Showing posts with label பக்தி ஸ்பெஷல். Show all posts
Showing posts with label பக்தி ஸ்பெஷல். Show all posts

Tuesday, March 27, 2007

ராமன் எத்தனை ராமனடி


தந்தையே, என்னுடைய பாவத்தில் பங்கு ஏற்பீர்களா? பரிதாபமாக கேட்டான் அந்த வேடன்.

குழந்தாய்! குறிப்பிட்ட வயது வரை உன்னை வளர்பது எங்கள் கடமை. நீ பெரியவன் ஆனதும், எங்களை பரிபாலிப்பது உன்னுடைய கடமை. உன் சுக துக்கங்களில் பங்கு ஏற்போமே தவிர பாவத்தில் எப்படியப்பா நாங்கள் பங்கு ஏற்க முடியும்..? இது தந்தை.

நேரே அவனது தங்கமணியிடம் வந்து, "ப்ரியே! நீயாவது என் பாவத்தில் பங்கு கொள்வாயா?" நல்லா இருக்கே கதை! நீங்க சம்பாதித்து தந்தால் நான் செலவழிப்பேன், செலவழித்தது போக முடிந்தால் எதிர்காலத்துக்கு சேர்த்து வைப்பேன்! பாவத்தில் எப்படி பங்கு கொள்ள இயலும்? - இது அவனது தங்கமணி.
அவனது குழந்தைகளும் இதே பதிலை தந்ததால் ஏமாற்றத்துடன் நாரதரிடம் வந்தான் வேடன்.

என் சுமையை நான் தான் சுமக்க வேண்டும்! என் அறிந்து கொண்டேன். புண்ணிய நதிகளில் நீராடியதில்லை, கைலை யாத்திரையும் போனதில்லை. செய்த பாவத்தை போக்க வழி சொல்லுங்கள் பெரியவரே!

வேடனே கேள்! எந்த நாமத்தை சொன்னால் எல்லோருக்கும் சந்தோஷத்தை தருமோ, எந்த நாமத்தை சொன்னால் சம்சாரம் என்ற சாகரத்தை எளிதாக கடக்க முடியுமோ, எந்த நாமத்தை பரமேஷ்வரனே பார்வதிக்கு உபதேசித்தானோ அந்த நாமத்தை உனக்கு உபதேசிக்கிறேன். கவனமாக கேள்!
அய்யா! கோவிலுக்கும் போனதில்லை, கையெடுத்து கும்மிட்டதில்லை. மந்திரமும் நான் அறியேன்! என்ன செய்வது?

சரி, இது தான் மரா மரம். இந்த மரத்தின் பெயரை விடாது சொல்லி வா! உனக்கு முக்தி கிடைக்கும் - நாரதர் சென்று விட்டார்.

வேடன் துவங்கி விட்டான்

மரா மரம்

மரா மரம்

மராமரம்

ராம ராம ராம ராம ராம ராம ராம ராம

நாட்கள் வாரங்களாகி, மாதங்கள் வருடங்களாய் உருண்டது. வேடன் வால்மீகி முனிவராய் ஞானம் பெற்று ராமாயண இதிகாசத்தை இயற்ற முடிந்தது.
இன்று(27/3/2007) ஷ்ரி ராம நவமி.
ஒரு சொல்!
ஒரு வில்!
ஒரு இல்!
தந்தையின் ஒரு சொல்லுக்கு கட்டுப்பட்டவனாம், ஒரே வில்லில் பகைவரை அழித்தவனாம், ஒரே இல்லாளுடன் வாழ்ந்தவனாம், தன்னுடைய பக்தர்களுக்கு கோசல ராமனாக, தசரத ராமனாக, சீதாராமனாக, அயோத்தி ராமனாக, ராஜாராமனாக, ஜானகி ராமனாக, ரகுராமனாக, ரங்கராமனாக(!) அருள் பாலிக்கும் அந்த ஷ்ரிராமனின் நாமாவை ஒரு முறையேனும் சொல்வோமாக!
பக்தி பதிவானதால், எல்லோருக்கும் கண்டிப்பாக வடை, சுண்டல், பானகம் உண்டு.

பி.கு: இந்த பதிவை படிக்கும் எல்லா வானரங்களுக்கும் அந்த ராமன் அருள் பரிபூரணமாக கிடைக்கட்டும்! :)
ராம ராம ராம ராம ராம ராம ராம ராம