நடக்கும் போது எனது ஸ்டெப்ஸை எண்ணும் பழக்கம் உண்டு. பஸ் ஸ்டாபிலிருந்து வீட்டுக்கு போயி சேர நேத்திக்கு 500 அடிகள் எடுத்தேன். இன்னிக்கு எவ்வளவு?னு எல்லாம் யோசிப்பேன். இந்த பழக்கம், உங்களுடைய கான்ஸன்ட்ரேஷனை அதிகரிக்க உதவும்!னு ஒரு புக்கில் படிச்சதும் பெருமை தாங்க முடியலை. அட! என்ன நீங்களும் ஷ்டார்ட் பண்ணியாச்சா?

டிடி யக்கா, ஹோம்வுர்க் எழுதியாச்சு, ஒழுங்கா சாம்பார் வந்துரும் இல்ல இன்னிக்கு? சரி யாரையாவது மாட்டி விடலாம்!னு முடிவு பண்ணி
1)மெஹந்தி புகழ் பத்மப்ரியா
2) என்னை வார்த்தைக்கு வார்த்தை அண்ணா!னு பாசமாக அழைக்கும் பத்மா ( நான் என்ன அறிஞர் அண்ணாவா?)
டேக் பண்ணுங்க! வேணாம்னு சொல்லலை! ஆனா ரெண்டாம் தடவ எல்லாம் ரொம்ப ஒவரு! சொல்லிட்டேன் ஆமா! (அடிங்க, ஆனா கைய கழுவிட்டு அடிங்க! -விவேக் ஸ்டைலில் படிக்கவும்)