Showing posts with label kavija. Show all posts
Showing posts with label kavija. Show all posts

Tuesday, December 09, 2008

மரபு கவிதை Vs ஹைக்கூ

கவிதை எழுதறவங்களை பாத்தா எனக்கு கொஞ்சம் பொறாமையா இருக்கும். ஏன்னா கவிதைக்கு அழகு வார்த்தைச் சுருக்கம். அது நம்ம கேசுல கிடையாது. சில சமயம், ஈசியா சொல்ல வேண்டிய ஒரு விசயத்தை ஏன்டா இந்த கவிதை ஆளுங்க இப்படி தலையை சுத்தி மூக்கை தொடறாங்க?னு நினைச்சு இருக்கேன்.
ஸ்கூல படிக்கும் போது ஏதோ ஒரு ஆர்வத்துல கவிதை எழுதறேன் பேர்வழின்னு வானம்-வெண்ணிலா, மழை-மண் ஈரம், தென்றல், இப்படி ஏதோ ட்ரை பண்ணி எனக்கே அது செம மொக்கையா தெரிய அத்தோடு என் கவிஜை ஆர்வம் மூட்டை கட்டப்பட்டது.

காலேஜ் படிக்கறப்ப மர்ம தேசம்னு ஒரு சீரியல் இந்திரா செளந்தர்ராஜன் எழுதினது டிவில வந்தது. உங்க எல்லோருக்கும் தெரிஞ்சு இருக்கும். அதுல டைட்டில் போடும் போது அந்த எபிசோடுக்கு ஏத்த மாதிரி நாலஞ்சு லைன்ல ஹஸ்கி வாய்ஸ்ல சித்தர் பாடல்கள் ரேஞ்சுல ஒன்னு வாசிப்பாங்க. எனக்கு அது ரொம்ப புடிக்கும். அதை மனசுல வெச்சு நான் பிளாக் ஆரம்பிச்ச புதுசுல இந்த புதிர்க் கவிதையை(?) எழுதினேன். யார்னு கண்டுபிடிக்க முடியுதா?னு பாருங்க.

மாமுனி மந்திரம்
ஓர்முறை சோதிக்க
பேரொளி வீசும்
பரிதியின் மைந்தனாய்
நீர் நிலை தவழ்ந்து
சாரதி புதல்வனாய்
சீர் பெற வளர்ந்து
தடக்கை சிவக்க
கொடை பல அளித்து
கூடா நட்பால்
சோதரன் இல்லாளை
பொல்லாப்பழி செய்து
சேரா இடம் சேர்ந்து
கான்டீபன் அம்பினில்
விண்ணுலகு புகுந்து
செங்கமலன் தாழ்
எய்தினேன்! வலையுலக
வள்ளல்களே! என் பெயர்
நவின்றிடுவீர், அம்பியின்
பின்னூட்டத்தில்!"

இந்த ஹைக்கூ கவிதைகள்ன்னு ஒரு சமாச்சாரம் (சம்சாரம் இல்ல) இருக்கே! ரொம்ப சுவாரஸ்யமா இருக்கும். ஹைக்கூ கவிதைகள் வாமன அவதாரம் மாதிரி. மூனு அடி மண் கேட்டு கடைசில கொடுத்தவனுக்கே ஒரு ஷாக் கொடுப்பாரே, அது போல இந்த ஹைக்கூஸ் நச்சுனு நாலு வரில ஒரு கதையே சொல்லிடும். நேத்து எனக்கு ஒரு ஹைக்கூ தோணிச்சு(இது வேறயா?)

எப்படி இருக்கு?னு சொல்லுங்க.

"சிசேரியன் செய்து
இன்குபேட்டரில் குழந்தை
மருமகளுக்கு சுகப் பிரசவம்
சந்தோஷமாய் சிரிக்கும்
மெகாசீரியல் மாமியார்!"

இதை போல(இத விட பெட்டரா) இன்னும் சில ஹைகூஸ் ட்ரை பண்லாமா?னு ஒரு யோசனை. அதான் படிக்க/ நாலு சாத்து சாத்த நீங்க இருக்கீங்களே, அந்த தைரியம் தான்.

நீங்க எழுதின ஹைக்கூகளையும் சொல்லுங்க, பதில் மரியாதை பண்ண ரொம்ப ஆவலோட இருக்கேன். :)